- Advertisement -
Home Blog Page 177

தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை.தொல்.திருமாவளவன் விளக்கம்

0

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருக்குறள் படத்தின் இயக்குனர் A.J பாலகிருஷ்ணன் பேசியதாவது..

அனைவருக்கும் வணக்கம், குரோசோவா சொல்லுவார் ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்வார். இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான் காமராஜ் படத்திற்கும் எழுதினார். அவர் ஒரு திராவிட இயக்க போராளி. இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமா சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகொள் வைததார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரலோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம். இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம். அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். இந்த படம் உருவாக ரெண்டு பேர் முக்கியமான காரணம், விஐபி விஸ்வநாதன் ஐயா வந்து ரொம்ப சிக்கனமான மனிதர் அவர் இதுக்கு உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். கலைச்சோழன் நான் பேச வேண்டியதை பேசி விட்டார்: நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் பேசியதாவது….

எனக்கு முன்னர் பேசிய அனைவரும் திருக்குறளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் மிக ஆழமாக நுட்பமாக பல்வேறு கருத்துக்களை நம் முன்னால் எடுத்து வைத்திருக்கிறார்கள். இயக்குநர் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர் வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர். இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார். கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன். திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது. இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது. தனி நபரை முன்னிறுத்துவதை விட, அவர் சொன்ன கருத்தியலை, முன்னிறுத்த வேண்டும், உயர்த்தி பிடிக்க வேண்டும், வெகு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்கிற பார்வை முக்கியம். நம் சமகாலத்தில் வாழ்ந்து, மக்களுக்கு தொண்டாற்றி பெரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள், பெருந்தலைவர் காமராஜர் மகாத்மா காந்தியடிகள். ஆகவே அவர்களை முன்னிறுத்துவது, இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவர், வாழ்ந்தவர் திருவள்ளுவர். இதிலே என்ன ஒரு உண்மை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்றால்? திருவள்ளுவர் என்கிற பெயர் திருக்குறளை எழுதியவர் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவர்தான் எழுதினார் என்பதற்கு ஆதாரம் இல்லை, அந்த நூலை எழுதியவர் பெயர் இதுதான் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவருடைய பிறப்பு அவருடைய வாழ்க்கை பற்றி, நாம் கேள்விப்படுகிற அனைத்தும் அவ்வப்போது அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை தவிர காமராஜரை போல உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வரலாறு

அல்ல. காந்தியடிகளைப் போல இந்த தேதியில் பிறந்தார், இந்த தேதியில் வாழ்ந்தார் மறைந்தார், என்று சொல்லுகிற உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் எதுவும் இல்லை. இப்போது நம்முடைய ஆட்கள் திருவள்ளுவர் எந்த சாதியாய் இருக்கக்கூடும், எந்த மதமாய் இருக்கக்கூடும், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள். திருவள்ளுவர் மதச்சார்பின்மை கோட்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பதை இயக்குனர் சேகர் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார். அதுதான் முன்னிறுத்தப்பட வேண்டிய செய்தி. அதுதான் கருத்தியல் ஆகவேதான் இயக்குனர் A. j.பாலகிருஷ்ணன் அவர்கள் திருவள்ளுவர் யார் என்பதை விட, திருக்குறள் என்ன என்பதுதான் மிகவும் முதன்மையானது, அது என்ன சொல்லுகிறது அதுதான் நமக்கு மக்களுக்கு போய் சேர வேண்டிய செய்தி, ஆகவேதான் திருவள்ளுவர் என்று இந்த திரைப்படத்திற்கு பெயர் பெயர் சூட்டாமல், ஒரு கதாநாயகனை ஆராதிக்காமல், அந்த நூல் சொல்லுகிற வாழ்வியலை, கருத்தியலை, கோட்பாட்டை, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற, மிக உயர்ந்த பார்வையோடு இதனை அவர் அணுகி இருக்கிறார் என்று நான் பெரிதும் நம்புகிறேன். 1812 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இது அச்சுக்கு வந்தது என்ற தரவுகள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி என்றால் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னர், அதற்கு முன்பு வரையில் இது அட்சிக்கு அட்சியில் வரவில்லை, ஓலைகளில் இருந்தது, ஓலைகளில் இருந்த திருக்குறளை, அன்றைய சென்னை மாகாணத்தின் அதிகாரியாக இருந்த எல்லிஸ் பிரபு, எல்லிஸ் துரை, பிரான்சிஸ் வைட் எல்லிஸ் அவருடைய முழு பெயர், அவரிடத்திலே கொண்டு போய் கொடுத்தவர் அயோத்திதாசர். பண்டிதருடைய தாத்தா கந்தப்பன் என்பவர் அவர்தான் தன் வீட்டில் பரனில் இருந்த ஓலைச்சுவடிகளை கொண்டு போய் எல்லிஸ் துறையிடம் கொடுத்து அவர் அதை படித்து அதை அச்சுக்கு கொண்டு வந்தார், என்று வரலாற்று தரவுகள் நமக்கு கூறுகின்றன.

இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1800 12ல் எல்லிஸ் அவர்களும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். எல்லிஸ் அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்தான் அந்த ஹென்ரி ஒயின்ஸ்டன் என்பவரும், அவருக்கு பிறகுதான் எல்லிஸுக்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு 1856லே கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒட்டுலக்கணம் எழுதுகிறார் இந்த மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்கிற செய்தியை தாண்டி இந்தியாவில் பேசப்படக்கூடிய பல்வேறு மொழிகளுல் மிகவும் தொன்மை வாய்ந்தது சிறப்புக்குரியது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தான் என்கிற செய்தியையும் சொல்லுகிறார்கள். அந்த காலத்திலே பாலிமொழி இருந்தது, அந்த காலத்திலே சமஸ்கிருதம் இருந்தது, இன்றைக்கு பாலி மொழியை பேச யாருமில்லை பௌத்தம் புத்தரே பேசிய மொழி பாலிமொழி என்று அறியப்படுகிறது. இப்போது இப்போதைக்கு அது பேச்சு வழக்கிலே இல்லை சமஸ்கிருதம் சான்ஸ்கிரிட் இன்றைக்கு பேச்சு வழக்கிலே இல்லை. அந்த சமகாலத்தில் தோன்றியால் அல்லது அதற்கு முன்பு தோன்றிய வரலாற்று தரவுகளை கொண்ட தமிழ் மொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது. உலகம் தழுவி அளவில் வலிமை பெற்றிருக்கிறது. புதுமையை உள்வாங்கி இருக்கிறது தமிழ் மொழிக்குள்ள சிறப்பு தொன்மையும் புதுமையும் இணைந்த ஆளுமை மிக்க ஒரு மொழி பல மொழிகள் தோன்றி வளர்ந்து முதுமை அடைந்து மறைந்து போய்விட்டன, தமிழ் நிலைத்துள்ளது. இன்றைக்கு கணினி மொழி வந்துவிட்டது. அது புதுமை. கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி.

தமிழர்களின் மாண்பை பறைசாற்றுகிற எத்தனை படைப்புகள் இருந்தாலும் அந்த 18 கீழ்க்கணக்கு
நூல்களிலே, திருக்குறள் மட்டும்தான் உலகளாவிய நூற்றுக்கணக்கான மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பெற்ற பெருமுக்கிருவ நூல், திருக்குறள். அண்ணன் வி சேகர் அவர்கள் சொன்னதை போல இது ஒரு மதம் சார்ந்த நூலாக இருந்திருந்தால், அந்த மதத்திற்குரியவர்கள் மட்டும்தான் போற்றி இருப்பார்கள், போற்றிக் கொண்டிருப்பார்கள், பைபிள் கிறிஸ்தவர்களுக்குரியது, அதனால் ஆனால் உலகத்தில் எந்தெந்த மொழியை பேசுகிறவர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அந்த மொழியிலே பைபிளை மொழியாக்கம் செய்கிறார்கள். குர்ஆன் இஸ்லாமியர்களுக்குரியது, இஸ்லாமியர்கள் உலகம் தழுவிய அளவில் வாழ்கிறார்கள், அவர்கள் என்னென்ன மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து கொள்கிறார்கள். அதனால் அனைத்து பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை வருகிறது. இஸ்லாமியர்களுக்கு ஹீபுரு அல்லாத பிறமொழி பேசக்கூடிய அரபு அல்லாத பிறமொழி பேசக்கூடிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதவழி சார்ந்த மக்கள் தங்கள் தாய்மொழியில் அந்த குர்ஆனை அந்த வேத நூலை மொழியாக்கம் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று கட்டாயம் ஏற்படுகிறது. குர்ானுக்கு, பைபிளுக்கு ஆனால் அப்படி எந்த மதத்தையும் சாராமல், ஆனால் எல்லா மொழிகளை சார்ந்தவர்களும், ஒரு மொழியை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், ஒரு நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்றால் அந்த பெருமைக்குரிய நூல் திருக்குறள் மட்டும்தான். இது மனித குலத்துக்கே பொதுவான நூல் உலக பொதுமறை அப்படித்தான் திருக்குறளை நாம் முன்னிறுத்த வேண்டியது இருக்கிறது. இதை உயர்த்தி பிடிக்க வேண்டிய ஒரு பார்வை நமக்கு வேண்டும். அந்த பார்வை நம்முடைய இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் இந்த திரைப்படத்திற்கு திருக்குறள் என்று அவர் பெயரிட்டிருக்கிறார். தலைப்பிட்டுருக்கிறார். இதுவே அவருடைய சிறப்பு என்பதை சொல்லி இந்த அறிய வாய்ப்பை எனக்கு வழங்கிய அண்ணன் இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார்.

கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

Brace Yourself for Fun, Chills & Thrills: Recent Superhit “Devil’s Double Next Level” to Premiere on ZEE5 on June 13

0

India’s leading homegrown OTT platform, ZEE5, is bringing an enthralling supernatural horror comedy to audiences this June with “Devil’s Double Next Level” (DD Next Level), which is the fourth installment in the highly successful Dhilluku Dhuddu franchise. DD: Next Level will have its worldwide digital premiere on ZEE5 on June 13, in Tamil, Telugu, Malayalam, and Kannada.

Directed by creative filmmaker S. Prem Anand, DD Next Level features the King of Comedy, Santhanam, in the lead role. He is joined by Selvaraghavan, Gautam Vasudev Menon, and Geetika Tiwary in important supporting roles. The film is jointly bankrolled by The Show People and Niharika Entertainment.

The plot of DD Next Level follows a film reviewer who is trapped in a movie made by a vengeful director. To escape, he must survive the film’s deadly twists, which are controlled by a magical diary, and find a way to return to the real world.

Kissa (Santhanam), a sharp-tongued film reviewer who is invited to a mysterious private screening by the eccentric filmmaker Hitchcock Irudhayaraj (Selvaraghavan). However, things take an unexpected turn when Kissa is suddenly pulled into the movie itself as soon as it begins to play. Trapped by the magical rules written in an ancient diary, Kissa must join forces with two rival reviewers to solve clues, dodge supernatural obstacles, and survive shocking jump-scares. All the while, his girlfriend turns into a ghostly threat. What follows next is an entertainment roller-coaster ride filled with hilarious twists, jump scares and thrills.

Ahead of the film’s premiere, ZEE5’s Sr. Vice President Marketing South and Business Head, Tamil & Malayalam, Lloyd C Xavier said, “At ZEE5, we take immense pride in bringing extraordinary films to our platform, and acquiring Devil’s Double: Next Level is a testament to our commitment to offering diverse and compelling regional content. This exciting horror-comedy from The Show People and Niharika Entertainment presents a refreshing mix of thrills, humor, and innovative storytelling that we believe will strongly resonate with our viewers. We’ve witnessed a phenomenal surge in love for South stories across India, and this movie is a remarkable addition to our ever-expanding regional library. We are confident that Devil’s Double: Next Level will add significant value to our content offering and deliver an engaging viewing experience for our subscribers.”

The film’s writer and director, S. Prem Anand, said that he wanted to push the boundaries of traditional horror comedy with DD Next Level. He stated, “Collaborating with producers from The Show People and Niharika Entertainment, and having a phenomenal cast including Santhanam, Selvaraghavan, Gautham Menon, and Geethika Tiwary, allowed that vision to come alive just the way I imagined. We had so much fun breaking the fourth wall, playing with genre conventions, and crafting a film that’s full of surprises at every turn. I truly couldn’t have asked for a better platform than ZEE5 for its digital premiere. It’s a global stage that ensures the film reaches audiences far and wide. I’m incredibly excited to share this madness with viewers everywhere—get ready, the next level begins now!”

Lead actor Santhanam said that Kissa is one of the most creatively satisfying roles for him in recent times. He stated, “Kissa is bold, loud, full of quirks—and suddenly finds himself trapped inside the very kind of film he loves to roast! The meta madness, the horror-comedy twists, and the chaos that unfolds… it’s all been an absolute blast. I’m thrilled that Devil’s Double: Next Level is now premiering on ZEE5. This is a film meant to be experienced with friends and family, with lights off and popcorn in hand. Audiences can expect jump scares, laugh-out-loud moments, and a wild ride unlike anything else. If you think you’ve seen everything in Tamil cinema, trust me—this film takes it to the next level!”

Mark your calendars and prepare for a fun and thrill-filled ride of horror and comedy as DD Next Level makes its digital premiere, exclusively on ZEE5, on June 13.

ZEE5 புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்து, மொழியை மையமாகக் கொண்ட, பர்ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மாறுகிறது !!

0

~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~

~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் பெருமையையும் கொண்டாடும் புதிய முயற்சி ~

~ 7 மொழிகளில் UHD மற்றும் Dolby Atmos உடன் தொடங்கும், மொழியை மையப்படுத்திய சப்ஸ்கிரிப்ஷன் பிளான்கள் ₹120 முதல் துவங்குகிறது ~

~ 2025-26 நிதியாண்டில், 130க்கும் மேற்பட்ட புதிய சீரிஸாகவும், திரைப்படங்கள், நான்பிக்சன் மற்றும் லைவ் நிகழ்ச்சிகள் பல மொழிகளில் ~

இந்தியா, 7 ஜூன் 2025 – ZEE5 இன்று தனது புதிய பிராண்டு அடையாளத்தையும், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான மாற்றத்தையும் அறிவித்து, இந்தியாவின் முன்னணி உள்ளூர் OTT தளமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. “நம்ம மொழி நம்ம கதைகள்” எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், ZEE5 புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த புதிய மாற்றத்தில், மொழியை மையப்படுத்திய பல புதிய திட்டங்கள், AI சார்ந்த பர்ஸ்னலைஸ்ட் பரிந்துரைகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட கஸ்டமர் அனுபவம் ஆகியவை அடிப்படை அம்சமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மொழிக்குமான கண்டண்ட் பிளான்கள் தனித்தனியாக உருவாக்கப்படுகின்றது.

மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் ₹120/மாதம் முதல் தொடங்க, இந்தி (பஞ்சாபி மற்றும் போஜ்புரி உட்பட) ₹220/மாதம், All Access Pack ₹320/மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் வருடாந்திர சலுகை கட்டணமும் உள்ளது.

ZEE நிறுவனத்தில் வரவிருக்கும் முக்கிய மொழி சார்ந்த சீரிஸ்கள் :

Detective Sherdil (இந்தி)

Chhal Kapat: The Deception (இந்தி)

சட்டமும் நீதியும் (தமிழ்)

Mothubaru Love Story (தெலுங்கு)

Inspection Bungalow (மலையாளம்)

Maarigallu (கன்னடம்)

Aata Thambhahya Naay (மராத்தி)

Vibhishan (பெங்காலி) ஆகிய படைப்புகள் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் அமித் கோயங்கா கூறியதாவது…
“இந்திய பார்வையாளர்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆழமான பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட, மொழிக்கு முதன்மையான தளமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தில் எங்கள் புதிய பிராண்ட் அடையாளம் ஒரு முக்கிய படியாக இருக்கும். ZEE இந்த புதிய பிராண்ட், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில், எங்கள் தடத்தை வலுப்படுத்துதல், கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட மற்றும் உள்ளுணர்வு கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த, வசதியான தளத்தைத் தொடர்ந்து உருவாக்குதல் என செயல்படும். இது உலகளவில் இந்தியப் பொழுதுபோக்கு படைப்புகளைக் கண்டறிந்து, இணைத்து, நுகரும் விதத்தில் ஒரு புதிய கலாச்சார மாற்றமாகும்”

ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கார்த்திக் மகாதேவ் கூறுகையில்..,
“நம்ம மொழி நம்ம கதைகள்” என்ற வாசகத்துடன் கூடிய எங்கள் பிராண்ட் பிரச்சாரம், மொழி அடிப்படையிலானது, ஒரு ஆழமான பர்ஸனலைஸ் உணர்வுகளின் கொண்டாட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொழியில் சொல்லப்படும் ஒரு கதை, அதை வெறும் கதையாக பார்க்காமல், அதை வாழ்ந்தது போல உணர வைப்பது தான் எங்கள் நோக்கம். 7 மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த பன்மொழி பிரச்சாரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய நகரங்களின் கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மொழி அடிப்படையிலான இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதும், அவர்கள் மொழியில் அவர்கள் கலாச்சாரத்தில் படைப்புகளை வழங்க வேண்டும் என்ற ZEE5 இன் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது.

ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில்..,
“ZEE5 இல், சக்திவாய்ந்த கதைசொல்லல் ஆழமான கலாச்சார நுண்ணறிவுடன் தொடங்குகிறது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மொழி சார்ந்த பார்வையாளர்களுக்குச் சேவை செய்வதில், நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அவர்களின் யதார்த்தங்கள், அவர்களின் மொழிகள் மற்றும் அவர்களின் அன்றாட கதைகளில் இணைந்து, நாங்கள் எதை உருவாக்குகிறோம் என்பதை மட்டுமல்ல – யாருக்காக உருவாக்குகிறோம் என்பதையும் இதில் விரிவுபடுத்தியுள்ளோம். அது நீண்ட வடிவ ஒரிஜினல் கதைகள், குறுகிய வடிவ கதைகள் அல்லது சோதனை வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களை அவர்களின் மொழிகளில் மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள். இது வெறும் புதுமையான கண்டண்ட் உள்ளடக்க உத்தி மட்டும் அல்ல – பார்வையாளர்கள் முழுமையாக ரசிக்கும் வகையில் மொழியை மையப்படுத்தி, எங்கள் புதிய படைப்புகளை வழங்கவுள்ளோம்”

இந்த புதிய பிராண்டிங் மாற்றம், ‘Yours Truly, Z’ எனும் Zee நிறுவன வாக்குறுதியுடன் மிக இயல்பாக ஒத்துப்போகிறது. இது ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காக, பல்வேறு மொழிகளில் புதுமையான கண்டண்ட்களை வழங்கும் ஒரே தளமாக ZEE5 தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

Get Ready For The Ultimate KnockOut: Recent Blockbuster “Alappuzha Gymkhana” To Premiere On June 13, Exclusively On Sony LIV

0

Gear up for an exhilarating cinematic experience as one of this year’s biggest blockbusters in Malayalam cinema, “Alappuzha Gymkhana”, is set for its worldwide digital premiere on June 13, exclusively on Sony LIV. It will be available for streaming in Malayalam, Telugu, Hindi, Kannada and Tamil.

Directed by Khalid Rahman, Alappuzha Gymkhana is an action comedy that features an ensemble of highly talented young cast, including Naslen, Lukman Avaran, Ganapathi S. Poduval, Sandeep Pradeep, Anagha Ravi, Franco Francis, Baby Jean, and Shiva Hariharan.

Alappuzha Gymkhana tells the story of a lazy and laid-back youngster named Jojo Johnson (Naslen), who decides to get trained in boxing only to secure a college seat through the sports quota. However, his plans take a big turn when he and his friends happen to train under a no-nonsense coach named Antony Joshua (Lukman Avaran), who is known for pushing his trainees to their limits, demanding utmost dedication and effort in the ring. What starts as an easy way out quickly turns into a tale of persistence, self-discovery, and real friendship.

Speaking about the OTT premiere on Sony LIV, the film’s lead hero Naslen stated, “Working on Alappuzha Gymkhana has been an exhilarating experience. I got to tap into my own vulnerabilities and strengths to bring this character to life. I’m so grateful to be a part of this project and hope it connects with audiences across the country through its OTT release on Sony LIV.”

Alappuzha Gymkhana is produced by Khalid Rahman, Jobin George, Sameer Karat, and Subeesh Kannanchery. Vishnu Vijay composed the music for the film.

Trailer Link: https://www.instagram.com/reel/DKjuLAfxQTZ

Fasten your seatbelts for an unforgettable ride with Alappuzha Gymkhana, a film that is packed with action, fun, and valuable life lessons. Catch it exclusively on Sony LIV from June 13!

“படை தலைவன்” திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் !!

0

VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு அகமத்

இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார்..

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj Combines நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு – VJ Combines –

கதை இயக்கம் – U அன்பு

திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு

இசை – இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார்

படத்தொகுப்பு – அகமத்

ஸ்டண்ட் – மேத்யூ மகேஷ்

கலை இயக்கம் – P ராஜு

ஸ்டில்ஸ் – சக்திபிரியன்

பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்

மக்கள் தொடர்பு – சதிஷ் , சிவா )AIM

Actor Ravi Mohan Produces and Stars in ‘BroCode’

0

Ravi Mohan turns producer with his upcoming film titled BroCode, in which he also plays the lead role, under the direction of Karthik Yogi.

One of Tamil cinema’s leading stars, Ravi Mohan, will headline the new film BroCode, playing a pivotal protagonist role. The film marks his debut as a producer.

Directed by Karthik Yogi, known for films like Dikkiloona and Vadakkupatti Ramasamy, BroCode will feature Ravi Mohan in the lead role. Acclaimed actor S.J. Suryah also plays a significant character in the film, alongside four leading female actors.

Cinematography is by Kalaiselvan Sivaji, known for his work in Por Thozhil. The music is composed by Harshavardhan, the composer behind hits like Animal and Arjun Reddy. Editing will be handled by Pradeep E. Raghav, and art direction is by A. Rajesh.

Promised as a fun-filled entertainer with elements of slapstick comedy, the film is being produced under the banner Ravi Mohan Studios by actor Ravi Mohan himself.

Speaking about the project, director Karthik Yogi said:

“When I narrated the story to Ravi Mohan, he thoroughly enjoyed it and immediately came forward to produce it. The film features scenes rich in slapstick humor and is designed to offer a unique cinematic experience to the audience.”

The official announcement regarding the four leading female actors will be made soon, and the film’s shoot is scheduled to commence in September, according to the production team.

Meanwhile, Ravi Mohan is also acting in Parasakthi directed by Sudha Kongara and Karate Babu directed by Ganesh K. Babu.

கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்- ( BroCode) ‘ படத்தில் நடிக்கும் ரவி மோகன்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ‘ ப்ரோகோட்- (BroCode)’ எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ் பணியாற்றுகிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகன் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் விவரித்த போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் ” என்றார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திர நடிகைகள் யார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி ‘ மற்றும் இயக்குநர் கணேஷ் கே . பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

0

சரியான திரைப்படத்தைக் கண்டுபிடிக்க முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்கிறீர்களா? நாம் அனைவரும் அதை அனுபவித்திருக்கிறோம். SunNXT உங்களுக்காக ஒரு அற்புதமான பட்டியலை வழங்குகிறது

இதுவரை எங்கும் திரையிடப்படாத திரைப்படம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது…

லால் சலாம்
நடிப்பில்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்
இயக்கத்தில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-lal-salaam-2024/detail/223701

லால் சலாம் – நட்பு, நம்பிக்கை, நம்மளோட கதை!
‘லால் சலாம்’ ஒரு சாதாரண கிரிக்கெட் படம் கிடையாது. இது நட்பை, மதத்தால் உருவாகும் பிளவுகளை, அது பின் ஏற்படுத்தும் மனஉளைச்சலை உணர்ச்சிப் பூர்வமாக சொல்லும் திரைப்படம்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் சிறு வயதில் தொடங்கிய நட்பு, மத வேறுபாடுகளால் சோதிக்கப்படும் போது, அந்த வேதனை நம்மைத் தாக்காமல் இருக்க முடியாது. இந்த பின்னணியில், ரஜினிகாந்த் அவர்களின் மொய்தீன் பாய் ஒரே வார்த்தையில் செம்ம ‘ஸ்டைல்’ கொண்டு கதையை சீர்படுத்தி விடுகிறார்.அதற்கும் மேலாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசை… ஒவ்வொரு காட்சியையும் உயிரோடு பேச வைக்கிறது. சோகமும், நம்பிக்கையும் இசையில் உருகி வழிகிறது.சமூகமும், மனித நெஞ்சுகளும் சந்திக்கும் இடம் தான் ‘லால் சலாம்’.

Superstar ரஜினி ரசிகர்களுக்ககாவே

முத்து

நடிப்பில்: ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு
இயக்கத்தில்: கே. எஸ். ரவிகுமார்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

கடல்ல முத்து எப்படி அதிசயமோ, அதேமாதிரிதான் நம்ம தலைவரோட’முத்து’ படமும் சினிமாவுல அதிசயம்தான்.

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-muthu-1996/detail/75250

சந்திரமுகி
நடிப்பில்: ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா
இயக்கத்தில்: பி. வாசு
இசை: வித்யாசாகர்

அறிவால் ஆவியை வீழ்த்தியவன்,
மாயையின் முகமூடியை கிழித்தவன் – நம் தலைவர்!!
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-chandramukhi-2005/detail/8825

பேட்ட

நடிப்பில்: ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திகி
இயக்கத்தில்: கார்த்திக் சுப்பராஜ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்

ரஜினி ரசிகனால், ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியே செய்திருக்கும் தரமான சம்பவம் – பேட்ட !!

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-petta-2019/detail/127025

எந்திரன்

நடிப்பில்: ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பச்சன், டேன்னி டென்சொங்பா
இயக்கத்தில்: எஸ். சங்கர்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

இரும்புக்குள் ஒரு இதயம் முளைத்து, ‘எந்திரன்’… தந்திரன் ஆனால், என்ன நடக்கும்?

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-enthiran-4k-2010/detail/165835

த்ரில்லர் வேண்டுமா?

ராட்சசன்

நடிப்பில்: விஷ்ணு விஷால், அமலா பால்
இயக்கத்தில்: ராம் குமார்
இசை: ஃகிர்பான்

பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன், சினிமா இயக்குநர் கனவோடு திரிந்து, குடும்பச் சூழலால் போலீஸ் ஆன ஹீரோ… இருவரையும் இணைத்து மிரட்டுகிறான் – ராட்சசன்

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-ratsasan-2018/detail/82686

கெத்து

நடிப்பில்: விக்ராந்த், உதயநிதி ஸ்டாலின், சத்யராஜ்
இயக்கத்தில்: திருகுமரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒரு அமைதியான மலை நகரத்தில், ஒரு கொலையாளி குழப்பத்தை தூண்டி, பதட்டமான விளையாட்டைத் தூண்டுகிறார்

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-gethu-2016/detail/7263

நான் மிருகமாய் மாறா

நடிப்பில்: விக்ராந்த், சரத் குமார், வாணி போஜன்
இயக்கத்தில்: சத்யசிவா
இசை: ஃகிர்பான்
இந்த இருண்ட பழிவாங்கும் கதையில் விக்ராந்த் மிருகமாக மாறுகிறார். இது கரடுமுரடானது, ஜாக்கிரதை.

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-naan-mirugamai-mara-2023/detail/153462

டிராமா போய் தேடுபவர்களுக்கு

நீர்ப்பறவை
நடிப்பில்: விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ்
இயக்கத்தில்: சீனு ராமசாமி
இசை: என். ஆர். ராகுநாதன்

இலங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த – நீர்ப்பறவை!

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-neerparavai-2012/detail/7090

முத்துக்கு முத்தாக
நடிப்பில்: விக்ராந்த், இளவரசு, சரண்யா பொன்வண்ணன்
இயக்கத்தில்: ராசு மாதுரவன்
இசை: காவி பெரியதம்பி

கண்ணில் ஆற்றை ஊற்றுவிக்கும் ‘முத்துக்கு முத்தாக’!

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-muthukku-muthaga-2011/detail/6979

புகுந்து விளையாடா

வெண்ணிலா கபடி குழு
நடிப்பில்: விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன்
இயக்கத்தில்: சுசிந்திரன்
இசை: வி. செல்வகனேஷ்

சூரியின் பரோட்டா… அப்புக்குட்டியின் மாமியார்… ஊருக்குள் கெத்தான ஒரு கபடி குழு!! – வெண்ணிலா கபடி குழு

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-vennila-kabadi-kuzhu-2009/detail/8991

வெண்ணிலா கபடி குழு 2
நடிப்பில்: விக்ராந்த், பசுபதி, சூரி
இயக்கத்தில்: செல்வா சேகரன்
இசை: ஆர். அஜய்

புதிய தலைமுறை கபடி வீரர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்க இதயம், வியர்வை மற்றும் உடைக்க முடியாத கடினத்துடன் போராடுவதால்; பெருமைக்கான போர் தொடர்கிறது.

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-vennila-kabaddi-kuzhu-2-2019/detail/94548

த்ரில்லர் வேண்டுமா? நகைச்சுவை வேண்டுமா? அல்லது ரஜினியின் மாஸ்?
உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும், SunNXT உங்களுக்கான சரியான விஷயத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ – அதை ஸ்ட்ரீமிங் செய்து தயாராக வைத்திருக்கிறோம்.

🔐 இப்போதே Subscribe செய்யவும்:
அடிப்படைத் திட்டம் – ₹579 ஒரு வருடத்திற்கு
பிரீமியம் திட்டம் – ₹899 ஒரு வருடத்திற்கு

அதிக திரைப்படங்கள், அதிக சுவாரஸ்யம். நீங்கள் விரும்பும் இடத்திலேயே.

உங்கள் அடுத்த பிஞ்ச் இங்கே தொடங்குகிறது.
SunNXT. இப்போதே Subscribe செய்யவும்.

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

0

India Yamaha Motor, in collaboration with its authorized dealership Samukh Motors, hosted its inaugural “Mileage Challenge” for the 2025 FZ-S Fi Hybrid motorcycle in Chennai. Aimed at educating customers about the impressive fuel efficiency of the FZ-S Fi Hybrid’s Smart Motor Generator (SMG) Technology and its benefits, the event saw proactive participation from several Yamaha customers who eagerly took part in the challenge.

The Smart Motor Generator (SMG) and Stop & Start System (SSS), optimizes fuel economy and as a result, also reduces emissions. These systems ensure quieter starts, electric-assisted torque for exhilarating acceleration, and engine shutdown during idle, ultimately conserving fuel. This hybrid innovation allows riders to enjoy longer journeys with cost savings and a reduced environmental footprint, making it an ideal choice for eco-conscious riders seeking high performance and efficiency.

To kick off the challenge, Yamaha FZ-S Fi Hybrid motorcycles were fuelled up before embarking on a dedicated route starting from Samukh Motors in Sholinganallur to Mamallapuram, covering riding conditions like city ride, urban traffic and open roads. This gave participants the first-hand opportunity to evaluate the bike’s suspension, manoeuvrability, braking, acceleration, and initial pick-up. Upon completing the ride and returning to the venue, the bikes were refuelled to their initial level, and the fuel consumption was recorded for mileage calculation. As part of the engagement, Yamaha experts also shared insights on effective riding techniques and bike maintenance that ensures better mileage.

As a gesture of gratitude, each participant was rewarded with exclusive souvenirs, along with a complimentary bike wash. Furthermore, Yamaha’s commitment to customer satisfaction was exemplified through a comprehensive 10-point inspection, guaranteeing optimal performance and safety for all the customers’ motorcycles during the challenge.

Given below are the top 3 winners who were presented with trophies and certificates in appreciation of their accomplishments:

Winner Customer Name Mileage Achieved
1 Sadiq Ali 104.9.kmpl

2 Nitish Kumar R 91.3kmpl

3 Keran Aditya SJ 89 kmpl

நடிகை லிசிஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

0

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். 

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ”இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் ‘ஏமாற்றாதே’, ‘பொய் சொல்லாதே’, ‘திருடாதே’, ‘கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்’ என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். 

இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,” என்றார். 

நடிகை தாஷ்மிகா பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார். 

மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்,  எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல் திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன். 

அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம். 

இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ‘குயிலி’ திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன். 

இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். 

நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். 

தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.

அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.  

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் , இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ப. முருகசாமி பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது. 

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவை பார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,” என்றார். 

இசையமைப்பாளர் ஜூ ஸ்மித் பேசுகையில், ”முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை.  இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை தொலைபேசி மூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம் தயாரித்தால் நீ தான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார். 

சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார். 

இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, ‘குயிலி’ கமர்ஷியல் திரைப்படம் அல்ல,vகருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. 

இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,” என்றார். 

இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில், ” சினிமாவும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக சினிமாவில் அரசியல் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

‘குயிலி’ திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் , கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். தாய்ப்பாசத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். 

இந்த விழாவின் நாயகனான ஜூ ஸ்மித் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னால் அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இதுபோன்ற படங்களுக்கு இரண்டு பாடல்களே போதுமானது. பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் சினிமாவையே ஒன்றரை மணி நேரமாக சுருக்கி விட்டோம். இதுவே போதும் என்றும் நினைக்கிறோம். 

‘குயிலி’ திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்ல பண்பாட்டையும் போதிக்கும் படமாக இருக்கிறது. வலியை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”” என்றார். 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ”எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். 

இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, ‘கல்லூரி’ படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன். 

‘பொன்னியின் செல்வன்’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன்.  

இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன். 

இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இதுதான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ”சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன். 

இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. 

இந்தப் படத்திற்கு ‘குயிலி’ என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.  

இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ”சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன். 

வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. 

அண்ணன் ராஜன் பேசும்போது, ‘தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்’ என்றும் , இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது. 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  

மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே? 

இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப் போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். 

இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.  இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது. 

இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்… பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால்தான் உணர முடியும். 

இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.

இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை. 

தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலை இருக்கிறது.‌ ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில் நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாக அமைந்து விடுகின்றன.‌ 

மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வு தேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும் அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதை நாம் காண முடிகிறது. 

‘குயிலி’ படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். 

மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.  

மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,’ என்றார். 

பாடலாசிரியர் வேட்டவலம் த. ராமமூர்த்தி பேசுகையில், ”நான் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. 

மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்…

நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்…

மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,” என்றார்.

Chennai celebrates World Ocean Day in solidarity with impacted communities from the Kerala shipwreck disaster

0

Chennai, 8th June, 2025. Greenpeace India marked World Oceans Day 2025 with a powerful celebration at Besant Nagar Beach in Chennai, where around 30 volunteers came together for an early morning beach cleanup drive. A striking art of an Olive Ridley turtle was displayed to highlight the critical role the ocean plays in sustaining biodiversity, regulating the climate, and supporting coastal communities. The action also comes in solidarity with the Kerala population and the urgent need for transparency, cleanup, and accountability in response to the recent shipwreck accident and its ongoing consequences.
This year, World Ocean Day precedes the opening of the United Ocean Conference, from 9th to 13th June in France, where world leaders will convene to discuss their commitments for the protection of the global ocean. In the meantime, the dramatic impacts of the recent MSC ELSA 3 shipwreck offshore Kerala (on May 25th) keep unfolding with fuel and hazardous cargo threats looming at sea, while broken containers of unknown cargo and insane amounts of plastic pellets have been washing ashore in Kerala and Tamil Nadu, India — amid monsoon weather conditions impeding initial environmental assessment and clean-up initiatives. Just 4 years after the X-Press Pearl disaster in Sri Lanka, the region’s marine life, unique coastal ecosystems, and fisher communities are facing yet another shipping disaster with lasting consequences, of which the scale remains to be fully understood.
“From the sands of Besant Nagar to the shores of Kerala, the ocean connects us all. Today’s cleanup drive in Chennai was not just about collecting waste — it was a moment of collective care, led by local volunteers who know the ocean is their lifeline. As Chennai’s coast faces increasing plastic pollution and rising sea levels, our solidarity with Kerala’s fisherfolk is a reminder that ocean protection begins at home. The MSC shipwreck has severely impacted marine biodiversity and threatened livelihoods along the coasts of Kerala and Tamil Nadu. We urgently need accountability for the MSC disaster, but we also need long-term investment in building coastal resilience,” said Yasin Fahmidha, Campaigner at Greenpeace India.
“We are calling on local authorities and the MSC company to release the full cargo manifest of the MSC ELSA 3. The people in South India have the right to know and expect a detailed statement on the circumstances of the accident, as well as a comprehensive clean-up and compensation plan from MSC, who have not yet communicated two weeks after the shipwreck. When the decarbonization of the shipping industry and global plastics pollution are discussed at the UN Ocean Conference, major profitable shipping companies such as MSC can no longer shy away from their responsibility in such disasters, whereas marine life is choking on plastic pellets and fishing communities are being starved out,” added Amruta s Nair, Campaigner at Greenpeace India.
In Solidarity, Greenpeace deployed a documentation team in Kerala straight after the disaster — and this past week the organization has run several activities with ocean stakeholders, youth groups, and fisherfolks to convey the same message across the region: “One Ocean, Many Lives” in Khulna, Bangladesh; Galle and Colombo, in Sri Lanka; Odisha and Chennai, in India.
“With these events to celebrate World Ocean Day, we also want to deliver a joint message of hope together with our partners across the region. We demand our leaders quickly ratify the global High Seas Treaty to protect 30% of our oceans [1], as well as listen to the voice of small-scale fishers and the wisdom of coastal communities for the sustainable management of coastal resources and bottom-up profits to the local economies,” says Anita Perera, Campaigner at Greenpeace South Asia.

Media Contacts:

Nibedita Saha
Media Officer at Greenpeace India
Phone: +91 7045066118
Email: [email protected]
Amruta s Nair, Campaigner at Greenpeace India
Phone: +918304010458
Email: [email protected]

Anita Perera, Campaigner at Greenpeace South Asia – Sri Lanka
Phone: +94773925597
Email: [email protected]

Greenpeace media statement following the Kerala shipwreck disaster:
https://www.greenpeace.org/india/en/story/18544/greenpeace-india-statement-on-hazardous-cargo-ship-sinking-off-kerala-coast/
[1] In 2022, during the UN Biodiversity COP15, states agreed on a target of protecting at least 30% of the ocean by 2030, a figure supported by scientists for several years. 2.7% of the global ocean is currently fully or highly protected from human activities, and the figure is just 0.9% for areas of the high seas, which are beyond national jurisdiction.

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது

சென்னை, ஜூன் 8, 2025. கிரீன்பீஸ் இந்தியா, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தை ஒரு உறுதிமிக்க கொண்டாட்டத்துடன் கொண்டாடியது, அங்கு சுமார் 30 தன்னார்வலர்கள் அதிகாலை கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பல்லுயிர் பெருக்கத்தை நிலைநிறுத்துதல், காலநிலையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கடலோர சமூகங்களை ஆதரிப்பதில் கடல் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டும் வகையில் ஆலிவ் ரிட்லி ஆமையின் ஒரு அற்புதமான கலைவடிவம் காட்சிப்படுத்தப்பட்டது. சமீபத்திய கப்பல் விபத்து மற்றும் அதன் தொடர்ச்சியான விளைவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கேரள மக்களுடனான ஒற்றுமை மற்றும் வெளிப்படைத்தன்மை, சுத்தம் செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசரத் தேவையையும் இந்த நடவடிக்கை எடுத்துரைக்கிறது.

இந்த ஆண்டு, ஜூன் 9 முதல் 13 வரை பிரான்சில் நடைபெறும் ஐக்கிய பெருங்கடல் மாநாட்டின் தொடக்கத்திற்கு முன்னதாக உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. உலகப் பெருங்கடலைப் பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாடுகளைப் பற்றி விவாதிக்க உலகத் தலைவர்கள் இங்கு கூடுவார்கள். இதற்கிடையில், சமீபத்தில் கேரளாவின் கடற்கரையில் (மே 25 அன்று) ஏற்பட்ட MSC ELSA 3 கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்ட வியத்தகு தாக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, எரிபொருள் மற்றும் அபாயகரமான பொருட்களின் அச்சுறுத்தல்கள் கடலில் உள்ளன, அதே நேரத்தில் தெரியாத பொருட்ளின் உடைந்த கொள்கலன்கள் மற்றும் அதீத அளவு பிளாஸ்டிக் துகள்கள் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கரை ஒதுங்குகின்றன – பருவமழை காலம் ஆரம்ப சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சுத்திகரிப்பு முயற்சிகளைத் தடுக்கிறது. இலங்கையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவுக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு, பிராந்தியத்தின் கடல்வாழ் உயிரினங்கள், தனித்துவமான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீனவர் சமூகங்கள் நீடித்த விளைவுகளைக் கொண்ட மற்றொரு கப்பல் பேரழிவை எதிர்கொள்கின்றன, அதன் அளவு இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

பெசன்ட் நகர் மணல் பரப்பிலிருந்து கேரளக் கடற்கரை வரை, கடல் நம் அனைவரையும் இணைக்கிறது. சென்னையில் இன்றைய தூய்மைப்படுத்தும் பணி வெறும் கழிவுகளைச் சேகரிப்பது மட்டுமல்ல – கடல்தான் அவர்களின் உயிர்நாடி என்பதை அறிந்த உள்ளூர் தன்னார்வலர்கள் தலைமையிலான கூட்டுப் பராமரிப்பின் தருணமாகவும் இது அமைந்தது. சென்னையின் கடற்கரைகள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாட்டையும் கடல் மட்ட உயர்வுகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், கேரள மீனவர்களுடனான நமது ஒற்றுமை மற்றும் கடல் பாதுகாப்பு வீட்டிலிருந்தே தொடங்குகிறது என்பதை நினைவூட்டுகிறது. எம்எஸ்சி கப்பல் விபத்து கடல் பல்லுயிர் பெருக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது மற்றும் கேரளா மற்றும் தமிழக கடற்கரைகளில் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தியுள்ளது. “எம்எஸ்சி பேரழிவிற்கு நாம் அவசரமாக பொறுப்புக்கூற வேண்டும், அதே நேரத்தில் கடலோர மீள்தன்மையை உருவாக்குவதில் நீண்டகால முதலீடும் தேவை,” என்று கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சாரகர் யாசின் ஃபஹ்மிதா கூறினார்.

“MSC ELSA 3 இன் அனைத்து பொருட்கள் பற்றிய அறிக்கையை வெளியிடுமாறு உள்ளூர் அதிகாரிகளையும் MSC நிறுவனத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தென்னிந்தியாவில் உள்ள மக்களுக்கு விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்த விரிவான அறிக்கையையும், கப்பல் விபத்துக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இன்னும் தொடர்பு கொள்ளாத MSC-யிடமிருந்து விரிவான சுத்தம் செய்தல் மற்றும் இழப்பீட்டுத் திட்டத்தையும் அறிந்துகொள்ளவும் எதிர்பார்க்கவும் உரிமை உண்டு. கப்பல் துறையின் கார்பனேற்றம் மற்றும் உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு ஆகியவை ஐ.நா. பெருங்கடல் மாநாட்டில் விவாதிக்கப்படும்போது, ​​MSC போன்ற பெரிய லாபகரமான கப்பல் நிறுவனங்கள் இதுபோன்ற பேரழிவுகளில் தங்கள் பொறுப்பிலிருந்து இனி விலகிச் செல்ல முடியாது, அதே நேரத்தில் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் துகள்களால் மூச்சுத் திணறி வருகின்றன, மேலும் மீன்பிடி சமூகங்கள் பட்டினியால் வாடுகின்றன, ”என்று கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சாரகர் அம்ருதாஸ் நாயர் கூறினார்.

பேரழிவுக்குப் பிறகு உடனடியாக கேரளாவில் கிரீன்பீஸ் ஒரு ஆவணக் குழுவை நியமித்தது – கடந்த வாரம் இந்த அமைப்பு கடல்சார் பங்குதாரர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து பிராந்தியம் முழுவதும் ஒரே செய்தியை தெரிவிக்க “ஒரு பெருங்கடல், பல உயிர்கள்”; எனும் தலைப்பில் வங்காளதேசத்தின் குல்னாவில்; இலங்கையில் காலி மற்றும் கொழும்பு; இந்தியாவில் ஒடிசா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பல நிகழ்வுகளை நடத்தியது.

“உலகப் பெருங்கடல் தினத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்வுகளுடன், பிராந்தியம் முழுவதும் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து நம்பிக்கையின் கூட்டுச் செய்தியை வழங்க விரும்புகிறோம்.”நமது பெருங்கடல்களில் 30% ஐப் பாதுகாக்க உலகளாவிய உயர் கடல் ஒப்பந்தத்தை [1] விரைவாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், கடலோர வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு அடிமட்ட லாபம் ஈட்டுவதற்காக சிறு அளவிலான மீனவர்களின் குரலையும் கடலோர சமூகங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் நாங்கள் நமது தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்கிறார் கிரீன்பீஸ் தெற்காசியாவின் பிரச்சாரகர் அனிதா பெரேரா.

ஊடக தொடர்புகள்:
நிபேதிதா சஹா
கிரீன்பீஸ் இந்தியாவின் ஊடக அதிகாரி தொலைபேசி: +91 7045066118 மின்னஞ்சல்: [email protected]
அம்ருதா எஸ் நாயர்
கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சாரகர்
தொலைபேசி: +918304010458 மின்னஞ்சல்: [email protected]

அனிதா பெரேரா
கிரீன்பீஸ் தெற்காசியா – இலங்கையின் பிரச்சாரகர்
தொலைபேசி: +94773925597 மின்னஞ்சல்: [email protected]
கேரள கப்பல் விபத்து பேரழிவைத் தொடர்ந்து கிரீன்பீஸ் ஊடக அறிக்கை: https://www.greenpeace.org/india/en/story/18544/greenpeace-india-statement-on-hazardous-cargo-ship-sinking-off-kerala-coast/

[1] 2022 ஆம் ஆண்டில், UN பல்லுயிர் COP15 இன் போது, ​​2030 ஆம் ஆண்டுக்குள் கடலின் குறைந்தது 30% பகுதியைப் பாதுகாக்கும் இலக்கை நாடுகள் ஒப்புக் கொண்டன, இந்த அளவை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆதரித்துள்ளனர். உலகளாவிய பெருங்கடலில் 2.7% தற்போது மனித நடவடிக்கைகளிலிருந்து முழுமையாகவோ அல்லது அதிகமாகவோ பாதுகாக்கப்படுகிறது, மேலும் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட உயர் கடல்களின் பகுதிகளுக்கு இந்த எண்ணிக்கை வெறும் 0.9% மட்டுமே.

- Advertisement -

Recent Posts