Karthika Nair, the prominent actress, has been honored with the distinguished UAE Golden Visa. As the Executive Director of Uday Samudra Group, the young entrepreneur has played a remarkable role in developing her business operations for several years.
Hamad Almansoori, a dignitary from the UAE, handed over the Golden Visa to the actress at a function held at TwoFour54 head office in Dubai. Commenting on the occasion, Karthika expressed her gratitude for being warmly welcomed into the UAE as a young female entrepreneur. She is honored to receive this recognition, and appreciates the UAE government’s encouragement and openness to new talent and business ventures in their country.
Earlier, Radha, Karthika’s mother and star heroine of the 1980s, was honoured with the Golden Visa after duly considering her contributions to films. Radha is credited with giving starry performances in a number of films across languages, especially Telugu and Tamil. She also acted in Kannada, Malayalam, and Hindi.
Uday Samudra Group’s operations are firmly established in Kerala, encompassing a network of hotels and resorts, convention centers, and educational institutions. Karthika is confident that the latest recognition will enable her business to make significant contributions in the future.
Actor Karthi & Actress Trisha beautify the arrival of the First Single ‘Aga Naga’ from ‘Ponniyin Selvan 2’ with cute conversations!
The diehard fans of Mani Ratnam’s Ponniyin Selvan in cyberspace were endowed with a graceful scenario of a beautiful exchange of conversations between actor Karthi and actress Trisha as the characters of Vanthiyathevan and Kundavai.
The conversations between the lead actors on their micro-blogging pages instantly stole the spotlight, keeping everyone curious and excited about the launch of the first single ‘Aga Naga’, from Ponniyin Selvan 2, which will be out at 6 PM this evening. The melodious song is composed by AR Rahman, crooned by Shakthisree Gopalan, and written by Ilango Krishnan.
The transcript of their conversations is as follows:
Karthi – இளையபிராட்டி… hi
Karthi – என்ன பதிலே இல்லை
Trisha – என்ன வாணர்குல இளவரசே?
Karthi – தங்கள் தரிசனம் கிடைக்குமா ?
Trisha – ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்
Karthi – கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?
Trisha – வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?
Karthi – ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….
Trisha – வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்
” நான் ரொம்ப நாளாக நல்ல பிரேக்கிற்காகக் காத்திருந்தேன். இது மாதிரி ஒரு நல்ல படம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் வந்தது. ஜெயலலிதா அவர்கள் இறந்த காலகட்டத்தில் அந்தப் படம் வெளியானதால் நான் எதிர்பார்த்த மாதிரி அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. எனக்குள் நெடுநாளாகவே ஒரு ஆசை இருந்தது. சரியான போலீஸ் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு இருந்தது.ஏனென்றால் எனது தந்தை ,தாய் இரண்டுபேருமே காவல்துறையில் பணியாற்றினார்கள்.
நான் நடித்தால் எனது உடல் தோற்றம் சரியாக இருக்குமா? ஃபிட்டாக ஆகுமா ?யூனிஃபார்ம் போட்டால் பொருத்தமாக இருக்க வேண்டுமே யாரும் பார்த்துச் சிரித்து விடக்கூடாதே என்ற அச்சமும் தயக்கமும் இருந்தது. அந்த நேரத்தில் தான் பாலாஜி வந்தார் , கதை சொன்னார். முதலில் வில்லனாக நடிப்பதற்காகத்தான் என்னிடம் கேட்டார். என் நல்ல நேரம் நான் இதில் கதாநாயகனாக மாறி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குற்றாலம், தேனி என்று ஒரு நாளில் நடக்கும் கதை.போலீஸ் கதை என்றாலே மாஸ்ஸாக காட்டி
பெரிய ஹீரோக்கள் நடிப்பார்கள். புதிதாக வருபவர்கள் அப்படி நடிப்பதில்லை. அது ஒரு ரிஸ்க்கான விஷயம். ஆனால்
இயக்குநர் பாலாஜி தன் மனதில் என்ன நினைத்தாரோ அதையே படமாக எடுத்துள்ளார். அருமையாக திரைக்கதை அமைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவில் யாரும் இது மாதிரி முயற்சி செய்யவில்லை .பெரிய மாஸ் ஹீரோ படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது .புது படக் குழுவினரின் நல்ல புதிய படைப்புகளுக்கு ஊடகங்கள் என்றும் ஆதரவு தரும்.ஊடகங்களான உங்களை மீறி எதுவும் இல்லை. இருபது ஆண்டு காலத்தில் நான் உணர்ந்த பாடம் இது .நல்ல படத்தை ஊடகங்கள் என்றும் கைவிட்டதில்லை. இந்தப் படம் எனக்குப் பிடித்த படம்.நீங்கள் எழுதும் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் படத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.இயக்குநருக்கும் இதைத் தயாரித்த பீமாஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்” என்றார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஊடகப் பிரபலம் முக்தார் அகமத் பேசும்போது,
“டி3 திரைப்படம் படத்தின் மூலம் ஒரு வார்த்தை என்பது ஒரு வழக்கிற்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறியுள்ளார்கள்.ஒரு வார்த்தையை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாகியிருக்கிறது என்பதை உணர முடிந்தது.ஒரு வார்த்தை என்பது டி3 படத்திற்கு மட்டுமல்ல ஊடக உலகத்திற்கும் பொருந்தும்.நேர்காணல் செய்யும்போது அந்த ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து நாங்கள் விவாதிப்போம். ஒரு பாதர் 120 வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்றார். அவர் கூறிய ஒரு வார்த்தை யோசிக்க வைத்தது.ஒரு தனி மனிதர் எப்படி இதைச் செய்ய முடியும்? முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது ஆனால் அவர் அரசு வழங்கும் மானியத்தில் இருந்து பெற்றுக் கட்டிக் கொடுத்ததாக பிறகு தெரிந்தது.
ஓர் அரசியல் கட்சித்தலைவர் சாதி பார்க்க மாட்டேன், சாதி ரீதியாக வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன் என்றார். நாங்கள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தோம் .ஆனால் ஈரோடு தொகுதியில் உண்மையை அறிந்தபோது வருத்தமாக இருந்தது.
எப்போதும் தமிழர்கள் பிரச்சினையை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பவர்கள்.தமிழ்நாட்டில் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஜாதி இன பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்த நினைக்கிறார்கள்.
ஆனால் தமிழர்கள் தெளிவானவர்கள். அந்த வேலை இங்கு நடக்காது.
தமிழர்களை இனரீதியாக, மொழி ரீதியாகப் பிளவு படுத்திட நினைத்தால் அவர்களுக்குத் தமிழக மக்கள்பாடம் புகட்டுவார்கள்.
என்னையே தெலுங்குக்காரன் என்கிறார்கள். நான் ஆரணியில் பிறந்தவன்.எனக்குத் தெலுங்கு எல்லாம் தெரியாது. என் குடும்பத்தினர் பாய் வேலை செய்பவர்கள்.
ஒரு வார்த்தையை மையமாக வைத்து இந்தப் படம் சிறப்பாக உருவாகியிருக்கிறது. படத்திற்கு வாழ்த்துக்கள். ஒரு வார்த்தை என்பது தேடல் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் படமாக இந்த டி3 இருக்கிறது .வாழ்த்துக்கள்” என்றார்.
படத்தில் இயக்குநர் பாலாஜி பேசும்போது ,
“இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு .முதலில் வேறொரு கதாநாயகனை வைத்து ஒரு திரைப்படம் ஆரம்பித்தேன் அதைத் தொடர முடியவில்லை. பிறகு D3 என்ற இந்தப் படத்தை ஆரம்பித்தேன். இது ஒரு சீக்வல் கதை. D3க்கு பிறகு D2, D1 படங்கள் தயாராகும்.
இந்தப் படத்திற்கு பிரஜினை நடிக்க வைத்த போது உடன் அறிமுகமான நண்பர், பிரஜின் வேண்டாம் என்றார். இந்தக் கதையைச் சொல்லும் போது பலரும் கதையை நம்ப மாட்டார்கள் .தயாரிப்பை நம்ப மாட்டார்கள்.நமக்கான நடிகர் வருவார் என்று நான் காத்திருந்து தேடினேன். அப்படி வந்தவர் தான் பிரஜின். இதில் ஒரு காட்சி வரும். அதில் நடிப்பதற்கு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரஜின் ஒப்புக்கொண்டார்.
இது கோவிட் காலத்தில் சிக்கிக் கொண்டது .அந்த இடைவெளியில் பிரஜின் தனது உடலை ஃபிட்டாக மாற்றினார். பிறகு வேறு ஒரு தோற்றத்திற்காகவும் உடலை மாற்றிக்கொண்டார். இந்தப் படத்தில் பல்வேறு போராட்டங்கள் இருந்தன. இன்று படம் எடுப்பதை விட பிறகு உள்ள பிரச்சினைகள் அதிகம். தமிழ் சினிமாவில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று புரிவதற்குள் நீண்ட காலமாகிவிடும்.நமக்கு அறிமுகமாகி வருபவர்கள், நண்பர்களிடம்
அசல் யார் போலியார் என்று அறிந்து கொள்வதே பெரிய சவால்.
முன்பு என்னை வைத்து படம் தொடங்கிய தயாரிப்பாளர் முருகேசன், இங்கே வந்துள்ளார். நிச்சயமாக அந்தப் படமும் வெளியாகும். எனக்கு எப்போதும் சில நண்பர்கள் உடன் இருக்கிறார்கள் .
பீமாஸ் கிரிக்கெட் டீம் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணம் செய்தார்கள். ரஜீஷ். அருள்ஜோதி, நா. சரவணன் போன்றவர்கள் எப்போதும் எனக்கு நேர் நிலையான நம்பிக்கை அளித்தார்கள்.
முதலில் மூன்றரை மணி நேரமாக இருந்த இந்தப் படத்தை ராஜா முகமது ஒரே வாரத்தில் முதல் பாதியை எடிட் செய்து காட்டிய போது வேறு மாதிரியாக மாறியது. பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கடும் உழைப்பாளி. லோ பட்ஜெட்டில் உள்ள விஷயத்தை தனது திறமையின் மூலம் ஹை பட்ஜெட் ஆக மாற்றிக் காட்டுவார்.இந்தப் படம் நிச்சயமாக சுவாரசியமாக இருக்கும்.
வேகம் குறையாமல் விறுவிறுப்பாக இருக்கும்”என்றார்.
நடிகர் ‘ராட்சசன்’ புகழ் சரவணன் பேசும்போது
“நான் இந்தப் படத்தில் ஒரு நாள் தான் நடித்திருப்பேன். ஆனாலும் திருப்தியான அளவில் எனது நடிப்பு இருந்தது.
அவசரம் அவசரமாக என்னை அழைத்தார்கள். டீ எஸ்டேட்டில் இருட்டுக்குள் இரவு நேரத்தில் நான் நடித்த காட்சியை எடுத்தார்கள். இவ்வளவு அவசரப்படுகிறார்களே, இது சரியாக வருமா என்று எனக்கு அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் டப்பிங் பேசும் போது அதைப் பிரேமில் பார்த்தபோது நான் வருவது ஒரு காட்சியாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக இருந்தது.அது நான் எதிர்பாராத வகையில் இருந்தது .அந்த வகையில் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கம் ஆகிவிட்டது .இந்தப் படம் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்” என்றார்.
தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது ,
“டி3 ஒரு திருட்டு கதை அல்ல. ஒரிஜினலாக அசலாக சிந்தித்து உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களாக காசு சேர்த்து இந்தப் படத்தை முழுதாக எடுத்துள்ளார்கள். பல வலிகளையும் போராட்டங்களையும் வேதனைகளையும் கடந்து தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதில் நடித்திருக்கும் பிரஜினுடன் நான் ஒரு படத்தில் நடித்துள்ளேன். மிக நல்ல இளைஞர்.இந்தப் படத்தில் இயக்குநருக்கும் நடிகருக்கும் சிறிய கருத்து வேறுபாடு வந்தபோது அதை நான் தீர்த்து வைத்தேன்.இப்போது இருவரையும் ஒன்றாகப் பார்க்கும் போது அவர்களது நாகரீகமான பண்பை நான் பாராட்டுகிறேன்.
இருவரும் திறமை உள்ளவர்கள்.எதிர்காலத்தில் வளர்ந்து பெரிய ஆளாக வருவார்கள்.
என் உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் நான் இங்கு வந்திருக்கிறேன். காரணம் சிறு தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும். தயாரிப்பாளர் யாரும் கஷ்டப்படக்கூடாது போட்ட பணம் திரும்பிவர வேண்டும் என்பதற்காகத் தான். சின்ன தயாரிப்பாளர் ஒரு படம் எடுத்து வெற்றி பெற்றால் கார் ,பங்களா என்று வாங்க மாட்டான். மேலும் படம்தான் எடுப்பான். அதன் மூலம் பல புதிய நடிகர்களும் புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் வருவார்கள். இப்படி 100 படங்கள் வரும் .அதை நம்பிப் பல குடும்பங்கள் பிழைக்கும். பிரதீப் ரங்கநாதன் என்கிற புதிய இளைஞன் ஜெயித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பகாசூரன் , மோகன் ஜி இயக்கிய படம். முதல் வாரம் சுமாராக இருந்து, இரண்டாவது வாரம் மெல்ல சூடு பிடித்து பிறகு ஓட ஆரம்பித்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது அறிந்து மகிழ்ச்சி.
சிறிய தயாரிப்பாளர்கள் வரவேண்டும் ,வளர வேண்டும் அதற்காகவே நான் அவர்களை ஆதரிக்கிறேன்.சில இயக்குநர்கள் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்து தயாரிப்பாளர்களை அழித்து விடுகிறார்கள் .ஆனால் இந்தப் படம் குறைந்த முதலீட்டில் தயாரிப்பாளர்களை காப்பாற்றும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஊடகங்கள் நல்ல மாதிரியாக எழுதி நாலு வாரங்கள் ஓட்டினால் போதும்.தயாரிப்பாளர் தப்பித்து விடுவார்.இந்தப் படம் நன்றாக ஓடி வெற்றி விழாவில் சந்திப்போம்”என்று பேசினார்.
படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மோகன் ஜி கூறும்போது,
“என்னுடைய முதல் படத்தின் கதாநாயகன் பிரஜின் திரை உலகில் தனக்கான ஒரு அடையாளத்தையும் நல்ல வெற்றியையும் தேடிக்கொள்ள வேண்டும் என்று சுமார் 14 ஆண்டு காலம் போராடும் ஒரு போராளி .நல்லதொரு ஆத்மா. D3 படம் பார்த்தேன்.நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது .யாரும் சொல்லாத விஷயத்தை இந்தப் படத்தில் சொல்லியுள்ளார்கள்.இந்த படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .இப்படிக் கூட மருத்துவத்துறையில் நடக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் தயவு செய்து இந்தப் படத்தை ஒருமுறை திரையரங்கு சென்று பாருங்கள். வேறு எந்தப் படத்திற்குச் சென்றாலும் இதையும் அந்தப் படத்துடன் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் .படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இயக்குநர் நடிகர் சசிகுமார் கூறும் போது,
” தம்பி பிரஜின் நடித்த D3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் .இந்தப் படத்தில் நடித்த தம்பி பிரஜினுக்கும் படத்தை இயக்கிய இயக்குநருக்கும் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மறவாமல் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வாறு இந்தப் படத்தைப் பார்த்த திரை பிரபலங்களுக்குப் படம் பிடித்துப் போய் வாழ்த்தி,கருத்தைக் கூறி வருகிறார்கள்.
இந்தப் படத்தைப் பார்த்த ஊடகத்துறையினர்
இயக்குநருக்கும் நடிகர் பிரஜினுக்கும் ஒரு புதியவாழ்க்கை தரும் விதத்தில் இந்தப் படம் அமைந்திருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்கள்.
Mega Power Star Ram Charan, upon his return to India today, was greeted by cheering fans at the Delhi Airport. He was accompanied by his wife, Upasana Konidela.
Speaking to the media, the pan-India action hero attributed the success of ‘Naatu Naatu’ to people’s love. “‘Naatu Naatu’ is not just our song. It’s fans’ song. It’s a people’s song. People from different cultures and nations owned it. I strongly believe that it’s them who took the song to the Oscars. I thank the people as well as Keeravani garu, Chandrabose garu and Rajamouli garu. It’s their song,” Ram Charan said.
The song recently won the Oscar award, scripting history for itself and Indian cinema. Ram Charan will be speaking at the India Today Conclave. ‘India Moment’ is the theme of the Conclave.
He will be returning to Hyderabad after the conclave.
The successful KRG Group of Companies (Dubai) ventures into the entertainment industry with its maiden venture ‘Raavana Kottam’ starring Shanthnu Bhagyaraj and Anandhi in the lead roles. Producer Mr.Kannan Ravi says, while Tamil cinema has witnessed the audio launch of only big star films staged amidst the grand fanfare in Dubai, my maiden production Raavana Kottam with Shanthnu Bhagyaraj will have its audio launch held at Sheikh Rashid Auditorium, The Indian High School, Oudh Metha, Dubai on 18th March at 6 pm.
The Successful KRG Group of Companies (Dubai) is leaving no stone unturned to make sure that this audio launch event happens to be a grand event.
Shanthnu Bhagyaraj is a talented young actor who has just not got the right opportunity till now to prove what he is capable of !
He is someone who is thirsty for challenges !
Raavana Kottam will be one career turning film for him.
The film’s first single Athana Per Mathiyila crooned by Yazin Nizar, and Vandana Srinivasan and written by Karthik Netha, which was recently released has gained a colossal response from music lovers for its mellifluous tune and beautiful rendition of songs. The song has crossed a million ‘organic’views in less than 48hrs of its release.
Shanthnu Bhagyaraj, Prabhu, Anandhi and Ilavarasu are playing the titular characters in this film, which is directed by Vikram Sugumaran, and produced by Mr. Kannan Ravi of Kannan Ravi Group.
Technical Crew
Music: Justin Prabhakaran Dop: Vetrivel Mahendran Edit: Lawrence Kishore Art Director: Narmadha Veni, Raju Lyrics: Ekadasi, Karthik Netha Stunt: Rock Prabhu Choreography: Bobby Antony Stills: Pavai G.D. Ramesh Publicity Design: Yuvaraj Ganesan
கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடக்க இருக்கிறது
வெற்றிகரமான KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்), ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ மூலம் பொழுதுபோக்கு துறையில் இறங்குகிறது. தயாரிப்பாளர் திரு.கண்ணன் ரவி கூறும்போது, துபாயில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் பெரிய ஸ்டார்களின், பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. இப்போது, எனது முதல் தயாரிப்பான ‘இராவண கோட்டம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தி இந்தியன் ஹை ஸ்கூல், ஓத் மேத்தா, ஷேக் ரஷித் ஆடிட்டோரியத்தில் மார்ச் 18 மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
வெற்றிகரமான KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்) இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான நிகழ்வாக நடைபெறுவதை உறுதிசெய்ய எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துள்ளது.
திறமை மிகுந்த இளம் நடிகரான ஷாந்தனு பாக்யராஜ் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் தனது சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். சவால் மிகுந்த வாய்ப்புகளை விரும்பக்கூடிய அவருக்கு ‘இராவண கோட்டம்’ திரைப்படம் நிச்சயம் நல்ல வாய்ப்பாக அமையும்.
கார்த்திக் நேதா எழுதிய யாசின் நிசார் மற்றும் வந்தனா சீனிவாசன் பாடியுள்ள படத்தின் முதல் சிங்கிளான ‘அத்தன பேர் மத்தியில’ அதன் மெல்லிசை ட்யூன் மற்றும் அழகான வரிகளுக்காக இசை ஆர்வலர்களிடமிருந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் ‘ஆர்கானிக்’ பார்வைகளைக் கடந்துள்ளது.
ஷாந்தனு பாக்யராஜ், பிரபு, ஆனந்தி, இளவரசு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி இருக்க, கண்ணன் ரவி குழுமத்தின் திரு.கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
தொழில்நுட்ப குழு
இசை: ஜஸ்டின் பிரபாகரன்,
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்,
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்,
கலை இயக்குநர்: நர்மதா வேணி, ராஜு,
பாடல் வரிகள்: ஏகாதசி, கார்த்திக் நேதா,
ஸ்டண்ட்: ராக் பிரபு,
நடனம்: பாபி ஆண்டனி
ஸ்டில்ஸ்: பாவை ஜி.டி.ரமேஷ்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்
~ JioCinema releases the TVC in 11 languages reiterating their commitment to take the league far and wide across the nation ~
~ TATA IPL’s digital partners encourage viewers to enjoy their favourite sport with fan-centric features on digital for free ~
Mumbai, 17th March 2023: JioCinema kicked off its TATA IPL campaign starring India legend MS Dhoni and World No. 1 T20 batsman Suryakumar Yadav. Titled Digital India Ka Digital TATA IPL, the pan-India campaign also features popular actors Shweta Tripathi and Abhishek Banerjee and is aimed to trigger excitement about watching TATA IPL on digital for free with a slew of fan-friendly features.
The TVC, released in 11 languages, is a satire on the redundancy of appointment viewing. Directed by top ad filmmaker Amit Sharma, the campaign’s lead promotional film is set in a small-town sweetmeats shop where a group of friends bunch up to watch the TATA IPL, albeit digitally, and that’s where the core message of the campaign kicks in. It features Dhoni and Yadav caught in the thick of their respective matches, being abruptly and humorously interrupted only to find out that live match action is, in fact, being controlled by this group of friends.
More bystanders come and join this group of friends as they sample this exciting new way of experiencing the TATA IPL. The cricket stars break the fourth wall and plead with the fans not to tinker with the screen too much, be it with the camera angles or replaying key moments, and instead allow them to carry on playing. The underlying thought is ingeniously put forward through this exchange, by demonstrating how watching the TATA IPL on JioCinema offers fans an unprecedented degree of autonomy during live action, something that TV cannot offer.
“Consumers are embracing interactivity across lifestyle digital services. Screen gestures like scrolling, swiping, pinching, zooming and scrubbing have become muscle memory. So why should the TATA IPL still be watched the old-fashioned, passive way? Our campaign attempts to reboot consumers’ expectations about how they will experience the TATA IPL this season. Through a suite of immersive fan-centric digital offerings, JioCinema will hand over the power to fans and viewers, giving them unprecedented control over how, when, and where they watch their favourite teams and players,” said Viacom18’s Creative Head of Marketing, Shagun Seda.
“JioCinema is going to change the way we watch TATA IPL forever. Our campaign speaks to India’s youth who demand and get the maximum out of their digital entertainment. JioCinema is the best app to offer them the TATA IPL experience like never before,” said Sukesh Nayak, Chief Creative Officer, Ogilvy India.
The campaign Digital India Ka Digital TATA IPL will also feature a slew of other TVCs that will hero a series of features – be it free-streaming, first-time ever 4K streaming, commentary in 12 languages, multi-cam mode, 360 VR, multiple feeds that will elevate the average fan’s viewing experience. Conceptualized by Ogilvy and produced by Chrome Pictures, Digital India Ka Digital TATA IPL is a 360-degree campaign spanning print, digital, and OOH avenues, among others.
Campaign Credits
Agency Team
Piyush Pandey (Executive Chairman & Creative Director, South Asia), Sukesh Nayak (Chief Creative Officer, Ogilvy India), Hirol Gandhi (President & Head of office, Mumbai & Kolkata), Hemant Sharma (Group Creative Director, Copy). Sagar Jadhav (Group Creative Director, Art), Ajey Shetty (Vice President, Account Management), Keyur Deo (Group Account Manager)
Production House
Chrome Pictures
Director
Amit Sharma & Aman Rai
Producer
Abhishek Notani
The 2023 season of TATA IPL commences on 31st March, with defending champions Gujarat Titans taking on Dhoni-led Chennai Super Kings at the Narendra Modi Stadium in Ahmedabad. All matches will be live on JioCinema for no cost this season. JioCinema is available to Airtel, Vi, Jio and BSNL subscribers.
Viewers can continue to watch their preferred sports by downloading JioCinema (iOS & Android). For the latest updates, news, scores, and videos, fans can follow Sports18 on Facebook, Instagram, Twitter and YouTube and JioCinema on Facebook, Instagram, Twitter and YouTube.
“டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல்” என்ற தலைப்பில் ஜியோசினிமாவின் டாடா ஐபிஎல் பிரச்சாரத்தின் புது அனுபவத்திற்காக எம் எஸ் தோனி, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தனர்.
மும்பை 17 மார்ச் 2023: ஜியோசினிமா தனது டாடா ஐபில் (TATA IPL) விளையாட்டு பிரச்சாரத்தை இந்திய ஜாம்பவான் MS தோனி மற்றும் உலகின் நம்பர் 1 T20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் துவக்கி வைத்தனர். “டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபில்” (Digital India Ka Digital TATA IPl) என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு, பிரபல நடிகர்களான ஸ்வேதா திரிபாதி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களுடன் டாடா ஐபில் (TATA IPL) – ஐ டிஜிட்டலில் இலவசமாக பார்ப்பது தான் இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
11 மொழிகளில் வெளியான இந்த டாடா ஐபில் விளம்பர பிரச்சாரத்தை, சிறந்த விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளரான அமித் ஷர்மா இயக்கியிருக்கிறார். ஒரு சிறிய நகர இனிப்புக் கடையில் நான்கு நண்பர்கள் குழு ஒன்று கூடி டாடா ஐபில் ஆட்டத்தை டிஜிட்டலில் காணுகின்றனர். அவர்கள் அந்த கடையின் உரிமையாளரையும் வற்புறுத்தி டாடா ஐபில் (TATA IPL)- ஐப் பார்க்க வைக்கின்றனர். தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்தந்த போட்டிகளில் விளையாடி இருப்பதை, காணும் போது திடீரென்று ஒரு நகைச்சுவை நிகழ்வு அனைவரையும் சிரிக்க வைக்கிறது. அவர்கள் திரும்ப திரும்ப அந்த நகைச்சுவையை பல்வேறு வடிவங்களில் பார்த்து ரசிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே ரசிகர்களிடம் கெஞ்சுவது போன்ற நிகழ்வு மிகவும் ஈர்க்கப்படுகிறது.
இந்த டாடா ஐபில் (TATA IPL) ஐ பார்வையாளர்கள் அற்புதமாக அனுபவிக்க அந்த நான்கு நண்பர்கள் குழுவில் அங்கு உள்ள மக்கள் அனைவரும் வந்து சேர்கிறார்கள். ஜியோசினிமாவில் டாடா ஐபில் (TATA IPL)ஐ நேரலை பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கேமரா கோணங்களையோ அல்லது முக்கிய தருணங்களை ரீப்ளே செய்து கண்டு மகிழலாம். இந்த பரிமாற்றத்தின் மூலம் ஜியோசினிமா மிகவும் முன்னோடியாக தொலைக்காட்சியால் வழங்க முடியாத இந்த அம்சத்தை டாடா ஐபில் டிஜிட்டலில் வழங்குவது இந்த பிரச்சாரத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.
நுகர்வோர் வாழ்க்கை முறை தற்பொழுது அதிகம் டிஜிட்டல் சேவைகளை நம்பி வாழ்கின்றனர். ஸ்க்ரோலிங் (Scrolling), ஸ்வைப் செய்தல் (Swip),பெரிதாக்குதல் (Zooming) மற்றும் ஸ்க்ரப்பிங் (Scrubbing) செய்தல் போன்ற பல ஸ்கீரின் வகை அம்சங்கள் இந்த டாடா ஐபில் (TATA IPL)- ல் கண்டு மகிழலாம். இந்த சீசனில் TATA IPLஐ எப்படி மக்கள் காண ஏதுவாக நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய எங்கள் பிரச்சாரம் முயற்சிக்கிறது. ரசிகர்களை மையமாகக் கொண்ட இந்த டிஜிட்டல் சலுகைகளின் தொகுப்பின் மூலம், ஜியோ சினிமா (JioCinema) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் வீரர்களை எப்படி, எப்போது, எங்கு வேண்டுமானாலும் காண்பதற்கு தடையில்லா முன்னோடியில்லாத கட்டுப்பாட்டை வழங்கும்,” என்று வயகாம் 18இன் கிரியேட்டிவ் ஹெட் ஆஃப் மார்க்கெட்டிங் (Creative Head of Marketing), ஷகுன் சேடா கூறினார்.
“டாடா ஐபில்-லை நாம் பார்க்கும் முறையை ஜியோசினிமா மாற்றப் போகிறது. எங்களின் இந்த பிரச்சாரம், டிஜிட்டல் பொழுதுபோக்கு தளத்தை அதிகபட்சமாகப் பெற குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்லும். ஜியோசினிமா (Jiocinema) அவர்களுக்கு டாடா ஐபில் (TATA IPL)அனுபவத்தை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பல சலுகைகள் வழங்குவதற்கான சிறந்த செயலியாக செயல்படுகிறது,” என்று ஓகில்வி இந்தியாவின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ( Chief Creative Officer) சுகேஷ் நாயக் கூறினார்.
டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல் பிரச்சாரம், மற்ற தொலைக்காட்சி அம்சங்களில் இல்லாத பெருமையை கொண்டுள்ளது – இது இலவச ஸ்ட்ரீமிங், முதல் முறையாக 4K ஸ்ட்ரீமிங், 12 மொழிகளில் வர்ணனை, மல்டி-கேம் பயன்முறை, 360 VR, சராசரி ரசிகரின் பார்வை அனுபவத்தை உயர்த்தும் பலவற்றை வழங்குகிறது. ஓகில்வி மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு குரோம் பிக்சர்ஸ் தயாரித்த டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் TATA IPL என்பது அச்சு (Print), டிஜிட்டல் (Digital) மற்றும் OOH (Out of Home) வழிகளில் 360 டிகிரி பரப்புரையாகும்.
Campaign Credits
ஏஜென்சி குழு பியூஷ் பாண்டே(Executive Chairman & Creative Director, South Asia), சுகேஷ் நாயக்(Chief Creative Officer, Ogilvy India),
ஹிரோல்காந்தி (President & Head of office, Mumbai & Kolkata), ஹேமந்த் சர்மா(Group Creative Director, Copy).சாகர் ஜாதவ்
(Group Creative Director, Art), அஜய் ஷெட்டி (Vice President, Account Management),
கேயூர் தியோ (Group Account Manager)
தயாரிப்பு இல்லம்
குரோம் பிக்சர்ஸ்
அபிராமி பாட்டிக்கு வரும் சந்தேகம்..! கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.
சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தொடரில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்த பிறகு, அபிராமியாக முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி அறிமுகமாக தொடரில் அனல் பறக்கிறது. தனது பாட்டியான அபிராமியிடம் அனிதா, தனக்கு சக்தி தான் எதிரி எனவும், அவளை பழிவாங்க வேண்டும் என்றும் அனிதா கூற, சக்தியை தான் பார்த்துக் கொள்வதாக அபிராமி பாட்டி கூறுகிறார். மேலும் ருத்ராவை பழிவாங்க தான் வந்திருப்பதாகவும், ருத்ராவை கொல்ல உதவி செய்தால் பணம் தருவதாக சக்தியை தன் வலையில் விழவைக்க முயற்சி செய்கிறார். ஆனால் பிறகு சக்தியின் நல்ல குணம் அபிராமி பாட்டிக்கு தெரிய வர, மறுபுறம் சக்தி, அனிதா பிறப்பிலும் அபிராமி பாட்டிக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அனிதாவை ரத்னம் வீட்டில் தங்க சொல்ல அனிதா ரத்னம் வீட்டுக்கு செல்வாளா? ருத்ராவின் மகள் யார்? என்பதை அபிராமி பாட்டி கண்டுபிடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்போடும் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
“என்றென்றும் இனியவை”
“என்றென்றும் இனியவை” காலம் கடந்தும் காற்றில் இனிமையை பரப்பிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பாடல் தொகுப்பு. புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை காலை 8:00 மணிக்கும் இரவு 9.00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
அன்றைய இசையமைப்பு,பாடல்கள்,தொழில்நுட்பம் ஆகியவற்றோடு இன்றைய புதிய தொழில்நுட்பம், இசையமைப்பு ஆகியவை பின்னி கலந்த கலவையான ஒரு இசைத் தொகுப்பு உங்களால் என்றும் மறக்க முடியாத பாடல் தொகுப்பு “என்றென்றும் இனியவை”. மேலும் திரை பிரபலங்களின் பிறந்த நாளில் சிறப்பு தொகுப்பாக அவர்களின் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகும் .
“மேக்ஸ் மெர்சல்” ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4 :00 மணிக்கு ஒளிபரப்பாகும் “மேக்ஸ் மெர்சல்” நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகும். நேயர்களின் மாலை நேரத்தினை உற்சாகப்படுத்தும் படியான சின்ன சின்ன கேம்களோடு அவர்களுக்கு பிடித்த துள்ளலான பாடல்களையும், நேயர்களோடு கலந்துரையாடி ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி தான் மேக்ஸ் மெர்சல் லைவ் ஷோ. இந்த நிகழ்ச்சியினை இளவேனில் , யோகேஷ் ,யாதவி, பூஜா மற்றும் அபிநிவேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.
“முதல் காட்சி”
புதிய தலைமுறையில் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியாக நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது “முதல்காட்சி” என்ற நிகழ்ச்சி.
மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதியும் சுவையான தகவல்களைத் தாங்கி வருகிறது. கருப்பு வெள்ளை காலத்திலிருந்து திரைப்படங்களின் கருத்தாக்கம் , பாடல், உடை, தொழில்நுட்பங்கள் என்று அதன் பரிமாணங்கள் முதல் நிகழ்கால திரைப்படங்களின் சிறப்புகள் வரை ஒட்டுமொத்த திரைப்படங்களின் தொகுப்பாக வடிமைக்கப்பட்டிருக்கிறது. திரையரங்கம் மற்றும் ஓ டி டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களும் அதன் விமர்சனங்களும் வாரந்தோறும் பார்வையாளர்களுக்கு முன்வைக்கப்படுகின்றன.
திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் நேர்காணல்கள், பாடல் வெளியீடு என்பதோடு அந்தந்த திரைப்படங்களைப் பற்றிய சுவையான தகவல்களையும் நிகழ்ச்சி தாங்கி விருகிறது. விமர்சனங்களைத் தாண்டி திரைக்கலைஞர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி வரும் முதல் காட்சி நிகழ்ச்சி புதிய தலைமுறையின் தொகுப்பாளர்களால் வழங்கப்படுகிறது. இந் நிகழ்ச்சி நாள்தோறும் மாலை 6:30 மணிக்கும் மறு ஒளிபரப்பு இரவு 10:30 மணிக்கும் புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது.