Wednesday, June 18, 2025
- Advertisement -
Home Blog Page 6

நடிகை லிசிஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

0

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். 

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ”இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் ‘ஏமாற்றாதே’, ‘பொய் சொல்லாதே’, ‘திருடாதே’, ‘கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்’ என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். 

இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,” என்றார். 

நடிகை தாஷ்மிகா பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார். 

மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்,  எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல் திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன். 

அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம். 

இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ‘குயிலி’ திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன். 

இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். 

நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். 

தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.

அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.  

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் , இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ப. முருகசாமி பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது. 

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவை பார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,” என்றார். 

இசையமைப்பாளர் ஜூ ஸ்மித் பேசுகையில், ”முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை.  இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை தொலைபேசி மூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம் தயாரித்தால் நீ தான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார். 

சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார். 

இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, ‘குயிலி’ கமர்ஷியல் திரைப்படம் அல்ல,vகருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. 

இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,” என்றார். 

இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில், ” சினிமாவும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக சினிமாவில் அரசியல் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

‘குயிலி’ திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் , கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். தாய்ப்பாசத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். 

இந்த விழாவின் நாயகனான ஜூ ஸ்மித் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னால் அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இதுபோன்ற படங்களுக்கு இரண்டு பாடல்களே போதுமானது. பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் சினிமாவையே ஒன்றரை மணி நேரமாக சுருக்கி விட்டோம். இதுவே போதும் என்றும் நினைக்கிறோம். 

‘குயிலி’ திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்ல பண்பாட்டையும் போதிக்கும் படமாக இருக்கிறது. வலியை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”” என்றார். 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ”எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். 

இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, ‘கல்லூரி’ படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன். 

‘பொன்னியின் செல்வன்’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன்.  

இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன். 

இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இதுதான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ”சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன். 

இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. 

இந்தப் படத்திற்கு ‘குயிலி’ என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.  

இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ”சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன். 

வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. 

அண்ணன் ராஜன் பேசும்போது, ‘தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்’ என்றும் , இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது. 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  

மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே? 

இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப் போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். 

இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.  இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது. 

இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்… பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால்தான் உணர முடியும். 

இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.

இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை. 

தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலை இருக்கிறது.‌ ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில் நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாக அமைந்து விடுகின்றன.‌ 

மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வு தேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும் அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதை நாம் காண முடிகிறது. 

‘குயிலி’ படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். 

மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.  

மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,’ என்றார். 

பாடலாசிரியர் வேட்டவலம் த. ராமமூர்த்தி பேசுகையில், ”நான் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. 

மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்…

நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்…

மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,” என்றார்.

Chennai celebrates World Ocean Day in solidarity with impacted communities from the Kerala shipwreck disaster

0

Chennai, 8th June, 2025. Greenpeace India marked World Oceans Day 2025 with a powerful celebration at Besant Nagar Beach in Chennai, where around 30 volunteers came together for an early morning beach cleanup drive. A striking art of an Olive Ridley turtle was displayed to highlight the critical role the ocean plays in sustaining biodiversity, regulating the climate, and supporting coastal communities. The action also comes in solidarity with the Kerala population and the urgent need for transparency, cleanup, and accountability in response to the recent shipwreck accident and its ongoing consequences.
This year, World Ocean Day precedes the opening of the United Ocean Conference, from 9th to 13th June in France, where world leaders will convene to discuss their commitments for the protection of the global ocean. In the meantime, the dramatic impacts of the recent MSC ELSA 3 shipwreck offshore Kerala (on May 25th) keep unfolding with fuel and hazardous cargo threats looming at sea, while broken containers of unknown cargo and insane amounts of plastic pellets have been washing ashore in Kerala and Tamil Nadu, India — amid monsoon weather conditions impeding initial environmental assessment and clean-up initiatives. Just 4 years after the X-Press Pearl disaster in Sri Lanka, the region’s marine life, unique coastal ecosystems, and fisher communities are facing yet another shipping disaster with lasting consequences, of which the scale remains to be fully understood.
“From the sands of Besant Nagar to the shores of Kerala, the ocean connects us all. Today’s cleanup drive in Chennai was not just about collecting waste — it was a moment of collective care, led by local volunteers who know the ocean is their lifeline. As Chennai’s coast faces increasing plastic pollution and rising sea levels, our solidarity with Kerala’s fisherfolk is a reminder that ocean protection begins at home. The MSC shipwreck has severely impacted marine biodiversity and threatened livelihoods along the coasts of Kerala and Tamil Nadu. We urgently need accountability for the MSC disaster, but we also need long-term investment in building coastal resilience,” said Yasin Fahmidha, Campaigner at Greenpeace India.
“We are calling on local authorities and the MSC company to release the full cargo manifest of the MSC ELSA 3. The people in South India have the right to know and expect a detailed statement on the circumstances of the accident, as well as a comprehensive clean-up and compensation plan from MSC, who have not yet communicated two weeks after the shipwreck. When the decarbonization of the shipping industry and global plastics pollution are discussed at the UN Ocean Conference, major profitable shipping companies such as MSC can no longer shy away from their responsibility in such disasters, whereas marine life is choking on plastic pellets and fishing communities are being starved out,” added Amruta s Nair, Campaigner at Greenpeace India.
In Solidarity, Greenpeace deployed a documentation team in Kerala straight after the disaster — and this past week the organization has run several activities with ocean stakeholders, youth groups, and fisherfolks to convey the same message across the region: “One Ocean, Many Lives” in Khulna, Bangladesh; Galle and Colombo, in Sri Lanka; Odisha and Chennai, in India.
“With these events to celebrate World Ocean Day, we also want to deliver a joint message of hope together with our partners across the region. We demand our leaders quickly ratify the global High Seas Treaty to protect 30% of our oceans [1], as well as listen to the voice of small-scale fishers and the wisdom of coastal communities for the sustainable management of coastal resources and bottom-up profits to the local economies,” says Anita Perera, Campaigner at Greenpeace South Asia.

Media Contacts:

Nibedita Saha
Media Officer at Greenpeace India
Phone: +91 7045066118
Email: [email protected]
Amruta s Nair, Campaigner at Greenpeace India
Phone: +918304010458
Email: [email protected]

Anita Perera, Campaigner at Greenpeace South Asia – Sri Lanka
Phone: +94773925597
Email: [email protected]

Greenpeace media statement following the Kerala shipwreck disaster:
https://www.greenpeace.org/india/en/story/18544/greenpeace-india-statement-on-hazardous-cargo-ship-sinking-off-kerala-coast/
[1] In 2022, during the UN Biodiversity COP15, states agreed on a target of protecting at least 30% of the ocean by 2030, a figure supported by scientists for several years. 2.7% of the global ocean is currently fully or highly protected from human activities, and the figure is just 0.9% for areas of the high seas, which are beyond national jurisdiction.

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது

சென்னை, ஜூன் 8, 2025. கிரீன்பீஸ் இந்தியா, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தை ஒரு உறுதிமிக்க கொண்டாட்டத்துடன் கொண்டாடியது, அங்கு சுமார் 30 தன்னார்வலர்கள் அதிகாலை கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பல்லுயிர் பெருக்கத்தை நிலைநிறுத்துதல், காலநிலையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கடலோர சமூகங்களை ஆதரிப்பதில் கடல் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டும் வகையில் ஆலிவ் ரிட்லி ஆமையின் ஒரு அற்புதமான கலைவடிவம் காட்சிப்படுத்தப்பட்டது. சமீபத்திய கப்பல் விபத்து மற்றும் அதன் தொடர்ச்சியான விளைவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கேரள மக்களுடனான ஒற்றுமை மற்றும் வெளிப்படைத்தன்மை, சுத்தம் செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசரத் தேவையையும் இந்த நடவடிக்கை எடுத்துரைக்கிறது.

இந்த ஆண்டு, ஜூன் 9 முதல் 13 வரை பிரான்சில் நடைபெறும் ஐக்கிய பெருங்கடல் மாநாட்டின் தொடக்கத்திற்கு முன்னதாக உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. உலகப் பெருங்கடலைப் பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாடுகளைப் பற்றி விவாதிக்க உலகத் தலைவர்கள் இங்கு கூடுவார்கள். இதற்கிடையில், சமீபத்தில் கேரளாவின் கடற்கரையில் (மே 25 அன்று) ஏற்பட்ட MSC ELSA 3 கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்ட வியத்தகு தாக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, எரிபொருள் மற்றும் அபாயகரமான பொருட்களின் அச்சுறுத்தல்கள் கடலில் உள்ளன, அதே நேரத்தில் தெரியாத பொருட்ளின் உடைந்த கொள்கலன்கள் மற்றும் அதீத அளவு பிளாஸ்டிக் துகள்கள் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கரை ஒதுங்குகின்றன – பருவமழை காலம் ஆரம்ப சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சுத்திகரிப்பு முயற்சிகளைத் தடுக்கிறது. இலங்கையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவுக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு, பிராந்தியத்தின் கடல்வாழ் உயிரினங்கள், தனித்துவமான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீனவர் சமூகங்கள் நீடித்த விளைவுகளைக் கொண்ட மற்றொரு கப்பல் பேரழிவை எதிர்கொள்கின்றன, அதன் அளவு இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

பெசன்ட் நகர் மணல் பரப்பிலிருந்து கேரளக் கடற்கரை வரை, கடல் நம் அனைவரையும் இணைக்கிறது. சென்னையில் இன்றைய தூய்மைப்படுத்தும் பணி வெறும் கழிவுகளைச் சேகரிப்பது மட்டுமல்ல – கடல்தான் அவர்களின் உயிர்நாடி என்பதை அறிந்த உள்ளூர் தன்னார்வலர்கள் தலைமையிலான கூட்டுப் பராமரிப்பின் தருணமாகவும் இது அமைந்தது. சென்னையின் கடற்கரைகள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாட்டையும் கடல் மட்ட உயர்வுகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், கேரள மீனவர்களுடனான நமது ஒற்றுமை மற்றும் கடல் பாதுகாப்பு வீட்டிலிருந்தே தொடங்குகிறது என்பதை நினைவூட்டுகிறது. எம்எஸ்சி கப்பல் விபத்து கடல் பல்லுயிர் பெருக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது மற்றும் கேரளா மற்றும் தமிழக கடற்கரைகளில் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தியுள்ளது. “எம்எஸ்சி பேரழிவிற்கு நாம் அவசரமாக பொறுப்புக்கூற வேண்டும், அதே நேரத்தில் கடலோர மீள்தன்மையை உருவாக்குவதில் நீண்டகால முதலீடும் தேவை,” என்று கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சாரகர் யாசின் ஃபஹ்மிதா கூறினார்.

“MSC ELSA 3 இன் அனைத்து பொருட்கள் பற்றிய அறிக்கையை வெளியிடுமாறு உள்ளூர் அதிகாரிகளையும் MSC நிறுவனத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தென்னிந்தியாவில் உள்ள மக்களுக்கு விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்த விரிவான அறிக்கையையும், கப்பல் விபத்துக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இன்னும் தொடர்பு கொள்ளாத MSC-யிடமிருந்து விரிவான சுத்தம் செய்தல் மற்றும் இழப்பீட்டுத் திட்டத்தையும் அறிந்துகொள்ளவும் எதிர்பார்க்கவும் உரிமை உண்டு. கப்பல் துறையின் கார்பனேற்றம் மற்றும் உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு ஆகியவை ஐ.நா. பெருங்கடல் மாநாட்டில் விவாதிக்கப்படும்போது, ​​MSC போன்ற பெரிய லாபகரமான கப்பல் நிறுவனங்கள் இதுபோன்ற பேரழிவுகளில் தங்கள் பொறுப்பிலிருந்து இனி விலகிச் செல்ல முடியாது, அதே நேரத்தில் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் துகள்களால் மூச்சுத் திணறி வருகின்றன, மேலும் மீன்பிடி சமூகங்கள் பட்டினியால் வாடுகின்றன, ”என்று கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சாரகர் அம்ருதாஸ் நாயர் கூறினார்.

பேரழிவுக்குப் பிறகு உடனடியாக கேரளாவில் கிரீன்பீஸ் ஒரு ஆவணக் குழுவை நியமித்தது – கடந்த வாரம் இந்த அமைப்பு கடல்சார் பங்குதாரர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து பிராந்தியம் முழுவதும் ஒரே செய்தியை தெரிவிக்க “ஒரு பெருங்கடல், பல உயிர்கள்”; எனும் தலைப்பில் வங்காளதேசத்தின் குல்னாவில்; இலங்கையில் காலி மற்றும் கொழும்பு; இந்தியாவில் ஒடிசா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பல நிகழ்வுகளை நடத்தியது.

“உலகப் பெருங்கடல் தினத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்வுகளுடன், பிராந்தியம் முழுவதும் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து நம்பிக்கையின் கூட்டுச் செய்தியை வழங்க விரும்புகிறோம்.”நமது பெருங்கடல்களில் 30% ஐப் பாதுகாக்க உலகளாவிய உயர் கடல் ஒப்பந்தத்தை [1] விரைவாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், கடலோர வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு அடிமட்ட லாபம் ஈட்டுவதற்காக சிறு அளவிலான மீனவர்களின் குரலையும் கடலோர சமூகங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் நாங்கள் நமது தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்கிறார் கிரீன்பீஸ் தெற்காசியாவின் பிரச்சாரகர் அனிதா பெரேரா.

ஊடக தொடர்புகள்:
நிபேதிதா சஹா
கிரீன்பீஸ் இந்தியாவின் ஊடக அதிகாரி தொலைபேசி: +91 7045066118 மின்னஞ்சல்: [email protected]
அம்ருதா எஸ் நாயர்
கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சாரகர்
தொலைபேசி: +918304010458 மின்னஞ்சல்: [email protected]

அனிதா பெரேரா
கிரீன்பீஸ் தெற்காசியா – இலங்கையின் பிரச்சாரகர்
தொலைபேசி: +94773925597 மின்னஞ்சல்: [email protected]
கேரள கப்பல் விபத்து பேரழிவைத் தொடர்ந்து கிரீன்பீஸ் ஊடக அறிக்கை: https://www.greenpeace.org/india/en/story/18544/greenpeace-india-statement-on-hazardous-cargo-ship-sinking-off-kerala-coast/

[1] 2022 ஆம் ஆண்டில், UN பல்லுயிர் COP15 இன் போது, ​​2030 ஆம் ஆண்டுக்குள் கடலின் குறைந்தது 30% பகுதியைப் பாதுகாக்கும் இலக்கை நாடுகள் ஒப்புக் கொண்டன, இந்த அளவை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆதரித்துள்ளனர். உலகளாவிய பெருங்கடலில் 2.7% தற்போது மனித நடவடிக்கைகளிலிருந்து முழுமையாகவோ அல்லது அதிகமாகவோ பாதுகாக்கப்படுகிறது, மேலும் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட உயர் கடல்களின் பகுதிகளுக்கு இந்த எண்ணிக்கை வெறும் 0.9% மட்டுமே.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது.

0

தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள்ளை கொண்ட “புகழ்” கதாநாயகனாக நடிக்க
எதிர் நாயகனாக முரட்டு நகைச்சுவை மன்னன்
ரவி மரியா நடிக்கிறார். அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிப்பட ஒளிப்பதிவாளர்
யு.கே. செந்தில்குமார் கையாள, இசையை சுபாஷ் முனிரத்தினம் அமைக்க, கலையை
மு. து. பிரபாகரன் கவனிக்க, படத்தொகுப்பை
ஃபாசில் தொகுக்க,

கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார்வை ச. அருணாச்சலம்.

காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய,
சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து இனிதே துவக்கி வைத்தனர்.

எம். ஸ்ரீ வத்சன்,
எம். கோகுல் கிருஷ்ணன் தயாரிக்கிறார்கள்.
இணை தயாரிப்பு வி. கே. முருகேசன், திருப்பூர் ஜியோ ஏ. என். செல்வராஜ்.

Dr. Kamal Haasan Files Nomination for Rajya Sabha Elections

0

Dr. Kamal Haasan, President of Makkal Needhi Maiam, officially filed his nomination today for the upcoming Rajya Sabha elections from Tamil Nadu. He has been nominated as a candidate by the DMK-led alliance.

Dr. Haasan submitted his nomination papers at the Tamil Nadu Legislative Assembly in the presence of Hon’ble Chief Minister Thiru M.K. Stalin, Hon’ble Deputy Chief Minister Thiru Udhayanidhi Stalin, and senior leaders of the alliance.

He was accompanied by Makkal Needhi Maiam Vice Presidents Dr. A.G. Mourya, IPS (Retd.), and R. Thangavelu, along with General Secretary A. Arunachalam, M.A., B.L., during the filing process before the Returning Officer.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), R. தங்கவேலு மற்றும் பொதுச் செயலாளரான ஆ. அருணாச்சலம் M.A., B.L., ஆகியோர் உடன் சென்றிருந்தார்கள்.

Producer Kannan Ravi Donates Rs. 5 Lakh to Late Director Vikram Sugumaran’s Family

0

The Tamil film industry was left in deep shock following the sudden and unexpected demise of director Vikram Sugumaran, known for his distinct voice and storytelling. In a heartfelt gesture, Producer Kannan Ravi, who had produced Vikram Sugumaran’s last film Raavana Kottam, donated a sum of Rs. 5 Lakh to the late filmmaker’s family as a token of support during this time of irreparable loss.

The cheque was handed over by his son Deepak Ravi to Vikram Sugumaran’s mother, offering solace and solidarity to the grieving family. The gesture took place in the presence of notable industry figures including actor Shanthanu Bhagyaraj, Amma Creations T. Siva, and FEFSI President Director R.K. Selvamani.

Speaking about the loss, Kannan Ravi said, “It’s deeply disheartening for us to process the sudden loss of director Vikram Sugumaran. He was a remarkably talented and passionate filmmaker, whose ideas and vision stood out. It’s truly unfortunate that the industry has lost him before we could see the full extent of his brilliance. My deepest prayers go out to his family and loved ones. May his soul rest in peace. The Raavana Kottam team will always consider his family as our own.”

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்!

தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாறனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. இந்த நேரத்தில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது கடைசிப் படமான ’இராவண கோட்ட’த்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ரோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார்.

இந்த இழப்பு குறித்து கண்ணன் ரவி கூறுகையில், “இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் திடீர் இழப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் திறமையும் ஆர்வமும் ஒருங்கே கொண்ட இயக்குநர். அவரது திறமையை முழுமையாகக் காணும் முன்பே திரைப்படத்துறை அவரை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ‘இராவண கோட்டம்’ படக்குழுவினருக்கு விக்ரம் சுகுமாறன் குடும்பமும் எங்களுடைய குடும்பம் போலதான்” என்றார்.

Munawar Faruqui Teases Fans with ‘First Copy’ Merch Ahead of His Acting Debut*

0

Munawar Faruqui is gearing up to surprise his audience in an all-new avatar — as an actor. The popular stand-up comedian, rapper, and reality show winner is set to make his acting debut with First Copy, a web series slated to release this June.

Building anticipation ahead of the launch, Munawar gave fans a glimpse of the show’s official merchandise. In a recent Instagram story, he was seen donning a t-shirt printed with the show’s title, “First Copy,” alongside the cheeky caption: “Merchandise ready hai! MKJ bhejun?” The drop reflects the tone of the series — edgy, authentic, and rooted in real issues.

https://www.instagram.com/stories/munawar.faruqui/3647703973398581919?utm_source=ig_story_item_share&igsh=MTZrNDFuanlnc2U5OQ==

First Copy dives into the world of film piracy, promising a gritty and original narrative. Munawar, known for his raw storytelling and sharp wit, brings that same energy to the screen, marking a significant milestone in his creative journey.

The buzz around the show is already high, and the early reveal of merchandise has only added to the excitement. With his debut just weeks away, Munawar’s fans have plenty to look forward to — both on screen and in their wardrobes.

‘நிழற்குடை’க்கு ஓடிடியிலும் வரவேற்பு ; மகிழ்ச்சியில் தேவயானி

0

‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வரவேற்புடன் ஸ்ட்ரீமிங் ஆகும் தேவயானியின் ‘நிழற்குடை’

சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் பெரிய படங்களுக்கு வசூல் ரீதியாக கூட சவால் விடத் துவங்கியுள்ளன. இதனால் நல்ல தரமான கதை அம்சம் கொண்ட படங்களை வெளியிடுவதில் தற்போது ஒரு போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம்.

திரையரங்கு உரிமையாளர்களும் ஒடிடி நிறுவனங்களும் கூட இது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் மீது தங்கள் பார்வையை திருப்ப துவங்கியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் குடும்பக் கதையம்சத்துடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் தான் நிழற்குடை.

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வெளியான இப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப்படம் இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் சொல்லியிருந்தது.

இந்த படம் வெளியான போது நாளிதழ்கள் இணையதளங்கள், யூட்யூப் சேனல்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுகளையும் பெற்றதோடு, திரையரங்கில் பார்த்து ரசிகர்களும் ஒரு உணர்வுபூர்வமான படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது என தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்படி திரையரங்கில் வரவேற்புடன் ஓடிய நிழற்குடை படம் தற்போது ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி ( ஸ்ட்ரீமிங்) ) வருகிறது. ஓடிடியில் படம் வெளியான நாளில் இருந்து இப்போது வரை பல லட்சம் நிமிடங்கள் நிழற்குடை படம் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் திரையரங்குகளில் இந்த அருமையான கதை அம்சம் கொண்ட படத்தை பார்க்க தவறியவர்கள் கூட ஓடிடியில் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

இந்த படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்திருந்த நடிகை தேவயானி படத்தை தூணாக தாங்கி பிடித்திருந்தார். திரையரங்குகளிலும் ஓடிடியிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தேவயானி.

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Boman Irani at Cannes = Bollywood’s Jay Pritchett, and Reddit is living for it.

0

When Boman Irani hit the Cannes red carpet, Reddit had just one thing to say: Modern Family, but make it desi. With his sharp suit, composed aura, and that unmistakable “I-own-17-hotels-and-quietly-judge-your-wine-order” energy, users crowned him India’s Jay Pritchett — and honestly, we can’t unsee it either.

The Reddit thread went viral faster than a Modern Family rerun on a Sunday afternoon. One user dubbed him the “perfect casting” for a Hindi remake, while another hilariously imagined him scolding Manny for yet another failed poetry reading.

“Jay Pritchett coded is so real,” one comment read — and from that moment on, the internet had a new crossover fantasy. At a festival packed with fashion peacocks and paparazzi flair, Boman wasn’t just seen — he set the tone. Stoic. Stylish. Slightly over the circus. Just like Jay.
https://www.reddit.com/r/BollyBlindsNGossip/comments/1kr5zh1/comment/mthvaqg/?utm_source=share&utm_medium=web3x&utm_name=web3xcss&utm_term=1&utm_content=share_button

Comment
by from discussion
inBollyBlindsNGossip
Comment
by from discussion
inBollyBlindsNGossip

Legacy, class, and a side of sass? Jay Pritchett would definitely tip his glass.

Udhaya, Ajmal, and Yogi Babu-starrer ‘Accused’ grabs attention online with a spectacular bus fight sequence

0

Made under the banners of Jaeshan Studios in association with Sachin Cinemas, Sri Dayakaran Cine Productions, and MIY Studios, ‘Accused’ is a film produced on a grand budget by A.L. Udhaya, ‘Daya’ N. Panneerselvam, and M. Thangavel.

Directed by Prabhu Srinivas, a renowned director in the Kannada film industry known for his successful films, the film will see Udhaya acting with Ajmal and Yogi Babu for the first time. The movie features popular Kannada actress Jahnvika as the female lead.

The upcoming mega-budget film ‘Accused’, marking actor Udhaya’s 25th year in cinema, has become the talk of the town with its grand scale and high-octane action. Produced on a scale rivaling top-tier commercial films, ‘Accused’ is Udhaya’s most ambitious project to date.

A standout highlight from the film is a gripping bus fight sequence, which has taken the internet by storm. This elaborate stunt was choreographed by renowned action director Stunt Silva and features over 40 fighters and supporting actors. The scene was shot over an intensive 12-day schedule, reflecting the team’s commitment to delivering a world-class action experience.

For this fight sequence alone, the production team went to extraordinary lengths — purchasing one bus outright and renting another exclusively for filming purposes. It is reported that over ₹1 crore was spent on this sequence alone.

The making video of this scene, recently released online, has been met with enthusiastic reception from fans and film lovers. Further recognition came during the film’s music and trailer launch event held in Chennai, where Stunt Silva and Fighter Ambrose – who took great risk by actually driving the bus during the sequence – were specially honoured.

Notably, this marks the first time a stunt fighter has been formally felicitated at a music launch event, highlighting the production team’s appreciation for behind-the-scenes talent.

With the songs and trailer of ‘Accused’ garnering widespread praise across audiences, the team is gearing up for the film’s theatrical release in the near future.

The shooting of ‘Accused’, which was done on a huge budget, was completed in a single schedule of 54 days. Naren Balakumar has scored music for the movie. Cinematography of the film was handled by Maruthanayagam I. The film’s editing was done by renowned editor K.L. Praveen. The art direction was by Anand Mani, and public relations are managed by Nikil Murukan.

ஆக்ஷன் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, ஃபைட்டர் அம்ப்ரோசுக்கு குவியும் பாராட்டு

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான ‘அக்யூஸ்ட்’, உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.

பெரும் பொருட்செலவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டுள்ள பேருந்து சண்டைக்காட்சி ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆக்ஷன் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா வடிவமைத்த இந்த சண்டைக்காட்சி சுமார் 40 ஃபைட்டர்கள் மற்றும் துணை நடிகர்கள் பங்களிப்புடன் 12 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்த சண்டைக்காட்சிகாக மட்டுமே ஒரு பேருந்தை விலைக்கு வாங்கியும் ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்தும் படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளனர். ரூ 1 கோடிக்கு மேல் இந்த சண்டைக்காட்சிகாக மட்டும் செலவானாதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் மற்றும் இந்த சண்டைக் காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து பஸ்சை ஓட்டிய ஃபைட்டர் அம்புரோஸ் ஆகியோர் பாராட்டப்பட்டனர். இசை வெளியீட்டு விழாவில் ஃபைட்டர் ஒருவர் கௌரவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

‘அக்யூஸ்ட்’ படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

Lifestyle Housing Unveils Le Palais — A French-Inspired Landmark Project in Chennai

0

Chennai, 05-06-2025 June 2025 – Lifestyle Housing, one of Chennai’s most trusted real estate developers, marked a significant milestone with the grand unveiling of its latest premium residential project, Le Palais — an elegant, French-inspired gated community located in Porur. The unveiling ceremony took place during an exclusive event attended by partners, media, and key stakeholders, celebrating Lifestyle Housing’s 15 years of building excellence and reaffirming its bold vision for Chennai’s future skyline. The Le Palais Project is set to be officially launched on June 21, 2025.

The evening was a curated blend of celebration and purpose — spotlighting Lifestyle Housing’s journey of delivering over 8 lakh sq. ft. of completed development, with 5 lakh sq. ft. under construction and 4 lakh sq. ft. planned. The event also offered a preview of the company’s upcoming ventures in Vengaivasal and Valarpuram, reinforcing its rapid growth trajectory.

Introducing Le Palais: A New Standard in Urban Living
Set in the bustling heart of Porur, Le Palais blends classical French aesthetics with modern living. Comprising 116 thoughtfully designed 2 & 3 BHK apartments across Stilt + 5 floors, it features over 40+ luxury amenities including a EV charging station and landscaped gardens — all within an IGBC pre-certified green development.

Speaking at the launch, Mr. Priyank Pincha, Founder & Managing Director of Lifestyle Housing, shared:

“Le Palais is not just a project — it’s a statement of our vision. After 15 years of crafting homes across Chennai, this launch celebrates our continued commitment to thoughtful design, environmental responsibility, and building communities that endure. From day one, we’ve believed in combining prime locations, efficient layouts, and honest delivery. Le Palais embodies all these values in a singular, striking form.”

Highlights from the Event
The event also spotlighted Lifestyle Housing’s other ongoing premium residential projects including Vardaan (Mint), Podium (T. Nagar), Portrait (Adyar) And Le Paradise (Mugalivakkam). On the commercial front, Lifestyle is delivering boutique business spaces such as Mint Plaza (Mint) and Balfort (Kilpauk) — reinforcing the brand’s presence across both sectors.

Award-Winning Credibility
With accolades including Best Luxury Developer of the Year (2022), Best Architecturally Designed Project for Le Paradise (2022), and Best Plotted Infra Development for One Land (2023), Lifestyle Housing continues to raise the bar in real estate development.

A Future Built on Foundations of Trust, Design & Sustainability

From its unwavering vaastu compliance to kid- and senior-friendly environments, transparent practices, and customer-first philosophy, Lifestyle Housing has built a reputation for crafting not just homes, but legacies.

As Chennai evolves, so does its skyline — and Lifestyle Housing is proud to be one of the visionaries shaping it.

- Advertisement -

Recent Posts