- Advertisement -
Home Blog Page 46

A QUARTER-CENTURY OF FRAMES AND FEELINGS:

0

It is often said that cinema is not just about capturing moving images; it is about capturing time itself. And as I pause to mark twenty-five years
since I first shouted “Action,” I am overwhelmed not by the passage of time, but by the volume of memories that time has generously afforded me.

25 years in this magnificent, demanding industry is not a solitary achievement.It is a tapestry woven from the dreams, dedication and talent of countless individuals who walked alongside me.

My deepest gratitude and love go to the artists: The actors who took the fictional beings in my head and gave them a soul, a voice and a heartbeat.You breathed life into my words, often finding depths in characters that I hadn’t realized were there.

To my crew: The silent architects of my imagination who have stood behind the lens for twenty-five years with me, my gratitude and respect are as deep as the love we share for Cinema

I stand on the shoulders of giants, the masters of cinema whose work ignited the spark in me and to my mentors who guided my early steps – thank you for showing me the way.
To my contemporaries and fellow directors, your work challenges and inspires me daily. The camaraderie we share in this shared pursuit of storytelling is invaluable.

Finally, to my lovely audience. You have welcomed my stories into your lives, allowed my characters to inhabit your conversations and embraced the varying shades of love, conflicts and life I have tried to portray. Your acceptance is the ultimate reward.

Thank you for an incredible and unforgettable night at the Yennodu Vaa Veedu Varaikkum concert. It was a soulful reminder to know why I do what I do.

My love affair with cinema continues. The next frame awaits…

Until then, with lots of love,
Gautham Vasudev Menon

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா!!

0

கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…

உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.
நன்றி.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…

முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாயன்பன் பேசியதாவது…
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன்.
நன்றி.

மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…

இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…

முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
நன்றி.

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன், சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக மதுரை R. முரளிதரன் அவர்களின் மகள் காவ்யா நடிக்கின்றார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விறுவிறுப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில்இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!

0

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரைஇரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா”மொகாத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக நகர்ந்துவரும் திரைக்கதையில் தற்போது, ருத்ராவுக்கு அவரதுகுழந்தை கிடைக்கிறது. ஆனால், அந்த குழந்தை பழையநினைவுகளை இழந்து தன் அம்மா யார் என்பதேதெரியாமல் இருக்கிறது.

மறுபுறம், சீரியல் கில்லர் ராகுலை பிடிக்க ருத்ரா போராடிவர, இன்னொரு பக்கம் மிகவும் கொடிய வைரஸை விக்ரம்பரப்பிவிட்ட நிலையில், அதிலிருந்து மக்கள்தப்பிப்பார்களா? அந்த சீரியல் கில்லர் யார்? அவரின்பின்னணி என்ன? ருத்ராவின் குழந்தைக்கு பழையஞாபகங்கள் திரும்புமா? உள்ளிட்ட கேள்விகளுடன்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Ganesh NT defeated Mahipal Singh (352–307) in the finals of the 10th Tamil Nadu State Tenpin Bowling Championship 2025 which concluded at LetsBowl, Thoraipakkam, Chennai, yesterday 31st January 2026.

0

Ganesh NT defeated Mahipal Singh (352–307) in the finals of the 10th Tamil Nadu State Tenpin Bowling Championship 2025 which concluded at LetsBowl, Thoraipakkam, Chennai, yesterday 31st January 2026.

In the finals played based on the cumulative pinfall of two games, in Game 1 Ganesh outscored Mahipal (182–143) by 39 pins. In Game 2 Mahipal Singh ended on the losing side with a subdued performance (164–170) with Ganesh NT eventually winning the championship.

Earlier in the day, in the first step ladder played, Rank 3 Yusuf Shabbir defeated Anand Babu (328–317) and earned him a spot in the second step ladder. In the second step ladder, Rank 2 Ganesh NT defeated Yusuf Shabbir (414–370).

Mahipal Singh finished on top of the table after Round 3 with a pinfall 6163 at an average of 192.59 followed by Ganesh NT (Pinfall – 6064, Average – 189.50). The qualifying rounds were played amongst 28 bowlers over 3 days in dual oil pattern conditions.

Umesh J Kumar , MD ,Renaissance Events and Experiences Pvt Ltd Was the Chief Guest and distributed the prizes to the Winners !

Special Prizes:
• Highest Average in 32 Games:
Mahipal Singh (Pinfall – 6163, Average – 192.59)
• Maximum No. of 225+ Scores:
Mahipal Singh (5)

சென்னையின் தோரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பௌல் (LetsBowl) அரங்கில் நேற்று, 31 ஜனவரி 2026 அன்று நிறைவடைந்த 10வது தமிழ்நாடு மாநில டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் இறுதிப்போட்டியில் கணேஷ் NT, மகிபால் சிங் அவர்களை (352–307) என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இரண்டு ஆட்டங்களின் மொத்த பின்‌ஃபால் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில்,
முதல் ஆட்டத்தில் கணேஷ் NT, மகிபால் சிங்கை (182–143) 39 பின்கள் வித்தியாசத்தில் முந்தினார்.

இரண்டாவது ஆட்டத்தில் மகிபால் சிங் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி (164–170) தோல்வியடைந்தார். இதன் மூலம் கணேஷ் NT இறுதியாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முன்னதாக, முதல் ஸ்டெப்-லாடர் போட்டியில் தரவரிசை 3-ல் இருந்த யூசுப் ஷப்பீர், ஆனந்த் பாபு அவர்களை (328–317) தோற்கடித்து இரண்டாவது ஸ்டெப்-லாடர் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இரண்டாவது ஸ்டெப்-லாடர் போட்டியில் தரவரிசை 2-ல் இருந்த கணேஷ் NT, யூசுப் ஷப்பீர் அவர்களை (414–370) என்ற கணக்கில் தோற்கடித்தார்.
ரௌண்டு 3 முடிவில், மகிபால் சிங் மொத்த பின்‌ஃபால் 6163 மற்றும் சராசரி 192.59 உடன் அட்டவணையின் முதலிடத்தில் முடித்தார். அவரைத் தொடர்ந்து கணேஷ் NT (பின்‌ஃபால் – 6064, சராசரி – 189.50) இடம் பெற்றார்.
தகுதிச்சுற்றுகள் 28 பவுலர்கள் பங்கேற்புடன், இரட்டை ஆயில் பேட்டர்ன் சூழ்நிலையில் 3 நாட்கள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் Renaissance Events and Experiences Pvt Ltd நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (MD) திரு உமேஷ் ஜே. குமார் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

சிறப்பு பரிசுகள்:

  • 32 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி:
    மகிபால் சிங் (பின்‌ஃபால் – 6163, சராசரி – 192.59)
  • 225க்கும் மேற்பட்ட ஸ்கோர்களின் அதிகபட்ச எண்ணிக்கை:
    மகிபால் சிங் (5)

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் – புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

0

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சானா (Buchi Babu Sana), வெங்கட சதீஷ் கிலாரு( Venkata Satish Kilaru),விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) இணையும் ‘பெத்தி’ படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது.

வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது உருவத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. புகை சூழ்ந்த பரபரப்பான சூழலில், சோர்வுற்றும் கடுமையான முகபாவனையுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திலிருந்து அவர் முன்னேறி வருகிறார். அவரது கடும் பார்வை அந்த குழப்பத்தை துளைத்துச் செல்லும் விதத்தில் அமைந்துள்ளது. முழு காட்சியும் இருள் மிகுந்த வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு, போராட்டம், எதிர்ப்பு மற்றும் கலக்கம் நிறைந்த உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

‘பெத்தி’ படத்தின் விளம்பர உள்ளடக்கங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் A.R.ரஹ்மான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதுடன், பல சாதனைகளை முறியடிக்கும் பாதையில் பயணித்து வருகிறது.

படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்தும் வகையில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம் சரண், இதுவரை காணாத முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் தோன்றுகிறார்.

வெங்கட சதீஷ் கிலாரு, தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு, மிகச் சிறந்த தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற A.R.ரஹ்மான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் R.ரத்னவேலு காட்சிகளைப் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.

‘பெத்தி’ திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும், பான் இந்திய அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் :
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு,திவ்யேந்து சர்மா, பொமன் இரானி

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: இஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
கலை இயக்கம்: அவிநாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Peddi Releasing Worldwide In Theatres On April 30

Mega Power Star Ram Charan’s highly anticipated ambitious pan-India sports-action drama Peddi, directed by Buchi Babu Sana, is in the final phase of its production. The film has moved from its earlier March 27 target to a prime summer release on April 30, aiming to leverage the long holiday season for maximum impact. With the extended timeline, the makers are now preparing for an aggressive promotional campaign.

The release date poster shows Ram Charan in a completely new and massy look, with long messy hair, a thick beard, and a nose ring. His fierce eyes cut through the smoky, chaotic surroundings as he emerges from a dense crowd of worn-out, grim-looking people. The entire frame is drenched in gritty tones, creating a sense of struggle, rebellion, and unrest.

The film has already made a strong mark with its promotional content. The first glimpse, first-look posters, and the chartbuster single Chikiri Chikiri, composed by AR Rahman, received a phenomenal response across platforms, crossing major milestones and keeping the hype continuously high. The song crossed 200 M views and is heading to shatter many records.

Adding to the film’s scale, the cast features Janhvi Kapoor as the leading lady, along with Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma, and Boman Irani in key roles. Ram Charan will be seen in a first-of-its-kind role in the movie.

The film, produced by Venkata Satish Kilaru under Vriddhi Cinemas, Peddi boasts an exceptional crew- Oscar-winning composer AR Rahman handling the music, popular cinematographer R Rathnavelu capturing the visuals, National Award–winning editor Navin Nooli overseeing the cuts, and Avinash Kolla crafting the film’s rich world through detailed production design.

Peddi will have a Pan India release in all south Indian languages and Hindi.

Cast: Mega Power Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma, Boman Irani

Technical Crew:
Writer, Director: Buchi Babu Sana
Presents: Mythri Movie Makers, Sukumar Writings
Banner: Vriddhi Cinemas
Producer: Venkata Satish Kilaru
Co producer: Ishan Saksena
Music Director: AR Rahman
DOP: R Rathnavelu
Production Design: Avinash Kolla
Editor: Navin Nooli
Executive Producer: V. Y. Praveen Kumar
Marketing: First Show
PRO: Yuvraaj

Rowdy Pictures extends its heartfelt gratitude to the Honourable Chief Minister of Tamil Nadu and the esteemed jury members for recognising its films with the prestigious Tamil Nadu State Film Awards over the years.

0

Rowdy Pictures has always aimed at delivering captivating and entertaining cinematic experiences that engage and delight audiences. With a strong commitment to discovering and nurturing new talent, and crafting performances that audiences will long remember, the banner consistently brings stories to life that entertain while also resonating with society.

Rowdy Pictures extends its heartfelt gratitude to the Honourable Chief Minister of Tamil Nadu and the esteemed jury members for recognising its films with the prestigious Tamil Nadu State Film Awards over the years.

The critically acclaimed film “Koozhaangal (Pebbles)” received the Best Film Award for 2020, while young actor Chellapaandi was honoured with the Best Child Artist Award (2020). Rowdy Pictures also expresses its appreciation for Mr. P.S. Vinothraj, whose sensitive and uncompromising direction brought the film’s raw and powerful narrative to the screen, reaffirming the impact of deeply resonant storytelling.

Rowdy Pictures is grateful for “Netrikann” being honoured with the Best Film on Women Empowerment – 2021, acknowledging its strong social message and impactful narrative. The banner also thanks Mr. Milind Rau for his focused and assured direction, which translated the film’s core theme into a compelling cinematic experience.

The banner further acknowledges with gratitude the Best Actress Award for 2017 presented to Ms. Nayanthara for her performance in “Aramm”, a film noted for its strong ethical and social themes.

Rowdy Pictures warmly thanks Mr. Gopi Nainar for his powerful direction and extends its appreciation to Mr. Kotapadi J. Rajesh and KJR Studios for their collaboration and continued encouragement of socially conscious filmmaking.
Rowdy Pictures also expresses sincere thanks to all the directors, actors, technicians, and creative teams whose dedication and constant support made these films possible. Encouraged by these recognitions, the banner looks forward to continuing its journey of producing cinema that blends artistic integrity with social relevance, while providing a platform for emerging voices in the industry.
With love,
VIGNESH SHIVAN NAYANTHARA

ரசிகர்களுக்கு பிடித்த வகையிலும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ந்து தரமான படங்கள் தயாரிப்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய நிறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்படியான நடிகர்களை திரையில் கொண்டு வருவது ஆகியவற்றோடு.

சமூகத்தை பிரதிபலிக்கும் நல்ல கதைகளை திரைக்கு கொண்டு வருவதையும் முன்னிலைப்படுத்தி ரெளடி பிக்சர்ஸ் இயங்கி வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற கூழாங்கல் (Pebbles) திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. அதே ஆண்டில் இந்த திரைப்படத்தில் நடித்த செல்லபாண்டி. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார். படத்தின் வலுவான உணர்வுகளையும், எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமலும் இந்தக் கதையை படமாக்கிய இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் பாராட்டுகள் தெரிவிக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நெற்றிக்கண்’. பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம் சமூகத்திற்கு வலுவான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய அதன் வலுவான கருத்தை திரையில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவிக்கிறது.
அதேபோல், சமூக நெறிமுறை கருத்துகளை வலியுறுத்திய ‘அறம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா அவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டிருப்பதும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெருமையான விஷயம். இப்படத்தை இயக்கிய இயக்குநர் கோபி நயினார் அவர்களுக்கும், படத்தை தயாரித்த கோடபாடி ஜே. ராஜேஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் ரௌடி பிக்சர்ஸ் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. இந்த படங்கள் அனைத்தும் உருவாக காரணமான இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் அனைவரின் அர்ப்பணிப்பிற்கும் ஆதரவிற்கும் ரௌடி பிக்சர்ஸ் நன்றி தெரிவிக்கிறது.

சமூக பொறுப்புணர்வோடு கூடிய படங்களை தொடர்ந்து தயாரிக்கவும், புதிய திறமையாளர்களுக்கான தளமாகவும் தொடர்ந்து இயங்க, இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்வுடன் தெரிவிக்கிறது.
அன்புடன்,
விக்னேஷ் சிவன் நயன்தாரா

கணவனையும் மகனையும் டூயட் பாட வைத்து ரசித்துப் படம் தயாரித்த பெண் தயாரிப்பாளர் : இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு!

0

நாட்டுப்பற்றுள்ள ஒரு கதையுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி இருக்கும் கமாண்டோவின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் வீர அன்பரசு. நாயகியாக ஏஞ்சல் நடித்துள்ளார்.இவர்களுடன் பப்லு என்கிற பிருத்விராஜ், இயக்குநர் பேரரசு, ஆகாஷ், ‘வாழை’ ஜானகி, உஷா, தங்கதுரைப்பாண்டியன் போன்றவர்களும் நடித்துள்ளார்கள்.

படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாவலர் வி .சிவராமன் மற்றும் கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளனர்,சண்டைப் பயிற்சிகளை கோல்டன் என். கோபால் அமைத்துள்ளார். உடைகள்: நாதன்,கலை: பழனி,தயாரிப்பு அனுராதா அன்பரசு.

.தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசும்போது,

“லவ் ஸ்டோரி என்கிற போது அது நூற்றுக்கு 200 சதவீதம் வெற்றி பெறும் .அதுதான் இந்த விழாவில் வெளிப்படும் உண்மை. கோல்டன் கோபால் எனக்குப் பல ஆண்டுகள் பழக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு 1985 -ல் ‘யார்’ படம் வெளியிட்டபோது, அதற்கு பிறகு விஜயகாந்த் சாரை வைத்து ‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’,’ தெருப்பாடகன்’ போன்ற பல படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது ஸ்டண்ட்டில் உதவியாளராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.அப்போது நான் கூப்பிட்டு நீ படம் பண்ணு உனக்கு நான் படம் தருகிறேன் என்பேன்.
இந்த மேடையில் அவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிறப்பான ஸ்டண்ட் செய்திருக்கிறார்.சட்டத்துக்கு உட்பட்டு ராணுவப் பயிற்சிகள்
போன்றவற்றை அளித்து தேர்ந்த கலைஞர்களை வைத்து அமைத்து ஸ்டண்ட் காட்சிகள் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது ‘துப்பாக்கி’, ‘ஆள வந்தான்’ போன்ற படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் எடுத்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.இதற்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள் ,யாருமே எடுக்க முடியாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் அன்பரசு என்றார்கள். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். புதிய படத்திற்குப் புதுமுகங்களை வைத்து பாடல், ஸ்டண்ட் என்று நிறைய செலவு செய்து இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. கார்த்திக்ராஜா சிறந்த பின்னணி இசை கொடுத்திருக்கிறார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை வாழை ஜானகி பேசும்போது,

“இந்த மேடையைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரி படத்தை எடுப்பதற்குக் கணவருக்கு மன தைரியம் கொடுத்ததற்காகத் தயாரிப்பாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எங்கெங்கோ சென்று சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
அன்பரசு சார் எனக்கு இந்த படத்தில் அவரது அம்மாவாக நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.எல்லாருமே இந்த படத்தைப் போய் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் பப்லு என்கிற பிருத்விராஜ் பேசும்போது,

“நான் 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன்.
இன்று என்னை பேன் இந்தியா ஆர்டிஸ்ட் என்று அறிமுகம் செய்தார்கள்.இன்னும் ஆறுமாதங்களில் என்னை பேன் வேர்ல்ட் ஆர்டிஸ்ட் என்பார்கள்.ஏனென்றால் நான் நடிக்கும் இரண்டு படங்கள் 365 மொழிகளில் வெளியிடப் போகிறார்கள்.சினிமாவில் நன்றாக இருக்கும் போது எல்லாம் நன்றாக இருக்கும். வாய்ப்பு இல்லை என்றால் யாருமே மதிக்க மாட்டார்கள்.
நம்மைப் பார்த்தால் கூட பார்க்காத மாதிரி சென்று விடுவார்கள்.
இயக்குநர் அன்பை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அன்பு என்றால் 24 கேரட் அன்பு அவருடையது.
அவர் சம்பாதித்ததில் பெரிது இந்த நண்பர்கள்தான்.
அன்பும் நிறைய கதைகள் வைத்திருக்கிறார். அது அவ்வப்போது நேரம் வரும்போதுதான் சினிமாவில் நடக்கும் .இந்த மாதிரி நிறைய படங்கள் செய்ய வேண்டும்
என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

நாயகி ஏஞ்சல் பேசும் போது,

“இந்தப் படத்தில் நடித்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் இந்த படத்துக்காக கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.அனைவரும் திரையரங்கு சென்று படத்தைப் பாருங்கள்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“ஸ்டண்ட் மாஸ்டர் கோல்டன் கோபால், நீங்கள் சம்பளத்தைச் சொல்லா விட்டாலும் ரெய்டு வந்துவிடும்.ஏனென்றால் நீங்கள் கோல்டன் கோபால்.
30 நாள் ரஜினியுடன் பயணித்தால் போதும் ரெய்டு வரும். கணக்கைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

பட்டாசு பாலு, பான்பராக் ரவி, சனியன் சகடை, என்று ரவுடிகளுக்கு நான் பெயர் வைப்பேன்.
மாஸ்டர்களுக்கு வெறுமனே பெயர் வைத்தால் சரியாக வராது. கோல்டன் கோபால் என்று பெயர் வைத்துள்ளார். அந்தப் பெயருக்கே ரெய்டு வரும்.இந்த மேடையில் நிறைய நன்றி உணர்வு வெளிப்பட்டது.மாஸ்டருக்கு நிறையவே உள்ளது.

இந்தப் படத்தில் கணவன் ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பாவும் மகனும் போட்டி போட்டுக் கொண்டு லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தைத் தயாரித்தது அம்மா.இந்த மாதிரி குடும்பம் யாருக்குக் கிடைக்கும்? அந்தளவுக்கு ரசித்துள்ளார்கள்.

இந்த இயக்குநர் நண்பர் வீர அன்பரசு,நடித்துச் சாதித்தாரோ இல்லையோ
இயக்கிச் சாதித்தாரோ இல்லையோ ஒரு வகையில் உண்மையில் சாதித்து விட்டார் .அது என்னவென்றால் மனைவி அவரை ஹீரோ என்று பலமுறை சொல்லிவிட்டார்கள்.எந்த மனைவியும் கணவனை ஹீரோ என்று ஒப்புக் கொள்வதில்லை. ஜீரோ என்று தான் சொல்வார்கள்.
நடித்தது இயக்கியது எல்லாம் பெரிதில்லை, தனது மனைவி கதாநாயகன் என்று ஒப்புக்கொண்டது தான் பெரிய விஷயம். அங்கேயே அவர் சாதித்து விட்டார்.ஏனென்றால் யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.இயக்குநர் அன்பரசு கதாநாயகி ஏஞ்சலைக் கொடுமைப்படுத்தி இருக்கிறார். குலுமனாலியில் எடுத்த காட்சிகளைப் பார்க்கும்போதே நமக்குக் குளிர்கிறது. இவர் நன்றாக கோட் சூட் போட்டுக் கொண்டு கதாநாயகிக்கு மட்டும் அங்கே குறைந்த ஆடைகளைப் போட்டுப் பாடல் காட்சிகள் எடுத்துள்ளார்.

கதாநாயகியின் ஒவ்வொரு குளோசப்பும் அவ்வளவு அழகாக இருந்தது.லட்டு மாதிரி இருந்தது. பப்லு 50 வருடம் சினிமாவில் இருப்பதாகச் சொல்கிறார் அந்த உற்சாகம் இன்னும் குறையவில்லை.எனது நண்பர் இணை இயக்குநர் வெற்றிவேலன் இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் செய்ய வேண்டும் என்று ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடப்பதாக அழைத்தார். என்ன வேடமென்று யோசித்துக் கொண்டு சென்ற போது நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்றார்கள் .நான் இதில் இயக்குநர் பேரரசாகவே வருகிறேன். நட்புக்காக என்று ஒத்துழைப்புக்கு நன்றி என்று கூறி கைக்குலுக்கி அனுப்பி விடுவார்களோ என்று நினைத்தேன் .ஆனால் போகும்போது எனக்கு ஒரு தொகையைக் கொடுத்தார்கள்.

முன்பெல்லாம் ராணுவம் பற்றிய கதைகள் அதிகம் வரும்.கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போது நாட்டுப்பற்றுக் கதைகள் அதிகம் வரும் .அதே போல் ஆக்சன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்த போது அது போன்ற படங்களில் நடிப்பார். இப்போது அது மாதிரிப் படங்கள் அதிகம் வருவதில்லை. நாட்டுப் பற்றுக் கதைகளே இல்லாமல் போய்விட்டது.ராணுவம் சம்பந்தப்பட்ட கதை ‘துப்பாக்கி’க்குப் பிறகு ‘அமரன்’ வந்தது . இப்போது ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’.இந்தப் படத்தில் நாட்டுப் பற்றும் உள்ளது. காதல் பற்றும் உள்ளது.

இயக்குநர் வீர அன்பரசு 35 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவின் மேல் உள்ள காதலால் ஒரு படம் ஆரம்பித்து சில சூழ்நிலையால் அது வெளியாகவில்லை.அவர் கஸ்டம்ஸ் ஆபீசர் . நன்றாகச் சம்பாதித்து செட்டிலாகி இருக்கலாம் .சினிமாவுக்கு வந்திருக்கிறார் .ஏனென்றால் சினிமாவின் மீது அவருக்கு அவ்வளவு காதல்.சினிமாவை உண்மையாக நேசித்தால் சினிமா நம்மைச் சாதிக்க வைக்கும்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாதிக்கலாம்.இது சின்ன படம் தான். எத்தனை லொகேஷன்களில் எடுத்துள்ளார்கள். எவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.நடித்திருப்பவர்கள் தான் புதியவர்களே தவிர சின்ன படத்திற்கான அறிகுறியே இல்லை.இது மாதிரி சிறு முதலீட்டுப் படங்கள் எடுக்கப்படும் போது தான் சின்னச் சின்ன தொழில்நுட்பக் கலைஞர்களுக்கெல்லாம்,சின்னச் சின்ன நடிகர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும்.இது மாதிரியான படங்கள் வெற்றி பெற வேண்டும். இயக்குநர் அன்பரசு மனைவி அனுராதா மாதிரி அமைவதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த அளவிற்கு ஆதரவு கொடுத்து பக்கத் துணையாக இருந்து இருக்கிறார்கள்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். தொடர்ந்து நீங்கள் படம் செய்ய வேண்டும். பலருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு பேசும் போது,

“இந்தப் படத்தினைத் தயாரிப்பதற்காக அந்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். எனது குடும்பம் மிகவும் சிறிய குடும்பம் 52 பேர் தான் அதில் உறுப்பினர்கள் .அவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள், எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். முயற்சி திருவினையாக்கும் என்பது போல் அன்பரசு என்பவரின் முயற்சி தான் இந்த படம்.என் கணவரின் பல்லாண்டுகாலக் கனவு இன்று படமாக வந்திருக்கிறது.அதன் பின்னே அவரது கடின உழைப்பு இருக்கிறது. படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

படத்தில் இயக்குநர் கதாநாயகன் வீர அன்பரசு பேசும்போது,

“படத்திற்கு இசையமைத்துள்ள சிவராமன் எனக்கு 25 ஆண்டுகளாக நண்பர்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்தார். பின்னணி இசையை கார்த்திக் ராஜா அவர்களிடம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.சம்பளம் பற்றிப் பேசியபோது “நான் எதுவும் கேட்கவில்லை. நீங்கள் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறேன் “என்றார்.முதல் நாள் இரவு படத்தில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டபோது, இரவு 8 மணிக்கு கேட்கிறேன். வீடு சென்று படுத்து தூங்கி எழுந்தால் காலை 8 மணிக்கு அவர் போன் செய்தார். இரவோடு இரவாக பாடலை கம்போஸ் செய்து பாட வைத்து காலையில் போட்டுக் காட்டினார். நான் பிரமித்துப் போய் விட்டேன்.அவர் ஒரு மேஜிக்கல்மேன் தான்.அவரை பலரும் தவறவிடுகிறார்கள்.

பாவலர் வரதராஜன் அவர்கள் புதல்வன் சிவராமன் இசையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தங்கை இஷரத் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இரண்டு பாடல்களைப் பாடித் தந்தார். இப்படி இரண்டு இடங்களிலும் அப்படி யாரும் செய்ய முடியாது. நான் இரண்டு குடும்பங்களிடம் நட்பாக இருப்பதால் அது முடிந்தது.பிரம்மாண்ட படங்களை இயக்கிய பேரரசு அவர்கள் எங்கள் படத்தில் நடித்துக் கொடுத்தது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. பிரமாண்ட படங்களின் இயக்குநரான அவரை எப்படி இயக்குவது என்று எனக்கு பதற்றமாக இருந்தது.ஆனால் அவர் நன்றாக நடித்துக் கொடுத்தார். பிருத்விராஜ் தனது பிசியான ஷெட்யூலிலும் நடித்துக் கொடுத்தார்.இங்கே கங்கை அமரன் சார் வருவதாக இருந்தது . அவசரமாக வேறு ஒரு நிகழ்வுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் அவரால் வர முடியவில்லை. அதேபோல் ஆர் கே செல்வமணி சார் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்வதால் இங்கே வர முடியவில்லை.இயக்குநர்கள் எல்லாரும் கூப்பிட்டவுடன் வந்தார்கள் .அது எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் சங்கத்திற்கும் நன்றி.படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தின் இந்தி வடிவத்திற்குச் சத்யா இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். நன்றாக இருக்கிறது.
நான் சினிமா இலக்கு என்று ஓடிக்கொண்டிருப்பதில் வீட்டைக் கவனிப்பதில்லை. குடும்பத்தை விட்டுவிட்டு வெளியே பல நாட்கள் பயணம் செய்திருக்கிறேன். அந்த வலி எனது மனைவிக்கு இருக்கும். இருந்தாலும் எனது இலக்குக்காக அவர்கள் வலிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி.”என்று அனைவருக்கும் நன்றி கூறினார்.

பிரஜின் – புகழ் இணைந்து நடிக்கும் காமெடி படம் ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” கோலாகலமாக நடைபெற்ற பட தொடக்க விழா!!

0

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வரிசையில் ஒரு முழு நீள காமெடி படம் ” ஊருக்கு ரெண்டு ஊதாரி “

ARK PRODUCTIONS சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் ECOPMIN MOTION PICTURES சார்பில் வினோத் பெருமாள் இருவரும் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” என்று கலகலப்பான தலைப்பை வைத்துள்ளனர்.

பிரபல நடிகர்கள் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் விக்ரம் விஜய் முக்கியம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்க, பியார் பிரேமா காதல், கழுகு 2, நான் மிருகமாய் மாற, நினைவெல்லாம் நீயடா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செந்தமிழ் செல்வன் செய்ய, கலை இயக்கத்தை மணிகண்டன் கையாள்கிறார்.
ஸ்டண்ட் மாஸ்டராக மிரட்டல் செல்வா மிரட்ட, ஆடை வடிவமைப்பாளராக ரெங்கசாமி பணியாற்றுகிறார்.
விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA
தயாரிப்பு மேற்பர்வை குரு முத்துக்குமரன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

தயாரிப்பு நிறுவனங்கள் -ARK PRODUCTIONS & ECOPMIN MOTION PICTURES
இணை தயாரிப்பு – சஞ்ஜெய்
தயாரிப்பாளர்கள் – ராமகிருஷ்ணன் ஆறுமுகம் – வினோத் பெருமாள்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – அறிமுக இயக்குனர் யோகேஸ்வரன் மைனர்.

படம் பற்றி இயக்குனர் யோகேஸ்வரன் மைனர் பேசியவை…

இது முழுக்க முழுக்க காமெடி ட்ராமாவாக உருவாக்க இருக்கிறோம்.

பொதுவாகவே ஊருக்கு ரெண்டு ஊதாரி இருப்பார்கள், ஆனால் ஒரே வீட்டில் ரெண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸ்யமான முழு நீள காமெடி படமாக எடுக்கவிருக்கிறோம்.

கடந்த பத்து வருடங்களாக ஒரே அடிதடி, வெட்டு குத்து படங்களாகவே வருகின்றன. சினிமா ரசிகன் அந்த இரண்டு மணிநேரம் தன்னை மறந்து சிரித்து மகிழவேண்டும் என்று தான் எதிர் பார்க்கிறாரன். அப்படி சினிமா ரசிகனை ஃபுல் என்டர்டெயின்மென்ட் செய்யும் படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர் யோகேஸ்வரன் மைனர்.

இந்த படத்தின் துவக்க விழா இன்று ( 05.02.2026 ) காலை சென்னையில் நடைபெற்றது விழாவில் நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, C.V. குமார், KKR சினிமாஸ் K. ரமேஷ் பாண்டியன், இயக்குனர் சுப்ரமணியசிவா, ஸ்ரீநாத், சொந்தர் ராஜா, கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.இந்த வருட கோடை கொண்டாட்டமாக இந்த படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

A Love story set against the backdrop of a police station

0

Fire Fox Film House – Producer Saranika presents “Production No.1”

Manikandan Selvaraj Directorial-Starrer “Production No.1”

Fire Fox Film House presents Production No. 1, produced by Saranika, marking the directorial debut of Manikandan Selvaraj, who also plays the lead role.

A former assistant to director Arivazhagan, Manikandan Selvaraj both directs and stars in the film, which features A. Venkatesh and Aruvi Madhan, along with several other actors in prominent roles.

Tamil cinema audiences have always welcomed films with fresh and distinctive storytelling. Set against the backdrop of a police station, this film presents a unique love story with an engaging screenplay that promises to appeal to audiences across all sections. Blending romance, action, and commercial elements, the film is crafted to deliver racy moments while staying rooted in its novel premise.

While Manikandan Selvaraj plays the protagonist, director-actor A. Venkatesh will be seen in a character filled with twists and turns. Aruvi Madhan essays an important role. Sreeja Ravi, who received acclaim for her performance in Doctor, appears in a powerful and impactful character. Thanigai, known for his performances in Diary and Kuttram 23, will also be seen in a pivotal role alongside several familiar faces.

The film commenced its first schedule of shooting on February 5, 2026, in Chennai. The second schedule will be shot in and around select locations in Chennai.

Produced by Saranika under the banner of Fire Fox Film House, the film has cinematography by Giri Murphy, while music is composed by newcomer Hari. The film’s first look and teaser will be officially launched soon.

மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1

Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி  நடிக்கும் படம் புரொடக்ஷன் நம்பர் 1. இயக்குனர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஆ.வெங்கடேஷ், அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைகளம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ்.

இப்படத்தில் மணிகண்டன் செல்வராஜ் நாயகனாக நடிக்க, இயக்குனரும், நடிகருமான ஆ.வெங்கடேஷ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். அருவி மதன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். [டாக்டர் படத்தில் நடித்த] ஸ்ரீஜா ரவி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் [டைரி, குற்றம் 23-ல் நடித்த] தணிகை, மற்றும் பல புதிய முகங்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு [05-02-26] அன்று சென்னையில் ஆரம்பமானது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் படமாக்கப்பட்ட உள்ளது.

Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிக்கும் இப்படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Tanishq and Sachin Tendulkar Extend Gold Exchange Initiative with Two New Festive Offers

0

Chennai, 5th February 2026: Tanishq, India’s most trusted jewellery brand from the House of Tata, has extended its nationwide Gold Exchange Initiative, supported by Sachin Tendulkar, with the launch of two new festive offers designed to make gold exchange and smart gold buying easier for Indian families.

Building on its first-ever 0% deduction on gold exchange across all karatages, Tanishq has introduced:

  • Best Gold Rate (BGR) on Advance Buying
  • Gold-for-Diamond Exchange

These additions give customers more ways to unlock the value of their existing gold and plan jewellery purchases with greater clarity, while contributing to reduced dependence on gold imports.

Indian households hold an estimated 25,000 tonnes of gold, while nearly 99 percent of India’s gold requirement is met through imports. Through its Gold Exchange Programme, Tanishq encourages families to bring idle gold back into circulation by exchanging it for new jewellery.

Under the Best Gold Rate (BGR) offer, customers can book jewellery in advance and freeze the gold rate. At the time of billing, they will be charged the lower of the frozen rate or the prevailing market rate. The offer is valid for advance bookings made between 24th January and 25th February 2026, with billing to be completed by 25th February 2026. Mia Products purchased with Tanishq products in Tanishq stores are eligible for this offer.

Tanishq has also introduced the option for customers to exchange their old gold for diamond jewellery. This allows families to convert legacy gold into contemporary diamond designs, based on current preferences.

Sachin Tendulkar added, “Gold has always been part of important moments in Indian families. Tanishq’s Gold Exchange gives people a clear and trusted way to renew their jewellery. These new offers help families plan better, upgrade their jewellery, and also play a role in lowering India’s reliance on gold imports.”

Over 30 lakh Indians have taken part in Tanishq’s Gold Exchange Programme, recycling nearly 1.7 lakh kilos of gold. Close to 40 percent of Tanishq’s business now comes from exchange, making it one of the largest organised gold recycling efforts in the country.

With these new offers, Tanishq continues to lead large-scale gold exchange and advance buying programmes, giving customers greater choice while supporting India’s goal of reduced import dependence.

About Tanishq:
Tanishq, India’s most-loved jewellery brand from the TATA Group, has been synonymous with superior craftsmanship, exclusive designs and guaranteed product quality for over two decades. It has built for itself the envious reputation of being the only jewellery brand in the country that strives to understand the Indian woman and provide her with jewellery that meets her traditional and contemporary aspirations and desires. To stress on their commitment to offer the purest jewellery, all Tanishq stores are equipped with the Karatmeter which enables customers to check the purity of their gold in the most efficient manner. The Tanishq retail chain currently spreads across 500+ exclusive boutiques in more than 300 cities.

இரண்டு புதிய பண்டிகைக்கால சலுகைகளுடன்
‘தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டத்தை நீட்டிக்கும் தனிஷ்க்

முன்கூட்டியே தங்கம் வாங்குவோருக்கு ‘சிறந்த தங்க விலை’ மற்றும் ‘தங்கத்தை மாற்றி வைரத்தைப் பெறுவது’ ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது

சென்னை, பிப்ரவரி 5, 2026: இந்தியா முழுவதும் மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற டாடா குழுமத்தின் நகை பிராண்டான தனிஷ்க், சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு பெற்ற நாடு தழுவிய திட்டமான ‘தங்கத்தை மாற்றும் திட்டத்தை’ நீடித்திருக்கிறது. இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை எளிதாக மாற்றவும், புத்திசாலித்தனமாக வாங்கவும் உதவும் வகையில் இரண்டு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பழைய தங்கத்தை மாற்றும்போது எந்தக் கழிவும் இல்லாத (0% deduction) திட்டத்துடன் சேர்த்து, தற்போது பின்வரும் இரண்டு புதிய சலுகைகளை தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கிறது:

  • தங்கத்திற்கு முன்கூட்டி பணம் செலுத்தும்போது, வாங்குவோருக்கு சிறந்த தங்க விலை (BGR)
  • தங்கத்திற்குப் பதில் வைரத்தை மாற்றிக்கொள்ளும் வசதி
    தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை வெளிக்கொணர்ந்து, பயனடைவதற்கு இந்த கூடுதல் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வழிமுறைகளை வழங்குகின்றன. தங்க இறக்குமதி மீது நம் நாடு சார்ந்திருப்பதை குறைப்பதற்கு இது உதவுவதோடு, அதிக தெளிவுடன் ஆபரணங்களை வாங்குவதை வாடிக்கையாளர்கள் திட்டமிடுவதற்கும் இது உதவுகிறது. இந்திய குடும்பங்களில் மட்டும் சுமார் 25,000 டன் எடையுள்ள தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதேசமயம் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் தங்கத்திற்கான தேவையில், 99 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீட்டில் வெறுமனே வைக்கப்பட்டிருக்கும் பழைய தங்கத்தை புழக்கத்திற்குக் கொண்டு வந்து, புதிய நகைகளாக மாற்றிக் கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம், நம் நாடு இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தவும் தனிஷ்க் உதவுகிறது.

தனிஷ்க்: தங்கம் மற்றும் வைர நகை விற்பனைச் சலுகைகள்

சிறந்த தங்க விலை (BGR) சலுகை: சிறந்த தங்க விலை (BGR) சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நகைகளை முன்பதிவு செய்து தங்கத்தின் விலையை உறுதி செய்து கொள்ளலாம். பில் போடும் நேரத்தில், முன்பதிவு செய்த விலை அல்லது அன்றைய சந்தை விலை ஆகிய இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த விலையே வசூலிக்கப்படும். இந்தச் சலுகை 2026 ஜனவரி 24 முதல் பிப்ரவரி 25 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தங்க நகைகளை இத்திட்டத்தின் கீழ் வாங்குவதற்கான செயல்முறை (பில்) பிப்ரவரி 25-க்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். தனிஷ்க் ஸ்டோர்களில், தனிஷ்க் தயாரிப்புகளுடன் சேர்த்து வாங்கப்படும் ‘மியா’ தயாரிப்புகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

தனிஷ்க் தனது வாடிக்கையாளர்களுக்காக பழைய தங்கத்தை புதிய வைர நகைகளாக மாற்றிக்கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய தங்க நகைகளை, தற்போதைய விருப்பத்திற்கு ஏற்ப நவீன வைர ஆபரணங்களாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் திரு. சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “இந்தியக் குடும்பங்களின் முக்கிய தருணங்களிலும், நிகழ்வுகளிலும் தங்கம் எப்போதும் ஒரே மையமாக இருந்து வருகிறது. தனிஷ்க்-ன் தங்க பரிமாற்றத் திட்டம் தங்கள் நகைகளை புதுப்பிப்பதற்கு ஒரு தெளிவான மற்றும் நம்பிக்கையான வழிமுறையை மக்களுக்கு வழங்குகிறது. இத்தகைய புதிய சலுகைகள் சிறப்பாக திட்டமிடவும், தங்கள் நகைகளை புதிதாக தரம் உயர்த்திக் கொள்ளவும் குடும்பங்களுக்கு உதவுவதோடு, நம் நாட்டின் தங்க இறக்குமதி தேவையைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்றார்.

30 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தனிஷ்க்-ன் தங்க பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்று, சுமார் 1.7 லட்சம் கிலோ தங்கம் மறுசுழற்சி செய்யப்பட உதவியிருக்கின்றன. தனிஷ்க் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் சுமார் 40 சதவீதம் இந்த பரிமாற்றத் திட்டத்தின் மூலம் இப்போது கிடைக்கிறது. இது நம் நாட்டின் மிகப்பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட தங்க மறுசுழற்சி முன்னெடுப்பு திட்டங்களில் முக்கியமானதாக திகழ்கிறது.

இந்த புதிய சலுகைகள் மூலம், தனிஷ்க் பெரிய அளவிலான தங்கப் பரிமாற்றம் மற்றும் முன்கூட்டிய கொள்முதல் திட்டங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நவீன நகைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதோடு, தங்க இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் இந்திய அரசின் திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது.

தனிஷ்க் பற்றி:
டாடா குழுமத்தின் மிகவும் பிரபலமான நகை பிராண்டான தனிஷ்க், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்த கைவினைத்திறன், பிரத்யேக வடிவமைப்புகள் மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தரம் ஆகியவற்றிற்கு பெயர்பெற்றது. இந்தியப் பெண்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் பாரம்பரிய மற்றும் நவீன விருப்பங்களையும், உலகளாவிய போக்குகளையும் நிறைவேற்றும் ஒரே நகை பிராண்டாக இது திகழ்கிறது. விற்பனை செய்யப்படும் நகைகளின் தூய்மையை உறுதிப்படுத்த, அனைத்து தனிஷ்க் ஸ்டோர்களிலும் ‘காரட்மீட்டர்’ வசதி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்க நகைகளின் தூய்மையை மிகத் துல்லியமாகச் சரிபார்க்க முடியும். தற்போது தனிஷ்க் நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 500-க்கும் அதிகமான பிரத்யேக விற்பனை நிலையங்களுடன் செயல்படுகிறது.

- Advertisement -

Recent Posts