காமம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உணர்வு. ஆனால் பெண்ணுக்கு மட்டும் அது சமூகம் சார்ந்த ஒழுக்க நெறி. ஆணுக்கு பந்தம் ஒரு கால் கட்டு என்று சொல்லப்படுகிறது ஆனால் பெண்ணின் பிறப்பே கட்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கிறது. தமிழின் பல கெட்ட வார்த்தைகள் பெண்ணின் காமம் , பெண்ணுறுப்பு சார்ந்ததாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அவளின் காமம் குடும்பம் கற்பு என்று வட்டத்திற்குள் வரையறுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சமூகத்தின் அடித்தளம் என்றே கூட அதை சொல்லலாம். அது மெல்ல மெல்ல மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது என்பதும் உண்மை. அப்படிப்பட்ட ஒரு மாற்று சூழலுக்குள் ஊடாடும் ஒரு பெண்ணைப் பற்றிய காதலர்களைப் பற்றிய ஒரு பதிவுதான் இந்த படம்… சொல்ல வந்ததை திரைப்படத்திற்கு உண்டான மேக்கிங்கில் சொல்லி இருப்பதற்கு கண்டிப்பாக இயக்குனரை பாராட்ட வேண்டும். எமோஷனலாகக மட்டுமல்லாமல் அறிவு சார்ந்து காமம் குறித்து நிறைய விவாதிக்கப்பட வேண்டும்… படக்குழுவுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன், ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், ‘பசங்க ‘ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் – சத்ய பிரகாஷ் – அனல் ஆகாஷ் – பிரவீண் சைவி – சஹி சிவா- ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை வி.ஜே.சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்கர் வழங்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், ” திவ்யா – ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்த சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் முதன்முறையாக பணியாற்றிருக்கிறேன். அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதனால் படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். ” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.
“காதலில் எத்தனை வகை உண்டு தெரியுமா”: ‘காத்துவாக்குல ஒரு காதல்’ பட விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா MP ருசிகர தகவல்!
“கலைஞர் சொன்ன வீரமும், காதலும்!”: காத்துவாக்குல ஒரு காதல்’ பட விழாவில் ஆ.ராசா MP சுவாரஸ்ய தகவல்
நிகழ்வில் மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது :
“இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர் எழில் இனியன் அவர்களே, இயக்குனர் மாஸ் ரவி அவர்களே இத்திரைப்படத்தின் கலைஞர்கள் மஞ்சுளா அவர்களே, ஜி. கே.வி அவர்களே, சூப்பர் சுப்பராயன் அவர்களே, சுபாஷ் மணியன் அவர்களே, ராஜ்குமார் அவர்களே, இவர்களோடு இணைந்து பணியாற்றிய ஏனைய கலைஞர்களே…
பத்திரிக்கையாளர்களே, ஊடகவியல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் .
நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் கலை இலக்கியம் – திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அரசியலுக்கு வந்த 90-களில் இருந்தே, அதிகமான நேரத்தை சினிமாவிற்கு என்னால் ஒதுக்க இயலாமல் போய்விட்டது. திரைப்பட நிகழ்வுகள் சிலவற்றில் தலைவர் கலைஞர் அவர்களுடன் பங்கேற்றது உண்டு. அவ்வளவுதான்.
நாங்கள் இளவயதில் பார்த்த திரை உலகமும், இன்றைக்கு இருக்கிற திரை உலகமும் நாங்கள் அப்போது அனுபவித்த இசையும், இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகள் அனுபவிக்கும் இசையும் இருவேறு உலகத்தில் இருக்கின்றனவோ என்கிற அளவிற்கு திரை உலகம்முதிர்ச்சி அடைந்திருக்கிறதா அல்லது சிலர் கூறுவதைப்போல சீரழிந்திருக்கிறதா என்பதையெல்லாம் நான் மிகப்பெரிய ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாதவன்.
ஆனால் காதலும், வீரமும் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டற பின்னியிருந்தது திராவிட இலக்கியங்கள், சங்க பாடல்களில் இருந்து பல்வேறு விதமான குறிப்புகளை பேரறிஞர் அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் எழுத்தில் அளித்ததை படித்து வளர்ந்தவர்கள் நாங்கள்.
இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் திராவிட மாடலின் நாயகர் மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடைய தந்தை கலைஞர் அவர்களுடைய எழுத்தில் விளைந்த ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சாதி ஒழிப்பு குறித்த மையக்கருத்து அடி நாதமாக இருக்கும். எப்போதுமே ஒரு கருத்தை செயற்கையாகவோ இயற்கையாகவோ நம்மீது வரித்துக்கொள்ளும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம்.
நானும் கூட 8-ம் வகுப்பு படிக்கும் வரையில் திராவிட இயக்கம் என்றால் என்ன, பெரியார் யார், அண்ணா யார், கலைஞர் யார் என்று அறியாதவன்தான். ஏதோ ஓர் பேச்சு போட்டியில் கலந்துகொண்டேன். தமிழாசிரியர் எழுதிக்கொடுத்ததை பேசி பரிசு பெற்றேன். அதன் பிறகு தமிழ் மீது ஈடுபாடு வந்தது… பெரியாரை, அண்ணாவை, கலைஞரை அவர்கள் வாயிலாக சங்க இலக்கியத்தை திராவிட பண்புகளை எல்லாம் அறிந்தேன். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக 3 முறை ஒன்றிய அமைச்சராக இருந்தேன். அதில் மிகப்பெரிய சோதனை வந்தும், அதை எதிர்த்து நிற்கும் வலிமை உள்ளவனாக நின்றுகொண்டிருக்கிறேன். இந்த வலிமை, திராவிட இயக்கம் தந்திருக்கின்ற கலை, இலக்கியம், அரசியல் அளித்ததுதான்.
அந்த வரிசையில், முதலமைச்சர் அவர்கள் நடித்த ‘ஒரே இரத்தம்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் கதை என்னவென்று கேட்டேன்… முன்வெளியிட்டு தகட்டை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். நான் முன்பே குறிப்பிட்டது போல கலை, இலக்கியம், ,காதல் வீரம் எல்லாம் தமிழர்களுக்கு என்று இருக்கின்ற தனி செம்மாந்த விழுமியங்கள்.
“எங்குற்றான் உந்தன் மகன் எனும் குரல் கேட்ட தாய்க்கிழவி, பொங்குற்ற துயரை அடக்கி, ‘புலி, போன இடம் நான்றியேன்; போர்க்களம்தான் போயிருக்கும்; புலி இருந்த குகை இதுதான்’ என்று தன் வயிற்றை சுட்டி காட்டிய தமிழ்” – என்று
கலைஞர் எழுதினார். அந்த கலைஞர் தான், ‘ஏறு தழுவுதல் ஆடவர்க்கு அழகு; அவர் வாயில் வெற்றிலை சாறு தடவுதல் மகளிர்க்கு அழகு’ என்று காதலையும் சொல்லி இருப்பார்.
அப்படி ‘காத்துவாக்குல ஒரு காதல்’ கதையை கேட்டபோது இரண்டு உண்மையான காதலர்கள் சந்திக்கின்ற தடையை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பூலோக பகுதியிலே இருக்கின்ற தடைகளை எல்லாம் தாண்டி வருகின்ற அந்த ஓட்டத்தை தந்திருப்பதாக சொன்னார்கள்.
சினிமாவாக இருந்தாலும், கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும் சமூகத்தில் இருக்கின்ற புழுக்கத்தை சமூகத்தில் இருக்கின்ற கொதிப்பை வெளியேகொண்டு வந்து அவற்றை தீர்க்க கூடிய தீர்க்கமான ஆயுதமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற இயக்கம் திராவிட இயக்கம்.
உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ காதல் கதைகளை எல்லாம் சுருக்கி வைத்து பார்த்தால் இரண்டே இரண்டு விஷயம் தான். உன்னை நான் காதலிக்கிறேன் அல்லது நான் காதலித்துக் கொண்டே இருப்பேன். இதற்கு தான் இவ்ளோ பெரிய இலக்கியங்கள் எல்லாம்.
இன்றைக்கு இருக்கிற சாதியம், அரசியல், பொருளாதார வேறுபாடு, மதவெறி இவைகளை எதிர்த்து ஒரு காதல் வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்க்கு இளமை மட்டும் காரணம் அல்ல; அதையும் தாண்டி ஒரு மனப்பக்குவமும், புரிந்துகொள்ளுகின்ற ஆற்றலும் வேண்டும் என்கின்ற அந்த உணர்வோடு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட ஒரு படம் வெற்றி பெறவேண்டுமென்று நான் விழைகிறேன். அதற்காக உழைத்த அத்தனை பெருமக்களையும் பாராட்டி, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.”
ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் பேசியதாவது :
“என் நண்பர்களான அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்க்கு வணக்கம், இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். ஏனெனில் அறிமுக இயக்குநர்கள் பலரது படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். அத்தனையும் வெற்றி பெற்றன. அவர்கள் அனைவரும் இன்று மிகப்புரிய அளவில் வலர்ந்துள்ளார்கள். அதேப்போல் தம்பி மாஸ் ரவியும் இத்திரைப்படத்தின் மூலம் மிகப்பபெரிய வெற்றியடைவார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. இராசா அவர்கள் இங்கு வந்து வாழ்த்தியதே, இத்திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றி. படத்தின் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்கள் முழு வேகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஒரு உதவி இயக்குனர் போல் அனைத்து வேலைகளையும் முன் வந்து சிறப்பாக செய்தார். அவருக்கு என் மிகப்பெரிய பாராட்டுகள். படத்தின் பாடல்களும் , பின்னனி இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. மேலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய படத்தின் குழுவிற்க்கு வாழ்த்துக்கள்!”
இயக்குனர் சுப்ரமணிய சிவா பேசியதாவது :
“இந்தப் படத்தின் இயக்குநர் மாஸ் ரவி, எனது பல வருட நண்பன், என் தம்பி! அவர், மிகவும் கஷ்டமான சூழ்நிலைகள் பலவற்றை கடந்து வந்தவர். இத்திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாகவும் இயக்குனராகவும் களம் இறங்குவது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. அதற்கான களம் அமைத்துக் கொடுத்த வாய்ப்பளித்த சென்னை பிரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் சினிமாவில் தற்ப்போது இருக்கும் மாடர்ன் சண்டை காட்சிகளுக்கு எல்லாம் குரு திரு.சூப்பர் சுப்புராயன் அவர்கள் தான் . அவரும் இத்திரைப்படத்தில் இருப்பது மேலும் வெற்றியை உறுதி செய்து உள்ளது.
இயக்குனர் மாஸ் ரவி பேசியதாவது :
வருகை தந்திருக்ககூடிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. இராசா அவர்களுக்கும் நன்றி.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்கள் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அணு அணுவாக சினிமாவை ரசிப்பவர். நம்மை பின் தள்ள ஆயிரம் பேர் இருந்தாலும் நம்மை மேலே தூக்கிவிட வந்தவர் தான் என் தயாரிப்பாளர் திரு.எழில் இனியன் அவர்கள். பின் நான் 15 வருடமாக பயனிக்ககூடிய என் குரு இயக்குனர் திரு. சுப்ரமணிய சிவா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டண்ட் இயக்குனர் திரு. சூப்பர் சுப்புராயன் மாஸ்டர் அவர்களுக்கும் என் நன்றிகள், என்னை தன் மகன் போல அக்கரையுடன் பார்த்துக்கொண்டார்.இசையமைப்பாளர் ஜீ.கே.வி மற்றும் மிக்கின் அருள்தேவ் இருவருடைய உழைப்பும் படத்திற்க்கு மிக முக்கியமானது மற்றும் படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
இசையமப்பாளர் ஜீ.கே.வி பேசியதாவது :
அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம், படத்தின் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்களுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு உன்மையாக பணியாற்றியுள்ளேன். மேலும் இசையமைப்பாளர் திரு. மிக்கின் அருள் தேவ் அவர்கள் பணியாற்றி கொடுத்த ஒரு பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளது அவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் ஆதித்யா கதிர்:
இயக்குனர் மாஸ் ரவி அவர்கள் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமாவது, மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. புதுமுகம், புது தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களை நம்பி ஒரு வாய்ப்பு கொடுத்த சென்னை பிரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மேலும் இத்திரைபடம் மிகப்பெரிய வெற்றியடைய படத்தின் குழுவிற்க்கு வாழ்த்துக்கள்.
தயாரிப்பு நிறுவனம் : சென்னை பிரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : எழில் இனியன் .பா
இணை தயாரிப்பாளர் : ச. ராசாத்தி எழில் இனியன்
எழுத்து & இயக்கம் : மாஸ் ரவி
இசை : ஜீ.கே.வி, மிக்கின் அருள்தேவ்
ஒளிப்பதிவாளர் : சுபாஷ் மணியன் – ராஜ துரை
படத்தொகுப்பு : ராஜ்குமார்
ஸ்டன்ட் : சூப்பர் சுப்புராயன்
நடனம் : ஹேப்பிசன் ஜெயராஜ்
மக்கள் தொடர்பு : இரா. குமரேசன்
நிகழ்கால எதிர்கால
சந்ததிக்கு தீமை தரும்
” டங்ஸ்டன் சுரங்கம் “
நடிகர் – இயக்குனர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ராமராஜன் எதிர்ப்பு !
இன்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் “டங்ஸ்டன் சுரங்கம்” அமைக்கும் பணிக்கு தடை விதிக்கக்கோரி மதுரை சுற்றியுள்ள அனைத்துப்பகுதி மக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பரித்து எதிர்ப்பு தெரிவித்து வருவது என்னை கலங்கடிக்கச் செய்தது, மேலூரை சுற்றியுள்ள 50 கிராமங்களையும் அங்கே ரத்தமும் சதையுமாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழிக்கும் இப்படி ஒரு திட்டம் அவசியமானதா…? தமிழர்களின் வாழ்வியல் அடையாளமும், நுண்ணியல் வரலாற்று சான்றும், இதிகாச கல்வெட்டு அதியமும் ஆதாரமும் கொண்ட எம் மதுரை மண்ணின் மகத்துவத்தை தனித்துவத்தை அழித்து விட்டு என்ன சுரங்கம் அமைத்து எதை அதற்கு பதில் தந்து விட முடியும்…? பல தலைமுறைகளாக பாட்டன் பூட்டன் ஆண்ட விவசாய நிலங்களை அழித்துவிட்டு, வீடுகளை, நீர்தளங்களை, மலைக்குன்றுகளை அகற்றி அங்கே நிகழும் உங்கள் அதிசயம் முழுக்க மனிதகுலத்திற்கு எதிரானது, மேலூர் ஒட்டிய இத்தனை கிராமங்களோடு அரிட்டாபட்டியில் திட்டமிடும் இத்தகைய நிகழ்கால, எதிர்கால சந்ததிக்கு தீமை தரும், ஏன்… மதுரையின் அடையாளமே மறைக்கப்படும் இந்த டங்ஸ்டன் எடுக்கும் திட்டப்பணிகளை அறவே கைவிட வேண்டும், இங்கே மட்டுமன்றி அருகேயுள்ள தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இத்திட்டத்தை கொண்டு வரக்கூடாது, அதற்கு ஆளும் அரசாங்கங்கள் மக்களின் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து இதுபோன்ற பூமியையோ இயற்கை வளங்களையோ, விவசாய வேளாண்மை நலங்களையோ பாதிக்காதவாறு செயல்பட வேண்டுகிறேன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது தான் அரசுகளே தவிர அரசு மக்களை தேர்ந்தெடுக்கவில்லை, தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்ற கூற்றுப்படி வாழும் மக்கள் வீடுகளில் பொங்கல் பொங்க வேண்டுமே தவிர அவர்கள் மனம் துயரத்தில் பொங்க கூடாது, அதற்கு அரசாங்கம் உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மீண்டும் இதுபோன்ற தவறான திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்து பல லட்சம் மக்கள் நெஞ்சில் ஆறுதல் தர வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பாதிப்பு எனக்கு வருத்தம் அளிப்பதை தாண்டி , மதுரை மேலூர் மண்ணில் பிறந்தவன், அந்த பூமியில் நடந்து திரிந்து அதில் விளைந்த அரிசியை தின்றவன், நீரை குடித்தவன் என்ற அந்த மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது, கனத்த வலியுடனே இதனை பகிர்கிறேன்,
மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆதரவாக அமைதி வழியில் போராடிய, ஆதரவளித்து வரும் அனைத்து கட்சியினருக்கும், விவசாய சங்கங்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் அனைத்து துறை சார்ந்த மக்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி!
உணர்வுடன்
R. ராமராஜன் Ex.MP
நடிகர் – இயக்குநர்
7 MILES PER SECOND நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பாலா சரவணன், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வித்தியாசமான காதல் கதை கொண்ட திரைப்படம் மிஸ் யூ. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது. குடும்பத்துடன் பார்த்து கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின், 2024 ல் வெளியான சிறந்த 20 திரைப்படங்கள் பட்டியலிலும் இடம் பிடித்தது. காதல், காமெடி, ஆக்ஷன் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் பாடல்களுக்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். N.ராஜசேகரன் இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது. தற்போது AMAZON PRIME OTT யில் இப்படம் வெளியாகி உள்ளது.
ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது….
எங்கள் படத்தை வாழ்த்த இங்கு வந்துள்ள பிரபலங்களுக்கு நன்றி. ஒரு நல்ல படம் தந்துள்ளோம். நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் முழு ஆதரவைத் தர வேண்டும், நன்றி
எடிட்டர் அருள் E சித்தார்த் பேசியதாவது….
தேஜாவு தான் என் முதல்ப்படம். அந்தப் படத்தில் தான் அரவிந்த் அறிமுகம். இந்தப்படத்துக்கும் நீங்கள் தான் எடிட்டர் என்றார். தேஜாவு படத்தில் பாட்டு, ஃபைட் இல்லை ஆனால் இந்தப்படத்தில் அதற்கும் சேர்த்து, எல்லாம் வைத்துள்ளார். தேஜாவு படம் போல, இந்தப்படத்திலும் இடைவேளையிலிருந்து வேறு மாதிரி இருக்கும். ஸ்ம்ருதி வெங்கட் அருமையாக நடித்துள்ளார். கிஷன் அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். இசை அருமையாக வந்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது. அரவிந்த் ப்ரோ அடுத்த படத்திற்கும் எனக்கு வாய்ப்பு தாருங்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
டான்ஸ் மாஸ்டர் பாபி பேசியதாவது…
எல்லோரும் நல்ல தருணத்துக்காகத்தான் உழைக்கிறோம். தருணத்துக்கும் அது அமைய வேண்டும். தயாரிப்பாளர் இப்படத்திற்கு முழு ஆதரவாக இருந்தார். அவர்களுக்கு இது நல்ல வெற்றிப்படமாக அமைய வேண்டும். அரவிந்த் ப்ரோ குறுகிய காலத்தில் பெரும் உழைப்பைத் தந்துள்ளார். தேஜாவு படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும், இந்தப்படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி.
நடிகர் விமல் ராஜா பேசியதாவது…
இந்தப்படத்தில் எல்லா நடிகர்களுடன் நானும் ஒரு சின்ன கதாப்பாத்திரம் செய்துள்ளேன். தேஜாவு இயக்குநர் படம் செய்கிறார் என்று தெரிந்து, அவரிடம் வாய்ப்பு கேட்டு, ஆடிஷனில் கலந்து கொண்டு தான் இந்தப் படத்தில் நடித்தேன். இந்த படத்திற்கு ஆடிஷன் வைத்துத் தேர்ந்தெடுத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பெஸ்ட்டைத் தந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் அனைவரும் நன்றி.
இசையமைப்பாளர் அஸ்வின் பேசியதாவது…
இப்படத்திற்கு நான் பின்னணி இசை அமைத்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பைத் தந்ததற்கு இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. நிறைய புதிய முயற்சிகள் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். தர்புகா சிவா நல்ல பாடல்கள் தந்துள்ளார். கார்கிக்கு நான் ரசிகன், இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நன்றி.
நடிகர் ராஜ் ஐயப்பா பேசியதாவது…
நான் வாழ்க்கையில் மிகவும் சோர்வாக இருந்த காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்குப் பிறகு, எனக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இந்தப் படம் எனக்கு லக்கி ஜாம். இந்த படத்தில் நான் மிக முக்கியமான கேரக்டர் செய்து இருக்கிறேன். கிஷன், ஸ்ம்ருதி வெங்கட், நான் மூவரும் ஒரு தருணத்தில் சந்திப்போம், பிறகு என்ன நடக்கிறது ? என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இப்படி ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநர் அரவிந்த்திற்கு நன்றி. இந்தப்படத்தை ஏற்கனவே மிகப்பெரிய படமாக உருவாக்கிய, தயாரிப்பாளருக்கு நன்றி படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…
நான் வழக்கமாகச் செய்யும் அம்மா பாத்திரத்திலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தக்கதையை அரவிந்த் சொன்னபோதே, எனக்குப் பிடித்திருந்தது. ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது மகிழ்ச்சி. கிஷன், ஸ்ம்ருதி, ராஜ் ஐயப்பா உடன் நடித்தது நல்ல அனுபவம். இந்தப்படம் நடிக்கும் போதே நன்றாக வருகிறது, என்ற நம்பிக்கை இருந்தது. பட டிரெய்லர் பார்த்து, எல்லோரும் பாராட்டினார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.
பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது…
இந்தப்படத்தின் கதையை அரவிந்த் சொன்னபோதே எனக்குப் பிடித்திருந்தது. ஒரு அழகான ரொமான்ஸ் கதையில், திரில்லரை நுழைத்து, மிக அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார். தர்புகா சிவாவுடன் நிறையப் படம் செய்துள்ளேன், அவரது இசை எனக்கு மிகவும் பிடிக்கும், இப்படத்திலும் இரண்டு அழகான பாடல்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொன்றிற்கும் இரண்டு வேலை இருந்தால் எப்படி இருக்கும் எனும் மையத்தில் ஒரு அழகான பாடல் எழுதியுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல். கிஷன் எனக்கு மிகப் பிடித்த நடிகர், அவருக்குத் தொடர்ந்து வெற்றிப்படங்கள் அமைய வாழ்த்துக்கள். எடிட்டர் டிரெய்லரை மிக அழகாகக் கதை தெரியாமல், எடிட் செய்திருந்தார். இந்த படம் நல்ல திரில்லராக வந்துள்ளது. படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகை ஸ்ம்ருதி வெங்கட் பேசியதாவது…
எங்கள் தருணம் படத்திற்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. அரவிந்தின் தேஜாவு படத்தில் நான் நடித்திருந்தேன், அதில் எனக்குச் சின்ன கேரக்டர், ஆனால் அவர் என்னை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார். அப்போது அடுத்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என்றார் நான் நம்பவில்லை, ஆனால் இந்தப்படத்தில் நான் தான் ஹீரோயின் என்றார் ஆச்சரியமாக இருந்தது. இந்தக்கதை சொன்னார் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகவும் வித்தியாசமான மாடர்ன் கேரக்டர், இதுவரை செய்ததிலிருந்து மாறுபட்ட கேரக்டராக இருக்கும். எனக்கு முக்கியமான நேரத்தில் கிடைத்த வாய்ப்பு அரவிந்த் சாருக்கு நன்றி. கீதா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு நன்றி. ராஜா பட்டாசார்ஜி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பைத் தந்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது….
இந்த தைப் பொங்கல் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும். தருணம் படத்திற்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய தயாரிப்பாளர் புகழுக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே, ஒரு கார்பரேட் கம்பெனி போல் சினிமாவைத் திட்டமிட்டு உருவாக்கியது ஆச்சரியமாக இருந்தது. தயாரிப்பாளர் இன்வால்வ்மெண்ட் கம்மியாக இருக்கும் என்று தான் கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்தப்படத்தில் புகழ் மற்றும் ஈடன் இருவரின் இன்வால்வ்மெண்ட் மிகப்பெரியது. அரவிந்த் எனக்கு நெருங்கிய நண்பர். படம் எனக்குக் காட்டினார், படம் பார்த்து கிஷனை எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. ஸ்ம்ருதி மிக அழகாக நடித்துள்ளார். கீதா மேடம் மிக நன்றாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஒரு குவாலடியான படத்தை இந்தப்படக்குழு தந்துள்ளனர். இந்த பொங்கலுக்கு ஏழு படங்கள் திரைக்கு வருகிறது. எப்போதும் பொங்கல் பண்டிகையில், நல்ல படம் என்றால் மக்கள் திரையரங்கு வந்து பார்ப்பார்கள். அதனால் திரைக்குக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அதேபோல் பொங்கலுக்கு இந்த திரைப்படத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அரவிந்த்துக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.
நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது…
பொங்கலுக்கு வெளியாகும் பல படங்களில் எங்கள் படமும் ஒன்று. உங்கள் முழு ஆதரவைத் தந்து, நீங்கள் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தப்படத்திற்காக அரவிந்த் என்னை அழைத்தார். தேஜாவு இயக்குநர் என்ற உடனே, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வெற்றிப் படம் தந்த, இயக்குநர் என்னைத் தேடி வந்தது எனக்கு ஆச்சரியம் தான். நானும் பயங்கரமாக திரில்லர் கதை சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் முழுக்க முழுக்க ரொமான்ஸ் உடன் ஒரு கதை சொன்னார். இடைவேளைக்குப் பிறகு அவர் சொன்ன கதை, முழு திரில்லராக அவர் பாணியிலிருந்தது. கதை கேட்டவுடன் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, கதையில் ஒரு ஆபீஸர் கேரக்டர், படத்தில் பாட்டு, ஃபைட் எல்லாமே இருக்கிறது. இந்த கதைக்கு நான் தாங்குவேனா? என்று கேட்டேன், ஆனால் அரவிந்த் கண்டிப்பாக நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று ஊக்கம் தந்தார். என் மீது முழு நம்பிக்கை வைத்தார். அந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என, எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். இப்போதுள்ள திரைத் துறையில் முதல் படம் செய்வது எத்தனை கடினம் என்பது தெரியும். அதைத் தாண்டி மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள், இப்படம் அவர்களுக்காகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள். ஸ்ம்ருதி வெங்கட் மிகச்சிறந்த கோ ஸ்டார், இந்தபடம் ஆரம்பித்ததிலிருந்து, இப்போது வரை எங்களுக்கு நிறையத் தருணம் இருந்தது அவருக்கு நன்றி. கீதா கைலாசம் மேடம் பார்த்தால், என் அம்மா ஞாபகம் தான் வரும் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பாலசரவணன் ஒரு அருமையான ரோல் செய்துள்ளார். என்னை நம்பி டான்ஸ் ஆட வைத்த, பாபி மாஸ்டருக்கு நன்றி. அருள் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார் நன்றி. கார்கி சாருக்கு நான் மிகப்பெரிய ஃபேன், அவர் இந்தப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. என்னை நம்பி இந்தப்படம் தந்த அரவிந்துக்கு நன்றி. எல்லாச் சின்ன படத்திற்கும் ஆதரவு தரும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என் முதல் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு தந்தது பத்திரிக்கையாளர்கள் தான், இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது…..
நான் பத்திரிக்கையாளராக இருந்து தான் சினிமாவுக்குள் வந்துள்ளேன், நீங்கள் எனக்குத் தந்து வரும் ஆதரவு மிகப்பெரியது நன்றி. தருணம் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். என்னை நம்பி இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. முதல் படத்தில் எல்லோரும் புது முகம் என்றால் தயங்குவார்கள், ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் தான் இயக்குநர் நீங்கள் என்ன சொன்னாலும் சரிதான், என்று சொல்லி இந்த படத்தைத் தயாரித்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வழக்கமாக நாம் ஒரு படத்தை முடித்த பிறகு, ஹீரோவே இல்லை, பெரிய ஹீரோ கால்ஷீட் இல்லை என்பார்கள். ஏன் ஒரு படத்தை முடித்துவிட்டு, பெரிய ஹீரோவைத் தேட வேண்டும், இங்கு இருக்கும் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கலாமே? புதிய ஹீரோக்களைக் கூட்டி வரலாமே? என்பேன். நீ ஒரு படம் செய்தால், நீயும் பெரிய ஹீரோவைத்தான் தேடிச் செல்வாய் என்றார்கள். அதற்காகவே நான் புது முகங்களை வைத்து, படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். தனஞ்செயன் சார் படம் பார்த்துவிட்டு கிஷன் நம்பர் வாங்கி பாராட்டினர். அப்போது நான் என்ன செய்ய நினைத்தேனோ அதைச் செய்து விட்டேன் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஸ்ம்ருதி வெங்கட் என்னுடைய தேஜாவு படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை, இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக்கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா என்னிடம் வாய்ப்பு கேட்டிருந்தார், அவர் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார் எனத் தயங்கினேன், பின்னர் ஒரு நாள் அவரை அழைத்துக் கதை சொன்னேன், அவருக்குப் பிடித்திருந்தது, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். எல்லோரும் கிஷன் சொல்லித் தான் தர்புகா சிவா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று நினைக்கிறார்கள், ஆனால் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே முடிவு செய்தது அவரைத்தான். அவரிடம் கதை சொன்னேன் அவர் எளிதாக எந்த படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை, முழு பவுண்டேட் ஸ்கிரிப்ட் கேட்டார், படித்துவிட்டு அவரே அழைத்து, படத்தின் கதை நன்றாக இருக்கிறது நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார் அவருக்கு நன்றி. என் முதல் படத்தின் எடிட்டர் அருள் தான் இந்தப்படத்திற்கும் எடிட்டர். அவருக்கும் எனக்கும் நிறையச் சண்டை வந்தாலும் அவர் எடிட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும். பலரும் டிரெய்லர் பார்த்து, எடிட் கட் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள். அஸ்வின் இந்த படத்திற்காக நான்கு மாதங்கள், பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்கி சார் ரசிகன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஃபிரேமாக செதுக்கி இருக்கிறார். ஒரு தரமான படைப்பு வரும் போது நீங்கள் கைவிட்டதில்லை, அந்த நம்பிக்கையில் தான் படத்தை, பொங்கலுக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள்
எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)
Filmmaker Vishnuvardhan’s movies have always been synonymous with stylish filmmaking and riveting storytelling. He is all set to make his comeback in the Tamil film industry after a long hiatus with ‘Nesippaya’ starring Akash Murali and Aditi Shankar in the lead roles. With the film hitting screens worldwide on January 14, 2025, for the festive occasion of Pongal, shares interesting facts about the film.
Director Vishnuvardhan starts by stating, “Breathing air in your home industry is always an uncompromising pleasure, and that’s what I experienced throughout the materialising of Nesippaya. After completing my Bollywood project ‘Shershah’, I wanted to direct a film based on a small story premise that kept exciting me for a long time. Coincidently, I happened to meet Akash Murali during that time, and we just discussed it casually, which in turn, excited both of us. After watching the final cut, both of us and, of course, the entire team are so happy with the way it has shaped up. During the shoot, Akash Murali’s acting nuances kept surprising me for it was on par with experienced actors. Naturally, he has the genetic factor and his insatiable passion for delivering the best performance is admirable. Aditi Shankar is a cool artiste to work with. This is the first time, I am getting an opportunity to work with the best actors like Sarath Kumar, Prabhu, Khushboo Sundar, Raja, Kalki Koechlin, Shiva Pandit and many others together in a film. I believe that the film will be a visual treat for the cinephiles in theatres as 90% has been shot in foreign locations in Spain and Portugal. Well, my closest pal Yuvan Shankar Raja’s music has always complimented my films, and we are excited to work together on this project. My special thanks to cinematographer Cameron Eric Brison and the stunt choreographer crew for translating my vision into beautiful visuals. I thank my producers Xavier Britto and Sneha Britto for facilitating the finest space for creative freedom to make this film. Nesippaya with a visual treat with love, action and unlimited entertainment”
Nesippaya is produced by Xavier Britto of XB Film Creators and is co-produced by Sneha Britto.
Technical Crew
Music: Yuvan Shankar Raja DOP: Cameron Eric Brison Editor :A Sreekar Prasad Production Designer : Saravanan Vasanth Lyricists : Pa Vijay, Vignesh Shivan, Adesh Krishna Choreography : Dinesh Sound Design & Mix : Tapas Nayak Costume Designer : Anu Vardhan PRO: Suresh Chandra- Abdul Nassar
“நேசிப்பயா’ படம் காதல், ஆக்ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” – இயக்குநர் விஷ்ணுவர்தன்!
இயக்குநர் விஷ்ணுவர்தனின் திரைப்படங்கள் எப்போதும் ஸ்டைலிஷான விஷூவல் மற்றும் சுவாரஸ்யமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் படம் இயக்கி உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்து கொண்டதாவது, “உங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பி வருவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். அந்த ஒரு அனுபவத்தைத் தான் ‘நேசிப்பாயா’ படத்தில் பணிபுரிந்தபோது உணர்ந்தேன். எனது பாலிவுட் திட்டமான ‘ஷெர்ஷா’ படத்தை முடித்த பிறகு, என்னை உற்சாகப்படுத்திய ஒரு கதையை இயக்க விரும்பினேன். அந்த நேரத்தில் தான் ஆகாஷ் முரளியை சந்தித்தேன். கதையைப் பற்றி பேசியபோது இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். படத்தை இறுதியாக பார்த்தபோது எங்களுக்கும் எங்கள் அணியினருக்கும் முழு திருப்தி இருந்தது. புதுமுக நடிகர் போல அல்லாமல் தேர்ந்த நடிகரைப் போல நடித்து எங்களை ஆச்சரியப்படுத்தினார்.
இயற்கையாகவே அவருக்கு அற்புதமாக நடிக்கும் திறன் இருக்கிறது. அதிதி ஷங்கர் பணிபுரிவதற்கு மிகவும் இலகுவானவர். நடிகர்கள் சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், சிவ பண்டிட் மற்றும் பல சிறந்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு இதுதான் முதல் முறை. 90 சதவீத படப்பிடிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற வெளிநாடுகளில் நடந்துள்ளதால் இப்படம் திரையரங்குகளில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். எனது நெருங்கிய நண்பர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை எப்போதும் எனது படங்களுக்கு பெரும் பலம். இந்த படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. எனது பார்வையை அழகான காட்சிகளாக மொழிபெயர்த்த ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசன் மற்றும் சண்டை பயிற்சி குழுவினருக்கு எனது சிறப்பு நன்றி. எனது தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ மற்றும் சினேகா பிரிட்டோ ஆகியோருக்கு நன்றி. ’நேசிப்பயா’ படம் காதல், ஆக் ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார்.
இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.
தொழில்நுட்ப குழு:
இசை: யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரிசன்,
படத்தொகுப்பு: அ.ஸ்ரீகர் பிரசாத்,
தயாரிப்பு வடிவமைப்பு : சரவணன் வசந்த்,
பாடலாசிரியர்கள் : பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா,
நடனம் : தினேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் : தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
லூசியா படப்புகழ் அபிநயா சதுர் சதீஷ் நீனாசம், இயக்குநர் வினோத் டோண்டேலே இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “தி ரைஸ் ஆஃப் அசோக” என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியப்படமாக உருவாகும் இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
“தி ரைஸ் ஆஃப் அசோக” படத்தின் 80% படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் மற்ற தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில முக்கிய வசனக் காட்சிகள் மற்றும் பாடல்கள் உட்பட மீதமுள்ள பகுதிகள், விரைவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டரில், சதீஷ் நீனாசம் முரட்டுத்தனமான தோற்றத்தில், கத்தியை ஏந்தியபடி, இருக்கும் தோற்றம், ரெட்ரோ காலக் கதையின் மையத்தைக் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. சதீஷின் கேரியரில் மிக முக்கிய, பிரம்மாண்டத் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.
மிக அழுத்தமான அதிரடித் திரைப்படமாக உருவாகும், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, பிப்ரவரி 15 அன்று மீண்டும் தொடங்கவுள்ளது. விருத்தி கிரியேஷன் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் பேனர்களின் சார்பில் வர்தன் நரஹரி, ஜெய்ஷ்ணவி மற்றும் சதீஷ் நீனாசம் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் சதீஷ் நீனாசம் நாயகனாக நடிக்க அவருடன், பி.சுரேஷ், அச்யுத் குமார், கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா, யாஷ் ஷெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக லாவிட், கலை இயக்குநராக வரதராஜ் காமத், இசையமைப்பாளராக பூர்ச்சந்திர தேஜஸ்வி எஸ்.வி, ஆக்ஷன் இயக்குநர்களாக டாக்டர் ரவிவர்மா மற்றும் விக்ரம் மோர், எடிட்டராக மனு ஷெட்கர் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகிறார்கள். தி ரைஸ் ஆஃப் அசோக ஒரு சக்திவாய்ந்த, உள்ளடக்கம் நிறைந்த படமாக உருவாகிறது, இது மூன்று மொழிகளிலும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் படைப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The Rise of Ashoka
First Look motion poster release
Lucia fame Abhinaya Chatura Satish Neenasam is set to star in the highly anticipated movie “The Rise of Ashoka”, directed by Vinod Dondale. This multilingual film will release in Kannada, Tamil, and Telugu.
The production of The Rise of Ashoka is progressing at a brisk pace, with 80% of the shooting already completed. The remaining portions, including some pivotal talkie sequences and songs, are scheduled to be filmed soon. The recently released motion poster showcases Satish Neenasam in a rugged look, holding a machete, hinting at a retro-era story centered on rebellion and resistance. The film promises to be a content-driven project, marking a significant milestone in Satish’s career.
The shoot will resume on February 15, with the team fully prepared to bring this compelling narrative to life.
The Rise of Ashoka is being produced by Vardhan Narahari, Jaishnavi, and Satish Neenasam under the banners of Vriddhi Creation and Satish Pictures House. Alongside Satish Neenasam in the lead role, the star cast includes prominent actors such as B. Suresh, Achyut Kumar, Gopal Krishna Deshpande, Sampath Maitreya, and Yash Shetty.
The technical crew for the film includes Lavit as the cinematographer, Varadaraj Kamath as the art director, Poorchandra Tejaswi SV as the music composer, Dr. Ravivarma and Vikram More as the action directors and Manu Shedgar as the Editor.
The Rise of Ashoka is shaping up to be a powerful, content-rich film that promises to captivate audiences across all three languages.
The much-awaited teaser of ‘Kingston’, featuring Tamil film industry’s leading music director and actor G.V. Prakash Kumar, has been unveiled by well-esteemed actor Dhanush, who has conveyed his best wishes to the entire team.
‘Kingston’ marks the directorial debut of Kamal Prakash, which is produced collaboratively at a whopping budget by Zee Studios & Parallel Universe Pictures. The film has an ensemble star cast comprising G. V. Prakash Kumar, Divya Bharathi, Azhagam Perumal, ‘Merku Thodarchi Malai’ Fame Anthony, Chetan, Kumaravel, and Sabumon , among others. Apart from playing the lead role, G.V. Prakash Kumar is composing music for this film, which features cinematography by Gokul Benoy. Dhivek is penning the dialogues, and San Lokesh is the editor. S.S. Moorthy (Art), and Dhilip Subbarayan (Stunts) alongside others are the main technicians involved in this film. Set against a coastal backdrop, this sea fantasy adventure film, is produced on a grand scale with Dinesh Guna as the creative producer.
The film’s postproduction work is briskly proceeding at perfect momentum, and the first look that was recently unveiled has captured the audiences. The ‘Kingston’ teaser furthermore takes audiences for a colossal visual experience showcasing the breathtaking expanse of the ocean, the grandeur of a ship floating on the water, the appearance of G.V. Prakash Kumar, and a prodigious background score has turned out to be a bolt from the blue for everyone. Not to miss the icing on the cake, the spectacular VFX sequences remain nothing short of an International standard, thereby resonating with the relentless commitment of production houses to ensure that audiences have a never-before cinematic experience.
Bollywood leading actress Kangana Ranaut has revealed the ‘Kingston’ Hindi teaser and Telugu industry’s leading star Nagarjuna has launched the Telugu teaser.
The entire team of ‘Kingston’ are exhilarated by the tremendous response to the film’s first look and teaser. With the teaser revealing the film’s worldwide theatrical release scheduled for March 7, 2025, the announcements on audio and trailer launch will be made soon. It is worth mentioning that ‘Kingston’ will have its worldwide theatrical release in three languages – Tamil, Telugu and Hindi.
நடிகர் தனுஷ் வெளியிட்ட ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம்
2025 மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘கிங்ஸ்டன் ‘
இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் பரந்து விரிந்த கடலின் பிரமிப்பையும், கடலில் மிதக்கும் கப்பல் ஒன்றின் பிரம்மாண்டமும், அதில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், காட்சிகளை மேம்படுத்தும் அதிரடியான பின்னணி இசையும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இந்த டீசரில் VFX காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்து.. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் ‘கிங்ஸ்டன்’ பார்வையாளர்களுக்கு பரவசமிக்க உணர்வை வழங்கும் என்பதையும் உறுதியளிக்கிறது.
‘கிங்ஸ்டன்’ படத்தின் இந்தி பதிப்பு டீசரை முன்னணி பாலிவுட் நட்சத்திர நடிகையுமான கங்கணா ரணாவத் வெளியிட்டார். தெலுங்கு பதிப்பு டீசரை முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா வெளியிட்டார்.
‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்- டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசரில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.
Rocking Star Yash, the phenomenon who shattered boundaries and redefined Indian cinema with the KGF franchise, turned 39 today. A birthday treat arrived in the form of a ‘Birthday Peek’ video from his highly anticipated film, “Toxic – A Fairy Tale for Grown-Ups.” This video, a bold and unconventional departure from the norm, showcases Yash’s unwavering commitment to pushing the boundaries of cinematic storytelling.
In the Birthday Peek, Yash, impeccably dressed in a crisp white suit, fedora and holding a cigar makes a commanding entrance. The sultry ambiance of the club, pulsating with extravagance, indulgence and sinful soirée, sets the stage for this “Fairy Tale for grown-ups.” As Yash commands attention, every gaze in the room is drawn to him. The teaser, brimming with bold and provocative moments, invites viewers into an intoxicating and captivating world, a cinematic experience that transcends borders.
Speaking on Yash and creating the world of Toxic, Director Geetu Mohandas said –
“Toxic- a fairy tale for grown-ups is a story that defies convention and is sure to provoke the chaos within us. Today, as we release the first peek of our film we also celebrate Yash – a man the nation reveres for his vision and swagger. I have observed his brilliance and to those who know him or follow his journey, his process is as mysterious as it is meticulous. It is both a privilege and a thrill to have co- written this captivating world alongside a mind that sees the extraordinary where others see the ordinary. When our two worlds of thought collided, the result is neither compromise nor chaos—it’s the transformation that happens when artistic vision meets the precision of commercial storytelling transcending borders, languages, and cultural confines. We hope to bring an experience woven to ignite something primal in all of us- a film not just to be watched, but to be felt. Through his process of quiet reverence for his craft, he taught me that the journey of creation is sacred. To him, nothing is certain except the thrill of the journey ahead. These words are not just spoken from a director about her actor and not just for his ardent admirers, but for anyone seeking to understand his unwavering passion for cinema and boundless spirit of creativity. Happy birthday to our Monster mind!
“When you let go of who you are, you become what you might be” – Rumi.”
Jointly produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-ups has been directed by Geetu Mohandas, an internationally acclaimed filmmaker. A recipient of numerous accolades, including a National Award and the Global Filmmaking Award at the Sundance Film Festival, Geetu Mohandas promises to deliver a massive entertainer.
ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது !’
ராக்கிங் ஸ்டார் யாஷ் “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளார் !!
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, யாஷின் ஸ்டைல் மற்றும் மாஸ் கலவையைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்துகிறது.
பிறந்தநாள் பீக் வீடியோவில், யாஷ், மிருதுவான வெள்ளை நிற உடையில், ஃபெடோரா மற்றும் ஒரு சுருட்டைப் பிடித்தபடி, ஒரு கிளப்புக்குள் நுழைகிறார். கிளப்பின் கண்ணைக் கவரும் சூழல், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் அதிரடி இசை மனதை மயக்குகிறது. யாஷின் ஸ்டைல் தோற்றம் மற்றும் மாஸ், அறையில் உள்ள ஒவ்வொரு பார்வையும் அவரை நோக்கி ஈர்க்கிறது. இந்த அதிரடி டீஸர், பார்வையாளர்கள் மனதை மயக்கி, வசீகரிக்கும் மற்றொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது, இது எல்லைகளைத் தாண்டிய ஒரு சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.
யாஷ் மற்றும் டாக்ஸிக் படத்தின் உலகத்தை உருவாக்குவது குறித்துப் பேசிய இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது –
“டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” என்பது மரபை மீறும் மற்றும் நமக்குள் குழப்பத்தைத் தூண்டும் ஒரு வித்தியாசமான கதை. இன்று, எங்கள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு, யாஷ்-ஐ கொண்டாடுகிறோம். யாஷ் ஒரு தனித்துவமான மனிதர், அவரது புத்திசாலித்தனத்தை நான் கவனித்திருக்கிறேன், அவரை அறிந்தவர்களுக்கு அல்லது அவரது பயணத்தைப் பின்தொடர்பவர்களுக்கு, அவரது செயல்முறை மர்மமானதாக இருப்பது போல், தோன்றும் ஆனால் அவர் உண்மையில் தனித்துவமானவர். அதே போல் டாக்ஸிக் படத்தின் வசீகரிக்கும் உலகத்தை மற்றவர்கள் சாதாரணமாகப் பார்க்கும் இடத்தில், அசாதாரணமானதைக் காணும் மனதுடன் இணைந்து உருவாக்கியது ஒரு பாக்கியம் மற்றும் சிலிர்ப்பான அனுபவமாகும். எங்கள் இரு சிந்தனையும் இணைந்து, மொழிகள் மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டி வணிகக் கதைசொல்லலின் துல்லியத்தைச் சந்திக்கும் மாற்றமாக இப்படம் இருக்கும். நம் அனைவருக்குள்ளும் முதன்மையான சந்தோஷத்தைத் தூண்டும் வகையில், ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொண்டுவருவோம் என்று நம்புகிறோம்- இது பார்ப்பதற்கு மட்டுமல்ல, உணரப்பட வேண்டிய திரைப்படம். படைப்பின் பயணம் புனிதமானது என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவருக்கு, முன்னோக்கிச் செல்லும் பயணத்தின் சிலிர்ப்பைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதாகத் தெரியவில்லை. இந்த வார்த்தைகள் ஒரு இயக்குநரிடமிருந்து அவரது நடிகரைப் பற்றி மட்டுமல்ல, அவரது தீவிர ரசிகர்களுக்காக மட்டுமல்ல, சினிமா மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வத்தையும் படைப்பாற்றலின் எல்லையற்ற உணர்வையும் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் உத்வேகம் தருவதாக இருக்கும். எங்கள் மான்ஸ்டர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
“நீங்கள் யார் என்பதை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் நீங்களாக இருக்க முடியும்” – ரூமி.”
KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் குளோபல் ஃபிலிம்மேக்கிங் விருது உட்படப் பல பாராட்டுக்களைப் பெற்ற கீது மோகன்தாஸ், இம்முறை மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.