Wednesday, June 18, 2025
- Advertisement -
Home Blog Page 8

Epic Unveiling, Unik Star Nikhil, Bharat Krishnamachari, Pixel Studio’s Pan India Project Swayambhu Massive Poster Unveiled On The Actor’s Birthday, Teaser Soon

0

Unik Star Nikhil got nationwide recognition with the Pan India level success of his movie Karthikeya 2, and he is now coming up with another Pan India venture Swayambhu, which marks his landmark 20th. Currently in production, Swayambhu is a grand-scale historical action epic directed by Bharat Krishnamachari. The film will present Nikhil in a never-before-seen avatar, as a legendary warrior, promising a powerful blend of intense drama, visual spectacle, and cultural depth. Produced by Bhuvan and Sreekar under the banner of Pixel Studios and presented by Tagore Madhu, this project is being crafted with top-tier production, and technical values and a strong Pan-India vision.

Team Swayambhu dropped a massive poster on Nikhil’s birthday, featuring the powerful duo, Nikhil and Samyuktha. Set against a backdrop of war, the poster introduces an Ancient sceptre – the Sengol!

Nikhil looks intense and powerful, like a true and legendary warrior holding a sword, caught in the middle of battle. Beside him, Samyuktha stands strong with a bow and arrow, ready to take aim. The poster itself is a testament to the film’s grand scale and promises a visually stunning experience. The presence of the Sengol in the background adds a sense of power and significance.

The Sengol is a Symbol of power and Righteousness. From the Ancient kingdoms to India’s independence, the Sengol’s significance is legendary. According to our ancient history, Lord Rama received the Sengol as a symbol of righteous rule, setting the precedent for just leadership.

Recently, Prime Minister Narendra Modi installed the Sengol near the Speaker’s seat in the new Parliament building, paying homage to India’s rich heritage.

Now, Swayambhu weaves its story around these Powerful Backdrops and the upcoming teaser release will reveal more into this exciting world.

The anticipation is palpable! Can’t wait to witness the epic tale unfold.

Nabha Natesh is the other female leads in the movie. KK Senthil Kumar handles the cinematography, while Ravi Basrur scores the music. M Prabhaharan and Raveendra are the production designers.

Cast: Nikhil, Samyuktha, Nabha Natesh

Technical Crew:
Writer, Director: Bharat Krishnamachari
Producers: Bhuvan and Sreekar
Banner: Pixel Studios
Presents: Tagore Madhu
DOP: KK Senthil Kumar
Music: Ravi Basrur
Editor: Tammiraju
Dialogues: Vijay Kamisetty
Production Designers: M Prabhaharan, Raveendar
Action: King Solomon, Stunt Silva
Lyrics: Ramajogayya Sastry
PRO: Vamsi-Shekar,
PRO: Suresh Chandra- Abdul Nasser
Marketing: First Show

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

‘கார்த்திகேயா 2’ படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான ‘சுயம்பு’ இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார். இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார்.

போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இருக்கும்படி ‘சுயம்பு’ படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை நிகில் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நிகில் தீவிரமாகவும் வலுவானவராகவும் போர்க்களத்தின் நடுவில் வாளேந்தி நிற்கிறார். வில் மற்றும் அம்புடன் சம்யுக்தாவும் வீரப்பெண்மணியாக இந்த போஸ்டரில் இருக்கிறார். இந்த போஸ்டரே படம் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

சக்தி மற்றும் நீதியின் சின்னம் தான் செங்கோல். பண்டைய ராஜ்ஜியங்கள் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரை செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. நமது பண்டைய வரலாற்றின் படி, ராமர் தனது ஆட்சியின் போது செங்கோல் வைத்திருந்தார். நீதியுடன் நடக்கும் ஆட்சிக்கு இது முன்னுதாரணமாக அமைந்தது.

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை நிலைநாட்டினார்.

தற்போது ‘சுயம்பு’ திரைப்படமும் இந்த வலுவான கதைக்களத்தை சுற்றியே அமைந்துள்ளது. வரவிருக்கும் டீசர் இந்த உலகத்தை இன்னும் விரிவாகக் காட்ட இருக்கிறது.

நபா நடேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
ஒளிப்பதிவு: கே.கே.செந்தில் குமார்,
இசை: ரவி பஸ்ரூர்,
எடிட்டர்: தம்மிராஜு,
வசனம்: விஜய் காமிசெட்டி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்கள்: எம் பிரபாகரன், ரவீந்தர்,
ஸ்டண்ட்: கிங் சாலமன், ஸ்டண்ட் சில்வா,
பாடல் வரிகள்: ராமஜோகய்யா சாஸ்திரி,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு),
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர் (தமிழ்),
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

KALAIGNAR TV – GOWRI SERIAL

0

சூடுபிடிக்கும் திருவிழா – எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, எல்லைக் காளி கோவிலில், திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், திருவிழாவில் வைத்து துர்கா மற்றும் கௌரியை தீர்த்துக் கட்ட ஆவுடையப்பன் சதி திட்டம் தீட்டுகிறான்.

மறுபுறம், துர்காவை கொல்ல இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் நாள் குறிக்க, தனக்கு குறித்த நாளிலேயே சரவணப்பெருமாளின் உயிர் போகும் என துர்காவும் சபதம் செய்கிறாள்.

இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் உண்மையான துர்கா கண்விழித்து ஆவுடையப்பன் வீட்டுக்கும் வந்தால் என்ன நடக்கும்? அதே நேரத்தில், துர்கா ரூபத்தில் இருக்கும் கனகா உண்மையில் யார் என்கிற உண்மைகள் தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்புகளுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Startup Singam Season 2 Returns on Vijay TV & Jio Hotstar This November: Bigger, Better, and Open for Applications

0

With ₹55 Crore committed in just 13 episodes during its debut season, Tamil Nadu’s pioneering startup show now aims to fund and showcase 75 high-potential ventures in 26 episodes of Season 2.
Chennai, Tamil Nadu –
After making waves in the startup ecosystem and Tamil households alike, Startup Singam is back — bigger and better. Season 2 of Tamil Nadu’s first-ever startup reality show will air from November 2025 on Vijay TV and Jio Hotstar, showcasing 75 curated startups across 26 episodes. Applications are now open at www.startupsingam.com. From discovering grassroots founders to enabling real investment conversations, Startup Singam merges entrepreneurial grit with regional storytelling — and Season 2 promises to take that impact to the next level.
What Season 1 Achieved

  • • Facilitated ₹55+ Crore in investment commitments
  • • Aired 13 episodes, each featuring live investor engagements
  • • Shortlisted and supported 39 startups across diverse sectors
  • • Engaged 75+ investors, including prominent VCs, angel networks, and HNIs
  • • Reached lakhs of viewers across Tamil Nadu and the global Tamil diaspora
    More than just a media product, it became a movement of visibility, capital, and credibility for early-stage startups from Tamil Nadu and beyond.
    What’s Bigger and Better in Season 2
  • • 75 startups to be featured — across Idea, Early, Growth, and Scale-up stages
  • • 26 primetime episodes combining storytelling with serious funding opportunities
  • • Initial due diligence for every startup before investor exposure
  • • A jury of top investment firms to evaluate and engage with founders
  • • Professionally shot AVs, investor-ready decks, and pitch preparation to ensure startups are deal-ready before airing
  • • Strong focus on sectors like SaaS, Deeptech, D2C, Agritech, Healthtech, and Impact Ventures
    The platform aims not just to entertain, but to catalyze real fundraising and business acceleration for regional entrepreneurs.
    Voices Behind the Show
    Kumar Vembu, Chief Mentor of Startup Singam, and co-founder of Zoho, shared:
    Startup Singam is breaking barriers — it’s where capital meets character. We are not just broadcasting stories; we are building India’s next generation of entrepreneurs from the grassroots. Season 2 will be a turning point for founders who are ready to grow.

Hemachandran, Co-Founder, added:
This is more than a show. It’s a platform that finds, funds, and fuels Tamil Nadu’s most promising startups.

Balachandar, Co-Founder, noted:
Season 2 is our leap forward — wider reach, deeper process, and more success stories waiting to be told.

Call for Founders: Applications Now Open
Whether you’re a college innovator, an SME founder, or a scale-up entrepreneur from a Tier-2 city — if you have a compelling product and a growth story, Startup Singam wants you. Apply now at: www.startupsingam.com
About Startup Singam
Startup Singam is India’s first Tamil-language startup television show connecting founders with real investors and a mass audience. A unique confluence of innovation, capital, and cultural storytelling — it is redefining how early-stage entrepreneurship is discovered and funded in India.

ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் 2 நவம்பரில் விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் – இன்னும் பெரிதாக புதுமையாக.!!

முதல் சீசனில் மட்டும் ரூ.55 கோடியை 13 எபிசோட்களில் முதலீடாக உறுதி செய்த பிறகு, இப்போது 26 எபிசோட்களில் 75 வல்லமை வாய்ந்த ஸ்டார்ட்அப்புகள் அறிமுகமாக இருக்கின்றன.

சென்னை, தமிழ்நாடு –
ஸ்டார்ட்அப் உலகத்தையும், தமிழ் குடும்பங்களையும் சமமாகக் கவர்ந்த நிகழ்ச்சியான ஸ்டார்ட்அப் சிங்கம் மீண்டும் புதிய அத்தியாயத்துடன் ஆரம்பமாக உள்ளது.– இந்த முறை மேலும் பெரிதாகவும், புதுமையாகவும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ்நாட்டின் முதலாவது ஸ்டார்ட்அப் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆன இது 2025 நவம்பர் மாதத்தில் விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. 26 எபிசோட்களில் 75 தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்புகள் தங்களது பயணத்தையும் கனவுகளையும் பரப்ப தயாராக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது www.startupsingam.com-ல் வரவேற்கப்படுகின்றன.

முதல் சீசன் பெற்ற வெற்றிகள்
ரூ.55 கோடிக்கு மேல் முதலீட்டு உறுதிகள்
ஒவ்வொரு எபிசோடிலும் நேரடி முதலீட்டாளர் கலந்துரையாடல்கள்
பல்துறை ஸ்டார்ட்அப்புகள் உட்பட 39 நிறுவனங்கள் தேர்வாகின
75+ முதலீட்டாளர்கள் – முன்னணி வின்சர் கேபிடல்களும் ஏஞ்சல் நெட்வொர்க்குகளும் உள்ளடக்கம்
தமிழகத்திலும், உலகத்தமிழ் மக்களிடையும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது.
ஸ்டார்ட்அப் சிங்கம் ஒரு சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்ல; இது தொடக்க நிலை ஸ்டார்ட்அப்புகளுக்கான மூலதனம், நம்பிக்கை, மற்றும் நம்பிக்கையான அங்கீகாரம் கிடைக்கும் ஒரு இயக்கமாக மாறியுள்ளது.

சீசன் 2 – மேலும் பெரியது, மேலும் சிறந்தது
75 ஸ்டார்ட்அப்புகள் – யோசனை (Idea), ஆரம்ப நிலை (Early), வளர்ச்சி (Growth), மற்றும் பரவலாக்கம் (Scale-up) அனைத்தும்
26 பிரதான எபிசோட்கள் – உருக்கமான கதைகள் மற்றும் உண்மை முதலீட்டுத் தேவைகளை இணைக்கும் வடிவத்தில்
ஒவ்வொரு ஸ்டார்ட்அப்புக்கும் முதலீட்டுக்கு முன் தகுதி ஆய்வு
முன்னணி முதலீட்டு நிறுவனங்களின் ஜூரி குழு நேரடியாக மதிப்பீடு செய்யும் வாய்ப்பு
தொழில்முறை AV-கள், முதலீட்டாளர்களுக்கான பிச்ச் டெக்குகள், மற்றும் தயாரிப்பு பயிற்சிகள்
முக்கிய துறைகள் – SaaS, டீப்ப்டெக், D2C, வேளாண் தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்ற ஸ்டார்ட்அப்புகள்
இந்த மேடையின் நோக்கம் பொழுதுபோக்கை தாண்டி உண்மையான முதலீடு மற்றும் வணிக வளர்ச்சியை உருவாக்குவதாக இருக்கிறது.

நிகழ்ச்சியின் தலைமையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்:
குமார் வெம்பு, Startup Singam தலைமை வழிகாட்டி மற்றும் ZOHO நிறுவனத் துணை நிறுவனர்:
“ஸ்டார்ட்அப் சிங்கம் என்பது தடைகளை கடந்து – இது முதலீடும் மனிதத்துவமும் சந்திக்கும் இடம். இங்கே நாம் கதைகளை மட்டும் ஒளிபரப்பவில்லை; மண்ணிலிருந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை நிறுவனர்களை உருவாக்கி வருகிறோம்.”

ஹேமச்சந்திரன், இணை நிறுவனர்:
“இது ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. இது ஸ்டார்ட்அப்புகளை கண்டுபிடித்து, நிதியளித்து, வளர்க்கும் ஒரு மேடை.”

பாலசந்தர், இணை நிறுவனர்:
“சீசன் 2 என்பது எங்கள் அடுத்த பெரிய நகர்வு – அதிகமான மக்களை சென்றடையும், ஆழமான செயல்முறை, மேலும் வெற்றிக் கதைகளுடன் உங்களை கவரும்.”

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான அழைப்பு – இப்போதே விண்ணப்பியுங்கள்!
நீங்கள் கல்லூரி மாணவரா, சிறு அல்லது நடுத்தர நிறுவனத் தலைவர் இருக்கிறீர்களா, அல்லது ஒரு Tier-2 நகரில் இருந்து ஒரு வளர்ந்து வரும் ஸ்கேலப் நிறுவனம் நடத்துகிறீர்களா?
உங்களிடம் ஒரு வலுவான தயாரிப்பும் வளர்ச்சி கதை இருந்தால் – Startup Singam உங்களைத் தேடுகிறது.
விண்ணப்பிக்க: www.startupsingam.com

Chennai Bulls Unveil Team, Official Jersey and Song Ahead of Season 1 of Rugby Premier League

0

Chennai, 2nd June 2025: Chennai Bulls, the city’s official franchise in the inaugural season of Rugby Premier League (RPL), was formally unveiled to the fans, as the team also launched its official jersey, team song, and addressed the media at the Madras Cricket Club in Chennai on 2nd June, 2025 (Monday).

The launch was attended by Sendhil V. Thyagarajan, Treasurer of Rugby India, Aadhav Arjuna, Basketball Federation of India (BFI) President & General Secretary of Tamil Nadu Olympics Association and Akshit Sharma, from Chennai Bulls’ leadership group. Also present on the august occasion were the Head Coach of the franchise Ben Gollings and local movie star and former Indian rugby player, Vinay Rai.

The Chennai Bulls is owned by AvidSys Group’s – AVID Sports, an Indian-Australian sports company and is the only RPL franchise with an international investor, adding a global perspective to the league’s growth. Speaking about the franchise’s vision and expectations for the season, Akshit Sharma stated, “Chennai Bulls is more than just a rugby team, it’s a step toward transforming the sporting landscape in India. Our goal is to bring world-class infrastructure, coaching, and fan engagement to the heart of Chennai. We are committed to building a competitive team while deeply rooting ourselves in the local community. We believe the Chennai Bulls will inspire a new generation of athletes and rugby fans across the country.”

A legendary figure in international rugby sevens, Head Coach Ben Gollings brings a wealth of experience and a proven track record to the team. Gollings’ abilities as a player is well documented as he holds the record for the most points scored in the World Rugby Sevens Series, amassing 2,652 points over a decade-long tenure with the England Sevens team. The very experienced and well-travelled Gollings has also served as Head Coach for Sri Lanka and Olympic Champions Fiji.

While talking about the team’s strategy, Ben Collings stated, “Rugby 7s is such an exciting format—fast-paced, skill-heavy, and perfect for uplifting the profile of the sport in any corner of the world. Doing that with the Chennai Bulls is about understanding the players, building a stronger team, and making sure we hit the pitch with the intent being the best version of ourselves.”

Opening up about the RPL and its scope in India, Sendhil V. Thyagarajan said, “Rugby in India is a much-loved sport, with plenty of potential and interest, across the country. Rugby India is delighted to be a part of the RPL with the support of GMR Sports, as we look to hone and build a robust ecosystem for the sport. With Chennai Bulls now a part of the Rugby Premier League journey, we are confident that they will be able to inspire the younger generations in Tamil Nadu.”

While reflecting on the impact of RPL on India’s Olympics aspirations, Aadhav Arjuna said, “Exposing national players to high-level competition and diverse international playing styles is a crucial step in advancing India’s Rugby and Olympic aspirations. The league’s wide-reaching visibility will introduce rugby to millions of Indian sports fans, many of whom are discovering the sport for the first time. This growing awareness is essential to nurturing the next generation of talent and establishing a sustainable rugby ecosystem in the country.”

“Dedication, consistent hard work, and the willingness to learn from setback is important in every sporting journey. Rugby’s very ethos is team work, and it is an essential part of the Rugby Premier League’s first season as well. I am confident the passion, sincerity and dedication, together will only hold the sport in good stead in the future,” said Vinay Rai.

RPL, the first ever franchise-based Rugby 7s league in the world, is scheduled to be held from 15th to 29th June at the Andheri Sports Complex in Mumbai with six teams competing for the title in the maiden season.

Chennai Bulls Squad: Hannes Adler, Haakon Oeß, Nikias Lohe, Terry Kennedy, Joseva Talacolo, Ratu Sauturaga, Joaquin Pellandini, Alexander Davis, Vallabh Patil, Shanawaz Ahmed, Vinayak Hariraj, Muhammed Jasim EP, and Vinay A

ரக்பி பிரிமியர் லீக் சீசன் 1க்கு முன், சென்னை புல்ஸ் அணி, ஜெர்சி மற்றும் அணிக்கான பாடல் வெளியீடு!

சென்னை, ஜூன் 2, 2025 – ரக்பி பிரிமியர் லீக் (RPL) தொடக்க சீசனில் பங்கேற்கும் சென்னை புல்ஸ் அணி, ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அணியின் புதிய ஜெர்சி, அணிக்கான பாடல் வெளியிடப்பட்டு, செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சி சென்னையின் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்றது.

இந்த விழாவில் ரக்பி இந்தியாவின் பொருளாளராக உள்ள செந்தில் வி. தியாகராஜன், இந்திய பேஸ்கட் பால் சங்கத் தலைவர் மற்றும் தமிழக ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜூனா, சென்னை புல்ஸ் நிர்வாகத்திலுள்ள அக்ஷித் சர்மா, அணியின் பயிற்சியாளர் பென் காலிங்ஸ் மற்றும் நடிகரும் முன்னாள் ரக்பி வீரருமான வினய் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை புல்ஸ் அணியை AVID Sports, (இந்திய-ஆஸ்திரேலிய நிறுவனமான AvidSys Group) வழி நடத்துகிறது. சர்வதேச முதலீட்டாளர் உள்ள ஒரே அணி என்பதால், உலகளாவிய பார்வையுடன் இந்த அணியோடு லீக் தொடங்குகிறது.

அக்ஷித் சர்மா கூறியது பின்வருமாறு:

“சென்னை புல்ஸ் ஒரு அணி மட்டும் இல்லாமல், இந்திய விளையாட்டு உலகத்தை மாற்ற ஒரு முயற்சி. சிறந்த பயிற்சி, வளங்கள், மற்றும் ரசிகர்களுடன் நெருக்கம் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

பென் காலிங்ஸ், முன்னாள் ஆங்கில ரக்பி வீரர் மற்றும் உலகில் மிக அதிக புள்ளிகள் பெற்றவர் (2652 புள்ளிகள்). அவர் ஸ்ரீலங்கா மற்றும் ஒலிம்பிக் வெற்றியாளர்கள் பிஜிக்கு பயிற்சி அளித்தவர்.

“ரக்பி 7ஸ் விளையாட்டு வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இந்த அணியுடன் நன்றாக வேலை செய்து, சிறந்த விளையாட்டு அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கிறோம்” என்றார் அவர்.

செந்தில் வி. தியாகராஜன் பேசியதாவது :

“இந்தியாவிலும் ரக்பிக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். RPL லீக் மூலம் இன்னும் பலர் ரக்பியை அறிந்து விரும்புவார்கள். சென்னை புல்ஸ் நிச்சயமாக இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.”

ஆதவ் அர்ஜூனா கூறியது இதோ:

“இந்த லீக் மூலம் இந்திய வீரர்கள் அதிக போட்டி அனுபவம் பெறுவார்கள். இது ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதற்கான ஒரு நல்ல படியாக இருக்கும்” என்றார்.

வினய் ராய் கூறியது என்னவென்றால்:

“ரக்பி என்பது குழு விளையாட்டு. அனைவரும் ஒற்றுமையாக விளையாட வேண்டும். அதற்கான உற்சாகம் இந்த லீக்கில் தெரிகிறது” என பேசினார்

RPL லீக், உலகில் முதன்முறையாக ஃபிராஞ்சைஸி முறைப்படி நடைபெறும் ரக்பி 7ஸ் லீக். இது ஜூன் 15 முதல் 29 வரை மும்பை அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை புல்ஸ் வீரர்கள்:
Hannes Adler, Haakon Oeß, Nikias Lohe, Terry Kennedy, Joseva Talacolo, Ratu Sauturaga, Joaquin Pellandini, Alexander Davis, Vallabh Patil, Shanawaz Ahmed, Vinayak Hariraj, Muhammed Jasim EP, மற்றும் Vinay A.

பிரமாணப் பெண்களை ஒழுக்கம் இல்லாதவர்களாக காட்டுவது தான் சனாதானமா? – ‘வானரன்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகை கஸ்தூரி ஆவேசம்

0

ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ‘டூ’ பட இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘வானரன்’. இதில், பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாஜகான் இசையமைத்துள்ளார். வித்து ஜீவா படத்தொகுப்பு செய்துள்ளார். வெங்கட் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசைக் குறுந்தகட்டை வெளியிட, நடிகை கஸ்தூரி பெற்றுக் கொண்டார். மேலும், இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி பேசுகையில்,

“வானரன் படத்தை தயாரித்திருக்கும் ராஜேஷ் மற்றும் சுஜாதா ராஜேஷுக்கு வாழ்த்துகள். இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு படத்தை தயாரித்திருப்பதற்காக வாழ்த்துகிறேன். நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடத்திற்காக திருமணமே செய்யாமல் இருந்தவர், அவரே இப்போது திருமணம் பற்றி அறிவித்து விட்டார். அதுபோல் இயக்குநர் ஸ்ரீராமும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் சினிமாவில் சாதித்த பிறகு திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார். என்னை பொருத்தவரை திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்தால், மற்ற விசயங்களை சாதாரணமாக ஊதி தள்ளிவிடலாம். பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது, இசையமைப்பாளர் ஷாஜகானுக்கு வாழ்த்துகள்.

இன்று திரையுலகம் என்றால் அதில் இருப்பவர்கள் மீது தவறான பார்வையை தற்போதைய ஊடகங்கள் ஏற்படுத்தி விடுகிறார்கள். அதனால் சினிமா என்றாலே வெளியே இருப்பவர்களுக்கு தவறான பார்வை இருக்கிறது, இதற்கு காரணம் தற்போதைய யூடியுப் ஊடகங்கள் தான், இதை சொல்வது கஷ்ட்டமாக இருந்தாலும் இது தான் உண்மை. ஆனால், உண்மையில் சினிமா தான் மிக பாதுகாப்பானது. நான் திமிராகவும், தைரியமாகவும் சொல்கிறேன், இன்று பாலியல் பாலத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம் என்று தினம் தினம் செய்திகள் வருகிறது. ஆனால், சினிமாவில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கிறதா?, சினிமாவை பற்றி கிசுகிசு எழுதுபவர்கள் இதை கவனிக்க வேண்டும், சினிமாவில் ஊழியர்கள் அத்துமீறிட்டார்கள், நடிகையிடம் தவறாக நடந்துக் கொண்டார்கள், என்று சொல்லியிருக்கிறார்களா? இருக்கவே இருக்காது. ஒரு கால் டாக்ஸியில் போக பயப்படுவார்கள், ஆனால் எங்க யூனியன் வாகனங்களில் நாங்கள் இரவு நேரத்தில் தைரியமாக பயணிப்போம். எனது சிகை அலங்கார நிபுணர், மேக்கப், ஆடை வடிவமைப்பாளர் என அனைவரும் ஆண்கள் தான், அவர்கள் என் சகோதரர்கள் போல் என்னுடன் பயணித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்றால் கூட, அந்த உடையை உடனடியாக தைத்து கொடுப்பவர் ஆண் தான். ஆனால், அவர்கள் வேலையை மட்டுமே பார்ப்பார்களே தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார்கள். எனவே சினிமா மீதான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று கூட ஒரு பேட்டியில் அல்வா வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது? என்று என்னிடம் கேட்டார்கள். இதை சத்யராஜிடம் யாரும் கேடக மாட்றாங்க, என்னிடம் தான் கேக்குறாங்க, அது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த காட்சியை படமாக்கும் போது, வெயிலில் என் முதுகு வலித்தது, காட்சியை குறிப்பிட்ட நேரத்தில் எடுக்க வேண்டும், அதில் ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அந்த காட்சியை சரியாக எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருப்பார்களே தவிர, அவர்கள் மனதில் வேறு எந்த எண்ணமும் இருக்காது. அப்படிப்பட்ட கஷ்ட்டங்களையும், நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் நீங்கள் சொன்னாலே உங்களுக்கு நல்ல டி.ஆர்.பி, வியூவ்ஸ் வரும். அதை விட்டுவிட்டு, பொய்யான செய்திகளை போட்டு பிழைப்பு நடத்த வேண்டாம் என்று இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

கேளிக்கை வரியை பாதியாக குறைத்திருக்கும் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கேளிக்கை வரியை பாதியாக குறைத்ததற்கு திரையுலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று சிறிய படங்களுக்கு கேளிக்கை வரியை முழுவதுமாக குறைக்க வேண்டும், என்று நான் அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு நோய் பரவி அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதை நான் பார்க்கிறேன். சனாதானத்தையும், சாதியையும் இழிவுப்படுத்தும் படங்கள், அது தான் பெரிய முற்போக்கு சிந்தனை என்று படைப்பாளிகளிடம் இருப்பதை பார்க்கிறோம். ஆனால், அப்படி வருகின்ற படங்களை மக்கள் முழுமையாக நிராகரிப்பதையும் பார்க்கிறோம். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவிலுக்கு ஆண்டி என்று சொல்வது போல், குறிப்பிட்ட சமூகத்தை கேலியாக சித்தரிக்கிறார்கள். ஆண்களாக இருந்தால் அவர்களை கேலியாக சித்தரிப்பது, பெண்களாக இருந்தால் அவர்களை ஒழுக்க குறைவாக சித்தரிக்கிறார்கள். பிராமணர்கள் என்று சொன்னால், அவர்களது பூணூலை வைத்து தவறான காட்சிகள் அமைக்கும் போக்கை நாம் பார்க்கிறோம். இது முற்போக்கு இல்லை, சமூக நீதி இல்லை, மதச்சார்பின்மை இல்லை. உண்மையான மதச்சார்பின்மை என்பது, இன்று இயக்குநராக ஸ்ரீராம் இருக்கிறார், இசையமைப்பாளராக ஷாஜகான் இருக்கிறார். எத்தனையா இயக்குநர்கள் சாதியையும், சமூகத்தையும் தவறாக வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கும் வேலையில், நெற்றி முழுக்க அருமையான நாமத்தை சூடிக்கொண்டு, காவி சட்டையை போட்டுக்கொண்டு தயாரிப்பாளர், ஒரு இந்துவாக, ஒரு பிராமண சாதியை சார்ந்தவராக இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஹனுமான் வேடம் போட்டவருக்கும், இஸ்லாமிய ஒருவருக்கும் இடையே இருக்கும் புரிதலை, இனக்கத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள். இது தான் மதச்சார்பின்மை. இதைவிட்டு விட்டு மதம் மற்றும் சாதியை பற்றி தவறாக சித்தரித்து படம் எடுப்பது, மதச்சார்பின்மை இல்லை, அது ஒரு பொய் பித்தலாட்டம். உண்மையான மதச்சார்பின்மை என்றால் இந்த மேடையில் இந்துவும், இஸ்லாமியரும் இணைந்து பணியாற்றுகிறார்களே அது தான். சினிமாவில் சாதி, மதம் பார்ப்பதில்லை, நான் வந்த போதும் என்னிடம் என்ன ஆளு என்று எதுவும் கேட்கவில்லை. பின்னணியை தெரிந்து யாரும் படம் எடுப்பதில்லை, திறமையை மட்டுமே பார்த்து படம் எடுப்பது தான் சினிமா. அதிலும் மாறுபட்ட திசையில் பயணித்த சினிமாவை வேறு வழியில் திருப்பிய இயக்குநருக்கு பாராட்டுகள்.

இன்று திரைப்படங்களில் மாற்றம் வர வேண்டும், மக்களிடம் மாற்றம் வர வேண்டும். வானரன் மதம் சார்ந்த படம் இல்லை. அனைவருக்கான படம். அப்பா – மகள் பாசப்பினைப்பை சொல்லும் படம். இது மிக சிறந்த படம், மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படமே ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறது. இந்த முயற்சிக்கு இங்கு வந்து ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் என் வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்,” என்றார்.

முன்னாள் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில்,

“இது எனக்கு சற்று மாறுபட்ட மேடை, திரை மேடை என்பது எனக்கு அரிதானது. அரசியல் மேடை என்பது எனக்கு ஆசையானது. ஆனால், தமிழிசை இல்லாமல் திரைப்படங்கள் இல்லை, இந்த தமிழிசை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்பட இசை வெளியீட்டுக்காக வந்திருக்கிறேன், உங்களுக்கு என் வணக்கம். ராஜேஷ் மற்றும் சுஜாதா ராஜேஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்அவர்கள் இந்த படத்தை எப்படி தயாரித்தார்கள் என்று யோசித்த போது, அவர்கள் இருக்கும் இடம் ராமாபுரம். ராமாபுரத்தில் இருந்து வந்த சுதாஜாவும், ராஜேஷும் ராமரின் சீடர் ஹனுமானுக்காக ஒரு படம் எடுத்திருக்கிறார்கள், அந்த வகையில் மகிழ்ச்சி. இந்த இடத்தில் நான் ஒரு அரசியல் தலைவராகவோ அல்லது முன்னாள் ஆளுநராகவோ வரவில்லை. ஒரு ஹனுமான் பக்தையாக வந்திருக்கிறேன். பல நேரங்களில் திரைப்படத்துறையினர் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள், பெப்ஸியை சேர்ந்த தோழர்களை நான் சந்தித்து பேசியிருக்கிறேன். இருந்தாலும், நான் அதிகமான திரைப்படங்களை பார்ப்பதில்லை, ஆனால் அந்த துறை சம்மந்தமான நபர்களை சந்திக்கும் போது அவர்களை பாராட்டுவேன். அப்படிப்பட்ட என்னை இந்த திரைப்படத்தின் விழாவுக்கு வரவைத்தது யார்? என்றால் சத்தியமாக ஹனுமான் தான் என்னை இங்கு வரவைத்தார். வேறு எந்த படத்திற்காகவும் நான் வந்திருப்பேனா என்று தெரியாது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு என்னை வரவைத்த ஹனுமானை வேண்டி, இந்த படத்திற்கு அவ்ர் வெற்றியை தர வேண்டும், வானரன் வானவியலான வெற்றியை பெற வேண்டும் என்று ஹனுமானை வேண்டிக்கொள்கிறேன்

இந்த படத்தை இயக்கியிருக்கும் ஸ்ரீராம், இங்கே என்ன பொருத்தம் பாருங்கள். ஸ்ரீராமரின் பக்தராக இருக்கும் ஹனுமானை ஸ்ரீராம் டைரக்ட் செய்தாரா அல்லது ஹனுமான் ஸ்ரீராமரை டைரக்ட் செய்தாரா, என்று தெரியாது. ஆனால் இருவரும் சரியான டைரக்‌ஷனில் போனார்கள் என்பது நமக்கு தெரியும். எனவே இயக்குநர் சரியான டைரக்‌ஷனில் போயிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள் .இசையமைப்பாளர் ஷாஜகான், இது நல்ல ஒற்றுமை. எங்களுக்கு பலர் ஒரு சாயம் பூசினாலும், அதை எல்லாம் தாண்டி எல்லோரையும் ஒரே மாதிரி பார்ப்பது நாங்கள் மட்டும் தான். இன்று காலை கூட நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு இஸ்லாமிய சகோதரி தான் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். எனவே நாங்கள் காவியம் படைப்பவர்கள், ஆனால் எங்களை காவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதே சமயம் காவியையும் நாங்கள் விட மாட்டோம். காவிக்கு சொந்தக்காரர்களாக இருந்தால் அவர்கள் செந்தூரத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள், அப்படி இருந்தால் அவர்கள் நாட்டை காப்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதை நாம் தெளிவாக சொல்லிக் கொள்ளலாம்.

பிஜேஷ் நாகேஷ் பற்றி டாக்டர்.ராஜ்குமார்

சொல்லும் போது இயல்பாக நடித்தார் என்று கூறினார். அவர் நினைத்தால் டோப்பா வைத்து நடித்திருக்கலாம். அரசியல்வாதிகள் எல்லாம் டோப்பா வைக்க ஆரம்பித்த உடன், நடிகர்கள் எல்லாம் டோப்பா வைப்பதை விட்டுவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நான் அரசியல் பேசவில்லை, எதார்த்தமாக பேசுகிறேன், டூப்பாகவும் பேச மாட்டேன், உண்மையாக மட்டுமே பேசுவேன். இப்படி பேசுவதால் நான் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. தமிழகத்தை ஆள்பவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அதைவிட, இந்தியாவை ஆண்டுக் கொண்டிருக்கின்ற எங்கள் பாரத பிரதமர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஏன் என்றால், இந்த நாடு பாதுகாக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பிரதமர் மோடி தான். செந்தூரம் மிகப்பெரிய கொள்கையை எடுத்துச் சொல்வதோடு, மிகப்பெரிய செய்தியை எடுத்துச் சொல்கிறது. பொதுமக்களை அழிக்காமல் தீவிரவாதிகளை மட்டும் எங்களால் அழிக்க முடியும், என்று அரசு சொல்லியிருக்கிறது. இன்று கேன்சர் செல்களை அழிக்கும் போது நல்ல செல்களையும் அழிக்க வேண்டி இருக்கும். ஆனால், நமது மிகப்பெரிய ராணுவத்தினால் தனது சரியான வழிகாட்டுதலினால், விஞ்ஞானம் செய்ய முடியாத ஒன்றை, புற்றுநோய் திசுக்களை அழிக்கும் போது நல்ல திசுக்களையும் அழிக்கும் சூழல் மருத்துவத்துறையில் இருக்கும் போது, சுற்றி இருக்கும் மக்களை காப்பற்றிவிட்டு, தீவிரவாதிகளை மட்டுமே அழிப்பேன், ஏன் என்றால் நான் மனிதாபிமானி என்று சொல்லியிருக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களின் தொண்டனாக இங்கு நின்றுக்கொண்டிருக்கிறேன், ராமரின் தொடண்டரை போல. எங்கெல்லாம் ராமாயணம் இசைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமான் அமர்ந்திருப்பார் என்று எங்கள் திருநெல்வேலியில் சொல்வார்கள். அங்கு ராமர் கதை நடந்தால் ஹனுமானுக்கு ஒரு இருக்கை இருக்கும். எனவே, ஹனுமான் பற்றிய படத்தின் இந்த விழாவில் ஹனுமான் இங்கே நிச்சயமாக இருப்பார், என்று நான் நம்புகிறேன்.

இது கவர்ச்சிகரமான படமா என்றால் இல்லை, சண்டை, நடனம் இருக்க முடியாது. இது ஒரு நல்ல குடும்ப கதையாக இருந்து, மற்றவர்களுக்கு உதவும் கதையாக இருக்கிறது. இந்த இசைத்தட்டு வெளியிடும் இந்த செந்தூரம் தமிழகம் முழுவதும் இந்த வானரன் படத்தை வெறி பெற வைக்கும் என்று நம்புகிறேன். இன்று குடும்ப படங்கள், ஒழுக்கத்தை சொல்லும் படங்கள் வெற்றி பெறுவதாக நான் கேள்விபடுகிறேன். எனவே எளிமையான படங்கள் வெற்றி பெறுவது போல் இந்த ‘வானரன்’ படம் வெற்றி பெற வேண்டும். நான் கவர்னராக இருந்த போதும் சரி, எப்போதும் சரி எந்த நிகழ்ச்சிக்கு சென்று தொடங்கி வைத்தாலும், அது மிகப்பெரிய வெற்றி பெறும். அதுபோல் இந்த வானரன் படமும் வெற்றி பெறும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு கூட்டம் கூடுவது எவ்வளவு கஷ்ட்டம் என்று அரசியல்வாதியான எனக்கு தெரியும். சில நேரங்களில் கொடுப்பதை கொடுத்தால் தான் கூட்டம் வரும். அப்படி ஒரு நிலையில், இந்த வானரன் நிகழ்ச்சிக்கு இவ்வளவு கூட்டம் வந்திருப்பதே மிகப்பெரிய வெற்றி. வானரன் படத்திற்கு நிச்சயம் ஹனுமான் அருள் இருக்கும், அவரது அருள் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைக்கும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்,

“வானரன் ஸ்ரீராம் இயக்குநர். வானரன் என்றாலே ஹனுமான் தான், அவர் தான் ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று சொல்வார். இங்கு ஸ்ரீராம் ஆஞ்சநேயர் என்று சொல்லியிருக்கிறார். நாகேஷ் மிகப்பெரிய நடிகர், அவரது வாரிசு நடிக்க வந்தது மகிழ்ச்சி. அவரது நடிப்பு இயல்பாக இருந்தது. இந்த கதைக்கு ஏற்ற உருவம். அந்த குழந்தையும் சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தை சிறப்பாக நடித்ததை இந்த படத்தில் தான் பார்க்கிறேன். இந்த படத்தை வெளியிடப்போகிறவர் ராமாபுரம் ராஜேஷ் பி.ஜே.பி, பி.ஜே.பியுடன் ராமாபுரம் சேர்ந்தாலே வெற்றி தான். எனவே இந்த படமும் வெற்றி தான். கதாநாயகி ஹோம்லியாக இருக்கிறார், நன்றாக நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த படம் வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹனுமான், ராமர் வேடம் போடுகிறவர்களை நாம் பார்ப்போம், ஆனால் அவர்களுகு என்று ஒரு வாழ்க்கை இருக்கும், அவர்களுக்கு வலிகள் இருக்கும், அது தான் இந்த படம் என்று நினைக்கிறேன். மற்ற வேஷங்களை விட ஹனுமான் வேஷம் போடுவது கஷ்ட்டம் மட்டும் அல்ல, அவர்களது முகம் தெரியாது. ஆனால், இந்த படத்தில் அந்த முகத்தை காட்டியிருக்கிறார். அது தான் இந்த படத்தின் சிறப்பு. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசுகையில்,

“’வானரன்’ படத்தின் பாடல்கள், டிரைலர் மிக சிறப்பாக இருந்தது. பிஜேஸ் நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறுமி ஸ்ரீ வர்ஷினி சிறப்பாக நடித்திருக்கிறார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். தமிழிசை அக்கா முன்பு ஒரு தகவலை சொல்ல நினைத்தேன், ஆனால் அவர் கிளம்பி விட்டார். இருந்தாலும் ஊடகங்கள் முன்னிலையில் சொல்கிறேன், என்னுடைய சீல் மற்றும் கையெழுத்து போட்டு கில்டில் சுமார் 15 பேரை சேர்த்திருக்கிறார்கள், அவர்களுக்கு சென்சார் சான்றிதழ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இது பற்றி போலீசில் புகார் அளித்திருக்கிறேன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன், என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இதை இங்கு சொல்வதற்கு காரணம், சினிமாவில் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக தான். கஸ்தூரி மேடம் சொன்னது போல், சினிமா ஊழியர்கள் தங்களுடன் பணியாற்றுபவர்களை ரொம்பவே பாதுகாப்பார்கள், அவர்கள் தான் பெப்ஸி ஊழியர்கள். அவர்கள் பணதை எதிர்பார்க்க மாட்டார்கள், கூட இருக்கும் நட்சத்திரங்களின் பாதுகாப்பு தான் அவர்களுக்கு முக்கியம். நான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த போது கூட நடிகர்கள் மீது தூசு கூட விழாமல் பார்த்துக் கொள்வேம். எனவே, பெப்ஸி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை சுமூகமாக முடிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். உடல் இல்லாமல் உயிர் இல்லை, உயிர் இல்லாமல் உடல் இல்லை என்பது போல் தான், தயாரிப்பாளர்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை, தொழிலாளர்கள் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இல்லை. இயக்குநர் ஸ்ரீராமுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வானரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், நன்றி.” என்றார்.

இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன் பேசுகையில்,

“இங்கு வந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த வானரன் மனிதத்தை பேசும் ஒரு படம். இந்த மாதிரி ஆஞ்சநேயர் வேஷம் போட்டு போகிறவர்களை ஒரு இடத்தில் கடவுளாக பார்ப்பார்கள், ஒரு இடத்தில் பிச்சைக்காரராக பார்த்து விரட்டி விடுவார்கள். ஆனால், அவர்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனோடு தான் இருப்பார்கள். அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இது என்னுடைய சிறுகதை தொகுப்பில் இருந்து எடுத்த கதை தான். அப்பா – மகள் இடையிலான பாசப்போராட்டத்துடன், அவர்களின் வாழ்க்கையையும் தொட்டுவிட்டு போகலாம் என்ற முயற்சியில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.

நான் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டார்கள், பத்து வருடம் முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும், அப்போது ஜீவா சார், நாம வள்ளலார், வினோபா போல இருக்கலாம் சார், எதற்கு கல்யாணம் என்று கேட்டார். அதனால் விட்டுவிட்டேன். ஆனால் இப்போது அவர் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார். இந்த பிரசாத் லேப் ரொம்ப ராசியான இடம், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் இங்கு தான் திருமணம் பற்றி அறிவித்தார், விஷால் சாரும் அறிவித்தார், அதுபோல் நானும் என்னுடைய திருமண தேதியை அறிவிக்கிறேன், அக்டோபர் 31. சொல்லி வைப்போம், எதாவது எனக்கும் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

நாகேஷ் சார் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரது பேரனை இயக்குவது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேபோல் காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 5.30 -க்கு அவர் வந்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் தொழில் பக்தி உடையவர். ஹனுமான் வேஷம் போட்டுக்கிட்டு செருப்பு இல்லாமல் நடப்பது என்று கடினமாக உழைத்திருக்கிறார். ஸ்ரீ வர்ஷினி நன்றாக நடித்திருக்கிறார். சூப்பர் சிங்கர் போகும் முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார், இப்போது அவரது வளர்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகன் பிஜேஷ் பேசுகையில்,

“எங்கள் நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. தமிழிசை மேடம், கஸ்தூரி மேடம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் ஒரு சோசியல் மெசஜ் இருக்கிறது. கிராமிய கலைஞர்கள், பகல் வேஷம் போடுபவர்கள் பற்றிய சோசியல் மெசஜ் இருக்கிறது. அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, மரியாதை வந்தாலே நாங்க ஜெயிச்சிடுவோம், நன்றி.” என்றார்.

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எங்களுக்கு சிவபெருமான் அருள் இருக்கிறது – ‘கண்ணப்பா’ விழாவில் விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி பேச்சு

0

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.

வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று (மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக, நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள், மிக பிரமாண்டமாக இருப்பதோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் காட்டாத லொக்கேஷன்களாக இருக்கிறது. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கதை சொல்லாமல், இதுபோன்ற லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது, நிச்சயம் ரசிகர்களை கவரும், என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்டன், அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். நான் இரண்டாவது யூனிட்டாக பணியாற்றியிருக்கேன். ஏன் என்றால், என் சகோதரர் விஷ்ணுவுக்காக தான். அவர் தான் என்னை தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். அவருடைய ஐந்து படங்களுக்கு நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கேன், அவருக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். ஷெல்டனுக்காக நான் பேசுகிறேன், அவர் நம்ம பணிக்கு ஏற்றபடி உடனடியாக மாறிவிட்டார். மிக வேகமாக வேலை செய்யக்கூடியவர். இப்படி ஒரு படத்தை விரைவாக முடிக்க முடிந்தது என்றால் அது ஷெல்டனால் தான், அவருக்கு என் வாழ்த்துகள். விஷ்ணு சார் இந்த படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டும் இன்றி கதையாசிரியராகவும் அவர் அவதாரம் எடுத்திருக்கிறார், அவர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இயக்குநர் முகேஷ் குமார் சிங்கிற்கு என் வாழ்த்துகள். நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை என்னிடம் ஒப்படைத்ததற்கு விஷ்ணு சாருக்கு நன்றி. முகேஷ் சாரும், விஷ்ணு சாரும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை தனி அறையில் விட்டுவிட்டார்கள். படத்தின் ரஸ் அனைத்தையும் கொடுத்து பணியாற்ற சொன்னார்கள், அந்த ரஸ் ஒரு படத்தோடது அல்ல, ஆறு படத்தோடது. மிக கஷ்ட்டமான பணியாக இருந்தது. ரொம்பவே நொந்து போயிட்டேன். ஆனால், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மோகன் பாபு சாருக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் ஒரு குடும்பம் கிடைத்தது போல் இருக்கிறது. இந்த படம் பிரமாண்டமான படமாக இருக்கும் என்று எனக்கு தெரியும், உங்களுக்கு 27 ஆம் தேதி தெரியும், நன்றி.” என்றார்.

நடிகர் சம்பத்ராம் பேசுகையில், “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்றாலும், என் சொந்த ஊர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூர் என்ற கிராமம் தான். எங்க தாத்தா, அப்பா பிறந்த ஊர் அது தான். என் பாட்டி ஊர் காளஹஸ்திரி அருகே இருக்கும் காட்டுப்பள்ளி என்ற ஊர். நாங்க விடுமுறை என்றால் அடிக்கடி அங்கே செல்வோம். அப்படி அங்கே போக வர இருந்ததால் எனக்கு தெலுங்கு தெரியும். என் அப்பாவுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீனிவாசன். அவரது மகனும், நானும் மிக நெருங்கிய நண்பர். அவர் பெயர் கோலா ஆனந்த். அவர் இன்று அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார், அவர் மூலம் தான் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்வேன். 2022 ஆம் ஆண்டு காளஹஸ்திரி ரயில் நிலையம் அருகே மோகன் பாபு சாரின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஆனந்த் என்னை அழைத்துச் சென்று மோகன் பாபு சாரிடம் அறிமுகப்படுத்தி, என் மாமா பையன் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார், தெலுங்கில் எதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னார். அதன் பிறகு தான் விஷ்ணு சார் அறிமுகமான விஷ்ணு படத்தில் சிறிய கதாபாத்திரம் கொடுத்தார். முதல் முறையாக தெலுங்குப் படத்தில் நடித்தேன். பிறகு இந்த வேடம் மிக சிறியதாக இருக்கிறது, வேற எதாவது படத்தில் பார்க்கலாம் என்று சொன்னார். அதன் பிறகு சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு ‘காயத்ரி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன், அப்போது மோகன் பாபு சார் அங்கே வந்த உடன், அவருக்கு வணக்கம் வைக்க அனைவரும் சென்றார்கள், அனைவரையும் அவர் போங்க போங்க, என்று விரட்டினார், என்னையும் அப்படியே விரட்டினார். எனக்கு கொஞ்சம் கஷ்ட்டமாகி விட்டது. என்னடா இது சார் இப்படி நம்மள விரட்டிட்டாரே, என்று தோன்றியது. பிறகு சண்டைக்காட்சி எடுக்கும் போது மாஸ்டர், சம்பத் இப்படி பண்ணு, அப்படி பண்ணு, என்று சொல்லும் போது, மோகன் பாபு சார் உடனே கேட்டுவிட்டு, டேய் சம்பத் இங்கே வா…, நீயாடா தாடிலாம் வைத்ததால் எனக்கு தெரியாம போச்சுடா…, என்று சொன்னவர், உடனே அங்கிருந்தவர்களை அழைத்தார், சுமார் 200 பேர் இருப்பாங்க, அனைவரையும் அழைத்து, “இவன் என்னுடைய மிக நெருக்கமான நண்பரின் நெருக்கமான உறவினர், இவரிடம் நான் கொஞ்சம் தப்பாக நடந்துக்கிட்டேன், அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று சொல்லி சாரிடா சம்பத், என்று சொன்னார். என்னால் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது, நான் கண்கலங்கிட்டேன். நான் எல்லாம் ஒரு ஆளே இல்லை, அவ்வளவு பெரிய மனிதர் என்னிடம் மன்னிப்பு கேட்டது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒரு மிக நல்ல மனிதர் அவர். அவரைப் பற்றி எதாவது தப்பான தகவல் வந்தால் எனக்கு வருத்தமாக இருக்கும். அப்படி ஒரு நல்லவரை ஏன் இப்படி பேசுகிறார்கள், என்று கஷ்ட்டமாக இருக்கும். அந்த படத்தில் நான் சினிமாவில் வாங்காத சம்பளத்தை எனக்கு கொடுத்து அனுப்பினார்.

அதன் பிறகு ‘கண்ணப்பா’ படத்திற்காக அவரே என்னை அழைத்தார். அடுத்த ஒரு படம் நியூசிலாந்தில் படப்பிடிப்பு, தேதி இருக்கா என்று கேட்டார். சார், நீங்க சொன்னா வருவேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்தேன். இதில் எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த காளஹஸ்திரி சிவபெருமான் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன். விஷ்ணு சாருக்கு நன்றி, எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து என்னை சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார். நியூசிலாந்தில் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டார். சரத்குமார் சார், மதுபாலா மேடம் ஆகியோருக்கு இணையாக என்னையும் நடத்தினார், ரொம்ப நன்றி சார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வந்திருக்கிறது, நிச்சயம் மக்களை வெகுவாக கவரும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் அர்பித் ராணா பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம், ‘கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, அனைவருக்குமான உணர்வு. மகாதேவனின் மிகப்பெரிய பக்தன் நான், எனக்கு இந்த படம் நெருங்கிய தொடர்புள்ள படம். விஷ்ணு சார் இந்த படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறார். சிவ பக்தர்கள் அனைவரையும் இந்த படம் வியக்க வைக்கும், அந்த அளவுக்கு படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும், சென்னை என்னுடைய இரண்டாவது இடம், என் உறவினர்கள் பலர் இங்கு தான் வசிக்கிறார்கள். செனைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பளித்த விஷ்ணு சார் மற்றும் முகேஷ் சாருக்கு நன்றி.” என்றார்.

இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில், “தமிழ்நாடு என்னுடைய இரண்டாவது சொந்த இடம். இங்கு ஏராளமான கோவில்கள் இருக்கிறது. நான் இங்கு திரும்ப வந்ததும், ’கண்ணப்பா’ படத்திற்காக உங்கள் முன்பு நிற்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் மோகன் பாபு சார், விஷ்ணு ஆகியோருக்கு நன்றி. ‘கண்ணப்பா’ திரைப்படம் வாழ்க்கைப் பயணத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொடுத்தது. எனக்கு மட்டும் அல்ல, இங்கு இருக்கும் அனைவருக்கும் கண்ணப்பா சிறந்த பயணமாக அமைந்தது. அனைத்து படங்களுக்கும் கஷ்ட்டங்கள் வரும், அதுபோல் கண்ணப்பா படத்திலும் நாங்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டோம். ஆனால், அவை அனைத்தையும் கடவுள் சிவன் பார்த்துக் கொண்டார். சிறந்த படைப்பாக கண்ணப்பா படத்தை உருவாக்கியிருக்கிறோம். கடவுள் சிவனுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை மதுபாலா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எதுவும் சொல்ல முடியாமல் போகும். அப்படி ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன் தான் தேர்வு செய்தார், என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார். அதுபோல தான் நானும். சிறு வயதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யார் படத்தில் நடிக்க வேண்டும், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல், எதுவுமே தெரியாம நடிக்க வந்தவள் நான். நடிகையாக எப்படி அறிமுகமாக வேண்டும் என்றால், பெரிய பெரிய இயக்குநர்கள் பெயரை சொல்வார்கள், ஆனால் நான் அப்படி எல்லாம் சொல்லாமல், எதாவது ஒரு படம், இயக்குநர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என் முகம் திரையில் வர வேண்டும், என்ற எண்ணத்தில் மட்டுமே நடிக்க வந்தேன். அது ஏ கிரேட் படமா, பி கிரேட் படமா, நல்ல படமா, கெட்ட படமா என்று எதையும் கேட்காமல் நடிக்க வந்தவள் தான் நான். அதுபோல தான் இந்த படத்தின் வாய்ப்பும் அமைந்தது. இந்த படத்திற்காக எனக்கு கால் வந்தபோது உடனே எஸ் சொல்லிவிட்டேன். என்ன கதாபாத்திரம், என்ன கதை என்று எதையும் கேட்கவில்லை, உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன், இன்று படத்தை பார்க்கும் போது, இரண்டாவது முறை எதையும் கேட்காமல் ஓகே சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. இதுவரை நான் நடித்த படங்களில் யாருடன் நடிக்கிறேன், என்ற எந்த விவரமும் தெரியாமல் நடித்து வந்திருக்கிறேன். அதே போல் தான் இந்த படத்திலும் நடித்தேன். இதில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்த படத்தில் நடிக்க வந்த போது, மோகன் பாபு சார் 90-களில் நான் இரண்டு வாய்ப்பளித்தேன், என்னுடன் சேர்ந்து ஏன் நடிக்கவில்லை, என்று கேட்டார். இப்போது அவர் படத்திலும் நடித்துவிட்டேன், அதனால் அவர் ஏன் நடிக்கவில்லை என்று கேட்க முடியாது. அதேபோல் 35 வருடங்களுக்குப் பிறகு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்து விட்டேன். அக்‌ஷய் குமார் படங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன், அவருடனும் இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

இந்த படத்தின் மூலம் சிறந்த நட்பு எனக்கு கிடைத்திருக்கிறது. விஷ்ணு உடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சி. கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு சிறப்பாக பங்களித்திருக்கிறார். இயக்குநர் முகேஷ் குமார் சிங் மிக அமைதியானவர், அவரது பணி மிக சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. நடிகர் சம்பத் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த சிறப்பான ஒரு படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக பணியாற்றியேன். இந்த படத்தின் காட்சியை பார்த்த நீங்கள் வியந்திருப்பீர்கள், என்று நினைக்கிறேன். படமும் மக்களை வியக்க வைக்கும், என்று நம்புகிறேன்.

இளம் அம்மா என்ற இமேஜ் எனக்கு இருக்கிறது, தற்போது அந்த இமேஜை கண்ணப்பா படம் உடைத்து, போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நான் அந்த கதாபாத்திரத்தில் மிக மகிழ்ச்சியாக நடித்தேன். நமக்கு பலர் மீது பல கோபங்கள் இருக்கும், ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாது. இந்த படத்தில் சண்டைக்காட்சியில் எனக்கான கோபத்தை வெளிக்காட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கத்தியை என்னிடம் கொடுத்து அடிக்க சொல்லியதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்து விட்டேன். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இருந்த ஒரே கஷ்ட்டம், அந்த வெயிட்டான கத்தியை தூக்குவது தான். போர் வீராங்கனையாக உடை அணிந்து கம்பீரமாக நிட்பேன், கையில் கத்தியை கொடுத்ததும், அதன் வெயிட் தாங்க முடியாது. கை எல்லாம் வலி எடுக்கும், அது ஒன்று தான் கஷ்ட்டமாக இருந்தது, மற்றபடி என் கதாபாத்திரத்தில் மகிழ்ச்சியாக நடித்தேன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. திரையில் பார்க்கும் போது ரசிகர்களும் அதை உணர்வார்கள், நன்றி.” என்றார்.

நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “சமீபகாலமாக சில சர்ச்சையான சம்பவங்கள் நடப்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப்பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. அதே சமயம், என்ன நடந்தது? என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். கண்ணப்பா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லண்டன் மற்றும் துபாய் நாடுகளிலும், இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கிறது. பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டுடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும், இது தான் நம்முடைய வழக்கம். அதன்படி, கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், அதை எங்கள் தரப்பு கேட்கவில்லை. கிராபிக்ஸ் நிறுவனத்தினர் எங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டார்கள். அதாவது, எங்கள் நிறுவன முகவரி மற்றும் ஜி.எஸ்.டி முகவரி என இரண்டு உள்ளது. ஜி.எஸ்.டி முகவரி அப்பாவுடைய இல்லம். அங்கு தான் எங்கள் தொடர்புடைய அனைத்து கடிதம் மற்றும் கூரியர்கள் வரும். சம்மந்தப்பட்டவர்கள் அதை அங்கு சென்று வாங்கிக் கொள்வோம். அதுபோல், எனக்கான அந்த டிரைவ் அந்த முகவரிக்கு வந்திருக்கிறது. அப்போது, மனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விசயமே எங்களுக்கு தெரியாது. அப்போது, இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்ணப்பா படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும், என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானது. அதை வைத்து தான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்தது. சரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், சமாதன முறையில் அதை கேட்டோம், ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லை. சரி, போலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து, அதையும் செய்தோம். அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை. போலீஸும் முறையாக எப்.ஐ.ஆர் போடாமல் எங்களால் விசாரிக்க முடியாது, என்று சொல்லிவிட்டார்கள். அப்போது கூட இந்த தகவலை ஊடகங்களிடம் நான் தெரிவிக்கவில்லை. போலீஸில் புகார் அளிக்கும் போது, அங்கிருந்த நிருபர் ஒருவர் மூலமாக தான் செய்தியாக வெளியானது. பிறகு என்ன செய்வது என்று அப்பாவிடம் கேட்ட போது தான் வேறு வழியில்லை, எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய நிலை வந்தது. இப்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த காட்சிகள் வெளியானாலும், அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. காரணம், நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு அதில் இருக்கிறது. அந்த உழைப்பை நீங்கள் திரையில் வந்து பார்க்க வேண்டும், என்பது தான் என் ஆசை. அதற்காக தான் நான் இந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன். இது தான் இந்த பிரச்சனை. நான் குடும்ப பிரச்சனைப் பற்றி பேச விரும்பவில்லை. அனைத்து குடும்பத்திலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அது சரியாகி விடும். இன்று வரை எனது தம்பிக்கு என்ன பிரச்சனை, ஏன் அவர் இப்படி செய்கிறார், என்று தெரியவில்லை. தெரிந்தால் நிச்சயம் அதை சரி செய்ய நான் முயற்சிப்பேன்.

‘கண்ணப்பா’ திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை கண்ணப்பா பற்றி வந்திருக்கும் படங்களை விட மிக வித்தியாசமான அதே சமயம் பிரமாண்டமான படமாக இருக்கும். குறிப்பாக கண்ணப்பா சிவன் பக்தராக மாறிய பிறகு என்ன நடந்து என்பதை தான் அனைத்து படங்களும் காட்டியிருக்கிறது. ஆனால், சிவ பக்தர் ஆவதற்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதை இந்த படத்தில் பார்க்கலாம். அதை சாதாரண படமாக அல்லாமல் விஷுவல் விருந்தாக பார்க்கும் அளவுக்கு படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறோம். நிச்சயம் இந்திய சினிமாவில் கண்ணப்பா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

படம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் எழலாம், ஆனால் வரலாறு மற்றும் இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதை தான் காட்சிகளாக எடுத்திருக்கிறோம். தணிக்கை குழுவினர் ஏகப்பட்ட கேள்விகளை முன் வைக்க உள்ளார்கள், குறிப்பாக கண்ணப்பா தனது வாயில் தண்ணீர் எடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, வட இந்தியாவில் ஏற்க மாட்டார்கள், என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படித்தானே இருக்கிறது, உண்மையை தானே நாங்கள் காட்சியாக எடுத்திருக்கிறோம், என்று வாதிட்டேன். இதைவிட பெரிய விசயம், காதல் பாடலை பார்த்துவிட்டு, கண்ணப்பா காதலித்தாரா? என்று கேட்கிறார்கள். சிவனும், பார்வதியும் காதலிக்காவில்லையா, அவர்களுக்கு இடையே இருக்கும் காதல் தான், கண்ணப்பாவிடமும் இருக்கிறது, என்று விளக்கம் அளித்தேன். இப்படி பல கேள்விகளை தணிக்கை குழுவினர் கேட்க இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி புரிய வைத்து படத்திற்கு சான்றிதழ் பெறப்போகிறேன், என்று தெரியவில்லை. அனைத்தையும் சிவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்காக எடுக்கப்பட்ட படம், நிச்சயம் அவர் அனைத்து தடைகளையும் தகர்த்தெரிவார், என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

ஷெல்டன் சாவு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸி இசையமைத்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். 24 பிரேம்ஸ் ஃபேக்டரி, ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மோகன் பாபு பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

MGM Healthcare Unveils ‘Nalam’ Clinic for Personalised Medical Weight Loss Solutions

0

● Actor Ms. Khushbu Sundar inaugurates Nalam Institute of Metabolic Disorder and Hormonal Health
● Multidisciplinary team to walk along in individual’s journey to shed excess fat, and cut risks of many non-communicable diseases

Chennai, 30th May 2025: MGM Healthcare has launched the ‘Nalam’ Institute for Metabolic Disorders and Hormonal Health to provide personalised, result-oriented weight loss support through medical care, nutrition guidance, lifestyle interventions, psychological counselling, and surgical options. Backed by a multidisciplinary team, the clinic will adopt a scientific and holistic approach—leveraging advances in medical science to assess individuals’ metabolic and hormonal profiles, as well as continual support, essential for producing results.

Actor Ms. Khushbu Sundar inaugurated the institute in the presence of senior management and key members of the hospital’s medical team.

Among Nalam’s flagship treatment plans is a personalised 3-month weight management program designed to shed excess fat, and to improve blood sugar levels, and cholesterol. Guided by specialists, the program ensures both safety and effectiveness. It also promotes lasting lifestyle changes, helping individuals achieve their long-term health goals.

In her comments, Dr. Urjitha Rajagopalan, Director, MGM Healthcare , said, “Overweight and obesity have emerged as one of the most pressing public health concerns of our time. One in 8 people worldwide are now living with obesity. In India, 24% of women, 23% of men, and about 8% of children are classified as overweight or obese. To combat this public health concern, we need personalised weight management guided by metabolic assessments and personalised insights into dietary science. Our newly launched ‘Nalam’ is a step forward in that direction. It brings together a multidisciplinary team—doctors, dietitians, psychologists, physiotherapists, and surgeons—to deliver a holistic, personalised care plan. More importantly, our commitment is not just to provide medical advice, but to walk with each individual on their journey until they achieve sustainable results and embrace healthier lifestyles.”

In his comments, Dr. M. Swamikannu, Director & Senior Consultant, Internal Medicine, said, “Obesity is not just a matter of appearance or weight—it significantly increases the risk of serious non-communicable diseases (NCDs) such as cardiovascular and cerebrovascular diseases, hypertension, type 2 diabetes, and even certain cancers. We are pleased to introduce a specialised, science-based and result-oriented approach for people to lose weight. Our program follows a streamlined process, beginning and a multidisciplinary team is involved from the start. Patients undergo consultations with an endocrinologist for detailed metabolic evaluation and tailored medication, followed by sessions with dietitians who address eating habits, and nutritional needs. Based on these insights, we create customised diet and lifestyle plans. Psychologists also play a key role in the individual’s weight management journey.”

மருத்துவ ரீதியில் உடல் எடை குறைப்பிற்கு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளுக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியிருக்கும் ‘நலம்’ கிளினிக்

● வளர்சிதை மாற்ற சீர்கேடுக்கான சிகிச்சை மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்திற்கான நலம் கிளினிக்கை பிரபல திரைப்பட நடிகை திருமதி. குஷ்பு சுந்தர் தொடங்கி வைத்தார்.
● உடலில் சேர்ந்துள்ள அளவுக்கதிக கொழுப்பையும், உடல் எடையையும் குறைப்பதற்கும் மற்றும் பல்வேறு தொற்றா நோய்களின் இடர்வாய்ப்பை தவிர்க்கவும் இத்தகைய நபர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒருங்கிணைந்து பயணிக்கும்.

சென்னை: 30 மே 2025: தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், வளர்சிதை மாற்ற சீர்கேடுகளுக்கான சிகிச்சை மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான நோக்கத்தோடு நலம் என்ற பெயரிலான கிளினிக்கை தொடங்கியிருக்கிறது. மருத்துவ சிகிச்சைப் பராமரிப்பு ஊட்டச்சத்திற்கான வழிகாட்டல், வாழ்க்கை முறை மாற்றங்களுக்கான இடையீடுகள், உளவியல் ரீதியிலான ஆலோசனை மற்றும் அறுவைசிகிச்சை விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றின் வழியாக சிறந்த பலன்களை வழங்கும் நோக்கத்தோடு, உடல்எடை குறைப்பிற்கு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வையும், ஆதரவையும் இந்த கிளினிக் வழங்கும். பல்வேறு துறைகளின் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவைக் கொண்டிருக்கும் இந்த கிளினிக், அறிவியல் ரீதியிலான மற்றும் முழுமையான அணுகுமுறையை கடைபிடிக்கும். தனிப்பட்ட நபர்களின் வளர்சிதை மாற்ற ஹார்மோன் சார்ந்த பண்பியல்புகளை மதிப்பாய்வு செய்ய மருத்துவ அறிவியலில் நவீன முன்னேற்றங்களை இது திறம்பட பயன்படுத்துவதுடன், சிறப்பான விளைவுகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் தொடர்ச்சியான ஆதரவையும் வழங்கும்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ன் உயர் நிர்வாகக் குழுவினர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலை வகித்த நிகழ்வில் திரைப்பட நடிகை திருமதி. குஷ்பூ சுந்தர் இந்த பிரத்யேக கிளினிக்கை தொடங்கி வைத்தார். உடலில் சேர்ந்திருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், இரத்த சர்க்கரை அளவுகளையும் மற்றும் கொலஸ்ட்ராலையும் சீராக்கி மேம்படுத்தவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் மூன்று மாத கால உடல் மேலாண்மை செயல்திட்டம், நலம் கிளினிக் செயல்படுத்தவிருக்கும் சிகிச்சை திட்டங்களுள் முக்கியமானதாக இருக்கும். திறன்மிக்க சிறப்பு நிபுணர்களின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் இச்செயல்திட்டம், சிகிச்சையின் பயனளிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரு அம்சங்களையும் உறுதிசெய்யும். நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் ஊக்குவிக்கும் இச்செயல்திட்டம், அதிகரித்த உடல் எடையால் அவதிப்படும் நபர்களின் நீண்டகால ஆரோக்கிய இலக்குகளை அடைவதற்கு உதவும்.

எம்ஜிஎம் ஹெல்த் கேர் – ன் நிர்வாக இயக்குனர் டாக்டர். உர்ஜிதா ராஜகோபாலன் இது தொடர்பாக கூறியதாவது: “அளவுக்கதிக உடல் எடையும், பருமனும் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் அதிக கவலை ஏற்படுத்தும் பொது சுகாதார பிரச்சனைகளுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. உலகளவில் வாழும் 8 நபர்களில் ஒருவர் இப்போது உடற்பருமன் பாதிப்புடன் வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் பெண்களில் 24% மற்றும் ஆண்களில் 23% மற்றும் குழந்தைகள் மற்றும் சிறார்களில் 8% அதிக உடல்எடை கொண்டவர்களாக அல்லது உடற்பருமன் பாதிப்பு உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த பொது சுகாதார பிரச்சனையை எதிர்கொண்டு சமாளிக்க வளர்சிதை மாற்ற மதிப்பாய்வுகளால் வழிநடத்தப்படும் தனிப்பயனாக்கப்பட்ட உடல் மேலாண்மையும் மற்றும் உணவுமுறை அறிவியலில் ஒவ்வொரு நபருக்கும் ஏற்றவாறு தனித்துவமான கண்ணோட்டங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. எமது மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நலம் கிளினிக் என்பது, இந்த குறிக்கோளை நோக்கிய பயணத்தில் ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும். மருத்துவர்கள், உணவு முறை நிபுணர்கள், உளவியலாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஒரு குழுவாக இது ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் ஒரு விரிவான, முழுமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டத்தை உடற்பருமனால் அவதியுறும் நபர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். அதைவிட முக்கியமாக, மருத்துவ ஆலோசனை வழங்குவதோடு, எமது பொறுப்புறுதியையும், செயல்பாட்டையும் நாங்கள் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை; நீடித்து நிலைக்கின்ற சிகிச்சை விளைவுகளை இந்நபர்கள் எட்டும் வரை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை உறுதியோடு கடைப்பிடிக்கிற வரை ஒவ்வொரு தனிநபரோடும் அவரது பயணத்தில் இணைந்து பயணிப்பது எமது நோக்கமாகவும், செயல்பாடாகவும் இருக்கும்.”

உள்ளார்ந்த மருத்துவத் துறையின் இயக்குனரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர். M. சாமிக்கண்ணு இது குறித்துப் பேசுகையில், “உடற்பருமன் என்பது, உடல்எடை அல்லது தோற்றம் தொடர்பான ஒரு விஷயம் மட்டுமல்ல; இதயநாள மற்றும் மூளைநாள நோய்கள், மிகை இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு மற்றும் குறிப்பிட்ட சில புற்றுநோய்கள் போன்ற கடுமையான தொற்றா நோய்கள் வருவதற்கான இடர்வாய்ப்பை உடற்பருமன் கணிசமாக அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு தனிச்சிறப்பான, அறிவியல் அடிப்படையிலான, பயனுள்ள இலக்கை அடைவதற்கான ஒரு அணுகுமுறையை நலம் திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எமது செயல்திட்டமானது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஒரு செயல்முறையைப் பின்பற்றுகிறது. சிகிச்சையின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அடங்கிய குழு இத்திட்டத்தில் ஈடுபாட்டுடன் செயலாற்றும். விரிவான வளர்சிதை மாற்ற மதிப்பீட்டிற்காகவும் மற்றும் பிரத்யேகமான மருந்தளிப்பை வழங்குவதற்காகவும் நாளமில்லா சுரப்பு மருத்துவரால் நோயாளிகள் மதிப்பாய்வு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதைத் தொடர்ந்து, உணவு உண்ணல் பழக்கவழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு உணவுமுறை நிபுணர்கள் உடனான அமர்வுகளில் அவர்கள் பங்கேற்பார்கள். இந்த நிபுணர்களின் பரிசோதனைகள் மற்றும் கண்ணோட்டங்களின் அடிப்படையில் நோயாளிகளுக்கான பிரத்யேக உணவு மற்றும் வாழ்க்கை முறை திட்டங்களை நாங்கள் உருவாக்குகிறோம். இத்தகைய நபர்களின் உடல்எடை மேலாண்மை பயணத்தில் உளவியல் நிபுணர்களும் ஒரு முக்கியப் பங்காற்றுவார்கள்.” என்று கூறினார்.

தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அன்பார்ந்த நன்றி

0

தமிழ்த்திரைப்பட துறையில் இக்கட்டான சூழ்நிலையில் உயிர் மூச்சு விடும் விதமாக உள்ளூர் பஞ்சாயத்து வரியை
8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.

தமிழ்த்திரைப்படத் துறையை காப்பாற்றும் முயற்சியாக வரிச் சுமையை பாதியாக குறைத்ததற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ சாமிநாதன் அவர்களுக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள்.

0

Ref: TFAPA/1134/2025
நாள்: 30-05-2025

Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள்.

தமிழ் சினிமா துறையில் திரைப்படங்களின் வெற்றிகள் 8 சதவீதமாக குறைந்து ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. இத்தகைய காலகட்டத்தில், சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கனவே 18 சதவீதம் ஜிஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், Local Authorities Entertainment Tax (LBET) என்று 8 சதவீத வரி, 2017 முதல், கடந்த 8 வருடங்களாக தமிழ் நாட்டில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களின் கோரிக்கையை மனதில் கொண்டு, இன்று இந்த Local Authorities Entertainment Tax-ஐ தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு M.P. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ் சினிமா சார்பிலும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றியுடன்,
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் சார்பில்,

T.G. தியாகராஜன்
செயல் தலைவர்

T. சிவா
பொதுச் செயலாளர்

G. தனஞ்ஜெயன்
பொருளாளர்

Ashish Conquers Everest — A Son’s Tribute, A Nation’s Pride!

0

“This was my father’s final wish…” – With these heartfelt words, 18-year-old Ashish, a young man from Chennai, etched his name in history by conquering Mount Everest on May 15, 2025.

On International Everest Day (May 29), the day we remember Sir Edmund Hillary and Tenzing Norgay’s legendary climb, Ashish returned to Chennai, having led a five-member team — and became the youngest Everest team leader in the world! 🌍🔥

💔 One teammate tragically passed away
💪 Only three reached the summit.
🧗 Total expedition time: 37 days (Apr 5 – May 15).
🌱 Trained over a year, starting December 2023.
💰 Total cost: ₹38 Lakhs. Sponsored by Velammal Vidyalaya (₹30L) and Minister Udhayanidhi Stalin (₹5L).

This climb is more than a personal victory — it’s a call to all youth to dream big, honor our roots, and protect our planet.

Special thanks to Mr. Vel Mohan, Velammal Group, for empowering dreams like Ashish’s.

📹 Watch the inspiring journey: https://we.tl/t-JO51uJ1wRS

AshishEverest #YoungLeader #Everest2025 #VelammalPride #ChennaiToEverest #DreamBig #YouthInspiration #InternationalEverestDay #EnvironmentMatters

உயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ்  எனும் இளைஞரின் எவரெஸ்ட் சாதனை;

என் அப்பாவின் கடைசி ஆசை இது – ஆசிஷ் உருக்கம்;

சென்னை, மே 29,
நேற்று சர்வதேச எவரெஸ்ட் தினம் (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாள். இந்த சிறப்பான நாளில், சென்னைச் சிறுவன் ஆசிஷ் யு, தனது சாதனையுடன் இளைஞர்களுக்கு புதிய முத்திரை பதித்துள்ளார்.

ஆசிஷ் யு (வயது: 18) – சென்னைச் சிறுவன், தனது தந்தை திரு. யு. வெங்கட சுப்பையாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தை வென்றுள்ளார். பள்ளி கல்வியை முடித்ததும் (2024-இல் பன்னிரண்டாம் வகுப்பு), ஒரு வருட இடைவெளியில் அவருடைய பயிற்சி துவங்கியது (டிசம்பர் 2023). அனுபவப் பயணம், அடிப்படை மற்றும் மேம்பட்ட மலை ஏறுதல் பயிற்சிகளை A தரத்தில் முடித்துள்ளார். இதன் பின்னர், ஹிமாலயன் பகுதியில் பல சவாலான நடைபயணங்களையும் மேற்கொண்டார்.

ஆசிஷின் சாதனை:
• ஆசிஷ் தனது அணியின் தலைவர் – உலகின் மிகவும் இளம் எவரெஸ்ட் அணித் தலைவர்!
• அணியில் 5 பேர் இருந்தனர். 3 பேர் மட்டுமே சிகரத்தை வென்றனர், ஆனால் ஒரு உறவினர் லொட்ஸே சிகரத்தில் இறந்தார்.
• எவரெஸ்ட் சிகரம் ஏற்றும் பயணம் 11 மே அன்று துவங்கி 15 மே அன்று வெற்றி கண்டது.
• மொத்த பயண காலம்: 37 நாட்கள் (5 ஏப்ரல் – 15 மே).
• சுழற்சி பயணம்: 30 ஏப்ரல் – 3 மே.

பிற விவரங்கள்:
• மொத்த செலவு: ரூ. 38 லட்சம்.
• ஸ்பான்சர்: வேலம்மாள் வித்யாலயா பள்ளி (30 லட்சம்) மற்றும் உதயநிதி ஸ்டாலின் (5 லட்சம்).

சர்வதேச எவரெஸ்ட் தினமான நேற்று (மே 29), ஆசிஷ் தனது வெற்றிப் பயணத்துடன் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். அவரது சாதனை இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த, மேலும் சிகரம் வெல்லும் கனவுகள் எப்போதும் சாத்தியமென சொல்லும்.

இது போன்ற பல சாதனைகளுக்கு உதவியாக இருக்கும் வேலம்மாள் குழுமத்தின் உரிமையாளர் வேல் மோகன் அவர்கள் பல மாணவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களின் லட்சியத்தை அடைய வழிகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Videos – https://we.tl/t-JO51uJ1wRS

- Advertisement -

Recent Posts