- Advertisement -
Home Blog Page 274

*தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!

0

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”. படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

கதைச்சுருக்கம் : நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம் .இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் . நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர் R முருகானந்த் கூறுகையில்..
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது… ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும்… ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் மேலும்… படித்தவனோ பாமரனோ… அரசனோ ஆண்டியோ… யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும்… இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும்.. வாழ்வும் சிறக்கும்.. இதைத்தான் பூர்வீகம் என்ற இந்தத் திரைப்படத்தில் வெகு ஆழமாக கூறியுள்ளோம் என்றார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் அழகிய படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர் .

இப்படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக மியாஶ்ரீ நடித்துள்ளார். போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மாயவரம், தஞ்சாவூர், அரியலூர் , சென்னை மற்றும் திருவள்ளூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டை மிக வித்தியாசமான மண்ணின் மைந்தர்கள் விவசாயிகளை வைத்து, படக்குழுவினர் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், திரையரங்கு வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்:

தயாரிப்பு – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி
தயாரிப்பாளர் – டாக்டர் R முருகானந்த்
எழுத்து, இயக்கம் – G. கிருஷ்ணன் Df Tech
ஒளிப்பதிவு – விஜய் மோகன் Df Tech
இசை – சாணக்யா
படத்தொகுப்பு – சங்கர் K
பாடலாசிரியர் – ஏகாதசி
கலை இயக்கம் – செல்லம் ஜெயசீலன்
பாடகர்கள் – சாய் விக்னேஷ், மது ஐயர், K.பார்த்திபன், G.அமிர்தவர்ஷினி, டாக்டர் R முருகானந்த்
நிர்வாக தயாரிப்பாளர் – K.சந்தோஷ்
மக்கள் தொடர்பு – செல்வரகு (Vistas Media)

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜன-12ல் வெளியாகும் ‘மதகஜராஜா’

0

“குறிஞ்சி பூ பூப்பது போல மதகஜராஜா ரிலீஸ் அமைந்து விட்டது” ; விஷால் மகிழ்ச்சி

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’.

ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்சியுடன் அவருக்கு இது முதல் படம்.

பொங்கலுக்கு படம் வெளியாவதை தொடர்ந்து மதகஜராஜா படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த படம் வெளியாவது குறித்த மகிழ்ச்சியையும் இந்த படம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது,

“மதகஜராஜா படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பேன் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு இயக்குனராக அவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராமல் ஆரம்பித்த ஒரு சந்தோஷமான நிகழ்வு இது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 12 மணி அளவில் திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு போன் செய்தார். இந்நேரத்தில் அழைக்கிறாரே என நினைத்தால் மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் அழைத்தார், பல வருடங்கள் ஆகிவிட்டதால் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்தபடி பார்க்க சென்றால் படம் சூப்பராக இருப்பதாகவும் கூறி படத்தைப் பற்றி அரை மணி நேரம் ரசித்து பேசினார். இந்த முப்பது வருடங்களில் என்னிடம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றி தான் பேசுவாரே தவிர படத்தின் விமர்சனம் பற்றி எதுவும் சொல்ல மாட்டார். அப்படிப்பட்டவர் இந்த படத்தை பற்றி பாராட்டி பேசினார் என்கிறபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அதோடு நிற்காமல் அந்த படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் பேசி இதோ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆகப் போகிறது. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த படம் துவங்கிய போது தான் எனக்கு என் குடும்பத்தில் ஒரு நபராக விஷால் கிடைத்தார். அப்போது ல்முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற ஒரு ஜனரஞ்சகமான, குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுக்கலாமே என்று ஆசைப்பட்டோம்.

இந்தப் படம் சில பிரச்சினைகளை தாண்டி இப்போது பொங்கல் ரிலீஸ் ஆக வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்ட போது சிறிய தயக்கம் இருந்தது. காரணம் பல வருடங்கள் கழித்து இந்த படம் வருகிறது. படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ? சிலபேர் இப்போது இந்த படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது ரொம்ப அவசியமா என்று கிண்டல் செய்வார்களோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியானதுமே சோசியல் மீடியாவில் அவ்வளவு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்தது. இத்தனை வருடங்கள் தாமதம் ஆனாலும் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கும்போது படத்தின் இயக்குனராக எனக்கு சந்தோசம். முதலில், பொங்கல் ரிலீஸ் என்று தான் ஆரம்பித்தோம். அப்போது மிஸ் ஆனாலும் இதோ இந்த பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பொங்கலுக்கான ஒரு கொண்டாட்டமான படமாகத்தான் இது இருக்கும்.

மேலும் சென்டிமென்டாக என்னுடைய குருநாதர் மணிவண்ணன் கடைசியாக நடித்த படம் இது. அவர் நிச்சயமாக மேலிருந்து என்னை ஆசிர்வாதம் செய்வார் என நினைக்கிறேன். அதேபோல மறைந்த நடிகர் மனோபாலா இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், ரிலீஸானால் என்னுடைய ரேஞ்சே வேற என்று சொல்லிக் கொண்டிருப்பார். குறிப்பாக இந்த படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா மூவரும் இடம் பெறும் ஒரு 15 நிமிட காட்சி இருக்கிறது. என்னுடைய படங்களிலேயே என் ஃபேவரைட் காமெடி காட்சி என்றால் இதுதான் என்று சொல்வேன்.

இந்தப் படம் துவங்குவதற்கு முன்பு வரை மதகஜராஜா என்கிற டைட்டிலுக்கு நாங்கள் வைத்திருந்த கதை வேறு. ஆனால் அது கொஞ்சம் கடினமான ஸ்கிரிப்ட் என்பதால் படம் துவங்குவதற்கு கொஞ்சம் முன்பாக தான் இப்போது எடுக்கப்பட்டுள்ள கதையை முடிவு செய்தோம். அந்த சமயத்தில் கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சந்தானம் என்னுடன் பணியாற்றி இருந்தார். அந்த படங்களில் எல்லாம் வெறும் ஐந்து, ஆறு நாட்கள் தான் அவர் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்த படத்தில் தான் மொட்ட ராஜேந்திரன் முதன்முதலாக காமெடி நடிகராக அறிமுகமானார். அதுமட்டுமல்ல நடிகர் ஆர்யாவும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நானும் விஜய் ஆண்டனியும் முதன்முதலாக இணைந்தது இந்த படத்தில் தான். அவர் தோற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவர் ஒரு குழந்தை போல. இது போன்ற படங்களுக்கு இசையமைக்கும் போது தான் அவரிடம் இருந்து இன்னும் துள்ளலான இசை எங்களுக்கு கிடைக்கும். ஒரு இசையமைப்பாளராக அவர் மீண்டும் இதுபோன்று துள்ளலான இசையுடன் திரும்பி வரவேண்டும்.

இந்த படத்தில் என்னை விட கஷ்டப்பட்ட ஆத்மா என்றால் அது விஷால் தான். கிளைமாக்ஸில் ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் வரவேண்டும் என தெரியாத்தனமாக சொல்லிவிட்டேன். அவரும் தயாராகி விட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்படிப்பட்ட ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் எடுக்க வேண்டிய காட்சிகள் தள்ளிப்போய் மீண்டும் அதை எடுக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவரை அந்த கட்டமைப்பை பராமரிப்பது கடினம். ஆனாலும் விஷால் அதை கடைபிடித்தார். 99 சதவீதம் எந்த காட்சிகளிலும் அவர் டூப் போடவே இல்லை.

மொட்ட ராஜேந்திரன் உடன் மோதும் ஒரு காட்சியில் கொஞ்சம் டைமிங் மிஸ் ஆகி கிட்டத்தட்ட விஷால் கழுத்து முறிவு ஏற்படும் சூழல் உண்டானது. உடனடியாக அப்போது அருகில் இருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.. நல்லபடியாக அவர் உடம்பை ஃபிட்னஸ் ஆக வைத்திருந்ததால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்று டாக்டர்கள் கூறியதும் தான் எங்களுக்கு உயிரே திரும்பி வந்தது. கிளைமாக்ஸில் சோனு சூட், விஷால் இருவரும் மோதிக் கொள்வது இரண்டு மலைகள் மோதிக் கொள்வது போல இருக்கும். இந்த சண்டைக் காட்சியை படமாக்கும்போது பெண்கள் கூட்டமே இவர்களை பார்ப்பதற்காக வந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காட்சியை படமாக்கி முடிந்ததும் விஷால் தன்னுடைய எய்ட் பேக்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார். அன்று மாலையே எங்கெங்கிருந்தோ கடைகளில் இருந்து பிரியாணி, நான் வெஜ் கொண்டு வரச்சொல்லி அனைவருக்கும் கொடுத்து தானும் தனது எய்ட் பேக்ஸ் விரதத்தை முடித்தார். இந்த மதகஜராஜா எப்படியாவது வெளிவர வேண்டும் என நான் விரும்பியதற்கு ஒரே ஒரு காரணம் விஷால் இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்களை மக்கள் பார்க்க வேண்டும். அது வெளியே தெரியாமலேயே போய் விடக்கூடாது என்பதுதான்.

ஆரம்பத்தில் எனக்கும் விஷாலுக்கும் அவ்வளவு பழக்கமில்லை. குஷ்புவுக்கு தான் அவர் நண்பராக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்காக வேறு ஒரு ஸ்கிரிப்ட்டுடன் அவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தோம் எங்களை வரச் சொன்னவர் நாங்கள் சென்ற அதே நேரத்தில் வெளியே கிளம்பி போய்விட்டார். எனக்கு அப்போது அவர் மீது மிகப்பெரிய கோபம் வந்துவிட்டது. அவர் முகத்தில் இனி முழிக்கவே கூடாது என்று நினைத்தேன். இரண்டு மாதம் கழித்து ஒரு பொதுவான பங்ஷனில் கலந்து கொண்டபோது அவரும் வந்திருந்தார். அவரை பார்க்காதவாறு நான் ஒதுக்கி சென்றேன். ஆனால் விடாமல் என்னை தேடி வந்து அவராகவே பேசினார். அன்றைய தினம் ஒரு மருத்துவ வேலை காரணமாக அவசரமாக செல்ல வேண்டியதாகிவிட்டது,. உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, நீங்கள் எப்போது சொன்னாலும் நான் உங்களை தேடி வந்து கதை கேட்கிறேன் என்று கூறினார், அப்போது ஆரம்பித்த நட்பு இப்போது வரை தொடர்கிறது. பழகப்பழக தான் அவர் ஒரு நல்ல ஆத்மா என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கார்த்திக் முத்துராமன் சாரை என் அண்ணன் என்று சொன்னால் எனது தம்பி விஷால் என்பேன்.

இந்த படத்தில் விஷாலை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறோம். அதற்காக அவர் ஜானகி அம்மாவை விட ராகத்தை இழுத்து ஒரு ஆலாபனை எல்லாம் செய்திருக்கிறார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பாடி முடித்ததும் விஷால் இப்போது வரை தன்னை ஒரு சீரியஸான பாடகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். சார் இந்த படம் வெளியானால் எனக்கு கட்டாயம் பாடகருக்கான விருது கிடைக்கும் பாருங்கள் என்று சொல்லி வருகிறார்.

இந்த படத்தை தயாரித்த ஜெமினி நிறுவனத்தில் அனைத்து இயக்குனர்களுமே படம் இயக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். இந்த படத்திற்காக அவர்கள் எனக்கு கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள். சில காரணங்களால் பட ரிலீஸில் இப்படி ஒரு தடங்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த மதகஜராஜா படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு, வெற்றி மூலமாக மீண்டும் ஜெமினியின் கொடி பறக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது,

“இந்த படத்திற்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து, எந்த ஒரு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுக்காமல் ஒவ்வொரு பாடலையும் சுந்தர்.சி சார் கூட இருந்தே வாங்கிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த படத்தில் பாடலை உருவாக்கும் போது சுந்தர் சி தான் பாடலின் முதல் வரிகளை எல்லாம் எடுத்துக் கொடுப்பார். அப்போது நானும் அவரும் இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான பாடலை உருவாக்க வேண்டும், ஏடாகூடமான வார்த்தைகளை எல்லாம் போட்டு ஜாலியாக இருக்க வேண்டும், மிகப்பெரிய இசை மேதைகள் எல்லாம் இந்த பாடலைப் பார்த்து டென்ஷன் ஆகி இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற அளவுக்கு பேச வேண்டும் என ஒரு பாடலை உருவாக்க முடிவு செய்தோம்.

அதற்காக விஷாலை பாடவைப்பது என முடிவுசெய்தோம். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பார்களே அதே மாதிரி விஷால் சிங்கிள் டேக் பாடகர். ஒரே டேக்கில் சரியாக பாடிவிட்டாரா என்று கேட்காதீர்கள். இந்த பாடலை சொதப்ப வேண்டும் என முடிவு செய்து தான் உருவாக்கினோம். அதனால் விஷால் முதல் டேக்கில் பாடுவதையே ஓகே என எடுத்துக்கொண்டோம். இரண்டாவது டேக்கில் ஒருவேளை நன்றாக பாடிவிட்டால் என்ன செய்வது ? அந்த பாடலை தான் விஷால் பாடியுள்ளார்.

இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் கூட, ஒரு பிரஷ்ஷான படத்திற்கான விஷுவல்ஸ் அனைத்தையும் சுந்தர்.சி அப்போதே பண்ணியிருக்கிறார். இத்தனை வருடங்கள் தாண்டி இவ்வளவு வெற்றி கொடுத்தும் நீங்கள் எவ்வளவு பணிவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களை பார்க்கும்போது தான், சீரியஸான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலகலப்பான படங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது. நிச்சயமாக முயற்சிப்பேன். அதேபோல என்னுடைய நண்பன் விஷாலுக்கு வெடி படத்தை தொடர்ந்து நான் இசையமைத்துள்ள இரண்டாவது படம் இது. வெடி படத்தை போல இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும். இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பமாக போய் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த மதகஜராஜா ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும். விஷாலுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் நான் படம் பண்ணுவேன்” என்று கூறினார்.

நடிகர் விஷால் பேசும்போது,

“இப்போது படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுத்து படம் தயாரிக்கும் ஜெமினி போன்ற நிறுவனங்கள் இங்கே இல்லை. அதனால் ஜெமினி போன்ற நிறுவனங்கள் மீண்டும் பட தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும். இந்த வருடம் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கிறதோ இல்லையோ சிறந்த பாடகர் விருது கிடைக்கும். அதற்கு விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்த படத்தில் ஒரு பாடலைப் பாட விஜய் ஆண்டனியும் சுந்தர்சியும் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த பாடலை வழக்கமான ஒரு பாடகர் பாடக்கூடாது.. ஒரு புதியவர் பாட வேண்டும்.. ஆனால் இந்த பாடலை பாடிய பிறகு அவர் வாழ்க்கையில் பாடவே கூடாது என்று பேசிக் கொண்டிருந்தபோது சரியாக நான் உள்ளே நுழைந்தேன். உடனே இவர் தான் அந்த பாடகர் என என்னை முடிவு செய்து விட்டார்கள்.

இந்த படத்தில் நான், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா பங்கு பெற்ற ஒரு 15 மணி காட்சி படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பார்க்கும் அனைவரும் 100% சிரித்துக்கொண்டு தான் வெளியே வருவார்கள். அதற்கு சுந்தர்.சி சாருக்கு நன்றி. குறிஞ்சி பூ 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அதுபோல 12 வருடம் கழித்து இந்த மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. பழைய படம் போலவே இருக்காது. அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்” என்றார்.

நடிகை குஷ்பு பேசும்போது,

“இந்த 30 வருட வாழ்க்கையில் என் கணவர் சுந்தர் சி தூக்கமில்லா இரவுகளை கழித்தது என்றால் இந்த மதகஜராஜா படத்திற்காக தான். இந்த படத்திற்காக அவ்வளவு கடின உழைப்பை எல்லோருமே கொடுத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் நிச்சயமாக இருந்தது. சில நேரங்களில் இந்த படம் ரிலீசாக போகிறது என்று சொல்வார்கள். பின்னர் அது அப்படியே நின்றுவிடும். ஆனால் எது எப்போது நடக்க வேண்டுமோ, எல்லாம் நன்மைக்கே என்பது போல இந்த பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக மதகஜராஜா ரிலீஸ் ஆகிறது. இந்த இந்த படம் துவங்குவதற்கு முன்பு நானும் விஷாலும் தான் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தோம். ஆனால் இந்த படத்திற்குப் பிறகு ஆம்பள, ஆக்சன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற துவங்கியபோது என்னை கழட்டி விட்டு அவர்கள் இருவரும் காதலர்கள் போல மாறிவிட்டார்கள்” என்றார்.

விழாவில், இரண்டு பாடல்கள், டிரைலர் காட்டப் பட்டு கை தட்டல்கள் பெற்றார்கள்.

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

0

அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது: இப்படம் இசை மற்றும் விஷுவல் மாஸ்டர் பீஸ், ஃபேண்டஸி-ஹாரர்-திரில்லராக உங்களை மகிழ்விக்க ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்தியா வெளியீடாக வருகிறது.

தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக “அகத்தியா” இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

படத்திற்கு மேடை அமைத்துத் தரும் பாடல்

காற்றின் விரல் ஒரு மெல்லிசை டூயட் பாடலாகும், இது அகத்தியா படத்தின் களத்தையும் அதன் மாயாஜால உணர்வுகளையும், முழுமையாக உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இளையராஜாவின் சிக்னேச்சர் பியானோ இசைத் துண்டுடன் தொடங்கும் பாடல், ஒரு ஆத்மார்த்தமான மெல்லிசையாக மாறுகிறது, மறக்க முடியாத கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது. மெல்லிசையில் வல்லவரான யுவன் ஷங்கர் ராஜா, பாடல் கேட்பவர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் வகையில், ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார். புகழ்பெற்ற ஸ்ரீதர் மாஸ்டரின் நடன அமைப்பும், தீபக் குமார்பதியின் அற்புதமான ஒளிப்பதிவும், இந்தப் பாடலைத் திரையில் உயிர்ப்பிக்கிறது. இப்பாடல் ஒரு உண்மையான காட்சி விருந்தாக அமைந்துள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக முழுப் பாடலையும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு, பாடல் உருவாக்கும் தாக்கத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது. இயக்குநரும் பாடலாசிரியருமான பா.விஜய் குறிப்பிடுவது போல், “இந்தப் பாடல் வெறும் மெல்லிசை அல்ல – இது ஒரு பயணம். இளையராஜா மற்றும் பீத்தோவன் இருவரின் புத்திசாலித்தனத்தின் சாரத்தை இது கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்த ஐடியாவை யுவனிடம் முன்வைத்தபோது, வெறும் 10 நிமிடத்தில் அவர் அந்த மேஜிக்கை செய்தார். இது காலத்தைக் கடக்கும் ட்யூன்கள் மற்றும் நவீன உணர்வுகளின் கலவையாகும், அது தந்த மகிழ்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை.

பாடல் குறித்த யுவனின் கருத்து.

பாடல் அனுபவம் குறித்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே சிறப்பான அனுபவமாகும். நாங்கள் 300 க்கும் மேற்பட்ட பாடல்களில் ஒன்றாக வேலை செய்துள்ளோம், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் உறவு தனித்துவமானது. என் தந்தையின் பியானோ இசைத்துண்டு மற்றும் பீத்தோவனின் ட்யூனை காற்றின் விரலில் இணைப்பது பற்றி அவர் என்னிடம் சொன்னபோது, நான் சிலிர்த்துப் போனேன். இந்த இரண்டு அற்புத இசையின் பாரம்பரியத்தால் வழிநடத்தப்பட்டதைப் போல, இந்த பாடல் சிரமமின்றி தானாக வந்தது. இது எனது சிறந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன், மேலும் கேட்போர் இதைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
 
பாடல் குறித்து தயாரிப்பாளர் கருத்து

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் பாடல் குறித்து, உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டதாவது…: “அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், மேலும் இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றின் விரல் இந்தத் திரைப்படத்தின் மகுடம் – யுவனின் அசாதாரண இசையமைப்பு, அசத்தலான காட்சிகள் மற்றும் நடன அமைப்புடன் திரையில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இந்தப் படத்தை உருவாக்குவதில் காட்டப்பட்ட அர்ப்பணிப்புக்கும் ஆர்வத்துக்கும் சான்றாகும்.

அகத்தியா: ஒரு கூட்டு அற்புதம்

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களுடன் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து, அகத்தியா திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. டீஸரும் இப்போது முதல் சிங்கிளும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி, 2025 ஆம் ஆண்டில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் எனும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 31, 2025ஐ உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய அனுபவத்திற்குத் தயாராகுங்கள்

மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது. டீசர், முதல் பார்வை, காற்றின் விரல் பாடல் என அனைத்தும், இப்படம் ஒரு விஷுவல் விருந்தாக இருக்குமென்பதை உறுதி செய்கிறது.

Hail The Mahadev, Sing In His Glory, The Shiva Shakti Song Namo Namah Shivaya From Allu Aravind Presents – Naga Chaitanya, Sai Pallavi, Devi Sri Prasad, Chandoo Mondeti, Bunny Vasu, Geetha Arts – Thandel Unveiled

0

The musical promotions of Yuva Samrat Naga Chaitanya’s much-awaited love and action entertainer Thandel, directed by Chandoo Mondeti and produced by Bunny Vasu under the prestigious Geetha Arts banner, with Allu Aravind presenting it, have started on a blockbuster note. The first single, “Bujji Thalli,” became a sensational hit. The talented Sai Pallavi stars as the female lead in this movie, which features music by Rockstar Devi Sri Prasad. After teasing the audience with a promo, the makers have now unveiled the lyrical video of the highly anticipated second single, “Namo Namah Shivaya.”

Hail Mahadev and sing in His glory, as this Shiva Shakti song is a breathtaking masterpiece, blending dance, devotion, and grandeur into an unparalleled audio-visual experience. The track is a divine fusion that elevates the spiritual connection, transporting the viewers into a trance of reverence and awe.

The electrifying beats, composed by Rockstar Devi Sri Prasad, pulse with intensity, stirring the soul and igniting a fire within the listener. The track is a powerful force that reverberates through the body, creating an atmosphere of euphoria and devotion. It seamlessly blends traditional sounds with modern beats. The lyrics, penned by Jonnavithula, perfectly capture the essence of Shiva’s omnipotence and mysticism, while Mahalingam vocals are dynamic, and Haripriya adds serenity with her soulful voice.

The choreography by Shekar Master is another highlight, making this performance an unforgettable experience. The choreography feels like a sacred offering to Lord Shiva, beautifully narrating the tale of devotion through dance.

The lead pair, Naga Chaitanya and Sai Pallavi, who previously charmed audiences with their on-screen chemistry in Love Story, are simply mesmerizing in this song. Naga Chaitanya’s poised and powerful presence complements Sai Pallavi’s ethereal grace and captivating expressions.

The grandeur of the sets further elevates the overall experience. The attention to detail in the set design is spectacular, with opulent structures, majestic backdrops, and captivating visuals that reflect the divine realm of Lord Shiva.

On the whole, the Namo Namah Shivaya song is a celebration of Lord Shiva’s glory through an artistic and spiritual fusion. This track is destined to become one of the biggest chartbusters in the years to come.

The movie also boasts a talented crew, with National Award-winning composer Devi Sri Prasad scoring the music, Shamdat handling the cinematography, National Award-winning Naveen Nooli as the editor, and Srinagendra Tangala leading the art department.

Thandel is set for release on February 7th.

Cast: Naga Chaitanya, Sai Pallavi

Technical Crew:
Writer, Director: Chandoo Mondeti
Presents: Allu Aravind
Producer: Bunny Vasu
Banner: Geetha Arts
Music: Devi Sri Prasad
DOP: Shamdat
Editor: Naveen Nooli
Art: Srinagendra Tangala
PRO: Yuvraaj
Marketing: FirstShow

https://bit.ly/NamoNamahShivaya

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் – வெளியிடப்பட்டது !!

தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் “புஜ்ஜி தல்லி” ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் “நமோ நம சிவாய” பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது. பார்வையாளர்களைப் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பைத் தருகிறது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மனதை உருக்கும் இசையில், ஆன்மாவைக் கிளறி, கேட்பவருக்குள் நெருப்பை மூட்டுகின்றது. இந்தப் பாடல், நம் உணர்வோடு கலந்து, உடல் முழுவதும் எதிரொலிக்கிறது, மனதுக்குள் மகிழ்ச்சி மற்றும் பக்தியை உருவாக்குகிறது. இப்பாடல் பாரம்பரிய ஒலிகளை நவீன இசையுடன் தடையின்றி கலக்கிறது. ஜோனவித்துலா எழுதிய பாடல் வரிகள், சிவனின் சர்வ வல்லமை மற்றும் மாயத்தன்மையின் சாரத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன, அதே சமயம் மகாலிங்கம் மற்றும் ஹரிப்ரியா தங்களது ஆத்மார்த்தமான குரல்களால் அசத்தியுள்ளனர்.

முன்னதாக லவ் ஸ்டோரி படத்தில் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மூலம், ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி, இந்த பாடலில் மிக எளிதாக நம்மை மயக்குகிறார்கள். நாக சைதன்யாவின் நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பு, சாய் பல்லவியின் நளினம் மற்றும் வசீகரிக்கும் பாவனைகள் நம்மை ஈர்க்கிறது.

இப்பாடலில் சேகர் மாஸ்டரின் நடன அமைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும், இந்த நடன அமைப்பு, பாடலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது. மிக அழகான நடன அமைப்பு, பின்னணி அரங்குகள் என அனைத்தும் , சிவபெருமானுக்கு ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், நமோ நம சிவாய பாடல், கலை மற்றும் ஆன்மீக இணைப்பின் மூலம் சிவபெருமானின் மகிமையைக் கொண்டாடுகிறது. இந்த பாடல் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய சார்ட்பஸ்டர்களில் ஒன்றாக மாறும்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணியாற்றியுள்ளார், ஸ்ரீநாகேந்திர தங்காலா கலை இயக்கம் செய்துள்ளார்.

“தண்டேல்” படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : சந்து மொண்டேடி வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம்தத்
எடிட்டர்: நவீன் நூலி
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

https://bit.ly/NamoNamahShivaya

Velammal Nexus in collaboration with the Alternative Media Centre, is proud to present the 12th edition of the vibrant Veedhi Viruthu Vizha on the 4th and 5th of January, 2025.

0

This cultural extravaganza aims to recognize, revive, and promote Indian traditional art forms. Over 5,000 folk artistes from across Tamil Nadu are expected to participate, showcasing the rich cultural heritage of the region with immense pride.
The event was inaugurated at Velammal Matriculation Higher Secondary School, Mogappair East with great enthusiasm in the esteemed presence of:
Col. Prof. (Dr.) N. S. Santhosh Kumar, Vice Chancellor of TNDALU
Shri M. V. M. Velmohan, Correspondent of Velammal Nexus
Prof. (Dr.) R. Kaleeshwaran, Founder of the Alternative Media Centre
Shri. Nassar, President of the Nadigar Sangam graced the occasion with his gracious presence. Their presence added grandeur to this magnificent celebration of culture and tradition.
The festival featured mesmerizing performances of Tamil Nadu’s traditional folk arts, including Karagattam, Poikkal Kuthirai, Paraiattam, and Oyilattam. These distinct cultural expressions were brought to life with vibrant colors and rich, resonant music, creating a truly immersive experience. The event not only served as a celebration of these art forms but also as an important initiative aimed at preserving and promoting the invaluable heritage of rural arts. Moreover, it provided a distinguished platform for emerging and accomplished artists to showcase their talent and gain well-deserved recognition.

In addition to the entertainment, the event also honoured Tamil cinema’s trendsetters who have made significant contributions by conveying social awareness messages through their films, thus educating the public on important social causes.
The following individuals were recognized:
Thiru. Vetrimaaran – Veduthalai Part 2
Thiru. Mari Selvaraj – Vaazhai
Thiru. Pa. Ranjith – Thangalaan
Thiru. Seenu Ramasamy – Kozhipannai Chelladurai
Thiru. C. Prem Kumar – Meiyazhagan
Thiru. P. S. Vinoth Raj – Kottukaali
Thiru. T. J. Gnanavel – Vettaiyan
Thiru. Tamizharasan Pachamuthu – Lubber Pandhu
Thiru. Bose Venkat – Sir
Thiru. Pari Elavazhagan – Jama
Tmt. Dhivya Bharathi – Jillu
Thiru. Michael K. Raja – Pogumidam Vegu Thooramillai
Thiru. Ezhil Periyavede – Parari
Thiru. Nandha Periyasamy – Thiru. Manickam
Thiru. Era. Saravanan – Nandhan
The festival was a resounding success, and the collective efforts of the organisers, artistes, and esteemed guests made it a truly memorable event.

வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது வீதி விருது விழா, 2025

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது.

இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன்
வெளிப்படுத்தினர்.

இந்தக் கலைத் திருவிழா, சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்ம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது…

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்

கர்னல். பேராசிரியர் (டாக்டர்) என். எஸ். சந்தோஷ் குமார்,

வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர்
திருமிகு. எம். வீ. எம். வேல்மோகன்,

மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் பேராசிரியர் (டாக்டர்) ஆர். காளீஷ்வரன்,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர்,

ஆகிய சான்றோர் பெருமக்களின் பங்கேற்பும் விழாவை மேலும் சிறப்பிக்கச் செய்தது.

விழாவின் முக்கிய பகுதியாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவங்களான தெருக்கூத்து, கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறை இசை, ஒயிலாட்டம் போன்ற பல கலை நிகழ்வுகள் பார்வையாளர்களின் மனங்களை மிகவும் கவர்ந்தது.

இன்று, இந்தக் கலைகள் வண்ணமயமான ஆடைகளால், இனிமையான இசையால், அற்புதமான நடன அசைவுகளால் உயிர்ப்பூண்டன.

இந்த விழா, நாட்டுப்புறக் கலைகளின் அழகையும் அரிய பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும், கலைஞர்கள் புத்துணர்ச்சி பெறவும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.

திறமையான கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அங்கீகாரம் பெறவும் முக்கிய தளமாகவும் இக்கலைவிழா செயல்பட்டது.

மேலும், விழாவின் ஓர் அங்கமாகத் தங்கள் திரைப்படங்கள் வழியாக மக்களிடம்
தமிழகப் பாராம்பரியக் கலைகள் பற்றிய விழிப்புணர்வைச் சிறப்பாகக் காட்சிப் படுத்திய திரை ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுபெற்ற திரை ஆளுமைகள்….

திரு. வெற்றிமாறன் – விடுதலை பாகம் 2

திரு. மாரி செல்வராஜ் – வாழை

திரு. பா. ரஞ்சித் – தங்கலான்

திரு. சீனு ராமசாமி – கோழிப்பண்ணை செல்லத்துரை

திரு. பிரேம்குமார் – மெய்யழகன்

திரு. பி. எஸ். வினோத் ராஜ் – கொட்டுக்காளி

திரு. டி. ஜே. ஞானவேல் – வேட்டையன்

திரு. தமிழரசன் பச்சமுத்து – லப்பர் பந்து

திரு. போஸ் வெங்கட் – சார்

திரு. பரி இளவழகன் – ஜமா

திருமதி. திவ்யாபாரதி – ஜில்லு

திரு. மைக்கேல் கே. ராஜா – போகுமிடம் வெகு தூரமில்லை

திரு. எழில் பெரியவேடே – பராரி

திரு. நந்தா பெரியசாமி – திரு.மாணிக்கம்

திரு. இரா. சரவணன் – நந்தன்

விழா அமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த விழா ஒரு கலைகளின் வெற்றித் திருவிழாவாக அமைந்திருந்தது….

வித்தியாசமான காதல் கதையாக உருவாகி இருக்கிறது ” கண்நீரா “

0

இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலேசியா வாழ் தமிழர்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.

கண்நீரா என்பதற்கு கண்ணுக்குள் இருக்கிற நீர் போல என்று பொருள் காதல் என்றாலே கண்ணீருக்கு பஞ்சமிருக்காது, அதோடு படத்தில் நாயகியின் கதாபாத்திரத்தின் பெயர் நீரா எனவே இரண்டையும் இணைத்து ” கண்நீரா ” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை மலேசியா வாழ் தமிழர் கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை எழுதி இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.

ஒளிப்பதிவு – ஏகணேஷ் நாயர்
இசை – ஹரிமாறன்
பாடல்கள் – கௌசல்யா.N
கலை – குதூஸ் சங்கிலிஷா
நடனம் – மாஸ்டர் சேவியர், மாஸ்டர் முகிலன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – உத்ரா புரொடக்சன்ஸ் S.ஹரி உத்ரா – More 4 Production
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார் – கதிரவென்.

படம் பற்றி இயக்குனர் கதிரவென் பேசியதாவது…

லவ் படம் என்றாலே பேண்டஸி இருக்கும் ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட மிகவும் யதார்த்தமான காதல் கதை.

நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் பேர் காதல் Relationship -ல கண்டிப்பா இருப்பாங்க, இல்ல கடந்து வந்திறுப்பாங்க. காதலர்களுக்கு என்னமாதிரியான அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதை ஆர்ட் ஃபிலிமா இல்லாம கமர்சியல் கலந்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி இருக்கிறோம்.

படம் பார்ப்பவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என் வாழ்வில் நடந்தது என் ஃபேமிலியில் நடந்தது என்று ரசிகர்களை குளோஸா அவங்க ஹார்டை டச் பண்ற மாதிரியான மிக்ஸ்சான எமோசன்ஸ் இதில் இருக்கு.
படம் பார்ப்பவர்கள் தங்களை நிச்சயம் நெருக்கமாக தொடர்பு படுதிப்பாங்க.

படப்பிடிப்பு முழுவதும் மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது என்றார் இயக்குனர் கதிரவென்.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது , “கண்நீரா” இசை வெளியீட்டு விழாவில் பேரரசு !!

0

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது…

இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மாதிரி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இத்தனை ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி. உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கதிரவென் ஆகியோருக்கு நன்றி. என்னை நம்பி நான் எழுதிய கதையை, இத்தனை பெரிய படைப்பாக, இங்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமெனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…

கண்நீரா படக் குழுவிற்கு என் வாழ்த்துக்கள். கதாசிரியர் பேசும்போது, இயக்குநருக்குத் தனியாக நன்றி சொன்னார். இயக்குநர் அவருடைய கணவர் தான், ஆனால் யாரோ போல அவர் பேசி நன்றி சொன்னது ஆச்சரியம் தான். இருவரும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இடையில் குழந்தையையும் உருவாக்கி இருக்கிறார்கள், இந்த படத்தை முடித்துவிட்டு, அவர்கள் அடுத்த குழந்தைக்கான வேலையைப் பார்க்கட்டும். வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழா நடத்தும்போது, இரண்டாவது பாகத்தையும் முடித்து, மிகத் தயாராக வைத்துள்ளார்கள். அவர்களின் வேகத்திற்கு மூன்றாம் பாகமே எடுக்கலாம். மலேசியாவில் படத்தை எடுத்து, தென்னிந்தியாவில் ரிலீஸ் செய்கிறார்கள் இங்குள்ள அனைத்து சங்கங்களும் உங்களை வரவேற்று ஆதரவு தருவார்கள், வாழ்த்துக்கள். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் ஹரி உத்ரா பேசியதாவது….

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் செய்யும் மூன்றாவது படம் இது. இந்த வருடத்தில் முதல் படம். மலேசியாவில் எடுத்த படத்தை, இங்கு பெரிய அளவில் வெளியிடுகிறோம். More 4 Production மிகச்சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் எடுத்ததால், இங்குள்ள ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் பல விசயங்களை மாற்றியுள்ளோம். முக்கியமான இப்படத்தின் இசை, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இப்படம் மிகப் புதுமையாக இருக்க, இயக்குநர் கதிரவென் தான் காரணம். அவர் நாங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, முழு ஒத்துழைப்பு தந்தார். படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, ஒவ்வொன்றாக வெளியாகும். இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் கதிரவென் பேசியதாவது….

எங்களுக்கு ஆதரவு தந்து, இங்கு இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இவர்களுடன் அமர்ந்திருப்பதே மிக மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியாவில் தான் முழுமையாக இப்படத்தை, கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளோம். எங்களுக்கு முழு ஆதரவைத் தந்த உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் உத்ரா சாருக்கு என் நன்றிகள். என் மனைவிதான் இப்படத்திற்குக் கதை எழுதி உள்ளார். மலேசியாவிலிருந்தபோது, இந்த கதையை என்னிடம் சொன்னார் மிக அருமையாக இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தபோது, என் மனைவி கர்ப்பமானார், ஆனால் அப்போது கூட கண்நீரா படம் தான், என் முதல் குழந்தை என்று சொன்னார். அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. என் மனைவி தான் இப்படத்தை இயக்கியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவர் என்னையே இயக்கச் சொன்னார். ஒரு மிகச்சிறப்பான படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை என் மனைவி இயக்க வேண்டியது, அவரிடம் சொன்ன போது, இரண்டாம் பாகத்திற்குக் கதை இருப்பதாகச் சொன்னார், அந்தக்கதையும் மிக அருமையாக இருந்தது. அந்தப்படத்தை மனைவி தான் இயக்கியுள்ளார். அந்தப்படத்தையும் முடித்து விட்டோம். நீங்கள் தான் முழு ஆதரவைத் தர வேண்டும்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

கண்நீரா தலைப்பே மிக அருமையாக உள்ளது. படம் சிறப்பாக வந்திருக்கிறது இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி கதை எழுதியுள்ளார், கணவர் இயக்குநராகப் படம் எடுத்திருக்கிறார். சாதாரணமாக குடும்பங்களில் திரைப்படத்திற்கு எதிராகத் தான் பேசுவார்கள், ஆனால் இப்படத்தில் அவரது மனைவி அவருக்கு உறுதுணையாக நின்று, படத்தை உருவாக்கியுள்ளார். இருவருக்கும் என் மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரொமான்ஸ் படங்கள் வருவது இப்போது குறைந்து விட்டது. அந்த வகையில் இந்த திரைப்படத்தினை காதலை மையமாக வைத்து மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். நீண்ட நாள் கழித்து நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் எடுத்து, இங்கு வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும். சின்ன படங்கள் ஓடவில்லை என சொல்கிறார்கள், சின்னப்படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். இதைக் கண்டிப்பாகப் பேசித் தான் தீர்க்க வேண்டும். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்பட்டங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. சின்னப்படங்களுக்கு மக்களை வரவைக்க, என்ன செய்ய வேண்டும். இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். திரையரங்கில் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது. கார் பார்க்கிங்க் கொள்ளை இப்படி இருந்தால், மக்கள் எப்படி வருவார்கள். நம் மீது குறை வைத்துக்கொண்டு மக்களைக் குறை சொல்லக்கூடாது. இவர்கள் பல கஷ்டப்பட்டு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…..

கண்நீரா படக்குழு குடும்பமாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். கௌசல்யா நவரத்தினம் குழந்தையை மட்டுமல்ல, இந்தப்படத்தையும் கருவாகச் சுமந்துள்ளார். கணவனுக்கு உறுதுணையாக இருந்து படத்தை இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பெண்கள் அவ்வளவு சாதாரணமாக சினிமாவுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் கதிரவெனுக்கு பின்னால் தூணாக கௌசல்யா இருக்கிறார். அதனால் கண்டிப்பாக இப்படம் கதிரவென் ஜெயிப்பார். மலேசியாவில் இப்படத்தை எடுத்து தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும். கடந்த 10, 15 ஆண்டுகளாகத் தமிழகத்தில், இந்தியா முழுக்க பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இப்போது கூட ஒரு கல்லூரியில் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கம் இது போன்ற விசயங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பைப் பற்றி அதன் அவசியம் பற்றி பேசியிருக்கும் இந்த கண்நீரா படம் பெரிய வெற்றி பெறட்டும். சினிமா சில நேரங்களில் நன்றாக இருக்கிறது பல நேரங்களில் நன்றாக இல்லை. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி நட்டம். மக்கள் சின்னப்படங்களுக்கு செலவு செய்வதில்லை. படம் எடுக்க முடிகிறது ஆனால் வியாபாரம் இல்லை. க்யூபிற்கு, விளம்பரத்துக்குப் பணம் இல்லாமல் 200 படங்கள் நிற்கிறது. சின்னப்படங்களுக்கு திரையரங்குகளில் தனி விலை வையுங்கள். சின்னப்படங்களுக்கு 40, 50,70 என வையுங்கள். அப்போது மக்கள் வருவார்கள். சின்னப்படங்கள் நன்றாக இருந்தால் ஓடுகிறது. பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் அதிகம் ஜெயிக்கிறது. அதன் வெற்றிக்குக் காரணமாகப் பத்திரிக்கைகள் இருக்கிறது. சின்னப்படங்களுக்கு கொஞ்சம் நல்ல விமர்சனங்கள் தாருங்கள். மலேசியாவிலிருந்து நம்பி வந்துள்ள இந்த படக்குழு ஜெயிக்க வேண்டும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது….

என்னுடைய முதல் வாழ்த்து, இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் பாடல் மிக நன்றாக இருந்தது. இயக்குநருக்கு முதல் படம் போலவே இல்லை. முதல் படத்தில் பாடலெழுதிக் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள் கதிரவென், கௌசல்யா தம்பதி. அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். என் மனைவி எழுதிய கதை தான் எஜமான். பொன்னுமனி அவர் எழுதிய கதை தான். அது போல் உங்கள் மனைவி எழுதிய கதையும் வெற்றி பெறும். டிரெய்லர் மிக அற்புதமாக இருக்கிறது. கண்ணெல்லாம் நீராக சுமந்து கொண்டு இருக்கிறது, விட்டுக்கொடுத்தலைப் பேசுகிறது இந்தப்படம். மலேசியா தமிழர்களுக்கு நாம் எப்போதும் அன்பும் ஆதரவும் காட்டியே வருகிறோம். மலேசியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்குத் தனி அன்பு உண்டு. அதே போல் மக்களும் உங்கள் படத்தை நேசிப்பார்கள். மலேசியாவில் இப்படத்தை ரசித்ததாகச் சொன்னீர்கள் அதே போல் கண்டிப்பாக மக்கள் இங்கும் ரசிப்பார்கள். நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சினிமா இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டு தான் உள்ளோம் ஆனால் திரையரங்குகளில் நம்மை வைத்துச் செய்கிறார்கள். தலைவர் எம் ஜி ஆர் ஆட்சியில் சினிமாவில் பிரச்சனையே இருந்ததில்லை. சினிமாவும் அரசியலும் கலந்துதான் பிரச்சனை. சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது, இருந்தால் சினிமா உருப்படாது. அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள் நன்றி என்றார்.

இந்த படத்தை கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை எழுதி, இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.

ஒளிப்பதிவு – ஏகணேஷ் நாயர்
இசை – ஹரிமாறன்
பாடல்கள் – கௌசல்யா.N
கலை – குதூஸ் சங்கிலிஷா
நடனம் – மாஸ்டர் சேவியர், மாஸ்டர் முகிலன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – உத்ரா புரொடக்சன்ஸ் S.ஹரி உத்ரா – More 4 Production

“நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் தம்பதிக்கு 70 – ஆண்டுகால சினிமா பத்திரிகையாளர் சங்கம் சிறப்பு !!

0

புதுமன தம்பதியரான நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் ஜோடி சென்னை , பிரசாத் லேப் திரை வளாகத்தில் சினிமா பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜஸ்தானி பாரம்பரிய முறையில் திருமண விருந்தளித்து , நன்றி நவிழ்ந்த நிகழ்வில் ., 70 பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு சங்க செயலாளர் R.S. கார்த்திக் ., சீனியர் உறுப்பின தம்பதிகள் ‘கலைப்பூங்கா’ R.ராம் பிரசாத் பிரபு – T.R.விஜயலட்சுமி மற்றும் சுரேஷ் சுகு உள்ளிட்டோர் சால்வைகள் அணிவித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நாட்குறிப்பை திருமண பரிசாக வழங்கிய தருணம். உடன் இந்நிகழ்வின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ்.கே.அகமது மற்றும் சாக்ஷி அகர்வாலின் தந்தை உள்ளிட்டோர்.

’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

0

XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்பு மேம், அதிதி என படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆகாஷின் அறிமுகப் படம் இது. நிச்சயம் அனைவரும் வாழ்த்துவீர்கள் என நம்புகிறேன். படத்தில் யுவனின் இசை இன்னொரு ஹீரோ. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “’மாஸ்டர்’ தந்து மாஸ்டராக விளங்கி வருபவர் சேவியர் பிரிட்டோ. அவரின் மகள் சிநேகா இந்தத் தொழிலின் அத்தனை நுணுக்கங்களையும் கற்று ‘நேசிப்பாயா’ படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் மூலம் நல்ல கதாநாயகனாக ஆகாஷ் முரளி அறிமுகமாகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். யுவனின் இசை நிச்சயம் இளைஞர்களைக் கவரும். வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கு வந்திருக்கிறார் விஷ்ணு வர்தன். நிச்சயம் படம் வெற்றியடையும்”.

நடிகர் சரத்குமார், “முரளி எனக்கு நல்ல நண்பர். அவரின் மகன் படத்தின் விழாவிற்கு வந்திருக்கிறேன். படத்திலும் முக்கியமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். யுவன் இசையில் முதல் முறையாக நடித்திருக்கிறேன். ஆகாஷூக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. ‘நேசிப்பாயா’ படத்தை நிச்சயம் நீங்களும் நேசிப்பீர்கள்” என்றார்.

இயக்குநர் இளன், “’நேசிப்பாயா’ படத்தை நான் பார்த்துவிட்டேன். அருமையாக வந்திருக்கிறது. ஆகாஷிடம் இயல்பாகவே ஒரு இன்னொசண்ட் இருக்கிறது. அது இந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தி வந்திருக்கிறது. அதிதியும் நன்றாக நடித்திருக்கிறார். பல லொகேஷனில் ஸ்டைலிஷாக விஷ்ணு சார் இயக்கி இருக்கிறார். விஷ்ணு- யுவன் காம்போ மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர்கள் சிநேகா மற்றும் பிரிட்டோ சாரும் கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்”

கலை இயக்குநர் சரவண வசந்த், “விஷ்ணு சாருடன் பணிபுரிந்தது நல்ல கற்றல் அனுபவம். படம் எப்படி வர வேண்டும் என்பதை அவர் தெளிவாக திட்டமிட்டிருந்தார். ஆகாஷ், அதிதி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்”.

காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன், “இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் அதர்வா முரளி, “’நேசிப்பாயா’ படம் எங்களுக்கு நெருக்கமான படம். ஆகாஷின் அறிமுகப் படம் இது. இதற்காக பிரிட்டோ சார் மற்றும் சிநேகாவுக்கு நன்றி. கதைக்கு மகிழ்ச்சியுடன் செலவு செய்வார் பிரிட்டோ சார். விஷ்ணு வர்தனின் ஹீரோ ஆகாஷ் என்பது எங்களுக்கு பெருமையான விஷயம். அதிதி சிறப்பாக நடித்திருக்கிறார். என் முதல் படத்தில் நடந்த லக் என் தம்பிக்கும் அவரின் முதல் படத்தில் நடந்திருக்கிறது. ஆமாம்! ஆகாஷின் முதல் படத்திற்கும் யுவன் தான் இசை. நிச்சயம் படம் வெற்றி பெறும். விழாவிற்கு வருகை தந்திருக்கும் சிவகார்த்திகேயன் பிரதருக்கும் சரத் சாருக்கும் நன்றி. ஜனவரி 14 அன்று படம் வெளியாவது மகிழ்ச்சி. மகன்களின் கனவை தன் கனவாக நினைக்கும் அம்மாக்களில் எங்கள் அம்மாவும் ஒருவர். அவரது வாழ்த்து நிச்சயம் ஆகாஷூக்கு உண்டு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!”.

நடிகை அதிதி ஷங்கர், “இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஷ்ணு வர்தன் சாருக்காகதான் கதை கூட கேட்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். விஷ்ணு சாரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். ’விருமன்’ படத்தின் போது முழுக்கதையும் எனக்கு கொடுத்தார்கள். ‘மாவீரன்’ படத்தில் நடிக்கும் போது ஒருநாளுக்கு முன்பாக எனக்கு காட்சிகளை பிடிஎஃப்பில் அனுப்புவார்கள். விஷ்ணு சார் எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். பின்பு, ஷூட் சென்று விட்டோம். ஆன் தி ஸ்பாட்டில்தான் எனக்கு வசனம், காட்சி சொல்வார் விஷ்ணு சார். நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் சார் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம்”.

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, “சிநேகாவுக்கு அவரது கணவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது கனவு ‘நேசிப்பாயா’ படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. என் நண்பர்கள்தான் விஷ்ணுவும் அனுவும். விஷ்ணுவின் ஸ்டைலிஷான இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகமாகிறார். அதிதியும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொங்கலில் வெளியாகும் இந்தப் படத்திற்கு வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, “நாங்கள் எல்லோரும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதை கேட்டதில் இருந்து நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகாஷ், அதிதி அழகாக நடித்திருக்கிறார்கள். நானும் விஷ்ணுவும் பள்ளிக் காலத்தில் இருந்தே ஒன்றாக பணிபுரிகிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி”.

இயக்குநர் விஷ்ணு வர்தன், “சரத்குமார் சார், அழைத்ததும் வருவதற்கு உடனே ஒத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் சார் இருவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தின் ஜானர் இதற்கு முன்பு நான் முயற்சி செய்யாதது. அதனால், நீங்கள் எப்படி வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த பிரிட்டோ சார் மற்றும் சிநேகா பிரிட்டோவுக்கு நன்றி. ஆகாஷ் முதல் நாளிலிருந்து ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். சரத் சார், குஷ்பு மேம், கல்கி, ஸ்ரீகர் சார் என இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. அழைப்பை ஏற்று வந்த விஜய் ஆண்டனி சாருக்கும் நன்றி. அதிதியின் நடிப்பு என் இதயத்தை தொட்டுவிட்டது. யுவனின் இசை என் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

நடிகர் ஆகாஷ் முரளி, ” நிகழ்வு முழுவதும் இருந்து எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ அங்கிள் மற்றும் சிநேகா பிரிட்டோவிற்கு நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்த என் குரு விஷ்ணுவர்தன் சாருக்கு நன்றி. அற்புதமான அனுபவமாக இந்த படம் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். அற்புதமான பாடல்கள் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. அதிதி, சரத் சார், கல்கி எல்லோருக்கும் நன்றி. அண்ணா, அம்மா, அக்கா எல்லோருக்கும் நன்றி. என் தாத்தாவும் அப்பாவும் என்னையும் என் அண்ணனையும் சினிமாவில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள். படம் ஜனவரி 14 அன்று வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

நடிகர் சிவகார்த்திகேயன், “எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் சார் தான். பிரிட்டோ சார் மிக நல்ல மனிதர். நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள். என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய கனவை அடையவும் மனோகர் மாமா ஆதரவு கொடுத்தார். அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். யுவன் சார் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு சார் இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத் சாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் சார் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார். யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் சார். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்றார்.

Shoot to be conducted in London, biopic to be released for next birth anniversary of Velu Nachiyar

0

Teaser of ‘Veeramangai Velu Nachiyar’ produced by Trends Cinemas’ J M Bashir and directed by R Aravintha Raj starring Ayisha in title role unveiled on Velu Nachiyar’s birth anniversary

Shoot to be conducted in London, biopic to be released for next birth anniversary of Velu Nachiyar

The motion picture teaser of ‘Veeramangai Velu Nachiyar’, a film being made to narrate the valiant history of India’s first woman freedom fighter Velu Nachiyar who was the only queen to win over the British, was unveiled on January 3 to mark her birth anniversary.

Produced by J M Bashir under Trends Cinemas banner and directed by R Aravintha Raj, the movie will mark the acting debut of Ayisha, who will play the lead role as Velu Nachiyar.

J M Bashir, who has played Pasumpon Muthuramalinga Thevar in the movie ‘Desiya Thalaivar’, plays an important character Periya Maruthu in ‘Veeramangai Velu Nachiyar’. It is noteworthy that Ayisha is his daughter.

‘Veeramangai Velu Nachiyar’ is taking shape fast. Shoot will be held in London next month. The team is planning to release the film for Velu Nachiyar’s birth anniversary next year.

Speaking about the motion picture teaser launch, producer and actor J M Bashir said, “We are very proud to bring Velu Nachiyar’s biography to the screen. It is a great pleasure to have my daughter Ayisha in the lead role. We are doubly happy to release the teaser on Velu Nachiyar’s birth anniversary.”

Bashir further said that it is necessary for today’s younger generation to know about the great personalities who fought selflessly for our country and freedom, and because of this, he is bankrolling films including ‘Desiya Thalaivar’ and ‘Veeramangai Velu Nachiyar’.

He informed that the script of the film has been developed after studying historical documents. For ‘Veera Mangai Velu Nachiyar’, J Sridhar will take care of cinematography and stunts will be choreographed by Miracle Michael.

டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ டீசர் வேலுநாச்சியார் பிறந்தநாள் அன்று வெளியீடு*

லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ எம் பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான ஜனவரி 3 அன்று வெளியிடப்பட்டது. இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று அடுத்த வருடம் வேலு நாச்சியாரின் பிறந்தநாளுக்கு திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மோஷன் பிக்சர் டீசர் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ எம் பஷீர், “வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி. வேலுநாச்சியாரின் பிறந்தநாள் அன்று இந்த டீசரை வெளியிட்டு இருப்பது இரட்டிப்பு சந்தோஷம்,” என்றார்.

நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே ‘தேசிய தலைவர்’ மற்றும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் மேலும் தெரிவித்தார்.

வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். ‘வீர மங்கை வேலு நாச்சியார்’ திரைப்படத்திற்கு ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார்.

- Advertisement -

Recent Posts