- Advertisement -
Home Blog Page 164

ஆரஞ்சு பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மனாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில் ஸ்ரீராம் பத்மனாபன் இயக்கிய படம் வானரன்.

0

நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் நாயகனாகவும் அக்ஷயா கதாநாயகியாகவும் நடித்திருக்க தீபா, ஆதேஷ் பாலா, சூப்பர் சிங்கர் புகழ் பேபிவர்ஷினி,ஜீவா தங்கவேல் ஏனைய நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -நிரன் சந்தர்
இசை -ஷாஜகான்
பாடல்கள் – செந்தமிழ்
எடிட்டிங் – வித்து ஜீவா
மக்கள் தொடர்பு -வெங்கட்

கதை திரைக்கதை
வசனம் இயக்கம் —
ஸ்ரீராம் பத்மநாபன்

இப்படத்தின் சென்சார் முடிந்து தணிக்கை குழுவினர் U சான்றிதழ் தந்து எந்த இடத்திலும் கட் செய்யாமல் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இப்படத்தின் First Single Lyrical Video Song யாரோ என் நெஞ்சில்… பாடல் வெளியாகி 1,80,000 views சென்று மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் இரண்டாவது Lyrical Video Song நீதானே என் உலகம் … பாடல் இன்று வெள்ளிக்கிழமை (27-6-25) கிழமை மாலை வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

ஜூலை மாதம் வெளி வருகிறது. இப்படத்தை திரையரங்குகளில் தமிழ்நாடு முழுவதும் ராமாபுரம் ராஜேஷ் BJP வெளியிடுகிறார்.

Legend Saravanan’s new film will release for Deepavali

0

The film will be a mass, action, suspense thriller, in line with today’s trends: Legend Saravanan

Legend Saravanan shared some interesting information about his new film as it is growing rapidly.

Legend Saravanan, who attended his relative’s wedding, said: “The shooting of my next film is in full swing and has reached the final stage. The shooting and post-production work will be completed soon. We are planning to release the film in theaters all over the world for Deepavali.

The film will be in line with today’s trend with all the interesting features like mass, action, suspense, thrills. The title of the film will also be a mass one. This film will appeal to everyone in a new genre.

More announcements on the project will be made soon. Overall, this Deepavali will be our Deepavali, everyone’s Deepavali. Thank you.”

Produced by The Legend New Saravana Stores Productions, the yet-to-be-titled film is a grand-budget venture directed by R S Durai Senthilkumar, known for his blockbusters like ‘Kakki Sattai,’ ‘Kodi,’ and the recent success ‘Garudan.’

This movie will feature a captivating storyline designed to engage audiences across various sections. Bollywood star Payal Rajput is cast as the female lead, with Shaam, Andrea Jeremiah, Baahubali Prabhakar, Santhosh Prathap, and Baby Iyal playing key roles. Prominent stars will be featured in other significant characters.

Music for the film is composed by Gibran, with cinematography by S. Venkatesh and editing by Pradeep. The art direction is managed by Durairaj, while Ambikapathi is the executive producer. Costume design is handled by Deepthi, and Suresh is in charge of stills. Poster design is by Dinesh, and action sequences are choreographed by Matthew Mahesh.

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்: லெஜெண்ட் சரவணன்

லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும்.

படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும். நன்றி, வணக்கம்.”

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை வெற்றி மற்றும் பாராட்டுகளை குவித்த ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். ‘காக்கி சட்டை’, ‘கொடி’, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ்.

“ சின்னதா ஒரு படம் ” படத்தின்ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.

0

நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே ‘சின்னதா ஒரு படம்’. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் “சின்னதா ஒரு படம்” ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். அஞ்சாமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும்.

படத்தின் நடிகர்கள்: விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி
லட்சுமி பிரியா சந்திரமௌலி, வெங்கடேஷ் ஹரிநாதன், புதுமுகங்களான வாசுதேவன் மற்றும் நட்சத்திரா முக்கிய வேடங்களில்.

முக்கிய துணை வேடங்களில்: சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன்.

அனுபவம் நிறைந்த பிரபல விளம்பர திரைப்பட இயக்குநரும், ஸ்டார் விஜய்யின் முன்னாள் மூத்த விளம்பர இயக்குநருமான ஜானி டிசோசா.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் பல பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பாளர்: டாக்டர் எம். திருநாவுக்கரசு M.D

தயாரிப்பு நிறுவனம் : திருச்சித்திரம்.

வெளியீட்டாளர்: APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு எம்ஜி ஸ்டுடியோஸ்.

எழுத்து & இயக்கம் :- ஜானி டிசோசா.எஸ்

ஒளிப்பதிவு: ரத்னகுமார் R.A.

படத்தொகுப்பு :- ஜானி டி’சோசா எஸ்

இசை: ஹரிஷ் வெங்கட் & பிரஷாந்த்.
பின்னணி இசை: சச்சிதானந்த் சங்கரநாராயணன்.

கலை: முத்துராஜ் டி

மக்கள் தொடர்பு :- திரு

“சின்னதா ஒரு படம்” இறுதி கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ளது. இத்திரைப்படம் ஜூலை இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ZHEN STUDIOS Proudly Presents “Nee Forever” — Coming Soon to Theatres!

0

Produced by Pugazh and Eden on behalf of ZHEN STUDIOS and directed by Ashok Kumar Kalaivani, “Nee Forever” stars promising newcomers Sudharsan Govind and Archenaa Ravi in lead roles. The film beautifully blends romance and comedy, exploring the modern relationship struggles of today’s Gen-Z generation.

Set against the backdrop of today’s digital world, the story revolves around a couple who meet via a modern dating app—and the unexpected consequences that follow. With a youthful vibe, “Nee Forever” is a charming romantic drama crafted to resonate with audiences of all age groups.

Sudharsan Govind, winner of Nalaiya Iyakkunar Season 6, plays the male lead, while Archenaa Ravi, who was crowned Miss South India, makes her Tamil cinema debut as the female lead. The film also features a stellar ensemble including Y.G. Mahendran, Nizhalgal Ravi, M.J. Sriram, Rethika Srinivas, Chella, Brunda, Dr. Vidhya, Pradosh, Snehaka Sakthi, and more.

Following the success of Tharunam, this marks ZHEN STUDIOS’ second production venture.

The film, initially scheduled for 32 shooting days, was efficiently completed in just 27 days. Shot across 20 iconic locations in Chennai, the movie captures the city’s vibrant spirit. Additional scenes were filmed in and around Pollachi, showcasing the region’s natural beauty.

With post-production now complete, the team is actively working toward the film’s release. An official release date will be announced soon.

Crew Details:
Production: ZHEN STUDIOS
Producers: Pugazh & Eden
Writer & Director: Ashokkumar Kalaivani
Music: Ashwin Hemanth
Cinematography: Raja Bhattacharjee
Editor: S.A. Nagarjun
Art Director: Varnalaya Jagadeesan
Costume Designer: Sindhuja Ashok
Makeup: Kalaivani Balan
Lyricist: Ku. Karthik
Sound Design: A. Satheesh Kumar
Sound Mixing: Aravind Menon
VFX: Hocus Pocus
DI: D-Studios Post
Choreographer: Vijaya Rani
Production Controller: Rakesh
Dubbing: D-Studios
Post & Promo Design: Vyagi, Max Brothers

Direction Team: Vignesh Kumar, P.K. Dinesh Babu, Karthikeyan, Hariharasudhan
Camera Team: Gautham Sethuraman, Satheesh Kumar, Sai
Editing Team: Hariharan V, Dhanasezhiyan S
Public Relations: Sathish, Siva (AIM)

ZHEN STUDIOS தயாரிப்பில், GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா “நீ Forever” விரைவில் திரையில் !!

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில், GenZ தலைமுறை ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை பேசும், காமெடி கலந்த அழகான லவ் டிராமாவாக உருவாகியுள்ள படம் “நீ Forever”.

இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை.

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் சவுத் இந்தியா அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ZHEN STUDIOS நிறுவனம் தருணம் வெற்றிப்படத்திற்கு பிறகு, இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்துள்ளது.

32 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 27 நாட்களில் முடித்துள்ளது படக்குழு. இப்படம் சென்னையின் இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20 முக்கிய டிரேட் மார்க் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், படத்தின் திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: புகாஜ் & ஈடன்
எழுத்து மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி
இசை: அஸ்வின் ஹேமந்த்
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி
எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்
கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்
ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்
ஒப்பனை: கலைவாணி பாலன்
பாடலாசிரியர்: கு.கார்த்திக்
ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்
ஒலி கலவை: அரவிந்த் மேனன்
VFX: Hocus Pocus
DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட்
நடனம்: விஜயராணி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்
டப்பிங்: டி-ஸ்டுடியோஸ்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: வியாகி, மேக்ஸ் பிரதர்ஸ்

டைரக்ஷன் டீம் : விக்னேஷ் குமார், பி.கே.தினேஷ் பாபு, கார்த்திகேயன், ஹரிஹரசுதன்.

கேமரா குழு: கௌதம் சேதுராமன், சதீஷ்குமார், சாய்
எடிட் டீம் : ஹரிஹரன்.வி, தனச்செழியன்.எஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)

Natural Star Nani Joins The Shoot Of Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas’ ‘THE PARADISE’ In An Extensive 40 Days Schedule In Hyderabad, Theatrical Release On March 26, 2026

0

Natural Star Nani has stepped into director Srikanth Odela’s ambitious project THE PARADISE, and the much-anticipated action spectacle produced by Sudhakar Cherukuri under the prestigious SLV Cinemas is now in full throttle. The powerhouse duo of Nani and director Srikanth Odela, fresh off the roaring success of Dasara, have reunited for a film that’s already setting the industry abuzz. Shooting commenced on June 21st, while Nani has joined the sets today, sending excitement levels soaring.

The film’s journey kicked off with a week of intense filming capturing key childhood sequences, and now, the spotlight turns to Nani, whose arrival was announced with the electrifying phrase: “Dhagad Aagaya!” Accompanied by a gripping poster showing just his leg on rugged barbell weights, the message is loud and clear- Nani is more ferocious than ever.

This 40 days Hyderabad schedule promises explosive scenes featuring the lead cast, all set within a grand, gritty backdrop meticulously constructed in Hyderabad. If Dasara was India-level, THE PARADISE is global, poised to take centre stage with a multilingual release in 8 languages—Telugu, Hindi, Tamil, Kannada, Malayalam, Bengali, English, and Spanish.

The title poster and glimpse have raised prospects for the movie. Particularly, the glimpse, with a hard-hitting dialogue, striking visuals, Rockstar Anirudh Ravichander’s electrifying score, and Nani’s powerful entry, has significantly amplified anticipation among fans and set high expectations for the film.

The makers yet again confirmed that THE PARADISE is set to explode onto screens worldwide on March 26, 2026.

Stay tuned. The king of the slum is coming—and this time, the world is watching.

Cast: Nani

Technical Crew:
Writer, Director: Srikanth Odela
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
Music: Anirudh Ravichander
Editing: Navin Nooli
Production Designer: Avinash Kolla
Audio: Saregama Music
PRO:Yuvraaj
Marketing: First Show

2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா – சுதாகர் செருகுரி- SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ‘ தசரா’ படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால்.. திரையுலகினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதியன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது படக்குழுவினருக்கு மேலும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக இன்றியமையாத குழந்தை பருவ காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர். தற்போது படக் குழுவினர் தங்களது கவனத்தை நானி பக்கம் திருப்பி உள்ளனர். அவரது வருகையை *’தகாத் ஆகயா'” என ஜொலிக்கும் சொற்றொடரை பிரத்யேகமாக அறிவித்தனர். மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்- கரடு முரடான பார்பெலுடன் நானி கதாபாத்திரத்தின் கால் மட்டும் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதாகவும், நானி இதற்கு முன் எப்போதும் நடித்திராத அளவிற்கு மூர்க்கமாக தோன்றுகிறார் என்பதையும் உறுதி செய்கிறது.

ஹைதராபாத்தில் நடைபெறும் நாற்பது நாட்கள் கொண்ட இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் கரடு முரடான பின்னணியில் அரங்குகள் கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உருவான ‘தசரா ‘ திரைப்படம் இந்திய அளவில் இருந்தால்… தற்போது உருவாகும் தி பாரடைஸ் உலகளாவியதாக இருக்கும். தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என பன்மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் டைட்டிலுக்கான போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ்… படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக வசனங்களும், அதிர்ச்சியூட்டும் காட்சிகளும், ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் அதிரடி இசையும் , நானியின் திரை தோற்றமும்.. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அத்துடன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

2026 மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று ‘தி பாரடைஸ் ‘ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

‘சேரிகளின் ராஜா’ ரசிகர்களை சந்திக்க வருகிறார்… காத்திருங்கள்! இந்த முறை இவரை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள் : நானி

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓட்டேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
ஆடியோ : சரிகம மியூசிக்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

0

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால், ” விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் அனைவருக்கும் வணக்கம்! ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல் பாதி ஒருவரும், இரண்டாம் பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி கொள்வார்கள். அப்படியான சினிமா பைத்தியம் அவர்கள். இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு எனது பெரியப்பாவிற்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர் வேலைக்கு சென்று எனது அப்பாவை படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார். அவருடைய பையன் தான் ருத்ரா. ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை எப்படிப்பட்டது என்பது இந்த கதை மூலம் உங்களுக்கு புரிந்திருக்கும். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் ஃபோர்ஸ் செய்தார். இன்று இந்த மேடையில் நான் இருக்க காரணமே அவர்தான். அப்படி என்றால் ருத்ராவை எந்த அளவுக்கு அவர் சொல்லி வளர்த்திருப்பார் என்று பாருங்கள். நிச்சயம் உங்கள் ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்றாலே வெற்றி படங்கள்தான். அந்த வரிசையில் இந்த படமும் உங்களுக்கு வெற்றியாக அமையும். விஷ்ணு விஷால் சொன்ன கதை எமோஷனலாக இருக்கிறது. இதையே ஒரு படமாக எடுக்கலாம். நான் என் குடும்பத்தின் சப்போர்ட் இல்லாமல் தான் சினிமாவுக்குள் வந்தேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் கதை எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் இருக்கிறது. எதாவது ஒரு பழைய ஹிட் பாடல் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தால் படம் சூப்பர் ஹிட் தான். ‘லியோ’ முதல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரை இதற்கு உதாரணம் சொல்லலாம். நீங்கள் ஒரு பழைய ஹிட் பாடலையே டைட்டிலாக வைத்திருக்கிறீர்கள். நிச்சயம் படம் வெற்றி பெறும்! ருத்ரவாவுக்கு ஹீரோவுக்கான சார்ம் உள்ளது. நீங்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போதை தொடர்பான காட்சிகளை வைக்கக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்”.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ” ரொம்பவே ஸ்வீட்டான படம் இது. விஷ்ணு விஷாலுடைய தம்பி அவரை விடவே இன்னும் நன்றாகவே நடிக்கிறார். ஏ.ஆர். முருகதாஸிடம் ருத்ரா உதவி இயக்குநராக வேலை செய்தார். இயக்கம் கற்றுக் கொண்டாரோ இல்லையோ சூப்பராக நடிக்க கற்றுக் கொண்டார்” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ” இளைஞர்களுக்கான படம் என்பதை அதன் முன்னோட்டம் பார்க்கும் போதே தெரிகிறது. அவ்வளவு இளமையாக இருக்கிறது. ருத்ராவுக்கு வாழ்த்துக்கள்! விஷ்ணு விஷால் சொன்ன கதையும் நன்றாக இருந்தது. விரைவில் யாராவது படம் ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்”.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “எனது கரியரை தொடங்கியதில் இருந்தே விஷ்ணு விஷாலின் அப்பா எனக்கு வழிகாட்டியவர். அவர்களின் குடும்பத்தையும் அந்த எமோஷனையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் மனு ஆனந்த், ” ருத்ரா சிறப்பாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்த பெரிய பாதைக்கு இந்த படம் நல்ல தொடக்கம். விஷ்ணு விஷால் அவருடைய கரியரை தாண்டி அதிகம் பேசி இருப்பது ருத்ராவை பற்றி தான். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் வெற்றிமாறன், “விஷ்ணு விஷால் தனது தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று என்னை முன்பு சந்தித்தபோது சொல்லியிருந்தார். இப்பொழுது மேடையில் அவரது கதையை கேட்ட பின்பு அந்த வார்த்தையின் அர்த்தமும் கனமும் புரிகிறது. அவரது வாழ்க்கையின் நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது எங்களுக்கும் அது மகிழ்ச்சியை கொடுக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்திருப்பவர்களின் ரிதமும் நண்பர்களை போலவே இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!”

நடிகர் கார்த்தி, “விஷ்ணு விஷால் மேடையில் சொன்ன கதையை கேட்ட போது ‘வானத்தை போல’ படம் போல இருந்தது. அந்த படத்தை போல உண்மையில் இருப்பார்களா என்று நினைத்தேன். ஆனால், இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்! அப்பா நம்மை கையில் தூக்கி வைத்திருந்தால் அண்ணா தோளில் தூக்கி வைத்திருப்பார். அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி! அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கும் வந்தேன். நான் புதிதாக திரைத்துறையில் நுழையும் பொழுது அத்தனை பேர் என்னை வாழ்த்தினார்கள், அன்பு கொடுத்தார்கள். அந்த அன்பை திரும்ப கொடுக்கவே இங்கு வந்தேன். ரசிகர்கள் தியேட்டரில் ஜாலியாக இருக்கவே வருகிறார்கள். வெற்றிமாறன் சார் தான் சீரியஸான படங்கள் எடுக்கும் டிரெண்டை உருவாக்கி விட்டார். அதேபோல இயக்குநர் கிருஷ்ணாவும் நல்ல நடிகர். இயக்குநராக அருக்கும் வாழ்த்துக்கள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “ருத்ராவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்! எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என வருத்தமாக உள்ளது. மிதிலாவுடன் நான் தெலுங்கில் ‘ஓ மை கடவுளே!’ செய்திருக்கிறேன். அவருக்கு தெலுங்கு தெரியாது. ஆனால் ஒரு சிங்கிள் டயலாக் கூட மிஸ் செய்யாமல் புரொபஷனலாக நடித்தார். தமிழில் அவர் சரியான குழுவினருடன் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!”

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “டிரெய்லர் பார்க்கும் பொழுதே ருத்ரா மற்றும் படக்குழுவினர் எந்த அளவுக்கு சிறப்பாக வேலை பார்த்திருக்கின்றனர் என்று தெரிகிறது. நான் ஒரு கல்வியாளர். இருந்தாலும் படங்கள் நிறைய தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு தனி கதை! இதுவரை என் கதை மட்டும் தான் பெரிது என நினைத்திருந்தேன். ஆனால் விஷ்ணு விஷால் சொன்ன அவர் குடும்ப கதையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. விஷ்ணு விஷால் நல்ல அண்ணன், நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல தயாரிப்பாளர். அவருடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து நாங்கள் மூன்று படங்கள் தயாரிக்க இருக்கிறோம். வாழ்த்துக்கள்!”.

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, “படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! இயக்குநர் கிருஷ்ணா என்னுடைய காலேஜ் ஜூனியர். எந்த ஒரு மொமெண்ட் கொடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக மாற்றி விடுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் செல்ல அய்யாவு, ” இயக்குநர் கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர். அவரை தமிழ் சினிமா விடாதே என்று யோசித்த போதுதான் விளம்பரங்கள், இயக்கம் என கலக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. ருத்ராவை வைத்து நான் தான் முதல் படம் செய்வதாக இருந்தது. ஆனால் கிருஷ்ணா முந்தி கொண்டார். ருத்ரா ஹீரோவாக வேண்டும் என விரும்பாமல் அதற்காக தன்னை கடுமையாக தயார் செய்து கொண்ட ஒரு நபர். அவருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் விஜய் ஆதிராஜ், ” விஷ்ணு விஷாலுக்கு சிறந்த தம்பி கிடைத்துள்ளார். அந்த அளவிற்கு சிறப்பாக தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளார். படக்குழுவினருக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்! படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கல்யாண், “பெரிய சிரமம் இல்லாமல் எல்லோரும் குடும்பமாக வேலை பார்த்தோம். நன்றி”.

எடிட்டர் கண்ணா, ” இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது”.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் கிருஷ்ணாவை நடிகராக தெரியும். அவர்தான் இயக்கம் என்றதும் ஆச்சரியப்பட்டேன். ருத்ரா சிறப்பாக நடித்திருக்கிறார். மியூசிக்கலாக படத்தில் நிறைய ஸ்கோப் இருந்தது. இசை கேட்டுவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை மிதிலா, ” சென்னைக்கு வந்துள்ளது மீண்டும் என்னுடைய வீட்டிற்கு வந்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்துள்ளது. என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர், தயாரிப்பாளர் ருத்ரா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நானும் பாடியிருக்கிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், “நடிகனாக ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது இயக்குநர் ஆனது வரை என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நான் நடிகனாக இருந்த பொழுது நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இயக்குநரான பின்பு என்னுடைய படம் தான் பேச வேண்டும். நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை ஜூலை 11 அன்று திரையரங்குகளில் பாருங்கள். பொதுவாக, இயக்குநர் தான் நடிகருக்கு கதை சொல்வார்கள். ஆனால், எனக்கு இங்கு ருத்ரா தான் கதை சொன்னார். ஒரு நடிகராக தன்னை சிறப்பாக ருத்ரா தயார் செய்து இருக்கிறார். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஷ்ணு விஷால் இந்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்து இருக்கிறார். மிதிலாவும் தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்”.

நடிகர் ருத்ரா, “இந்த தருணத்திற்காக தான் பல நாட்கள் காத்திருந்தேன். கனவு நனவாகி விட்டது. அண்ணன் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்பது கார்த்தி சாரை பார்த்து தான் ஐடியா வந்தது. இந்த மேடை எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால், ” எங்களுடைய குடும்ப கதையை புரிந்து கொண்டு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த விழாவின் நாயகன் ஜென்மார்ட்டின் தான். புதுமுகங்கள் அறிமுகமாகும் ஒரு படத்திற்கு பாடல்களும் இசையும் மிகவும் முக்கியம். நல்ல குடும்ப கதைகளை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘டிராகன்’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இயக்குநர் கிருஷ்ணா அற்புதமாக இயக்கியுள்ளார். அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்”.

Earthen Spaces & Sugal Group: Building a Legacy in Modern Real Estate

0

Launched in 2022, Earthen Spaces is a new-age real estate venture rooted in the values of trust, transparency, and innovation. With a core vision to deliver thoughtfully developed plotted communities, the brand has quickly emerged as a credible name in Chennai’s evolving real estate landscape. The company operates under the umbrella of the Sugal Group, a respected conglomerate with strong presence across diverse industries including real estate, IT, lottery & gaming, and education. Led by second- and third-generation entrepreneurs, the group brings a legacy of ethical business and forward-thinking strategy.

The flagship ongoing project, RNK’s Vista Garden, is a 5.7-acre plotted development located in the fast-growing corridor of Kelambakkam, OMR. Featuring 138 villa plots in a secure, gated community, it boasts world-class infrastructure including solar-lit streets, black-top roads, storm-water drainage, landscaped green spaces, and recreational amenities – all crafted to reflect a premium, Dubai-inspired lifestyle.

As part of its next phase, Earthen Spaces is now venturing into villa development, reinforcing its commitment to delivering across all facets of real estate. To mark this evolution, the company is hosting a Grand Launch Event on 5th and 6th July 2025, unveiling a set of exclusive premium plots. Guests can enjoy launch-only spot booking offers,referral rewards, and participate in a lucky draw to win a trip to Dubai

With strong backing and a bold vision, Earthen Spaces is set to redefine the way communities are built and lived in.

For more details:
Earthen Spaces – RNK Vista Garden

Rajiv Gandhi Salai, Kelambakkam, Tamil Nadu 603103
Contact – 9090690306

Kushal’s Fashion Jewellery Launches Two New Stores in Chennai with Sivaangi Krishnakumar of Super Singer and Cooku with Comali Fame

0

Chennai, June 2025: Kushal’s, India’s leading fashion and silver jewellery brand, unveiled its two newest stores in Chennai — at Velachery and Mogappair. The grand launch event at the Velachery store was graced by the talented Sivaangi Krishnakumar, known for her appearances on Super Singer and Cooku with Comali. Her lively presence added charm and excitement to the celebrations, making it a memorable affair.

Located in prime neighbourhoods, the brand’s newest stores span over 1200 sq. ft. each and are designed to offer an elevated shopping experience for fashion jewellery lovers across the city. With over 5000+ meticulously crafted designs to choose from, the outlets showcase a stunning assortment of jewellery—ranging from celebration to elegant work wear, exquisite bridal sets to everyday essentials. Shoppers can explore a wide variety of styles, including antique, kundan, zircon, temple and sterling silver jewellery.

With its extensive collection and jewellery styles crafted with care and precision, Kushal’s Fashion Jewellery caters to a wide variety of tastes and preferences—ensuring there’s something for everyone, no matter the occasion. The brand offers a diverse assortment of pieces like necklaces, chokers, earrings, finger rings, pendant sets, bracelets, kadas, maang tikas, and brooches, appealing to both Indian and contemporary sensibilities.

Speaking at the launch, Sivaangi Krishnakumar shared, “Kushal’s has an incredible range of designs — elegant, versatile, and so easy to style. I love how they blend traditional elements with a modern twist. Whether you’re dressing up for a wedding or just heading out with friends, there’s something beautiful for every mood and moment. It’s been a joy to be part of this launch in my own city.”

Speaking about the expansion, Ankit Gulecha, Marketing Director at Kushal’s, said, “We’re thrilled to bring the Kushal’s experience to more consumers in Chennai through our new stores in Velachery and Mogappair. At Kushal’s, we aim to celebrate the city’s unique spirit through designs that are crafted for the modern Indian woman. With these new stores, we hope to offer a thoughtfully curated jewellery experience that feels personal, versatile, and effortlessly stylish.”

To celebrate the grand opening, Kushal’s Fashion Jewellery is offering exciting launch offers for early shoppers. The store launch, which happened amidst much fanfare, saw prominent fashion influencers and content creators in attendance. With 8 existing stores in Chennai, this launch further strengthens Kushal’s presence in Tamil Nadu, bringing the brand closer to customers across the state.

With nearly 100 stores across 35+ cities and a strong online presence at www.kushals.com, Kushal’s continues to scale rapidly with plans to open over 300 stores across India in the next three years. The new launches in Chennai reflect the brand’s vision to make quality, fashionable jewellery accessible to every customer.

Visit our new Chennai stores at Velachery and Mogappair to experience the magic of Kushal’s Fashion Jewellery firsthand. Store timings are 11:00 AM to 9:00 PM.

Savya Rasa Presents The ‘Monsoon Food Festival’ – Celebrating the Flavours of the Rain

0

As the skies turn grey and the air fills with the earthy scent of the monsoon rains, Savya Rasa invites you to savour the season with a specially curated Monsoon Food Festival, running until 6 July 2025. This culinary celebration brings together hearty, traditional dishes designed to comfort, nourish, and delight.
Inspired by the gentle rhythm of the monsoon and the timeless appeal of South Indian regional cuisine, the menu focuses on flavours that support digestion and well-being during the rainy season. Expect warming soups, satisfying snacks, and indulgent desserts that reflect the essence of home-style cooking.
Festival highlights include Nandu Rasam (a bold, Chettinad-style crab soup), Chicken Paniyaram (fluffy dumplings filled with spiced chicken), Kari Kanji (a restorative porridge made with tender mutton), and Sheer Kurma (a rich, festive dessert). Each dish has been chosen for its ability to evoke comfort and connection.
Whether you’re revisiting familiar favourites or discovering new regional gems, the Monsoon Food Festival at Savya Rasa, Chennai and Pune, promises a warm, memorable dining experience that celebrates the best of the season.
For More Information:
Venue: Savya Rasa, Chennai – Gandhi Mandapam Road, Chitra Nagar, Kotturpuram, Chennai: 600085
Savya Rasa, Pune – Gera Serenity Building, Koregaon Park, Pune: 411001
Date: Till 6th July 2025
Time: 12-3:30 PM (Lunch), 6:30–11 PM (Dinner)
Price for two: INR.2,200/- (Approximate)
Contact: +91 9940091899 (Chennai) / 9130095522 (Pune)

காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் ‘ஜீவன் செயல்திட்டம்’ வசதியற்ற, தேவையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளை வழங்க மித்ரா ரோட்டரி கிளப்-ன் ஒத்துழைப்போடு செயல்படுத்துகிறது

0

சென்னை, 24 ஜூன் 2025: இந்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர்சிகிச்சை வழங்குவதில் பிரபலமான காவேரி மருத்துவமனை பிறவி குறைபாடான முதுகுத்தண்டு சீர்குலைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவைசிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்குவதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு திட்டத்தை பிராஜெக்ட் ஜீவன் செயல்திட்டம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது. மித்ரா ரோட்டரி கிளப் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு ரோட்டரி கிளப்-ன் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்போடு இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. முள்ளந்தண்டு பிளவு, வடவுறைப்பிதுக்கம், இணைக்கப்பட்ட வட நோய்க்குறி, பக்க வளைவு மற்றும் தண்டுவடக் கழலைகள் போன்ற பாதிப்புகளால் அவதியுறும் வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றி மேம்படுத்துகின்ற அறுவைசிகிச்சையை சாத்தியமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சிக்கல் நிறைந்த இந்த மருத்துவச் செயல்முறைகள் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
ரோட்டரி பவுண்டேஷன் மற்றும் பங்கேற்கும் ரோட்டரி கிளப்கள் வழியாக திரட்டப்பட்டிருக்கும் ரூ. 85 இலட்சம் என்ற நிதி உதவியின் ஆதரவோடு இந்த முன்னெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் முதல் கட்டத்தில் எவ்வித கட்டணமோ, செலவோ இன்றி குறைந்தது 35 குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சைகள் ஜீவன் செயல்திட்டத்தின் கீழ் செய்யப்படும். ரோட்டரி கிளப்களுடன் இணைந்து இதற்கு முன்பு நடத்தப்பட்ட வெற்றிகரமான ஒத்துழைப்பின் கீழ் 100-க்கும் அதிகமான இத்தகைய அறுவைசிகிச்சைகள் கட்டணமின்றி இலவசமாக குழந்தைகளுக்கு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த குழந்தைகளுள் பலர், குறைபிரசவத்தில் உரிய காலத்திற்கு முன்பே பிறந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள். உரிய நேரத்திற்குள் சிறப்பு சிகிச்சை இக்குழந்தைகளுக்கு வழங்கப்படாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கிற ஊனம்/திறனிழப்பு அல்லது உயிரிழப்பை இக்குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜீவன் செயல்திட்டத்தின் வழியாக இக்குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதுடன் இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை இவர்கள் நடத்துவதற்கு உதவுவதும் எமது நோக்கமாகும். இத்தகைய அறுவைசிகிச்சைகள் மிகவும் நுட்பமானவை; இவற்றை செய்வதற்கு நல்ல ஒருங்கிணைப்புள்ள மருத்துவர்கள் குழு தேவைப்படுகிறது. இச்சிகிச்சைகளின் மூலம் சாத்தியமுள்ள மிகச் சிறந்த விளைவுகளை வழங்குவதற்கு காவேரி மருத்துவமனை முழுமையான வசதிகளையும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்டிருக்கிறது” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் & செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
தென்னிந்தியாவில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் 10 முதல் 15 குழந்தைகளுக்கு நரம்புக் குழல் குறைபாடுகள் இருப்பதும் மற்றும் குறைந்த வருவாய் உள்ள பின்புலங்களைச் சேர்ந்த குழந்தைகள் மிக அதிக அளவில் இதனால் பாதிக்கப்படுவதும் பிராஜெக்ட் ஜீவன் உருவாக்கப்பட்டது. அறுவைசிகிச்சையின் மூலம் இக்குறைபாட்டை முறையாக சரிசெய்யாவிட்டால், கடுமையான ஊனங்களுடன் இக்குழந்தைகள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்; அக்குடும்பங்கள் மட்டுமன்றி சமூகங்கள் மீதும் உணர்வு ரீதியான மற்றும் நிதி சார்ந்த பெரும் சுமையை இது சுமத்தும்
“சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான இடையீட்டு சிகிச்சையின் மூலம் இக்குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். இந்த முன்னெடுப்பானது வெறுமனே அறுவைசிகிச்சைகள் குறித்தது மட்டுமல்ல; ஒவ்வொரு குழந்தையும் பெறுவதற்கு தகுதியுள்ள சிறப்பான எதிர்காலம், கண்ணியம் மற்றும் சாத்தியத்திறனை அவர்கள் பெறுமாறு செய்வதே இதன் நோக்கமாகும்” என்று டாக்டர். G பாலமுரளி மேலும் விளக்கமளித்தார்.
இச்செயல்திட்டத்தில் பல களப்பணி மற்றும் விழிப்புணர்வுக்கான கல்வி நடவடிக்கைகளும் உள்ளடங்கும். பிறக்கும்போது முதுகுத்தண்டு குறைபாடுகள் இருப்பதை பிரசவத்திற்கு முன்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை மேம்படுத்த சோனாலஜிஸ்ட்களுக்கான (ஒலியியல் நிபுணர்கள்) பயிற்சி திட்டமும் இதில் உள்ளடங்கும். இப்பகுதியில் குழந்தைகளுக்கான முதுகுத்தண்டு சிகிச்சை பராமரிப்பை வலுப்படுத்த பிறவிக் கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பது மீது கருவுற்ற தாய்மார்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கும், செவிலியர்களுக்கும் திறன் மேம்பாடு பயிலரங்குகளும் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.
மேலும் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இத்திட்டம் பற்றி பேசும்போது “காவேரி மருத்துவமனை, 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக மேம்பட்ட நவீன சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. நிதி வசதி இல்லாத காரணத்தால் உயிர்காக்கும் சிகிச்சை எந்த குழந்தைக்கும் மறுக்கப்படக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். மித்ரா நோட்டரி கிளப் உடனான எமது கூட்டாண்மை, மிக அவசியமாக தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை வசதி கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும் முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். G பாலமுரளி அவர்களின் சிறப்பான சேவைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மித்ரா ரோட்டரி கிளப்-ன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சரவணன் பேசுகையில், “ஜீவன் செயல்திட்டம் என்பது அர்த்தமுள்ள நடவடிக்கை வழியாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நோட்டரி பவுண்டேஷனுக்கும் மற்றும் பெங்களூரில் உள்ள எமது பார்ட்னர் கிளப்-க்கும் அவர்களின் மதிப்புமிக்க ஆதரவுக்காக எமது நெஞ்சார்ந்த நன்றியை இத்தருணத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஜீவன் செயல்திட்டம் மூலம் அதிகம் பாதிக்கக்கூடிய நிலையிலுள்ள வசதியற்ற, பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது என்பதையும் கடந்து அவர்களின் வாழ்க்கையை மேம்பட மாற்றியமைக்கும் திட்டத்தை காவேரி மருத்துவமனை மேற்கொள்கிறது. ஆரோக்கியம் என்ற வெகுமதியை வழங்குவதோடு, சாதிக்கும் சாத்தியங்கள் நிறைந்த நல்ல எதிர்காலத்திற்கான வாக்குறுதியையும் இக்குழந்தைகளுக்கு வழங்குகிற ஒரு ஆத்மார்த்தமான செயல்திட்டம் இது. செய்யப்படும் ஒவ்வொரு அறுவைசிகிச்சையும் வலி, கட்டுப்பாடுகள் மற்றும் அச்சத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு குழந்தையும் பெறுவதற்கு தகுதியான நம்பிக்கை, கண்ணியம் மற்றும் சிறந்த வாழ்க்கை என்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும். இந்த உன்னதமான முனைப்பு திட்டத்தின் மூலம் கனிவும், அக்கறையான பராமரிப்பும் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் திறன் கொண்டது என்று நமக்கு நினைவூட்டும் விதத்தில் குணமாக்கலுக்கான ஒரு வலுவான தூணாக காவேரி மருத்துவமனை தலைநிமிர்ந்து நிற்கிறது.

- Advertisement -

Recent Posts