Wednesday, June 17, 2026
- Advertisement -
Home Blog Page 627

நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!

0

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, ஜீவி பிரகாஷ் இசையில், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!

ஜீவி பிரகாஷ் இசையில், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!

வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, ரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் #VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர். மேலும்,இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்த அறிவிப்பை, கலக்கலான நகைச்சுவையுடன், வேடிக்கை மிகுந்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மூலம் இந்த படம் பொழுதுபோக்கு மற்றும் சாகசமாக நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்திருக்கின்றனர். இந்த பிரமாண்ட வெற்றிக் கூட்டணி இணையும் இப்படத்தின் துவக்க விழாவில், மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டது பெரும் சிறப்பாக அமைந்தது.

படத்துவக்க விழாவில் முதல் காட்சிக்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் பாபி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார். கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார். ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் இந்த படத்தினை தயாரிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நட்சத்திர நடிகர்கள் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களைச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். நடா கிரீட்டி ராஜேந்திர பிரசாத் மற்றும் வெண்ணெலா கிஷோர் ஆகியோர் இப்படத்தில் பங்குபெறவுள்ளனர்.

ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ராம் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். படத்தின் மற்ற விவரங்கள் ஒவ்வொன்றாகப் பின்னர் அறிவிக்கப்படும்.

நடிகர்கள்: நிதின், ராஷ்மிகா மந்தனா, ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: வெங்கி குடுமுலா
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர்
CEO: செர்ரி
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சாய் ஸ்ரீராம்
கலை இயக்குநர்: ராம் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: ஹரி தும்மலா
வரி தயாரிப்பாளர்: கிரண் பல்லாபள்ளி
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (AIM )

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs”

0

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!

இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது..

போதைப்பொருள் நம் சமுகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. மாணவர்களிடம் மிக எளிதாகப் பரவி விடுகிறது. போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு என்பது பொதுவாகவே மக்களிடமும் மாணவர்களிடமும் மிகக் குறைவாக இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டுமென்ற முன்னெடுப்பில், காவல்துறை பல பணிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த குறும்பட போட்டி சிறப்பாக நடந்தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவினில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. அவருக்கு என் சிறப்பு நன்றிகள். மாணவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான விழிப்புணர்வை அனைவரிடமும் எடுத்துச்செல்ல வேண்டும்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது…

நானும் சின்ன வயசில் போலீஸ் ஆக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளேன், ஆனால் எனக்கு வாழ்க்கை வேறு பாதையைத் தந்துவிட்டது ஆனால் என்னையும் காவல்துறை நண்பர்கள் நெருங்கிய வட்டத்தில் வைத்திருப்பது மிக மகிழ்ச்சி. டிரக்ஸ் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்ன போது ரம்யா மேடமுடன் இந்த மாதிரி குறும்படம் எடுக்கலாம் எனச் சொன்னேன். கமிஷனரும் ஆர்வமாகி நல்ல முறையில் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் இந்த குறும்பட போட்டிக்கு 300க்கும் மேலானவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினார்கள். போதைப்பொருள் விழிப்புணர்விற்காக பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட படங்களில் 3 படங்களைத் தேர்வு செய்துள்ளோம் அவர்களுக்குப் பரிசளிப்பது மகிழ்ச்சி.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக நடக்கும் குறும்பட போட்டி மற்றும் காமிக்ஸ் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை மிக அற்புதமாக நடத்தும் காவல்துறை நண்பர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோருக்கு நன்றி. முக்கியமாக இந்தப் படங்களைப் பார்த்துத் தேர்வு செய்த திரைப்பட இயக்குநர் நண்பர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. சத்யம் தியேட்டரில் நிறையத் திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன் ஆனால் சமீபத்தில் நான் எந்த ஒரு திரைத்துறை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, ஆனால் இது போதைப்பொருளுக்கெதிரான குறும்பட போட்டி என்பதால் உடனே ஒப்புக்கொண்டு வந்தேன். போதைப்பொருளுக்கெதிரான சிறந்த முயற்சி இதை முன்னெடுத்த காவல்துறைக்கு என் பாராட்டுக்கள். விக்னேஷ் சிவன் போன வருடம் உலகம் வியந்து பார்த்த செஸ் ஒலிம்பியாட்டை தொகுத்து இயக்கியவர் அவர் தான். நானும் ரௌடிதான் படமெடுத்தவர் இங்கு இந்த விழாவை ஒருங்கிணைக்கிறார் அவருக்குப் பாராட்டுக்கள். இப்போதெல்லாம் நிறையத் தவறான செய்திகள் வாட்ஸப் மூலம் மிக எளிதாகப் பரவி விடுகிறது. இங்கு இந்த மேடையில் மாணவர்களிடம் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை அறிந்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கான நல்ல செய்தியை இந்த குறும்படங்கள் சொல்கிறது. இதனை உருவாக்கிய அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகள். காவல்துறை இது போல் இன்னும் பல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி பேசியதாவது…
நல்லொழுக்கம் எப்போதும் இன்பத்தைத் தரும் தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும். காவல்துறை சார்பில் நடத்தப்படும் பல்வேறு போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகப் போதைப்பொருள் விழிப்புணர்வு ஆவணப்பட போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தற்கு நன்றி. போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு எப்போதும் ஊக்கமளித்து வரும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்நிகழ்ச்சி திறம்பட அமைய என்னுடன் இணைந்து பணியாற்றிய துணை ஆணையாளர் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு நன்றிகள். இக்குறும்பட போட்டியைச் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு நன்றி. திரைப்படம் மிகச் சக்தி வாய்ந்தது இனி வரும் காலங்களில் உங்கள் படைப்புகளில் போதைப்பொருளைப் பயன்படுத்தாதீர்கள். நமது மாண்புமிகு முதல்வரின் சொல்லுக்கிணங்க போதைப்பொருள் எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் யாருக்கும் வேண்டாம் என்ற உறுதிமொழியை ஏற்போம். அனைவருக்கும் நன்றி.

பரிசு பெற்றவர்கள் விவரம்:

முதல் பரிசு – எழவு – – இயக்குநர் – பிரகதீஸ்

2வது பரிசு – அன்பு – இயக்குநர் கிரிஷாங் பாலநாராயணன்

3வது பரிசு – அன்பின் போதை – இயக்குநர்
ஹேமந்த்

3வது பரிசு – போலீஸ் – இயக்குநர் மனோஜ் கண்ணன்

மனிதம் காத்து மகிழ்வோம்” நிகழ்வில் வீடு இன்றி வறுமையில் வாடிய எளிய மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரஜினிகாந்த் அன்பு இல்லம்

0

தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் Sholinghur N Ravi அவர்களின் ஏற்பாட்டில் தொண்டாற்றும் “மனிதம் காத்து மகிழ்வோம்” நிகழ்வில் வீடு இன்றி வறுமையில் வாடிய எளிய மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் பல்வேறு கிராமங்களில் பயனாளிகளுக்கு கான்கிரீட் தளம் அமைத்த வீடு வழங்கப்பட்டது…

தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆணைக்கினங்க எளிய முறையில் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என் இரவி அவர்கள் பயனாளிகளிடம் வழங்கினார்.

ரஜினிகாந்த்அன்புஇல்லம்

மனிதம்காத்துமகிழ்வோம்

SuperstarRajinikanth

On the occasion of Mega Power Star Ram Charan’s birthday,

0

On the occasion of Mega Power Star Ram Charan’s birthday, one of his films Orange was re-released in the theatre for all his fans. The funds earned from the re-release are being used towards Jana Sena Fund Drive.
Fans were seen thronging to see the global star’s early film all over again with same enthusiasm as 13 years ago.
The film was directed by Bommarillu Bhaskar and produced by Nagababu Konidela. The music was by Harris Jayraj. Genelia and Shazhan Padamsee were the actresses in the film.

பேசி கண்கலங்கி அழுதது அங்கிருந்த மக்களை நெகிழ வைத்தது

0

முதல்வர் புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பி மூர்த்தி ஆகியோருடன் தேவர் திரு வேடத்தில் ஜெ எம் பஷீர் அவர்கள் பார்வையிட்டார் பின் பத்திரிகையாளரிடம் பேசிய பஷீர் தேவரையும் முதல்வரையும் சிறைச்சாலை நினைவுகளில் ஒப்பிட்டு பேசி கண்கலங்கி அழுதது அங்கிருந்த மக்களை நெகிழ வைத்தது

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26ஆம் தேதி பாராட்டு விழா

0

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 47 வருடமாக கலைத்துறையில் தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26ஆம் தேதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்க முடியாத சூழ்நிலை என காரணம் காட்டி நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிக்கையை வெளியிட்டார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.இரவி அவர்கள். அவர் வெளியிட்ட அந்த அறிக்கையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடும், வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து தருதல், கணவனால் கைவிடப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட தேவையான ஊதுவத்தி தயாரிக்கும் இயந்திரம், இட்லி மாவு இயந்திரம், தையலியந்திரம் உள்ளிட்டவைகளும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் நடிகர் ரஜினகாந்த் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து ஒருமுறையாவது தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குமாறு மிகுந்த உருக்கத்துடன் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

TM சௌந்தரராஜனுக்கு AR Theatre Club இசை அஞ்சலி

0

சென்னை, இந்தியா – மெட்ராஸ் டெக்கின் ஒரு பிரிவான ஏஆர் தியேட்டர் கிளப், நிகழ்ச்சிக் கலைகளில் வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் கண்டு ஆதரிக்கிறது, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டிஎம் சௌந்தரராஜனுக்கு சனிக்கிழமை மாலை (25 மார்ச் 2023) இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

TMS 100 எனப்படும் இந்நிகழ்ச்சி சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது, இதில் அனந்தராமன் அவர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன, மதிப்பிற்குரிய சித்ரா லட்சுமணன் (நடிகர் & பத்திரிகையாளர்) தொகுத்து வழங்கினார் மற்றும் புகழ்பெற்ற பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.தியேட்டர் கிளப் நிறுவனர் அருணாச்சலம், இசைத்துறைக்கு டி.எம்.சௌந்தரராஜனின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது ஆத்மார்த்தமான குரல் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டது, இன்றும் பல பாடகர்களுக்கு உத்வேகமாகத் திகழ்கிறது.

அவர் மேலும் கூறுகையில், “அவரது பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது வாழ்க்கையையும் அவரது இசையையும் கொண்டாட இந்த நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் நோக்கம் இளம் மற்றும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதும், வளமான இசை பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்களை ஊக்குவிப்பதாகும்.”

டிஎம்எஸ் 100 பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, அவர்கள் டிஎம் சௌந்தரராஜனின் பிரபலமான வெற்றிப் பாடல்களுடன் சேர்ந்து பாடுவதைக் காண முடிந்தது. இந்த நிகழ்வு சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் கலந்துகொள்ளவும் மறைந்த பாடகருக்கு அஞ்சலி செலுத்தவும் அனுமதித்தனர்.

ஏஆர் தியேட்டர் கிளப் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், பட்டறைகள் மற்றும் திறமை வேட்டைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கலை நிகழ்ச்சிகளை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இந்த அமைப்பு இளம் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதையும், கலை நிகழ்ச்சிகளில் அவர்களின் ஆர்வத்தைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

TMS 100 மூலம், AR Theatre Club (https://artheatre.club) தமிழ்நாட்டின் செழுமையான இசை பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு தளத்தை வழங்குவதற்கும் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

A new movie titled “Racer” is underway which talks about the journey of a youth who nurses an ambitious dream of becoming a bike racer!

0

Directed by Sathish (Alias) Satz Rex, “Racer” stars Akil Santhosh as the protagonist who has acted alongside real bike racers!

Kartik Jayas has bankrolled this movie at a very big budget under the banner, Hustlers Entertainment & releasing through “Jenish” of
“Action Reaction films”

Santhosh Krishnamurthy (Redal Mediaworks) has co-produced the film.

The film’s story, screenplay, dialogue and lyrics have been handled by Sathish (A) Satz Rex who has also directed the film.

Prabhakar has handled the cinematography.

Barath’s music direction added a beautiful touch to the film

All The songs in the film were done by both Barath and Satz while Sudarshan Ashok and Shivam lent their amazing voices to bring them to life

The film’s editing, masterfully crafted by Ajith N

Kaniamudhan and AJ has assumed responsibility for art direction.

All the stunt sequence has choreographed by both cheenu and Satz Rex

Akil Santhosh who acted as Rohith in Tamil Movie Ponmagal Vandhal is the film’s protagonist.

Lavanya, who is playing the role of Mullai in Vijay TV serial Pandiyan Stores, is playing the female lead in this movie.
Also Aaru Bala, ‘”Draupathi” Subramanian and many others are acting in important roles.

The story revolves around the problems between a father and his son. Though he is born in a middle-class family, Akil Santhosh wants to become a bike racer. But his father is unable to buy him the expensive race bike, he asked for!
However, Akil who does not go back in his ambition, tries hard to buy a bike without his father’s knowledge and takes part in the race.
The film vividly illustrates the struggles he faces and whether he will be able to overcome them is the interesting rest.
A love story too runs in parallel to the main plot.

An exclusive bike race track was constructed in Pondicherry at a huge cost. Several scenes showcasing races were shot in Yercaud. Also, some important scenes were shot in Chennai.

Hero Akil surprised everyone by riding bike competing with real bike racers during the racing sequences.
The film’s screenplay is certain to initiate self-confidence in the minds of youngsters who are ambitious of achieving their dreams!
“Racer” is expected to hit the screens this April.

Cast

Akil Santhosh as Ashwin
Lavanya as Lavanya
Aaru Bala as Mechanic siva
Subramanian as Moorthy
Parvathy as Parvathy
Sarath as Akil’s friend
Nirmal as Nirmal
Aravind as Sam
Sathish as Sathish
Anees as Robin

Crew

Producer – Kartik Jayas “Hustlers Entertainment“
Co-Producer – Santhosh Krishnamurthy (Redal Mediaworks )
Distribution – Action Reaction Films (Jenish)
Director – Satz Rex
Cinematography – Prabhakar
Editing – Ajith NM
Music – Barath
Stunt – Satz Rex , Cheenu Rex
Art Director – Kani Amudhan
Co- Director – AJ
Associate Editor – Yogesh V
PRO – Velu

பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் “ரேசர்”

நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்க சதீஷ் (எ) Satz Rex இயக்கும் படம் “ரேசர்”

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் “ரேசர்”.

சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி ( ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

இப்படத்தை “ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்” வழியாக ஜெனீஷ் வெளியிடுகிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ் (எ) Satz Rex.

பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பரத் இசை அமைத்திருக்கிறார்.

கனியமுதன் அரங்கம் நிர்மாணித்திருக்கிறார்.

சண்டை காட்சிகளை சீனு அமைத்திருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆறுபாலா, ‘”திரௌபதி” சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும் தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் இளவட்ட காதல் கதையும் இழையோடுகிறது.

இப்படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
*லட்சியத்துடன் வாழும் ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னம்பிக்கை தரும் படமாக உருவாகியிருக்கும்
“ரேசர்” வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

Director Koratala Siva feels fortunate to collaborate again with Man of masses NTR Jr for NTR 30

0

Director Koratala Siva is all set to collaborate with NTR Jr for the second time after Janatha Garage with NTR 30 during the muhurat pooja in Hyderabad, promised his fans that NTR 30 will be his biggest and best film. The film will also stars Jhanvi Kapoor in the lead and the director mentioned how he is looking forward to working with her.

While further revealing details about the film the director said, “ I feel fortunate to work with my brother and one of the best actors of our generation for the second time. The film’s backdrop is centered around the far and forgotten coastal lands of India. The people, or rather the villains, in the film neither fear death nor god and there is no sense of humanity among them. The film is a very emotional story that emphasizes the role fear plays in having a moral and humane society. I promise everyone that #NTR30 is going to be my biggest and best film”

He further added how working on a film of this big scale is only possible if you have the backing of great team players, “To pull off a big film and a big idea, you need a great army. I am fortunate to have all these great men here. My brother Anirudh, the man of sound, gave life to the film. After narrating the film to him, he said that I wrote the film with a fiery passion. I felt great joy after hearing that. The legendary Sreekar Prasad Garu traveled with me and stood by me right from day one. Thank you Randy sir for traveling with me for one year on this project before the film even started. No one can do justice to my film apart from Sabu sir. Thank you, my friend, Yugandhar. A lot of VFX has been used in the film, hopefully, we will have a great journey.”

The muhurat puja saw industry new makers like S S Rajamouli, Bhushan Kumar, Prakash Raj, Mani Rathnam, Prashanth Neel, Naveen Yerneni, Shyam Prasad Reddy, Sudhakar in attendance at the event.

The film is produced by Hari Krishna K of NTR Arts and Sudhakar Mikkilineni of Yuvasudha Arts and will be releasing on 5th April 2024.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’

0

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பும், தோற்றமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே தமிழகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘தலைவர் 170’ என பிரம்மாண்ட பொருட் செலவில் திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts