Amazon Prime Video is all set to take movie enthusiasts and Allu Arjun fans on an unforgettable ride as the mega-blockbuster entertainer, Pushpa: The Rise-Part 1 is now streaming on the service in Telugu, Tamil, Malayalam and Kannada. To mark the worldwide premiere of the movie, Prime Video just dropped an exclusive trailer: https://www.youtube.com/watch?v=HJQftJ9oO9k
Watch the ‘icon of the south’, the much-acclaimed actor Allu Arjun in and as ‘Pushpa’, an underdog who rises in the world of sandalwood smuggling in Pushpa: The Rise- Part 1 which is now streaming in Telugu, Tamil, Malayalam and Kannada on Prime Video is written and directed by Sukumar and produced by Mythri Movie Makers and Muttamsetty Media. The Telugu action drama also stars Rashmika Mandanna and marks the debut of the noted Malayalam actor Fahadh Faasil in Telugu cinema.
திரைப்பட ரசிகர்களுக்கும், அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க அமேசான் பிரைம் வீடியோ தயாராகிவிட்டது. அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘புஷ்பா த ரைஸ் பார்ட் 1’ தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.
‘புஷ்பா’ படத்தின் வெளியீட்டை குறிக்கும் வகையில் உலகளாவிய ரசிகர்களுக்காக அமேசான் பிரைம் வீடியோ ஒரு பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. அதற்கான வீடியோ இணைப்பு… https://www.youtube.com/watch?v=HJQftJ9oO9k தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா த ரைஸ் பார்ட் 1’. இதில் அல்லு அர்ஜுன் செம்மர கடத்தலில் ஈடுபட்டிருக்கும் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம் செட்டி மீடியா மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த அதிரடி ஆக்சன் நாடகத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மலையாள நடிகரான பகத் பாசில் இந்த ‘புஷ்பா’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். https://twitter.com/primevideoin/status/1479463450371768320?s=21Blockbuster Action-Thriller Pushpa: The Rise- Part 1 is now Streaming on Prime Video
Amazon Prime Video launches multi-composer music album for its upcoming anthology Putham Pudhu Kaalai Vidiyaadhaa… The music album brings together a unique mix of young, renowned and upcoming artists from the Tamil industry, which includes GV Prakash Kumar, Sean Rolden, Kaber Vasuki, Pradeep Kumar, Goutham Vasu Venkatesan and Karthikeya Murthy
*The five-part anthology is set to premiere this Pongal, 14 January on Amazon Prime Video in India and more than 240 countries and territories worldwide*
Mumbai, India, 8th Jan 2022 – Celebrating the spirit of heartwarming and buoyant stories of Putham Pudhu Kaalai Vidiyaadhaa… Amazon Prime Video today launched the music of the much-awaited Tamil anthology. Following the success of Putham Pudhu Kaalai, music continues to be a defining factor in the second edition, illustrating tales of hope, resilience and human spirit amid the second Covid-19 lockdown. Bringing together renowned and upcoming artists like GV Prakash Kumar, Sean Rolden, Kaber Vasuki, Pradeep Kumar, Goutham Vasu Venkatesan and Karthikeya Murthy, the music album beautifully brings out the essence of each story of the Amazon Original series.
Known for creating some of the best soundtracks in Tamil Cinema, GV Prakash Kumar continues his successful association with the Amazon Original, becoming a common factor between both editions of the Tamil anthology. The multi-talented artist had previously created the the title song for Putham Pudhu Kaalai, and now he has sung and composed the theme title track for Putham Pudhu Kaalai Vidiyaadhaa…. The song is written by Kaber Vasuki and also sung by Yaamini Ghantasala.
Music album of the series also boasts of diverse and original tracks for the five stand-alone episodes, which are composed by five young and proficient composers from the Tamil industry. While Pradeep Kumar has sung and composed ‘Nizhal’ (lyrics by Kaber Vasuki) for Nizhal Tharum Idham, Sean Roldan has sung and composed ‘Kitta Varudhu’ (lyrics by Balaji Mohan) for the film Mugakavasa Muttham. Goutham Vasu Venkatesan has sung and composed ‘Thanimai Ennum’ (co-singer Amritha Susanthika and lyrics by Halitha Shameem) for Loners, Kaber Vasuki has sung, written and composed ‘Mugamoodi’ for The Mask and Karthikeya Murthy has sung and composed ‘Whistler’ (lyrics by Sabarivasan Shanmugam) for Mouname Paarvayaai.
Speaking about his association with the anthology and the theme track, GV Prakash Kumar said, “We are all stories and there is nothing better than some music to weave magic into the same. It has been a delight working on both versions of this anthology that taps into myriad human emotions, stuck at the crossroad of adversity. The stories in this second edition brings with it more intense emotions and to create its title track, embodying the spirit of hope and resilience, pushed me to dig deeper to bring out the the right notes in the melody. I hope the audiences like ‘Putham Pudhu Kaalai Vidiyaadhaa’ track as much as I enjoyed creating it. I am positive the music and the stories of Amazon Original series upon release will bring the much-needed positivity in current times.”
Sean Roldan, singer and composer of ‘Kitta Varudhu’ for Mugakavasa Muttham said, “As a film, Mugakavasa Muttham will surely tug at your heart strings and make even the coldest of hearts melt. We’ve seen how the pandemic has physically distanced most of us from our loved ones. Keeping in mind the theme of hope, we created ‘Kitta Varudhu’ to reiterate that the pandemic hasn’t ended yet and we need to take our precautions for a better tomorrow. I hope that this catchy tune, with lyrics by Balaji Mohan, has the power to convey the message. I am excited for audiences across the globe to listen to ‘Kitta Varudhu’ and watch Putham Pudhu Kaalai Vidiyaadhaa… on Prime Video.”
Goutham Vasu Venkatesan, singer and composer of ‘Thanimai Ennum’ for Loners said, “Giving music to this film was a very special experience because it had to be aligned with the very current and unique theme the story is based on. Two individuals meeting at a virtual wedding was unheard of two years ago. To replicate this one-of-a-kind scenario through music and adding elements of togetherness was very gratifying. I am looking forward to everyone watching Loners in Putham Pudhu Kaalai Vidiyaadhaa… and am thankful to Prime Video for taking our music across 240 countries and territories.”
Karthikeya Murthy singer and composer of ‘Whistler’ in Mouname Paarvayaai said, “So close yet so far is the perfect way to describe the story of Mouname Paarvayaai. The film taps into a narrative that most couiples experience at some point in their relationship and highlights emotions that are simple yet unsaid. I tried to precisely convey this through my track ‘Whistler’ and I hope the audiences like it. Looking forward to the release of Putham Pudhu Kaalai Vidiyaadhaa…on Prime Video and the audience reactions to pour in for the track and the anthology as a whole.”
Pradeep Kumar, singer and composer of ‘Nizhal’ for Nizhal Tharum Idham said, “Nizhal Tharum Idham is a beautiful story of loss and longing involving a daughter and her estranged father. Through my track ‘Nizhal’, the intent is for the audience to feel the girl’s emotional state of mind and relate to her internal conflicts as she treads through the most difficult week of her life. I am excited for everyone to listen to the track and watch Putham Pudhu Kaalai Vidiyaadhaa…on Prime Video”
Kaber Vasuki, singer, composer and writer of ‘Mugamoodi’ in The Mask said, “Self-acceptance doesn’t come easy. And once it does, we crave the acceptance of our loved ones, especially our parents. In The Mask, the protagonist’s relationship with his parents, his friends and himself are relatable and deep. The song’s lyrics reflects his life’s moments that lead up to his self-acceptance. The liberating energy that he feels is set to reflect in the musical composition. I am eager to see how the audiences react to the music and the anthology when it premieres on Amazon Prime Video.”
Putham Pudhu Kaalai Vidiyaadhaa… soundtrack is released by Warner Music India and is available on major music streaming services globally.
Synopsis: Each story in Putham Pudhu Kaalai Vidiyaadhaa… is standalone and yet they are all bound together by the theme of personal discovery of hope and new beginnings through human connection. These are stories of optimism, love and second chances, set in the second Covid-19 lockdown. The stories feature Aishwarya Lekshmi, Arjun Das, Dhilip Subbarayan, Gouri G Kishan, Joju George, Lijomol Jose, Nadiya Moidu, Nirmal Pillai, Sananth, and TeeJay Arunasalam, and are directed by Balaji Mohan, Halitha Shameem, Madhumita, Richard Anthony and Surya Krishna.
ஜீ..வி..பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி போன்ற தமிழ்த் துறையின் இளம், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் தனித்துவமான கலவையை இந்த இசைத் தொகுப்பு கொண்டுள்ளது.
ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் திருநாளை ஒட்டி ஜனவரி 14 அன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் Amazon Prime Video மூலம் வெளிவரவுள்ளது.
மும்பை, இந்தியா, ஜனவரி-8, 2022 – புத்தம் புதுக் காலை விடியாதா… தொகுப்பு கொண்டுள்ள மனதைக் கவரும் உற்சாகமான கதைகளின் உணர்வைக் கொண்டாடும் விதமாக இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத் தமிழ் இசைத்தொகுப்பை Amazon Prime Video அறிமுகப்படுத்தியது. புத்தம் புதுக் காலை தொகுப்பின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனுக்கு இடையே நம்பிக்கை, மீட்டெழுச்சி மற்றும் மன உரம் ஆகியவற்றை இந்த இரண்டாம் பதிப்பின் இசை முன்னிருத்துகிறது. ஜீ. வி. பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி போன்ற புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களை ஒன்றிணைத்து, இந்த இசை ஆல்பம் Amazon Original தொடரின் ஒவ்வொரு கதையின் சாரத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் சில சிறந்த பாடல்களுக்காகப் புகழ்பெற்ற ஜீ. வி.பிரகாஷ் குமார், Amazon Original உடன் கொண்டுள்ள தனது வெற்றிகரமான உறவைத் தொடர்கிறார், தமிழ்த் தொகுப்பின் இரு பதிப்புகளுக்கும் இடையே ஒரு பொதுவான காரணியாக இவர் உள்ளார். பன்முகத் திறமை கொண்ட ஜீ வி, இதற்கு முன்பு புத்தம் புதுக் காலை தொகுப்பின் தலைப்புப் பாடலை உருவாக்கியிருந்தார், தற்போது புத்தம் புதுக் காலை விடியாதா தொகுப்பின் தலைப்புப் பாடலைப் பாடி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை கேபர் வாசுகி எழுதியுள்ளார், மேலும் யாமினி கண்டசாலா இணைந்து பாடியுள்ளார்.
இந்த இசைத் தொகுப்புத் தொடர், ஐந்து தனித்த எபிசோட்களுக்கான மாறுபட்ட மற்றும் அசல் பாடல்களைக் கொண்டுள்ளது, அவை தமிழ்த் துறையைச் சார்ந்த ஐந்து இளம் மற்றும் திறமையான இசையமைப்பாளர்களால் இயற்றப்பட்டுள்ளன. நிழல் தரும் இதம் தலைப்பில் பிரதீப் குமார் ‘நிழல்’ (கேபர் வாசுகியின் வரிகள்) பாடி இசையமைத்துள்ளார், முககவச முத்தம் படத்திற்காக ஷான் ரோல்டன் ‘கிட்ட வருது’ (பாலாஜி மோகன் பாடல் வரிகள்) பாடி இசையமைத்துள்ளார். லோனர்ஸ்-இற்காக கௌதம் வாசு வெங்கடேசன் ‘தனிமை என்னும்’ (இணை பாடகி அமிர்தா சுசாந்திகா மற்றும் பாடல் வரிகள் ஹலிதா ஷமீம்) என்ற பாடலைப் பாடி, இசையமைத்துள்ளார், “தி மாஸ்க்” -இற்காக கேபர் வாசுகி ‘முகமூடி’ என்ற பாடலை எழுதி, இசையமைத்துள்ளார். மௌனமே பார்வை-க்காக “விசிலர்” (பாடல் வரிகள் சபரிவாசன் சண்முகம்) என்ற பாடலை கார்த்திகேய மூர்த்தி பாடி இசை அமைத்துள்ளார்.
பாடல் திரட்டு மற்றும் கருப்பொருள் சார்ந்த பாடலுடன் தனக்குள்ள தொடர்பு குறித்துப் பேசிய ஜீ.வி.பிரகாஷ் குமார், “நாம் அனைவருமே நம்மில் பல கதைகளைக் கொண்டவர்கள், அவற்றில் சிலவற்றை இசையால் இழைப்பதை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. அல்லலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற மனித உணர்வுகளைத் தட்டி எழுப்பும் இந்தத் தொகுப்பின் இரண்டு பதிப்புகளிலும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இரண்டாம் பதிப்பில் உள்ள கதைகள், நம்பிக்கை மற்றும் மீட்டெழுச்சியின் உணர்வுப் பூர்வமான எண்ணங்கள், இசையில் சரியான பதங்களை வெளிக்கொணர எனக்கு உந்துதலாக இருந்தது. ‘புத்தம் புதுக் காலை விடியாதா’ பாடலை நான் உருவாக்கி ரசித்த அளவுக்கு பார்வையாளர்களும் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். Amazon Original தொடரின் இசை, தற்சமயம் மிகவும் தேவையான நேர்மறையான எண்ணங்களை வெளிக் கொணரும் என நம்புகிறேன்” என்றார்.
முககவசம் முத்தம் பாடலின் பாடகரும், இசையமைப்பாளருமான சீன் ரோல்டன் பேசுகையில், ஒரு திரைப்படமாக “முககவச முத்தம்” உங்கள் இதயத்தை உருக வைக்கும். தொற்றுநோய் நம் அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மில் பெரும்பாலோரை எவ்வாறு உடல் ரீதியாக தூர விலக்கியுள்ளது என்பதை நாம் கண்டுள்ளோம். நம்பிக்கையின் கருப்பொருளை மனதில் வைத்து, தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையும், ஒரு சிறந்த வருங்காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துவதற்காக நாங்கள் ‘கிட்ட வருது’ பாடலை உருவாக்கினோம். பாலாஜி மோகனின் பாடல் வரிகளுடன் வரும் இந்த கவர்ச்சியான டியூன், சரியான செய்தியைப் பரப்பும் வல்லமை கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். ‘கிட்ட வருது’ பாடலைக் கேட்கவும், புத்தம் புது காலை விடியாதா… இசைத் தொகுப்பை Prime Video-இல் காணவும் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது.” என்றார்.
லோனர்ஸ்-க்காக ‘தனிமை என்னும்’ பாடலின் பாடகரும் இசையமைப்பாளருமான கெளதம் வாசு வெங்கடேசன் கூறுகையில், “கதையின் தற்போதைய மற்றும் தனித்துவமான கருத்தோடு இப்படத்தை இணைக்கும் முயற்சியின் காரணமாக இந்தப் படத்திற்கு இசையமைப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு மெய்நிகர் திருமணத்தில் இரண்டு நபர்கள் சந்திப்பது என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்படாத ஒன்று. இந்த தனித்துவமான காட்சியை இசையின் மூலம் பிரதிபலிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தம் புதுக் காலை விடியாதாவில் லோனர்ஸ்களை அனைவரும் காண்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்… மேலும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் எங்கள் இசையை எடுத்துச் சென்ற Prime Video-க்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மௌனமே பார்வையாய்-இன் ‘விசிலர்’ பாடலின் பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திகேய மூர்த்தி பேசுகையில், “மௌனமே பார்வையாய்-இன் கதையை விவரிப்பது சுலபமல்ல. பெரும்பாலான தம்பதிகள் தங்கள் உறவின் ஒரு கட்டத்தில் அனுபவிக்கும் ஒரு கதையை இது சொல்கிறது மற்றும் எளிமையான ஆனால் சொல்லப்படாத உணர்வுகளை எடுத்துக்காட்டுகிறது. இதை எனது ‘விசிலர்’ பாடலின் மூலம் துல்லியமாக வெளிப்படுத்த முயற்சித்தேன், பார்வையாளர்களுக்கு இது பிடிக்கும் என்று நம்புகிறேன். புத்தம் புது காலை விடியாதா… Prime Video-இல் வெளியிடப்படுவதையும், இப்பாடல் மற்றும் ஒட்டுமொத்தத் தொகுப்பிற்கான பார்வையாளர்களின் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
‘நிழல் தரும் இதம்’ சார்ந்து ‘நிழல்’ பாடலின் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப் குமார் பேசுகையில், “நிழல் தரும் இதம், ஒரு மகள் மற்றும் பிரிந்து சென்ற தந்தையை உள்ளடக்கிய இழப்பு மற்றும் ஏக்கத்தின் அழகான கதை. ‘நிழல்’ என்ற எனது பாடலின் மூலம், அந்த பெண்ணின் உணர்வுப்பூர்வமான மனநிலையை பார்வையாளர்கள் உணர்ந்து, அவளது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலத்தை அவள் கடந்து செல்லும்போது அவளது மன குழப்பங்களுடன் அவர்கள் தொடர்புகொள்வதே இதன் நோக்கமாகும். Prime Video-இல், புத்தம் புதுக் காலை விடியாதா பாடலை அனைவரும் கேட்டு ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
தி மாஸ்க்கில் ‘முகமூடி’ பாடகர், இசையமைப்பாளர் மற்றும் எழுத்தாளரான கேபர் வாசுகி கூறுகையில், “சுய ஏற்பு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. அது முடிந்தால், நம் அன்புக்குரியவர்களின், குறிப்பாக நம் பெற்றோரின் ஏற்பை நாம் எதிர்பார்க்கிறோம். தி மாஸ்க்கில், கதாநாயகன் அவனது பெற்றோர், அவனது நண்பர்கள் மற்றும் அவனுடன் இருக்கும் உறவு தொடர்புபடுத்தக்கூடியது மற்றும் ஆழமானது. பாடலின் வரிகள் அவரது வாழ்க்கையின் தருணங்களை பிரதிபலிக்கிறது, அது அவரது சுய ஏற்புக்கு வழிவகுக்கும். அவர் உணரும் சுதந்திரம் இசை அமைப்பில் பிரதிபலிக்கிறது. Amazon Prime Video -இல் வெளிவரும், இசை மற்றும் இசைத்தொகுப்புக்கு பார்வையாளர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.” என்றார்.
புத்தம் புது காலை விடியாதா… ஒலிப்பதிவு வார்னர் மியூசிக் இந்தியாவால் வெளியிடப்பட்டது மற்றும் உலகளவில் முக்கிய இசை ஸ்ட்ரீமிங் சேவைகளில் கிடைக்கிறது.
சுருக்கம்:
புத்தம் புதுக் காலை விடியாதா-இன் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக இருந்தாலும், நம்பிக்கையின் தனிப்பட்ட புரிதல் மற்றும் மனித உணர்வின் புதிய தொடக்கங்கள் என்ற கருப்பொருளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் ஆகியவை பற்றிச் சொல்லும் இரண்டாவது கோவிட்-19 லாக்டவுன் காலகட்டக் கதைகள்.
ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.
வெங்கட்பிரபுவும், விஜய் சேதுபதியும் இணைந்து வெளியிட்ட ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ பட ஃபர்ஸ்ட் லுக் சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’. இதில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, படத்தை கே. எல். பிரவீன் தொகுத்திருக்கிறார். கே. கே. ஆர் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,” தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ உருவாகி இருக்கிறது.” என்றார்.
சமுத்திரக்கனி – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ சமுத்திரக்கனியின் பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை கவர்ந்திருப்பதால் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் படம். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான். இந்தியாவிலேயே முதல் கடல் கன்னி படமாக இது இருக்கும். இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் DINESH SELVARAJ டைரக்ட் செய்கிறார். இவர், ‘துப்பாக்கிமுனை’ என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார்.
சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட்டி போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 சம்மர் வெளியீடு.
அதன் பிறகு கடல்கன்னிக்கான அனிமேஷன் வேலை ஆரம்பமாகிறது. படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை லார்வென் LORVEN என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது.
ஒளிப்பதிவு:பால சுப்ரமணியெம், கலை:கிராஃபோர்ட் CRAWFORD
PRO: ஜான்சன்,
தயாரிப்பு : ஃபோக்கஸ் பிலிம்ஸ். FOCUS FILMS
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ”
சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். இதுவே தனது போக்கு என இருப்பவன்.
அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதுண்டு.
அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
போலீஸ் பிடியில் அந்தப்புகார் செல்கிறது. போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.
நந்தினியையும் அப்படித்தான் காதலிக்கிறான். அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள்.இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள். மலை உச்சியில் கூடாரம் அடித்துத் தங்குகிறார்கள்.
இந்த உலகத்திலேயே தான் தான் மகிழ்ச்சியானவள் என்று காதல் பரவசத்தில் நந்தினி நினைக்கிறாள். அவர்கள் வந்த ஜீப் பழுதாகிவிட்டதால் கூடாரத்தில் அவளைத் தனியாக இருக்கச் சொல்லிவிட்டு அரவிந்த் மெக்கானிக் கடை தேடிச் செல்கிறான்.
அப்போது வரும் ஒரு தொலைபேசி அழைப்பால் அவனது குட்டு வெளிப்படுகிறது.அரவிந்தின் அந்தரங்கம் அவளுக்குத் தெரிகிறது.அவனது கோரமுகத்தை அறிந்த அவள், அதிர்கிறாள். காதலன் என்று நம்பி மோசம் போய் விட்டோமே எனப் பதறுகிறாள்.
திரும்பி வந்த அவனிடம் சண்டை போடுகிறாள். பல பெண்களுக்குத் துரோகம் செய்தவன் என்று சீறுகிறாள். வாக்குவாதம் நடக்கிறது. ஆனால் அவனோ இதுவரை கெட்டவனாக இருந்து தவறுகளைச் செய்தது உண்மைதான் என்றும் ஆனால் இனிமேல் திருந்தி விட்டதாகவும் கூறுகிறான். நந்தினியிடம் தான் வைத்தது உண்மையான காதல்தான் என்றும் இனி நல்லவனாக இருப்பேன் என்று கூறிச் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் மன்றாடுகிறான்.
அவளை உண்மையிலேயே காதலிப்பதாகவும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் எவ்வாவோ கெஞ்சுகிறான்.
ஆனால் அவளோ அவனை வெறுக்கிறாள். அந்தச் சமயத்தில் அவனைத்தேடி போலீஸ் கொடைக்கானல் வந்து விடுகிறது.
அவர்களுக்குள் மோதல் நடக்கிறது .முடிவு என்ன என்பதுதான் மீதிக்கதை.
சின்னத்திரையில் பரவலாக அறியப்பட்ட நடிகரான ராஜ்கமல் தான் படத்தின் கதாநாயகன் . எதிர்மறை நிழல் படிந்த கதாபாத்திரம்தான். அவரும் தன்னால் முடிந்த அளவுக்குப் புகுந்து விளையாடி இருக்கிறார் .செல்போன் மூலம் சிக்கிக்கொள்ளும் பெண்களிடமும் காதல் வசனம் பேசிக் கவரும் போதும், தன் வலையில் சிக்கியவர்களிடம்
மிரட்டும் போதும் நல்ல, கெட்ட என இரு முகங்களைக் காட்டியிருக்கிறார். நாயகியாக நடித்த ஸ்வேதா பண்டிட் சுமார் முகம் என்றாலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.ஒரு காதலியாகக் கொஞ்சும் போதும் துரோகம் அறிந்து குமுறும்போதும் போதும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆபாசப்படம் எடுக்கும் நாசகாரக் கும்பல் பின்னலில் உள்ளவனாக வரும் ஆப்பிரிக்க நடிகரும் நன்றாகவே வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
வை- பை மூலம் செல்போன்களின் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டி , தொழில்நுட்ப வசதிகள் எந்தளவுக்கு ஆபத்தானது குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்று எச்சரித்து இருக்கிறது படம்.
நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் சில அசட்டுத்தனமான காட்சிகள் உள்ளன. பாடல் காட்சிகளில் கொடைக்கானல் மலைப்பகுதியைச் சுற்றி அலைந்து திரிந்து படம்பிடித்துள்ளார்கள். அப்போது சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் விவேக் சக்ரவர்த்தியின் இசையும் கைகோர்த்து செய்துள்ள பயணம் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் காதலியிடம் நாயகன் மன்றாடுவது நாடகத்தனமாக உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி கதை சொல்ல வந்த படம், உருவாக்கத்தில் பழைய முறையில் உருவாகியுள்ளது.தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சுமாரான காட்சிகளே உள்ளன.
‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ என்றுதான் படத்தின் கதை சொல்கிறது.தணிக்கை கெடுபிடிகளுக்காகத்தான் பெண் ‘பென் ‘ஆக மாறியுள்ளது.
செல்போன்களைக் கொண்டு பெண்கள் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள்? ஒரு சாதாரண செல்போன் மூலம் பெண்கள் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்கிற நல்லதொரு விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வரதராஜ்.
இந்தக் கருத்தைச் சொன்ன நோக்கத்திற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.அவ்வகையில் படம் அவருக்கு வெற்றி எனலாம். ஆனால் சினிமா முன்னேறியுள்ள வளர்ச்சியின் அளவுக்குக் காட்சிகளில் தரத்தின் உயரம் இல்லை.
சில குறைகளுக்குப் பட்ஜெட் காரணமாக இருக்கலாம்.
மொத்தத்தில் இந்தப் படம் ஜனதா சாப்பாடு.
தன்னால் முடிந்த உயரத்துக்கு பூப்பறித்துள்ளார் இயக்குநர் வரதராஜ்.
பட்ஜெட் படமாக இருந்தாலும் பெண்கள் மேல் அக்கறை கொண்டு ஒரு விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்லியிருப்பதற்காக, குறைகளைப் புறந்தள்ளி விட்டு இயக்குநரைப் பாராட்டலாம்.
19 வது சென்னை திரைப்படவிழாவின் விருதுகள் இன்று வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட படங்களில் மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு வசந்த் சாய் இயக்கத்தில் ” சிவரஞ்சனியும் சில பெண்களும்” படத்திற்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டது.
பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் “சேத்துமான் ” படத்திற்கும்,
கணேஷ் விநாயக் இயக்கத்தில் “தேன்” படத்திற்கும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் “சேத்துமான்” திரைப்படத்தை தயாரித்த பா.இரஞ்சித் க்கு வாழ்த்துக்கள்.
மராட்டிய படமான
‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை சேத்துமான் படமும் கொடுத்தது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரு மகிழ்ச்சி.
எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது.
என பேசினார்.
‘அகண்டா’ என்ற தெலுங்கு படம். நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் இது எனக்கு மூன்றாவது படம். முதல் படம் ‘லட்சுமி நரசிம்மன்’. இரண்டாவது படம் ‘சிம்ஹா’. மூன்றாவது படம் ‘அகண்டா’. மூன்று படங்களுமே வெற்றி படங்கள் தான். அதிலும் சமீபத்தில் ‘அகண்டா’ மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் போயபதி ஶ்ரீனு தான் எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்தார். இப்படத்தில் ஆக்க்ஷன் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆக்ஷன் காட்சி மட்டுமே 85நாள்கள் படமாக்கப்பட்டது. இதற்கு எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது எனது இரு மகன்கள் கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமார் தான். ஆக்க்ஷனுக்காகவே இப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.
இதுவரை நான் சண்டை இயக்குனராக 300 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு முதலான மொழிகளில் சண்டை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன்.
இத்தனை படங்கள் பணியாற்றியும், இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய பெயர் கிடைத்ததற்கு காரணம் என்னுடைய மகன்கள், டைரக்டர் போயபதி ஸ்ரீனு, மற்றும் நான் சொன்னதை விட அசத்தலாக நடித்த நடிகர் பாலகிருஷ்ணா சார் தான்.
இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் இரண்டாவதாக வரும் அகோராவின் கதாபாத்திரம் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரையிலான சண்டை காட்சிகளை இயக்கியது சவாலாக இருந்தது.
பிலிம் முதல் டிஜிட்டல் காலமான இதுவரை ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு முன்பு கதை கேட்பது வழக்கம், ஏனெனில் அந்த கதைக்கு நாம் சண்டை காட்சியை இயக்கினால் அதில் புதிதாக என்ன செய்யமுடியும், தற்போதைய ட்ரெண்ட் என்ன, அதில் எனக்கு எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்பதை சிந்தித்து பணியாற்றுவேன்.
அது போல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த அனைத்து படங்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் கதைக்கு ஒத்துப்போகும் படியான சண்டைக் காட்சியையும், மாஸுடன் கிளாஸையும் இணைக்கும் வகையில் இயக்கியுள்ளேன்.
இந்த படத்தில் ஆக்க்ஷன் ஹிட் அடித்ததன் காரணம், டைரக்டர். அவர் சொன்ன கதை, மற்றும் இதை எப்படி எடுக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு நான் இயக்கியஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த 4 படங்கள், ‘சேது,’ ‘நந்தா’, ‘பிதாமகன்’ மற்றும் ‘நான் கடவுள்’. வேறுபட்ட மொழிகளில் இயக்குவதற்கு ஏற்ற மனநிலை மற்றும் சினிமா மீதான புரிதல் வேண்டும்.
இன்று திரையுலகில் பல பிரபலங்கள் என்னை அழைத்து இந்திய திரையுலகில் இது போன்ற சண்டை காட்சியை யாரும் கண்டதில்லை, சிறந்த ஆக்க்ஷன் என பாராட்டி வருகின்றனர்.
என்னுடைய சினிமா வாழ்க்கையில் மட்டுமில்லை நடிகர் பாலகிருஷ்ணா அவர்களுக்கும் ‘அகண்டா ‘திரைப்படம் ஒரு அடையாளம் என
பல்வேறு நாடுகளில் இருந்து பாராட்டுக்கள் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நடிகர் பாலகிருஷ்ணா பயம் அறியாத ஒரு ஆக்க்ஷன் ஹீரோ. ஒரு சில காரணங்களால் அவருடன் அடிக்கடி இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இதில் அவர் நடிக்கும் அகோரா கதாபாத்திரம் ஒரு வலுவான பாத்திரம். இதுவரை அவர் செய்யாத அளவிற்கு புதுமையாக இருக்கவேண்டும் என்பதற்கு மிகவும் கடினமாக உழைத்தோம். ஒவ்வொரு சண்டைப் காட்சி எடுப்பதற்கு, குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சி செய்வார் நடிகர் பாலகிருஷ்ணா.
அவர் பயிற்சியிலும் ஒத்திகையிலும் நானும் என் மகன் கெவின் சொன்னதை விட, நடிக்கும் போது 200 மடங்கு அவரின் நடிப்பை வெளிப்படுத்துவார்.
மற்ற படங்களில், நடிகர்கள் சண்டையிடும் போது கையில் கிடைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி சண்டையிடுவர். பின்னர் அதை தூக்கி வீசிவிடுவது வழக்கம். ஆனால், இதில் நடிகர் பாலகிருஷ்ணா கையில் எடுப்பது சூலம் என்பதால் அவர் கையில் எடுத்து அந்த காட்சி முடியம் வரை கையில் இருந்து விழுந்து விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.
சினிமாவில் நிறைய படங்களில் சூலத்தை பயன்படுத்தியிருந்தாலும் இந்த அகோரா கதாபாத்திரம் கையில் சூலத்தை எடுத்தால் அடுத்த 10 வருடத்திற்கு மக்கள் மத்தியிலும் திரையுலகிலும் இதை பற்றி தான் பேச்சு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து தான் எடுத்தோம்.
நீருக்கு அடியில் வரும் சண்டைக் காட்சிகளும், அதில் நடித்தது பாலகிருஷ்ணா என்பதால் தான் அந்த இடத்தில எடுபட்டது.
நடிகர் பாலகிருஷ்ணா சொன்னதை செய்யும் நடிகர்.
பெரும்பாலும் ஆலோசனை வழங்க மாட்டார். அதே நேரம் அவர் ஆலோசனை கொடுக்க இடம் தராத வகையில் நான் காட்சிகளை கூறுவேன்.
கிளைமாக்ஸ் சண்டையின் போது நடிகர் பாலகிருஷ்ணா அவர்களுக்கு அடிபட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், ரத்தத்தை துடைத்துவிட்டு அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார்.
சிறு வயதில் இருந்தே நான் எந்த படத்திற்கு வேலை செய்ய சென்றாலும் இறுதி 3 நாட்கள் என் மனைவியும் என் இரு மகன்களும் உடன் இருப்பார்கள். அது முதலே அவர்களுக்கு ஆர்வம் வந்தது. அதனால் நான் கஷ்டப்பட்டு வந்தது போல் இவர்களும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக நான் இவர்களை கராத்தே பயிற்சிக்கு அனுப்பினேன். அவர்கள் அதில் தங்கம் வென்றனர். உலக கராத்தே சாம்பியன்ஷிப் வென்றுள்ளனர். இவர்களுடைய கராத்தே ஐடியா தான் அகண்டா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளில் சண்டை காட்சிகள் இயக்கியுள்ளனர். ஆனால் அகண்டா முழுமையாக இவர்களின் சிந்தனை மட்டுமே. அதை இயக்கி வெற்றியடைய வைத்தது மட்டும் தான் என் பங்கு.
என் மகன்கள் இருவரும் என்னை விட புதிய சிந்தனை உடையவர்கள்.
சினிமாவில் நான் நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு தான் நுழைந்தேன். அதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கிடைத்ததை செய்வோம் என்று சண்டை இயக்குனராக பயணத்தை தொடங்கினேன். அகண்டா படத்தில் வரும் சண்டை அனைத்தும் உணர்ச்சிகரமாக இருக்கும், அதனால் நான் சண்டை கற்று தரும் பொழுதே நடிகர் பாலகிருஷ்ணா அவர்களுக்கு ஒரு கதாநாயகனாக மாறி தான் கற்று தந்தேன்.
அதே போல் என் மகன்களும் அந்த உணர்ச்சியை புரிந்து கொண்டதன் காரணத்தால் தான் படம் ஒரு உணர்வுள்ள படமாக நகர்ந்தது.
இந்த படத்திற்காக நான் ஒப்பந்தம் செய்த 3 படங்களை செய்ய முடியாமல் போனது. இந்த படத்தில் 85 நாட்கள் மொத்தம் பணிபுரிந்தோம்.
எனக்கு தெரிந்து இந்தியாவில் சிறுவயது சண்டை இயக்குனர்கள் என் மகன்கள் தான்.
அகண்டா தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி எதைப்பற்றியும் யோசிக்காமல் போதிய வசதிகளையும் தேவைகளையும் செய்து கொடுத்தார். சண்டை காட்சிகளுக்கு மட்டும் கோடி கணக்கில் செலவு செய்தார். கிளைமாக்ஸ் சண்டையில் 150 ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்களை பயன்படுத்துவதற்கும் அவர் ஏதும் சொல்லவில்லை. அவர் கேட்டது ‘மாஸ்டர் ஃபைட் அனைத்தும் சூப்பரா வரணும்’ என்பது மட்டும் தான்.
அவர் கேட்டது போல் நாங்களும் சிறப்பாக செய்திருக்கிறோம் என்று பாராட்டி தெரிவித்தார்.
கெவின் இந்த படம் குறித்து பேசியபோது,
வழக்கமான ஒரு சண்டை இயக்குனரால் அகண்டா படத்தை இயக்க முடியாது. இந்த படத்தை இயக்க நடிகர் பாலகிருஷ்ணா ரசிகனாக இருந்தால் மட்டும் முடியும், நான் அவருடைய ரசிகன் என்பதால் தான் இது இவ்வளவு சிறப்பாக இயக்க முடிந்தது.
சண்டை காட்சிகள் அனைத்தும் ஒரு விதமான காரணங்களை கொண்டு தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்த படத்தில் அகோரா சண்டையிடும் போது ஒருவரை அடித்த பிறகு அவரை கண்டுகொள்ள மாட்டார். இயல்பான ஒரு கதாநாயகன் தான் அடித்தவுடன் அவர் மீது கவனம் செலுத்துவர் என்ற ஒரு புரிதல் உடன் இயக்கினோம் .
நானும் சரி ஸ்டிவனும் சரி சாப்பிடும் நேரம், வேலை செய்யும் நேரம் போன்று எந்த நேரமாக இருந்தாலும் அப்பாவுடன் தான் இருப்போம்.
நான் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். கல்லூரி படிப்பு நண்பன் படத்தில் வருவது போல் இருக்கும் என்று நினைத்து சென்றேன். அது அப்படி இல்லை,3 மாத (VISCOM)கல்லூரி படிப்பில் ஆசிரியர் கற்றுக்கொடுத்த அனைத்தும் தவறாக இருந்தது, அதற்கு முன்பே அப்பா சினிமாவை பற்றி நன்கு கற்றுக் கொடுத்துவிட்டார்.
அதனால் அப்பாவுடனே 18 வயதிலிருந்தே பணியாற்றி வருகிறேன்.
நடிகர் பாலகிருஷ்ணா வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி மிகவும் மூத்தவர். ஆனால் அவரின் செயல்கள் அவ்வாறு இருக்காது. நான் செய்வதை விட பல மடங்கு அதிகம் செய்வார். அவரை பார்க்கும்போது எனக்கு வயதாகிவிட்டது போல் தோன்றும்.
ஒரு சில நேரங்களில் அவருக்கு அடிபட்டால் கூட அதை அப்பாவிடம் சொல்ல கூடாது என்று கூறிவிடுவார். ஒரு அறிமுக நடிகர் போல அவருக்கான வேலையை மட்டும் தெளிவாக செய்வார்.
நான் செய்த வேலைக்கு அப்பா எனக்கு சம்பளம் தரவில்லை அதற்கு மாறாக பாசத்தை கொடுக்கிறார். எனக்கான அடையாளத்தை கொடுத்திருக்கிறார்.
மற்ற பெற்றோர்கள் அனைவரும் தன் பிள்ளைகளை, நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்க்கையை கற்று தருவர். ஆனால் என் அப்பா நான் எதை விரும்புகிறேனோ அதை அடையாளம் காட்டி அதை நோக்கிய பாதையில் என்னை வழி நடத்துகிறார். அது தான் என்னை வாழ்க்கையில் வெற்றி அடைய வைக்கப்போகிறது.
பொதுவாக அம்மாக்கள் அனைவரும் தன் பிள்ளைகளை அப்பாவின் தொழிலுக்கு அனுப்பமாட்டார்கள். ஆனால் என் அம்மா தான் என்னை முதலில் ஸ்டண்ட் யூனியனில் சேர சொன்னார். எனது அம்மாவிற்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் கராத்தே நன்றாக தெரியும் என்பதும் இந்த முடிவிற்கு காரணம்.
இவ்வாறு கெவின் குமார் பேசினார்.
ஸ்டீவன் குமார் படத்தை பற்றி பேசியபோது,
முதலில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அகண்டா வாய்ப்பு கொடுத்த இயக்குனர் போயபதி ஸ்ரீனு அவர்களுக்கு நன்றி. என் அப்பா அவர்களுக்கும் நன்றி. அவரை பின்பற்றி தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
அகண்டா எனக்கு 15 படங்கள் பணியாற்றிய அனுபவத்தை கொடுத்தது. நடிகர் பாலகிருஷ்ணா பற்றியும், இயக்குனர் போயபதி ஸ்ரீனு உடன் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சுமார் ஒரு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இரவு 2 மணிக்கு நானும் என் சகோதரனும் பேசிக்கொண்டு இருந்தோம். அதற்கு அடுத்து சில மாதத்தில் அப்பாவிற்கு போயபதி ஸ்ரீனு அழைப்பு விடுத்து அகண்டா படத்திற்கு நீங்கள் சண்டை இயக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது தான் நாம் ஒரு விஷயம் குறித்து மனப்பூர்வமான எண்ணங்களை கொண்டால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது புரிந்தது.
படம் வெளியான பிறகு நாங்கள் ஒரு திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்தோம், 1100 பேர் மத்தியில் ரசிகர்களின் சத்தத்துடன் பார்த்த உணர்வு வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.
படம் பார்த்து விட்டு வெளியில் வரும் போது ரசிகர் ஒருவர் அப்பாவை பார்த்து நீங்கள் ஒரு ‘லெஜெண்ட்’ என்று கூறியது மிகவும் பெருமையாக இருந்தது.
கடந்த 21 ஆண்டுகளாக ஜெயா டிவி வெற்றிகரமாக தயாரித்து வரும் நிகழ்ச்சி “மார்கழி உத்சவம்” .
இம்முறையும் 22 ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா சிறப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது .தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை தினமும் மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .
இந்த நிகழ்ச்சியின் தனி சிறப்பு வழக்கமான கச்சேரியாக இல்லாமல் ஒவ்வொரு கச்சேரியும் ஒரு தீம் பேஸ்டாக (Theme based ) இருக்கும். அதாவது ஒவ்வொரு கச்சேரியும் ஒரு இசை மேதையின் பாடல்கள் (பாபநாசம் சிவன் )அல்லது ஒரு கடவுளைப் பற்றியே அமைந்திருக்கும். உதாரணத்துக்கு (“வா வேலவா” ) ஜெயா டிவியின் இம்மாதிரியான கச்சேரிகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது .
பாடகிகள் “பத்மபூஷண் திருமதி சுதா ரகுநாதன்” மற்றும் திருமதி ‘மஹதி’ – வாய்ப்பாட்டு
திரு.லால்குடி கிருஷ்ணன் மற்றும் திருமதி லால்குடி விஜயலட்சுமி- வயலின்
“கலைமாமணி ராஜேஷ் வைத்யா”- வீணை
“கலைமாமணி விசாகா ஹரி” – சங்கீத உபன்யாசம்
திருமதி ஜே.பி கீர்த்தனா- வாய்ப்பாட்டு ,போன்ற பல கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.
ஜெயா டிவியில் தினமும் மாலை 5:30 மணிக்கும் இதன் மறு ஒளிபரப்பு மறுநாள் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பாடகி திருமதி, சுசித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .
கலைஞர் தொலைக்காட்சியில் தை திருநாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி தை 1 பொங்கல் தினத்தன்று சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த காமெடியும், திகிலும் நிறைந்த புத்தம் புதிய திரைப்படம் “அரண்மனை 3” ஒளிபரப்பாக இருக்கிறது.
அதேபோல், தை 2-ஆம் நாள் மாட்டுப்பொங்கலன்று, ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட படமாக 2021-ஆம் ஆண்டின் ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த “ஜெய் பீம்” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
தை 3-ஆம் நாள் காணும் பொங்கலன்று, பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கன், துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலரது நடிப்பில் குத்துச்சண்டை பின்னணியில் உருவாகிய “சார்பட்டா பரம்பரை” அதிரடி திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.அத்துடன் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி உங்களை மகிழ்விக்க இருக்கிறது.
ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது “கேள்விகள் ஆயிரம்” விவாத நிகழ்ச்சி
அரசியல் களம் எப்போதுமே பரபரப்பிற்கு பஞ்சமில்லாதது. தமிழக அரசியலின் உச்சகட்ட பரபரப்புகளை உள்வாங்கி, துல்லியமான கேள்விகளுடன், துடிப்பான விவாதங்களுடன் அலசுகிறது இந்நிகழ்ச்சி.
இதில் அரசியல், பொருளாதாரம், அன்றைய தினத்தின் பரபரப்பான நிகழ்வுகள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
தலைமை செய்தி ஆசிரியரின் மேற்பார்வையில் அன்றைய தினத்தின் சரியான தலைப்பை தேர்ந்தெடுத்து, அதன் பல்வேறு பரிணாமங்களை ஆராய்ந்து விவாதம் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் கொடுக்கிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளர் பெருமாள்மணி. நிகழ்ச்சியை பிறழாமல் நெறிப்படுத்தி எடுத்துச் செல்கிறது நீண்ட நெடிய ஊடக அனுபவம் கொண்ட நெறியாளர் குழு.
மக்களின் குரல்களையும், விமர்சனங்களையும் கேள்விகளாக்கி அரசியல்வாதிகளின் முன் தர்க்கமான வாதங்களை வைத்து நிகழ்ச்சியை பரபரப்புடன் நகர்த்துகின்றனர் நெறியாளர்கள் வெங்கடேஷ், சண்முகவேல் மற்றும் சுபியான்.