Thursday, July 9, 2026
- Advertisement -
Home Blog Page 205

கிளாசிக் திரை

0

தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர் K.சுப்பிரமணியம் தொடங்கி தற்போது வரை உள்ள மாரி செல்வராஜ் வரை மறக்க முடியாத படைப்புகளை திரையுலகுக்கு கொடையாக அளித்துள்ளனர் .இயக்குனர்கள் ட்ரெண்ட் செட்டர்களாக போற்றக்கூடிய இயக்குனர் ஸ்ரீதர், திருலோக சந்தர், பீம்சிங், பந்தலு, A.P. நாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்தினம்,பாலு மகேந்திரா என இந்த பட்டியல் மிக நீண்டது. இவர்களின் படைப்புகளை நாம் திரும்பிப் பார்த்து அதனை ரசிக்க ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது இந்த கிளாசிக் திரை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற திரைப்படங்களை சுருக்கமாக ஒரு தொகுப்பாக வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி. 1950 களில் தொடங்கி 60, 70 மற்றும் 90களில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களின் முக்கிய காட்சிகளை தொகுத்து ரசிகர்களுக்காக வழங்குகிறது இந்த கிளாசிக் திரை.
கிளாசிக் திரை நிகழ்ச்சி புது யுகம் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Ajith Kumar Racing Calendar till october 2025

0

Ajith Kumar Racing Team Secures 2nd Place at Spa-Francorchamps in the Porsche 992 GT3 Cup Category

We are delighted to share that the Ajith Kumar Racing Team has secured 2nd place at the Creventic Endurance Race held at Circuit de Spa-Francorchamps, Belgium, in the Porsche 992 GT3 Cup category.

This marks Ajith Kumar Racing’s third consecutive podium finish in the Creventic Endurance Series:
• 3rd Place – Dubai Autodrome (11 Jan 2025)
• 3rd Place – Mugello Circuit, Italy (22 Mar 2025)
• 2nd Place – Circuit de Spa-Francorchamps, Belgium (19 Apr 2025)

Upcoming Creventic Races:
• 24 May 2025 – Misano World Circuit
• 5 July 2025 – Circuit Paul Ricard
• 27 Sep 2025 – Circuit de Barcelona-Catalunya

In addition to the Creventic Series, Ajith Kumar Racing is also competing in the GT4 European Series, a premier platform for GT4-spec racing across iconic European circuits.

GT4 European Series Race Schedule:
• 11–13 Apr 2025 – Paul Ricard, France
• 16–18 May 2025 – Zandvoort, Netherlands
• 26–29 Jun 2025 – Spa, Belgium
• 18–20 Jul 2025 – Misano, Italy
• 29–31 Aug 2025 – Nürburgring, Germany
• 10–12 Oct 2025 – Barcelona, Spain

We thank fans and media for their continued support and look forward to achieving new milestones as Ajith Kumar represents Indian motorsport on the global stage.

Ajith Kumar Racing Team

Actor Mr. Sivakarthikeyan adopted a lion named Sheriyar and a tiger named Yuga from the Vandalur Zoo for 3 months and also bare the cost of their care and maintenance.

0

நடிகர் திரு.சிவகார்த்திகேயன் வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் உள்ள ஷெரியார் என்ற சிங்கத்தையும் மற்றும் யுகா என்ற புலியையும் 3 மாதங்களுக்கு தத்தெடுத்து, அவற்றின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டர்.

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது !!

0

ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் வரும் ஏப்ரல் 24 முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!

மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “எம்புரான்” வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

மோகன்லால் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகியுள்ளார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, ஜிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிகுட்டன், அனீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கேரளாவின் அரசியல் களத்திலிருந்து ஸ்டீபன் நெடும்பள்ளி திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு மத்தியில், அவர் உலகமே தேடும் குரேஷி ஆப்ரஹாமாக எப்படி மாறினார் என்பதை இந்தப் படம் ஆராய்கிறது. லூசிஃபர் சம்பவங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுளின் சொந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகி வருகிறது, அதே நேரத்தில் மக்கள் நீண்ட காலமாக மறைந்துபோன தங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டீபன் இப்போது எங்கே? அவர் தனது தாயகத்தைக் காப்பாற்றத் திரும்புவாரா? உண்மையில் குரேஷி ஆப்ரஹாம் யார்? இந்தக்கேள்விகளுக்கான பதில் தான் இப்படம்.

பரபரக்கும் சம்வங்கள், அதிரடி ஆக்சன், கண்ணைப்பறிக்கும் விஷுவல்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும், ஆக்சன் திரில்லராக இப்படம் புது அனுபவம் தருகிறது.

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பு கலைஞர் அகிலேஷ் மோகன், இசையமைப்பாளர் தீபக் தேவ் ஆகிய முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில், எம்புரான் திரைப்படம் ஏப்ரல் 24 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த பிரமாண்டமான சினிமா அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.

ஜியோஹாட்ஸ்டார்
ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும், இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இணையற்ற உள்ளடக்க பட்டியல், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ரசிகர்கள் எளிதாக அணுகுவதற்கான அமைப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ‘விட்ஃபா’ முதல் மாநாடு!

0

’விட்ஃபா’ அமைப்பும், அதன் நோக்கமும் திரையுலகத்திற்கு நன்மை செய்யும் – பிரபலங்கள் பாராட்டு

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’. (World International Tamil Film Association – WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில், ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது.

மேலும், இந்த நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் முதல் திரைப்படமான ’Expired மருந்து’-வின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ரஷீம் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “நான் தெய்வத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளவன். எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் நடக்கும், தெய்வம் துணை இருக்கும், என்ற நம்பிக்கையில் அதில் ஈடுபடுவேன், அந்த வகையில் தான் சர்வதேச அளவிலான இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.

ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அது நடக்கும், நடக்காது, என்று எல்லாம் நான் யோசிக்கவில்லை, ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும், என்று தான் நினைத்தேன். அது நடக்கவில்லை என்றாலும், ரஜினிகாந்தின் அண்ணனை வைத்து இன்று படம் எடுத்திருக்கிறேன். யார் படத்திலும் நடிக்காத ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று என் படத்தில் நடித்திருக்கிறார். தெய்வத்தின் அருளால் தான் அவர் என் படத்தில் நடித்திருக்கிறார். இன்றைய விட்ஃபா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கங்கை அமரன் சார் எவ்வளவு பெரிய மனிதர், அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது கடவுளின் அருள் தான். இயக்குநர் பேரரசுக்கு தெரியாமல் அவரது பழனி படத்தில் ஆறு நாட்கள் பயணித்திருக்கிறேன், அதனால் அவர் என்னுடைய குருநாதர். இயக்குநர் சங்க தலைவராக இருக்கும் ஆர்.வி.உதயகுமார் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர். சிறு முதலீட்டு படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சார், ஆகியோரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

’மாம்பழம் திருடி’ என் ஆறாவது படம், நான் இயக்கும் ஏழாவது படம், விட்ஃபா தயாரிக்கும் முதல் படமாகும். இதில், இலங்கையில் பிரபலமாக இருக்கும் ஒருவரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். விட்ஃபா தயாரிக்கும் அனைத்து படங்களையும் நான் மட்டுமே இயக்க மாட்டேன். விட்ஃபா ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்களை தயாரிப்பதோடு, பத்து படங்களை வெளியிட போகிறது. ஆக, ஆண்டுக்கு 12 படங்கள் விட்ஃபா மூலம் வெளிவரும். இதன் மூலம், இரண்டு தயாரிப்பாளர்கள், இரண்டு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல புதுமுகங்களை உருவாக்கப் போகிறோம்.

நாங்கள் ஒரு கூட்டமைப்பாக இருந்து திரையுலகிற்கான பணியை மேற்கொள்ளப் போகிறோம். இதுவரை எங்கள் அமைப்பில் 11 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 40 பேர் அமைப்பின் முக்கிய நிர்வாகத்திலும், 150 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். சாதாரன உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் பேன்ஸ் கிளப் உறுப்பினர்களாக லட்சக்கணக்கானோர் இணைய உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், சுமார் 1000 பேர் என 50 ஆயிரம் பேர் விட்ஃபா-வில் இணைய இருக்கிறார்கள்.

விட்ஃபாவில் உள்ள உறுப்பினர்களுக்கு, நாங்கள் வெளியிடும் படங்களை பார்க்க 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இன்று ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுமானால் எவ்வளவு கட்டணம் என்பது தெரியும். அதில் 50 சதவீதம் சலுகை என்றால் உங்கள் செலவு எவ்வளவு குறையும் என்று பாருங்கள். இதே, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை இருந்தால், உங்கள் செலவு பாதியாக குறையும். நாங்கள் சாதாரண படங்களை வெளியிட மாட்டோம். அதேபோல் தயாரிப்பதிலும் நல்ல கதைகளை கேட்டு தான் தயாரிப்போம், அதற்கான குழுவும் எங்களிடம் இருக்கிறார்கள்.

விட்ஃபாவின் வெளியிடம் முதல் திரைப்படமான ‘மாம்பழ திருடி’ படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வரப்போகிறது. அவரது அண்ணன் நடித்திருப்பதால், ரஜினிகாந்தின் பெயர் நிச்சயம் வரும். இப்படி தான் எங்களது ஒவ்வொரு படங்களையும் திட்டமிட்டு தயாரிப்பதோடு, படங்களை வெளியிடவும் செய்வோம்.

எங்களுடைய அமைப்பின் கொளை மற்றும் சட்டத்திட்டங்கள் மிக நேர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைப்பை உருவாக்கிய என்னை கூட வெளியேற்றும் வகையில் இதன் சட்டதிட்டங்கள் உள்ளது. தலைவர், செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் தவறு செய்தால், மற்ற நிர்வாகிகள் செயற்குழுவை கூட்டி, அவர்களை வெளியேற்றும் அளவுக்கு இதன் கட்டுப்பாடுகளை உருவாக்கியிருக்கிறோம். இப்படி ஒரு வலுவான அமைப்பில் சேர சிறு கட்டணம் உள்ளது, அது வெறும் ரூ.200 மட்டுமே.

என் அப்பா சமூக சேவகர், ஒரு மிகப்பெரிய கல்லூரியின் தலைவராக இருந்தார், பொதுநல அமைப்புகள் பலவற்றின் தலைவராகவும் இருந்தார். அவர் சொன்னது, “நீ இறந்தால் 40 பேர் அழ வேண்டும்” என்பது தான். அதனால், தான் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினரை விட உயர்ந்த பதவியில் இருந்த நான் அந்த வேலையை விட்டுவிட்டு திரைத்துறைக்கு வந்தேன், இந்த துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய முடியும், என்ற நம்பிக்கையில் இந்த துறைக்கு வந்திருக்கிறேன். இன்று சொல்கிறேன், விட்ஃபாவின் இரண்டாவது மாநாடு நேரு ஸ்டேடியத்தில் நடக்கும், செயற்குழு உறுப்பினர்கள் 150 பேரின் வீட்டில் ஒரு கார் இருக்கும். இதற்கான பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். உலகம் முழுவதும் இருக்கும் இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் சந்தித்து எங்கள் அமைப்பு பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறோம். எனவே, விட்ஃபா மூலம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்ல சினிமா மீது ஆர்வம் உள்ள சாமானியர்கள் அனைவருக்கும் உதவி செய்யப் போகிறோம்.” என்றார்.

இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ”இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்து வந்தேன், இங்கு வந்து பார்த்ததும் ஏதோ புதிய சங்கமாக இருக்குமோ என்று பயந்து விட்டேன். இருக்கிற சங்கத்துல இருப்பவர்களுக்கே இங்கு வேலை இல்லை, இது என்னட புது சங்கமா என்று பயந்துட்டேன். ஆனால், அப்படி அல்லாமல் ஒரு அமைப்பாக சினிமாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியே வர தமிழ் சமூகத்தை ஒன்று சேர்த்தது மட்டும் இன்றி, அந்த படத்தின் டிக்கெட் விற்பனையும் இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். இங்கு வெற்றி பெறுவதற்உ திறமை மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்ட்டம் வேண்டும், ஆளும் கட்சியின் சப்போர்ட் வேண்டும், அது இருந்தால் தான் தியேட்டர் கிடைக்கும், படம் வெளியாகும். ஆனால், இது எதுவும் இல்லை என்றாலும், ஒரு அமைப்பை உருவாக்கி, யாருக்கும் எதிராக நிற்காமல், ஒரு நல்ல முயற்சியை விட்ஃபா மூலம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பை பற்றி கேட்ட போதே, நானே சேர்ந்து விடலாமா என்று யோசித்தேன். இந்த நேரத்தில், இயக்குநர்கள் சங்க தலைவராக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், நல்ல கதையோடு வருகின்ற இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு விட்ஃபா அமைப்பு வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான ரஷீம், தன்னுடைய வெற்றியை தொடர்ந்து அடுத்தவர்களையும் வெற்றியாளர்களாக மாற்றுவதற்காக இந்த விட்ஃபா அமைப்பை தொடங்கியிருக்கிறார். அவருடைய ஆர்வமும், முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். விட்ஃபா வெற்றிகரமாக வளர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.

விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசுகையில், “ரஷீம் மிகச்சிறந்த ஒரு மாபெரும் திரையுலகை வாழ வைக்கும் வளர்க்கிற அற்புதமான திட்டத்தை நம்மிடையே விளக்கியிருக்கிறார். திரையுலகை வாழ வைக்கும், உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகம் முழுவதும் வாழும் நம் இரத்தங்களான இலங்கை தமிழர்களால் தான் சினிமா வாழ்கிறது. அந்தகைய இலங்கை தமிழரான ரஷீம், தமிழ் திரையுலகை வாழ வைக்க கூடிய முயற்சியான இந்த விட்ஃபா அமைப்பு மிகச்சிறந்த முயற்சியாக இருக்கிறது.

வெளியிடாமல் இருக்கும் திரைப்படங்கள் வெளியாவதோடு, பலரை தயாரிப்பாளராகவும், இயக்குநர்களாகவும் உருவாக்க உள்ள இந்த விட்ஃபா அமைப்பின் அனைத்து பணிகளும் வெற்றி பெற வேண்டும், ரஷீம் பல வெற்றி படங்களை இயக்கி வலம் பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “விட்ஃபா என்னும் போது என்க்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. திடீர் திடீரென்று புது புது சங்கங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. தொழிலாளர்கல் தான் சங்கம் தொடங்குவாங்க, இன்று முதலாளிகளே தொழிலாளர்கள் சங்கம் தொடங்குகிறார்கள். திரையுலகம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் படம் எடுப்பது சுலபம், ஆனால் அதை வெளியிடுவது என்பது மிக மிக கடினமாகி விட்டது. அப்படிப்பட்ட கடினமான வேலையை மிகவும் சுலபமாக செய்து கொடுக்க தான் இந்த விட்ஃபா அமைப்பு வந்திருக்கிறது. இந்த மாதிரி அமைப்பு, தற்போதைய தமிழ் சினிமாவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இந்த தருணத்தில் விட்ஃபா அமைப்புக்கு ஒரு கோரிக்கிஅ வைக்கிறேன், வெளியிடாமல் இருக்கும் பல சிறிய படங்களில் மிக சிறப்பான பல படங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களை உங்கள் குழுவினர் பார்த்து அவற்றை வெளியிட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இது சினிமாவுக்கு நீங்கள் செய்யும் சேவையாக இருக்கும். இன்று சினிமா துறையில் சின்ன படம், பெரிய படம், என்று இல்லை. நல்ல படம் என்றால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெற்றால் பெரிய படங்களாகி விடும். ஆக, நல்ல படம் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இன்று படங்கள் ஓட தொடங்கியிருக்கிறது, நல்ல படம் எடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். இந்த நேரத்தில் சினிமாக்காரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சினிமாவிடம் இருந்து பல லட்சக் கோடி வரி பெறும் அரசாங்கமும் இதற்கு பொறுப்பேற்று, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்று இந்த தருனத்தில் கேட்டுக் கொள்கிறேன். விட்ஃபா மிகப்பெரிய வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேசுகையில், “விட்ஃபா அமைப்பை பற்றி கேட்ட போது இது மிகவும் சிறப்பான அமைப்பாக இருக்கிறது. ஒரு கதையை உயிராக நினைத்து சுமப்பவர்களை தேடி பிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படிப்பட்ட கதைகளை தயாரித்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம். இப்போது வருகின்ற படங்களில் வன்முறை அதிகம் இருக்கிறது. கமலே அப்படிப்பட்ட படங்களுக்கு சென்று விட்டார். அதற்கு காரணம் மக்கள் தான், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, எதை விரும்புகிறார்களோ அதை நோக்கியே படம் இயக்க தயாராகி விட்டோம். நம் வாழ்க்கையிலேயே நிறைய கதைகள் இருக்கிறது, அதை வைத்து படம் இயக்கினாலே வெற்றி பெற்று விடலாம்.

நான் இயக்கிய கரக்காட்டக்காரன் படத்தை பற்றி பாராட்டி பேசுகிறார்கள், தில்லானா மோகம்மாள் படத்தின் கரு தான் கரக்காட்டக்காரன், இதை நான் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும், இல்லை என்றால் தெரியாது. இசையும் அப்படித்தான் நீங்கள் கொண்டாடுகின்ற பல பாடல்களுக்கு வேறு ஒரு பாடல் உதாரணமாக இருக்கும். இதை காபி என்று சொல்லக்கூடாது, பாதிப்பு என்று சொல்ல வேண்டும். இங்கு யாரும் எதையும் தெரிந்துக் கொண்டு வரவில்லை, அவர்களுக்கு அமைகின்ற சூழலுக்கு ஏற்றபடி, நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.

விட்ஃபா அமைப்பின் செயல்கள் மிக சிறப்பானவையாக இருக்கிறது. நீங்கள் நல்ல கதையம் அம்சம் கொண்ட படங்களை தயாரித்தான், நாள் இளையராஜாவிடம் சொல்லி இலவசமாக இசை அமைக்க சொல்வேன், அதேபோல் நானும் இலவசமாக பாடல் எழுதி கொடுக்கிறேன், என்பதை இங்கே பதிவு செய்து கொண்டு, விட்ஃபா மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி” என்றார்.

ஜப்பானில் நெப்போலியன் இல்லத்திற்கு வருகை தந்த கனிமொழி!!

0

நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, தலைவர் கலைஞர் அவர்களின் மகள்
திருமதி கனிமொழி அவர்கள், ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார்..! நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் திரு சிபி ஜார்ஜ் அவர்கள் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களும், கனிமொழி அவர்களும் நானும், கலந்து கொண்டோம்..! இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, திருமதி கனிமொழி அவர்கள், ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து தனுஷையும் அக்‌ஷயாவையும் வாழ்த்தினார்கள்…!
சிலமணிநேரம் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம்..!
மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம்..!
இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள்..!

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை,

0

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி,நீலிமாஇசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்,
இப்படத்தைப்பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும் போது பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள் ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள் என்றவர் மற்றொரு விசயத்தை பகிர்கிறார், நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் தொட்டாசினுங்கி, அந்த படத்தில் தான் தேவயானியும் கதாநாயகியாக அறிமுகமானார், பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது, குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் நிழற்குடை UA சான்றிதழ் பெற்றுள்ளது இதன் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை கஃபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தமிழ் நாடு புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனமும் பெற்றுள்ளன,
உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது. தொழில் நுட்ப கலைஞர்கள்


தயாரிப்பு தர்ஷன் பிலிம்ஸ்
ஜோதிசிவா
கதை திரைக்கதை இயக்கம்
சிவா ஆறுமுகம்
வசனம்
ஹிமேஷ்பாலா, இசை நரேன் பாலகுமார்
கலை இயக்கம்
விஜய் ஆனந்த்
படத்தொகுப்பு ரோலக்ஸ் ஒளிப்பதிவு
ஆர் பி குருதேவ்
மக்கள் தொடர்பு A ஜான்

Man of Masses NTR will join Maverick Prashanth Neel, Mythri Movie Makers and NTR Arts’ action epic “NTRNeel,” shoot from April 22nd

0

Man of Masses NTR, known for the massive craze around the globe, joined hands with maverick filmmaker Prasanth Neel, who delivered sensational blockbusters like the KGF series and Salaar. The film, tentatively titled NTRNeel, was launched long ago and has been highly anticipated by fans. The filming of this highly anticipated project began recently in a grand manner at Ramoji Film City in Hyderabad.

Fans have been eagerly awaiting NTR’s entry onto the sets of this ambitious film, and the long wait will finally come to an end on April 22nd. NTR was seen flying off from Hyderabad to Karnataka for the shoot. He will join the sets officially on April 22nd. The excitement surrounding this collaboration has been building up as everyone looks forward to NTR’s arrival.

All eyes are on this film, eagerly anticipating the magic that NTR and Prashanth Neel are set to create. This announcement is thrilling news for NTR’s ardent followers, who have been eagerly waiting for. The film will release in Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam and other languages.

Prashanth Neel, renowned for his blockbuster hits, is expected to bring his unique mass vision to this project, elevating NTR’s on-screen persona to new heights. The dynamic collaboration of NTR and Neel is sure to set new benchmarks in the industry. The film will be produced by the prestigious production houses Mythri Movie Makers and NTR Arts, promising a cinematic spectacle.

The film is bankrolled by Kalyan Ram Nandamuri, Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili, and Hari Krishna Kosaraju under Mythri Movie Makers and NTR arts banner. Bhuvan Gowda will handle the cinematography, while the sensational Ravi Basrur will score the music. Production design will be managed by Chalapathi. This monumental project brings together talented and ace technicians to create a mass cinematic extravaganza.

Cast: Man of Masses NTR

Technical Team:
Production Design – Chalapathi
DOP – Bhuvan Gowda
Music – Ravi Basrur
Producers – Kalyan Ram Nandamuri, Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili, Hari Krishna Kosaraju
Written and Directed by – Prashanth Neel

’மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாகத் தொடங்கியது.

இதன் படப்பிடிப்பில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி என்.டி.ஆர். இணைகிறார். படப்பிடிப்புக்காக என்.டி.ஆர். ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்கிறார். என்.டி.ஆர். வருகையை படக்குழுவினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் புதிய படத்தில் என்.டி.ஆருக்கு இன்னும் அதிக மாஸ் சேர்க்க உள்ளார். மதிப்புமிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சலபதி பணிபுரிகிறார்.

தொழில்நுட்ப குழு:
தயாரிப்பு வடிவமைப்பு: சலபதி,
ஒளிப்பதிவாளர்: புவன் கவுடா,
இசை: ரவி பஸ்ரூர்,
தயாரிப்பாளர்கள்: கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசராஜு,
எழுத்து மற்றும் இயக்கம்: பிரசாந்த் நீல்

Tamil Letters, Characters need to be learnt by all

0

V.G.K. Builders pays fitting Tribute to Tamil Language and Culture
by installing hoarding with days of month in Tamil Letters in Tambaram

Chennai, 17 April 2025: It is not every day that people get past to travel a hoarding that indicates the days of the month in the mother tongue of Tamil.

This has been made possible in Tambaram where V.G.K. Builders has installed a monthly calendar as a road side hoarding. The highlight of the hoarding is that all the days of the month of April have been written in original, and ancient Tamil script, something that is dear to everyone.

While it might be difficult for ordinary people to decipher the script and come to terms with the date, a little learning and understanding with the same, will help people come to terms with it.

V.G.K. Builders, among the most prominent, sought-after, and trusted realtors and promoters, especially in the southern suburbs of Chennai, has installed a hoarding alongside the road over bridge on Mudichur – Tambaram – Velachery Main Road. This has been done to mark the Tamil New Year of Visuvasuva, in the month of Chithirai.

The banner caused a lot of curiosity among people who stopped by it, taking photos and trying to decipher it.

The hoarding with the text in Tamil that has been placed at the spot beneath the Calendar for the Tamil Month of Chithirai is as follows:

“நம் தாய் தமிழ் மொழியின் ஓர் அற்புத அங்கமாகத் தமிழெங்கள் திகழ்கின்றன. இவற்றை ஒவ்வொரு வீட்டிலும் அடுத்த தலைமுறையினருக்கு கற்பித்தல் அவசியம்.”

The text above in Tamil means thus: “The Tamil Alphabet is an integral part of our Tamil Language, that makes it so special. This Tamil Alphabet has to be taken to every household so that it is learnt by all for the coming generations to learn, imbibe, and form a part of it.”

Selvi Ilavarasan, a homemaker, and a mother of two, said that there was a need for more such display and information boards in Tamil. “Information boards in English and other languages for the purpose of communication to others is alright, but I whole heartedly welcome this wonderful and unique concept from V.G.K. Builders, and this could not have come at a more appropriate time,” Ms. Selvi added.

About V.G.K. Builders:

Among the most reputed and sought-after builders, V.G.K. Builders has completed several residential projects, much to the satisfaction of occupants. They strive hard to provide affordable homes to all, and with a competent team, they try to create communities with vibrancy, sustainability, and convenience.

Dhanush, Sekhar Kammula & Devi Sri Prasad unleash a musical storm – Kuberaa’s first single ‘Poyivaa Nanba’

0

The cinematic skies have cracked open—and pouring down with full force is the electrifying first single “ ‘Poyivaa Nanba” from Kuberaa, a pan-Indian spectacle that’s been brewing like a perfect storm. As thunderous as its title suggests, the track is a bolt of brilliance, brought to life by a legendary team of three National Award winners—Dhanush, director Sekhar Kammula, and musical maestro Devi Sri Prasad (DSP).

Dhanush’s vocals coupled with his visuals further elevate the song. His raw, magnetic singing are about to spark a visceral intensity into the composition, leaving fans awestruck and demanding more.

Rockstar DSP has composed this chart buster!

With ‘Poyivaa Nanba’ , the buzz surrounding Sekhar Kammula’s Kuberaa is poised to explode overnight and create a fan frenzy!

Directed by the masterful Sekhar Kammula, Kuberaa is a grand orchestra of human emotion, drama, and spectacle. Slated for a worldwide theatrical release on June 20, the film stars an ensemble of superstars including Dhanush, Nagarjuna, Rashmika Mandanna, and Jim Sarbh.

Produced by Suniel Narang and Puskur Ram Mohan Rao under Sri Venkateswara Cinemas LLP and Amigos Creations Pvt Ltd, Kuberaa is mounted on a monumental scale. With cutting-edge production values and a vision that bridges realism with grandiosity, while shot simultaneously in Tamil and Telugu, the film will release in five languages — Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam — marking a true pan-Indian cinematic spectacle.

🔗https://youtu.be/wAcXj8lx1Bo

தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், ‘குபேரா’ படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது !!

இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற “குபேரா” படத்தின் முதல் சிங்கிள் “போய் வா நண்பா” !!

பான் இந்திய படைப்பாக உருவாகி வரும் “குபேரா படத்தின் முதல் சிங்கிள், இசை ரசிகர்களை புயலாக தாக்கியுள்ளது. ‘குபேரா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘போய் வா நண்பா’ அதிரடி இசையில், மென் மெலடி கலந்து அசரடிக்கிறது. இப்பாடல் மூன்று தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.

இப்பாடல் உருவான பின்னணி காட்சிகள், தனுஷின் குரல், மற்றும் அவரின் அசத்தலான நடனம், ராக் ஸ்டார் டிஎஸ்பியின் மயக்கும் இசை, அருமையான வரிகள், எனக் கேட்கும் போதே மாய உலகிற்கு அழைத்து செல்கிறது. சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மேஜிக்கை காணும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது இப்பாடல்.

மனித உணர்வுகளின் குவியலாக, அற்புதமான உணர்வுகளைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், உலகம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனீல் நாரங் மற்றும் புஷ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பில் “குபேரா” திரைப்படம், மிகப் பெரிய பொருட்செலவில், பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட குபேரா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உண்மையான பான் இந்திய படைப்பாக வெளியாகவுள்ளது.

🔗https://youtu.be/wAcXj8lx1Bo

- Advertisement -

Recent Posts