Wednesday, June 17, 2026
- Advertisement -
Home Blog Page 4

Samharam Movie Review

0

Samharam is a compelling Tamil action-thriller that centers on a young woman who becomes the only witness to a shocking crime, plunging her into the heart of a dangerous conspiracy. Directed by Rama Prabha, the film delivers a thrilling narrative that follows a masked death hunt, creating suspense and tension that builds throughout. Released on June 5, 2026, this action-drama thriller has captured audiences with its gripping storyline and intense execution.

Prajin Padmanabhan delivers a standout performance in the lead role, bringing authenticity and depth to his character. The film’s plot revolves around Prajin’s desire to marry off his elder sister to Ganesh Savaratil, but when she discovers Ganesh’s bad nature and refuses, the consequences unfold dramatically. Prajin’s portrayal grounds the emotional core of the story while maintaining the thriller’s intensity, making him a compelling protagonist audiences can connect with.

The stellar ensemble includes Niya Varghese, who brings freshness and conviction to her role, and Sharu Nisha, whose performance adds crucial layers to the narrative. Thendral Raja also features prominently in the lead characters, contributing to the film’s multi-dimensional storytelling. This strong cast works cohesively to create characters that feel real and purposeful, enhancing the thriller’s emotional impact and suspense.

The film’s thriller elements are exceptionally well-executed, with the masked death hunt creating an atmosphere of danger and mystery that keeps audiences engaged. The conspiracy unfolds methodically, revealing layers of the crime while maintaining tension without overwhelming the emotional story. This balance between suspense and human drama makes Samharam a well-rounded thriller that appeals to both action enthusiasts and those seeking emotional depth.

Beyond the thriller aspects, Samharam carries strong family emotions and dramatic weight through its central conflict. The story of an elder sister refusing a marriage due to discovering the groom’s bad nature creates authentic emotional stakes that ground the thriller elements. This integration of family drama with conspiracy thriller creates a narrative that feels both entertaining and emotionally resonant, making the stakes personal and meaningful.

The film’s action sequences are well-crafted, with the thriller’s pacing maintaining tension throughout without feeling rushed or dragged. The direction by Rama Prabha demonstrates skill in balancing multiple genres—action, drama, and thriller—creating a cohesive cinematic experience. The technical execution supports the narrative effectively, ensuring the suspense and emotions land with impact.

Verdict: A Solid Thriller With Heart and Suspense

Rating: ⭐⭐⭐ (3/5)A solid Tamil action-thriller that delivers gripping suspense, strong performances, and meaningful family drama—worth watching for thriller enthusiasts seeking entertainment with emotional stakes.


PRODUCER: N. ANIL KUMAR CO-PRODUCER: A. VEL MUUGAN WRITTEN & DIRECTED BY: RAM PRABHA D.O.P: SURESH KUMAR SUNDARAM MUSIC V.G.HARI KRISHNSN TITLE TRACK: NIVEK SUNDAR EDITOR: RAMNATH ART: RAVINDRAN CO DIRECTOR: SARAVANA KUMAR LYRICS: ABINAYA.V ACTION: VEER VIJAY SFX: MANOJ VFX: NIVEK SUNDAR-ABINAYA.V PRODUCTION MANAGER: MANI MARAN DI: SENTHIL KUMAR AUDIOGRAPHY: KARUNAGARAN CASHIER: GOVINDHARAJ COSTUMES: BALAN MAKE-UP: IDHAYA JAMES STILLS: RAJA PRO: NITHISHSRIRAM DESIGNS: SASI&SASI CASTINGS : Praijin,Niya Vargees,Sharu Nisha, S Rajkumar, Ram Prabha , Thendral Raja, Ganesh Chavaratil #samharam #Samharammovie

சம்ஹாரம் படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் விவரம்.

நாயகன் – பிரஜின் பத்மநாபன்

நாயகி – ஷருமிஷா,
நியா வர்கீஸ்

வில்லன் – கணேஷ் சாவரட்டில்

குணச்சித்திரக் கலைஞர்கள் –
ராஜ்குமார்,
தென்றல் ராஜா, ராம் பிரபா.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு: Vidhya Productions

தயாரிப்பாளர்: வேல் முருகன்

எழுத்து மற்றும் இயக்கம் : ராம் பிரபா

இசை: V G ஹரி கிருஷ்ணன்

ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம்

எடிட்டர்: ராம்நாத்

பாடலாசிரியர்: அபிநயா

போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: சசி & சசி

மக்கள் தொடர்பு : சரண்

Parimala And Co Movie Review

0

Parimala and Co is that rare Tamil film that manages to be funny, suspenseful, and emotionally satisfying all at once. Director Pandiraj returns to his strong suit—middle-class family dynamics—and spices it up with a murder mystery that actually works.

The story kicks off light and relatable: a typical Tamil family finds themselves under suspicion when the man who was harassing their daughter turns up dead. What follows is a clever, at times chaotic, whodunit that never loses its heart. The film balances comedy and tension beautifully, making it a perfect family entertainer without feeling forced or preachy.

Jayaram and Urvashi deliver warm, natural performances that anchor the film, while Mysskin quietly steals several scenes. Even the comic relief, especially Yogi Babu, lands his jokes without dragging the pacing.

What really stands out is the film’s social relevance—it tackles issues women face in everyday life, but wraps it in humor and suspense so it never feels heavy-handed. The climax is meaningful and satisfying, leaving you with something to think about after the laughs.

Songs are catchy (especially “Vachava”), the screenplay keeps you engaged, and the mystery holds up well enough to keep you guessing till the end. Sure, there are a few stretched moments in the second half, but they don’t ruin the ride.

Verdict: If you’re looking for a weekend film that’s funny, suspenseful, emotionally grounded, and perfect for the whole family

“Parimala and Co”

Cast : Jayaram, Urvasi, Mysskin, Yogi Babu, Sandy, Santosh Sobhan, Sanjana Krishnamoorthy, Ananthika Sanilkumar, GKM Tamilkumaran, Poornima and more.

Written & Directed by Pandiraaj

Produced by:
Subaskaran – Lyca Productions
GKM Tamilkumaran – Tamilkumaran Productions Pvt Ltd
Pandiraaj – Pasanga Productions

Director of Photography : George C. Williams ISC
Music : Foxn
Editor : Pradeep E Ragav
Art Director : T. Ramalingam
Stunt Master : Kalai Kingson
Choreography : Sandy, Baba Bhaskar
Music Supervisor : Santhosh Kumar
Costume Designer : Poornima Ramaswamy
Costume : K. Nataraj
Audiography : M.R. Rajakrishnan
VFX Producer : B.R. Venkatesh
DI : Knack Studios
Colourist : Prasath Somasekar
Publicity Designer : ADFX Studio
Stills : Theni Murugan
PRO : Sathish (AIM)
Sound Effects : Shreyas Bhat, Arunprasad
Production Controller : Ramadoss & Vijay. C
Subtitles : Rekhsk

Sannidhanam PO Movie Review

0

Sannidhanam P.O. is a drama that means well and takes on an emotionally powerful story about a mother’s relentless search for her missing son and the devastating consequences of wrongful arrest. The film centers on strong human emotions, particularly the timeless bond between mother and child, which resonates deeply if you’re willing to invest in its sentiment-driven narrative. Yogi Babu shows unexpected range here, stepping into a more serious role as a caterer who unknowingly becomes connected to this mystery, and he manages to land moments of genuine emotion alongside his natural comedy. Sithara commits fully to the physical and emotional demands of playing Yashodha, the wrongfully arrested mother, bringing conviction to a character defined by her pain and determination.

The film’s connection to Sabarimala and devotees traveling there adds a spiritual dimension that devotees might find meaningful, and the narrative-driven approach creates an emotional journey that feels authentic to its intended audience. Roopesh Shetty, the Kannada star, brings his usual intensity to the supporting cast, and Pramod Shetty contributes solidly to the ensemble. The music by AGR supports the emotional scenes without overpowering them, and the cinematography captures both the harshness of the situation and the beauty of the pilgrimage setting. While the film leans heavily on sentiment and includes many flashbacks that explain things repeatedly, viewers who appreciate mother-son sentiment stories and Ayappan devotion themes may find this worth their time. It’s a film that prioritizes emotional impact over logical plot construction, and if you’re looking for a drama that makes you feel rather than one that makes you think critically about every coincidence, Sannidhanam P.O. delivers its intended message with sincerity

Starring: Yogi babu, Sithara, Roopesh Shetty, Varshaviswanath, Pramod Shetty, Munnar Ramesh, Vishalini, Vinod Sagar, Gajaraj ,Kalki Raja, Sathvick, Rajarudrakodi, Tsr, Ashwin Hassan, Ram Rajendran, Hari R Menon, Pithirai Selvam, Mithran, Global Subramaniyan & others. #yogibabu #roopeshshetty #pramodshetty #sithara #gajaraj #vinodsagar #trendmusic #SannidhanamPO #SannidhanamPOTrailer #TamilCinema #Kollywood Crew details Director: Amutha Sarathy Story & Screenplay: Ajinu Ayyappan Dialogue: Amutha Sarathy Cinematography: A.Vinod Bharathi Music: AGR Editor: Pk Art Director: Vijay Thennarasu Lyrics: Mohan Rajan Stunt: Metro Mahesh Choreographer: Joy Mathy Co-Directors: Sakki Ashok – Sujesh Annie Eapen Make Up: C.Shibukumar Costumer: Natraj Sound Design: Samson Promo Cuts – Don Max Production Controller: D.Murugan, Richard Production Manager: M.Shivakumar Stills: Reni Vfx: Qixotics Creative Ltd Colourist: Bharaanidhar Pro: Riyaz K Ahmed – Paras Riyaz Publicity Designer: Vm Shivakumar Exective Producer: Shabeer Pathan – Vilok Shetty Produced By Madhusudhan Rao – V. Vivekanandan – Ramasamy Velu

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

0

வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.

விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects, JB Motion Pictures
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

Vijay Sethupathi, Puri Jagannadh’s Highly Anticipated Action-Drama Slum Dog Teaser Launching On June 8th

One of the most intriguing collaborations in recent times, Slum Dog brings together dashing director Puri Jagannadh and versatile actor Vijay Sethupathi for a gritty pan-India action drama. The film has successfully completed production, with post-production activities progressing rapidly across all language versions. Backed by the intriguing subtitle 33 Temple Road, the project has managed to spark curiosity ever since its title announcement and striking first-look reveal. Slum Dog is produced by Puri Jagannadh and Charmme Kaur under the Puri Connects banner, in collaboration with JB Narayan Rao Kondrolla’s JB Motion Pictures. With anticipation steadily building, the makers are now gearing up for the next phase of promotions.

The makers have announced that the film’s teaser will be launched on June 8th. The teaser poster paints a grim picture. A blindfolded figure stands still as a blood-stained machete is held across his neck, creating a striking image that feels both menacing and symbolic. The dark, moody image hints at a brutal and unforgiving world.

Leading the cast alongside Vijay Sethupathi is Samyuktha, while Tabu and Kannada star Duniya Vijay take on crucial characters that are expected to add significant weight to the narrative. The ensemble also features Brahmaji and VTV Ganesh in key supporting roles.

National Award-winning music director Harshavardhan Rameshwar, whose work in films like Arjun Reddy and Animal earned widespread acclaim for its raw intensity and emotional depth, is scoring the music for the movie.

Slum Dog will have a Pan India release in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.

Cast: Vijay Sethupathi, Samyuktha, Tabu, Duniya Vijay Kumar

Technical Crew:
Writer, Director: Puri Jagannadh
Producers: Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla
Presents: Charmme Kaur
Banner: Puri Connects
CEO: Vishu Reddy
Music: Harshavardhan Rameshwar
PRO: Yuvraaj
Marketing: Haashtag Media

Peddi Movie Review

0

Peddi is an emotionally charged sports drama set in 1980s rural Andhra Pradesh, where a spirited villager unites his marginalized community through cricket to defend their pride against a powerful rival. Directed by Buchi Babu Sana, the film blends sports, politics, and social identity into a sweeping narrative that carries strong emotion, drama, and inspiration till the very end. Though occasionally overstretched, its biggest strength is trusting Ram Charan to physically and emotionally lift the entire film.

Ram Charan’s portrayal of Peddi is the film’s unqualified high point. He molds the colonial sport of cricket into his own hand, slapping it with the inimitable sensibilities only lovers of “mass” cinema understand. His performance is weathered, deeply felt, and completely authentic—transforming from a laborer with exceptional athletic talent into a community leader whose journey becomes tied to his village’s fight for identity. Twitter reviews confirm that Ram Charan wins massive praise, with fans calling this a watchable entertainer precisely because of his stellar performance.

The film’s emotional sequences resonate deeply, making the drama rich in emotions and convincing due to a strong central idea. The interval and climax sequences receive positive responses, standing out as the film’s most powerful moments that elevate the entire narrative. Despite some conventional storytelling in the first act, these high points make Peddi a well-rounded commercial entertainer encompassing all essential elements.

The music by A.R. Rahman is a perfect complement to the film’s emotional core, with all four tracks receiving good responses ahead of the theatrical release. The background score supports the drama effectively, creating an atmospheric soundscape that enhances the emotional moments without overshadowing the performances. This musical excellence adds another layer to the film’s commercial appeal.

The star-studded ensemble includes Shiva Rajkumar, Janhvi Kapoor, Jagapathi Babu, and Boman Irani, all contributing to the film’s scale. Shiva Rajkumar’s performance is particularly commendable, adding gravitas to the story. While Janhvi Kapoor’s storyline feels conventional to some reviewers, the film’s large-scale production and high-budget elements create a big-ticket Telugu drama that generates significant buzz.

Verdict: A Watchable Commercial Entertainer Driven by Ram Charan’s Brilliance

Peddi is a win for both Buchi Babu Sana and Ram Charan, delivering a mass sports drama that, despite its excesses, leaves audiences satisfied by the good bits that remain. By the end, you don’t mind the overstretch—the emotional payoff and Ram Charan’s transformation make it worthwhile. Critics and audiences agree: it’s a watchable commercial entertainer that succeeds in parts despite typical storytelling.

Rating: ⭐⭐⭐½ (3.5/5)A sincere sports drama driven by Ram Charan’s powerhouse performance, brilliant climax, and emotional depth that makes it worth the watch despite conventional storytelling.

Cast:

Ram Charan @ Peddi 
Janhvi Kapoor @  Achiyyamma
Shiva Rajkumar @ Gournaidu
Jagapathi Babu @ Appalasoori
Divyendu Sharma  @ Ram Bujji
Boman Irani

Technical Crew:

Writer, Director: Buchi Babu Sana
Presents: Mythri Movie Makers, Sukumar Writings
Banner: Vriddhi Cinemas
Producer: Venkata Satish Kilaru
Co producer: Ishan Saksena
Music Director: AR Rahman
DOP: R Rathnavelu
Production Design: Avinash Kolla
Editor: Navin Nooli
Executive Producer: V. Y. Praveen Kumar
Marketing: First Show
PRO : Yuvraaj

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

0

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”.

வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…,

தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அந்த ஆதரவே மேலும் தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை கேட்டவுடன் இதை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். குறிப்பாக படப்பிடிப்புக் குழுவினர் நேர்த்தியாகவும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினரான சு.கிதா, சதீஷ், சூர்யா, தினேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பாடலை உருவாக்கிய இசைக் கலைஞர் அஜீஷுக்கும், பாடலின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. படத்தில் ஒரே ஒரு பாடல் இருந்தாலும் அது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பாடலுக்கான பணிகளில் எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல் அனைவரும் உழைத்தனர்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இந்தப் படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார். எப்போதும் இசை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், இந்தப் படத்தின் அனைத்து பணிகளிலும் உறுதுணையாக இருந்த ராமருக்கு எனது சிறப்பு நன்றிகள். அவர் எப்போதும் குழுவுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நடன இயக்குநர் ராதிகா மாஸ்டர் பேசியதாவது…
“இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் இயக்குநர் சகோ கணேசனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரது கடின உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த உழைப்பின் மொத்த வெளிப்பாடாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு முன்னணி நடிகர்களின் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் போன்ற திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கதையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்தையும் எந்த தயக்கமும் இல்லாமல் வழங்கி, படத்தை சிறப்பாக உருவாக்க முழு ஆதரவையும் அளித்தார். விதார்த் சார் எப்போதும் நல்ல கதைகளைத் தேர்வு செய்பவர். கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். கதாநாயகிகள் தேஜு மற்றும் அப்துல்யா இருவரும் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் பணியாற்றினர். குறிப்பாக கடினமான சூழ்நிலைகளிலும் நேரத்தை வீணடிக்காமல் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

ஒளிப்பதிவாளர் உதய், கலை இயக்குநர் மைக்கேல், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ‘மூன்றாம் கண்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியை அடையும் என்று நம்புகிறேன். நன்றி.

கலை இயக்குநர் மைக்கேல் பேசியதாவது…,
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை மிகத் தெளிவாகவும் வித்தியாசமாகவும் வடிவமைத்துள்ளார். இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே இது ஒரு சிறப்பான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. படத்தில் நடித்துள்ள விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட அனைவரும் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கினார்.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான இந்த ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்களின் ஆதரவிற்கும் நன்றி.”

எடிட்டர் ராமர் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை நான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தேன். அப்போது থেকেই இந்தக் கதை மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. பின்னர் இயக்குநர் சகோ கணேசன் அழைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.

இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாகவும், பார்வையாளர்களை கடைசி வரை ஈர்க்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. சாதாரணமாக ஒரு படத்தின் எடிட்டிங் பணிகளுக்கு அதிக நேரம் கிடைக்கும். ஆனால் இந்தப் படம் மிகக் குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. இருந்தாலும் முழுக் குழுவினரும் கடினமாக உழைத்து சிறப்பாக பணியை நிறைவு செய்தோம்.

குறிப்பாக இயக்குநர் சகோ கணேசனின் உழைப்பும், கதையின் மீது இருந்த நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் வடிவமைப்பிலும், காட்சிகளின் அமைப்பிலும் அவர் மிகத் தெளிவான பார்வையுடன் செயல்பட்டார்.

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். அவர்களின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் இந்தப் படத்தை சரியான நேரத்தில், சரியான முறையில் வெளியிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அவருடைய பொறுமையும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பல ஆச்சரியங்களும் வித்தியாசமான அம்சங்களும் உள்ளன. படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதை நிச்சயம் உணர்வார்கள். இந்தப் படத்திற்கு ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்பு வணிக ரீதியிலான பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், வலுவான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருந்தது. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியது.

இயக்குநர் சகோ கணேசன் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை சந்தித்த பிறகுதான் இந்தப் படத்தில் இணைந்தேன். அப்போது படம் ஏற்கனவே எடிட்டிங் கட்டத்தை எட்டியிருந்தது. முதலில் டிரைலரைப் பார்த்தபோது படத்தின் மேக்கிங், காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் கதையை ஒரே முறை பார்த்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இதில் உள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதையும் கதாபாத்திரங்களுமே. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக எனக்கு இந்தப் படம் ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்தாமல், அதே நேரத்தில் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்க்கும் வகையில் இசையை வடிவமைக்க வேண்டியிருந்தது. இயக்குநர் சகோ கணேசன் தெளிவான பார்வையுடன் இருந்ததால் அந்தப் பணி எளிதாக அமைந்தது.ஒளிப்பதிவாளர் உதய்குமார், சவுண்ட் டிசைனர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து, சவுண்ட் மற்றும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியுள்ளோம். மேலும், இந்தப் படத்தில் நிறைய லைவ் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதையம்ச ரீதியாகவும் மிகவும் வலுவான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களும், ஊடக நண்பர்களும் ஆதரவு அளித்து வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவருக்கும் எனது நன்றிகள்.”

நடிகை அதுல்யா சந்திரா பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ எனக்கு தமிழில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம். இந்தப் படத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். விதார்த், சந்தோஷ் பிரதாப், தேஜு, கலையரசன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சசிகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகள். மேலும், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

நடிகை தேஜு அஸ்வினி பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான். அதனால் நீங்கள் அனைவரும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மூன்றாம் கண்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்தோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையும், அதில் நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவை.

இயக்குநர் சகோ கணேசன், தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, எனக்கு ஊக்கமளித்து வந்த சசிகுமார் சாருக்கு என் நன்றிகள். விதார்த் சார், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. கலையரசன் எனக்கு குடும்ப உறுப்பினர் போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் நட்பாகவும், உற்சாகமாகவும் இருந்தனர்.

ப்ரோமோ பாடலில் என்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் உதய், இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், கலை இயக்குநர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.

‘மூன்றாம் கண்’ நான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட திரைப்படம். ஜூன் 12-ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”

நடிகர் KPY சரத் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். முதலில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சசிகுமார் அண்ணாவுக்கும், இயக்குநர் சகோ கணேசனுக்கும் என் நன்றிகள். வழக்கமாக நான் நடிக்கும் நகைச்சுவை வேடம் இல்லாமல், வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அன்பாக பழகி, நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இயக்குநர் இந்தக் கதையை மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.”

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது. படப்பிடிப்பு முடிந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும், அனைவருடனும் அதே பாசமும் நட்பும் தொடர்கிறது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர்களை ஒரே மாதிரியான வேடங்களில் மட்டுமே பார்க்கும் பார்வையை உடைக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் படம் எனக்கு அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையை என் மீது வைத்த இயக்குநர் சகோ கணேசனுக்கு நன்றி ‘மூன்றாம் கண்’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படத்தின் முடிவு பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். இது ஒரு வித்தியாசமான, பரிசோதனை முயற்சியாக உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து ஆதரவளித்து வருகிறார். அவருக்கும், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”

நடிகர் த்ரிகுண் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அந்த வகையில், நண்பர்களைப் போல இணைந்து பணியாற்றும் சூழலை இந்தப் படத்தில் உருவாக்கிக் கொடுத்த இயக்குநர் சகோ கணேசனுக்கும், தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் எனது குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்தது. அப்போது படக்குழுவினர் எனக்காக படப்பிடிப்பு அட்டவணையை மாற்றி அமைத்து முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். அதற்காக சசிகுமார் சாருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். மேலும், ஒரு நடிகராக நான் கேட்டுக் கொள்ளும் முன்பே சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையாக வழங்கிய தயாரிப்பாளர் அவர். இது திரையுலகில் மிகவும் அரிதான விஷயம்.

இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை முதன்முறையாக கூறியபோதே மிகவும் ஈர்த்துவிட்டார். கதை கேட்டவுடன் உடனே படத்தில் நடிக்க சம்மதித்தேன். அந்தளவுக்கு வலுவான திரைக்கதை இது. தேஜு, அதுல்யா நடிகைகள் இருவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக தேஜுவின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சரத் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.

‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான திரில்லர் படம். இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள். ரசிகர்கள் இந்தப் படத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நன்றி.”

இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார்.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.

அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார்.

ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், ஒளிப்பதிவாளர் உதய்குமார், எடிட்டர் ராமர், சவுண்ட் டிசைனர் சதீஷ், கலரிஸ்ட் பிரசாந்த், டிசைனர் சந்துரு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை உருவாக்கியதில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் முழு படக்குழுவினரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகர் கலையரசன் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.

இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விதார்த், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், தேஜு, அதுல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர்.

‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகர் விதார்த் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.

இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.

இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”

ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண் படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கியுள்ளார். கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அசுரன், விடுதலை படப்புகழ் V.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். இப்டத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Joyalukkas ‘Brilliance Diamond Jewellery Show’ in T NAGAR, CHENNAI from 5th to 21st June.

0

Chennai, Tamilnadu – June 2026:
The world’s favourite jeweller, Joyalukkas, is set to dazzle Tamilnadu with the ‘Brilliance Diamond Jewellery Show’, from 5th June 2026 at its T Nagar, Chennai showroom. This much-awaited exhibition promises an unforgettable celebration of craftsmanship, elegance, and innovation in diamond jewellery.

From statement bridal sets to contemporary everyday sparkle, the show features pieces that marry timeless tradition with modern aesthetics. Every design is a masterpiece, available only for a limited time during the show.

Dr. Joy Alukkas, Chairman & Managing Director of Joyalukkas Group, said: ‘The Brilliance Diamond Jewellery Show’ is our tribute to the enduring allure of diamonds and our passion for perfection in jewellery design. Chennai holds a special place in our hearts, and this exhibition during the festive season will offer customers an exclusive opportunity to discover designs that reflect beauty, individuality, and craftsmanship at its finest.”

To mark the occasion, customers will receive a free gold coin with every purchase of diamond jewellery worth ₹1 lakh and above during the exhibition period, adding even more brilliance to the shopping experience.

The ‘Brilliance Diamond Jewellery Show’ will be held exclusively at the Joyalukkas T Nagar, Chennai showroom, till 21st June 2026. Visitors are invited to explore an exquisite world of diamonds, where every piece tells a story of luxury, love, and timeless charm.

ஜோய்ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’

தி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை.

சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமையும்.

பிரம்மாண்டமான மணப்பெண் நகைத் தொகுப்புகள் முதல் தினசரி அணியும் நவீன வைர நகைகள் வரை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். பாரம்பரியத்துடன், காலத்தால் அழியாத அழகையும் நவீன வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் பல்வேறு சிறப்புமிக்க நகைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலைப்படைப்பாக திகழ்கிறது, இது கண்காட்சி நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜோய்ஆலுக்காஸ் கூறுகையில், ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’ என்பது வைரங்களின் மீதுள்ள கவர்ச்சிக்கும், நகை வடிவமைப்பில் முழுமையை நோக்கிய எங்கள் அர்ப்பணிப்பிற்கும் சாட்சியாக அமையும். சென்னை எங்கள் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சி வாடிக்கையாளர்களுக்கு அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனை பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளைக் கண்டறியும் அரிய வாய்ப்பை வழங்கும்,” என்றார்.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும். இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் பிரகாசம் சேர்க்கும்.

‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’, சென்னை தி.நகரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில், 2026 ஜூன் 21 வரை நடைபெறும். ஆடம்பரம், அழகு மற்றும் காலத்தால் அழியாத கவர்ச்சியின் கதையைச் சொல்லும் வைர நகைகளின் அற்புத உலகத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்:

0

திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!

தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்

உலக அதிசய தலைவா..!
ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே
வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை வாய்ந்த பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு வந்து தங்களது பொற்கரங்களால் பொன்னாடை போத்திட வேண்டுகிறோம்

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து காயிதே மில்லத் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே தலைவர் நீங்கள்தான்.

நாளுக்கு நாள் தங்களது புகழ் கூடிக்கொண்டே போகின்றது.
உங்களது வாக்கு அப்படியே பலிக்கின்றது.
நடக்கப் போவதை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே கூறுகின்ற ஆற்றல் படைத்த தீர்க்கதரிசினி நீங்கள்.

இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் தமிழக வெற்றி கழகத்தின் இஸ்லாமிய பெண்ணை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய அதிசய தலைவர் நீங்கள்.

சிறுபான்மை நலன் காக்கும் அரசு என்று தங்களின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தலைவர் நீங்கள்.

சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலன் என்று இதுவரை மக்களை ஏமாற்றி வந்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அவர்களின் போலி முகத்திரையை கிழித்த தலைவர் நீங்கள்.

வழி தெரியாமல் இருந்த நாங்கள் இனி உங்களின் பின்னால் என்றென்றும் தொடர்வோம்

முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்த முதல் செயலே தங்களை உலக அதிசய தலைவர் ஆக்கியது என தேவர் திரைப்பட நடிகர் ஜெ.எம் பஷீர் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் ஜூன் 3 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

0

பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம், நிதி நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியின் காரை யாருக்கும் தெரியாமல் டாக்ஸியாக இயக்கும் ஓட்டுநர் ஒருவரின் வாழ்க்கையை திரையில் காட்டுகிறது. பண மற்றும் மனப் போராட்டங்களுக்கு நடுவே ஒரு மனிதன் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் அபிநயா ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கார்மேனி செல்வம், படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதில் நீடிக்கும் ஒரு கேள்வியை எழுப்புகிறது: மன அமைதி, நேரம், குடும்பம் ஆகியவற்றை இழந்த பிறகு கிடைக்கும் நிதி சுதந்திரம் உண்மையில் மதிப்புள்ளதா?

“கார்மேனி செல்வம் படத்தை திரையரங்கங்களில் பார்த்த பெரும்பாலானோர் விருதுகளை வெல்வதற்கு தகுதியான படம் என்று புகழ்ந்தனர். மனிதர்களின் உணர்வுகளை மிகச் சரியாக பிரதிபலித்திருப்பதாக பாராட்டுகளை பெற்ற படத்தை தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

“இந்த படம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — இப்போது அது சாத்தியமாகிறது.” என்று இயக்குநர் Ram Chakri கூறினார்.

யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு, ஜெகன் ஆர்.வி மற்றும் தினேஷ் எஸ் ஆகியோரின் படத்தொகுப்பு, மியூசிகிளவுட் ஸ்டுடியோஸ் மற்றும் டெக்னாலஜிஸ்நிறுவனத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு படத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளன.

மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து, மக்களின் இதயங்களைத் தொடும் உண்மைக்கு நெருக்கமான மனிதநேயமிக்க கதைகளை உருவாக்குவதில் உறுதியுடன் பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இணையதளம்: https://pathwayproductions.in/

‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல்கள் மற்றும் படப்பிடிப்பு தள காட்சிகளை https://movie.carmeniselvam.in/ தளத்தில் காணலாம்.

படக்குழுவினர்:
நடிப்பு: பி. சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, கோதண்டம், கரண் சக்ரவர்த்தி, சங்கர நாராயணன் வி, ஹரிதா பரகோட். கிரியேட்டிவ் புரொடியூசர்: ஸ்ரீ சரவணன் மியூசிக் அஸ் அ சர்வீஸ் (MAAS): மியூசிகிளவுட் ஸ்டுடியோ & டெக்னாலஜி
ஒளிப்பதிவு: யுவராஜ் தக்ஷன்
படத்தொகுப்பு: ஜெகன் ஆர்.வி & தினேஷ் எஸ்
தயாரிப்பு வடிவமைப்பு: சங்கர்
பாடல்கள்: மணி அமுதவன் & உமா தேவி
ஆடியோகிராபி: ராகவ் ரமேஷ்
ஒலி வடிவமைப்பு: ராகவ் ரமேஷ் – ஹரி பிரசாத் எம் ஏ
நிர்வாக மேலாளர்: மணி தாமோதரன்
தயாரிப்பு மேலாளர்: வி.ஆர். ராம்பரத்

மேலும் விவரங்களுக்கு:
அருண் ரங்கராஜுலு
[email protected]


Critically Acclaimed Tamil-Telugu Bilingual Carmeni Selvam Makes Its Global Digital Premiere on Amazon Prime Video — June 3

Pathway Productions’ award-worthy family drama, starring P. Samuthirakani and Gautham Vasudev Menon, arrives on the world’s most-watched streaming platform


CHENNAI, June 1, 2026 — Pathway Productions today announced that Carmeni Selvam, the bilingual drama hailed as the most critically acclaimed film of the year, will stream globally on Amazon Prime Video beginning June 3, 2026.

Written and directed by Ram Chakri, the film follows Selvam — a devoted driver who secretly moonlights his boss’s car in a taxi service to outrun a mounting financial crisis. What starts as a quiet act of desperation unravels into a gripping moral reckoning: a relentless chase for money that forces Selvam to question whether financial freedom is worth sacrificing peace, time, and the people he loves most.
“Carmeni Selvam leaves audiences with a question that stays long after the credits roll: Is financial liberty worth it if it costs your peace of mind, your time, and your family?” said director Ram Chakri. “This film was always meant to reach every home — and now it will.”
Industry stalwarts P. Samuthirakani and Gautham Vasudev Menon deliver career-defining performances, anchored by a remarkable supporting cast including Lakshmi Priyaa Chandramouli and Abhinaya. Critics have singled out their on-screen chemistry as the film’s beating heart — raw, grounded, and deeply human.
The film’s realistic texture is the work of an exceptional technical team: cinematography by Yuvaraj Dakshan, editing by Jagan RV & Dinesh S, and music and sound design by Musicloud Studio and Technologies.
Carmeni Selvam streams globally on Amazon Prime Video from June 3. Experience the film that moved critics and audiences alike — this time, from home.
About Pathway Productions Pathway Productions is committed to telling authentic, human stories that resonate across language and culture.
Official Movie Website & Updates : For the latest bilingual content, we will upload exclusive behind-the-scenes assets, and official updates on https://movie.carmeniselvam.in/
Cast: P. Samuthirakani, Gautham Vasudev Menon, Lakshmi Priya, Abhinaya, Karthik Kumar, Badava Gopi, Kothandam, Karan Chakravarthi, Sankara Narayan V, Haritha Parakod.

Media Contact:
[Name] : Arun Rangarajulu
[Email] : [email protected]

Creative Producer : Shree Saravanan || Music as a Service (MAAS) : Musicloud Studio & Technology || DOP : Yuvaraj Dakshan || Edit : Jagan RV & Dinesh S || Production Designer : Shankar || Lyrics :Mani Amuthavan & Uma Devi || Audiography Raghav Ramesh || Sound Design Raghav Ramesh – Hari Prasad MA || Executive Manager Mani Dhamotharan || Production Manager VR Rambarath ||

கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து,AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM !

0

AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM !
சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும்.
சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை.
புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக. “சார்ர்ர்! என்ன சார் நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார்.
திரையை விலக்கி நான் காட்டிய photo frame-ஐ பார்த்து “இப்படி ஏதாவது வருமென எதிர்பார்த்தேன்”என்றார்.வாசித்துக் காட்டினேன் யோசித்து சிரித்தார்.
தனிமையில் 15 நிமிடங்கள் பேசினோம். அதில் முதல் 5 நிமிடங்கள் நான் மனம் விட்டு ஒரு emotional bonding- குடன் பேச,மெதுவாய் அவரும் ஆத்மார்த்த உணர்வுடன் உட்புகுந்தார். என் குழந்தைகள்,பார்த்திபன் மனித நேய மன்றம், அரசியல் இப்படி பல திசை பேச்சோடு ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறையாக பேச்சு தொடர்ந்தது.
இரண்டு கோரிக்கைகள் என் கைவசம் இருந்தது.
ஒன்று சற்றே தழும்பித் தாள்ளாடியது.அது tasmac பற்றியது எனவே!!!! tasmac-ஐ முழுமையாக ஒழிப்பதில் சாதிக்க முடியாமலே சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் ஏராளம். நாள் முழுக்க கண்களில் ரத்தம் சிந்தி உழைப்பவர்களுக்கு குடி ஒரு உடனடித் தீர்வு தானேத் தவிர, அது நிவாரணம் அல்ல. அவர்களுக்கான ஊதியமும் வாழ்க்கை தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதன் பின்பே அவர்கள் பணக்காரர்களைப் போல ஜாலிக்காக மிதமாகக் குடிக்க பழகுவார்கள். உலகம் முழுக்க தங்கள் குடியை கெடுக்காமலும் குடிக்கிறார்கள். நம்மூரில் தான் அதில் குளிக்கிறார்கள். குடும்பமும் tasmac-ம் நடுத்தெருவில் அல்லாடாமல் இருக்க எனக்கொரு யோசனை. பள்ளி-கோவில் அருகே இருக்கும் 717 கடைகளை அப்புறப்படுத்துவது என்பது பாராட்டுக்குரியது. ஆனால் என் யோசனை யாதெனில்… ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் இடுகாடோ, சுடுகாடோ,மின்தகனமோ உள்ள இடத்தில் அல்லது அதன் அருகாமையில் மட்டுமே tasmac கடைகளை குடித்தனம் வைத்தால், பாட்டிலின் மீது ‘statuary warning’ கொடுத்து விற்பதைப் போல், வியாபாரமும் கெடாது, குடித்தனங்களுக்கும் இடையூறு குறையும்,மொடா குடியர்களுக்கு சைக்கலாஜிக்கலாக ஒரு பயம் வரும். கடைசியாக வரும் இடத்திற்கு முன்கூட்டியே செல்கிறோமோ? என்ற அச்சம் ஏற்படும். தாய்மார்கள்,மனைவிமார்கள் கூட “போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்’ திருச்சி லோகநாதன் பாடலை அதே ஆபேரி/ மோகனம் ராகத்தில் அல்லது வாய்க்கு வாகான ராகத்தில் கிண்டலாய் பாடி மெகா குடிமகர்களை திருத்தப் பார்க்கலாம். இப்படி இன்னும் காமடியாய் நான் சொல்லச் சொல்ல சிரித்தார். யோசிப்பதாகச் சொன்னார்.அடுத்து என் மகள் கீர்த்தனாவின் விண்ணப்பம்.
தெருவில் அன்புக்காக அல்லாடும் ஜீவன்களுக்கு (பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக) ஒரு நிலையான நல்வழி செய்துத் தரவேண்டும் என்பது . அது தொடர்பான விவரமான விண்ணப்பம் இணைத்து அவரிடம் வழங்கப்பட்டது.
நான் ஒரு ‘சோத்துக் கட்சி’ ஆயுட்கால உறுப்பினன்.
வறுமை கோட்டை அழித்து, சாதி மத பேதமற்ற
சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதே இன்றைய தேவை . அதை தான் ஆட்சியாளர்களிடம் மக்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்ப்பது .
நேரத்திற்கு நன்றி தெரிவித்து நேரத்தோடு கிளம்பினேன் மகிழ்வாய்…!

- Advertisement -

Recent Posts