சமீபத்தில், கார் விபத்தில் மரணமடைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் திருவுருவ படம் திறப்பு நிகழ்வில் கவிஞர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் சி.சத்யா, இயக்குனர்கள் மங்கை அரிராஜன், சிட்டிசன் மணி, கவிஞர்கள் சீர்காழி சிற்பி, எழில் வேந்தன், பாடகர்கள் நார்வே ஜெயராஜ்,, ஸ்ரீதர், டான்ஸ் மாஸ்டர் பவர் சிவா, பிஆர்ஓ கோவிந்தராஜ், ஆறுமுகம், கீபோர்ட் பிளேயர் சுரேஷ் மற்றும் திரையுலகினர் பலர் கலந்துக் கொண்டனர்!

வந்தவர்களுக்கு நன்றி கூறி பேசிய இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் கிரண், “அப்பாவுடன் இணைந்து நானும், எனது அண்ணன் ரங்கராஜூம் இசையமைத்து வந்தோம். தற்போது அப்பா மறைவுக்குப் பிறகு, அப்பா விட்டுச் சென்ற இசைப் பணியை நாங்கள் தொடர உள்ளோம்” தயாரிப்பார்கள் மற்றும் இயக்குனர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here