Thursday, June 5, 2025
- Advertisement -
Home Blog Page 671

எனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் படங்கள் மக்களுக்கு சரியான படங்களாக இருக்கும்” பா.இரஞ்சித்!

0

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல்,  மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பா .ரஞ்சித் பேசியவை ,

தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார் .ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதித்திக்கு சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஐந்து படங்கள் தயாரிக்கலாம் என பேசி முடிவெடுத்தோம். கதை தேர்வில் நான் பிடிவாதமாக இருந்தேன். கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும் .தவறான அரசியல் பேசக்கூடாது .எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மக்களுக்கு செல்லும் படம் சரியான படமாக இருக்கவேண்டும் என நினைத்தேன். ரைட்டர் படத்தை தயாரிக்க நான் முன்வந்த காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும் , மனதுக்கு நெருக்கமாகவும் இருந்தது தான் . இப்படம் சிறப்பாக இருக்கும் என கதை படிக்கும்போதே எனக்கு தோன்றியது. படப்பிடிப்பின்போது இப்படம் டெக்னிக்கலாகவும் படம் அருமையாக வரும் என நினைத்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனை சந்திக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையை படித்துவிட்டு கதை சூப்பர் .கண்டிப்பாக பண்ணலாம் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக தங்கராஜ் ஆக வாழ்ந்துள்ளார் என்று சொல்லவேண்டும். மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

நடிகர் சமுத்திரகனி பேசியவை
தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ,நடிகர் நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றி. உழைக்கும் ஆட்களைக் கண்டால் அப்படி ரசிப்பேன். காலையில் சூட்டிங் நேரமாகவே சென்றுவிடுவேன் .பிராங்கிளின் ,கேமராமேன் பிரதீப் வேலைப்பாடுகளை கூர்ந்து கவனிப்பேன். ரைட்டர் படம் அருமையான ஒரு குழு சேர்ந்து உழைத்த படம். ஒரு கூட்டு முயற்சி ஒரு கூட்டு படைப்பை இந்த படத்தில் நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் தனது படமாக நினைத்து இந்த படத்தில் வேலை பார்த்தனர். உண்மையான உழைப்பை நாம் பேச தேவையில்லை. திரையில் பார்த்த உடன் மக்களே பேசுவார்கள் .மிகப் பெரிய வெற்றி அடையும் வாழ்த்துக்கள் .

இயக்குனர் பிராங்க்ளின் பேசியவை,
இது எனக்கு முதல் மேடை .நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .முதல் நன்றி பா .ரஞ்சித் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அடிப்படை முறைகளையும் ரஞ்சித் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். சமுத்ரகணி அவர்களிடம் கதையை கூறியவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது .கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என தெரிவித்தார். இப்படத்தில் தங்கராஜ் கதாபாத்திரம் உயிர் கொண்டு வர காரணம் சமுத்திரக்கனி அவர்கள்தான். இப்படத்திற்கு என் காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார். கோவிந்து எனது சிறந்த நண்பர். கேமராமேன் பிரதீப்பிற்கு  தனியே நன்றி சொல்லத் தேவையில்லை .என் குடும்பத்தில் ஒருவர். இப்படத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் ஒரு நல்ல படத்தை உருவாக்க உதவி செய்துள்ளனர் .அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

0

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்

“நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

The Chennai District Masters Athletic Association is conducting the XVIII Chennai District Masters Athletic Championship

0

This meet is for all men and women above the age of 35 years. The senior most athlete in men is 90+ and woman is 85+. Most of the Chennai athletes have repesented Tamil Nadu in Nationals, Asian Meets and World Meets.

The Chennai District Masters Athletic Association President Mr. M. Shenbagamoorthi, Mrs. Sasikala (Treasurer) invited the athletes and honoured the Cheif Guests.

The grouping for competition is done as 35 to 39yrs, 40 to 44yrs, 45 to 49yrs and so on upto 95+ yrs (every 5 yrs is one age group).

The Championship was inaugurated by Dr. R. Anand Kumar, IAS, MEMBER SECRETARY, Sports Development Authority of Tamil Nadu.

Winner Details

Appreciation Award – Inspector E.Rajeswari

75+ Men 5KM Walk – Major Vidya Sagar Chitrapu

40+ Men Shotput

  1. Thamaraiselvam
  2. Derek Hutson
  3. S.Narayanan

35+ Men Shotput

  1. S.Chandrasekar
  2. Prathap Singh Robinson
  3. Vijayaraghavan. V

35+ Women – Shotput

  1. Sangeetha Mohan
  2. Amirdha Jacqueline A.S
  3. B.Prameena

70+ Women Shotput

  1. V.Ananthavally
  2. Bhama Sudharsan

Guests of Honour

Shri Murthy R Idreams MLA Royapuram,
Smt.A. Latha, Secretary Tamil Nadu Athletic Association and Joint Secretary of Athletic Federation of India and
Dr George Abraham ,Principal YMCA College of Physical Education ,Nandanam
Mr. Jayamurugan Chairman, SNJ Distilleries.
Shri M P Surya Prakash C & MD Pon Pure Chemicals Pvt Ltd.

Special Guests

Actor Arun Vijay
Actor Vishnu Vishal
Actor Shivani Narayanan

Chief guests graced this event with their presence and honoured the winners with medals.

Chennai District Masters Athletic Association Bearers:
Mr. M. Shenbagamoorthi, President, CDMAA
Mrs. T Rukmini Dev, Secretary, CDMAA
Mrs. P. Sasi kala, Treasurer, CDMAA.

“Emotions in Anandham Vilayadum Veedu posed a huge challenge to deliver the best songs” – Music Director Siddhu Kumar

0

Music director Siddhu Kumar is going through a pure phase of success as his albums have consistently earned him great responses. With Gautham Karthik-Cheran Anandham Vilayadum Veedu, he has now become the favourite of universal music lovers. In particular the song ‘Sonthamulla Vazhkai’ has become the latest emotional anthem for family crowds, who have been so much addicted to songs like ‘Kannana Kanney’ from Viswasam, ‘Un Koodave Porakkanum’ from Namma Veettu Pillai, and many more tracks that embellish the beauty of family bonding. With the film gearing up for worldwide release on December 24, 2021, the young music director shares his experience in composing songs for this film.

Music director Siddhu Kumar says, “I would admit that Anandham Vilayadum Veedu gave me a completely different experience. I am lucky enough to have got an opportunity to work in movies that are inclined to emotional premises, but AVV is something huge. This album comprises songs that are based on different genres, and Snehan sir’s lyrics offered a complete soul to them. Emotions in Anandham Vilayadum Veedu posed a huge challenge to deliver the best songs. Nanda Periyasamy sir’s craftsmanship in creating intensely emotional scenes, and the way, actors made it look astounding with their performances left me no options, but to deliver the best out of me that would do justice to the album. AVV will be a beautiful treat for every audience in the theaters. It is a beautiful amalgamation of family elements, sentiments, romance, comedy, action, and more entertainment. I thank Nanda Periyasamy sir, and producer P Ranganathan sir for allowing me to be a part of this film. The onscreen chemistry between Gautham Karthik and Shivathmika is cute, and Cheran sir’s screen presence is so much engrossing. It’s been a long time, a decorous family entertainer with a huge star-cast happened. Anandham Vilayadum Veedu will be a wholesome entertainer for the audiences.”

Written and directed by Nanda Periyasamy, Anandham Vilayadum Veedu is produced by Sri Vaari Film P Ranganathan. Gautham Karthik, Cheran, Shivathmika Rajashekar, Saravanan, Vignesh, Daniel Balaji, Mottai Rajendran, Soundararaja, Munishraj, Singampuli, “Namo” Narayanan, Snehan, Joe Malloori , “Nakkalite” Chella “Supergood” Supramani “VJ Kathirravan, Mounica, “Maina” Suzane, Priyanka, Madhumitha, “Paruthiveeran” Sujatha, “Nakkalite” Dhanam, Janaki, Venba, Subadhini, Sindhuja & Others are the main actors in this film.

உணர்வுப்பூர்வமான படைப்பான, “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம், மிகச்சிறந்த இசையை உருவாக்கும் வாய்ப்பை தந்தது – இசையமைப்பாளர் சித்து குமார் !

இசையமைப்பாளர் சித்து குமார் இசையில், அவரது ஒவ்வொரு இசை ஆல்பமும், இன்றைய தலைமுறை இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த வகையில், கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இசை ஆல்பம் இசை காதலர்களிடையே பெருவாரியான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் “சொந்தமுள்ள வீடு” பாடல் குடும்ப ரசிகர்களின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப உறவின் பெருமைகள் சொல்லும், விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ‘உங்கூடவே பொறக்கனும்’ பாடல்களை போல, பட்டி தொட்டியெங்கும் முணுமுணுக்கும் பாடலாக இப்பாடல் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படம் 2021 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் சித்து குமார் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இது குறித்து இசையமைப்பாளர் சித்து குமார் கூறியதாவது…
உண்மையில் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. என் திரை வாழ்வு, மிக அதிர்ஷ்டம் மிகுந்தது. தொடர்ந்து உணர்வுப்பூர்வமான படங்களில் நான் பங்காற்றியுள்ளேன். ஆனால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை அதன் உச்சம் எனலாம். இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வித்தியாசமான பாடல்கள் கொண்டது. பாடலாசிரியர் சினேகன் மொத்த பாடல்களுக்கும் தனது அற்புத வரிகளால் ஆத்மாவை தந்துள்ளார். ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் படத்திற்கு மிகச்சிறந்த இசையை உருவாக்குவதில் பெரும் சவாலை தந்தது. இயக்குநர் நந்தா பெரியசாமி தன் எழுத்தில், உருவாக்கக்தில் உணர்ச்சிபிழம்பான தருணங்களை திரையில் வடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும், அதில் நடித்துள்ள நடிகர்கள் அந்த காட்சிகளின் உணர்வை, தங்களது நடிப்பால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இவையெல்லாம் பார்த்த போது, இக்காட்சிகளுக்கு நியாயம் செய்யும் உண்மையான ஒரு இசையை, எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. படத்தின் பல காட்சிகளில் என் வாழ்வையே நான் கண்டேன். இசைக்கு முன்பாகவே திரைப்படம் ஒரு முழு திரைக்காவியமாக இருந்தது. முழுப்பிரதிக்கு முன்பாக ஒரு படைப்பாளியால் இப்படி ஒரு தாக்கத்தை உருவாக்க முடியுமெனும்போது, இந்த படம் உண்மையில் அங்கேயே ஜெயித்து விட்டது. ஆனந்தம் விளையாடும் வீடு ஒரு அழகான அனுபவமாக மறக்கமுடியாத திரை விருந்தாக இருக்கும். குடும்ப உறவுகளின் உன்னதங்களை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள், ரொமான்ஸ், காமெடி கமர்சியல் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பாக இப்படம் இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இந்நேரத்தில் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கும், தயாரிப்பாளர் P.ரங்கநாதன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து, ஒரு குடும்ப திரைப்படம் திரைக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டது அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு முழுமையாக குடும்ப படமாக இப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை Sri Vaari Film சார்பில் P.ரங்கநாதன் தயாரித்துள்ளார். கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, “நமோ” நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, “நக்கலைட்” செல்லா “சூப்பர்குட்” சுப்ரமணி “V.J. கதிரவன், மௌனிகா, மைனா,சூசன், பிரியங்கா, மதுமிதா, “பருத்திவீரன்” சுஜாதா, “நக்கலைட்” தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா மற்றும் பல நடசத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Sathya Jyothi Films Producer Sendhil V Thyagarajan elected as Treasurer of Indian Rugby Federation

0

Producer Sendhil V Thyagarajan of Sathya Jyothi Films has been unanimously appointed as the Treasurer of Indian Rugby Federation. Apart from accomplishing great achievements in the production of movies, Mr Sendhil Thyagarajan is a very well established athlete as well. Being office bearer from the film industry, he has been appointed by the members during the election that was held at Bhuvaneshwar, Orissa on Saturday (December 18, 2021). It is worth mentioning that actor Rahul Bose (Vishwaroopam fame) was also unanimously appointed as President. Being office bearers from the film industry, they are focussed upon the Indian women’s team ranking No.5 in Asia to medal at 2026 Asian Games, and quality for 2028 Olympics.

It is worth mentioning that Mr. Sendhil Thyagarajan is unanimously elected as the Treasurer of Tamil Nadu Olympic Association as well. He is a renowned national athlete in Track & Field, Rugby, and Basketball. Besides, he has competed in International rugby games and competed for California State University under US former Olympic Head Coach Charlie Craig for the University in scholarship. He is also the Secretary General of Tamil Nadu Rugby and Senior Vice President of Tamil Nadu Basketball Association. He has two Master’s degree in Management Information Systems and International Trade and relations from California State University and Fletcher School of Law and Diplomacy from Tufts University.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன், இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன் அவர்கள் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்படத் தயாரிப்பில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தி வரும், திரு செந்தில் தியாகராஜன் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். திரைப்படத் துறையில் சிறந்த அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதால், சனிக்கிழமை (டிசம்பர் 18, 2021) ஒரிசாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற தேர்தலின் போது உறுப்பினர்களால் இவர் நியமிக்கப்பட்டார். தலைவராக நடிகர் ராகுல் போஸும் (விஸ்வரூபம் புகழ்) ஒருமனதாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் அலுவலகப் பொறுப்பாளர்களாக சிறந்த பணிகளை ஆற்றி வரும் இவர், ஆசிய அளவில் 5வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணியை கொண்டு, 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வது மற்றும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கான தரம் வரிசையில் இடம்பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படவுள்ளனர்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளராக திரு.செந்தில் தியாகராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டிராக் & ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் புகழ்பெற்ற தேசிய தடகள வீரர் ஆவார். தவிர, அவர் சர்வதேச ரக்பி விளையாட்டுகளில் போட்டியிட்டார் மற்றும் அமெரிக்க முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரெய்க்கின் தலைமையின் கீழ் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டிக்காக ஸ்காலர்ஷிப்பில் பல்கலைக்கழகத்திற்காக ரக்பி விளையாட்டு போட்டிகளில் போட்டியிட்டார். தமிழ்நாடு ரக்பியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் மூத்த துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் California State University மற்றும் Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆகியவற்றில் மேலாண்மை தகவல் அமைப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் உறவுகளில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குற்றிப்பிடதக்கது.

S.S. RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA – PART ONE’

0

S.S. Rajamouli to present the vision of Brahmāstra with Amitabh Bachchan, Nagarjuna Akkineni, Karan Johar, Ranbir Kapoor, Alia Bhatt, Ayan Mukerji and Fox Star Studios in Tamil, Telugu, Kannada and Malayalam.

S.S. Rajamouli has announced that he will present magnum opus, Brahmāstra, in four South languages in Tamil, Telugu, Kannada, and Malayalam worldwide. Such is the monumental vision and scale of Brahmāstra that top powerhouses will unite to present this movie to wider markets.

Produced by Fox Star Studios, Dharma Productions, Prime Focus and Starlight Pictures the magnum opus will release theatrically on 09.09.2022 across 5 Indian languages – Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada

@ssrajamouli @SrBachchan #RanbirKapoor @aliaa08 @iamnagarjuna @RoyMouni #AyanMukerji @karanjohar @apoorvamehta18 @FoxStarHindi

பிரம்மாஸ்திரம் பாகம் 1 படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி வழங்குகிறார் !

பிரம்மாஸ்திரம் படத்தின் பயணம் மிகப்பெரும் நிகழ்வுடன் துவங்கியுள்ளது. இப்படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி, அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி மற்றும் Fox Star Studios உடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடுகிறார்.

18 டிசம்பர் 2021 ஹைதராபாத்: சில நட்புகளும், சில படங்களும் உண்மையிலேயே சிறப்பானவை. SS.ராஜமௌலியின் பெரும் காதலால் உருவான உழைப்பை, பாகுபலி படத்தை இயக்குநர் கரண் ஜோஹர் பெருமிதத்துடன்  வழங்கினார். அந்த நட்பின் பெருமையை இன்று நாம் மீண்டும் காண்கிறோம். இன்று, SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம், 2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின மோஷன் போஸ்டர் உடன் வெளியான, படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு, பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

வரும்  செப்டம்பர் 9, 2022 அன்ற இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளது. மேலும் இந்த பிரம்மாண்டமான  மற்றும் பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிடுவதற்காக இந்தியாவின் முன்னணி  நட்சத்திரங்கள் இணைய  உள்ளனர். மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின்  முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர், இவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் தற்போது இயக்குநர் SS.ராஜமௌலி இணைந்தது, இதன் பெருமையை மேலும் அதிகரித்துள்ளது. பாகுபலி போன்ற திரைப்படத் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான ஒரு இயக்குனர் இந்த படத்தை வெளியிடுவது கூடுதல் சிறப்பு. 

இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில், 
 பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். 

இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து  உங்கள் மனதைக் கவரும் வைகையில் உருவாக்கபட்டுள்ளது! 

எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும்.  அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்,  மேலும் பாகுபலிக்குப் பிறகு Dharma Productions உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, Fox Star Studios உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி கூறும்போது, இயக்குநர் அயன் மற்றும் பிரம்மாஸ்திரம் திறமையான குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிக அருமையான அனுபவம். பண்டைய இந்தியா மற்றும் நவீன இந்தியா இரண்டின் கலவையாக உருவான இந்தப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் இது போன்ற ஒரு மிகப்பிரமாண்ட திரைப்படத்தில் ஒரு பகுதியாக நானும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. இயக்குநர் திரு.ராஜமௌலி இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையான விசயம். மேலும் 2022 ஆம் ஆண்டில் எனது ரசிகர்களுக்கு இப்படத்தை வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இயக்குநர் கரண் ஜோஹர் கூறியதாவது…
“பிரம்மாஸ்திரம் மிகப்பெரும் ஆச்சர்யங்கள் தரும், வியத்தகு படைப்பாகும். இந்த தொலைநோக்கு திரைப்படத்தில் நானும் பாங்கேற்றிருப்பது பெருமை. பிரம்மாஸ்திரம் என்பது அயனின் பார்வை, அவர் வளர்த்த குழந்தை. இப்படம் மிகப்பிரமாண்டமானது உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் தகுதி கொண்டது. பாகுபலி திரைப்படம் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், இட மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து நமது முதல் உண்மையான தேசியத் திரைப்படமாக உயர்ந்தது, அதே போலான உயரத்தை இந்த பிரம்மாஸ்திரம் படமும் அடைய, இப்படத்தில் இணைவதில் இயக்குநர் ராஜமௌலியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை! இது என் மனதிற்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது, அவர் இப்போது இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது என் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில், “பிரம்மாஸ்திரம்” நான் பல ஆண்டுகளாக கண்டு வரும் கனவு. இது ஒரு மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு. இதுவரையிலான பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. இந்தப் படத்திற்காக நான் அனைத்தையும் தந்திருக்கிறேன். நான் தொடர்ந்து இதில் என்னால் முடிந்த பணியினை செய்து கொண்டே இருப்பேன். எஸ்.எஸ்.ராஜமௌலி சார் போன்ற ஒரு அற்புதமான வழிகாட்டி இந்தப்படத்திற்குள் வருவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அவரது பாகுபலி திரைப்படம் தான் எனது கனவை தைரியமாக தொடர எனக்கு நம்பிக்கை அளித்தது. மேலும் அவரது பெயர் பிரம்மாஸ்திரம் படத்துடன் இணைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

பிரம்மாஸ்திரம் படம் குறித்து…

பிரம்மாஸ்திரம் – டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் – அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில், இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன்

0

நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” என்று பெயர் வைத்துள்ளனர்

நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது,

“இப்படியொரு அருமையான விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி உதயகுமார், பேரரசு போன்றோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அவர்கள் துறையில் வெற்றிபெற்றவர்கள்.இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ஏன் என்றால் உழைத்து வெற்றிபெற்றவர்கள் எல்லாம் உங்களை வாழ்த்த வந்திருக்கிறார்கள். ஒரு படம் எடுப்பது மிகவும் சிரமமான வேலை. நிறைய சிரமங்களைத் தாண்டி இப்படியொரு அருமையான படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னாடியே அந்தப்படத்தின் வெற்றியை நாம் சொல்லிடலாம். இந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறது. படம் எடுப்பது சாதாரணமானதில்ல. படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இனி படத்தின் கதாநாயகி பட ப்ரமோஷனுக்கு வரவேண்டும் என்று அக்ரிமெண்ட் போடுங்கள். ” என்றார்

நடிகர் ரவிமரியா பேசியதாவது,

“சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். நம் சகோதரர் ருத்ரா அவர்கள் மிகப்பெரிய ஹீரோவாக வருவதற்கு இறைவனை வேண்டுகிறேன். சக்கரை தூக்கலாய் புன்னகை படம் பெரிதாக வெற்றிபெறவேண்டும். ஏன் வெற்றிபெற வேண்டும் என்றால் இந்த மாதிரியான சின்னப்படங்கள் வெற்றிபெற்றால் தான் சிறுபட தயாரிப்பாளர்கள் நிறைய வருவார்கள். அதற்காகவே இப்படம் வெற்றிபெற வேண்டும்” என்றார்

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது, “இந்தப்படத்தின் தலைப்பை யார் வைத்தார்கள் என்று தெரியாது. மிக அருமையான தலைப்பு. இன்று சினிமாவில் கன்டென்ட் தான் ட்ரெண்ட். பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் படத்தில் என்ன விசயம் இருக்கு என்பதை தான் ரசிகன் பார்க்கிறான். நல்ல கதையை அழகாச் சொன்னா போதும். அது ஜனங்களுக்குப் பிடிச்சிதுன்னா ஹீரோ பெரியாள். விமர்சனங்களைப் பற்றி கவலையே படக்கூடாது. ப்ளுசட்டை மாறன் படத்தை நான் இன்னும் பார்க்கல. அவர் நிறைய படத்தை கழுவி கழுவி ஊத்திருக்கிறார். இப்ப அவர் படத்தை வேறு யாரோ விமர்சிக்கிறாங்க. ஆனா நாம யாரையும் விமர்சிக்கக்கூடாது. நாம கிரியேட்டர்ஸ். படைப்புகள் தோற்றாலும் படைப்பாளிகள் தோற்க மாட்டார்கள். வெளிவரும் முன்பே இப்படம் ஏழெட்டு விருதுகள் வாங்கியிருக்கிறதென்றால் அது மிகப்பெரிய விசயம் அல்லவா? இந்தப்படம் மீண்டும் மீண்டும் விருது பெறட்டும். பெரிய வெற்றிப்பெறட்டும்” என்றார்

படத்தின் கதாநாயகன் ருத்ரா பேசியதாவது,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் என் அம்மா அப்பா டீச்சர்ஸ், இப்படியொரு நல்ல சந்தப்பர்த்தைக் கொடுத்த கடவுள் எல்லாருக்கும் நன்றி. என்னோட அம்மா ரொம்ப ஆசைப்பட்டார் நான் நடிகன் ஆகணும்னு. இப்ப என் அம்மா இல்லை. மிஸ் யூ அம்மா. சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இதுவந்து எனது இரண்டாவது திரைப்படம். இந்தப் பிஸி செட்டியூலிலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாதான். மீடியா நண்பர்களுக்கு நன்றி. இன்றைய ஹீரோ மியூசிக் டைரக்டர். படத்தில் மூன்று பாட்டு பண்ணிருக்கார். அவர் எனக்குச் சகோதரர். பாடலாசிரியர் கட்டளை ஜெயா அவர்கள், கொரியாகிராபர் இவர்கள் எல்லாரின் டெடிகேசனும் ரொம்ப முக்கியம். இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கோம். லொக்கேசன்கள் எல்லாமே காடுதான். காட்டு மிருகங்கள் உள்ள இடங்கள் தான். வண்டிபோக வசதி கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டோம். So படத்தில் பங்குபெற்ற எல்லாருக்கும் மிக்க நன்றி” என்றார்

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

“இப்படத்தின் நாயகன் ருத்ராவின் தந்தையை வாழ்த்தி வரவேற்கிறேன். நான் இந்தப் பதினைந்து நாட்களில் மூன்று வித்தியாசமான படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சிறுபடங்கள் வெற்றிபெறணும் என்பதற்காக ஆத்மார்த்தமான மனதோடு வாழ்த்த வர்றோம். நாங்க கஷ்டப்பட்டதெல்லாம் வேற. நான் கஷ்டப்பட்டது எல்லாமே சினிமா நல்லாருக்கணும் என்று தான். வ.உ.சிக்கு சிலை வைத்தது முதல் அவருடைய புத்தகங்களை நூலகத்தில் வைப்பது வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அற்புதமான விசயங்களை செய்திருக்கிறார். இந்தப்படம் வெற்றிபெற்று அசல் தேறினாலே போதும். தயாரிப்பாளர் ரகுமான் அண்ணன் உடனே ரெண்டு படத்தை அறிவிச்சுடுவார். 50 கோடி 100 கோடி வாங்குற ஹீரோக்களை கேட்கிறேன். நீங்க வாங்குற காசு எல்லாம் சினிமாவுக்கு வந்திருக்குதா. உங்களால இந்த தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது. இங்கே ஒரு தமிழ்நடிகை அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். இதே ஒரு நார்த் பொண்ணு என்றால் எப்படி வருவார்கள்? நம் படங்களில் தமிழ் பெண்களையே நடிக்க வையுங்கள். நாம் எல்லாரையும் சிரிக்க வைக்கவேண்டும். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இலக்கிய நயமிக்க ஒரு டைட்டில். நடிகர் ருத்ரா மலையாளி தான். ஆனால் துணிச்சலாக தமிழ்படம் எடுத்திருக்கிறார். உலகத்தொழில் அமைப்புகளை எல்லாம் நம் தமிழக முதல்வர் இங்கு அழைத்து வருவதைப் போல மற்றவர்கள் படம் எடுக்க வருவதற்கான அனுமதி பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை பெரிய வெற்றிபெற வேண்டும்” என்றார்.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக, இணையதள நண்பர்களுக்கு மக்கள் தொடர்பாளர் மணவை புவன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது

சாய் தன்ஷிகா வின் புத்தாண்டு புதிய துவக்கம் !

0

ரஜினியுடன் கபாலி பாலாவுடன் பரதேசி என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகளுடன் பயணித்தவர் நடிகை சாய் தன்ஷிகா. தற்போது ‘ஷிகாரு’க என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஹரி குல்கனி இயக்குகிறார். பாப்ஜி காரு தயாரிக்கிறார். ஸ்ரீ சாய் லக்ஷ்மி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

முழுநீள நகைச்சுவை படமான இதில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

படத்தில் பணியாற்றி உள்ள அனைத்துகலைஞர்களின் மிகச்சிறந்த ஒத்துழைப்பால் படத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதம் 26 ம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.

Shyam Singha Roy Tamil Trailer Launch Event – Press Release

0

Actor Nani, has always been consistently amusing his fans with unique stories. The Natural star is all set to create a new benchmark in his career with a mammoth epical tale titled ‘Shyam Singha Roy’. The film is produced by Venkat S Boyanapalli of Niharika Entertainment. It is directed by Rahul Sankrityan. Nani plays dual role in this film with Sai Pallavi, Kriti Shetty and Madonna Sebastian as the female lead characters. Simultaneously made in Tamil, Telugu, Malayalam and Kannada, the film is hitting screens on December 24, 2021 worldwide. The trailer launch of the Tamil version was held in Chennai that witnessed the presence of Samuthirakani, Nani, Sai Pallavi and producer Venkat S Boyanapalli along with other crew members.

Actor Samuthirakani said, “I am glad to see my brother Nani making his arrival here with a Tamil movie. He started his career as an assistant director and am extremely elated to see him building an empire as an actor. I wish him all the best for the success of this film. I had earlier worked with him in the Telugu version of Nimirndhu Nil. I have seen his earnest dedication and hard work for 90 days. He is always ready to exert his heart and soul into a good project. This film will be a greater milestone in his career. I recently shared the screen space with Sai Pallavi’s younger sister in a movie, where she played my daughter’s character. Both of them are like daughters to me, and I am glad to see Sai Pallavi scale great heights as an actress.”

Producer Venkat S Boyanapalli said, “The film is getting released in Tamil, Telugu, Malayalam and Kannada on December 24, 2021. I want everyone to come to the theaters and experience this movie. I am sure that every single audience in the theaters will enjoy it wholeheartedly.”

Actress Sai Pallavi said, “Whenever I read a script, the visuals come to my mind as a Tamil movie. It’s because I was born and brought up in Tamil Nadu. While working in other regional movies, I felt that respective movie should have released in Tamil, and when reading the script of this film, I strongly felt the same. Later, I was surprised to see the producer announce that he is making the film in Tamil as well, and I was so happy about it. The film will give an experience of an exact Tamil movie. While acting in this film, I wanted to know more details and information about Devadasis. Director Rahul had done a wide research pertaining to each element in this film and we have given our best into our respective departments.  I am sure that everyone will love this film.”

Actor Nani said, “Whenever I used to shoot in Chennai, I would never leave the city without visiting Samuthirakani sir. And now, I am excited for him in all the Telugu movies. He is now a reigning star in Tollywood and is busy with multiple projects. In all my interviews, whenever asked about what prompted me to become an actor, I would openly admit that it all happened after watching several movies of Kamal Haasan sir and Mani Ratnam sir. I have always shared an emotional bonding with the Tamil movie. I grew up watching them. After the success of Naan E, the fans here always welcome me with warmness. Later, some of my movies didn’t do well here. Henceforth, I waited for the right project to make a comeback in Tamil. When I listened to the script of this film, I suggested that it can be made in Tamil as well. I believe with hopes I have given my best to entertain Tamil audiences here. I am sure that everyone will love this film, and I will meet you all after the success of this movie.  I wasn’t able to change my physique for the dual roles as both the portions of these characters were shot at the same time. It was indeed a different and unique experience. I am an ardent fan of Rajinikanth sir and Kamal Haasan sir. These days, Tamil movies are doing a greater business in Telugu regions. If my prediction is right, we can soon see the collaboration of Tamil and Telugu heroes working together in many projects. Working with Mani Ratnam sir has been my long run dream, and I am his hard core fan. I would also like to share screen space with Sivakarthikeyan, and it will definitely happen with the right script.”

Technical Crew

Written and directed by Rahul Sankrityan
Music: Mickey J Meyer
Cinematography: Sanu John Varghese
Editing: Naveen Nooli
Producer: Venkat S Boyanapalli
Banner: Niharika Entertainment
ஷியாம் சிங்கா ராய் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.  Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். 

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. 

இவ்விழாவில்…. 

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

நானி என் தம்பி, ஒரு தமிழ் படத்தோடு அவர் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நிமிர்ந்து நில் தெலுங்கு பதிப்பு நானி தான் செய்தார், 90 நாள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தி நடித்தேன் அவரும் எனக்கு மகள் போல தான். மிகச்சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.  படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி பேசியதாவது….

டிசம்பர்24 தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஷியாம் சிங்கா ராய் வெளியாகிறது. எங்கள் குழு சிறந்த படத்தை தந்துள்ளது. அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள், உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி. 

நடிகை சாய்பல்லவி பேசியதாவது… 

எப்போதுமே நான் ஒரு கதையை படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். பலதடவை இந்த கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும், இந்த படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் நாலு மொழியில் எடுப்பதாக சொன்னார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தமிழ் படம் பார்க்கும் உணர்வை  இந்த படம் தரும். இப்படத்தில் தேவதாசி பற்றி தெரிந்து கொள்வதற்காக, சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்கு தேவையானதை செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் நானி பேசியதாவது…. 

நான் ஆரம்பத்தில் சென்னையில் ஷீட் செய்யும் போது சமுத்திரகனி சாரை பார்க்காமல் போக மாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லா பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும் போது, கமல் சார் படங்கள் மணி சார் படங்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன். தமிழ் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன். ஷியாம் சிங்கா ராய் படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன்.  நான் கேரக்டருக்காக உடல் எடை எதுவும் மாற்றவில்லை ஏனெனில் இரண்டு பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கினோம், படமாக்கும் போது சிறந்த அனுபவமாக இருந்தது. கதை பெங்காலில் நடக்கும், படம் பார்க்கும் போது உங்களுக்கு கனெக்ட் ஆகும். உங்களுக்கு முழுதாக புரியும். நான் கமல் சார், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இப்போது ஆந்திராவிலும் இங்கும் பல படங்கள் ஹிட்டாகி வருகிறது.  தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன். உலகத்திலேயே ஒரு இயக்குநரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் எனக்கேட்டால் மணி சாரை தான் சொல்வேன். அவரின் தீவிர ரசிகன் நான். நான் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கலாம், நல்ல கதை கிடைக்கும் போது இங்கு எல்லோருடனும் நடிக்கலாம். கமல் சார் படங்கள் பார்த்து தான் வளர்ந்திருக்கிறோம் அதனால் அவர்களின் இன்ஸ்பிரேஷன் தானாக வந்துவிடும். அதை யாரும் மாற்ற முடியாது. இந்தப் படம் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும் நன்றி. 

தொழில்நுட்ப குழு 

எழுத்து இயக்கம் – ராகுல் சன்கிரித்யன்
இசை – மைக்கே J மேயர்
ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ் 
படத்தொகுப்பு – நவீன் நூலி 
தயாரிப்பு நிறுவனம் – Niharika Entertainment 
தயாரிப்பாளர் – வெங்கட் S போயனபள்ளி

Axess Film Factor G. Dilli Babu presents GV Prakash starrer “Bachelor” Success Meet

0

GV Prakash-Divya Bharathi starrer Bachelor directed by Sathish Selvakumar and produced by G. Dilli Babu of Axess Film Factory recently got released. The film won a heart-warming response from the youth audiences apart from getting appreciated by the film critics. The entire cast and crew of this film were present for the Thanksgiving Meet with the press and media channels today.

Actor Munishkanth said, “I thank the entire cast and crew, who worked with me in the Bachelor movie. I especially thank director Sathish Selvakumar for giving me a substantial character. This is the first time I had to dub for a longer time in my acting career. This indeed was a new experience to me.”

Editor San Lokesh said, “This is an important occasion for me as the long-run dream of Sathish has come true. I thank GV Prakash sir for Okaying this script. He has given beautiful life to this script. I thank B.Sakthivelan sir for facilitating a groovy release in the theaters. I express my thanksgiving to each and everyone for making this film a great success.”

Actor Baks said, “I am overwhelmed with happiness with the great response and positive criticism for this film. I thank my producer and director for giving me an opportunity to be a part of this film. San Lokesh has enthralled me a lot with his editing style. He was so actively involved in the process even before the shooting commenced and had already decided on how to make the editing transitions so unique and engrossing. Siddhu Kumar’s musical score has contributed a lot towards intensifying the depth of this film. I thank the entire cast and crew for making this film, a great success.”

Choreographer Azar said, “GV sir would always keep appreciating and encouraging me stating that my work is unique. I thank him for such great support. The dance portions were very challenging to shoot and it’s great to see the tracks are still trending. I thank the audiences, critics, and my beloved team for making this film, a grand success.”

Music director Sidhu Kumar said, “I have no words to express my thanks to the director and producer for banking their trust on me. I was the last one to get on board with this film. The other songs were so much compelling and addictive to listen to. It was really a huge challenge to deliver good BGM, and I am glad to see the positive response for my work.”

B. Sakthivelan, Sakthi Film Factory says, “It’s not an easy thing to win the hearts of people, and it can happen only with the earnest hard work. I am elated to see producer G Dilli Babu Sir has given space for everyone in the team to share the success and give proper recognition to them. He is always emotionally connected to a project, and I desire to work with producers like him forever. This film’s success has given a lease of hope and a new beginning in the cinema trade, thereby putting an end to the pandemic phase. I feel lucky to have got an opportunity to release Bachelor and Rocky. I am feeling blessed for getting an opportunity to release good movies. Director Sathish is a talented artiste, and his narrative process itself is so unique. I am gleeful for having been a part of GV Prakash’s three successful movies. He is a focused and dedicated actor. He prepared a lot for this character and is now witnessing great appreciation. I thank my press and media friends for their beautiful support in making this film, a good success.”

Producer G. Dilli Babu, Axess Film Factory said, “This event is purely a gesture of thanksgiving from the cast and crew of Bachelor for everyone, who made the film achieve great success. I thank the press and media for their earnest support. While some critics appreciated our works, few have imparted good advice, which will help everyone in the team to carry forward with these values in our upcoming projects. I thank B Sakthivelan of Sakthi Film Factory for making this film get a good release across Tamil Nadu. I also take this opportunity to thank producer Sanjay Vardha for this occasion. GV Prakash has been the pillar in making this film very special for me. He exerted 100% support during the shoot and even after its completion. I wish him great success for all his upcoming projects.”

Actress Divya Bharathi said, “I thank director Sathish Selvakumar for giving me an intense role in this movie. The appreciation that I got for this film has given me a serene and peaceful sleep, which is a token of satisfaction that any actress like would yearn for. I thank the press-media fraternity for appreciating my performance. I thank GV Prakash sir for giving me a greater scope in this film. The beautiful music of Siddhu has been the soul of this film.”

Director Sathish Selvakumar said, “The success of this film is only because of G Dilli Babu sir and he deserves all the credits. He has been the sole reason behind this film getting materialized and has a comfortable theatrical release. During this journey of making ‘Bachelor’, I have hurt the feelings and sentiments of many, for which I would like to apologize. A huge crowd is there behind the success of this film, and I would like to thank all of them. I thank Gopi sir for spending long hours to give us perfect poster designs for this film.”

Actor GV Prakash Kumar said, “The efficient and hard work of every single artiste and technician in any given film can be valued only after it gets recognized by the audiences. I am so glad to see that the movie has excelled with good reviews and profitable numbers at the box office. If not for the earnest efforts of Dilli Babu sir and Sakthivelan sir, this would have not been possible. The way they designed this project, got it materialized, and facilitated a beautiful way for the audiences to receive it looked like perfect art. This film is a big success for me after the grand success of Sivappu Manjal Pachchai. It’s really elating to see that the movie has completed 3 successful weeks of theatrical run, and is still being appreciated by audiences. I have to thank the press and media for a valuable criticism that has imparted lots of enlightenments among actors and technicians that we can follow in our upcoming films. I thank director Sathish Selvakumar, my co-artiste Divya Bharathi, every actor and technician in this film for making it a big success.”

Apart from playing the lead role, GV Prakash Kumar has composed music for one song in this film. Dibu Ninan Thomas, Kashyap, and Siddhu Kumar have composed the other songs each. Besides, Siddhu has composed the background score for this film. Theni Eeswar has handled cinematography and San Lokesh is the editor. M Lakshmi Deva is the art director, PC is the stunt master, Azhar is the choreographer and K Pooranesh is the Executive Producer.


“பேச்சிலர்” திரைப்பட வெற்றிக்கு, நன்றி அறிவிப்பு விழா !

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் GV பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” . இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம், விமர்சர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பிரமாண்ட வெற்றியடைந்துள்ளது. இதனையடுத்து இன்று படக்குழு பத்திரிக்கை நண்பர்களை சந்தித்தி நன்றி தெரிவித்தது

இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு தயாரிப்பு தரப்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்…

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது…
என்னுடன் நடித்த கலைஞர்கள் எல்லோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இயக்குநர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடியுங்கள் கேமராவால் நாங்கள் ஃபாலோ செய்கிறோம் என்றார். இந்தப்படத்திற்கு தான் அதிக நாள் டப்பிங் செய்துள்ளேன். இந்தபடம் புது அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பேசியதாவது…
ரொம்ப முக்கியமான மேடை, சதீஷ் உடைய கனவு நிறைவேறியிருக்கிறது. அவனது கனவை நனவாக்கிய டில்லிபாபு சாருக்கு நன்றி. இந்தகதையை ஒகே செய்த ஜீவி சாருக்கு நன்றி. இதை திரையில் அழகாக கொண்டு வந்திருந்தார். தியேட்டருக்கு கொண்டு சேர்த்த சக்தி சாருக்கு நன்றி படத்தை வெற்றி பெற வைத்த எல்லோருக்கும் நன்றி.

நடிகர் பக்ஸ் பேசியதாவது…
இந்தப்படத்திற்கு கிடைத்த இவ்வளவு ஆதரவு எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு தந்ததற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. என்னை ஆச்சர்யப்படுத்தியவர் ஷான் தான் வழக்கமான முறையில் இந்தப்படத்தை எடுக்கவில்லை படம் எடுக்கும் போது இதை எப்படி எடிட் செய்வார்கள் என தோன்றியது. ஆனால் லோகேஷ் எடிட்டிங்கும், சித்துவின் மியூசிக்கும் தான் படத்தை இவ்வளவு உணர்வுப்பூர்வமாக கொண்டுவந்துள்ளது அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.

நடன அமைப்பாளர் அசார் பேசியதாவது…
ஜீவி சார் என்னிடம் ஏதோ இருக்கிறது என சொல்லிக்கொண்டே இருப்பார், எனக்கு ஊக்கம் தந்த அவருக்கு நன்றி. இயக்குநர் முதலில் சொன்ன போது அந்த டான்ஸை திரையில் கொண்டு வருவது கஷ்டம் என்றேன். ஆனால் அதை உடனிருந்து வெளிக்கொண்டு வந்தார். எங்கள் பாடல்கள் இன்னும் டிரெண்டிங்கில் இருக்கிறது. படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி. டில்லி பாபு சாருக்கு நன்றி.

இசையமைப்பாளர் சித்துகுமார் பேசியதாவது…
என்னை நம்பிய தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. கடைசியாக தான் வந்து படத்தில் இணைந்தேன். நான் வரும் முன்னரே நல்ல பாடல்களை தந்திருந்தார்கள். அதிலிருந்து மாறுபட்டு பின்னணி இசையை உருவாக்கினேன், அதை பாராட்டிய அனைவருக்கும், என்னுடன் உழைத்த கலைஞர்களுக்கும் நன்றி.

Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் பேசியதாவது…
உழைப்பை அங்கீகாரம் செய்வது, அனைவராலும் செய்ய முடியாது, நல்லா உழைப்பவர்களால் மட்டுமே தான் அது முடியும். ஒரு தயாரிப்பாளராக அனைவரையும் இங்கு கூட்டி, எல்லோரையும் பாராட்டுகிறார். மிகச்சிறந்த தயாரிப்பாளர் டில்லிபாபு. அவர் ஒரு படைப்பை எமோஷனலாக கனக்ட் ஆகி செய்வார். அவர் மாதிரியான தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை. பேச்சிலர், ராக்கி இரண்டையும் ரிலீஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, தமிழின் சிறந்த படங்களை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். தம்பி சதீஷ் ஒரு மிகச்சிறந்த கலைஞன். கதை சொல்லலே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஜீவி சாரின் மூணு முக்கியமான வெற்றிப்படங்களில் நான் இருந்துள்ளேன் என்பது எனக்கு பெருமை. ஒரு விசயத்தை எடுத்துகொண்டால் வெறி கொண்டு உழைப்பவர் அவர். இந்த கதாப்பாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடன் பயணித்தது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் தந்த ஊக்கங்களுக்கு நன்றி. எல்லோருக்கும் மிக்க நன்றி

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு பேசியதாவது…
இந்தப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியவர்களுக்கு நன்றி சொல்ல மட்டுமே இவ்விழா. இயக்குநர் தொடங்கி இதில் உழைத்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி அவர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி. சில அறிவுரை சொல்லியுள்ளீர்கள் அதை கேட்டு கொள்கிறோம். இப்படத்தை தமிழகமெங்கும் ஓடி, வெற்றிப்படமாக மாற்றிய Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் அவர்களுக்கும் நன்றி. சஞ்சய் வர்தா சாருக்கும் நன்றி. எங்கள் நாயகன் ஜீவி பிரகாஷுக்கு நன்றி படமெடுக்கும் போதும், எடுத்த பிறகும் மிகுந்த ஆதரவாக இருந்தார். அவரது வெற்றிப்பயணம் தொடர வேண்டும் அனைவருக்கும் நன்றி

நடிகை திவ்யபாரதி பேசியதாவது…
சுப்பு பாத்திரத்தை எனக்கு தந்ததற்காக சதீஷ்க்கு முதலில் நன்றி. படம் வந்த நாளிலிருந்து வரும் பாராட்டுக்கள் நிம்மதியான தூக்கத்தை தந்துள்ளது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் தந்த விமர்சனங்களுக்கு நன்றி. ஜீவி சார் பெரிய இடத்தை தந்து, ஆதரவு தந்ததற்கு நன்றி. சித்து அருமையான இசையை தந்துள்ளார். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசியதாவது…
இந்த வெற்றி டில்லிசாருக்கு தான் சென்று சேர வேண்டும், அவர் தான் இப்படத்திற்கு முழுக்காரணம். நான் இந்தப் பயணத்தில் நிறைய பேரை காயப்படுத்தியிருக்கிறேன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெரும் கூட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இரவு பகலாக இப்படத்தில் உழைத்திருகிறோம். நிஜத்திற்கு அருகில் டிசைன்ஸ் செய்து தந்த கோபி அண்ணாவுக்கு நன்றி. ஜீவி சார் பச்சிளம் பாடலை அவர் தான் செய்தார். சித்து இந்தப்படத்திற்கு 13 நாள் தூங்காமல் வேலை செய்தார் அவர் இல்லாவிட்டால் இன்னும் ஒரு மாதம் லேட் ஆகியிருக்கும். பக்ஸ் அண்ணா நிஜத்திலும் அண்ணா தான் அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. பேச்சிலர் பசங்க அனைவருக்கும் நன்றி. திவ்யாவுக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு வரும் பாராட்டுக்கள் லோகேஷ்க்கும், ஈஸ்வருக்கும் உரித்தானது. அவர்களுக்கு நன்றி. சக்தி அண்ணா எங்கள் மேல் வைத்த நம்பிக்கை பெரிது. அதற்கு நன்றி. ஒரு கதை எப்படி வேண்டுமானலும் எழுதி விடலாம், ஆனால் அதை நம்பிய ஜீவி சார் மனசு தான் இந்தப்படம் உருவாக காரணம் அதற்கு அவருக்கு நன்றி. இப்படிபட்ட ஒரு பாத்திரத்தை செய்வதில் அவர் காட்டிய நுணுக்கம் பிரமிப்பானது. டில்லி சார் இல்லாமல் இந்தப்படம் நடக்க 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை அவருக்கு பெரிய நன்றி.

நடிகர் GV பிரகாஷ் குமார் பேசியதாவது…
ஒரு படம் வந்து நாம் செய்து முடித்த பிறகு மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதற்கு காரணம் டில்லி சார் மற்றும் சக்தி சாரும் தான் காரணம். ஒரு படத்திற்கு இது தான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள் தான். இந்தப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப்படம் 3 வது வாரம் கடந்து அதற்கான ரசிகர்களை சேர்ந்துள்ளது. நீங்கள் தந்த அறிவுரைக்கும் விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் தரும் கருத்துக்களில் தான் நாங்கள் எங்களை திருத்திக்கொள்கிறோம். பேச்சிலர் பெரிய பாதிப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ் மற்றும் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி.

- Advertisement -

Recent Posts