கே.பாலச்சந்தர் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், நடிகர், கலைமாமணி பூவிலங்கு மோகன், பொதுச்செயலாளர் கவிதாலயா பாபு, பொருளாளர் M.முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் “இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர்கள்
R.ரகுநாதரெட்டி, L.நாகா, R.R.ராஜ்குமார், R.K.விக்ரமன், திரைப்படம் மற்றும் சின்னத்திரை இயக்குநர்கள் தளபதி, கிருபா சரவணன், நடிகர்கள் சிவன் சீனிவாசன், ஆனந்த், இளைய கட்டபொம்மன், மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், கேப்டன் வணச்சாமி, சித்த மருத்துவர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here