தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 2.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்பு வீடுகள் திறப்பு விழா இன்று (05/01/2024) நடைபெற்றது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.2.03 கோடியில் கட்டப்பட்டுள்ள 40 வீடுகளை தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here