இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் ‘இடபத் தளியிலார் ‘ எனும் புதிய மார்க்கம் அரங்கேற்ற நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது.
எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி- தேவரடியார் மரபின் கடைசி வாரிசாக இருக்கும் பத்ம ஸ்ரீ இரா. முத்து கண்ணம்மாள் அவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. மேலும் இந்த கலாச்சார நிகழ்விற்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி ஏ. எஸ். குமரி விஜயகுமார் அவர்களும், ‘சொல்லின் செல்வர்’ முனைவர் ஐ. எஸ். பர்வீன் சுல்தானா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இடபத் தளியிலார் எனும் புதிய மார்க்கத்தை… தேவரடியார்களின் இறை தொண்டு குறித்து ஆய்வு செய்து வடிவமைத்த ஆசான். முனைவர் அ. கா. நர்த்தனா கார்த்திகேயன் மற்றும் அவருடைய மாணவிகள் அரங்கேற்றுகிறார்கள்.
இந்த கலாச்சார நிகழ்ச்சி குறித்து இதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஆசான் முனைவர் அ. நா. நர்த்தனா கார்த்திகேயன் பேசுகையில், ” தேவர்களுக்கு அடியார்களாக தங்களுடைய வாழ்நாள் முழுவதும் கலையை கருவியாக கொண்டு பரம்பொருளான சிவத்தை அடைந்தவர்களின் கலை சேவை எவ்வாறு இறை சேவையுடன் பிணைந்து ஒன்றிணைந்து இருந்தது என்பதை விவரிக்கும் ஒரு புதிய மார்க்கம் தான் இடபத் தளியிலார்.
இந்த மார்க்கத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் ஆறு கால பூஜைகளிலும் தேவரடியார்களின் பங்கு- பணி – சேவைகள் – எவ்வாறு கலைநயத்துடன் இருந்தது என்பதை விளக்கக் கூடியது தான் இந்த இடபத் தளியிலார்
இந்த நிகழ்வு தனிப்பட்ட கலைஞரின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இல்லாமல்.. இறைவனோடு இந்த கலை எவ்வாறு இணைந்திருந்தது என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்த மார்க்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது
மீண்டும் கலை இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இந்த மார்க்கத்தின் முதன்மையான நோக்கம். இந்த நிகழ்வில் என்னுடைய மாணவிகள் பங்கேற்கிறார்கள். இதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சி குறித்தும், புதிய மார்க்கம் குறித்தும் அவர் விளக்கமளிக்கையில், ” தேவர்களின் அடியார்களாகவும் , நேர்மையின் இருப்பிடமாகவும் , அன்பின் புனிதமாகவும், சேவையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர்கள் தேவரடியார்கள்.
இவர்கள் தமிழர்களின் மரபு தந்த மாணிக்கங்கள் – தமிழர் கலைகளை இந்த உலகிற்கு எடுத்துச் சென்றவர்கள்- செந்தமிழர்களின் சிந்தனையில் பைந்தமிழாய் வாழ்ந்தவர்கள் – இவர்கள்..
அகமும், புறமும் ஒரே சிந்தனையுடன் இறைவனை தன் கலைச் சேவையால் உளம் குளிர செய்த இவர்கள்.. தேவருக்கு அடியார்கள் என்ற பெயருடன் இயங்கியவர்கள் .
இவர்களுக்கு- இவர்களின் கலை சேவைக்கு – இந்த நிகழ்ச்சி சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
மேலும் திருக்கோயில்களில் ஆறு காலங்களாக நடைபெறும் திருப்பள்ளி எழுச்சி – காலை சந்தி பூசை- உச்சிக் கால பூசை – சாயரட்சை பூசை – இராக் கால பூசை – பள்ளியறை சேவை – ஆகிய பூசை நிகழும் தருணங்களில் தேவரடியார்களின் பணி குறித்தும், தேவரடியார்களின் பங்களிப்பு குறித்தும், அவர்களுடைய கலைத்திறன் குறித்தும் இந்நிகழ்ச்சி விவரிக்கிறது.
இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி மையம் வழங்கும் இந்த இடபத் தளியிலார் எனும் கலாச்சார நிகழ்ச்சி- சிவபெருமானுக்கு மட்டுமே சேவை செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தேவரடியார்களின் கலை சேவை – முதன்முறையாக அரங்கேற்றம் செய்யப்படுகிறது. ” என குறிப்பிட்டார்.
ஆசான் – முனைவர் அ . கா. நர்த்தனா கார்த்திகேயன் பற்றிய குறிப்பு :
கல்வி உளவியலாளர்- ஆய்வாளர்- நடன அமைப்பாளர் – சமூக ஆர்வலர்- இவற்றுடன் பரதநாட்டிய கலையில் முதுநிலை பட்டம் பெற்றவர். தமிழிசை கல்லூரியில் இசை செல்வம் என்ற பட்டப் படிப்பினையும் , நட்டுவாங்க சிரோன்மணி என்ற பயிற்சியையும் நிறைவு செய்தவர். இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் – ஷ்ரதா தனியார் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர். சிறந்த நாட்டுப்புற கலை பயிற்சியாளர் என ஆசியா சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
2024 ஆம் ஆண்டிற்கான சேவை செம்மல் விருதினையும், ஸ்ரீ மகாத்மா காந்தி ராஷ்டிரிய அபிமன் புரஸ்கார் விருதை 2023 ஆம் ஆண்டிலும் பெற்றவர். இதே ஆண்டில் தேசிய அசோகா சமான் விருதினையும் வென்றிருக்கிறார்.
இந்த விருதுகளுடன் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் எழுவார் குழலி திருக்கோயில் சார்பில் 2013 ஆம் ஆண்டில் சிவனருட் செல்வி என்ற விருதினையும், அன்னை தெரசா விருது- சாதனை பெண்மணி விருது- மகாத்மா காந்தி விருது – சிறந்த நடன கலைஞர் விருது – என பல்வேறு விருதுகளை குவித்து சாதனை பெண்மணியாக வலம் வருபவர்.
தேவரடியார்களின் இறைத் தொண்டு குறித்து ஆய்வு செய்து ‘இடபத் தளியிலார் ‘ எனும் புதிய மார்க்கத்தை வடிவமைத்து தனது கலை சேவையினை தொடர்பவர்.
சிவனடியார்கள்- சிவபெருமானின் பக்தர்கள் – சைவ நெறியை பின்பற்றுபவர்கள் – கலை ஆர்வலர்கள்- தேவரடியார்கள் பற்றிய அறிந்து கொள்ளும் ஆர்வமுடைய பற்றாளர்கள்- பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த புதிய மார்க்க நிகழ்ச்சியை காண வருமாறு மனமுவந்து இரு கரம் கூப்பி வருக! வருக! என வரவேற்கிறோம்.
What a feeling it was last night at YMCA Nandanam at VijayAntony’s 3.0 Live concert.
In this exact location, I have played cricket with our hon’ble ChiefMinisterOfTamilnadu M.K.Stalin uncle and with my dearest friend UdhaynithiStalin, have successfully conducted ilaiyaraaja sir’s #Ilaiyaraaja75 event as the #President of #TamilFilmProducersCouncil but I never expected that I would sing in my first concert.
My dear lover-u and darlings those who came to support me, thank you for making this debut so special. It was an incredible feeling, and I’m grateful to God for this opportunity.
Performing for the first time on stage at the same place where I’ve spent countless hours feels like destiny. The energy, love, and appreciation from the crowd were overwhelming.
I let go of my inhibitions and enjoyed every moment, dancing and soaking in the vibe. Thank you, my darlings for making this song “My dear lover-u” a super success after 12 years – a record-breaking moment!
This is a memory I’ll cherish forever. Thank you again, my dear lovers, for your love and support. God bless. – ACTOR VISHAL
குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!
மறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு
மற்றும் செந்தில் இணைந்து நடிக்க, கலக்கலான பொலிடிகல் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”. இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் மறைந்த, சகுனி படப்புகழ் இயக்குநர் ஷங்கர் தயாள் . N குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, செந்தில் மற்றும் யோகிபாபு நடிப்பில், இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் திரைக்கு கொண்டுவரப்படுகிறது.
திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் யாவும், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
நீ என்னவாக ஆசைப்படுகிறாய் எனும் கேள்விக்கு, அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் எனும் ஒரு பள்ளி மாணவனின் பதிலும், அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும் தான் இப்படத்தின் மையம். குழந்தைகளின் உலகின் வழியே, அரசியலை அணுகும் இப்படம், ஒரு மாறுபட்ட அனுபவம் தரும் படைப்பாக இருக்கும்.
இப்படத்தின் முதன்மை பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான, இமயவர்மன் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள் அவர்களின் மகன் அத்வைத், ‘அன்டே சுந்தரனிகி’ படப்புகழ் ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் செந்தில் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். முக்கிய பாத்திரங்களில் பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, பிராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் படப்புகழ் இயக்குநர் மூர்த்தி, சித்ரா லக்ஷ்மன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ், சோனியா போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள் .N பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டது.
பண்டிகைக் கொண்டாட்டமாக இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து இயக்கம் – ஷங்கர் தயாள் N
ஒளிப்பதிவு – J .லக்ஷ்மன் MFI
எடிட்டர் – A.ரிச்சர்ட் கெவின்
இசையமைப்பாளர் – “சாதக பறவைகள்” சங்கர்
கலை இயக்குனர் – C.K முஜிபுர் ரஹ்மான்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் – பாண்டியன் நன்மாறன், E.சூர்யபிராகாஷ்
தயாரிப்பு நிர்வாகம் – ராஜாராமன்,M V ரமேஷ்
நடனம்- ராதிகா, அபு & சால்ஸ்
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா ( AIM )
“கள்வா”, “எனக்கொரு WIFE வேணுமடா” ஆகிய 2 குறும்படங்களை இயக்கிய ஜியா, அடுத்ததாக இயக்கியுள்ள குறும்படத்துக்கு “அவன் இவள்” என தலைப்பு வைத்திருக்கிறார்.
“கள்வா” படம் ரொமான்டிக் திரில்லராகவும் “எனக்கொரு WIFE வேணுமடா” காமெடி டிராமா ஜானரிலும் உருவானது. ஜியாவின் 3வது படைப்பான “அவன் இவள்”, க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த குறும்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங், எஸ்எஃப்எக்ஸ் பணிகளை அபிஷேக் கையாண்டுள்ளார். அர்ஜுன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
செபஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் யூடியூபில் இந்த குறும்படம் வெளியாகும்.
‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார்.
வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக நடித்துள்ள தனலட்சுமி, ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் சகாய் முதலியோர் பங்கு பெற்றனர். பாடலை முதல்வர் கண்டு பாராட்டினார்.
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. என்னுடைய முதல் படமே குடும்பப் படமாக அமைந்துள்ளது. ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி”.
கலை இயக்குநர் சுரேஷ் பாலாஜி, “எனக்கு வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தில் ஜாலியாக வேலை செய்தோம். உங்களுடைய ஆதரவு தேவை”.
எடிட்டர் கண்ணன் பாலு, “’குடும்பஸ்தன்’ எனக்கு ஸ்பெஷல் படம். நன்றாக படம் வந்திருக்கிறது. தியேட்டரில் பாருங்கள்”.
ஒளிப்பதிவாளர் சுஜித் சுப்ரமணியன், “இயக்குநர் ராஜேஷூடைய கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்களாக நாங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்டதாக இருந்தது. எடிட்டர் கண்ணன் என்னுடைய கிளாஸ்மேட். இருவரும் ஒரே படத்தில் அறிமுகமாகிறோம் என்பது மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ் எங்கள் மேல் அழுத்தம் கொடுக்காமல் இருந்த புரொடக்ஷன் டீமுக்கு நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் வைசாக், “இந்த படத்தை அறிமுகம் செய்த மாதேவனுக்கு நன்றி. நிறைய புதுவிஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். படம் நன்றாக வந்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மியூசிக்கல் டீமுக்கும் நன்றி. படத்தை ஜனவரி 24 அன்று திரையரங்கில் பாருங்கள்”
பப்ளிசிட்டி டிசைனர் வின்சி ராஜ், “’குடும்பஸ்தன்’ என சொல்லும்போது சந்தோஷமாக எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என்று படமாக்கி இருக்கிறோம். படம் நன்றாக வந்திருக்கிறது”.
எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்தர், “நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஆரம்பித்த இந்த பயணம் இப்போது முழுமையான விஷயமாக திரைப்படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படம் சாத்தியமாவதற்கு பலபேர் காரணம். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ‘குடும்பஸ்தன்’ என்ற பெயர் பழையதாக இருந்தாலும் கதை எப்போது பார்த்தாலும் புதிதாக இருக்கும். இதன் கதாநாயகன் நம்மில் ஒருவராக சராசரியாக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் யோசித்தபோது, மணிகண்டன் சரியாக இருப்பார் என நானும் ராஜேஷூம் அவரிடம் பேசினோம். எங்களை விட மணிகண்டன் இந்த கதையை நம்பினார். நடிகராக மட்டுமல்லாது கதைக்கும் அவர் நிறைய இன்புட் கொடுத்தார். இந்த கதை அறுசுவை உணவு சாப்பிட்ட உணர்வு கொடுக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகர் ஜென்சன் “ரொம்ப ஜாலியாக, எதார்த்தமாக ஆரம்பித்த படம் இது. யூடியூப் ஆரம்பித்து இப்போது படம் செய்யும் அளவுக்கு நாங்கள் வளர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓரளவுக்கு நல்ல நடிகன் என எல்லாரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பிரசன்னா அண்ணாதான். அவருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். மணிகண்டன் அண்ணனின் மிகப்பெரிய ரசிகன் நான். குரு சாரின் ‘பாட்டல் ராதா’ படத்திற்கும் வாழ்த்துக்கள்”.
நடிகை ஷான்வி, “படக்குழுவினர் எல்லோரும் எனக்கு நல்ல சப்போர்ட் செய்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. நம்ம எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதைதான் இது. டிரெய்லர் எப்படி சிரித்து ரசித்தீர்களோ அதேபோலதான் படமும் இருக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் வினோத்குமார், “படம் நன்றாக வந்திருக்கிறது. ஜனவரி 24 அன்று படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகர் குரு சோமசுந்தரம், “இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடிச்ச ஜானர், சீரியஸான காமெடி கதை கொண்ட படம் இது. நான் எதிர்பார்த்திருந்த சமயத்தில் இயக்குநர் ராஜேஷ் இந்த கதையோடு வந்தார். எல்லா விதத்தில் இருந்தும் சினிமாவில் நுழையலாம். இவர்கள் யூடியூப் வழியாக வந்திருப்பது மகிழ்ச்சி. இவர்களுக்கு பார்வையாளர்கள் நீங்கள் நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். ‘விக்ரம் வேதா’, ‘காலா’வில் மணிகண்டனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மிகவும் கனிவானவர். தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு என்னை பிரமிக்க வைத்தது. படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. படம் பாருங்கள்” என்றார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, “இது என்னுடைய குடும்ப விழா. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு ஒரு தயாரிப்பாளரிடம் கதை துல்கர் டேட் வாங்கி வேலை ஆரம்பிக்க இருந்த சமயத்தில் அந்தத் தயாரிப்பாளர் படத்தில் இருந்து விலகினார். அந்த சமயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தது வினோத் சாரும் குமார் சாரும்தான். அந்தப் படம் நான் நினைத்த மாதிரி வந்ததற்கு காரணம் வினோத் சார்தான். அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘குடும்பஸ்தன்’. யதார்த்தமான கதை இது. எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை”.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “என்னுடைய கனவை அடைய ஆதரவு கொடுத்த என் குடும்பத்திற்கு நன்றி. நக்கலைட்ஸூம் என் குடும்பம்தான். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். முத்தமிழ், நிவி, ஜென்சன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஜென்சன் தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ். பிரசன்னா எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியுள்ளார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”.
நடிகர் மணிகண்டன், “இரண்டரை வருஷத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ படமும் ‘குடும்பஸ்தன்’ படத்தோடு வருகிறது. நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகி அழுவது அரிது. அது ’பாட்டல் ராதா’ படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். ‘குடும்பஸ்தன்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கொங்கு தமிழை நக்கலைட்ஸ் டீம் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பிரசன்னா சார் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.
டெக்னிக்கல் டீமும் கஷ்டப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோபப்படாத கனிவான தயாரிப்பாளர் வினோத். எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார். என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஏ.ஆர். அறக்கட்டளை திரு எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார்.
‘பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது’ என்றார் பெர்னாட்ஷா.
‘பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது ‘என்றார் சார்லி சாப்ளின்.
இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும்.
அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள நோட்டு ‘என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் .ஆ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .பாடல்களை செல்வராஜா எழுதியுள்ளார்.
எம் ஜி ரா ஃபிலிம் பேக்டரி சார்பில் எம்.ஜி .ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.
‘கள்ள நோட்டு ‘படத்தின்
நாயகனாக எம்.ஜி .ராயன், நாயகியாக மது, வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி, நாயகனின் நண்பனாக நா. ரஞ்சித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் என்.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வறுமையால் துரத்தப்பட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் இருவருமே கள்ள நோட்டு என்ற கறுப்புச் சகதிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு. அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதுண்டு. அப்படிச் சிக்கிக் கொண்ட ஒருவனின் கதை தான் கள்ள நோட்டு என்கிற திரைப்படம்.
கள்ள நோட்டு படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. டீசரை சேலம் மாநகர மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் வெளியிட்டார்.
விழாவில் திரைப்படத்தினை இயக்கி உள்ள எம் ஜி. ராயன் பேசும்போது,
“கள்ள நோட்டு பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இது நிச்சயமாக வித்தியாசமான கதைக்களம் என்று நம்புகிறேன்.
இதில் கள்ள நோட்டு என்பதை விட நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு என்கிற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் படம் பாருங்கள் புரியும்.இதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை, ஆனால் நாட்டு நடப்பைக் காட்டி இருக்கிறோம். சர்ச்சைகள் எதுவும் எழுப்பவில்லை, ஆனால் உண்மையைக் கூறியிருக்கிறோம் “என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ள நடிகை சுமதி பேசும் போது,
‘நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் .எனக்கு மறக்க முடியாத ஒரு படம் கள்ள நோட்டு. இதில ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவத்தோடு என் பாத்திரம் அமைந்துள்ளது.
இயக்குநர் தனக்குத் திருப்தியான வகையில் காட்சிகள் வரும் வரை மீண்டும் மீண்டும் எடுத்தார்.ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனம் பேசப்படும். இந்த படத்தில் நான் கருங்காலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அது ஒரு கொடூரமான பாத்திரம். நடித்து முடித்து விட்டுப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது . படத்தில் நான் சுருட்டு பிடித்து நடித்துள்ளேன் .அதற்காக நான் சிகரெட் பிடித்துப் பழகினேன்.அப்போது புகை மூக்கில் ஏறி ரொம்பவும் சிரமப்பட்டேன். ஆனால் அந்தக் கதாபாத்திரத்திற்காக நடித்துள்ளேன்.படத்தை திரையரங்கு சென்று அனைவரும் பார்க்க வேண்டும்” என்றார்.
விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Kalla Nottu Teaser
Written & Directed By MG.Raayan
D.O.P – Sambath Kumar.A
Music – Kishore Kumar
Editing – SR.Muthu Kodapaa
DI – Bergmance
Co-Director – NA. Ranjith Kumar
Lyrics – Kavignar Selvaraja
Pro Sakthi Saravanan
Designs – Venkat.RK
PTK Friends
Produced By – MG.Rajendran
Vishal’s Madha Gaja Raja has created a history by becoming the first-ever movie to get released after 12 years and register an inevitable blockbuster success in the box office. The film directed by Sundar C, features an ensemble star-cast comprising Vishal, Santhanam, Anjali, Varalaxmi, with Vijay Antony as the music director. Although the film had a delayed release, it has struck the right chords, by winning the hearts of general audiences, press and media critics, thereby becoming a massive hit.
Marking the grand success, the entire team hosted a Thanksgiving Meet in Chennai.
Here are some excerpts from the event…
The success of the film “Madhagaja Raja” has significantly exhibited that despite a long delay for nearly 12 years, a good movie will always find the best reception. . I personally attended screenings in several theaters to witness it firsthand. It is only now, after 12 years, that I have the opportunity to meet director Sundar.C. The belief that “Madhagaja Raja” will continue to run, regardless of when it is released, has been a sentimental bonding and belief that existed within our entire crew, and all of us are so happy that things have worked out very well in our favour now.
MGR marks my second collaboration with Sundar C sir after ‘Kalakalappu’. I totally enjoyed working and watching ‘Madha Gaja Raja’ and it is my all time favourite movie. I am not sure if its coincidental, but my character names in both the movies ‘Kalakalappu’ and ‘Madha Gaja Raja’ directed by Sundar C is ‘Madhavi’, and it has become my lucky factor now. But I request him to change my name in his next movie.
‘My Dear Lover-u’ has become the favourite track of crowds again and it has been acclaimed as the crowd-pulling factor. I had earlier worked with Cinematographer Richard sir in Angaadi Theru, and in this movie. We have also worked in many projects, and now in a new project. Whenever, we meet, we used to talk a lot about this project. I am a great fan of Vijay Antony sir, and my favourite tracks in this film are ‘Chikku Bhukku’ and ‘My Dear loveru’.
Music Director Vijay Antony said, “The way, Sundar C sir extracted the work from me was so smooth and enjoyable. He will almost complete the lyrics for all the songs, and will always support me in creating a song successfully. I have introduced many singers through my albums, but Vishal has become an overnight music star with the song ‘My Dear Loveru’. The entire world of Carnatic musicians are in unrecoverable shock. Usually it takes at least 3 years to learn Carnatic music, but Vishal mastered in a span of few minutes. Vishal is even performing this song in my Live-In Concert. As soon as the news spread that he is performing, the tickets sold like hot cakes. Anjali is looking beautiful not just in the movie before 12 years, but even now.
Just as the director has carried the entire idea and his visualisations perfectly, the producers have stood beside him as a father, thereby giving the best support, which is now evident through the grand visuals.
Director Sundar C said, “Usually, I never prefer having success meet for my movies that includes my recent hit movie ‘Aranmanai 4’. I follow the habit of getting into next movie as soon as my present project releases. However, this film has endowed a never-before happiness, and this is so special than any other project. Many in the industry passed comments that what would a movie that is releasing after 13 years is going to perform. But we in the team blindly banked our trust on the fans. It is because the film had carried so much positive vibes from them from the time of announcement and even now with its release date announcement. I take this opportunity to thank producer Manohar Prasad, Tirupur Subramaniam, A.C. Shanmugham, A.C.S Arun Kumar, and Madan for being a great support in releasing this movie.
I had a strong faith that the film will be earn the appreciations, but never expected that it would exceed beyond my imaginations. All that I can give back is this Thanksgiving and emotional tears. I thank my Guru Manivannan, Manobala, the angelic beauties Varalaxmi Sarathkumar, Anjali and the entire team for such a great support. Vishal and Karthick are the heroes, who blindly trust me, and it’s quite a rarity to find the same in heroines, but Anjali had done it, and made my films Kalakalappu and Madha Gaja Raja, a memorable project. Varalaxmi got onboard for this project during the spur of moment, and she rendered an excellent support.
Myself and Santhanam together have worked in many projects, and he had given 40 days call sheet for this movie. Although it’s been 13 years, it’s great to see heart-warming response for the songs and BGM by Vijay Antony and my humble thanks to him. I had tortured Vijay Antony for a song in this movie for nearly 5 days, and was little disappointed when it didn’t get good response during that time. But now I am glad that it is receiving phenomenal response. ‘Chikku Bhukku’ song was coincidentally placed in this movie, as the tune was rejected by another movie team. Now this song is being played in all the village festivals.
The efforts by Vishal for this film are beyond anyone’s imaginations as he went through lots of mental and physical strains to develop the 8-pack physique. Naturally, he has won the hearts of audiences for his hard work. Gemini Film Circuit are wonderful producers, and Madha Gaja Raja has made their reentry more powerful. I wish and request them that they continue to produce more movies out here in the Tamil film industry. I am a hardcore fan of MGR, and my entire day gets more positive if I come across his image or hear his song somewhere. I am so happy that the movie carrying his name as title has become a super hit now.”
Actor Vishal said, “First and foremost, I would like to thank everyone for their kindness and genuine wishes for my health. I was truly touched to receive calls from medical professionals, judges, and officials from various countries, all showing authentic concern for my well-being, especially since they had never seen me in this condition before. After the event, I realized how many people care about me, including those who had not shown support in the past. The doctors advised me not to attend due to a high fever of over 103 degrees. In the past 12 years, whenever myself and Sundar C used to me, he would give confidence that the movie will be a successful hit, and finally it has happened. It was Vijay Antony, who would often encourage and install the confidence in me that the film will be a great hit. It’s a rare thing to see that a movie after 12-13 years is releasing and is having a good reception. My heart goes to one and all, who have this film successful.
I’ve seen many stories claiming I’ve become an alcoholic and am dealing with nervous issues. I want to emphasise that the media is welcome to contact me for the truth, and I’m happy to share.
The silver lining is realising how many people genuinely care for me. I often feel anxious about visiting a hospital or seeing a doctor. However, acting in films directed by Sundar C. is therapeutic for me and brings me joy. It’s impressive for a director to have a successful career in the film industry for 30 years.
We share a close familial bond with producer Manohar Prasath, and it has been quite some time since we have seen such a smile on his face. At the Devi Theatre, a total of 8,000 people attended across four screens in a single day. It’s essential for you to return to the film industry with full vigor; we need more producers like you. When we have producers who support us, we, as actors, are ready to dedicate ourselves wholeheartedly to our work. My close friend Varalaxmi looks fresh and vibrant. Although, we have worked only in a couple of movies, we share a bond like college friends. I usually don’t have the habit of crying, but was totally moved with her performance in ‘Hanuman’ in a particular scene. I was in gleeful tears with the heartwarming response of audiences in the theaters.
I think MGR is blessing me from somewhere as we are celebrating the success of this movie on his 108th birth anniversary. I had tattooed his name in Mark Antony. Significantly, both the movies are greater hits.
Madha Gaja Raja has become an express that isn’t stopping anywhere due to the tremendous support of family audiences. I could realise that they were thirsting for an entertainer, which was evident with 20 minute sequence in the second half. My heartiest thanks to Santhanam. Our combination has always been a great hit. Just like all are saying, it would be great to see his comeback as vintage Santhanam soon.
My next films are with Gautham Vasudev Menon, Ajay Gnanamuthu and Thupparivalan 2. I am curiously waiting to collaborate with Sundar C, and with his nod, I am ready to allot dates immediately putting aside the committed projects. While fans are curiously waiting for our comeback, we are planning to re-release our ‘Aambala’ movie soon.”
“’மதகஜராஜா’ பட நன்றி நவிழ்தல்… விழாவில் நாயகர் விஷால் , இயக்குநர் சுந்தர்.சி , இசைஞர் விஜய் ஆண்டனி , நாயகி அஞ்சலி ஆகியோருக்கு 70 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் மிக்க ., ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ கௌரவம் !!”
———-++++++++++———–
12 வருடங்களுக்கு முன் தயாராகி ஒரு சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் .. MGR (மதகஜராஜா ) படத்திற்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று ., நன்றி நவிழ்தழ்… மற்றும் வெற்றி விழா … நடை பெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் ., சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசையமைப்பாளர்) உள்ளிட்டோரின் கூட்டணியில் ., ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி 12 வருடங்கள் தவமிருந்து , தடைகள் பல கடந்து வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 திரைப்படமாக குறிஞ்சி மலராக வெற்றி வாகை சூடி இருக்கிறது..
13 வருடங்களுக்கு முன் இந்தப்படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்போது வரை இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா, சோஷியல் மீடியா உள்ளிட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை ‘மதகஜராஜா’ படக்குழுவினர் நேற்று (17-02-2025)., சென்னை வடபழனி , கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடத்தினர்.
இந்த நிகழ்வில் MGR (மதகஜராஜா ) படத்தயாரிப்பாளர் மனோகர் பிரசாத் , நாயகர் விஷால் , இயக்குநர் சுந்தர்.சி , இசைஞர் விஜய் ஆண்டனி , நாயகி அஞ்சலி, நடிகர் விச்சு… உள்ளிட்டோருக்கு ., 70 ஆண்டுகள் கடந்த பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சார்பில் அதன் கெளரவ தலைவர் ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன் , துணைத்தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் , செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன், உறுப்பினர்கள் ‘மைசிக்ஸர்’ விஜய் ஆனந்த் , ‘மூவி விங்ஸ்’ தர்மராஜ் உள்ளிட்டோர் ‘MGR’ பட வெற்றிக்கும் , இக்கட்டான உடல் நிலையில் இருந்த மீண்ட விஷாலுக்கும் ., 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடி வரும் சுந்தர்.சி உள்ளிட்டோருக்கும்… மரியாதை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக !!
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா.
ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய லிங்குசாமி இந்த படம் தமிழில் மிகச்சிறந்தபடமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது.
இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . அவசியமானதொரு படம்.
இந்தப்படம் பெரும்வெற்றியடையும் என்றார்.
விழாவில் பேசிய அமீர் இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன் அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். பாட்டல் ராதாவை பார்த்தபிறகு இனி அந்த படம் செய்தால் பாட்டல்ராதா பார்த்து எடுத்ததைபோல இருக்கும். எனவே அதை எடுக்கப்போவதில்லை. குடி நோயாளிகளைப்பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும் அது பாட்டல்ராதா படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது. இந்தப்படம் தமிழில் மிகச்சிறந்தபடம் என்றார்.
நிகழ்வில் பேசிய மிஸ்கின்
பாட்டல் ராதா திரைகதை எழுதப்பட்ட விதம் மிகச்சிறப்பானது.
முதல் படத்திலேயே இவ்வளவு சிறப்பாக எழுதி எடுத்திருக்கும் இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு பாராட்டுக்கள். அதுவும் இப்படி ஒரு கதைகளத்தை எழுதியதற்கு என் பாராட்டுக்கள்.
இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன் குறிப்பாக குருசோமசுந்தரம் நடிப்பில் மிரட்டிவிட்டார். மொத்தமாக படக்குழுவுக்கு என் அன்பும் பாராட்டும். இப்படிப்பட்ட படங்களை தயாரிக்கும் ரஞ்சித்துக்கு என் அன்புகள் என்றார்.
நிகழ்வில் பேசிய வெற்றிமாறன்
பாட்டல் ராதா திரைப்படம் நன்றாக எழுது மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டபடம் , இந்தப்படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது.
இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்று பேசினார்.
நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித் குடியால் பல குடும்பங்கள் அழிந்துபோனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது.
வசனங்களும், வாழ்வும் , நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது.
தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார். தொடர்ந்து இந்த தமிழ்சினிமாவில் அவசியமான படங்களை தரவேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம். இன்னும் நல்ல படங்கள் , பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ளபடங்கள் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டேயிருப்போம்.
பாட்டல் ராதா உங்களை ரசிக்கவைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக் இருக்கும் என்றார்.
Megastar Chiranjeevi was moved by music director Thaman’s recent thoughtful statments about the negativity that is being spread in social media about films. In a recent event, Thaman expressed his grief over how we are killing our own cinema.
Responding to Thaman’s statments, Chiranjeevi took it to the social media platform X and wrote, “Dear Thaman, the words you spoke yesterday were truly touching and heartfelt. It surprised me a bit to see such depth of emotion in you as you are usually so joyful. But it also made me realize how deeply hurt you must have been to respond that way.”
“Whether the topic is movies, cricket, or another social issue, everyone using social media should think about the impact their words might have on others. As someone once said, “Words are free. Words can inspire. And words can destroy. Choose what you wish to do.” If we remain positive, that energy will guide our lives in a similarly positive direction. Thoughtful words my dear. God bless,” he further added.
Thaman said that Chiranjeevi’s words will stay with him forever. Responding to Chiranjeevi’s tweet, he wrote, “Dear Annayya, Your words reminded me of the Bhagavad Gita verse, “Karmanyevadhikaraste Ma Phaleshu Kadachana” (You have the right to perform your duty, but not to the benefits of your actions).”
“No matter how much we try, we all are human, right? Sometimes, sorrow finds its way past the doors of our hearts. Your words, understanding and empathetic, have touched me deeply and will remain with me for a lifetime. Long live Cinema,” he went on to add.