- Advertisement -
Home Blog Page 642

India’s most celebrated cricket captain and four-time IPL winning skipper to amplify network’s digital proposition

0

Mumbai, 8th March 2023: Viacom18 announced India’s most celebrated cricket captain and four-time IPL-winning skipper MS Dhoni as their Brand Ambassador. Dhoni will amplify the network’s vision for making live sports viewing synonymous with digital.

Dhoni, one of the most revered players in world cricket, will work with Viacom18 to make digital the preferred platform for fans to watch their favourite sport. The Chennai Super Kings icon will participate in several network initiatives featured on the JioCinema, Sports18 and his social media accounts. Fondly known as ‘Thala’, he will feature in JioCinema’s upcoming TATA IPL campaign.

“I truly believe that watching sports is best enjoyed when you can catch your favourite action on-the-go or from the comfort of your own home but with interactivity, choice and personalisation, something that only a digital platform can offer,” said MS Dhoni. “JioCinema is taking the proposition to a whole new level by engaging with fans in ways one could never think of. I can’t wait to be part of this paradigm shift and what is the future of sports viewing.”

“MS Dhoni’s leadership and game-changing abilities are well-documented, but his humble and grounded personality resonates with the digital natives, who value authenticity and transparency,” said Viacom18 – Sports CEO Anil Jayaraj. “Dhoni has set unparalleled benchmarks and evolved rapidly, which aligns with our vision and proposition on how sports viewing is best experienced on digital.”

“The peaks MS Dhoni continues to scale come through his innate ability to adapt and innovate, and that makes him a perfect fit for Viacom18’s ground-breaking digital-first offerings,” said MS Dhoni’s Manager (Midas Deals), Swaminathan Sankar. “Dhoni’s pan-India appeal will fortify the network’s ambition to reach out to every possible cricket fan and sports viewer.”

The 2023 season of TATA Indian Premier League tips off March 31 with defending champions Gujarat Titans taking on MS Dhoni-led Chennai Super Kings at the Narendra Modi Stadium in Ahmedabad. All matches will be live on JioCinema for no cost this season. In addition, JioCinema will offer 4K feed, multi-language and multi-cam presentation, interactivity through stats pack and Play Along feature for over 700mn+ internet users through the 2023 edition of TATA IPL.

JioCinema, which is available to Jio, Airtel, Vi, and BSNL subscribers, is live-streaming all the Women’s Premier League matches in five languages, including English, Hindi, Tamil, Telugu and Kannada.

Viewers can continue to watch their preferred sports by downloading JioCinema (iOS & Android). For the latest updates, news, scores, and videos, fans can follow Sports18 on Facebook, Instagram, Twitter and YouTube and JioCinema on Facebook, Instagram, Twitter and YouTube.

ஆராய்ச்சி பட ட்ரெய்லரை தேனாண்டாள் முரளி வெளியிட சத்யஜோதி தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.

0

பேப்பர் மீனா சினிமா நிறுவனம் சார்பில் முத்து பாரதி பிரியன தயாரித்துள்ள படம்தான் ” ஆராய்ச்சி”.

இதில் முத்து பாரதி பிரியன், அது கிருஷ்னா உட்பட பலரும் நடித்துள்ளனர். இளைய சமுதாயம் சீர்கெட்டுபோவதை இந்த சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறதே என்ற வேதனை வாட்டி எடுத்தது. நாடென்ன செய்தது நமக்கு ? என்று கேள்வி கேளாமல் நீ என்ன செய்தாய் அதற்கு ? என்று ஒற்றை பதிலின்- வடிவமாய் மாணவர்கள் சமுதாயத்திற்காக உருவாக்கி உள்ளோம் என்று கணிரென்ற குரலில் பதில் தந்தார். ஒருவர். அவர் வேறுயாருமல்ல இந்த படத்தின் கதை | திரைக்கதை | வசனம், பாடல்களை எழுதியுள்ளார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெடிமுத்து தான் அவர்.

ஆராய்ச்சி திரைப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமாநாராயணன் வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் பெற்றுக்கொண்டார். அருகில் படத்தயாரிப்பாளர் முத்து பாரதி பிரியன், வெடிமுத்து மேலும்
திரைப்படதயாரிப்பாளர்கள் எஸ். செனந்தரபாண்டியன், சாலை சகாதேவன், ஜோதி , என்.விஜயமுரளி, பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர்.

அயோத்தி திரை விமர்சனம்

0

தமிழ் திரையுலகம் சரியான திசையில் பயணிக்கிறது என்பதற்கு சான்றாக அயோத்தி போன்ற திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மிகச்சிறந்த கதையை எந்தவிதமான கமர்சியல் கலப்பும் இல்லாமல், அதே நேரம் அனைவரும் ரசிகும்படியான ஜனரஞ்சக கலவையாக ‘அயோத்தி’ படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு பாராட்டுக்கள். எந்தவிதமான ஹீரோயிசமும் இல்லாத இக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட சசிக்குமார் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தீர்த்த யாத்திரை வரும் யாஷ்பால் சர்மாவின் குடும்பம், விபத்தை சந்திக்க, விபத்தில் யாஷ்பால் மனைவி அஞ்சு அஸ்ரானி இறந்துவிட, மகள் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மகன் அத்வைதுடன் உதவி செய்ய ஆள் இல்லாமல், மொழி தெரியாத ஊரில் தனிமையில் நிற்கிறார் யாஸ்பால். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவ வரும் சசிக்குமார், புகழ் இருவரும் சந்திக்கும் பிரசினைகள், நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பே ‘அயோத்தி’

எந்த ஒரு இடத்தில் எல்லை மீறாத, சினிமாத்தனம் இல்லாத, அதே நேரம் தொய்வு இல்லாத படமாக வெளியாகி இருக்கும் அயோத்தி, நிச்சயம் தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல் படமாக இருக்கும். தன்னுடைய எளிமையான நடிப்பின் மூலம் பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார் சசிக்குமார். அம்மாவின் இறப்பை கண்முன்னே எதிர்கொள்ளமுடியாமலும், அப்பாவின் அடாவடித்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாமலும் அல்லாடும் பாத்திரத்தை மிக மிக சிறப்பாக செய்திருக்கிறார் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானி. நடமாடும் ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் யாஷ்பால். இப்படி பெரிய கதாபாத்திரங்களில் தொடங்கி, சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வரை மனதில் பதியும்படி இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் தன்மைகேற்ற மனதை வருடும், ரகுநந்தனின் பாடலும், பின்னணி இசையும், படத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கின்றன. அயோத்தி, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் கலாச்சாரத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது மாதேஷின் கேமிரா.
குறைகள் என்று எதுவும் சொல்லமுடியாத அயோத்தி போன்ற படங்களை கொண்டாட வேண்டியது ரசிகர்களின் கடமை. இது போன்ற படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிக்கைகளின் கடமை

அயோத்தி: படம் அல்ல பாடம்

இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும்

0

“மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !

Shiju Thameen’s  Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  
இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் ஷிஜு தமீன்ஸ் பேசியதாவது…
இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் “மெமரீஸ்”. இது எனது முதல் படம். எங்கள் படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு தேவை நன்றி.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசியதாவது…
இப்படம் எனது இரண்டாவது படம். க் எனது முதல் படம். இப்படம் சீட் எட்ஜ் திரில்லர். நாங்கள் எல்லோரும் புதியவர்கள், மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி

ஒளிப்பதிவாளர் கிரண் நுபிதால் பேசியதாவது…
தமிழில் எனக்கு இது முதல் படம் மிகச் சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் தான் நான் இணைந்தேன் என் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளதாக நம்புகிறேன் நன்றி.

எழுத்தாளர் விபின் கிருஷ்ணா பேசியதாவது…
இது எனது முதல் மேடை. இந்த மேடைக்காக எங்கள் டீம் பல நாள் காத்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு வந்த பல தடைகளைத் தாண்டி இப்படம் முடிய எங்கள் தயாரிப்பாளர் ஷிஜு தமீன் தான் காரணம். அவருக்கு நன்றி. வெற்றி தேர்ந்தெடுத்த எந்த கதையும் சோடை போகாது. இப்படத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு நன்றி. ஷ்யாம் பல கால நண்பர் பல வருடங்களாக இணைந்து வேலை பார்த்து வருகிறோம். அஜயன் பாலா சார் தமிழில் வசனங்களை அட்டகாசமாகச் செய்துள்ளார். மார்ச் 10 எல்லோரும் தியேட்டரில் இப்படத்தைப் பாருங்கள் நன்றி.

வசனகர்த்தா அஜயன் பாலா பேசியதாவது…
லாக்டவுன் முன்பாக இயக்குநர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள் அவர்கள் கதை சொன்ன போது நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைய இருந்தது. ப்ரவீன் ஷியாம் இருவரையும் கொஞ்சம் விட்டால் நம்மை குழப்பி விடுவார்கள். இது நான் லீனியரில் ஒரு மாறுபட்ட சைக்கோ திரில்லராக இருக்கும். வெற்றி திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். உங்களைப் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும்.

நாயகி பார்வதி அருண் பேசியதாவது…
இது தான் எனது முதல் தமிழ்ப்படம் ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சின்னது தான் ஆனால் உங்களுக்குப் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நடிகர் வெற்றி பேசியதாவது…
எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள்,  கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ப்ரவீன் பேசியதாவது…
மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்.

இயக்குநர் ஷியாம் பேசியதாவது…
நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன்.  இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி.

Concert for Friendship – A symphonic concert organised by the KM Music Conservatory in collaboration with British Council India

0

~ Concert for Friendship is a part of the ongoing India/UK Together, a Season of Culture, British Council’s landmark program to mark India’s 75th anniversary. Over 100 young musicians, between the ages of 8-20, brought together by The AR Rahman Foundation’s Sunshine Orchestra, Sistema Scotland’s Big Noise and KM Music Conservatory participated ~

Chennai, March 4th 2023: Concert for Friendship a mesmerising musical extravaganza was organised by the KM Music Conservatory in collaboration with British Council India to celebrate the ability of music in cultivating friendship in the presence of A R Rahman (Brand Ambassador India/UK Together, Founder/Principal KM Music Conservatory, Founding Director, the AR Rahman Foundation),Thiru Anbil Mahesh Poyyamozhi (Hon’ble Minister of School Education of Tamil Nadu), Janaka Pushpanathan (Director South India, British Council) and Dr Adam J. Greig (Artistic Director KM Music Conservatory) at Sir Mutha Venkatasubba Rao Concert Hall, Chennai.

The Concert featured popular works by Puccini, Verdi, Grieg, and Beethoven, there were also Scottish melodies, Naga and Tamil folk songs, and Carnatic melodies, all performed by the orchestra and choir. The concert also featured soprano Divya Iyer and the world premiere of Concierto Malabar, composed, and performed by guitarist Matt Bacon. The show was sold out and houseful, leaving excited visitors scrambling for tickets.

A R Rahman, Brand Ambassador India/UK Together, Founder/Principal KM Music Conservatory, Founding Director, the AR Rahman Foundation, said “As an artist, it is my absolute pleasure to support such an important cultural landmark, enabling creative excellence, shining the spotlight on diverse artists, and bringing diverse audiences together to appreciate the arts and culture”.

Speaking about the ‘Concert for Friendship’ Event, Dr Adam J. Greig, Artistic Director KM Music Conservatory, said “Bringing young people together to make music is a transformative experience, especially when this happens across country and culture boundaries. We are excited to be able to host our guests from Scotland and Nagaland here in Chennai and look forward to creating an exciting concert together, building new friendships and celebrating the India/UK Together season”.

Janaka Pushpanathan, Director South India, British Council added “The Concert for Friendship is the crescendo of the India/UK Together Season of Culture and celebrates the universal power of music across borders. With over 100 young musicians from Scotland, Nagaland and Chennai, the performance promises to be a treat and we are delighted to be able to have this show for audiences in Chennai. We are grateful for the support of AR Rahman, our brand ambassador for the Season of Culture, in helping create this symphony of art and entertainment. The concert will feature three symphonic performances brought together by our wonderful partners – AR Rahman Foundation’s Sunshine Orchestra, Sistema Scotland’s Big Noise and KM Music Conservatory. Music unites people and it is wonderful how these artists have come together to create beautiful music and appreciate and celebrate each other”

The aim of the collaboration is to explore musical ideas and provide an opportunity for the exchange of cultures.
AR Rahman Foundation’s Sunshine Orchestra, Sistema Scotland’s Big Noise, and KM Music Conservatory have been working remotely to listen to and learn each other’s music in advance of the India visit. The groups were working together in person a week before the actual performance. The concert that brings together young and emerging artists from India and the UK, not only aims to celebrate the rich musical traditions of both countries but also opens opportunities on global platforms for these talented students who mostly have limited access to resources. Bringing together students, especially at a young age, can be a life-changing experience that leaves an indelible mark on them and promotes deeper learning.

A wider outreach programme took place alongside the main concert during the week, involving young musicians and their teachers, holding workshops for schools in Chennai, in association with Rhapsody Music Education. In addition to the workshops, there was a special open-access performance presented before the main concert, allowing those who would otherwise not have access to experience the music and appreciate the skills of the young musicians. The initiative aimed to promote the positive benefits of music education and its transformative abilities to a wide audience and encourage more young people.

About India/UK Together, a Season of Culture
India/UK Together, a Season of Culture is a year-long celebration of the long-standing relationship between India and the UK. Marking India’s 75th anniversary, the Season of Culture will see a vast programme of creative collaboration, education and cultural exchange take place online, and in cities across both countries. Working with a number of partners and institutions in the field of Arts, Education and English, the British Council is developing a programme of cultural activity which will bring together people in both countries, raise awareness around key real-world issues, and strengthen and celebrate the UK and India’s educational and cultural ties.

About KM Music Conservatory
KM Music Conservatory was founded by AR Rahman in 2008. Primarily located in Chennai with a specialist branch in Mumbai, it offers courses in Hindustani and Western music and technology. The institution prepares students for the international industry as musicians, with many going on to graduate and postgraduate studies abroad. Alumni are noted in the Indian film industry as performers, composers and engineers, many working directly with AR Rahman in his studios.

About Sunshine Orchestra
The marquee project of the AR Rahman Foundation, the Sunshine Orchestra provides free musical training to socially and economically underserved children who show an aptitude for music. A symphony orchestra in the making, it has adopted over a hundred students who are trained both online and offline in orchestral instruments. Recently a wing of the orchestra was launched in Nagaland in association with TaFMA, which has now completed three years of running. The orchestra is a career pathway, with the senior players regularly engaged for recordings and concert performances.

About Big Noise
Big Noise is delivered by the charity Sistema Scotland, which was created to improve lives, strengthen communities and help children and young people to realise their potential. They use music and nurturing relationships through the Big Noise orchestra programmes to give children an invaluable range of life skills and experiences. Big Noise focuses on early years’ intervention and long-term delivery working with children at a very young age and throughout their entire school journey. The programme now works with over 3,500 children and young people across five cities in Scotland, United Kingdom. The young musicians taking part in the concert are from Big Noise Govanhill in Glasgow and Big Noise Raploch in Stirli’.

Actress Varalaxmi Sarathkumar celebrates her Birthday with Cancer affected Children at the Institute of Child Health,Egmore

0

Actress Varalaxmi Sarathkumar, who is illustrious for getting involved in several philanthropic and social activities, celebrated her birthday in a meaningful way by spending time with cancer-affected children at the Institute of Child Health, Egmore in Chennai, through a special program ‘Joy of Sharing’ organized by Save Shakti Foundation and Sankalp Beautiful World.

The event was addressed by actress Varalaxmi Sarathkumar and Dr. Vel Murugan H.O.D.

Actress Varalaxmi Sarathkumar said, “I feel happy to be spending this birthday meaningfully here with the saviours – Doctors, who have been doing a heart-touching job of saving many cancer patients. We all think about Cancer when some of our close and dear ones are affected by it. We need not strain a lot or contribute something huge, but just Rs.10 can make a big difference in the lives of affected ones. I am emotional and elated to see that these cyclists, completed 1746 Km from Chennai to Kolkata to raise awareness for Cancer Care. I am so touched by the Sankalp and doctors for their life-saving gesture of curing many patients. It’s great to see many patients have been successfully operated, on and are returning to their normal lives. I request press and media channels to spread this news about cancer awareness, which will make a big difference in many lives.”

As a part of this program, actress Varalaxmi distributed groceries to the Cancer affected families and felicitated the cyclists who completed 1746 Km from Chennai to Kolkata to raise awareness on cancer care.

The Cyclist Awardees include Shiva Ravi – 26 years, Jay Aswani – 18 years, and Cyclothon Coordinator -Maneet Kulkarni- 18 years

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்தநாளை ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடினார்

பல்வேறு தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார், சென்னை எழும்பூரில் உள்ள ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘ஜாய் ஆஃப் ஷேரிங்’ என்ற இந்த நிகழ்வை, சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார், டாக்டர் வேல் முருகன் ஆகியோர் பேசினர்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசுகையில், “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் ரூ.10 கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிள் பயணம் மேற்கொண்டு முடித்தவர்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். நெகிழ்ச்சியாக உள்ளது. பல நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களின் உயிர்காக்கும் பணியில் உள்ள சங்கல்ப் மற்றும் மருத்துவர்கள் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளனர். பல நோயாளிகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இந்தச் செய்தியை அதிகம் பகிரும்படி பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடிகை வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார் மற்றும் புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிளில் பயணித்து முடித்தவர்களைப் பாராட்டினார்.

சைக்கிளில் பயணித்தவர்களுக்கான விருது பெற்றவர்களில் சிவ ரவி – 26 வயது, ஜெய் அஸ்வானி – 18 வயது மற்றும் சைக்ளோதான் ஒருங்கிணைப்பாளர் – மனீத் குல்கர்னி – 18 வயது ஆகியோர் உள்ளனர்.

“அயோத்தி” மிக மிக அற்புதமான ஒரு படைப்பு….

0

இந்த படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்…

இதற்கு முக்கிய காரணம் அவரிடம் ஒரு தயாரிப்பாளர் கதை கேட்டு இருக்கின்றார் அந்த கதைக்கு சசிக்குமார் அவர்களை ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கின்றார்…

கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து இந்த படத்தில் சசிகுமார் அவர்கள் மிகக் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றார்…

இந்த மந்திரமூர்த்தி இயக்குனரை போல் இன்னும் பல மந்திரமூர்த்திகள் பல நல்ல கதைகளை வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்
ஆனால் ரவீந்திரன் சார் போல தயாரிப்பாளர்கள் தற்போது மிக குறைவாகவே உள்ளார்கள் அனைவரும் ஹீரோவை நம்பி மட்டுமே படம் எடுக்க விரும்புகிறார்கள்

ஆகையினால் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு காத்திருக்கும் புது முக இயக்குனர்கள் மிக கடுமையான காலகட்டத்தில் தற்போது உள்ளார்கள் …

இந்த “அயோத்தி” படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய அனைவரும் உதவ வேண்டும் இது போன்ற படங்கள் மூலம் ஹீரோ வசம் இருக்கும் சினிமாவை நல்ல கதையை படமாக்கும் இயக்குனர் வசமும் கொண்டுவர ஒரு தூண்டுதலாக அமையும்…

உடனே இந்த படத்தை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்…

இயக்குனர்கள் சங்கத்தின் மூலமும் இப்படத்தை திரையிட ஏற்பாடு செய்து வருகின்றோம் அப்பொழுது தவறாமல் அனைவரும் இந்த படத்தை வந்து பாருங்கள்…

இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்…

நன்றி…
அன்புடன்
இயக்குனர்,நடிகர், சாய்ரமணி

Honouring the women achievers is an important part of recognizing and celebrating their contributions to society

0

Honouring the women achievers is an important part of recognizing and celebrating their contributions to society and encouraging future generations of women to follow in their footsteps. By honouring these women, we, not only celebrate and recognize their accomplishments, but also learn from their successes and struggles.

It was my pleasure today, along with Dr Arthi Ganesh, Pro Chancellor – Vels University and Dr Preethaa Ganesh, Vice President – Vels Group of Institution, to meet some of such incredible women at the VELS University International Women’s day celebrations. Below women were conferred with this year’s “VELS Women Achiever Award” at the VELS Campus today.

Ms Priya Rajan- Mayor, Greater Chennai corporation, Tamilnadu

Ms Ramya Bharathi- IPS officer, Joint Commissioner, Chennai North Zone

Dr Saveetha rajesh- Director, Saveetha medical College and Pupil Saveetha Eco School

Ms Sudha kongara Prasad- Indian Film director and screen writer

Dr. Arathi Arun- Commonwealth powerlifting champion

It was even more merrier to support and recognise few new generation women entrepreneurs, the winners of the VELS’ VFund 3.0 startup pitch 2023 and award Rs 2Lakhs each of seed money for their innovative business ideas.

All the best to every participants and awardees who made it to this highly motivating day! Wishing all a happy International Women’s Day.

WomensDay #WomensDay2023 #VFund #Vfund2023

DrIshariKGanesh

பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன், இப்போது அது நிறைவேறியுள்ளது – தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா

0

“பருந்தாகுது ஊர்குருவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர்
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில்

தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா பேசியதாவது..,
இந்த படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கிசந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன், இப்போது அது நிறைவேறியுள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த படம் மார்ச் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

நாயகி காயத்ரி பேசியதாவது,
எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் தனபாலன் சாருக்கு நன்றி, மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அதை நான் நன்றாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். நடிகர் பிரசன்னா நல்ல ஒத்துழைப்பு தந்தார். கதாநாயகன் நிஷாந்த் உடன் எனக்குக் காட்சிகள் எதுவும் இல்லை ஆனாலும் அவர் செட்டிற்கு வந்து எங்களை ஊக்குவிப்பார். இந்தப் பயணம் எனக்கு மிகவும் முக்கியம். அனைவரும் இப்படத்தை ஆதரிக்க வேண்டும்’ என்றார்.

எடிட்டர் நெல்சன் ஆண்டனி பேசியதாவது,
எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி, எனக்கு இது முதல் படம். இயக்குநருக்கும் எனக்கும் எண்ணங்களில் நல்ல ஒற்றுமை இருந்தது. அதனால் எங்களது வேலை சுலபமாக இருந்தது’ என்றார்.

கலை இயக்குநர் விவேக் செல்வராஜ் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் அனைவரும் எனக்கு பெரும் ஆதரவு அளித்தனர். ஒவ்வொருவரிடமும் நான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது’ என்றார்.

பாடலாசிரியர் விதாகர் பேசியதாவது..,
சென்னைக்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது, என்னுடைய எழுத்தைத் தவிர வேறு எந்த உதவியும் எனக்கு இல்லை. பல இடங்களுக்கு வாய்ப்புக்காக சென்றிருக்கிறேன். எனக்கு இது முதல் படம். இயக்குநர் என்னிடம் அழகாக வேலை வாங்கியுள்ளார். பாடல் சிறப்பாக வந்துள்ளது என நம்புகிறேன்’ என்றார்.

இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி பேசியதாவது,
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்திற்கான மீட்டிங் இங்கு பிரசாத் லேபில்தான் நடைபெற்றது. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கிய என்னுடைய இயக்குநருக்கு நன்றி, இது எனக்கு முதல் படம், பாடலாசிரியர் விதாகரின் பாடல் வரிகள் அருமையாக இருந்தது’ என்றார்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் பேசியதாவது,
நான் இங்கு வந்ததற்கு முதல் காரணம் நண்பர் சுரேஷ், அவர் முதன்முதலில் என்னிடம் ஒரு கதையைச் சொல்லத்தான் வந்தார். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாகச் சொன்னார், சுரேஷ், சுந்தர் மற்றும் வெங்கி மூன்று பேரும் நல்ல நண்பர்கள். இணைந்து ஒரு நல்ல படைப்பை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் ஜெயிக்கும்’ என்றார்.

தயாரிப்பாளர் பஜார் திருநாவுக்கரசர் பேசியதாவது,
‘கதாநாயகன் நிஷாந்த்தின் முந்தைய படமான “பன்றிக்கு நன்றி சொல்லி” படத்தை நாங்கள்தான் வெளியிட்டோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. நாம் அனைவரும் ஊர் குருவி தான், அனைவரும் பருந்தாக தான் முயற்சி செய்கிறோம், படத்தின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பலரிடமும் நான் அதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் சிறப்பாக இருந்தது, தயாரிப்பாளருக்கு இந்த படம் பெரும் வெற்றிப் படமாக இருக்கும்’ என்றார்.

டாக்டர் பிரபு திலக் பேசியதாவது,
‘ராஜாவிற்கு ராஜபாதை என்பது தேவையில்லை என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப இந்த படம் உருவாகியுள்ளது, உழைப்பு, நேர்மை இருந்தால் ஊர்க்குருவி பருந்தாகும். அது போல இந்த படைப்பு உருவாகியுள்ளது. டாடா, அயலி போன்ற சிறிய படைப்புகள் வெற்றி பெறும்போது தயாரிப்பாளராக எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. பெரிய படம் சிறிய படம் என்று பார்க்காமல் சிறிய படங்களை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் பேசியதாவது,
‘இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது ஆங்கிலப் படத்தின் டிரெய்லரைப் போன்று உள்ளது. ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. பருந்தாகுது ஊர் குருவி படம் வெளியான பின்னர் நாம் அனைவரும் இவர்களை மேலே தான் பார்க்க முடியும். அனைவரும் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

இயக்குநர் விருமாண்டி பேசியதாவது,
‘ஒரு படத்திற்குத் தலைப்புதான் முக்கியம் அதைப் பார்த்துத் தான் தியேட்டருக்கு வருவார்கள். இந்த தலைப்பை கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தின் கதைக்களம் “பெட்டி கேஸ்” ஐ பற்றிப் பேசுவதாகத் தெரிகிறது, படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்’ என்றார்.

இயக்குநர் கணேஷ் பாபு பேசியதாவது,
‘மேடையில் இருப்பவர்களை நான் திரையில் ரசித்துப் பார்த்திருக்கிறேன். இப்போது அவர்களுடன் அமர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இது என்னுடைய படத்தின் ஆடியோ வெளியீடு போன்று உள்ளது. முதல் படம் அனைவருக்கும் முக்கியம். தனபால் அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். இயக்குநர் ராம் சாரின் பள்ளியிலிருந்து இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி’ என்றார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது…
‘நடிகர் பிரசன்னா மற்றும் நிஷாந்த் அவர்களுக்கு நன்றி, நாங்கள் ராம் சாரிடம் பணிபுரியும்போது தனபால் அண்ணனை டூட் என்றுதான் கூப்பிடுவேன், எனது தோழர் அவர், இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.

நடிகர் கோடாங்கி பேசியதாவது,
‘நான் பேச நினைத்ததெல்லாம் அனைவரும் பேசி விட்டனர். இயக்குநருக்கு நன்றி, ஏனென்றால் ஆறு நாள் எனக்குப் படப்பிடிப்பு என்று கூறி, ஆறு நாளும் என்னை வைத்துப் படத்தை எடுத்தார். சில இயக்குநர்கள் 10 நாள் எனச் சொல்லி ஒரு நாள் தான் எடுப்பார்கள். தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள் அனைத்து வேலைகளையும் மிகவும் ஈடுபாட்டோடு செய்தனர். இந்த பெரும் காட்டில் என்னையும் ஒரு சிறு அணிலாக இணைத்துக் கொண்டதற்கு நன்றி’ என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் EAV பேசியதாவது…
‘நானும் சுந்தரும் பேசிக்கொண்டிருக்கும் போது, விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தது தான் இந்தப்படம். எங்களுக்கு கிடைத்த டீம் தான் இந்தப்படம் சிறப்பாக வரக்காரணம். ஷீட்டிங் பெர்மிசன் எல்லாமே ஐயப்பன் தான் பார்த்துக்கொண்டான். பெயர் போடாத தயாரிப்பாளர் அவன். அருண் போஸ்ட் புரடக்சனுக்காக வந்தவர் பார்ட்னராக மாறிவிட்டார். நன்றி சொல்ல வேண்டிய லிஸ்ட் மிகப்பெரியது. நண்பர்கள் வட்டாரத்தால் உருவான படம் இது. கண்டிப்பாக உங்களை இந்தப்படம் திருப்திப்படுத்தும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்’ என்றார்.

இயக்குநர் முத்துக்குமார் பேசியதாவது,
புது இயக்குநர்களின் படைப்பு பல விதமான அனுபவங்களை அளிக்கும், அது போல இப்படமும் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடிகர் பிரசன்னா அவர்களுக்கு நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.

நடிகர் வினோத் சாகர் பேசியதாவது..,
தயாரிப்பாளர் சுரேஷும் நானும் பத்து வருட நண்பர்கள். அவரால் தான் இந்த படத்தில் நான் இணைந்தேன். இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது’ என்றார்.

நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது… ‘பட விழாவிற்கு வந்திருக்கும் வெற்றி இயக்குநர்கள் தான் எங்களின் நாயகர்கள். என்னை ஏமாற்றிய, எனக்குத் துரோகம் செய்த, பாடம் கற்பித்துத் தந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் முன்னால் நான் ஜெபித்துக் காட்டுவேன். எப்போதும் கதைதான் முக்கியம். இந்தப்படம் சிறந்த அனுபவம் தரும். படத்திற்கு உங்கள் ஆதவரைத் தாருங்கள் நன்றி’ என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது…
‘எழுத்துக்களால் உலகின் அனுபவத்தை நமக்கு விட்டுச் சென்றவர்கள் எழுத்தாளர்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களால் இந்த மேடை நிறைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடித்த அனுபவமாக இருக்கும். இந்தப்படத்தில் வாய்ப்பளித்த குழுவிற்கு உடன் பணியாற்றிய நண்பர்களுக்கும் நன்றி’ என்றார்.

இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் பேசியதாவது… ‘படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர் கற்றுக்கொடுத்தது தான் எல்லாம். அவருக்கு நன்றி. இந்தப்படம் நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப்படம். சுரேஷ் சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கடைசி வரை உடனிருக்கும் நண்பர்கள். வெங்கி சந்திரசேகர் மற்றும் அருண் ஆகியோரும் எங்களுடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள். இந்தப்படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின் நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் அவர்கள் படம் போல் வேலை செய்தார்கள். எல்லோருக்கும் நன்றி. என் உதவியாளர்கள் நாளைய உதவி இயக்குநர்கள். இந்தப்படம் ஒரு சிறப்பான அனுபவம் தரும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, ஆதரவளியுங்கள் நன்றி’ என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது..
‘தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குநராக இருக்கும்போது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன். எனக்கு முன்னாலே அவர் இயக்குநராக வேண்டியவர். அவரை அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை. சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவர்களிடம் இருந்து தான் சினிமாவே கற்றுக்கொண்டேன். இத்தனை நீண்ட கால போராட்டத்தைக் கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்டது விதம் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணாவுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். மேலும் இந்தப்படக்குழுவிற்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடாங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கிஇருக்கிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் லைட்ஸ் ஆன் மீடியா தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர் கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, போஸ்ட் புரடக்சன் தலைமை – அருண் உமா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’

0

15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

ஊர்வசியின் உறவினர் அபய் சங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘யோசி’

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘யோசி’. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ஆறுமுகம் கவனிக்கிறார். படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவி ஒருத்தி மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறாள்.
அவளுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த பெண்ணால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் பற்றி படத்தின் நாயகன் அபய் சங்கர் கூறும்போது, “கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினர் நான். கொரோனா காலகட்டத்தில் ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்கி ஜான்சன் மூலமாக இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஜோசப்பை சந்தித்தேன். நடிக்கும் எண்ணம் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்து இருந்து வந்தது. அதுமட்டுமல்ல ஊர்வசி, கலாரஞ்சனி, மறைந்த நடிகை கல்பனா என சகோதரிகள் மூவரும் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் நம் குடும்பத்திலிருந்து இன்னொருவர் நடிப்புத்துறைக்கு வரவேண்டும் என்று எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார்கள். அதற்கேற்றபடி இறுதி நேரத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது நானே கதாநாயகனாக மாறினேன்.

எனக்காக மட்டுமல்ல, கதைக்காகவும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் குறித்து அவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கதாநாயகி ரேவதி வெங்கட் மும்பையை சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். அதேசமயம் நிறைய விளம்பர படங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது.. இந்தி பிக்பாஸ் சீசனில் இறுதி போட்டியாளராக வந்த அர்ச்சனா கெளதம் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் நான்கு விதமான பாடல்களுக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். ஏர்டெல் சூப்பர் சிங்கர் கே.ஜே.அய்யனார் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல் மெட்டு மலைப்பகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் எந்த வசதிகளும் இல்லாத அந்த மலைப்பகுதியில் தினசரி நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அடர்ந்த காடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முக்கியமான ஒரு காட்சியில் செங்குத்தான மலைப்பகுதியில் நான் கீழ்நோக்கி ஓடி வரும்போது திடீரென கால் தவறி சரிவில் உருண்டு மரத்தில் மோதி எனது நெஞ்சில் பலத்த அடி விழுந்தது . ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்” என்றார்.

தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடவும் வேலைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து பாடகர் கார்த்திக் பாடிய அன்பே அன்பே என்கிற லிரிக் பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது.

A V I மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து J & A பிரைம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை மார்ச் இறுதியில் வெளியிடும் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

நடிகர்கள் :

அபய் சங்கர் (ஹீரோ), ரேவதி வெங்கட் (கதாநாயகி), ஊர்வசி, கலாரஞ்சனி, அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு நிறுவனம் ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ்

வெளியீடு ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ் & A V I மூவி மேக்கர்ஸ்

இயக்கம் ; ஸ்டீபன் எம். ஜோசப்

இசையமைப்பாளர்கள்: ராபின் ராஜ்சேகர், கே குமார், வி. அருண், ஏ.எஸ்.விஜய்

பாடியவர்கள் : கார்த்திக், கே.ஜே. அய்யனார், ஜெகதீஷ் குமார், மோனிஷா சௌந்தரராஜன்

பாடலாசிரியர்: ராக்சகன், வி. அருண்

இசை உரிமைகள்: MRT இசை

பின்னணி இசை: பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா (இத்தாலி)

BGM அசோசியேட் ; ஏ.எஸ். விஜய்

ஒளிப்பதிவு : ஆறுமுகம்

அதிரடி இயக்குனர்: ஜாக்கி ஜான்சன்

இரண்டாவது யூனிட் கேமராமேன்: பெரியசாமி & ஆனந்த் கிருஷ்ணா

நடனம்: ஜெய் & டயானா

படத்தொகுப்பு: ரோஷன் பிரதாப் ஜி – ரதீஷ் மோகனன்

ஆடை: டயானா

ஒப்பனை: கலைவாணி

PRO: A.ஜான்

சுவரொட்டி வடிவமைப்பு: நௌஃபல் குட்டிபென்சில்

தலைப்பு வடிவமைப்பு: ரிதன் விவேக், பிரம்மன்

ஸ்டில்ஸ்: கிரீஷ் அம்பாடி

தமிழ் வானொலி பார்ட்னர் & ஆடியோ வெளியீட்டு பங்குதாரர் : சூர்யன் எஃப்எம் 93.5

பிரச்சார ஸ்பான்சர்: L&T EduTech

DI: பேவுட் ஸ்டுடியோ (ப்ரிசம் & பிக்சல்ஸ் ஸ்டுடியோ), சென்னை

கலரிஸ்ட்: ரகுராமன்

- Advertisement -

Recent Posts