திரையில் :-
கோகுல் கவுதம், ஷர்மிஷா, டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஶ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா மற்றும் பலர்
₹_₹
திரைக்குப் பின்னால் ……
தயாரிப்பு :- கேப்டன் சிவபிரகாசம்உதயசூரியன் .
கதை, திரைக்கதை
இயக்கம்:-
இரா. தங்கபாண்டி
( முதல் படம்).
கேமரா :- சின்ராஜ் ராம்
இசை :-விபின். ஆர்.
வசனம் :- நெய்வேலி பாரதி குமார்
எடிட்டர் :-
ரவிசந்திரன். ஆர்.
ஸ்டண்ட் :- மாஸ் மோகன்
டான்ஸ் :- ராக் சங்கர்
தயாரிப்பு நிர்வாகம் :-
குட்டி கிருஷ்ணன்
தயாரிப்பு
மேற்பார்வை :- சீனு
மக்கள் தொடர்பு :-
விஜயமுரளி
₹₹
பாடல்கள்
(1) நெல்லை என்ற சொல்லை ……
இயற்றியவர் :- நெய்வேலி பாரதிகுமார்
பாடியவர் :- கோல்டு தேவராஜ்.
(2) மம்பட்டி நுனி …..
எழுதியவர் :- வே. ராமசாமி
பாடியவர்கள்:-
பத்மஜா சீனிவாசன்
சிபி சீனிவாசன்
(3) நேரமோ ……
பாடலாசிரியர் :-
கார்த்திக் கிருஷ்ணன்
பாடியவர் :-
சிபி சீனிவாசன்
(4) ஆகாசமும் ……
கவிஞர் :-
தமிழ்மணி
பாடியவர் :-
வைஷ்ணவி கண்ணன் and விபின் ஆர்.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
14.03.2025 முதல்
தமிழகமெங்கும் திரையரங்குகளில்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ட்ராமா’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி, இயக்குநர் கே . பாக்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி , இயக்குநர்கள் ராகவ் மிர்தாத், வெற்றி, நடிகர் லிங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் பேசுகையில், ”வாய்ப்புகள் தேடி பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்காததால் என்னுடைய நண்பர்களின் ஆதரவுடன் இப்படத்தின் பணியை தொடங்கினேன். அவர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த கூடாது என்று கட்டளையிட்டதால்.. தயாரிப்பாளராக என்னுடைய மனைவியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை பைலட் மூவியாகத் தான் முதலில் தொடங்கினோம். அது சிறப்பாக வந்தவுடன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது,” என்றார்.
இசையப்பாளர் ராஜ் பிரதாப் பேசுகையில், ”இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனுடன் இணைந்து பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான். குறும்படங்கள் இயக்கும் காலகட்டத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். குறும்படத்தை கூட தரமாக உருவாக்க வேண்டும் என விரும்புவார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை என்றாலும்.. தரமான படைப்புகளை தான் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது.
தினமும் மாலை ஏழு மணி அளவில் தான் படத்திற்கான பணிகளை தொடங்குவார். அவருக்காக அனைவரும் இந்த நேரத்தில் இணைந்து பணியாற்றினோம்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனுக்கும் இது முதல் படம் தான். சிறப்பாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. இரண்டு பாடல்கள் படத்தில் இடம்பெறும். ஏனைய இரண்டு படத்திற்கான ப்ரோமோ பாடல்கள். இந்த பாடலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு வியாபாரத்திற்காக நிறுவனங்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் யார் நடிகர் என்பதைத்தான் முதலில் கேட்டார்கள். பின்னர் இந்தப் படத்தை பற்றிய கண்டன்ட்டை நாங்கள் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம், தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டோம். அதன் பிறகு தான் இப்படத்திற்கான வணிகம் தொடங்கியது. அதன் பிறகு ஆல்ஃபா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இளமாறன் எங்களுடன் இணைந்தார். அவர் இப்படத்தை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
‘ட்ராமா’ திரைப்படம் ஒரு ஆந்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில், ”சின்ன படங்களுக்கு ஊடகங்கள் தான் முதலில் ஆதரவு அளிக்கும். இந்தத் திரைப்படத்தை என்னுடைய நண்பர் இளமாறன் விநியோகம் செய்கிறார். சினிமா மீது நேசம் கொண்டவர். அவர் மேலும் தொடர்ந்து திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்க்கையில் எந்த துறையாக இருந்தாலும் முதல்முறையாக பணியாற்றும் போது அந்த அனுபவம் ‘ட்ராமா’வாகத்தான் இருக்கும். அதிலும் சினிமாவில் இத்தகைய அனுபவம் அதிகமாக கிடைக்கும். இந்த ட்ராமாவை கண்டு அச்சப்படாமல் தொடர்ந்து பயணித்தால், அந்த ட்ராமா அனுபவம் நிச்சயம் வெற்றியாக மாறும். இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று இதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
நடிகை சாந்தினி தமிழரசன் பேசுகையில், ”இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னை திரையுலகில் அறிமுகம் செய்த குரு கே. பாக்யராஜ் இங்கு வருகை தந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். அதற்காக இந்த தருணத்திலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை நான் படப்பிடிப்பு தளத்தில் அவர் சொல்லிக் கொடுத்த பயனுள்ள குறிப்புகளை பயன்படுத்தி தான் நடித்து வருகிறேன்.
தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். இந்த படத்திற்கான கான்செப்ட் மிகவும் பெருந்தன்மையானதாக இருந்தது. அவரிடம் கதையைக் கேட்ட பிறகு அவர் ஒரு வீடியோவை காண்பித்தார். அதுவும் சிறப்பாக இருந்தது. எப்போதும் சிரித்த முகமாகவே அவர் இருப்பார். பாசிட்டிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் செய்து வரும் வேலையையும் விடாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மார்ச் 21ம் தேதியன்று அனைவரும் தியேட்டருக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும். விவேக் பிரசன்னா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது,” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ”இந்த திரைப்படம் நிறைய கலைஞர்களுக்கு முதல் படம். அவர்களுக்கு இந்த மேடை முக்கியமானது. இங்கு
வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி.
இயக்குநர் தம்பிதுரைக்கு சினிமா மீது இருக்கும் தீவிரமான காதலால் அவர் வேலைக்கு சென்று கொண்டே இப்படத்தின் அனைத்து பணிகளையும் செய்தார். அவருக்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் . அவர் தன்னுடைய சக்திக்கு மீறி உழைப்பை கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் இளமாறனுக்கு நன்றி.
கடந்த 20 நாட்களாக இப்படத்தினை மக்களிடம் சேர்ப்பதற்காக தொடர்ந்து விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களை தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம் . இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
விநியோகஸ்தர் இளமாறன் பேசுகையில், ”இது எனக்கு முதல் மேடை. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. பதினாறு ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் முதலாக ‘ட்ராமா’ படத்தை வெளியிடுகிறேன். முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் ‘ட்ராமா’ படத்தை பார்த்தேன். இப்படத்தின் பாடல்கள் தான் என்னை முதலில் கவர்ந்தன. பாடல்களைப் போல் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் இப்படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ”இது எனக்கு வித்தியாசமான மேடை. இயக்குநர் தம்பிதுரை ஒரே சமயத்தில் இரண்டு வேலை அல்ல, பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறார். 24 மணி நேரமும் சினிமாவுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உளவியல் ரீதியாகவும் அவர் தயாராகி இருக்க வேண்டும். இல்லை எனில் இது சாத்தியமாகி இருக்காது. இது ட்ராமாடிக்காக யாருக்கு இருந்திருக்கும் என்றால், இயக்குநர் தம்பி துரைக்கு தான் ட்ராமாடிக்காக இருந்திருக்கும். இந்தப் படத்தை எடுப்பதில் அவருக்கு ட்ராமா இருந்திருக்கும். நான் வழக்கறிஞர் என்ற முறையில் தினந்தோறும் ட்ராமாக்களை எதிர்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அரசியல்வாதி என்ற முறையில் நிறைய மக்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அவர்களுடைய ட்ராமாவை தீர்த்து வைப்பதற்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன். அதனால் ட்ராமா என்பது நான் தினந்தோறும் சந்திக்கும் விஷயம்தான். நான் மட்டுமல்ல இங்கு இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ட்ராமாவை எதிர்கொள்கிறீர்கள். அது உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. ட்ராமாவில் இருந்து விடுதலையானால் சந்தோஷம் தான்.
நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தை தான் இந்தப் படம் பேசுகிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நிச்சயமாக நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். ஒரு பாடல் கூட சோடை போகாது. இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை பாடலாசிரியர் மகேஷ் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார், அவர் என் உறவினர் தான். தற்போது இல்லை, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் என விரும்பி இருந்தார். இந்தப் படத்தின் தொடக்க கட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதிய இரண்டு பாடல்களும் ஹிட் ஆகும் என்பது என் நம்பிக்கை. பாடல்கள் மட்டுமல்ல படமும் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்,” என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், ”எனக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்பந்தமில்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் இயக்குநர் தம்பிதுரை. அவர் இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தாருங்கள் என அழைப்பு விடுத்தார். நான் இங்கு வருகை தராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல விஷயத்தை தவறவிட்டிருப்பேன்.
நம் மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது படத்தை திரையரங்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் மூலமாக படத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நான் ஒன்றைத் தான் சொல்ல விரும்புகிறேன். இது தமிழர்களின் படம். தமிழர்களாகிய நீங்கள் தான் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம் ஆர் ராதாவை பற்றி பல விஷ லயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசுகிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இயக்குநரை பற்றி மற்றவர்கள் அனைவரும் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட ‘வெளி’ வேலைகள் இருக்கின்றன.
இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது. இங்கு படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு.
இந்தப் படத்தின் பெயர் ‘ட்ராமா’. ஆனால் இந்தப் படத்தை பார்ப்பவர்களை ட்ராமாவில் விடாது. தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். பொதுவாக படத்தை வெளியிடுவது தான் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதுதான் கடினமானதாக இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் 25வது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள் என்று படம் வெற்றி பெறும். ஆனால் தற்போது படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே ‘வெற்றிகரமான மூன்றாவது நாள் ‘ என போஸ்டர் வெளியிடப்படுகிறது.
இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடினால் தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. குறைந்தபட்சம் பத்து நாட்களாவது இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்,” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”ட்ராமா படத்தை வெளியிடும் இளமாறனுக்கு என் மனமார்ந்த வா்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாமல் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை நம்பி வெளியிடும் இளமாறனுக்கு என் நன்றி.
இந்த குழுவில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது. இந்த குழுவை எனது மாணவன் பாடலாசிரியர் அருண் பாரதி தான் அறிமுகப்படுத்தி வைத்தார். எதிர்காலத்தில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் குழுவினரை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டிரைலரையும் , பாடல்களையும் பார்க்கும் போது இந்த குழுவினர் நிச்சயம் பிரகாசமாக வருவார்கள் என்ற நம்பிக்கை என் மனதுள் ஏற்பட்டது.
இங்கு வருகை தந்த உடன் சாந்தினியிடம் ‘பெயின் நெவர் எண்ட்ஸ்’ என்ற வாசகம் இருக்கிறதே, அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு அல்லவா, அதனால் அது தொடர்பாக கேட்டேன்.
இந்தப் படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள் என தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இயக்குநர் தம்பிதுரைக்கு மேலும் பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு இந்தப் படத்தின் வெற்றி உத்திரவாதமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
ட்ராமா என்றால் என்ன அர்த்தம் எனக் கேட்டேன். இது தொடர்பாக என் உதவியாளரிடம் தமிழில் என்ன என்று கேட்டபோது, அவர் ‘பாதிப்பு’ என சொன்னார். சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. என்னுடைய உதவியாளர்களிடம் கதை விவாதத்தின் போது கதையை யோசிக்காதே, உன் மனதுக்கு எதை பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதை மனதிற்குள் அலசினால் நல்ல கதை கிடைக்கும் என சொல்வேன்.
எந்த நாட்டிலும் எந்த மக்களிடத்திலும் வரவேற்பை பெறும் ஒரே ஸ்டோரி லவ் ஸ்டோரி தான். இன்றைய இளைஞர்கள் கூட காதலிக்கிறார்களோ இல்லையோ காதலைப் பற்றி ஒரு கவிதையை எழுதி விடுவார்கள். அதனால் முதலில் அறிமுகமாகுபவர்கள் காதல் கதையை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக எழுதி இயக்கி விடுவார்கள். ஆனால் தம்பித்துரை அப்படி அல்ல. இந்த திரைப்படத்தில் மூன்று கதை களங்கள், கதைகள். மற்றவர்களைப் போல் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறார் தம்பிதுரை. இதற்காகவே அவரை பாராட்டலாம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “புதிய வாசிப்பு புதிய சிந்தனை” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:50 மணிக்க ஒளிபரப்பாகும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி.
அன்றாடம் வெளிவரும் எல்லா செய்தித்தாள்களையும் வாசித்து அதில் சிறந்த நடுப்பக்க கட்டுரைகளை கண்டடைவதும் அதன் உள்ளார்ந்த அர்த்தந்தங்களை நுணுக்கங்களை புரிந்து கொள்வது என்பது கடினமான காரியம். அதை மிக எளிதாக்கித் தருகிறது புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சி.
துறைசார்ந்த வல்லுநர்களுடன் தேர்ந்த நெறியாளர்கள் அமர்ந்து அலசி ஆராயும் இந்நிகழ்ச்சி அறிவுப்பசி உடையோருக்கு சரியான தீனி. அரசியல் மாற்றங்கள், தினசரி வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய சமூக விஷயங்கள் போன்றவையே இந்நிகழ்ச்சியின் பிரதான பேசு பொருள். ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட விஷயம் தொடர்பான தெளிவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் .
The Short Film ‘Mouna Vadham’, which received awards in Film Festivals like Indian Panorama International Film Festival, Chennai International Film Festival, 18th Mumbai International Film Festival and Jaipur International Film Festival is getting released in Actor Vijay Sethupathi’s YouTube channel this evening by 6 pm.
The film has Actor & Writer Vela Ramamoorthy playing an important role. This short film is directed by Amirtha raja who earlier assisted Director Balaji Tharaneetharan in Naduvula Konjam Pakkatha Kaanom and Oru Pakka Kathai. Saraskanth kannaiyan who did Cinematography for Seethakathi handled the camera, while Revaa does the Music who earlier did music for Mugizh and Ayali. Editing done by R. Govindaraj who is known for his works in Movies like Naduvula konjam pakkaththa kaanom, 96, Seethakaathi and Meyyazhagan. The Film is produced by Pocket Money Films.
பல விருதுகள் குவித்த ‘மெளன வதம்’ குறும்படம் ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ யூடியூப் சேனலில் வெளியீடு!
எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ‘மெளன வதம்’ குறும்படம் சென்னை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல், இந்தியன் பனோரமா இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 18 ஆம் மும்பை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் போன்ற பல பிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகள் பெற்றுள்ளது. இந்த குறும்படம் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதியின் யூடியூப் சேனலில் வெளியாகிறது.
இப்படத்தை அமிர்த்தராஜா இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். சீதக்காதி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரஸ்காந்த் கண்ணையன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘முகிழ்’ மற்றூம் ‘அயலி’ பட இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், 96, சீதக்காதி மற்றும் மெய்யழகன் போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு மேற்கொண்ட ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.’பாக்கெட் மணி பிலிம்ஸ்’ இப்படத்தை தயாரித்துள்ளது.
Gangster, Hustler, or Trickster – As the exciting teaser of Vijay Antony’s Shakthi Thirumagan, directed by Arun Prabu goes on, viewers are filled with curiosity about the story of the film and what kind of character the main person will be. The opening moments of the Teaser feature a conversation between various characters discussing the protagonist’s traits, complemented by stunning visuals and sharp editing. The rapid establishment of these characters within such a limited runtime, enhances the overall engagement, adding layers of intrigue that captivate the audience.
The teaser for “Shakthi Thirumagan,” which has a runtime of 2 minutes and 15 seconds, offers viewers more than the typical teaser. With a diverse range of backdrops, high-quality technical elements, and engaging dialogues, it keeps us captivated. Adding to the intrigue is Vijay Antony, who maintains silence throughout the teaser yet effectively captures our attention through his expressions and presence.
The fans and cinema enthusiasts, spellbound over the Teaser, have already raved about it. Especially, with the team endorsing the film as ‘Neo-Political Blockbuster’, the audience have gained more confidence that it’s going to be a sure-footed blockbuster hit in the box office.
Shakthi Thirumagan is written and directed by Arun Prabu, whose previous films ‘Aruvi’ and ‘Vaazhl’ have been acclaimed as masterpieces. The film is produced by Vijay Antony Film Corporation and features a musical score by Vijay Antony. The film has an ensemble star-cast of Vijay Antony, Vaagai Chandrasekar, Sunil Kripalani, Cell Murugan, Trupthi Ravindra, Kiran, Rini Bot, Riya Jithu and Master Keshav among others. Shelley Calist is handling the cinematography, and Raymond Derrick Crasta is the editor.
Upbeat Pictures proudly presents its maiden venture, SURRENDER, a gripping crime-action drama set to leave a lasting impact. The Title and First Look of the film were officially launched by Actor Vijay Sethupathi—a heartfelt thank you, sir, for your support.
Produced by Mr. V. Kumar, SURRENDER promises a high-octane cinematic experience, seamlessly blending intense storytelling with powerful performances. The film marks the directorial debut of Gowthaman Ganapathy, who has previously worked alongside renowned filmmaker Arivazhagan.
Leading the cast is Tharshan, who steps into the role of a cop for the first time in his career. His dedication and intense performance have truly brought the character to life. As a director, I am completely satisfied with his work.
The film also features powerhouse performers, including Lal, whose unwavering support has been instrumental throughout the project, along with Sujith Shanker, Munish Kanth, Mansoor Ali Khan, and Padine Kumar, each delivering standout performances.
Adding to the excitement, Vikas Badisa, a composer who has made significant contributions to the Indian music industry and collaborated with top music directors, including the legendary Devi Sri Prasad, makes his debut as a music director in Tamil cinema with SURRENDER. His unique musical style, shaped by years of experience and innovation, promises to bring fresh energy to the film and the industry.
Backed by a strong technical crew, SURRENDER boasts:
🎥 Cinematography – Meyyendran
🎨 Art Direction – R.K. Manoj Kumar
✂ Editing – Renugopal
🔥 Action Choreography – Action Santhosh
With filming successfully wrapped, the movie has now entered post-production, and the team is working diligently to bring this action-packed drama to audiences soon. Stay tuned for more updates!
UPBEAT பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ சரண்டர் ‘ திரைப்படம்!
UPBEAT பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்ஷன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அவரது ஆதரவுக்கு படக்குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள்!
விக்டர் குமார் தயாரிப்பில் உருவாகும் சரண்டர், அருமையான திரையரங்க அனுபவம் கொடுக்கும் என பட குழு நம்பிக்கை கொடுக்கிறது. திரைக்கதை, இயக்கம் கௌதமன் கணபதி . இவர் பிரபல இயக்குநர் அறிவழகன் உடன் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். தற்போது சரண்டர் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார்.
போலீசாக தர்ஷன்
படத்தின் கதாநாயகனாக தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தீவிரமான நடிப்பு, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது என இயக்குநர் பெருமிதத்துடன் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக, பிரபல இசையமைப்பாளர் விகாஸ் பதீசா தமிழில் முதல் முறையாக இசையமைக்கிறார். பிரபல இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாத் உட்பட பலருடன் பணியாற்றிய இவர், தனித்துவமான இசை அமைப்புகளுக்காக பாராட்டப்பட்டவர்.
தொழில்நுட்பக் குழு:
🎥 ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்
🎨 கலை இயக்கம் – ஆர்.கே. மனோஜ்குமார்
✂ எடிட்டிங் – ரேணுகோபால்
🔥 ஸ்டண்ட் இயக்கம் – ஆக்ஷன் சந்தோஷ்
படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது சரண்டர் திரைப்படம் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான புதிய அனுபவத்தை வழங்கும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்.
ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்க சாரா இயக்கும் படத்தில் நாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கிறார்
‘கே டி எம்’, ‘பிளிங்க்’, ‘தசரா’, ‘தி கேர்ள் பிரண்ட்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் கன்னட மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.
பான் இந்தியா திரைப்படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்கிறார். ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை சாரா இயக்குகிறார், வெங்கி சூரினேனி ஒளிப்பதிவை கையாள்கிறார். நாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கிறார்.
இப்படத்திற்காக ‘காஸ்ட் அவே,’ ‘கோட் லைஃப்’ போன்ற படங்களுக்கு இணையான அர்ப்பணிப்போடு தீக்ஷித் ஷெட்டி தன் உடலை வருத்தி தத்ரூபமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் மலேசியாவில் நடந்து வருகிறது.
விமலா ராஜநாயகம்_ தயாரிக்கும் மூன்றாவது படம் வஞ்சி_ கதை திரைக்கதை வசனம் டைரக்டர் ராஜேஷ் சி ஆர்_ கேமராமேன் பின்சீர்_ மியூசிக் டைரக்டர் சஜித் சங்கர் எடிட்டர் ஜெயகிருஷ்ணன் ஹீரோ ராஜேஷ் ஹீரோயின் நயீராநிகார் மற்றும் ஆள் ஆர்டிஸ்ட் கமர்சியல் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறாங்க முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் ராஜ நாயகம் குங்ஃபூ _ இந்திய தலைமை பயிற்சியாளராக உள்ளார் _ நட்டி நடராஜன் நடித்த சமீபத்தில் வெளியான சீசா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் மேலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தும் வருகிறார்_ இந்த கதையை பற்றி டைரக்டர்_ சொல்ல வருவது_ தமிழ்நாடு கேரளா_ மலைப் பகுதிகளில்_ ஏலக்காய்_ தோட்டத்தில்தமிழ் மக்களின் வாழ்வாதாரம் வேலை பார்க்கும் மக்களின் உண்மை சம்பவமாக தினந்தோறும் வன விலங்குகளால் கூலி தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் மோசமான உயிர் பலிகள் அதற்கு அரசு செய்கின்ற பாதுகாப்பு என்ன என்பதை பற்றிய வாழ்வியல் படம் தான் வஞ்சி இதில் வாழுகிற ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றி தான்_ கதைகோழையாக வாழ்வது பெண்ணல்ல வீரமாக வாழ்ந்து காட்டுவதே பெண்களின் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று _ உண்மையாகவும்_ மன தைரியத்தோடு_ _ மலைக் காட்டுப் பகுதிகளில் அங்கு வாழ்கிற மக்களோடு ஒரு பெண்ணாக வாழ்ந்து நடித்து மிரட்டிருக்கிறார் ஹீரோயின் நயீரா நிகார் எல்லோருக்கும் ஒரு பாடமாக இந்த படம் அமைய வேண்டும் என்று படத்தின்_ பாடல்கள் மண் வாசனை கொண்டு மக்களின் மனதில் இடம் பிடிக்கிற வண்ணமாக இந்த பாடல்கள் இருக்கும் என்று டைரக்டர் சொல்லுகிறார் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது _விரைவில் திரைக்கு வர தயாராக_ இருக்கிறது
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை, சமுத்திரகனி நடிப்பில் வெளியான திரு. மாணிக்கம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களை தமிழகமெங்கும் வெளியிடதோடு தற்போது இயக்குனர் முத்தையா மகன் நாயகனாக நடித்துவரும் ” சுள்ளான் சேது ” என்ற படத்தை தயாரித்து வரும் KKR CINEMAS KKR ரமேஷ்
தற்போது அருப்புக்கோட்டை உள்ள மணியாச்சி என்ற ஊரில் மிகப் பெரியளவில் KKR FUELS என்ற பெயரில் பெட்ரோல் பங்க் ஒன்றை துவங்க இருக்கிறார்.
திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள நாளை ( 09.03.2025 ) காலை பிரமாண்டமாக இதன் துவக்க விழா நடைபெற இருக்கிறது.
Avni Movies and Benzz Media have announced the commencement of principal photography for their next project, a fantasy romantic comedy with a traditional pooja ceremony. The film marks the directorial debut of Aswin Kandasamy and boasts a stellar cast including Santhosh, Reshma Venkatesh, Vinoth Kishan, Samyuktha Viswanathan, and Bjorn Surrao.
The title of the film will be soon announced with a surprise. The film promises a unique blend of comedy, romance, and high-energy fantasy, drawing inspiration from the surreal and larger-than-life storytelling found in anime. The narrative follows a character navigating two contrasting realities, seamlessly weaving together humour and heartfelt emotion. Set against a backdrop that shifts from rural charm to urban vibrancy, the film explores themes of love, ambition, and identity with a fresh and unconventional approach to self-discovery and relationships.
Santhosh, transitioning from his impactful role in Ponniyin Selvan, takes on a challenging lead performance, showcasing his versatility as an emerging talent. Reshma Venkatesh, known for her impressive work in Rasavaathi, continues to explore diverse characters, while Vinoth Kishan, acclaimed for his compelling performances in films like Naan Mahaan Alla and Andhaghaaram, adds his signature richness and complexity to the film’s comedic dynamic. Samyuktha Viswanathan, with her blend of charm and emotional depth, and Bjorn Surrao, bringing his infectious wit from Doctor, complete the dynamic ensemble cast.
Director Aswin Kandasamy, with a decade of experience as an assistant director and executive producer with leading production houses like RS Infotainment, 24AM Studios, and Oruoorile Oru Film House, brings his vision to life with this highly anticipated debut.
CREW: Written & Directed by: Aswin Kandasamy Produced by: Khushbu Sundar & R Madhan Kumar Production Company: Avni Movies & Benzz Media DOP: Shanthakumar Chakravarthy Editor: Praveen Antony Production Designer: Senthil Raghavan Choreographer: Brinda Stunt Director: Shakthi Saravanan Costume Designer: Sai Sruthi DI: G Balaji VFX: Fazil Mohammad Executive Producer: Anandita Sundar PRO: Riaz K Ahmed, Paras Riyaz
அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த படத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாகிறார், மேலும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படம் நகைச்சுவை, காதல் மற்றும் உத்வேகம் கொண்ட கற்பனை ஆகியவற்றின் தனித்துவமான கலவையை உள்ளடக்கியது, அனிமியில் காணப்படும் மிக விசித்திரமான மற்றும் அதைவிடவும் மிகப்பெரிய வாழ்க்கை கதையை சொல்லும் படமாக இருக்கும். படத்தின் கதையம்சம் இரண்டு மாறுபட்ட யதார்த்தங்களை வழிநடத்தும் ஒரு கதாபாத்திரத்தைப் பின்பற்றுகிறது, நகைச்சுவை மற்றும் இதயப்பூர்வமான உணர்ச்சியை தடையின்றி வெளிப்படுத்தும் படமாகவும் இருக்கும். கிராமப்புற வசீகரத்திலிருந்து நகர்ப்புற துடிப்புக்கு மாறும் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், சுய-கண்டுபிடிப்பு மற்றும் உறவுகளுக்கான புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையுடன் காதல், லட்சியம் மற்றும் அடையாளம் ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராய்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் இளம்வயது ஆதித்த கரிகாலனாக தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரத்திலிருந்து மாறி வரும் சந்தோஷ், ஒரு சவாலான முன்னணி நடிப்பை எடுத்து, வளர்ந்து வரும் திறமையாளராக தனது பல்துறை திறனை வெளிப்படுத்துகிறார். ரசவதி படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக அறியப்பட்ட ரேஷ்மா வெங்கடேஷ், பல்வேறு கதாபாத்திரங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார், அதே நேரத்தில் நான் மகான் அல்லா மற்றும் அந்தகாரம் போன்ற படங்களில் தனது கவர்ச்சிகரமான நடிப்பிற்காக பாராட்டப்பட்ட வினோத் கிஷன், படத்தின் நகைச்சுவை இயக்கத்திற்கு தனது முழுப்பங்களிப்பையும் சேர்க்கிறார். வசீகரம் மற்றும் உணர்ச்சி ஆழத்தின் கலவையுடன் சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் டாக்டர் படத்தின் மூலம் தனது நடிப்பு மற்றும் உடல்மொழியால் மக்களை ரசிக்கவைத்த பிஜோர்ன் சுர்ராவ் போன்ற துடிப்பான நடிகர்களை கொண்ட படம்.
RS இன்போடேயின்மெண்ட், 24AM ஸ்டுடியோஸ், மற்றும் ஒரு ஊரிலே ஒரு பிலிம் ஹவுஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் உதவி இயக்குநராகவும் நிர்வாக தயாரிப்பாளராகவும் தசாப்த கால அனுபவமுள்ள இயக்குனர் அஸ்வின் கந்தசாமி, இந்த படத்தின் அறிமுகம் மூலம் தனது தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பிக்கிறார்.
படக்குழு:
எழுத்து மற்றும் இயக்கம் : அஸ்வின் கந்தசாமி
தயாரிப்பாளர்கள் : குஷ்பு சுந்தர் & R மதன் குமார்
தயாரிப்பு : அவ்னி மூவிஸ் & பென்ஸ் மீடியா
ஒளிப்பதிவு : சாந்தகுமார் சக்ரவர்த்தி
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
தயாரிப்பு வடிவமைப்பு : செந்தில் ராகவன்
நடன இயக்கம் : பிருந்தா
சண்டைப் பயிற்சி இயக்கம் : சக்தி சரவணன்
ஆடை வடிவமைப்பு : சாய் ஸ்ருதி
DI : G பாலாஜி
VFX : ஃபாசில் முஹ்மத்
நிர்வாக தயாரிப்பாளர் : அனந்திதா சுந்தர்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்