சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோ நிறுவனர் கெளசி அவர்கள் முயற்சியில், ஆயிரம் பாடல்கள்,தொடர்ச்சியாய் நூற்று இருபது மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி,சாதனை படைத்ததற்கான சாதனை சான்றிதழ் WORLD RECORDS UNION தலைமைப் பொறுப்பாளர் மூலமாக பெற்றார்கள். இந்த நிறைவு விழா சென்னை தி.நகர் பி.டி தியாகராயர் அரங்கில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக
இசைக்கவிஞர் செளந்தர்யன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, வாழ்த்தி பேசினார்.

“ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில்,பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால் பெண்களுக்கு இயல்பாகவே குடும்பம், குழந்தைகள், அதிகமான பொறுப்புகள் நம்மை விட அவர்களுக்கு அதிகம். அதையும் சமாளித்து, கெளசி அவர்கள் இப்படியொரு சாதனை புரிந்திருக்கிறார்கள் என்றால் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த வருடம் பாராட்டும் படியாய் நிறைய சாதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் அவர்கள் மிகப்பெரிய சாதனையாய் முதல்வராய் வந்திருக்கின்றார். அதில் பெண்கள் MLA கள் ஆகவும், அமைச்சர்களாகவும் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கெளசி அவர்களும் சாதனை படைத்திருக்கின்றார். இவரது சாதனை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லட்டும். ஆஸ்கர் அவார்டு கூட இவர் வாங்கட்டும்”…. என வாழ்த்தி, பேசினார் இசையமைப்பாளர் சௌந்தர்யன்.

@GovindarajPro

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here