- Advertisement -
Home Blog Page 194

சிறிய படங்களுக்கு அதில் நடித்தவர்கள் கூட ஒத்துழைப்பதில்லை! – ‘யாமன்’ பட இயக்குநர் வருத்தம்

0

’ஒற்றாடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன், தனது இரண்டாவது படமாக, ‘யாமன்’ என்ற படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, கே.எஸ்.எம். ஸ்கிரீன் பிளே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சக்தி சிவன், காயத்ரி ரெமா நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஆதேஷ் பாலா, சம்பத்ராம், அருள் டி.சங்கர், திருச்சி சாதானா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திகில் ஜானர் திரைப்படமான இப்படம், பார்ப்பவர்களை மிரள வைப்பதோடு, வழக்கமான பாணியில் பயத்தாலும் திகில் காட்சிகள் நிறைந்த, சுவாரஸ்யமான பேய் படமாக பயணிக்கிறது, என்று படம் பார்த்த பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ‘யாமன்’ படத்திற்காக அப்படத்தில் நடித்தவர்களே விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்துள்ளதால், தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.எஸ்.மணிகண்டன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மிகவும் கஷ்ட்டப்பட்டு திரையரங்குகளில் வெளியிட்டுள்ள ‘யாமன்’ படத்தின் காட்சிகளை சில திரையரங்குகள் ரத்து செய்திருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், 40 பேர் குடும்பத்தோடு படம் பார்க்க சென்ற நிலையில், அங்கிருக்கும் தியேட்டர் ஒன்றில் காட்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தையும் தியேட்டர் நிர்வாகம் தெரிவிக்கவில்லையாம். பொதுவாக 8 பேருக்கு குறைவான டிக்கெட் விற்பனையால் மட்டுமே தியேட்டர் நிர்வாகம் காட்சிகளை ரத்து செய்யலாம் என்ற நிலை இருந்தும், சுமார் 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தனது படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றும் அங்கு திடீரென்று காட்சி ரத்து செய்யப்பட்டது, தனக்கு மிகுந்த கவலையளிக்கிறது, என்று கே.எஸ்.மணிகண்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற சிறிய படங்களில் நாங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வருவதில்லை, அப்படி இருந்தும் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் படம் தயாரித்து, இயக்கியுள்ளேன். நானே என் சொந்த முயற்சியில் தியேட்டர்களில் வெளியிடவும் செய்திருக்கிறேன். இதுபோன்ற நிலையில், எந்தவித காரணமும் இன்றி படத்தின் காட்சியை திடீரென்று ரத்து செய்தது எந்த விதத்தில் நியாயம், இப்படி செய்தால் என்னை போன்ற சிறு முதலீட்டு இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் என்ன செய்வார்கள்?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ”படத்தில் நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, அவர் நடிக்கும் அனைத்து படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர், ‘யாமன்’ படத்தின் வெளியீட்டின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்க அழைத்தேன், முதலில் வருவதாக சொன்னவர், இப்போது சென்னையிலேயே இல்லை, என்று சொல்கிறார். முதலில் படத்தில் நடித்தவர்கள் தங்களது படங்களை பார்க்க வேண்டும், அந்த படம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கும் சேர்த்து தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், படம் முடிந்த பிறகு அவர்களுக்கும், அவர்கள் நடித்த படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்ற ரீதியில் அவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற விசயங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று என் படம் வெளியாகியிருக்கிறது, ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நான் மட்டுமே தியேட்டர் வாசலில் இருக்கிறேன். ஆனால், நாயகன் சக்தி சிவன், நாயகி காயத்ரி ரெமா, முக்கிய வேடத்தில் நடித்த திருச்சி சாதனா என யாரும் என்னுடன் நிற்கவில்லை. அவர்கள் ஒத்துழைத்திருந்தால் என் படம் நிச்சயம் வெற்றி பெறும். தற்போது படம் பார்த்த மக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டுகிறார்கள். படத்தின் நட்சத்திரங்கள் எங்கே என்றும் கேட்கிறார்கள். ஆனால், என் படத்தில் நடித்தவர்களே படம் பார்க்க வராதது வருத்தமாக இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா பேசுகையில், “கே.எஸ்.மணிகண்டன் படத்தை இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு இவ்வளவு எமோஷனலாக பேசுகிறார். நான் இந்த படத்தில் சிறு வேடத்தில் தான் நடித்திருக்கிறேன். எனக்கு படம் முடியும் போது தான் வாய்ப்பு கொடுத்தார். சிறிய வேடமாக இருந்தாலும், என்னால் இந்த படத்திற்காக எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அதை கொடுத்து வருகிறேன். சிறிய படம், பெரிய படம், சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு வேடங்களையும் என் வெற்றியாக நினைத்து கொண்டாடி வருவதோடு, என் பெற்றோர்களுக்கு அந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். அப்படி தான் இந்த படத்தையும் பார்க்கிறேன். இதில் நடித்ததோடு ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். முதலில் பாட மறுப்பு தெரிவித்தேன், ஆனால் இயக்குநரின் வற்புறுத்தலால் பாடினேன். அந்த பாடலை திரையில் காட்சியுடன் பார்க்கும் போது மிக பிரமாண்டமாக இருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடும் ஹிட் பாடலாக மாறியிருக்கிறது. அந்த பாடல் மூலம் எனக்கு தொடர்ந்து பாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாடுவேன். ‘யாமன்’ சூப்பரான ஹாரர் படம். நிச்சயம் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது, நன்றி.” என்றார்.

சோசியல் மீடிய பிரபலமும், இளம் நடிகையுமான ஹரினி படம் குறித்து கூறுகையில், “இயக்குநர் என் நண்பர் என்பதால் ‘யாமன்’ படம் பார்க்க வந்தேன். படம் சிறப்பாக இருக்கிறது. படத்தில் நடித்தவர்களே இன்று படம் பார்க்க வராதது வருத்தமாக இருக்கிறது. படத்தில் படுக்கையறை காட்சிகளும், கிளுகிளுப்பான காட்சிகளும் இருந்தால் தான், அந்த படத்திற்கு பப்ளிஷிட்டி கிடைக்கிறது. பெரிய படங்களுக்கு அப்படி இல்லை என்றாலும், சிறிய படங்களில் இதுபோன்ற கவர்ச்சியான விசயங்கள் இருந்தால் மட்டுமே, அந்த படம் மக்களிடம் சேருகிறது. அந்த வகையில், இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும்படியும், திகில் படங்களை விரும்புகிறவர்களுக்கு பிடிக்கும்படியும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படத்தை விளம்பரப்படுத்த இதில் நடித்தவர்களே வராமல் இருப்பதற்கு என்னை பொறுத்தவரை இது தான் காரணமாக இருக்கும். திருச்சி சாதனா சோசியல் மீடியாக்களில் ஆபசாமாக பேசுவார், வீடியோக்கள் பதிவிடுவார். ஆனால், அவரை அப்படி காட்டாமல் நாகரீகமாக காட்டி ஒரு நடிகைக்கான அங்கீகாரம் படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவரும் வரவில்லை என்றால் என்ன சொல்வது. படத்தில் நடிக்காத நாங்கள், இந்த படத்தை விளம்பரப்படுத்த இங்கு வந்திருக்கிறோம். எங்களைப் போன்று படத்தில் நடித்தவர்களும் வர வேண்டும், அப்படி வந்தால் மட்டுமே சிறிய படங்கள் வெற்றி பெறும்.” என்றார்.

Pradeep Ranganathan, Mamitha Baiju, Keerthiswaran, Mythri Movie Makers Telugu-Tamil Bilingual Dude First Look Unveiled, Set For Massive Diwali Release 2025 Worldwide.

0

After his sensational debut in Love Today, where he impressed both as an actor and director, Pradeep Ranganathan has continued his winning streak with the bilingual success of Dragon. The film cemented his growing reputation across Tamil and Telugu audiences alike. Riding high on back-to-back hits, Pradeep is currently starring in a Pan India venture, produced by the renowned banner Mythri Movie Makers. The upcoming film will also introduce Keerthiswaran as a director. Premalu Beauty Mamitha Baiju plays the leading lady, while senior actor Sarath Kumar plays a crucial role in the film.

The makers officially unveiled the film’s title today, besides releasing its striking first look and making a major announcement regarding its release date. Titled youth-appealingly Dude, the first look poster features Pradeep Ranganathan in an intense avatar, with his face marked with bruises and his expression filled with grit, as he holds a Mangalsutra in his hand. As the title and first look poster suggests, Dude is shaping up to be a complete entertainer with a modern twist. The film is set to hit screens worldwide for Diwali 2025, aiming to light up the festive season.

Mythri Movie Makers has brought together a dynamic crew of emerging talent for their upcoming bilingual film. Leading the musical front is the fast-rising composer Sai Abhyankkar, while the visual aesthetics are entrusted to cinematographer Niketh Bommi. The film’s world will be crafted by production designer Latha Naidu, with Barath Vikraman steering the editing table.

With production already in full swing, the team is working at a brisk pace to offer a proper entertainer for Diwali. The movie Dude will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.

Cast: Pradeep Ranganathan, Sarath Kumar, Mamitha Baiju, Rohini Molleti, Hridhu Haroon, Dravid Selvam & Others.

Technical Crew:
Writer & Director: Keerthiswaran
Producers: Naveen Yerneni, Y Ravi Shankar
CEO: Cherry
Executive Producer: Anil Yerneni
Music: Sai Abhyankkar
Cinematographer: Niketh Bommi
Production Designer: Latha Naidu
Costume Designer: Poornima Ramaswamy
Editor: Barath Vikraman
Tamil PRO: Suresh Chandra, Satish
Telugu PRO: Vamsi-Shekar
Marketing: First Show

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!

‘லவ் டுடே’ படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கடுத்து அவர் நடித்த ‘டிராகன்’ படமும் தமிழ், தெலுங்கில் வெற்றிடயடைந்தது. அடுத்தடுத்து வெற்றிகளுக்குப் பிறகு அவர் இப்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் இன்று படக்குழு அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கவரும்படி ‘Dude’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. முகத்தில் காயங்களோடு கையில் தாலி வைத்துக் கொண்டு பிரதீப் முதல் பார்வை போஸ்டரில் இருக்கிறார். மாடர்ன் ட்விஸ்ட்டோடு கதை இருக்கும் என்பதை போஸ்டர் தெளிவாகக் காட்டுகிறது. இந்த வருடம் 2025 தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகிறது.

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி மொல்லெட்டி, ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து மற்றும் இயக்கம்: கீர்த்தீஸ்வரன்
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய் ரவிசங்கர்,
சிஇஓ: செர்ரி,
நிர்வாக தயாரிப்பாளர்: அனில் எர்னேனி,
இசை: சாய் அபயங்கர்,
ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: லதா நாயுடு,
ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,
எடிட்டர்: பரத் விக்ரமன்,
மக்கள் தொடர்பு (தமிழ்): சுரேஷ் சந்திரா, சதீஷ்
மக்கள் தொடர்பு (தெலுங்கு): வம்சி-சேகர்
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்

0

2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ‘ரெட்ரோ’ படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரங்களை பரிசாக அளித்தார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் குறிப்பிடுகையில், ”ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இத்திரைப்படம், இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்த திரைப்படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு ‘கடைகுட்டி சிங்கம்’ வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் ‘விருமன்’ வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் திரையுலகினர் சூர்யாவுடனும், படக் குழுவினருடனும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் தடையாய் ஆட்டமாடும் தீவிரவாதத்தை வேரறுப்போம்.

0

தேதி : 10.05.2025
பத்திரிகை செய்தி
26 உயிர்கள்….
இன்று 140 கோடி மக்களின் மனதை துடிக்க, துவளச் செய்திருக்கிறது. ஆயினும் கட்டுப்பாட்டில் ஒன்றாய் ஒற்றுமையாய் நிற்கிறது. உணர்ச்சிப்பெருக்கால் மட்டுமின்றி, எதிரியின் நகர்வை தீவிரமாய் கவனித்து ஆழ ஆராய்ந்து பதிலடி கொடுத்துவிடுகின்றன நம் தேசத்தின் முப்படைகளும்.. முடிவு செய்யும் அரசும்…
இறையாண்மை காக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கவசமாய் உயர்ந்து நிற்கும் முப்படை வீரர்களுக்கும் ஒன்றிய அரசிற்கும் 140 கோடி மக்களின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி சொல்கிறது.
அரசின் வழிகாட்டுதலை கடைபிடிப்போம். வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் தடையாய் ஆட்டமாடும் தீவிரவாதத்தை வேரறுப்போம்.

(M.நாசர்)
தலைவர்

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : ‘தி வெர்டிக்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் தள்ளிவைப்பு..!

0

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தி வெர்டிக்ட்’.

அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்துள்ளார்.

மேலும் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சரத்குமார் வெளியிட்டிருந்த நிலையில்,ஃபர்ஸ்ட் சிங்கிளை மதன் கார்க்கி வெளியிட்டிருந்தார்.
இந்தப் படத்தின் டீசரை குஷ்பூ வெளியிட்டு இருந்தார். இந்த மூன்றும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக அதிகரித்து இருந்தது.

இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதில் “திருடா” என்ற பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவிவரும் போர்ப் பதற்றம் காரணமாக செகண்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு மே மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

0

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை சரிசெய்யாமல், அடுத்தடுத்து சங்கங்கள் தொடங்கிக் கொண்டே இருந்தால் கடைசி வரை பிரச்சினைகள் முடியாது. இது ஒரு எச்சரிக்கை மணி. அடுத்து எப்படி வேண்டுமானாலும் திருப்பி விடப்படலாம். இந்தப் படத்தின் டெக்னீஷியன்ஸ் தான் இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ”’மையல்’ என்ற தலைப்புக்கே என்ன அர்த்தம் என்பதை இங்கே வந்திருக்கும் அனைவரும் அறியும்படி இயக்குநர் செய்திருப்பது சிறப்பு. பாடல், போஸ்டர் எல்லாம் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ கார்த்தி, ப்ரியாமணி போல உள்ளது. ஆக்‌ஷன் மோடுடன் நல்ல திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற நிறைய நல்ல படங்கள் வரவேண்டும். ’டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் அனுபமா விக்ரம் சிங், “’மையல்’ படக்குழு சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன். இந்தக் கதையில் ஆன்மா இருக்கிறது. இந்தப் படத்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “தேனப்பன் இதில் பணிபுரிந்திருப்பதும் மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ்தான் படத்தின் பலமே. சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். அமருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! கிராமத்து படம் எனும்போது லைவ்வாக இசை அமைய வேண்டும். அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். பாடல்களும் படமும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.

பாடலாசிரியர் ஏகாதிசி, “படம் நன்றாக வந்துள்ளது. அமர் சிறந்த இசையமைப்பாளர். மூன்றாவது பாடல் என்னுடையது. அவருடன் இணைந்து வேலை செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் இயக்குநர் அழகாக செய்துக்கியுள்ளார். ‘மையல்’ இல்லை என்றால் மனிதமே இல்லை. ஆண் பெண் மீதும், பெண் ஆண் மீதும் மையல் கொள்ளவில்லை என்றால் இனப்பெருக்கமே இல்லை. இந்த ‘மையல்’ மிகப்பெரிய வெற்றியை மனிதக்குலத்திற்கு தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றால் ரஜினியோ கமலோ உருவாகி இருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் செய்வதை சரியாகச் செய்தாலே திரைத்துறை நன்றாக இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் எனக்குப் பிடித்த இயக்குநர். எல்லோரையும் அரவணைத்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தான் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளரின் மகனது படத்தின் விழாவிற்கு கே.எஸ். ரவிக்குமார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பெருமிதமான தருணம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!”.

மாஸ்டர் கனல் கண்ணன், “படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். அருமையாக வந்துள்ளது. அமர் இசையமைத்திருக்கும் படத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஹீரோவும், ஹீரோயினும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், “வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இயக்குநர் மிகவும் நம்பிக்கையாக உள்ளார். படம் நிச்சயம் வெற்றி பெறும். செல்வமணி சொன்னதுபோல ஃபெப்சியை உடைக்க முடியாது”.

பாடலாசிரியர் விவேகா, “ஆழமான சிந்தைனையோடு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கே.எஸ். ரவிக்குமார் சாரிடம் நிறைய படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு வந்து வாழ்த்தியது பெரிய விஷயம். படத்தின் கதாநாயகன் அதிகம் புத்தகங்கள் பற்றி என்னிடம் பேசுவார். நடிகர் புத்தகம் பற்றி பேசுவது ஆரோக்கியமான விஷயம். அமர் அழகான பாடல்களைக் கொடுத்துள்ளார். படத்திலும் அனைவரும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார். ‘மையல்’ அனைவருடைய இதயத்தையும் கொள்ளை கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”.

இயக்குநர் பேரரசு, “ரவிக்குமார் சார் தலைமையில்தான் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவரது காலம் சினிமாவில் பொற்காலம். ஏனெனில் தயாரிப்பாளரை விட அதிக அக்கறை அவருக்கு இருக்கும். ‘திருப்பதி’ படத்திற்கும் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் மாதம் என்று ஃபிக்ஸ் செய்து தான் வேலைப் பார்த்தோம். ’மையல்’ எல்லோருக்கும் இருந்ததால்தான் எம்.ஜி.ஆர். அவர்கள், ஜெயலலிதா அவர்கள், கலைஞர் என எல்லோரும் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயித்தார்கள். மையலை பல வகையாகச் சொல்லலாம். ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் கருதியிருக்கும் அமைப்பு. அதற்கு எதிராக ஒன்று ஆரம்பிக்கும்போது அது உழைப்பாளர்களுக்கு என்று ஆரம்பிப்பதா? இல்லை, ஃபெப்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிப்பது. அது தவறான நோக்கம். ‘மையல்’ திரைப்படத்திற்கு வருவோம். ‘மைனா’ படத்தில் கதாநாயகன் விதார்த்தாக இருக்கலாம். ஆனால், சேதுதான் அங்கு அடுத்த கதாநாயகன். இந்தப் படத்தில் அவருக்கு நல்ல ஜோடி அமைந்துவிட்டது. அமலாபால் போலவே இந்தப் படத்திலும் நல்ல ஹீரோயின் அமைந்து விட்டார். கதையும் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஏழுமலை, “இந்த ‘மையல்’ உருவாக காரணம் சேதுதான். எல்லாப் புகழும் என் கதாநாயகன் சேதுவுக்குதான். என் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் சங்கத்தில் இருந்து வாழ்த்த வந்திருக்கும் அனைத்து முன்னோடி இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். சவுந்தர்யன் சாருடைய மகன் அமர் இந்தப் படத்தில் அழகாக இசையமைத்திருக்கிறார். படத்திற்காக அயராது உழைத்திருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.

Priya Prakash Varrier on Versatility, Dreams, and Staying Grounded

0

Priya Prakash Varrier became an internet sensation with her iconic wink in Oru Adaar Love, but she’s since proven she’s much more than a viral moment. In a recent interview, the actress shared her growth, acting style, and future ambitions.

The highlight of her career came with the blockbuster Good Bad Ugly, where she shone alongside the towering personality of Ajith Kumar and the double role dhamaka of Arjun Das. “I’m just grateful it happened,” Priya says. “But I’ve always wanted to be seen as more than that.” Her portrayal of Nithya in Good Bad Ugly was a major milestone, playing a character who evolves emotionally. “She went out of her way for love,” Priya reflects. She also expressed gratitude for working with Ajith, calling it a dream come true. “ I still
Can’t believe it happened. What a towering personality and grounded attitude. Plenty to learn from him” she says

Another standout moment was her tribute dance as Sultana, inspired by Simran. Priya shared her admiration for the legendary actress, joking with co-star Arjun about possible trolling for their performance.

Looking ahead, Priya is focused on her aspirations. “I plan to choose my projects carefully,” she says, expressing her dream of working with Mani Ratnam. She’s also eager to explore action roles. “I want to keep growing. That’s what excites me.”

Known for her spontaneous acting style, Priya prefers to stay in the moment rather than over-plan. While her social media following grows, she keeps it in perspective. “It’s just an extension of my work. I don’t want to be the center of attention—I just want to focus on what I do.”

With talent, humility, and ambition, Priya Prakash Varrier is charting a dynamic path that promises many more surprises.

“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

‘ஒரு அடார் லவ்’ படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது டபுள் தாமாக்கா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார் பிரியா. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக சொல்லி இருப்பவர் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் சொல்கிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு மைல்கல் நடிகை சிம்ரனின் ‘சுல்தானா…’ பாடலை ரீகிரியேட் செய்து பிரியா நடனமாடியது. சிம்ரன் நடனத்துடன் ஒப்பிடும்போது தன்னுடைய நடனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என அர்ஜூன் தாஸிடம் தெரிவித்ததாகவும் சொல்கிறார்.

மேலும் பிரியா பகிர்ந்து கொண்டதாவது, “அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குநர் மணி ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்‌ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

0

கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும்பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான “வா தமிழா வா”ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது.

மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் ஆறுசீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஏழாவது சீசன்விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் இந்தநிகழ்ச்சயை தொகுத்து வழங்குகிறார்.

சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள்என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்தஉருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில்நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்துசெல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும்பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.

“சேவ் த வாய்ஸஸ்” – திறமைமிகு குரல்களுக்காக ஒரு புதிய முயற்சி !!

0

மே 3ஆம் தேதி வெஸ்டின் வேளச்சேரியில் துவாரகா ஸ்டூடியோஸ் சார்பில், ஃபேஷன் உலகின் மிக முக்கியமான “கிராண்ட் காலா ஃபேஷன் வீக்” நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் சித்தி இத்னானி, வைபவ்,கருணாகரன்,பிரதீப் மில்ராய்,நயனா சாய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிர்க்யா நக்ரா, பிக்பாஸ் தர்ஷன், ஷிவானி நாராயணன்,மாதுரி ஜெயின்,சஞ்சனா சிங், இனியா ,ஸ்வயம் சித்தா ,ஆகியோருடன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர்.

ஃபேஷன் உலகின் பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில், திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையிலான “சேவ் த வாய்ஸஸ்” அறக்கட்டளை அமைப்பு அறிவித்தனர்.

திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள “சேவ் த வாய்ஸஸ்” என்ற புதிய அமைப்பு, இசை உலகில் போராடும் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவ, ஒரு சமூக அமைப்பாகச் செயல்படவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் குழுவால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள்:

உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு வழங்குதல்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இசைத்திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கவும், பாடுவதிலும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளித்தல்.

அவர்களை ஒரு தெளிவான இசைமிக்க வாழ்க்கை நோக்கில் வழிநடத்தி, இசைத்துறையில் ஒரு நிலையான இடம் பிடிக்க உதவுதல்.

இந்த புதிய அமைப்பு, திறமை மிக்க எளிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் புத்துயிர் பாய்ச்சும்.

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

0

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.

இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மீடியா நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில், அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

Recent Posts