சென்னை, மார்ச் 4: 2022 ஆம் ஆண்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஜீ தமிழ் விமர்சையாக துவங்கியது . இப்போது மார்ச் மாதத்தில் அனைவரையும் கோலாகலத்தில் மூழ்கடிக்க மெகா திருமண வைபவத்தை நிகழத்த ஜீ தமிழ் தயாராகிவிட்டது. இந்த சிறப்பு இரண்டு மணிநேர கல்யாண வைபோகம் ஒரு வாரந்திரத் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது . உங்களுக்குப் பிடித்தமான தொடர்களின் மூலமாக, திருமண சம்பிரதாயங்களையும், அழியா ஞாபகங்களையும் இந்நிகழ்ச்சி உங்கள் கண்முன் கொண்டுவரும். வரும் மார்ச் 6 முதல், ஞாயிறுதோறும் மதியம் 2 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘மெகா திருமண வைபவம்’ துவங்கவுள்ளது.

இதனை முன்னிட்டு, ஜீ தமிழ் இன்று சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் 4 ஜோடிகளுக்கு ஜீ தமிழ் சார்பாக தாம்பூல தட்டு சீர் வரிசை பொருட்களுடன் வழங்கப்பட்டது. தாய் வீட்டு சீதனம் போன்று கல்யாண மாலை, பட்டு வேட்டி சேலை, இனிப்பு, பழங்கள் மற்றும் வெத்தலை பாக்குடன் ஜீ தமிழ் சார்பாக வழங்கி மணமக்களை ஜீ தமிழ் வாழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here