- Advertisement -
Home Blog Page 276

Actor Udhaya marks 25th year in cinema with a grand gangster drama ‘Accused’ starring alongside Ajmal and Yogi Babu for a triple treat

0

Actor Udhaya, who made his cinematic debut in 2000 with the film ‘Tirunelveli’, is celebrating his 25th year in the industry with the grand project ‘Accused’, where he, Ajmal and Yogi Babu are playing the lead roles.

Produced under the banners of Jaeshan Studios, Sri Dayakaran Cine Productions, and MIY Studios, the film is being produced by A.L. Udhaya, ‘Daya’ N. Panneerselvam, and M. Thangavel. Directed by Prabhu Srinivas, a renowned director in the Kannada film industry known for his successful films, ‘Accused’ features popular Kannada actress Jahnvika as the female lead.

‘Accused’, a gangster drama, explores the idea that not everyone accused of a crime is guilty. It delves into how even good people can be affected by system errors and become gangsters. Udhaya will be seen in a completely different role that he has never portrayed before. This film marks the first collaboration of Udhaya with Ajmal and Yogi Babu.

The cinematography of the film is being handled by Maruthanayagam I, with music composed by Naren Balakumar. The film’s editing will be managed by renowned editor K.L. Praveen. The action sequences are being choreographed by the famous stunt director Stunt Silva. The art direction is by Anand Mani, and public relations are managed by Nikil Murukan.

The pooja ceremony for ‘Accused’ produced under the banners of Jaeshan Studios, Sri Dayakaran Cine Productions, and MIY Studios by A.L. Udhaya, ‘Daya’ N. Panneerselvam, and M. Thangavel and directed by Prabhu Srinivas was held on January 2 in Chennai, attended by members of the producers association and prominent figures from the Tamil film industry, who extended their congratulations. The team plans to complete the shooting soon and aims for a release in the summer of 2025.

திரையுலகில் 25வது ஆண்டில் நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’*

‘திருநெல்வேலி’ திரைப்படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் உதயா, கலைப்பயணத்தில் தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக ‘அக்யூஸ்ட்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார்.

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.

மருதநாயகம் ஐ ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். முன்னணி எடிட்டரான கே.எல். பிரவீன் படத்தொகுப்பை கையாளுகிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா ஆக்ஷன் காட்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்கம்: ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும், பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பூஜை சென்னையில் ஜனவரி 2 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பு சங்கம் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து 2025 கோடை காலத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Actor Vijaysethupathy released the First look Poster of Medial Crime Thriller film ‘Trauma’

0

டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கும் விறுவிறுப்பான மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘ட்ராமா’
படத்தின் முதல் லுக் போஸடரை வெளியிட்டு பட குழிவினரை வாழ்த்தினார்
விஜயசேதுபதி…

Actor Vijaysethupathy released the First look Poster of Medial Crime Thriller film
‘Trauma’ produced by S Uma Maheshwari under the banner of Turm Production House and directed by Thambithurai Mariappan, starring Vivek Prasanna, Poornima Ravi, Ananth Nag and Chandini Tamilarasan

Mass Maharaja Dr. Shivrajkumar collaborates with ADD-ONE Films Private Limited for a Mega-Budget project

0

Kannada Film Industry’s most iconic pride Dr. Shivrajkumar has proved his box office dominance yet again with his hat-trick success. With his volatile screen presence in Superstar Rajinikanth’s ‘Jailer’, he captured the hearts of Tamil audiences, and later went onto make a powerful appearance in Dhanush’s ‘Captain Miller’. His movies have now significantly started making greater waves in Tamil and other regional industries as well. Very rarely, we come across the actors, who are loved not just for their performances, but for their nature. Dr. Shivrajkumar is one such actor, who has created a huge fan base in all regions.

He will be soon working on a mega-budgeted film titled #MB, which marks the maiden production of Mumbai-based ADD-ONE Films Private Limited, headed by producers Manoj Banode & Khemchand Khadgi. They have carved a niche of excellence in creating history of orchestrating large-scale events. The producers are exhilarated over their maiden production, which features a big name like Dr. Shivrajkumar from the Indian film industry. The film is directed by filmmaker N. Maharajan, who shot to fame for his all-time blockbuster hit movie ‘Vallarasu’, featuring Late Actor Captain Vijayakanth.

Currently, the makers are holding talks with leading actors and technicians from the industry and the official announcement on the same will be made soon.

The film’s shooting is scheduled to go on floors by early 2025.

‘மாஸ் மகாராஜா’ டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைகிறார்!

கன்னடத் திரையுலகின் பெருமையான டாக்டர். சிவராஜ்குமார் தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது திரைப்படங்கள் தற்போது தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக அரிதாக, நடிகர்களை அவர்கள் நடிப்பிற்காக மட்டுமல்லாது அவர்களின் இயல்புக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். டாக்டர். சிவராஜ்குமார் அத்தகைய நடிகர்களில் ஒருவர்.

அவர் #MB என்ற மெகா பட்ஜெட் படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளார். மும்பையை சேர்ந்த ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பாளர்கள் மனோஜ் பனோட் மற்றும் கெம்சந்த் காட்கி ஆகியோர் பெரிய அளவிலான நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்கள். முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறார்கள். அவர்களின் முதல் தயாரிப்பாக #MB திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தை, மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’வல்லரசு’ படத்தை இயக்கிய இயக்குநர் என்.மஹாராஜன் இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

The new film starring Lingesh and Ganja Karuppu will be released soon. !

0

The film is directed by Jayalakshmi and produced by Sky Wanders Entertainment, starring Lingesh and London-based actress Lea. *

The title of the film will be officially announced soon. Jayalakshmi wrote and directed her first film at the age of 63. This is his first film. The film is a gentle, triangular love story set against the backdrop of the lives of fisher folk. From London, the actress will be travelling to India to explore the culture of Tamil Nadu. He falls in love with Lingesh, a young fisherman. But Lingesh is also engaged to his uncle’s daughter. Are they overcoming barriers to love? Are they lovers? That is the story of this film. Lingesh, who played supporting roles in Kabali and Pariyerum Perumal, and the hero in ‘College Road’, plays the hero in the film. British actress Lea is playing the female lead in the film. Divya is playing the second heroine in the film. Debutant Katpadi Rajan plays the villain. The film also features Madhusudhanan, Maran, Ganja Karuppu, Siddha Darshan and Senthil in pivotal roles. The shooting of the film is complete and the post production work is going on at the moment. The first look and teaser of the film will be announced soon.

Technical Crew

  • Production: Sky Wanders Entertainment
  • Producer: Jayalakshmi
  • Executive Producer: Kadpadi Rajan
  • Story, Screenplay, and Direction: Jayalakshmi
  • Cinematography: Moodar Koodam fame doni john
  • Music: Sandy Chandello
  • Editing: Thani oruvan fame gopi Krishna 
  • Lyrics: Kapilan, Chandru, Jayalakshmi
  • Singers: Swetha Mohan, Saindhavi, Shreedar Sena, Dileep Varman (Malaysia), Anitha Sheik

’கலன்’ திரைப்பட விமர்சனம்

0

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் வேங்கை, அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறார். வேங்கை உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது.

அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க வேங்கையின் தாய் வெட்டுடையார் காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களம் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிரடியாகவும், சமூகத்திற்கு அவசியமானதாகவும் சொல்வதே ‘கலன்’ படத்தின் கதை.

வெட்டுடையார் காளி என்ற கதாபாத்திரத்தில் பாசமிகு தாயாக நடித்திருக்கும் தீபா, தனது மகனின் மரணத்திற்குப் பிறகு எடுக்கும் அவதாரத்தில் காளியாக மிரட்டியிருப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் கூட்டத்திற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

உழைப்பாளியாக, பாசம் மிக்க தம்பியாக நடித்திருக்கும் அப்புக்குட்டி தனது எதார்த்தமான நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் கொலை வெறியை தெறிக்க விட்டிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சம்பத் ராமின் காத்திருப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர் தன் வில்லத்தனம் மூலம் ரசிகர்களின் கடும்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

கஞ்சா வியாபாரியாக போதை மிதக்கும் கண்கள், கையில் சுருட்டு என்று மிரட்டலான கதாபாத்திரத்தில், திமிரான நடிப்பின் மூலம் நல்ல நடிகையாக நிமிர்ந்து நிற்கிறார் காயத்ரி. கிராமத்து அம்மா, நகரத்துப் பெண், மருத்துவர் என பல வேடங்களில் கச்சிதமாக பொருந்தும் காயத்ரி, வில்லியாகவும் தனது தனித்துவமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.

வேங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், தென் மாவட்ட இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் நடிப்பில் கர்ஜித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன் ராஜ், வேங்கையின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தென் மாவட்ட மக்களை பிரதிபலிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகங்கள். குறிப்பாக “வெட்டுடையார் காளி..” பாடலும், அதை படமாக்கிய விதமும் திரையரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் ஆகியோரது பாடல் வரிகள், கதாபாத்திரங்களின் உணர்வுகளை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை இயல்பாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்தாலும் அதை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திய விதம், திருவிழா காட்சிகள் ஆகியவை படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் ஆகியோரது படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்வதோடு, இயக்குநர் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகளை சிதைக்காமல் பார்வையாளர்களிடம் கடத்தியிருகிறார்கள்.

கலை இயக்குநர் திலகராஜன் அம்பேத், நடன இயக்குநர் வெரைட்டி பாலா ஆகியோரது பணி கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் வீரமுருகன், தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை கருவாக கொண்டு மிகப்பெரிய விழுப்புணர்வு படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக போதைப் பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வரும் அவல நிலை மற்றும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அலறல்களை அழுத்தமாக பதிவு செய்திருப்பவர், குற்றவாளிகளுக்கு எத்தகைய கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் அதிரடியாக பதிவு செய்திருக்கிறார்.

சில இடங்களில் சாதி ரீதியான குறியீடுகள் பல இருந்தாலும், அனைத்தையும் லாஜிக்கோடு திரைக்கதையில் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் வீரமுருகன், ஆன்மீகம் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை திரை மொழியில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை களை எடுக்கும் காட்சிகள் அதிகம் இரத்தம் தெறிக்கும் வகையில் இருந்தாலும், பாதிக்கபப்ட்டவர்களின் இடத்தில் இருந்து பார்க்கும் போது அந்த காட்சிகள் சரியானதாகவே இருக்கிறது.

சமூகத்திற்கான ஒரு படமாக இருந்தாலும், அதை கமர்ஷியலாகவும் அதே சமயம் நாகரீகமான முறையில் இயக்கியிருக்கும் இயக்குநர் வீரமுருகன், வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி அனைவருக்குமான ஒரு பாடமாக கொடுத்திருக்கும் ‘கலன்’ மக்களை நல்வழியில் பயணிக்க வைக்கும்.

தமிழகத்தின் அவல நிலையை ‘கலன்’ மூலம் இயக்குநர் வீரமுத்து படம் பிடித்து காண்பித்திருக்கிறார் – எச்.ராஜா பாராட்டு

0

அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் பற்றி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது – ‘கலன்’ படத்தை பாராட்டிய பயில்வான் ரங்கநாதன்

ராஜலெக்‌ஷ்மி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜேஷ்வரி சந்திரசேகரன் தயாரிப்பில், ’கிடுகு’ பட புகழ் இயக்குநர் வீரமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கலன்’. தீபா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி, சம்பத் ராம், சேரன் ராஜ், யாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்வு டிசம்பர் 31 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மற்றும் பத்திரிகையாளர், நடிகர், திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துக் கொண்டார்கள்.

படம் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய எச்.ராஜா, “இன்றைய தினம் தமிழகத்தின் அவலமான நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் வீரமுருகன். இதற்கு முன்பு கிடுகு என்று படத்தை எடுத்திருந்தார். இன்றைக்கு தமிழகத்தின் சீர்கேட்டுக்கு காரணமாக இருப்பது போதை, அந்த போதையினால் தான் குற்றவாளிகள் உருவாகிறார்கள், அதனால் தான் சமூக பாதிப்பு ஏற்படுகிறது. அதை தத்ரூபமாக கலன் மூலம் நமக்கு வீரமுருகன் சொல்லியிருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், கடைசியில் ஒரு மாரல் சமுதாயத்திற்கு காவல்துறையின் கைகள் கட்டப்படாமல் இருக்குமானால், அவர்கள் காவல் தெய்வங்களாக மாறுவார்கள், அது அப்படி இல்லை. அது மாற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். கலம் நல்ல படம், நல்ல கதை. எனவே அதற்காக இந்த படத்தை பார்த்து மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பத்து நாட்களாக தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் விசயம் இந்த படத்தில் காட்டப்பட்டு இருக்கிறது. ஞானிகள் சொன்னால் நடக்கும் என்று சொல்வார்கள், அது போல் பெரிய ஞான உதயத்தோடு, இன்று நடக்கும் விசயத்தை படத்தில் வைத்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விச்யம், மக்கள் மனதில் இன்று பசுமையாக இருக்கும் போது, இந்த படத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் அல்ல அச்னைத்து சமுதாய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வருங்கால தலைமுறையை போதைப் பொருளில் இருந்து காப்பாற்றுவதற்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து சமுதாயத்தை காப்பாற்றும் ஒரு முயற்சியாகவே இந்த படத்தை நான் பார்க்கிறேன்.

அதே சமயம், 2014 ஆம் ஆண்டு ரெட் போர்ட்டில் கொடியேற்றி விட்டு பிரதமர் மோடி அவர்கள் சொன்ன ஒரு விசயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. பெண் குழந்தைகள் லேட்டாக வந்தால் கேட்கிறோம், அவர்களை கண்டிக்கிறோம். ஆனால், ஆண் குழந்தைகளை அப்படி கேட்கிறோமா? இல்லை. ஆனால், ஆண்குழந்தைகளை தான் நாம் கண்டித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காது. சமுதாயம் திருந்த வேண்டும், அதற்கான படமாக இது இருக்கும். தமிழ் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும், அதற்கான ஒரு படமாக ‘கலன்’ இருக்கும்.” என்றார்.

பயில்வான் ரங்கநாதன் படம் பற்றி பேசுகையில், “இந்த படத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டி மற்றும் தீபா இருவரும் என் ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இரண்டு பேரும் படத்தில் காட்டப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் பற்றி படத்தில் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி படத்தில் சேர்க்க வெண்டும் என்பது என் கோரிக்கை.

படத்தில் வயலன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது, அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் அது கதைக்கு தேவை என்பதால் தவிர்க்க முடியாது என்பதையும் மறுக்க முடியாது. அதேபோல், சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது, என்பதையும் இந்த இடத்தில் நான் பதிவு செய்துக் கொள்கிறேன்.” என்றார்.

படத்தின் நாயகன் அப்புக்குட்டி பேசுகையில், “’கலன்’ சமுதாயத்திற்கு அவசியமான படமாக இருக்கிறது. படத்தை பார்த்து பத்திரிகையாளர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற படத்தை மக்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் வீரமுருகன் பேசுகையில், “இன்று நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி தான் படத்தில் பேசியிருக்கிறோம். குறிப்பாக போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு ஆகியவற்றை பற்றி தான் படம் பேசுகிறது. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சாதி குறியீடு மற்றும் வயலன்ஸ் அதிகமாக இருப்பதாக சில கருத்துக்கள் வருகிறது. எதையும் திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் சொல்லவில்லை. நிஜத்தில் நடந்த சம்பவங்கள், தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை சுற்றி தான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வலங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவும் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். மக்கள் இதுபோன்ற நல்ல படங்களுக்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள், என்று நம்புகிறேன்.” என்றார்.

Yasmin Ponnappa Makes a Comeback to Cinema

0

Actress Yasmin Ponnappa, known for her striking performance in the critically acclaimed film Aaranya Kaandam, is all set to make a comeback to the silver screen. After a hiatus, during which she pursued her education in psychology and honed her craft through acting workshops, Yasmin is now eager to dive back into the world of cinema.

With a renewed passion and dedication, Yasmin is looking forward to being a part of meaningful storytelling and taking on roles that challenge her as an artist. “I’ve missed the thrill of being in front of the camera and being a part of the magical process of filmmaking,” says Yasmin. “I’m excited to explore new opportunities and collaborate with talented filmmakers to create memorable stories.”

Yasmin’s journey in cinema began with Aaranya Kaandam, which earned her recognition and critical acclaim. Now, with her education and training in psychology, she brings a new perspective and depth to her craft. Her fans can look forward to seeing her in a new avatar, taking on a wide range of roles that showcase her versatility as an actress.

As Yasmin embarks on this new chapter in her career, she is eager to connect with filmmakers, writers, and producers who share her passion for storytelling. With her unique blend of talent, dedication, and enthusiasm, Yasmin Ponnappa is all set to make a mark in the film industry once again.

மீண்டும் கம் பேக் கொடுக்கும் ‘ஆரண்ய காண்டம் ‘ புகழ் யாஸ்மின் பொன்னப்பா

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார். மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார்.

கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். வித்தியாசமான கதைக்கலங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான கலங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்” என்கிறார் கண்களில் கனவுகள் மின்ன.

தன்னுடைய மனோதத்துவப் பின்னணியை சினிமாவிலும் பயன்படுத்தி நடிப்பில் அடுத்த பரிமாணத்தை எட்ட காத்திருக்கிறார் . படத்தில் எவ்வளவு நேரம் நடிக்கவிருக்கிறோம் என்பதை தாண்டி சில நிமிடங்கள் வந்தால் கூட தனக்கான கதாபாத்திரம் எவ்வளவு ஆழமாக உள்ளது , கதையில் தனது கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என புரிந்து நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் யாஸ்மின் பொன்னப்பா.

The Much-Awaited ‘7G Rainbow Colony 2’ Nears Completion!

0

Sri Surya Movies and the celebrated producer A.M. Rathnam, known for delivering blockbuster and content-rich films, proudly announce that the highly anticipated sequel to the cult classic 7G Rainbow Colony is in its final stages of shooting.

Directed by the visionary filmmaker Selvaraghavan, the sequel promises to captivate audiences with its masterful storytelling and emotional depth, hallmarks of the director’s unique cinematic style. The film features Ravi Krishna in a reprisal of his career-defining role, alongside the talented Anaswara Rajan as the female lead.

Adding to the excitement, the movie boasts a stellar supporting cast, including the versatile Jayaram, the brilliance of Suman Shetty, and the seasoned acting prowess of Sudha.

The sequel is further elevated by the magical music of Yuvan Shankar Raja, whose iconic compositions for the first installment continue to resonate with fans. Acclaimed cinematographer Ramji brings his expert visual storytelling to the project, ensuring a visually stunning experience.

Speaking about the film, producer A.M. Rathnam said: “The original 7G Rainbow Colony is a film that touched hearts and has a special place in Tamil cinema history. With the sequel, we aim to recreate that magic while delivering a fresh and compelling narrative for today’s audience.”

7G Rainbow Colony 2 is set to be an emotional rollercoaster packed with love, heartbreak, and Selvaraghavan’s signature storytelling, making it a cinematic experience not to be missed.

20 வருடங்களுக்குப் பிறகு ‘ 7ஜி ரெயின்போ காலனி 2’ !

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’ . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறது.
இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்து வட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். தன் தனித்துவமான சினிமாவியல் மற்றும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லலால் ரசிகர்களை மீண்டும் கவர இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அவருக்கு ஜோடியாக அன்னஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெயராம், சுமன் செட்டி மற்றும் சுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, படத்தின் ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணிபுரிகிறார்.

படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறியதாவது: “7ஜி ரெயின்போ காலனி ‘ முதல் பாகம் தமிழ் சினிமா வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடித்தது. இரண்டாம் பாகத்திலும் அதே எதிர்பார்ப்பையும் மேஜிக்கையும் பூர்த்தி செய்ய நாங்கள் எங்களது சிறப்பை கொடுத்து உழைத்து வருகிறோம்” என்றார்.

Sooraj R. Barjatya Brings Rajshri Productions’ Magic to OTT with Bada Naam Karenge on Sony LIV

0

Prepare to be swept away by the timeless magic of love and family, as Sooraj R. Barjatya steps into the world of OTT. With a legacy rooted in heartfelt storytelling and cherished family values, Rajshri Productions embarks on its much-anticipated digital debut with ‘Bada Naam Karenge,’ a love story returning back to roots. Directed by Palash Vasvani, the series is a tale poised to touch hearts, premiering soon exclusively on Sony LIV.

In the teaser, released today, we catch a glimpse of a story brimming with laughter, love, and the unparalleled bonds of family. Bada Naam Karenge unfolds the journey of Rishabh and Surbhi, whose arranged marriage takes a beautiful and unexpected turn when the echoes of their past stir. Amidst playful misadventures and moments, they set out to discover a connection beyond all expectations. Will they listen to their hearts, or honor the sacred traditions guiding their lives?

Speaking about his OTT debut, Sooraj R. Barjatya shared, “This series holds a special place in my heart. With Bada Naam Karenge, we delve into the beauty of relationships, the depth of love, and the strength of family values. It’s about finding balance amidst life’s changing dynamics, and I couldn’t be more excited to share this heartfelt story with the audience. Collaborating with Sony LIV has been a wonderful experience, and I hope viewers will resonate with the love and dedication we’ve put into this series.”

Produced by Rajshri Productions, the name synonymous with heartwarming tales, Bada Naam Karenge brings together an ensemble cast of stellar actors, including Kanwaljeet Singh, Alka Amin, Rajesh Jais, Chitrali Lokesh, Rajesh Tailang, Anjana Sukhani, and more, promising performances that will connect deeply with the audience.

Get ready to celebrate the timeless charm of love and family as the Bada Naam Karenge family invites you into their world! Streaming soon, only on Sony LIV!

Link: https://www.instagram.com/reel/DERo0gBRwzs/?igsh=bmhtdTRwNGJrZjBl

லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்ட பிளைன் பேப்பர் குறும்படம் !!

0

பெண் சுதந்திரத்தின் அவசியத்தைப் பேசும் “பிளைன் பேப்பர்” குறும்படத்தை வெளியிட்ட லப்பர் பந்து புகழ் தினேஷ் !!

லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்ட பிளைன் பேப்பர் குறும்படம் !!

LV production & கார்த்திக் துரை வழங்க, அறிமுக இயக்குநர் மகிழன் இயக்கத்தில், பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு தான் உண்டு என்பதைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள “பிளைன் பேப்பர்” குறும்படத்தினை, லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் மகிழன் தன் முதல் முயற்சியாக, தன் நண்பர்களுடன் இணைந்து இந்த குறும்படத்தினை உருவாக்கியுள்ளார். திரைப்படத்திற்கு இணையாக படைப்பாக, மிகச்சிறந்த தொழில் நுட்பத் தரத்துடம் இக்குறும்படம் உருவாகியுள்ளது.

ஆணும் பெண்ணும் சமம் என்பது, இன்றும் ஏட்டளவில் தான் இருக்கிறது. எவரையும் பார்த்தவுடன் அவர்களைப்
பற்றி முன்முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட வாழ்க்கை இருக்கிறது. அவர்களுக்கென தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. எனும் கருத்தை மையமாக வைத்து இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் திருமண உறவில் பாதிப்பட்டு, மன அழுத்தத்தில் இருக்கும் பெண் குடியில் உழல்கிறாள் அவளது வாழ்வில் வரும், இளைஞனால் அவளது வாழ்க்கை மாறுவது தான் இந்த குறும்படத்தின் கதை.

மாறுபட்ட கதைக்களத்தில் பெண் சுதந்திரத்தின் அவசியத்தை பேசும் அழகான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, முன்னணி பிரபல நடிகர் தினேஷ் மற்றும் இயக்குநர் லெனின் பாரதி பாராட்டியுள்ளனர்.

மகாலட்சுமி மற்றும் விஜய் இக்குறும்படத்தில் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்பட முயற்சிகளில் இருக்கும் இப்படத்த அறிமுக இயக்குநர் மகிழன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசையமைத்துள்ளார். சரத் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இந்த குறும்படம் YouTube தளத்தில் Lightz On சேனலில் பார்க்க கிடைக்கிறது..

குறும்பட லிங் -https://youtu.be/m4zXXU_azEA?si=rpiEp3I3zYMQoAgL

- Advertisement -

Recent Posts