- Advertisement -
Home Blog Page 190

Ajay Devgn and Yug Devgan launch the Hindi trailer of Sony Pictures Entertainment’s Karate Kid: Legends at a grand event

0

Ajay Devgn voices the iconic Mr. Han and Yug Devgan debuts as Li Fong in the Hindi dub of the much awaited Karate Kid: Legends, releasing May 30

At a grand event in Mumbai, bollywood actor Ajay Devgn, along with his son Yug Devgan, launched the Hindi trailer of Sony Pictures Entertainment India’s Karate Kid: Legends. The Father-Son duo are coming together for the first time ever to collaborate for an international film. While Ajay Devgn has lent his voice for the iconic Mr Han (Jackie Chan), whereas Yug debuts as the voice of Li Fong (Ben Wang).

This marks Ajay Devgn’s first-ever voiceover for an international film in his illustrious career, while Yug brings a fresh and youthful spirit to a globally beloved franchise.

Their real-life bond adds emotional resonance to the film’s central theme — the relationship between a mentor and his protégé. Yug’s passion for the franchise, natural charisma, and voice impact make him a fitting choice to carry forward the Karate Kid legacy for a new generation of Indian audiences.

Set in New York City, Karate Kid: Legends follows kung fu prodigy Li Fong as he adjusts to life in a new school, forges unexpected bonds, and is drawn into an intense showdown with a local karate champion. Under the guidance of his teacher Mr. Han (Jackie Chan) and the legendary Daniel LaRusso (Ralph Macchio), Li embarks on a transformative journey of self-discovery, courage, and growth.

The casting of Ajay and Yug not only celebrates family and legacy but also symbolizes a generational crossover — bridging the iconic legacy of The Karate Kid with fresh new voices.

Sony Pictures Entertainment India releases Karate Kid: Legends in theatres on May 30, 2025, in English, Hindi, Tamil, and Telugu.

அஜய் தேவ்கன் மற்றும் யுக் தேவ்கன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ ஹிந்தி டிரெய்லரை வெகு விமர்சையாக வெளியிட்டனர்

மே 30 அன்று வெளியாகும் இந்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ ஹிந்தி பதிப்பில், ஜாக்கி சான் நடித்த ஐகானிக் கேரக்டரான மிஸ்டர் ஹான் எனும் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவ்கன் குரல் கொடுத்துள்ளார்; அவரது மகன் யுக் தேவ்கன் லி ஃபாங் எனும் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து தனது முதல் டப்பிங் மூலம் ஹிந்தி திரையிலகில் அறிமுகமாகிறார்.

மும்பையில் நடைபெற்ற ஒரு பிரமாண்ட நிகழ்வில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா தயாரித்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ திரைப்படத்தின் ஹிந்தி டிரெய்லரை வெளியிட்டனர். இவ்விருவரும் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்படத்துக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர். அஜய் தேவ்கன், ஜாக்கி சான் நடித்த மிஸ்டர் ஹான் என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ள நிலையில், யுக் தேவ்கன் பென் வாங் நடித்த லி ஃபாங் என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து அறிமுகமாகிறார்.

இது அஜய் தேவ்கனின் சினிமா வாழ்க்கையில் சர்வதேச படத்திற்காக குரல் கொடுத்த முதல் அனுபவம். யுக் தனது இயல்பான ஈர்ப்பு, உற்சாக குரல் மூலம் இந்த புகழ்பெற்ற வரலாற்று திரைப்படத்தைப் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்

குரு மற்றும் சீடன் இடையிலான உறவை மையமாகக் கொண்ட கதைக்கேற்ப, அஜய் மற்றும் யுக் இன் உண்மையான தந்தை-மகன் உறவு, இந்த திரைப்படத்துக்கு உணர்வுப்பூர்வமான ஆழத்தையும், எதார்த்தத்தையும் சேர்த்திருக்கிறது.

நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட இந்த படம், புதிதாக பள்ளியில் சேரும் குங் ஃபூ மாணவன் லி ஃபாங் தனது புதிய சூழலுக்கு ஏற்றபடி எவ்வாறு இணைகிறார், அங்கு ஏற்படும் எதிர்பாராத நட்புகள், ஒரு உள்ளூர் கராத் தே சாம்பியனுடன் சந்திக்க வேண்டிய கடுமையான சவால்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது. அவரது ஆசிரியரான மிஸ்டர் ஹான் மற்றும் மைதானத்தில் புகழ்பெற்ற டேனியல் லாரூசோ (ரால்ஃப் மேக்கியோ) ஆகியோரின் வழிகாட்டுதலால், லி ஃபாங் தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் தன்மை, தைரியம் மற்றும் வளர்ச்சி அடையும் பயணத்தை எப்படி மேற்கொள்கிறார் என்பதைப் பற்றியும் பேசுகிறது இந்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’.

அஜய் மற்றும் யுக் – இன் தேர்வு, குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், மரபின் தொடர்ச்சியையும் கொண்டாடுவதுடன், ‘கராத்தே கிட்’ என்ற புகழ்பெற்ற பாரம்பரியத்தை, புதிய குரல்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

‘கராட்டே கிட்: லெஜண்ட்ஸ்’ திரைப்படம் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியாவால் 2025 மே 30 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

Eleven Movie Review

0

Eleven – A Slick, Suspenseful Crime Thriller with Grit and Heart

Introduction: A Bilingual Crime Saga with a Purpose

Eleven, the much-anticipated Tamil-Telugu bilingual crime thriller, delivers a compelling blend of investigative depth and emotional nuance. At its core, this film is more than just a chase for a serial killer—it’s a tightly-woven tale of human psychology, dark secrets, and the price of justice. The movie stands out not just for its plot, but for the unique creative forces that power it.

Plot: A Mind Maze of Murder and Mystery

The film follows a seasoned investigative officer—methodical, unrelenting, and emotionally scarred—as he finds himself embroiled in a series of brutal serial murders. What begins as a routine case spirals into a deeper, darker labyrinth of clues, false leads, and personal stakes. As each layer of the mystery unfolds, the audience is drawn into a psychological thriller that keeps tension high and predictability low.

Performances: A Cohesive Ensemble Cast

Naveen Chandra shines as the lead officer, bringing a commanding intensity and quiet vulnerability to his role. His portrayal adds emotional depth to the otherwise cerebral proceedings. Reyaa Hari, balancing both production and performance, impresses with her controlled yet powerful screen presence. Shashank, Abhirami, Dileepan, Riythvika, and Aadukalam Naren round out the cast with solid performances that lend authenticity and gravitas to the story.

Direction & Vision: A Promising Debut from Lokkesh Ajls

First-time director Lokkesh Ajls makes a confident and impactful debut. With Eleven, he proves his flair for storytelling—choosing a genre that demands precision and delivering it with assurance. His narrative choices are bold, and his handling of suspense and pacing is noteworthy. He allows the audience to engage deeply with the plot while maintaining a steady grip on the emotional threads of the film.

Technical Aspects: Strong Aesthetics and Immersive Sound

The technical department of Eleven enhances the cinematic experience:

Music: D. Imman’s background score masterfully underscores the film’s emotional and suspenseful beats. His music elevates the tension and adds soul to quiet moments.

Cinematography: Karthik Ashokan’s lens work is mood-heavy and atmospheric. His use of lighting and framing subtly heightens the mystery without ever feeling forced.

Editing: N. B. Srikanth ensures the narrative never drags. His crisp editing creates a rhythm that sustains the film’s tight grip on the viewer, making every twist land with precision.

Production and Appeal: A Film with Regional and Pan-Indian Reach

Produced under AR Entertainment by Reyaa Hari, Eleven has high production values that reflect a serious commitment to quality cinema. Its bilingual release strategy helps it cross language barriers, reaching a wider audience and giving the story a broader cultural resonance.

Conclusion: A Tense Ride with Substance and Style

Eleven is a finely-crafted thriller that excels on multiple fronts—engaging plot, compelling performances, stylish execution, and thematic depth. It doesn’t rely on clichés or cheap thrills; instead, it builds genuine suspense through smart storytelling. For fans of crime dramas that challenge the intellect while tugging at the heart, Eleven is a must-watch.

Verdict: “Eleven grips you from the start and doesn’t let go—an intense, intelligent thriller worth your time.”

CAST

NAVEEN CHANDRA AS ARAVINDHAN
ABHIRAMI AS SHANTHI
DILEEPAN AS MANOHAR
RITHVIKA AS THARA
REYAA HARI AS SANJANA
AADUKALAM NAREN AS CHANDRASEKAR
ARJAI AS DHEERAN

CREW

Written & Directed – Lokkesh Ajls
Producer – Ajmal Khan & Reyaa Hari
Banner – AR Entertainment
Music Director – D.Imman
Creative Producer – Prabu Solomon
Co-Producer – Gopalakrishna.M
Director of Photography – Karthik Ashokan
Editor – Srikanth.N.B
Art Director – P.L. Subenthar
Action Director – Phoenix Prabhu
Costume Designer – Kiruthikha Sekar
Lyrics – Kabilan, Vishnu Edavan, Lokkesh Ajls
Singers – Mano, Andrea Jeremiah, Shruthi Hassan & Jonita Gandhi
Sound designer – M.R.Rajakrishnan
Color by – Red Chillies.color
Colorist – Tushar Jadhav
Production Executive – Hakkim Sulaiman
PRO – Nikil Murukan


Varalaxmi Sarathkumar starrer “The Verdict” Trailer Launch

0

Producers Prakash Mohandas and N. Gopi Krishnan of Agni Entertainment have presented the film ‘The Verdict’, a Courtroom Drama, directed by Krishna Shankar. The entire film has been extensively shot in USA, and complete shooting was wrapped up in a span of just 23 days. While the film’s theatrical release is scheduled on May 30, the cast and crew were present for the film’s trailer launch today (May 13, 2025) in Chennai.

Here are some excerpts from the event….

Producer Gopi Krishnan said, “I would like to thank Nirmal, Vincent, Irene Vincent, and many others in the USA who extended their help without any hesitation throughout the shoot. Without their support, completing the entire filming in less than 23 days would have been impossible. I’m also happy to introduce Aditya Ram as the music director—his work in the background score is truly remarkable. I’d like to thank my friend Chitra Lakshmanan for gracing this occasion; he was the first to forecast my journey as a producer. A heartfelt thanks to my entire team for their incredible work and unwavering support.”

Actor Yugi Sethu said, “I have already seen the film. It’s a neat and slick film. When he invited me for the special screening, I was a little hesitant, but then I was so much shocked and surprised with the way Gopi has shaped this film. I am always allergic to courtroom drama and was totally uneasy when he invited me for this screenplay. But this movie has broken the barrier, and made me enjoy it throughout the show. I congratulate screenwriter Krishna Shankar for penning a perfect screenplay. The film doesn’t carry any unwanted elements. The film has lots of tight angles focusing on faces like Bergman movies. Varalaxmi’s linguistic approach is so commendable in this movie. All the actors have delivered an impeccable performance. My heartiest wishes to the entire team.”

Actor Chitra Lakshmanan said, “My thanks to Prakash Mohandas for making my friend Gopi Krishna the producer. He embodies true friendship, and I am here for his sake. The way actors responded to his invitation to shoot the entire film in the USA speaks to his warmth and friendliness. He is known as a perfectionist in managing every aspect of the process. His extraordinary talent is the reason so many talented artistes are part of this movie. Varalaxmi has reached greater heights not only in the Tamil film industry but also in the Telugu industry. She is a self-made actress who is very discerning in choosing unique and impactful roles. Director Krishna Shankar, a theatre artist, surprised me with his filmmaking skills, completing the film in just 23 days. He has beautifully drawn out the best performances from the actors, and his execution is highly commendable. My best wishes to the entire team.”

Producer and Actor Prakash Mohandas, Agni Entertainment said, “I am truly glad to witness such a positive reception for our maiden production in the Tamil film industry. We are humbled by the presence of so many talented artistes in this movie, from whom we inherited valuable acting nuances. They were incredibly professional, and we completed the shooting in just 23 days. There’s a saying, ‘Content is King,’ and I believe this movie, The Verdict, will live up to that. I’d like to thank Yugi Sethu Sir, Chitra Lakshmanan Sir, and Parthiepan Sir for gracing this event with their presence. Thank you all.”

Actress Suhasini Maniratnam said, “Some films remain close to an actor’s heart, and The Verdict is one such film for me. I’m truly happy to be part of this project and to have worked with Gopi Sir. The subject of the film deeply attracted me. I often accept roles in remakes if the original featured Lakshmi Ma’am. When they told me this role was initially written with her in mind, I didn’t want to miss the opportunity and instantly agreed to be part of it.

I had several scenes with Shruthi Hariharan, who would often ask me to rehearse so she could refine her improvisation. It was a pleasure working with her. Despite the logistical challenges during shooting, the director handled everything with calmness and efficiency. It was also wonderful to have Arvind Krishna as the cinematographer, whose vast experience brought great value to the film.

Varalaxmi Sarathkumar delivered a tremendous performance as a lawyer, maintaining authenticity without being influenced by American English, something that takes a lot of effort and preparation. Congratulations to the director for completing the entire shoot in just 23 days. My heartfelt thanks and best wishes to the entire team.”

Director Krishna Shankar said, “Every actor in this film is equal to ten Hollywood actors. That’s not just my opinion; it was echoed by the Hollywood co-stars who worked on this project. Despite being senior artistes, our actors were incredibly humble and open to my inputs, which I deeply appreciate. I sincerely thank Gopi Sir for assembling such a stellar team.

The actors I had envisioned for this film gave their nod in less than 30 minutes, a testament to Gopi Sir’s stature and goodwill in the industry. I extend my heartfelt thanks to the entire team, especially my co-director, associate director, and all the technicians and actors who supported this journey. I’m also grateful to Parthiepan Sir for gracing the occasion with his presence. Thank you all.”

Actress Varalaxmi Sarathkumar said, “Since my thinking language is English, it made delivering the dialogues a bit easier for me. However, I had to put in a lot of effort to slow down my speaking pace, as I’m known to be a fast talker. Given that this is a courtroom drama, I had to consciously reduce my speed to suit the tone of the film.

Gopi Sir has always been calling me for his projects, and I sincerely thank him for this opportunity. My thanks to Krishna Sir for giving me a unique experience with this film. I’m also very happy to have worked with such a friendly producer. A big thank you to Parthiepan Sir — I’ve always admired your work, and it means a lot to have you here.
I hope this film turns out to be a meaningful experience for the audience. Thank you all. I truly appreciate your support.”

Actor Parthiepan Radhakrishnan said, ““After watching Kamal Haasan Sir’s Hey Ram, Radhika Sarathkumar sarcastically asked if she could acquire the Tamil rights of the film. Similarly, The Verdict looks like a Hollywood movie and has been filmed with remarkable finesse. Varalaxmi is an incredibly proficient performer, something I witnessed firsthand while working with her in Iravin Nizhal. Suhasini Maniratnam’s passion for cinema is truly genuine. I’m genuinely glad that the entire team put in such hard work to complete the film in just 23 days. I’m looking forward to the success of this film.”

The Verdict features a talented cast including Varalaxmi Sarathkumar, Sruthi Hariharan, Suhasini Maniratnam, Vidyulekha Raman, Prakash Mohandas, and others. The film is written and directed by Krishna Shankar, with cinematography by Arvind Krishna and editing by Sathish Suriya. Produced by Prakash Mohandass and N. Gopi Krishnan under the banner of Agni Entertainment, the film features music composed by Aditya Rao. The direction team includes Sudhar and Krishna K. Gopal, while audiography and sound design are handled by Rudhraa Velu of Rudhraa Studios.

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

‘தி வெர்டிக்ட்’ திரைப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

என் இளமையின் ரகசியம் என்ன? நடிகை சுஹாசினி பதில்!

வரலட்சுமியின் நடிப்பைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்கள் : ‘தி வெர்டிக்ட் ‘ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட தகவல்!

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில்
வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை
அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர்.
பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன்,நைனார் எழுதியுள்ளனர்.கலை மற்றும் உடைகள் நந்தினி முத்தியம்.
அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் என். கோபிகிருஷ்ணன் பேசும் போது,

“இன்று இங்கே போக்குவரத்து நெரிசல், வெயில், மெட்ரோவால் சாலை நெருக்கடி போன்றவற்றைக் கடந்து வந்திருக்கிறீர்கள். நன்றி.
இந்தப் படமும் பல நெருக்கடிகளைக் கடந்து தான் உருவாகியுள்ளது.
நான் கேட்டவுடன் இப்படத்தில்
வரலட்சுமி , ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் என ஒவ்வொருவராக வந்து இணைந்தவுடன் படத்தின் அளவு பெரிதாகிவிட்டது. இது சின்ன படம் என்றாலும் நல்ல கதையுள்ள படம்.” என்றார்.

நாயகனும் தயாரிப்பாளருமான பிரகாஷ் மோகன் தாஸ் பேசும்போது,

“இது எங்கள் முதல் இந்திய சினிமா முயற்சி. இதற்கு முன்பு அங்கே ஹாலிவுட்டில் செய்திருக்கிறோம் .இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடிக்க வைப்பது எங்களுக்கு வியப்பாகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்தியதற்கு கோபி சார் அவர்களுக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் நாங்கள் அவர்களின் நடிப்பைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டே இருந்தோம். ஒருவரும் இரண்டாவது டேக் வாங்காமல் நடித்துக் கொடுத்து அசத்தினார்கள். ஒரு திரைப்படத்திற்கு கதை தான் அரசன் என்பார்கள் அது இந்த படத்தைப் பார்த்தால் புரியும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் இயக்குநர் யூகி சேது பேசும்போது,

” இந்த படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் அழைத்த போது எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டு சென்றேன். ஏதாவது சொல்லி நட்பு முறிந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி போட்டது மாதிரி அழகாக எடுத்திருக்கிறார்கள். பொதுவாக நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்குப் பிடிக்காது .இதில் பார்க்கும் படி எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் முகங்களைச் சரியான படி பயன்படுத்தியிருந்தார்கள். ஒரு படம் எடுக்கும் போது எது தேவையில்லை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவற்றை விலக்க வேண்டும். அப்படி தேவையானதை மட்டும் எடுப்பது சிரமம். அப்படி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் .’வின்டர் லைட் ‘என்ற படத்தில் முகங்களைச் சரியாக பயன்படுத்தியிருப்பார்கள். அப்படி முகங்களை இதில் சரியான படி பயன்படுத்திருக்கிறார்கள்.

எஸ்கிமோ மக்களுக்குத் தான் வெள்ளை நிறத்தின் 17 ஷேட்ஸ்களைத் தெரியும் என்பார்கள். அப்படி இருட்டின் பல ஷேட்ஸ் தெரிந்தவர்கள் பி சி ஸ்ரீராம் சார். அவரிடம் இருந்து வந்தவர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் .இருட்டை எப்படிப் பார்க்க முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி உள்ளார்கள்.

சத்தியஜித் ரே என் ஒரு குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் பேசிய ஆங்கிலத்தைப் பார்க்கும்போது அது எந்த நாட்டு ஆங்கிலம் என்று புரியாதபடி இருக்கும். அப்படி இதில் ஜாக்கிரதையாக வரலட்சுமி ஆங்கிலம் பேசி உள்ளார்.

பார்த்திபன்’ கவிதை பாட நேரமில்லை ‘என்கிற என் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான்கு பேரில் ஒருவராக நடிக்க முடியாது என்று விலகிவிட்டார் .தன் பாதையில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார்.இங்கே வந்திருக்கும் சுஹாசினியின் நடிப்பின் நுணுக்கங்கள் சாதாரணமானதல்ல.படம் நன்றாக வந்திருக்கிறது.
“என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் , பத்திரிகையாளர் சித்ரா லெட்சுமணன் பேசும்போது,

“இந்தப் படத்தின் தயாரிப்பாளரான கோபிகிருஷ்ணன் நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்.
அவரிடம் எனக்குப் பிடித்த வை இரண்டு விஷயங்கள். ஒன்று நட்பு.
அவரது நட்பின் வலை மிகப் பெரியது .அதில் ஒரு சிறிய பகுதியைத்தான் இந்த படக்குழுவினர் மூலம் நாம் இங்கே பார்க்கிறோம்.
அடுத்தது நிர்வாகத் திறமை. அவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் மிகச் சரியாகச் செய்து விடுவார். இதில் நடித்திருக்கும் வரலட்சுமி தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இப்போது பிரபலமாக இருக்கிறார். அவர் தன் பணியைச் சிறப்பாகச் செய்கிறார். அந்த நிம்மதியில் தினமும் கர்வத்துடன் தூங்கலாம். அப்படிப்பட்ட நடிப்புத் திறமை கொண்டவர் அவர்.படத்தின் இயக்குநர் ஒரு நாடக நடிகர் என்று அறிந்து வியந்தேன். இளையவர்கள் என்றாலும் இப்படத்தை நன்றாகத் திட்டமிட்டு எடுத்துள்ளார்கள் .அதனால் தான் 23 நாட்களில் இந்த படத்தை எடுக்க முடிந்தது. அனைவரிடம் நன்றாக நடிப்புத் திறனை வெளிக்கொணந்து உள்ளார்கள்.

இங்கே யூகி சேது பேசியதைப் பார்க்கும்போது படத்தின் வெளியீட்டுக்கு முன்பு அவரது விமர்சனத்தை வாங்கி அதைப் பயன்படுத்தலாம். இந்த படத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்குங்கள்” என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் பேசும்போது ,

“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த நண்பர்களுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ய உதவிய தயாரிப்பாளர் கோபி அவர்களுக்கு நன்றி. அவர் அரை மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடிப்புக் கலைஞர்களை எனக்குத் தேர்வு செய்து கொடுத்தார்.
இந்தப் படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள் .இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள்.இதை நான் நேரில் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஒரு நீதிமன்றக் காட்சியில் வரலட்சுமி நடித்ததைப் பார்த்து அங்கு ஜூரிகளாக இருந்த மூன்று பேர் கண் கலங்கினார்கள்.
நீங்கள் கண் கலங்கக் கூடாது நீங்கள் ஜூரிகள் என்ற போது இந்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டோம் என்றார்கள்.

இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.

எனது உதவி இயக்குநர்கள் திரைப்படத்தைப் பற்றிய திருத்தமான தெளிவான அறிவோடு இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடிந்தது. அவர்களிடமும் நான் கற்றுக் கொண்டேன்.

என் உதவி இயக்குநர்கள் இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பு சாதாரணமல்ல.
18 மணி நேரம் படப்பிடிப்பு என்றால் மூன்று மணி நேரம் அதற்கு பின்பும் வேலை பார்த்தோம் .அந்த அளவிற்கு எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள்.
இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கவரும் “என்றார்.

நடிகை சுஹாசினி பேசும்போது,

” இங்கே என்னைப் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். அதில் இரண்டு விஷயம் உணர்ந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம் நாம் சரியாகச் செய்ய வேண்டுமே, நாம் ஏதாவது சாதித்திருக்கிறோமா சாதிக்க வேண்டுமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் வரும். இங்கே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் என்னை ஒப்பிட்டார்கள். ஆனால் நான் நினைப்பது அடக்கமாக இருக்க வேண்டும், மேலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இப்போது ரீல்ஸ்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் மறந்து விட்டது. கறுப்பு இருந்தால் தான் வெள்ளைக்கு அழகு. இங்குள்ள தயாரிப்பாளர் கோபியை நான் எப்போது அழைத்தாலும் என் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வருவார். எனது ‘நாம்’ தொண்டு நிறுவனத்திற்கும் சென்னை திரைப்பட விழா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்.

நான் அடிக்கடி நிறைய படங்களில் வந்தால் சலித்து விடும் .எனவே தேர்ந்தெடுத்து செய்கிறேன் .
இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டது எப்படி தெரியுமா?

என் இருபதுகளில் லட்சுமி அவர்கள் நடித்த படத்தின் ரீமக்காக இருந்தால் நான் தைரியமாக ஒப்புக்கொண்டு நடிப்பேன்.அப்படி தமிழில் வந்த ‘சிறை’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற படங்கள் மட்டுமல்ல கன்னடத்தில் அவர் நடித்த படங்களின் தெலுங்கு ரீமேக்கிலும் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லி ஆறு நாட்கள் என்றவுடன் முடியாது என்று மறுத்தார் என்று கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது . அவர் ஓகே செய்த கதை என்கிற அடிப்படையில் இதை ஒப்புக்கொண்டு நடித்தேன்.

இப்போதெல்லாம் ஒரு நடிகர் 12 பேர் இல்லாமல் படப்பிடிப்பு கிளம்புவதில்லையே. நான் தனி ஒருவராகத்தான் சென்று நடித்தேன். அதனால் பலருக்கும் தொந்தரவு குறைவு. படப்பிடிப்பில் மற்றவர் நடித்த காட்சிகளை நான் வேடிக்கை பார்த்தேன். என்னுடன் நடித்த சுருதி ஹரிஹரன் ஒத்திகை பார்க்கலாம் என்று என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தார் .இதில் நாங்கள் ஜாலியாக இருந்தோம் .

வீடுகளில் திருமண விழாக்களைப் பார்த்தால் பலருக்கும் பதற்றமாக இருக்கும் .ஆனால் ஒரு நாள் படப்பிடிப்பு என்பதே ஒரு திருமண விழாவிற்குச் சமமாகும் . படப்பிடிப்பு என்பதே தினம்தினம் திருமண விழாதான். அவ்வளவு கலாட்டாவாக இருக்கும். இந்த படப்பிடிப்பிலும் பல்வேறு கலாட்டாக்கள் நடந்தன .
இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தில் எனது வயதின் பலம் புரிந்தது .எங்களுடன் பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் சொந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நமது கேமரா மேன் சைலன்ஸ் என்று ஒரு சத்தம் போட்டார் .அனைவரும் அமைதியானார்கள். வேலை கூட பார்க்காமல் அமைதியானார்கள். அப்புறம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. இப்படி இந்தப் படத்தில் பல்வேறு ருசிகரமான அனுபவங்கள் இருந்தன” என்றவரிடம்,” உங்கள் இளமையின் ரகசியம் என்ன ?”என்று கேட்டபோது, “நீங்கள் கண்ணாடி போடாமல் என்னைப் பார்ப்பது தான் காரணம்” என்றார்.

நடிகை வரலட்சுமி பேசும்போது,

“முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை .நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் நடித்த போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அங்குள்ள ஆனா என்ற அமெரிக்க நடிகையுடன் நான் நடித்தேன். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் அவருடன் நடிப்பது சவாலாக இருந்தது போட்டி போட்டு நடித்தேன்.

எப்போதும் எதுவாக இருந்தாலும் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் சுஹாசினி ஆன்ட்டி அவர்களின் அன்பு பெரியது. அவருடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். இங்கு வந்திருக்கும் பார்த்திபன் சார் எழுத்துக்கு நான் ரசிகை . படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் “என்றார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசும்போது,

“இங்கே பேசிய யூகி சேது எப்படிப்பட்டவர் என்று யூகிக்க முடியாத புத்திசாலி.
இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’ என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம் “இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ?”என்று
ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது
அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்த அளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள் தான் தமிழில் இருந்தது .

‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன் . இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன்.

எனது ‘இரவின் நிழல்’ படத்தில் வரலட்சுமி நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் முதலில் இருந்து எடுக்க வேண்டும். ஆனால் அதில் வரலட்சுமி சரியாகச் செய்து பிரமாதமாக நடித்திருந்தார். இதில் தயாரிப்பாளர் நடிப்பதாக அறிந்தேன். தயாரிப்பாளர்கள் நடிக்க மட்டுமே சிலர் படம் எடுப்பார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை.

இங்கே சுஹாசினி அவர்களைப் பார்க்கும்போது, அவரது அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர் சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது. 28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல்.
ஆறு பெண்கள் நடித்த ஒரு ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். அதேபோல் இது ஐந்து பெண்கள் திறமை காட்டியுள்ளார்கள்” என்ற போது , சுஹாசினி குறிப்பிட்டு தனக்கு 63 வயது என்றார்.

” ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நடிகர் பிரகாஷ் மோகன் தாஸ் எழுதிய ‘லங்கா’ என்கிற நூலை வெளியிட வந்த விருந்தினர் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.

Sony Pictures Entertainment Brings Ajay Devgn and Son Yug Devgan Together for the Hindi version of Karate Kid: Legends

0

Ajay Devgn voices the iconic Mr. Han and Yug Devgan debuts as Li Fong in the Hindi dub of the much awaited Karate Kid: Legends, releasing May 30

https://www.instagram.com/p/DJloLCetyMT/

In a landmark move, Sony Pictures Entertainment India unites one of India’s most celebrated stars, Ajay Devgn, along with his son, Yug Devgan for their first-ever collaboration — and it’s for a major Hollywood franchise. The duo lend their voices to the Hindi version of Karate Kid: Legends, which releases in theatres across India on May 30, in English, Hindi, Tamil, and Telugu.

Ajay Devgn voices the iconic character Mr. Han, portrayed by Jackie Chan, while Yug makes his much-anticipated debut as Li Fong, the film’s lead character originally played by Ben Wang. This marks Ajay Devgn’s first-ever voiceover for an international film in his illustrious career, while Yug brings a fresh and youthful spirit to a globally beloved franchise.

Their real-life bond adds emotional resonance to the film’s central theme — the relationship between a mentor and his protégé. Yug’s passion for the franchise, natural charisma, and voice impact make him a fitting choice to carry forward the Karate Kid legacy for a new generation of Indian audiences.

Set in New York City, Karate Kid: Legends follows kung fu prodigy Li Fong as he adjusts to life in a new school, forges unexpected bonds, and is drawn into an intense showdown with a local karate champion. Under the guidance of his teacher Mr. Han (Jackie Chan) and the legendary Daniel LaRusso (Ralph Macchio), Li embarks on a transformative journey of self-discovery, courage, and growth.

The casting of Ajay and Yug not only celebrates family and legacy but also symbolizes a generational crossover — bridging the iconic legacy of The Karate Kid with fresh new voices.

Sony Pictures Entertainment India releases Karate Kid: Legends in theatres on May 30, 2025, in English, Hindi, Tamil, and Telugu.

கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் ஹிந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள் – இது சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்டின் முக்கியமான முயற்சி.

ஹிந்தி டப்பிங் பதிப்பில், முக்கியமான முயற்சியாக ஐகானிக் கதாபாத்திரமான திரு. ஹானாக அஜய் தேவ்கனும், லி ஃபாங் கதாபாத்திரத்திற்கு யுக் தேவ்கனும் குரல் கொடுக்க, ‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ மே 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

https://www.instagram.com/p/DJloLCetyMT/

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா தயாரிப்பில், முதன்முறையாக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜய் தேவ்கனும், அவரது மகன் யுக் தேவ்கனும் இணைந்து, ஒரு முக்கிய ஹாலிவுட் படத் தொடரான ‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2025 மே 30 அன்று இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

ஜாக்கி சான் நடித்த திரு. ஹான் கதாபாத்திரத்திற்கு அஜய் தேவ்கன் குரல் கொடுக்கிறார். முன்னணி கதாநாயகனான லி ஃபாங் கதாபாத்திரத்திற்கு யுக் தேவ்கன் தனது குரலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இது, அஜய் தேவ்கனின் சர்வதேச திரைப்படத்தின் முதல் குரல் ஒளிப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. யுக், இளம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறக்கூடிய அளவிற்கு, அழுத்தமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஆளுமையுடன் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த நிஜமான தந்தை-மகன் உறவு, படத்தில் ஆசானும் சீடனும் ஆகிய உறவின் உணர்ச்சிமிக்க பகுதியை மேலும் வலுப்படுத்துகிறது. யுக், இந்த திரைப்படத் தொடரின் மீது கொண்டுள்ள ஆர்வம் மற்றும் திறமையான குரலால், ‘கராத்தே கிட்’ பாரம்பரியத்தை, இந்திய பார்வையாளர்களின் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் சிறந்த தேர்வாக உள்ளார்.

நியூயார்க் நகரை கதைக்களமாக அமைத்துள்ள இந்தப் படம், புதிய பள்ளியில் பல தடைகளை சந்திக்கும் லி ஃபாங் என்ற குங்க் ஃபூ மாணவனின் பயணத்தை சொல்கிறது. அங்கு, அவன் ஒரு உள்ளூர் கராத்தே வீரருடன் மோத வேண்டிய சூழ்நிலையில் சிக்குகிறான். ஆசான் திரு. ஹானும், டேனியல் லாருசோவின் வழிகாட்டுதலும், லி ஃபாங் வாழ்க்கையை மாற்றுகிறது. அவன் வளர்ச்சி க்காக எத்தகைய பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதே கரு.

அஜய் மற்றும் யுக் ஆகியோர் இப்படத்தில் இணைவது, குடும்பத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டாடும் ஒரு அற்புதமான அம்சமாகும். இது, பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் இடையிலான பாலமாகவும் செயல்படுகிறது.

‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ திரைப்படம், சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா மூலம் மே 30, 2025 அன்று இந்தியாவின் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

“Paranthu Po” – A Warm-Spirited Feel-Good Movie is Set for July 4 Release!

0

Filmmaker Ram’s selection of stories, his proficiency in choosing unique storytelling methods and his filmmaking craftsmanship has endowed him a commendable stature in the film industry. His directorial debut Kattradhu Tamizh spoke about an individual’s life wedged between his purest love and societal pressures followed by heart-warming fatherhood tales of Thanga Meenkal and Peranbu, and a hard-hitting urbanized tale of Taramani. While his much-awaited film Yezhu Kadal Yezhu Malai, a fantasy entertainer has already carved a niche of excellence in many international film festivals, the filmmaker is all set to enthral the cinephiles with a warm-spirited tale of parenting titled ‘Paranthu Po’, which is set for a theatrical release on July 4, 2025.
This film yet again embellishes the filmography of director Ram as he switches to a completely fresh domain of story and filmmaking style. Tamil cinema has always marvelled upon the beautiful masterpieces, and ‘Paranthu Po’ will deliver a tender journey of emotional rediscovery for the audience.
The star-cast includes Shiva, Grace Antony, Master Mitul, Anjali, Aju Varghese, Vijay Yesudas among others.
The film is written & directed by Ram. Santhosh Dhayanidhi has composed music with N.K. Ekambaram handling cinematography and Madhi VS overseeing editing works. Madhan Karky has penning lyrics for the songs. Kumar Kangappan is the art director and Stunt Silva is the action choreographer. Chandrakanth Sonawaane (Costumes), Richie Richardson (Choreography), Arul N (Sound Design), M.R. Rajakrishnan (Colorist), R Sasikumar-Sudhi Surendhran (Makeup), Twenty.One.G.Dhanwanth-Praveen P.K. (Publicity Designing), Suresh Chandra- Abdul Nassar (PRO).
Romeo Pictures’ Raahul, known for consistently championing remarkable releases and blending commercial success with both content-driven and mass-appeal films, is presenting this movie. The official announcement of July 4th as the release date for Paranthu Po has been made, and the film promises to offer Tamil audiences another uplifting family entertainer to look forward to and take pride in.

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது!

தனித்துவமான கதைச் சொல்லல் மூலம் சினிமாத் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம். அவரது அறிமுகப் படமான ‘கற்றது தமிழ்’ உண்மையான அன்புக்கும் சமூகத்தின் அழுத்தத்திற்கும் இடையில் இருக்கும் ஒருவனின் கதையை பேசியது. அடுத்ததாக தந்தையின் உன்னதமான அன்பை ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘பேரன்பு’ திரைப்படங்களும், சமூகத்தின் உண்மை முகத்தை உரக்க பேசிய ‘தரமணி’ படமும் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் கொண்டாடப்பட்டது.
பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாரட்டுக்களை குவித்த அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது ஃபீல் குட் திரைப்படமான ‘பறந்து போ’ ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது.
பல உணர்வுப்பூர்வமான தருணங்களை இந்தப் படம் ரசிகர்களுக்குக் நிச்சயமாக கொடுக்கும்.
நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: ராம்,
இசை: சந்தோஷ் தயாநிதி,
ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,
பாடல்: மதன் கார்க்கி,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆக்‌ஷன்: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவானே,
நடனம்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் என்,
ஆடியோகிராபர்: எம்.ஆர். ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: கே எஸ் ராஜசேகரன்,
ஒப்பனை: ஆர். சசிகுமார்-சுதி சுரேந்திரன்,
பப்ளிசிட்டி டிசைனிங்: டிவென்டி.ஒன்.ஜி தன்வந்த்-பிரவீன் பி.கே.,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்

கமர்ஷியல் படங்கள் மற்றும் கதைக்களம் சார்ந்த படங்கள் எனத் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த வருடம் ஜூலை 4 அன்று வெளியாகும் ‘பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

பரபரப்பான அரையிறுதி சுற்றுகளில் மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2

0

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் என்கிறபிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன்தற்போது அரையிறுதி சுற்றுகளால் பரபரப்பாகிஇருக்கிறது.

உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும்நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சிஒளிப்பரப்பாகிறது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்உருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்புமக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு.

இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர்இதிலும் நடுவராக தொடர, உடன் ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்

0

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் 14.5.2025 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ் புரொடக்ஷன் வேலைகளை நிறுத்தம் செய்து பணிக்கு செல்லும் ஒவ்வொரு தொழிலாளரையும் பணி செய்ய விடாமல் அவர்களது வருமானத்தினை கெடுத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் என்று அறிவித்துள்ளார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பினை சம்பந்தப்பட்ட பெப்சி உறுப்பினர் மற்றும் அவர் சார்ந்திருக்கும் சங்க நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். அந்த பொருளாதார இழப்பினை சட்ட ரீதியாக திரும்ப பெற்றுத்ர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அவர்கள் 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது என்று அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து உண்மையிலேயே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை சீர்குலைப்பதே திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை நிறுத்தவில்லை அவர்கள் தொடர்ந்து நடத்தி தான் வருகிறார்கள். தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் மட்டுமே படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்தி நிறுத்தம் செய்கிறார்கள்.

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எந்த ஒரு படப்பிடிப்பு அல்லது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தவில்லை. ஆகவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்கிறது. எனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது திரைப்பட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் 14/5/2025 அன்று பெப்சி உறுப்பினர்கள் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு வரவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் தங்களது விருப்பம் போல் பணிக்கு வரும் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு பணிகளை நடத்திக் கொள்ளலாம். அதனை மீறி யாரேனும் ஏதேனும் இடையூறு செய்தால் உடனடியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

0

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ குறித்த தகவல்களை பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசுகையில், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா. அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்து இருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமான இப்படத்தை தொடங்கும் போது நான் சந்தானத்திடம், “முதலாளி கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்த படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆர்யா சாருக்கும் சிலை வைப்பேன்,” என்று கூறினேன்.

அதன் பின்னர் படத்தின் ஷூட்டிங் பெரிய பெரிய லொகேஷன், குரூஸ் என்று நல்லபடியா போனது. பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து படம் முழுமையாக எப்போது தயாராகும் என்ற கேள்வி வந்தபோது சந்தானம் என்னை அழைத்து “நீ எங்களுக்கு சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை, எங்க பிரண்ட்ஷிப்புக்கு உலை வச்சிராத, சீக்கிரம் படத்தை முடித்து கொடுத்துவிடு,” என்று சொன்னார். ஆர்யா சார், படம் இப்போது முழுவதும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

இப்படத்தில் இரண்டு மூத்த இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன் சார் மற்றும் செல்வராகவன் சார் சிறப்பாக நடித்து ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. கஸ்தூரி மேடம், நிழல்கள் ரவி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.

இது ஒரு சராசரி ஹாரர் படம் கிடையாது. இதற்குள் ஒரு பேண்டஸி உலகமே உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. இதற்காக இராப்பகலாக ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. என்னுடைய கடந்த படமான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இப்படத்திற்கும் அதே ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்குமான சம்மர் ட்ரீட் ஆக இருக்கும். இப்படத்தை டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்வதை வட சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்லலாம். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று இப்படத்தை பார்த்து மகிழ வேண்டும். நன்றி, வணக்கம்,” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒரு நல்ல ஸ்டோரி இருக்கும், அதற்கான ரீஸனிங் இருக்கும், ஒரு பிளே இருக்கும், ஒரு கேம் இருக்கும். பிரேம் அதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா எடுத்து காமெடியை ரொம்ப அழகா எக்ஸிக்யூட் பண்ணி இருப்பாரு. அதே மாதிரி பிரேம் என்னிடம் வந்து ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ கான்செப்ட் சொன்ன உடனே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. ஒரு படத்துக்குள்ளயே கேரக்டர்ஸ் டிரான்ஸ்போர்ட் ஆயிடுறாங்க.

பிரேம் இந்த கதையை சொல்லி முடித்தவுடன் “நீ என்னிடம் சொன்ன மாதிரி அப்படியே நல்ல பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் சூப்பராக இருக்கும்” என்று சொன்னேன். படத்தை எப்படி உருவாக்கப் போகிறார் என்று ஆர்வமாக இருந்தேன். படம் முடிந்தவுடன் பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். அனைவரும் இதை 100% எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியும் என்ன நம்புகிறேன்.

இந்த படத்தை சந்தானத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது, அவருக்கு நன்றி. சந்தானமும் பிரேமும் சேர்ந்து ரொம்ப சூப்பரா இந்த படத்தை பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் இந்த படத்துக்காக முழுமையாக வைத்துள்ளார்கள். ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுகள்.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்கும். இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கும் நாங்கள் இணைவோம் என்று நம்புகிறேன். இப்படத்தை வழங்குவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்று கூறினார்.

திரைப்படத்தின் நாயகன் சந்தானம் பேசுகையில், “இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். அவ்வாறு ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு நான் நாயகனாக இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்,” என்றார்.

அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே இதில் நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மே 16 தியேட்டரில் குடும்பத்துடன் போய் பாருங்கள்.

இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் ஆனந்த் பண்ற கதை எல்லாம் ஒரு லைனில் இருக்கவே இருக்காது. பல லேயர்களை கொண்டிருக்கும். கஷ்டமான விஷயங்களை அவ்வளவு எளிதாக, சுவாரஸ்யமாக ஒன்றாக கோர்த்திருப்பார். அது எப்படி என்று நமக்கு புரியவே புரியாது. அதுதான் பிரேம் ஆனந்த்.

இந்த படத்தையும் அவர் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார். அவுட்புட் ரொம்ப நன்றாக இருந்தது, அருமையான காமெடி ட்ரீட்டாக இப்படம் ரசிகர்களுக்கு அமையும். நீங்கள் அனைவரும் முழுவதுமாக என்ஜாய் செய்வீர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தை திரையரங்குகளில் பாருங்கள். நன்றி, வணக்கம்,” என்று கூறினார்.

VV ENTERTAINMENTS சார்பில் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஆடை அலங்கார போட்டி

0

மதுரை,
சமூக ஆர்வலரும், நடிகருமான விஜய்விஷ்வா அவர்களின் விவி என்டர்டைன்மெண்ட் மற்றும் மாமதுரையர்கள் எம் ஆர் பிரமோட்டர்ஸ் & STAR trust T குருசாமி உடன் இணைந்து நம்ம ஊரு வைப்ஸ் சிறப்பு சித்திரை ஆடை அலங்கார்ர திருவிழாவை நடத்தியது.

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மீனாட்சி அம்மன், அழகர், கருப்பணசாமி, முருகன் போன்ற சாமி வேடமணிந்து கலந்து கொண்டது காண்போரை நெகிழச் செய்தது. இந்த கோலாகல விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமலம் வெஞ்சர்ஸ் நிறுவனர் திரு.ஜே.கே.முத்து,, தபோவன் திரு.தீனதயாளன், சமுத்ரா செந்தில் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் முத்தாய்ப்பாக குழந்தைகளின் கண்கவர் பாட்டு போட்டி மற்றும் நடனம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாமதுரையர் அமைப்பின் அகில.உலக தலைவர் க.திருமுருகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது விவி என்டர்டைன்மென்ட்ஸ் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் 400 நாட்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரம் பேர் அன்னதானம் வழங்கும் திரு ஸ்டார் பிரண்ட்ஸ் டிரஸ்ட் குருசாமி அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது

இதனோடு இணைந்து முக்கிய நிகழ்வாக எம்.ஆர் புரோமோட்டர்ஸ் நிறுவனத் தலைவர் நெல்லை சிங்கம் திரு மணிகண்டன் உருவாக்கிய கள்ளழகர் சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது.

அதோடு போட்டியில் பங்கேற்ற குழந்தைகளில் ஒருவரை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து வீட்டுமனையை பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதோடு 2 குழந்தைகளுக்கு 50% சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை கிராண்ட் புக் ஆஃப் யூனிவர்ஸ் ரெக்கார்ட் உலக சாதனையாக அங்கீகரித்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமதுரையர் அமைப்பு மற்றும்.
விவி எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் நிறுவனர் விஜய்விஷ்வா மற்றும் vv entertainments நிர்வாகிகள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

The Dude Arrives With His Love- Mamitha Baiju’s Look From Pradeep Ranganathan, Keerthiswaran, Mythri Movie Makers Pan India Film Dude Released

0

Young sensation Pradeep Ranganathan who is basking under the glory of consecutive hits is currently doing a Pan India venture, produced by Mythri Movie Makers. The film marks the directorial debut of Keerthiswaran and promises to be a fresh, youthful entertainer. Joining Pradeep is Premalu sensation Mamitha Baiju as the female lead, while veteran actor Sarath Kumar takes on a pivotal role in the story.

The excitement around Dude just hit the next level. Following the reveal of Pradeep Ranganathan’s intense first look, the makers have now introduced Mamitha Baiju as his ladylove. Known for her energetic role in Premalu, Mamitha complements Pradeep perfectly in the new poster. The two stars are seen unwinding together—Pradeep with a laid-back smile and Mamitha making a fashion statement in trendy wear and shades.

Mythri Movie Makers assembled an exciting lineup of rising talent for the film Dude. At the helm of the music department is composer Sai Abhyankkar, while the film’s visual flair is being shaped by the skilled cinematographer Niketh Bommi. The look and feel of the film will be brought to life by production designer Latha Naidu, with Barath Vikraman in charge of crafting its rhythm in the editing suite.

With production moving at a steady clip, the team is aiming to deliver a vibrant and engaging entertainer just in time for Diwali. Dude is slated for a wide Pan-India release in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi.

Cast: Pradeep Ranganathan, Sarath Kumar, Mamitha Baiju, Rohini Molleti, Hridhu Haroon, Dravid Selvam & Others.

Technical Crew:
Writer & Director: Keerthiswaran
Producers: Naveen Yerneni, Y Ravi Shankar
CEO: Cherry
Executive Producer: Anil Yerneni
Music: Sai Abhyankkar
Cinematographer: Niketh Bommi
Production Designer: Latha Naidu
Costume Designer: Poornima Ramaswamy
Editor: Barath Vikraman
Tamil PRO: Suresh Chandra, Satish
Telugu PRO: Vamsi-Shekar
Marketing: First Show

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் ‘Dude’ படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு தற்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்தியன் படமான ‘Dude’-ல் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் இருந்து பிரதீப் ரங்கநாதனின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இன்று படக்குழு மமிதாவின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘பிரேமலு’ படத்தில் தனது எனர்ஜிடிக்கான கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்த மமிதா இந்த போஸ்டரில் பிரதீப்புக்கு சிறந்த ஜோடியாக இருக்கிறார். டிரெண்டிங் உடையில் பிரதீப்புடன் இருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி மொல்லெட்டி, ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து மற்றும் இயக்கம்: கீர்த்தீஸ்வரன்
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய் ரவிசங்கர்,
சிஇஓ: செர்ரி,
நிர்வாக தயாரிப்பாளர்: அனில் எர்னேனி,
இசை: சாய் அபயங்கர்,
ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: லதா நாயுடு,
ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,
எடிட்டர்: பரத் விக்ரமன்,
மக்கள் தொடர்பு (தமிழ்): சுரேஷ் சந்திரா, சதீஷ்
மக்கள் தொடர்பு (தெலுங்கு): வம்சி-சேகர்
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

- Advertisement -

Recent Posts