Wednesday, June 18, 2025
- Advertisement -
Home Blog Page 9

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

0

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர். ‘படையாண்ட மாவீரா’ இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். ‘பிக் பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.

நடிகர் இளவரசு பேசுகையில், “தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்,” என்றார்.

இயக்குநர் வி.சேகர் பேசுகையில், “இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.”

வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், “கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது ‘சந்தனக்காடு’ தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், “அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது ‘படையாண்ட மாவீரா’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். ‘படையாண்ட மாவீரா’ படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்,” என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், “படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், “தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், ‘படையாண்ட மாவீரா’ பிரம்மாண்டத்தின் உச்சம், ‘புஷ்பா’ படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்,” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது ‘படையாண்ட மாவீரா’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், “அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார்.

நீதிபதி கலையரசன் பேசுகையில், “அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ‘படையாண்ட மாவீரா’ படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்,” என்றார்.

‘படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், “இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.

எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.

இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.

என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.

கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி

0

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எட்டு சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக கேளிக்கை வரி பாதியாக குறைப்பு. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு. தமிழக அரசு கேளிக்கை வரியை குறைத்திருக்கிறது, தமிழ் திரைப்பட உலகின் வலியை குறைத்திருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

T. ராஜேந்தர், எம்.ஏ.
‍‍- இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

Icon Star Allu Arjun is rewriting history! From being the first Telugu actor to win a National Award to now bagging the prestigious Gaddar Award

0

A name that’s reverberating across the world, and his image is spreading like a wildfire everywhere. The one and only Icon Star Allu Arjun. He has scripted history by emerging as the very first Telugu actor to have won the national award. Allu Arjun was catapulted into the national spotlight thanks to Pushpa: The Rise, a film that transcended regional boundaries and captivated audiences all over the country.

Now, the Pushpa actor wins another accolade that made his name shine again. He won the prestigious Gaddar Telangana Film award. Gaddar Telangana Film Awards aims to honour and celebrate the cinematic brilliance of Telugu filmmakers and artists. It’s a rare and roaring feat for Allu Arjun. His relentless efforts and his love towards cinema blessed him with millions of fans across the world, blockbuster successes, and now the prestigious accolades.

The Telangana government on Thursday announced the winners of the Gaddar Film Awards, with Allu Arjun being named Best Actor for his performance in the blockbuster Pushpa-2: The Rule. Icon Star is ruling the box office and hearts and bringing the honors. After Pushpa 2 stormed the Indian box office with a staggering 1900 CR+ global haul, this new honour marks yet another unforgettable milestone in his legendary journey.

Throughout Telugu-speaking states and beyond, he continues to attract fans with his magnetic charisma, exceptional acting skills, and remarkable journey. His epic cinematic journey from Gangotri to Pushpa was written by Allu Arjun himself with his own blood and sweat. His outstanding performances earned him several awards, including five Filmfare Awards, two Nandi Awards, and a Special Jury Award.

He is all set to rule Indian cinema with many more Iconic performances. Now, the national superstar is ready to create sensation with his next AA22xA6 directed by blockbuster filmmaker Atlee. The pre production has recently began and makers planning to start the shoot soon. The world is waiting.

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும்.

ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார்.

இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது.

சண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படமான ” தாவுத் ” டைட்டில் லுக் வெளியானது.

0

கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஆனால் தற்போது ” தாவுத் ” என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.

இந்த படத்தை TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தங்களது இரண்டாவது படைப்பாக மிக பிரமாண்டாமாக தயாரித்துள்ளனர்.

பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார்.

சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் வத்திகுச்சி, காலா போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு
செய்திருக்கின்றனர்.

அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார்.

R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார்.

மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

தயாரிப்பு – S. உமா மகேஸ்வரி

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.

உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர்.

0

தேதி 30.05.2025

அறிக்கை

உலக நாயகன் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.

வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன் அவர்கள். அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே.
அவரது ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ராஜ பார்வை’ திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று ‘கிளாப்’ அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே, கர்நாடக ரத்னா, அமரர், டாக்டர்.திரு.ராஜ்குமார் அவர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
பின்னாளில், துரதிஷ்டவசமாக டாக்டர்.ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட சமயத்தில், அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் திரு.கமல் ஹாசன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது.

கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.திரு.ராஜ்குமார் அவர்களைத் தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும், அவரது புதல்வர் திரு.சிவராஜ்குமார் அவர்களைத் தனது மகனுக்கு இணையாகவும், கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

மிக சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற திரு.சிவராஜ்குமார் அவர்கள் மீது திரு.கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக, அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு.சிவராஜ்குமார் அவர்களே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
அந்த நெகழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடையேறிய திரு. கமல்ஹாசன் அவர்கள், டாக்டர்.ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும், அவர்தம் குடும்பத்தில் அவருக்குப் பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தியும், திரு.சிவராஜ்குமார் அவர்கள் அந்தக் குடும்பத்தில் தனக்குப் பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும், உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக, ‘அவர் குடும்பத்தில் தமிழனான எனக்குப் பின் தான் கன்னடரான திரு.சிவராஜ்குமார் தோன்றினார்’ என்னும் பொருள்பட பேசினார்.
திரு.சிவராஜ்குமார் அவர்கள் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் திரு.கமல்ஹாசன் அவர்கள் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் திரு.கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின் குரலாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர்.
அதன் வெளிப்பாடாகவே ‘கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ மூலமாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். என்றும் கன்னட மொழியை சீர்தூக்கி பார்க்கின்ற கமல் அவர்களுக்கு ஒருபோதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன.
உண்மை இவ்வாறு இருக்க, அதற்கு மாறாக திரு.கமல் ஹாசன் அவர்கள் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி, மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து, தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை, சுய சிந்தனையும், பகுத்தறிவும் கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது.
சுய ஆதாயங்களுக்காக, குறிப்பிட்ட சிலர் திரு.கமல் ஹாசன் அவர்களை கருவியாக பயன்படுத்தி கன்னட – தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகவும், வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்புப்புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும், திரைத்துறை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் திரு.கமல்ஹாசன் அவர்களது உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து, ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என, தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம்.
எந்தக் கலையும், மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும், எல்லைகளையும் கடந்தது. அந்தக் கலையை ரசிக்கும் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட அது பொருந்தும்.
மொழிகள் அனைத்துமே நீடு புகழோடு வாழ வேண்டும், “அன்பும் புரிதலும் மாற்றார் பண்பாடு போற்றுதலும் மட்டுமே நம்மை இறுகப் பிணைத்து வளம் தரும் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்”
பேதமற்ற ஒற்றுமை பாராட்டும்

தென்னிந்திய நடிகர் சங்கம்

  • Johnson PRO

48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!

0

மிகப்பெரிய ரிஸ்க்காக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதில் இறங்கியிருக்கிறேன் – ‘டெவிலன்’ மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சீகர் ராஜ்குமார்

ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர்.

’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (மே 29) மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெறும். 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள். இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது.

’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி.பி, ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குநர் பிக்கய் அருண் இயக்குகிறார். இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஃபெடரிக், ஆனந்தி விஜயகுமார், குழந்தை நட்சத்திரம் டோர்த்தி எஸ்.ஜே, கிருதேவ்.கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கமல்ஜித் சிங் இசையமைக்கிறார். பிரவின்.எம் படத்தொகுப்பு செய்கிறார். ஒலி வடிவமைப்பாளராக கரண் மற்றும் ஷிபின் பணியாற்றுகிறார்கள். பெருதுளசி பழனிவேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் அறிமுக விழா இன்று (மே 28) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது புதிய முயற்சி மற்றும் 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முழுமையாக முடித்து திரையிடும் சாத்தியக்கூறுகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

வசந்தகுமார் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களை படக்குழு சார்பாக வருக வருக என வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சீகர் பிக்சர்ஸ், நண்பர் திரு ராஜ்குமார் ஏற்கனவே தூவல் மற்றும் எக்ஸ்ட்ரீம் என இரண்டு படங்களை தயாரித்திருக்கிறார். அந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். எனவே அதில் திருப்தியடையாத தயாரிப்பாளர் ராஜ்குமார், திரைப்படத்துறையில் எதாவது சாதனை செய்ய வேண்டும் என்று யோசித்த போது தான், இயக்குநர் பிக்கய் அருண் அவர் முன்பு நிற்கிறார். அவர் உங்களை இத்துறையில் சாதனையாளராக மாற்றும் ஒரு படத்தை எடுக்கிறேன், என்று உத்வேகம் கொடுத்திருக்கிறார். அதனால் தான் ராஜ்குமாருக்கு மூன்றாவது படத்தை எடுக்கலாம் என்ற தைரியமும், நம்பிக்கையும் வந்தது. அப்படி சாதனை செய்யும் நோக்கில் அவர் மேற்கொண்ட தேடுதலில், 48 மணி நேரத்தில் இதுவரை யாரும் திரைப்படம் தயாரிக்கவில்லை, அதை நாம் செய்வோம், அதை நோபல் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற செய்யலாம், என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படி, நாளை 3 மணிக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதன்படி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு முடித்து விட்டு மறுநாள் எடிட்டிங், டப்பிங், கலரிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து, 31 ஆம் தேதி மாலை இதே திரையரங்கில் படத்தை திரையிட இருக்கிறோம். அதை பத்திரிகையாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பு. இத்தகைய சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள படக்குழுவை பத்திரிகையாளர்கள் வாழ்த்தி, ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

கதாநாயகி கார்த்திகா பேசுகையில், “இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பே எனக்கு ஒரு பரிசு தான். காரணம், இன்று எனது பிறந்தநாள், இன்று இந்த நிகழ்வு நடப்பது என்னால் மறக்க முடியாது. நான் நிறைய சீரியல் பண்ணியிருக்கேன். ஆனால், 48 மணி நேரத்தில் எடுக்க கூடிய இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இயக்குநர் அருண் சார் சொன்ன போது, நாம் முயற்சி பண்ணலாம் சார் என்று சொன்னேன். அவர் சப்போர்ட் பண்ணா கண்டிப்பாக பண்ணலாம் என்று சொன்னேன். தயாரிப்பாளர் ராஜ்குமார் சார் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார், என்னுடன் பணியாற்றுபவர்களும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். நாளைக்கு தான் படப்பிடிப்பை தொடங்குகிறோம். பார்ப்போம், படம் வெற்றிகரமாக முடிவடைந்த பிறகு உங்களிடம் நிறைய பேசுகிறேன், நன்றி.” என்றார்.

இந்திரா பேசுகையில், “அருண் சார் மற்றும் தயாரிப்பாளருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு உலக சாதனைப் படம் நீங்கள் பணியாற்றுவீர்களா? என்று அருண் சார் என்னிடம் கேட்ட போது, ஓகே சொல்லிவிட்டேன். சாதிப்போமா என்பது கடவுளிடமும், உங்களிடமும் தான் இருக்கிறது. சாதிப்போம் என்று நம்புகிறோம். எங்கள் குழு மிக உறுதுணையாக இருக்கிறார்கள். நீங்களும் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், நன்றி” என்றார்.

நடிகர் ஃபெடரிக் பேசுகையில், “ஒரு கான்சப்ட் கொண்டு ஒருத்தர் இந்த அளவுக்கு இந்த மேடை வரை கொண்டு வர முடியும் என்றால், அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் சொன்ன கதை முழுவதும் வித்தியாசமாக இருந்தது. அது ரெகுலர் சப்ஜெக்ட் இல்லை. தைரியமாக அதன் மீது பணியாற்றி, எங்கள் குழு மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக செய்திருக்கிறார். இது மிகப்பெரிய சவால், ஆசிட் டெஸ்ட் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சவாலான விசயம். பல மாதங்களாக ஒரு படத்தை எடுக்கும் நிலையில், 48 மணி நேரத்தில் ஒரு திரைப்படம் என்ற புதிய டிரெண்டை அருண் செட் பண்ணுகிறார். இது ரிஸ்க்கான முயற்சி தான், ஆனால் நிச்சயம் இதில் அருண் மற்றும் ராஜ்குமார் இருவரும் வெற்றி பெறுவார்கள், அவர்கள் இதை வெற்றிகரமாக முடித்து சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள்.” என்றார்.

நடிகர் பாலாஜி பேசுகையில், “உங்க அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்த ஒரு விசயத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் உங்களுக்கு எங்களுடைய முதல் பாராட்டு. இதுவே எங்களுக்கு முதல் வெற்றி என்று நினைக்கிறேன். இயக்குநர் அருணுடன் 20 வருடங்களாக நண்பனாக பயணித்து வருகிறேன். 48 மணி நேரத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? உள்ளிட்ட பல கேள்விகள் உங்களிடம் இருக்கும். அவற்றுக்கு எங்களால் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், நீங்க எங்க மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்திருக்கிறீர்களே இதுவே எங்கள் முயற்சிக்கான முதல் வெற்றியாக பார்க்கிறோம். உங்கள் ஒத்துழைப்போடு இந்த சாதனை முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம், நன்றி.” என்றார்.

கலர் கிரேடிங் பிரேம் குமார் பேசுகையில், “இவ்வளவு பெரிய படத்தில் பணியாற்றுவது இது தான் முதல் முறை. நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். நாங்கள் எங்களது பெஸ்ட்டை கொடுக்கிறோம், 31 ஆம் தேதி நீங்கள் படத்தை பாருங்கள், நன்றி.” என்றார்.

சவுண்ட் இன்ஜினியர் ஷிபின் பேசுகையில், “இந்த படத்தை பொறுத்தவரை எனக்கு புதிய அனுபவமாக இருக்கப்போகிறது. 48 மணி நேரத்தில் ஒரு படத்தின் அனைத்து பணிகளும் செய்யப் போகிறோம், என்று இயக்குநர் சொன்ன போது, இது எனக்கான சவாலாக எடுத்துக் கொண்டேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. உங்கள் அனைவரது சப்போர்ட்டும் எனக்கு வேண்டும், நன்றி.” என்றார்.

VFX வல்லுநர் யுகேஷ் பேசுகையில், “இந்த டாஸ்க் கேட்கும் போது எப்படி பண்ணப் போகிறோம் என்று தெரியவில்லை. 48 மணி நேரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை ரெண்டரிங் எடுக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு சில திட்டங்களை போட்டு வைத்துள்ளோம். எனவே இதை நிச்சயம் வெற்றிகரமாக செய்து முடிப்போம். நீங்க 31 ஆம் தேதி படத்தை பார்ப்பீங்க, நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் பிரவின் பேசுகையில், “இந்த படம் பற்றி சார் சொன்ன போது நடக்குமா நடக்காத என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவர் சொல்ல சொல்ல, சரி நடக்கும் என்று தோன்றியது. 24 மணி நேரத்தில் எடிட்டிங், சவுண்ட் எபெக்ட்ஸ் என அனைத்து பணிகளையும் செய்ய முடியுமா?, சான்ஸ் இல்லை. ஆனால், முடியும் என்ற நம்பிக்கையில் நான் முழு எபெக்ட் போடுகிறேன். முடியும் என்று நினைக்கிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் கமல்ஜித் சிங் பேசுகையில், “அனைவருக்கு வணக்கம், அருண் மற்றும் ராஜ்குமாருக்கு நன்றி. அருண் ஒரு நண்பர் மூலம் எனக்கு இந்த வாய்ப்பளித்தார். இது புது முயற்சி மட்டும் அல்ல, சவாலான விசயம். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்ததற்கு நன்றி. 31 ஆம் தேதி வெற்றிகரமாக முடித்து உங்களை சந்திப்போம், நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் டி.ஜே.பாலா பேசுகையில், “நான் அருண் சாரை சந்தித்து ஒரு மாதம் ஆகிறது. அவர் இந்தப் படம் பற்றி சொன்ன போது 48 மணி நேரமா! என்று அதிர்ச்சியடைந்தேன். நான் ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உதவியாளர். அவரிடம் வேலை செய்துவிட்டு இப்படி ஒரு படம் பண்ணவில்லை என்றால் எப்படி, செய்கிறேன் என்று ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு முதல் படம், இதை எப்படி செய்யப் போகிறேன், என்று தெரியவில்லை. மூன்று கேமரா வைத்து ஒளிப்பதிவு செய்ய உள்ளோம். நான் பெரிய பெரிய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், 48 மணி நேரத்தில் முடிக்க கூடிய இப்படி ஒரு படம் என்பது மிகப்பெரிய சவால். இருந்தாலும் இதை எப்படியாவது வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்று இருக்கிறோம். நான் அருண் சாருக்கு தைரியம் கொடுத்தேன், அவர் எனக்கு தைரியம் கொடுத்தார். கண்டிப்பாக நான் பண்ணிடுவேன். 24 மணி நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும், நிச்சயம் செய்து விடுவோம், நன்றி.” என்றார்.

இயக்குநர் பிக்கய் அருண் பேசுகையில், “7 வருடங்களாக மீடியாவில் பணியாற்றியிருக்கிறேன். அதை சொல்வதற்கு நான் பெருமைக் கொள்கிறேன். இரண்டு தொலைக்காட்சிகளில் நேர்காணல் செய்யும் பணியை செய்து வந்தேன். அந்த விசயங்கள் இப்போது என் முன்பு நிற்கும் போது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. எனவே பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதை நிச்சயம் செய்து முடிப்போம்.

இதற்காக நான் ஒரு வருடமாக உழைத்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராஜ்குமார் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் முதலீடு செய்துள்ளார். இப்படி ஒரு படத்தை தயாரிக்கும் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கமலகுமாரி ஆகியோருக்கு நன்றி. இப்படிப்பட்ட ஒரு புரொஜக்ட்டை பற்றி அவரிடம் நான் சொன்ன போது, என்னிடம் கதையை பொறுமையாக கேட்டார். அப்போது அவர் வேறு ஒரு படம் தொடங்கி விட்டார். அதன் பிறகு நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. பிறகு இந்த படம் குறித்து அவரிடம் சொன்ன போது, ஒரு நாள் டைம் கேட்டார். அதன் பிறகு பட்ஜெட் கேட்டார், அவர் ஒரு பட்ஜெட் சொன்னார், அதில் பண்ண முடியும் என்று சொன்ன, உடனே எனக்கு ஊக்கம் கொடுத்து பெரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவர் இல்லை என்றால், இந்த படம் இல்லை.

இந்த படத்திற்காக நான் நிறைய ஆய்வு செய்திருக்கேன். 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடிப்பது என்பது சாத்தியமே இல்லை. அப்படி என்றால் நான் எப்படி செய்வேன்? என்ற கேள்வி தோன்றும். அதற்கு தான் ஆய்வு மேற்கொண்டேன். பல துறைகளில் பணியாற்றினேன், பல வேலைகளை எப்படி குறுகிய காலக்கட்டத்தில் செய்யலாம், என்று ஆய்வு செய்தேன். பாடலாசிரியாக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். பாடல்கள் பாடியிருக்கேன், ராப் பாடகாரானேன். பிறகு ஐடி துறையில் பணியாற்றினே. பிறகு படிக்க தொடங்கினேன். ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து கத்துக்கிட்டேன். ஒளிப்பதிவாளரிடம் இருந்து எப்படி வேலை வாங்கலாம், லைட்டிங் உள்ளிட்ட பல விசயங்களை அவர்களுடன் என்னால் ஆலோசிக்க முடியும்.

இந்த மேடையில் நான் சொல்ல விரும்புவது, செய்ய முடியாத ஒரு விசயத்தை செய்து முடித்து சாதிக்கப் போகிறோம். அது எப்படி? என்பதற்கான அனைத்து பணிகளையும் தயார் செய்து வைத்திருக்கிறோம். நான் முழு கதையையும் என் மூளையில் வைத்திருக்கிறேன். பிராம்டிங் மூலம் காட்சிகளை விவரிக்கப் போகிறேன். டப்பிங் பண்ண முடியாது, என்பதால் பூம் மைக் போட்டு லைவாக சவுண்ட் ரெக்கார்டிங் பண்ண முடிவு செய்திருக்கிறோம். சவுண்ட் ரெக்கார்டின் பண்ணும் போது நாய்ஸ் வந்தால், அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம், என்று யோசித்து அதற்கான சில வேலைகளை செய்ய உள்ளோம். அதுபோல் ஒளிப்பதிவும் தான். 3 கேமராக்களை வைத்து எடுக்க இருக்கிறோம். லைட்டிங், எப்படிப்பட்ட கேமரா என்று அனைத்திலும் சரியான தெளிவோடு இருக்கிறோம். இதை கின்னஸ் ரெக்கார்ட்ஸிடம் எடுத்துச் செல்லும் போது, அவர்கள் இப்படி ஒரு கேட்டகிரி இல்லை, என்று சொன்னார்கள். அதனால் தான், நோபல் விருதுக்கு எடுத்து சென்றோம். அவர்கள் இதை கேட்டதும், இது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருக்கிறது, இதை செய்யலாம் என்று சொன்னார்கள். அதே சமயம், இது சாத்தியமா, இதை எப்படி செய்யலாம் என்று கேட்டார்கள். அதேபோல் அவர்கள் இந்த துறை சார்ந்தவர்களிடம் இது குறித்து கேட்டு இது சாத்தியம், நீங்க சொன்னது உண்மை, ஆனால் இதை செய்ய முடியுமா தெரியவில்லை. நீங்கள் முடித்தால் உங்களுக்கு சான்றிதழ், வழங்குகிறோம், என்று சொல்லியிருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நடத்தப்படும் அதே நாளில் எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கே வரவைத்து அனைத்து பணிகளையும் அங்கேயே செய்ய முடிவு செய்திருக்கிறோம். இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்டால், சாத்தியம் முடியும், என்று இன்று சொல்கிறேன். இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு உங்களை சந்திக்கிறேன், நன்றி.” என்றார்.

படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சீகர் ராஜ்குமார் பேசுகையில், “தூவல் மற்றும் எக்ஸ்ட்ரீம் படங்கள் மூலம் உங்களை சந்தித்திருக்கிறேன். எக்ஸ்ட்ரீம் படம் முடிந்த பிறகு அருண் என்னை சந்தித்தார். இந்த படம் பற்றி சொன்னார். நாங்கள் டிரையினிங் கம்பெனி நடத்துகிறோம். கார்ப்பரேட் பணியாளர்களுக்கு மெண்டார் செய்வோம். எனவே, எங்களுக்கு எதாவது ரிஸ்க் எடுக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் அருண் இந்த கதையை சொன்ன போது, நானும் என் மனைவியும் ஆலோசனை செய்துவிட்டு அவரிடம் பேசினேன். அப்போது எதை எப்படி செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது, அவர் சில விசயங்களை மிக தெளிவாக கூறினார். மேலும், சிலரை சந்திக்க வைத்தார், அவர்களிடம் பேசும் போது சிலர் பயந்து விட்டார்கள். ஆனால், இளைஞர்களுடன் இணைந்த போது அவர்கள் செய்யலாம் என்று எங்களுடன் தைரியமாக இணைந்தார்கள். அதேபோல் நடிகர்களும் செய்யலாம் என்று எங்களுடன் இணைந்துள்ளனர். தூங்காமல் வேலை செய்யப் போகிறோம்.

இதை எப்படி செய்யப் போகிறோம், என்று எங்களுக்கும் இதுவரை தெரியவில்லை. கடவுளிடம் தான் இருக்கிறது. ஆனால், எங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குழுவினரும் உற்சாகமாக இருக்கிறார்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் செய்யலாம் சார், என்று சொல்கிறார்கள். உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் நிச்சயம் செய்வோம். ஏற்கனவே இரண்டு படங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தீர்கள். அதேபோல், இப்படி ஒரு சாதனை முயற்சிக்கு நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம், நன்றி.” என்றார்.

ஒரு நாளில் படப்பிடிப்பு முடித்து, அடுத்த நாள் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடிப்பது சாத்தியமா? மற்றும் எடிட்டிங் செய்து ரெண்டரிங் ஒரு நாளில் முடியுமா? உள்ளிட்ட பல கேள்விகளை நிருபர்கள் படக்குழுவினரிடம் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு இயக்குநர் பிக்கய் அருண் பதில் அளிக்கையில்,

”நீங்க சொல்வது உண்மை தான். எடிட்டிங் செய்து விடலாம், ஆனால் அதை அவுட் எடுக்க ரெண்டரிங் போட்டால் நேரம் அதிகம் ஆகும். அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளை ரெண்டரிங் எடுப்பதும் அதிகம் நேரம் பிடிக்கும். ஆனால், அவற்றை குறுகிய நேரத்தில், வேகமாக செய்வது எப்படி, அதற்காக எத்தகைய சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டும், என்பதை நாங்கள் ஆராய்ந்து, அதற்கான சரியான தொழில்நுட்பங்களை தேர்வு செய்து வைத்திருக்கிறோம். அது என்ன? என்பதை இங்கு சொல்ல முடியாது. காரணம், இதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த இடத்தில் அதை சொல்லிவிட்டு, பிறகு வேறு யாராவது அதை பயன்படுத்தி விட கூடாது அல்லவா அதற்காக தான்.

இது சாத்தியம் இல்லாத விசயம் தான், ஆனால் அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை சரியான முறையில் திட்டமிட்டிருக்கிறோம். திகில், ஃபேண்டஸி, மிஸ்டரி என மூன்று ஜானர்களைக் கொண்ட படமாக இருக்கும். திகிலில் தொடங்கி ஃபேண்டஸியாக உருவெடுத்து மிஸ்டரியாக முடிவடையும். படத்தில் ஒரு பாடல் இருக்கிறது, முடிந்தால் அதை படமாக்குவோம், இல்லை என்றால் அது படத்தில் இருக்காது. படத்திற்கு சென்சார் கேட்டோம். ஆனால், அவர்கள் அரசு துறை சார்ந்தவர்கள் என்பதால், உங்களுடன் பணியாற்ற முடியாது. நீங்கள் படத்தை முடித்து, தணிக்கை சான்றிதழுக்கானபணிகளை செய்யுங்கள், எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறோம், என்று சொன்னார்கள். அதே சமயம், படக்குழுவுக்கு திரையிட சென்சார் சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் நோபல் சாதனை அமைப்பும், நீங்கள் படத்தை முழுமையாக முடித்து திரையிட்ட உடன் உங்களுக்கு சான்றிதழ் வழங்குவோம். திரையிடுவது மிக அவசியம் என்று சொன்னார்கள். அதனால், பிரசாத் லேபில் அவர்களுக்கு திரையிட இருக்கிறோம்.” என்றார்.

இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பிக்கய் அருண், “நான் நிறைய கதைகளை எழுதி வைத்து அதை வேறு சிலர் படமாக எடுத்து விட்டார்கள். அனைத்தும் பெரிய பெரிய படங்கள். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் யார் என்பது இப்போது சொல்ல முடியாது, ஆனால் நிச்சயம் ஒரு நாள் சொல்வேன். அதனால் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நல்ல கதை, அதை நல்லபடியாக எடுத்து முடித்தாலும் கூட புதியவர்கள் என்பதால் அந்த படங்களை வாங்க மறுக்கிறார்கள். அதுபோல் பல படங்கள் இருக்கிறது. நல்ல படமாக இருந்தாலும் புதியவர்கள் என்பதால் அந்த படங்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை. இதுபோன்ற ஒரு புதிய முயற்சி என்றால் நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள், பிறகு படம் நன்றாக இருந்தால் அது மக்களிடம் எளிதில் சென்றடையும். அதற்காக தான் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டேன். இது மிகப்பெரிய ரிஸ்க்கான முயற்சி தான் என்பது எனக்கு தெரியும், ஆனால் அதை நிச்சயம் வெற்றிகரமாக செய்து முடித்து சாதிப்பேன், என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

கமலஹாசன் அவர்களின் குரல் கற்பனையின் குரல் அல்ல,காலத்தின் குரல்!

0

சங்க காலத்தின் குரல் !
வரலாற்று உண்மை!
கன்னடம் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இவை எல்லாமே தமிழில் இருந்து பிரிந்தவைதான்.
இந்த உண்மை ஏன் ஒரு சில கன்னடர்களுக்கு சினம் கொள்ளச் செய்கிறது?
இவர்களின் மொழிப்பற்று வரலாற்று உண்மைகளை மாற்றி விட முடியுமா?
உண்மையை உரைத்த கமல் ஏன் மன்னிப்பு கோர வேண்டும்?
அரசியல்வாதியாக அல்ல கமல் ஒரு தமிழனாய்த்தான் பேசியிருக்கிறார்.
ஆனால் கமல் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் என்னதான் திராவிடன்! திராவிடன்! திராவிடன் என்று சொன்னாலும், தெலுங்கர்களுக்கும் மலையாளிகளும், கன்னடர்களும் உங்களை தமிழனாகத்தான் பார்ப்பார்கள்!
பிரிந்து சென்ற பிள்ளைகளுக்கெல்லாம் மொழிப்பற்று இருக்கிறது.
தமிழ் தாய் பிள்ளைகளுக்கு மட்டும் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!

–இயக்குனர் #பேரரசு

’Vembu’ Cinematographer Kumaran’s World Guinness Movie!

0

Actor Thambi Ramaiah’s kind gesture of appreciating ‘Vembu’ cinematographer Kumaran for a never-before visual attempt!

Debut filmmaker Justin Prabhu’s directorial ‘Vembu’ that had its theatrical release recently, has been garnering phenomenal response from all over the places. The film featuring Madras (Johny) fame Hari krishnan and Sheela of Mandela fame has been appreciated for its core theme and presentation.

Marimuthu, Jayarao among others have performed pivotal roles in this movie.

The film with its backdrop set around the current societal scenario deals with the intention of creating awareness about women’s safety, thereby gaining appreciations. The cinematography, handled by Kumaran, has also garnered appreciation for its contribution to the film’s impact.

Sharing his journey in the industry and experience of working in ‘Vembu’, Cinematographer Kumaran says, “Even before I completed my graduation in B.Tech, I got an opportunity work in the film industry. I embarked on my journey as assistant cinematographer to cameraman Vaidhy in the movie ‘Marudhamalai’ and continued to work with him in Malayalam and Kannada movies. Later, I worked in couple of Kannada movies, and worked as ‘Operative Cameraman’ in DOP Velraj sir’s directorial ‘Velai Illa Pattadhaari’.

Later, I became cinematographer through his next directorial ‘Thanga Magan’, and it was my debut film as cinematography and then cranked camera for the film ‘Engamma Rani’.

When I worked in the film ‘Badam Geer’, I happened to meet filmmaker Justin Prabhu, who worked as assistant director in that film. Our friendship and bonding helped us collaborate in this movie. We had discussed many stories, and Vembu was the one to get finalised.

The film was shot in the Krishnagiri region, which is a place most filmmakers don’t usually go to. It looked beautiful and matched the story well. For one scene, we thought it would look nice if it rained. But the area was so remote that we couldn’t even bring in a water tanker to create artificial rain. So we decided to shoot the scene without rain. Surprisingly, it started raining naturally right when we were about to shoot.

We instantly decided to shoot the scene as preplanned under natural rain showers. I felt so blessed during that moment.

It’s truly heartening to hear the positive response from audiences after watching the film. What moved me even more was hearing comments that my visuals carry the signature style of Balu Mahendra sir. While I take it as a great compliment, I also felt a bit nervous being compared to a genius of his stature.

Currently, I have worked a new film ‘Please Open the Door’, which has now become a world record for being the first-ever single shot film with lengthy runtime. It’s getting ready for release. Since we had to shoot the entire film in single shot, it came with many challenges. We brought in some equipment from Bangalore to make sure nothing interrupted the visuals, which became a monstrous challenge during the shoot. I am then working on Kaali Venkat’s next movie, directed by Raghuram.

The other film down the line is another collaboration with Kaali Venkat, which also features Thambi Ramaiah sir in the lead role. Recently, we shot a courtroom scene using two cameras with newfangled technique. The entire crew appreciated me, and especially Thambi Ramaiah sir’s appreciation stating, “I am telling this as a director. In the films I have worked so far, none have made this kind of attempt Kumara.’ He has been consistently speaking about this scene picturing to everyone he meets often. This has blessed me with immense happiness.

My forthcoming film ‘Badam Geer’ is ready for release followed by Sameer Ali Khan’s production and lead role in ‘Tamil Paiyyan Hindi Ponnu’. This film will have beautiful visuals as in 90s Bollywood films. It will be totally in contrast to Vembu movie. Director appreciated me after watching the visuals complimenting that the film doesn’t need DI at all for giving such beautiful visuals.

Furthermore, I am working in another film titled ‘Nadhamuni’, featuring musical score by Isaignani Ilaiyaraaja, directed by Madhavan, which revolves round the cruel issue of child abuses. Big Boss fame Aiswarya Dutta is performing the female lead role in this movie.’

Two mega forces, Hrithik Roshan and Hombale Films, join hands for an Ambitious Pan-India Film!

0

A dream collaboration, this project will definitely be one of the biggest upcoming projects in Indian Entertainment Industry!

Hombale Films is one of the biggest film production houses in the Indian entertainment industry and has truly set a new benchmark with its highly successful films. While the studio has consistently amazed audiences with its mega blockbusters, the latest and most exciting update is that Hombale Films has officially announced a project with superstar Hrithik Roshan. The announcement itself has sparked widespread conversation. This is indeed a big news for both Hrithik Roshan’s fans and moviegoers across India.

Talking about the same, the founder Vijay Kiragandur shared “Very happy with this collaboration. At Hombale Films, our purpose is to tell stories that inspire and transcend boundaries. Partnering with Hrithik Roshan is a step forward in realizing that vision, crafting a film where intensity meets imagination on a grand scale. We are committed to delivering an experience that is both powerful and timeless.”

Adding further, Hrithik shared, “Hombale has been home to some very unique stories over the years. I’m looking forward to partner with them and deliver a cinematic experience for our audience. We are dreaming big, and committed to bringing the vision to life.”

Hombale Films is one production house that has emerged as one of the biggest content creators in India, delivering blockbuster pan-India films over the past few years with titles like KGF Chapter 1 & Chapter 2, Salaar: Part 1 – Ceasefire, and Kantara. They have not only set a new benchmark in storytelling but have also consistently delivered box office successes.

On the other hand, Hrithik Roshan is one of the biggest and most beloved superstars in the country. With his distinct personality, incredible on-screen presence, and flawless acting, he has delivered some of the industry’s biggest hits. He also boasts one of the strongest upcoming lineups, with War 2 and Krrish 4, both highly anticipated by fans.

Now, the announcement of a collaboration between Hombale Films and Hrithik Roshan has taken excitement to an entirely new stratosphere.

இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !!

இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது.

இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது….
“எங்களின் இந்த கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து மக்கள் விரும்பும் கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம். ஹிர்திக் ரோஷனுடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தக் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியப் படியாகும். பிரம்மாண்டமான அளவில், மிக ஆழமும் கற்பனையும் ஒன்றிணைக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இது மக்கள் மனங்களில் சக்திவாய்ந்ததும், நிலைத்தும் இருக்கும் ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.”

இதனைத் தொடர்ந்து நடிகர் ஹிர்திக் ரோஷன் கூறியதாவது….
“ஹொம்பாலே பிலிம்ஸ் பல தனித்துவமான கதைகளின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து ஒரு வெகு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் திரைப்படத்தில் பணியாற்ற மிக ஆவலாக உள்ளேன். நாங்கள் பெரிய திரைக்கனவுகளைக் காண்கிறோம் மற்றும் அதை நனவாக்க உறுதியாக இருப்போம். ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.”

கடந்த சில ஆண்டுகளில், பான்-இந்தியா அளவில் பெரும் வெற்றிப் படங்களை வழங்கி, ஹொம்பாலே பிலிம்ஸ் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகப் பெயர் பெற்றுள்ளது. கேஜிஎப்: பார்ட் 1 மற்றும் 2, சலார்: பார்ட் 1 – சீஸ்‌ஃபயர், மற்றும் காந்தாரா போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, அவர்கள் கதைக்களத்திலும், வசூலிலும் புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளனர்.

மற்றொரு புறம், ஹிர்திக் ரோஷன் இந்தியாவின் மிகவும் பிரபலமான சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். அவரது தனித்துவமான நற்சிறப்பும், மாபெரும் திரை நேர்த்தியும், சிறந்த நடிப்பும் அவரை உயரத்தில் நிறுத்தியுள்ளன. வார் 2 மற்றும் க்ரிஷ் 4 போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களுடன், அவர் மிக வலுவான வருங்கால திரைப்பட வரிசையைக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஹொம்பாலே பிலிம்ஸும் ஹிர்திக் ரோஷனும் இணைகிறார்கள் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு புதிய உச்சத்துக்கே சென்றுள்ளது!

Actor-Producer Yash and Mad Max Stunt Director Guy Norris Shoot Massive Action Sequences for Namit Malhotra’s Ramayana, First Image Out

0

Designed to blend myth, scale, and spectacle — actor-producer Yash joins hands with Hollywood’s legendary stunt director Guy Norris for one of the biggest Indian films in the making.

Ramayana has become one of the most anticipated spectacles in Indian cinema, and the buzz has only grown stronger as actor-producer Yash begins filming for the magnum opus, produced by visionary producer Namit Malhotra. Rocking Star Yash is all set to bring Ravana to life in a larger-than-life action arc, working closely with legendary Hollywood stunt director Guy Norris — celebrated for Mad Max: Fury Road and The Suicide Squad. The film promises to be a landmark in filmmaking— a mythological epic powered by top-tier talent, a world class VFX team, grand sets and an ensemble cast that brings this story to life.

Norris is currently in India choreographing elaborate, high-octane action sequences tailored for the scale of Ramayana, with Yash’s character at the center of the storm. Known for his close involvement across all aspects of his projects, Yash is actively collaborating with the team to shape a visual spectacle that pushes the limits of Indian action cinema. He is slated to shoot for 60–70 days for Ramayana Part 1.

Recent images from the set reveal Yash in peak physical form — ripped, intense, and battle-ready. His transformation hints at a fierce, reimagined Ravana and a performance that could redefine how Indian action heroes are viewed globally.

Crafted to elevate Indian storytelling for a global stage, Ramayana brings together an extraordinary vision, a stellar ensemble, and world-class talent. With Yash not just leading from the front with Ranbir Kapoor, but also contributing as a co-producer, this is more than just a film — it’s a cinematic milestone in the making. He has been involved with the project from the start, lending his creative insight every step of the way.

Directed by Nitesh Tiwari and produced by Namit Malhotra’s Prime Focus Studios and Yash’s Monster Mind Creations, Ramayana Part 1 is slated for release on Diwali 2026, and the second part on Diwali 2027.

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் ‘இராமாயணா’ படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

‘இராமாயணா’ படத்திற்காக யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியது !!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான ‘இராமாயணா’ படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கைகோர்த்துள்ளார்கள்.

நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, இப்படத்தின் இணை-தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், பரந்த எதிர் நாயகனாக ராவணனை மிக பிரம்மாண்டமாகக் காட்டும். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில், கய் நோரிஸ் இந்தியா வந்து வேலை செய்யும் நிலையில், யாஷ் இதில் நேரடியாக ஈடுபட்டு, இந்திய ஆக்சன் சினிமாவின் தரத்தை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.

இராமாயணா பாகம் 1 க்காக யாஷ் 60–70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் வெளியான படப்பிடிப்பு புகைப்படங்களில், யாஷ் தனது உடல் அமைப்பை மாற்றி, ராவணனாக ஒரு வித்தியாசமான, மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், இந்திய ஹீரோக்களை உலகளவில் புதிய பார்வையில் காணச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தினை நிதேஷ் திவாரி இயக்குகிறார், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள். உலகத் தரத்தில் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட் தர VFX, பிரம்மாண்டமான செட்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்களை ஒன்றிணைத்த ஒரு காட்சித் திருவிழாவாக உருவாகிறது.

‘இராமாயணா பாகம் 1’ – தீபாவளி 2026, மற்றும் பாகம் 2 – தீபாவளி 2027 வெளியாகவுள்ளது.

- Advertisement -

Recent Posts