Tuesday, June 17, 2025
- Advertisement -
Home Blog Page 3

Deepa Balu Wins Hearts in “Heartbeat” – The Doctor Who Plays a doctor

0

Thanjavur district in Tamil Nadu’s artistically rich delta belt, has long been known for nurturing exceptional talent in the arts and cinema. This region, steeped in culture and creativity, has consistently produced some of Tamil cinema’s most iconic talents. Now, it brings forth yet another promising artist – Deepa Balu from Pattukottai in Thanjavur district, with her roots firmly planted in this vibrant cultural landscape, expectations run high, and she rises to the occasion with her standout performance in the Hotstar series Heartbeat.

She first caught the public’s eye with a charming YouTube series titled Theanmuttai, released by the channel Naakout while she was still in college. The series gained popularity during the COVID-19 lockdown, earning her a loyal fanbase and drawing the attention of filmmakers. Despite receiving several film offers, she patiently waited for the right opportunity.

Her big break came when executive producer Shyam from Hotstar approached her for Heartbeat. Deepa accepted the role without hesitation, as it resonated deeply with her. On her first day of shooting, she felt an uncanny comfort in front of the camera. Though confident, she initially wondered if she could truly deliver. Encouraged by praise from the cast and crew, she pushed herself to improve and poured her heart into the role.

With the release of Heartbeat Season 1, Deepa earned widespread recognition. Fans affectionately call her “Reena Dude” – a nickname inspired by her on-screen character. Her popularity soared to the point where she began to be recognized in public places. Deepa, who has studied MBBS and is a qualified doctor in real life, surprised many when, in one memorable incident at an airport, a person in distress needed medical attention. A bystander, having seen her in the show, approached her for help. When someone pointed out that she was just an actress, Deepa calmly responded, “I may play a doctor on screen, but I’m a real doctor off screen too,” and immediately provided first aid. This act earned her even more admiration—from fans and strangers alike—for seamlessly blending her reel-life role with her real-life calling.

Tamil cinema has increasingly embraced powerful and respectful roles for women. Inspired by leading actresses like Revathi, Nadia, Jyothika, and Sai Pallavi—who are known for choosing meaningful characters—Deepa Balu felt encouraged to take acting more seriously. Her commitment to portraying strong, rooted Tamil characters has already caught the attention of writers and directors seeking authentic performers. Deepa has expressed that when she receives such roles, she is ready to give her all and bring every character to life with sincerity and depth.

‘ஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்!

கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட்பீட்’ வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த ‘தேன்மிட்டாய்’ சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கதாபாத்திரத்தை அவரோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். முதல் நாள் மிகவும் நம்பிக்கையுடன் அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார். படக்குழு அவரது நடிப்பை பாராட்டி உத்வேகம் கொடுக்க அந்த கதாபாத்திரத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்து நடித்தார்.

தற்போது ‘ஹார்ட்பீட் சீசன்1’ வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருடைய ஆன்- ஸ்கிரீன் கதாபாத்திர பெயரான ‘ரீனா ட்யூட்’ என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர். பொது இடங்களிலும் அவரை அடையாளம் கண்டு வருகின்றனர். நிஜத்திலும் தீபா MBBS படித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல். ஒருமுறை விமானநிலையத்தில் மருத்துவ உதவி அவசரமாக தேவைப்பட்டபோது தீபாவை அடையாளம் கண்ட ரசிகர் ஒருவர் அவரை நாடியிருக்கிறார். அப்போது வேறொருவர் இவர் நடிகை மட்டுமே என்று சொல்ல அதற்கு தீபா, “நான் திரையில் மட்டும் டாக்டர் இல்லை. நிஜத்திலும் தான்” என்று பொறுமையுடன் எடுத்துக் கூறி, உடனே மருத்துவ முதலுதவியும் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில், நடிகைகள் ரேவதி, நதியா, ஜோதிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்கிறார் தீபா பாலு.

தீபாவின் வலுவான நடிப்பும் கதாபாத்திரங்கள் தேர்வும் பல இயக்குநர்களைக் கவர்ந்துள்ளது. தன் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரம் வரும்போது முழு அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சொல்கிறார்.

Actor Sunil Joins Vijay Milton’s Tamil-Telugu Bilingual Film – A Powerful Addition to a Stellar Cast

0

Rough Note Production is delighted to announce the inclusion of celebrated actor Sunil in its highly anticipated Tamil-Telugu bilingual film, helmed by acclaimed filmmaker and cinematographer Vijay Milton.

Renowned for his versatility across genres and industries, Sunil brings decades of experience and a magnetic screen presence to this ambitious project. Having carved a unique space in Telugu cinema through iconic comic and character roles in films like Maryada Ramanna, Andala Ramudu, and Pushpa, Sunil’s addition adds immense value and broadens the film’s cross-regional appeal.

In this film, Sunil is set to portray a character that blends his signature charm with surprising emotional depth. The role marks a refreshing shift in his career trajectory, offering audiences a side of the actor that’s intense, layered, and deeply engaging.

Speaking about Sunil’s casting, director Vijay Milton shared, “Sunil is not just a crowd favorite—he’s an actor of great depth and instinct. This character is unlike anything he’s played before. It’s raw, vulnerable, and powerfully human. I believe audiences will rediscover him in this film.”

The film, already creating a strong buzz, features an eclectic ensemble including Actor Aari in a never-before-seen cop avatar, Raj Tarun making his Tamil debut, Bharath in a pivotal role with emotional intensity, Paal Dabba stepping into the world of acting, and now Sunil, bringing unmatched pan-Indian resonance.

Staying true to Vijay Milton’s storytelling legacy—grounded, socially relevant, and emotionally driven—the film promises a gripping cinematic journey filled with unexpected turns and powerful performances.

The official title of the film will be unveiled on June 15th, followed by more exciting cast announcements. As this vibrant project unfolds, Rough Note Production invites audiences to stay tuned for a film that dares to blend mass appeal with meaningful content.

Stay connected—this journey is just getting started.

பிரமாண்ட நட்சத்திர பட்டியலின் சக்திவாய்ந்த சேர்க்கையில் – தற்போது நடிகர் சுனில், விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி படத்தில் இணைந்துள்ளார்.

புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில், பிரபல நடிகர் சுனில் இணைந்ததை ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் திரைப்படத் துறைகளிலும் தனது பலதரப்பட்ட திறமைகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் சுனில், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணி புரிந்த அனுபவத்தையும், மயக்கும் திரை ஆளுமையையும் இந்தத் திரைப்படத்தின் மூலம் கொண்டு வருகிறார். ‘மரியாதா ராமண்ணா’, ‘அந்தலா ரமுடு’, ‘புஷ்பா’ போன்ற திரைப்படங்களில் நினைவில் நிற்கும் நகைச்சுவை மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள சுனில், இந்த திரைப்படத்தின் மதிப்பை பெருக்குவதுடன், மற்ற மாநில ரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் உறுதி செய்கிறது.

இந்தத் திரைப்படத்தில், சுனில் தனது இயல்பான வசீகரத்தன்மையுடன், எதிர்பாராத உணர்ச்சிப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த வேடம், அவரது நடிப்பு பயணத்தில் ஒரு புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தி, ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஒரு தீவிரமான, பல பரிமாணங்கள் நிறைந்த, உணர்வுப்பூர்வமான சுனிலை காணும் வாய்ப்பை அளிக்கிறது.

சுனிலை இந்தக் கதைக்காக தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில், “சுனில் வெறுமனே ரசிகர்களின் விருப்பமான நடிகர் மட்டும் அல்ல—அவர் ஆழமும், நுண்ணுணர்வும் கொண்ட ஒரு சிறந்த நடிகர். இந்தக் கதாபாத்திரம், அவர் இதுவரை செய்த எந்த வேடத்தையும் போல் அல்ல. இது இயல்பு, எதிர்மறைத்தன்மை மற்றும் சக மனிதர்களுக்குள்ள குணத்தை கொண்ட ஒரு கதாபாத்திரம். இந்தப் படத்தில், ரசிகர்கள் அவரை வேறொரு புதிய வகையில் ரசிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

இந்தப் படம் ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகர் ஆரி முன்னெப்போதும் இல்லாத காவலர் தோற்றத்தில் வலம் வருகிறார்; ராஜ் தருண் இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்; பரத் உணர்ச்சி பொங்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; பால் டப்பா நடிப்புலகில் தனது முதல் படியை இந்தப் படத்தின் மூலம் எடுத்து வைக்கிறார் ; இப்போது பான் இந்தியா நடிகரான சுனில், இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.

விஜய் மில்டன் இயக்கும் படங்களின் வழக்கமான கதை சொல்லும் மரபினைத் தொடர்ந்து, சமூகத்திற்கு தேவையானதும், உணர்வுப்பூர்வமாக ஈர்க்கக்கூடியதுமான இந்த திரைப்படம், எதிர்பாராத திருப்பங்களும், மனதைக் கவரும் நடிப்புகளும் நிரம்பிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் பெயர் ஜூன் 15 அன்று வெளியிடப்படும், மேலும் பல்வேறு நடிகர்கள் குறித்த அறிவிப்புகளும் அதனைத் தொடர்ந்து வெளியாகும்என்பதை ரஃப் நோட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரியப்படுத்திக் கொள்கிறது. இந்த ஆரோக்கியமான படப்பணியின் பயணம் இனிதே ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது.

மேலும் அப்டேட்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அதர்வா – நெல்சன் வெங்கடேசன் கூட்டணியில் உருவாகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் கே. பாபு, ஹேமந்த் ஆகியோருடன் கவிஞர் வெண்ணிலாவின் வாரிசுகளும், மத்திய தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்த கவின்மொழி மற்றும் நிலா பாரதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பேசுகையில், ” வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்த பாடலில் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர், பாடகர், பாடகிக்கும், இசைக்கலைஞர்களுக்கும் நன்றி.‌ பாடகராக என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. ஏ ஆர் ரகுமான் சார் தான் என்னுடைய மானசீக குரு. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்தப் பாடலை கேட்டுவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அறிமுக இசையமைப்பாளர் சத்ய பிரகாஷ் பேசுகையில், ” சந்தோசமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்தப் பாடல் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. கே.எஸ் சித்ராம்மா இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் இந்த படத்தின் மிக முக்கியமான சூழலில் இடம் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் இது என்னுடைய பயணத்தின் தொடக்கம் தான். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அறிமுக இசையமைப்பாளர் பிரவீண் சைவி பேசுகையில், ” 14 வருடமாக சென்னையில் இருக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதற்கு நானும் சாட்சி. இதுவரைக்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அற்புதமான அனுபவம்.‌ இந்தப் படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். ” என்றார்.

அறிமுக இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் பேசுகையில், ‘ இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது போன்றதொரு வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அறிமுக இசையமைப்பாளர்களுடனும், ஜிப்ரான் போன்றவர்களுடனும் மேடையை பகிர்ந்து கொண்ட தருணம் தான் எனக்கு கிடைத்த கௌரவம் என நினைக்கிறேன்” என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ” பெரு மகிழ்ச்சியில் இருக்கிறேன்.‌ பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்புத் தம்பி மாரி செல்வராஜை இந்த மேடையில் பார்க்கிறேன்.

இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனை பற்றி தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையை பதிவு செய்வதில் தீவிரமானவர். அத்துடன் உலக திரைப்படங்களையும் தீவிரமாக பார்க்கக் கூடியவர். இத்தகைய அனுபவங்களில் ஊறி வெளியாகும் படைப்புதான் இது.

அவருடன் பாடல் எழுதும் போது பாடலுக்காக அவர் விவரிக்கும் சூழல் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்குள் இருக்கும். மனித உணர்வுகளை நுட்பமாக சொல்லக்கூடிய வகையில் தான் அவர் சூழலை விவரிப்பார். என்னை போல் எழுதக்கூடியவர்களுக்கு இது எளிதானது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய ஏனைய பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளராக அறிமுகமாகும் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உலகம் நமக்கு எதை கொடுத்தாலும் நாம் அதற்கு திருப்பி தர வேண்டியது அன்பை மட்டும் தான். இதைத்தான் இந்த படமும் பேசுகிறது” என்றார்.

பாடலாசிரியர் முத்தமிழ் பேசுகையில், ” 1980களில் வெளியான ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்ற படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவரும் இசை துறையில் சாதித்த ஜாம்பவான்கள். தற்போது பாடல்கள் மலிந்து வரும் தருணத்தில் ஐந்து இசையமைப்பாளர்களை ஒரு படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இயக்குநரும், தயாரிப்பாளரும் எடுத்த முடிவிற்கு பாராட்டுகிறேன். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் இசை துறையில் ஜாம்பவான்களாக மாற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த டி என் ஏ திரைப்படம் – ரசிகர்களின் டிஎன்ஏவுக்குள் சென்று உற்சாகத்தை உண்டாக்கட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், ” இது ஒரு நல்ல படம். அதர்வாவின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும்.

பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் அவர் ஒரு நேர்மையான இயக்குநர். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார். பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அழைத்து வாய்ப்பளிப்பார். இந்தத் திரைப்படம் ஜூன் இருபதாம் தேதியன்று வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வழங்குங்கள்” என்றார்.

பாடலாசிரியர் உமாதேவி பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். ஐந்து திறமையான இளம் இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநருக்கு நன்றியையும் , வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பர்கானா எனும் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருந்தேன்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம் பிடித்திருக்கும் பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவர்களாக எனக்குத் தெரிந்தார்கள். கவனிப்பாரற்று இருக்கும் பெண்களை தன்னுடைய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இடம்பெறச் செய்திருப்பார்.

‘டி என் ஏ’ வில் உள்ள திவ்யா கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைத்த அனுபவங்களை நினைவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கிறது.

அற்புதமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை மானசா சௌத்ரி பேசுகையில், ” டி என் ஏ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். நான் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் இது . இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய வேடமாக இருந்தாலும் அழுத்தமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என நம்புகிறேன் அதர்வாவுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.” என்றார்.

இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில், ” எனக்கு அடையாளம் கொடுத்த தயாரிப்பாளருக்கு வணக்கம். ஒவ்வொரு படமும் மக்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார். சினிமாவை மிகவும் நேசிப்பவர்.‌ எந்த படத்தைப் பற்றியும் அவரிடத்தில் ஒரு சரியான ஜட்ஜ்மெண்ட் இருக்கும். இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இயக்குநர் நெல்சன் அவருடைய எல்லா படங்களையும் நேர்த்தியாக சொல்லி இருப்பார். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், ” என் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம். இது என்னுடைய விழாவாக தான் பார்க்கிறேன்.

ரமேஷ் திலக் குறிப்பிட்டது போல் நெல்சன் வெற்றி பெற்றால் ஏராளமானவர்களுக்கு ஒரு தலைமுறைக்கான வாசல் திறந்து விட்டது போல் இருக்கும். மிக சாதாரண நிலையில் இருந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருப்பவர்.

சில நபர்கள் தான் ஏற்ற இறக்கங்களை கடந்து வாழ்க்கையில் சீரான ஒரு நிலையை பராமரிப்பார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் நெல்சன்.

இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நிச்சயமாக சொல்கிறேன்… நெல்சன் இயக்கிய படங்களில் வெகுஜன ஆதரவும், வியாபார ரீதியான பெரிய வெற்றியையும் பெறக்கூடிய முதன்மையான படமாக இது இருக்கும்.‌ இது சம்பிரதாயமான வார்த்தை இல்லை. நிச்சயம் இது நடக்கும்.

அதர்வாவிற்கும் இந்த படம் நிச்சயமாக நல்ல படமாக இருக்கும். அற்புதமாக நடித்திருக்கிறார்.‌
நிமிஷா இந்தியாவில் இருக்கக்கூடிய நல்ல நடிகைகளில் ஒருவர். மொழிகளைக் கடந்து ஏற்கனவே நம்மிடம் வந்திருப்பவர். இந்தப் படத்தில் ஸ்பெஷலாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார்- தயாரிப்பாளர் என்பதை கடந்து என்னுடைய நண்பர். நல்ல மனிதர் . நான் எப்போதும் ஆச்சரியமாக பார்க்கும் மனிதர். காலையில் 6:00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி வந்தவாசிக்கு 9 மணிக்கு சென்று விடுவார், பிறகு அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு கிளம்பி, 9 மணிக்கு சென்னைக்கு வந்து விடுவார்.‌ தொடர்ந்து உழைக்கும் அபாரமான உழைப்பாளி. இந்த உழைப்புதான் அவரை அரசியல் -சினிமா- தொழில் துறை – என அனைத்து துறைகளிலும் வெற்றியாளராக மாற்றி இருக்கிறது.‌

சினிமா மீது தீரா காதல் கொண்டவர். ஒரு காபி குடிப்பதற்குள் ஒரு கதையை சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர். அவர் இயக்குவதற்கு அவரிடமே நிறைய கதைகள் உள்ளது. அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நிறைய நல்ல படங்கள் கிடைக்கும்.‌ அந்த வகையில் டி என் ஏ படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும். வெற்றி விழாவில் சந்திப்போம்” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் நெல்சன் என்னை தொடர்பு கொண்ட போது அவரிடம் நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் என்று சொன்னேன். அவருடைய படங்களில் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் இயக்கிய மூன்று படங்களை விட இந்த டி என் ஏ சிறந்தது என்று சொல்வேன்.

அவருடைய பேச்சை நான் மிகவும் ரசிப்பேன். அவரால் பொலிட்டிக்கல் என்டர்டெய்னர் படத்தை இயக்க முடியும். அந்த அளவிற்கு அவரிடம் அரசியலைப் பற்றிய அறிவு இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. ” என்றார்.

நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், ” டி என் ஏ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. திவ்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறிது சவாலானதாக இருந்தது.

அதர்வா திறமையான சக நடிகர். ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு திரையில் மாயஜாலம் செய்திருக்கிறார்.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படம் ஜூன் இருபதாம் தேதி அன்று வெளியாகிறது . அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார் .

சிறப்பு விருந்தினர் கவின் மொழி பேசுகையில், ” அனைவருக்கும் வணக்கம் . எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாரின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கிறேன். பொதுவாக இது போன்ற இசை வெளியீட்டு விழாவில் திரை உலக பிரபலங்களை தான் விருந்தினர்களாக அழைப்பார்கள். முதன்முறையாக எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் சினிமாவை திரையில் தான் கண்டு ரசித்து இருக்கிறோம். அதை கடந்து இத்தனை நபர்கள் கடுமையாக உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள் என்பதனை பார்க்கும்போது பெரிய மேஜிக்காக இருக்கிறது.
ஒரு தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருப்பது போல் தான் இருக்கிறது.‌ இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை நன்றாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெறுவதற்கும் , படக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ”என்றார்.

சிறப்பு விருந்தினர் நிலா பாரதி பேசுகையில், ” இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியதற்காக தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு நன்றி.

அவர் அழைப்பு விடுத்த போது இந்த விழாவிற்கு செல்வது தொடர்புடையதாக இருக்குமா? என யோசித்தேன்.‌ நாள் இங்கு வந்த பிறகு ஒவ்வொருவரையும் சந்தித்த பிறகும் அவர்களுடைய பேச்சை கேட்ட பிறகும் நெருக்கமானதாக இருக்கிறது.

ஆனந்த விகடனில் வெளியான’ வட்டியும் முதலும்’, ‘மறக்கவே நினைக்கிறேன்’ போன்ற தொடர்களை வாசித்திருக்கிறேன். அதை எழுதிய ராஜு முருகனை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ மாரி செல்வராஜ், பாலாஜி சக்திவேல், நெல்சன் ஆகியோரை சந்திக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.‌

அண்மையில் ‘டப்பா கார்ட்டல் ‘ எனும் வெப்சீரிஸை பார்த்தேன். அதில் நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்திருந்தார்கள். அவர்களை இங்கு நேரில் பார்க்கிறேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

‘சூப்பர் சிங்கர்ஸ்’ நிகழ்ச்சிகள் பார்த்து ரசித்தவர்களை இங்கு இசையமைப்பாளராக பார்க்கிறேன். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக பெருமிதம் அடைகிறேன். டி என் ஏ திரைப்படம் வெற்றி பெறுவதற்கும், படக் குழுவினருக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.‌

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ” இந்தப் படத்தை நேற்று இரவு தான் என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம்.‌ திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு என் உதவியாளர் மிகவும் எனர்ஜியாக இருப்பார்கள். துருதுருவென்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள் என்று விளக்கினார். நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே படம் பார்க்கிறேன். ஆனால் நான் இங்கு மேடையில் வந்த பிறகு அவருடைய நடவடிக்கையை கவனித்தேன். அவருடைய நடவடிக்கையை பார்த்து தான் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்களோ..! என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் உற்சாகமாக இருக்கிறார்.

இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இயக்குநர் நெல்சனை மிகவும் பிடிக்கும் ஏனெனில் ஒரு நாள் கூத்து படத்தை பார்த்தேன்.

பொதுவாக சினிமாவை நாம் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது. யார் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாக நம்முடைய கற்பனைக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து அந்த கதைகளை திரையில் கொண்டு வருவது..
மற்றொரு வாய்ப்பு என்னவென்றால் எது மக்களுக்கு பிடிக்கிறது… எது வெற்றிகரமானதாக இருக்கிறது… எது நம்மை முன்னிலைப்படுத்தும்? எது நம்மை பிரபலமானவராக உயர்த்தும் என்பது.. என எண்ணி படத்தை இயக்குவது மற்றொரு வகை.

இதில் நெல்சன் இயக்கிய நான்கு படங்களையும் எடுத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர் கனமான கதைகளை தேர்வு செய்திருப்பார்.

ஒரு நாள் கூத்து படத்தின் கதையின் தொடக்கத்தையே மிகவும் முதிர்ச்சியாக காட்சிப்படுத்தி இருப்பார் அதை பார்த்து அப்போதே நான் வியந்து இருக்கிறேன்.‌

அவருடைய படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளார்ந்த வாழ்க்கை இருக்கும்.

எங்களுடைய தலைமுறையை சார்ந்த இயக்குநர்களில் அவர் தனித்து நிற்கிறார். அவருடைய படைப்புகளில் அவருடைய சமூக பொறுப்புணர்வு தெரிகிறது. சட்டென்று பெரும்பாலான மக்களுக்கு தென்படாத கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதை திரையில் கொண்டு வருகிறார்.

இந்தப் படத்தை பார்க்கும் போது ஓடும் ஆற்றில் ஒரு இலையை தூக்கி போட்டால் அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் செல்வது போல்.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் இது. இது போன்ற படத்தை வழங்குபவர் தான் நெல்சன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த படத்தை பார்த்த என்னுடைய உதவியாளர்களிடம் படம் எப்படி? என கேட்டபோது, அனைவரும் ஒரு நாவலை வாசித்த பிறகு இருக்கும் அமைதியும் , மௌனமும் தான் அவர்களின் எதிர்வினையாக இருந்தது.

இந்தப் படத்தை பார்க்கும் போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உண்மையை நேரில் பார்ப்பது போல் இருக்கும்.‌

நாம் படுத்து எழுந்து சென்ற இடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும், பில் கட்டுவதற்காக ஒரு கவுண்டரில் நின்று கொண்டிருப்போம். அந்த கவுண்டருக்குள் ஒரு கதை இருக்கும். அது நமக்குத் தெரியாது. நாம் ஒரு டாக்ஸிக்குள் பயணித்திருப்போம். அந்த டாக்ஸிக்குள் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கும். அது நமக்கு தெரியாது. இப்படி நாம் அங்கங்கே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே சென்றிருப்போம்.

இதுபோல் நாம் படுத்து எழுந்த .. தவித்த.. இடங்களில் மனிதநேயம் கொண்ட ஒரு கதை இருக்கும். அதை பிரதிபலிக்கிற படமாகத்தான் டி என் ஏ இருக்கிறது.‌

நாம் நம்பிக்கையுடன் பழகும் சமூகத்தில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு விசயம் நடந்தால் எப்படி இருக்கும்? என்ற விசயமும், மனிதத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்களும், மனிதத்தை மதிக்காதவர்களும் வாழும் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்பதையும், அதற்குள் நாம் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுக இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் அதர்வா பேசுகையில், ” இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி குறிப்பாக கவின்மொழி மற்றும் நிலா பாரதி ஆகிய இருவரும் வருகை தந்தது எங்களுக்கு பெருமை.

கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று.‌ இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜ் வேறு ஏதேனும் கதை இருந்தால்.. அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டி என் ஏ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் ஃபோனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன? என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன்.. அவர் இயக்கிய படங்களில் எமோஷனலை நிறுத்தி நிதானமாக சொல்லி இருப்பார். அதனால் அவர் என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலாக இருந்தேன்.‌

கதையை சொல்ல தொடங்கும் போது இந்த படத்தின் டைட்டில் டி என் ஏ என்றார்.‌ உடனே டி என் ஏ என்றால் ஜெனிடிக் தொடர்பான சயின்டிபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் டி என் ஏ என்றால் திவ்யா அண்ட் ஆனந்த் என சொன்னார்.

திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருந்தார். ஆனந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.

ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த படத்தில் நடிக்கும் போது எதையும் நினைக்காமல் திறந்த மனதுடன் சென்றேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை மேம்படுத்தினார்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்தில் நானும், நிமிஷாவும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தோம்.‌ அந்த காட்சி 15 வினாடிகள் தான் இருக்கும். 15 வினாடிகளில் அந்த காட்சிக்கான உரையாடல்கள் நிறைவடைந்து இருக்கும். அதன் பிறகும் நிமிஷா நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இணையாக நானும் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இது 40 விநாடிகள் வரை நீடித்தது.‌ அதன் பிறகு அந்தக் காட்சியை நாங்கள் பார்க்கும் போது அழகாக இருந்தது. நெல்சன் அந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார். அது முன்னோட்டத்திலும் இடம்பிடித்து இருக்கிறது. இரண்டு பேரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் காட்சி அது. சில படங்களில் தான் இது போன்று அமையும்.

இந்தப் படத்தின் இசை யாரென்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு நான் பண்பலை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அதனால் ஐந்து புதிய திறமையான இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு உடனடியாக ஏனைய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். இரண்டே மாதத்தில் படப்பிடிப்பு பணிகளை தொடங்கி விட்டோம். இதற்கு தயாரிப்பாளரும் முக்கியமான காரணம்.‌ சினிமா மீது அவருக்குள்ள காதலால் இது சாத்தியமானது.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கதையை அனைவரும் எளிதாக எழுதலாம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதுவது கடினமானது. இதற்கு நிறைய யோசிக்க வேண்டும். எல்லா கதாபாத்திரத்தையும் சிறப்பாக இயக்குநர் நெல்சன் எழுதி இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்காது.

இந்த படம் ஒரு நல்ல படம். உங்களுடைய திரை உலக பயணத்தில் சிறந்த படமாக இது இருக்கும் என்று என்னிடம் சொன்னார். இந்த வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

பொதுவாக ஒரு படம் வெளியாகும் போது அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பயம் கலந்த பதட்டம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் எங்களுக்கு பயம் இல்லை. பதட்டமும் இல்லை .சிறிய அளவில் நம்பிக்கை இருக்கிறது . நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பொதுவாக நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.‌ நண்பர் மீது வைக்கும் நம்பிக்கை… ஒரு காதலன் காதலி மீது வைக்கும் நம்பிக்கை… இந்த படத்தை பொறுத்தவரை மனைவி என்பவர் தன் கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.. அந்த நம்பிக்கையினால் எந்த அளவிற்கு தங்களின் அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இப்படம் சொல்கிறது. அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.‌

ஜூன் இருபதாம் தேதி அன்று திரையரங்குகளில் டிஎன்ஏ வெளியாகிறது. இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ” இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சிறந்த மனிதர் என்று சொல்வதை விட சிறந்த மக்கள் பிரதிநிதி என்று தான் சொல்ல வேண்டும். தினமும் சென்னையிலிருந்து அவருடைய தொகுதியான வந்தவாசிக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு அதன் பிறகு தான் சென்னை திரும்புவார். அவரை நான் சில முறை வந்தவாசிக்கு சென்று சந்தித்திருக்கிறேன்.‌ தொகுதியுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் பிரதிநிதியை சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

படத்தின் கதையை நான் அவரிடம் சொன்ன பிறகு, அவர்தான் எல்லோரிடமும் சொன்னார். அந்த வகையில் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி.

‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ என்ற படத்திற்காக ஏற்கனவே ஐந்து இசையை பாடல்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஐந்து பேரிடமும் பணியாற்றும்போது ஐந்து வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

இந்தப் படத்திற்கு வலிமையாகவும் உறுதியாகவும் ஒரு பின்னணி இசை தேவைப்பட்டது. அதற்காக ஜிப்ரானினை தொடர்பு கொண்டோம். அவருடைய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2016 ஆம் ஆண்டில் என்னை தொடர்பு கொண்டு ஒரு நாள் கூத்து படத்தை பற்றி பாராட்டி பேசினார். அவர் ஒரு மேடையில் பேசிய பேச்சுதான் என்னை ஃபர்கானா படத்தை இயக்குவதற்கான தூண்டுதலாக அமைந்தது. மாரி செல்வராஜ் இன்று அடைந்திருக்கும் உயரம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இயக்குநர்கள் ராஜூ முருகன், ஹேமந்த், கணேஷ் கே. பாபு ஆகியோர்களுக்கும் நன்றி.

அதர்வாவும், நிமிஷாவும் இல்லையென்றால் இந்த படம் இல்லை.‌ ஏன்? என்பது இந்தப் படத்தை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.

இது ஒரு கிரைம் ஆக்சன் டிராமா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது.

என்னுடைய முந்தைய மூன்று படங்களுக்கு மாறுபட்டதாகவும், ஒரு இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும் டி என் ஏ இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .

“அட்ரஸ்” பட நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய “திருநெறியாறு” நூலுக்கு ‘அட்றஸ்’

0

“அட்ரஸ்” பட நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய “திருநெறியாறு” நூலுக்கு ‘அட்றஸ்’ கொடுத்த, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ்.
சிறப்பு விருந்தினராக டைரக்டர் ராஜமோகன் கலந்துகொண்டார்.

எழுத்தாளர், நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய ‘திருநெறியாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கிளார்க் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்றதுடன் இந்த நூலை திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ் ( செயலர், மாற்றுத்திறனாளி நலத்துறை, தலைமை செயலகம் ) வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு பெ.குகன் கீதா இந்த நூலை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் திரு தா.ஞானசீலன் உடற்கல்வி ஆசிரியர் நூலின் இரண்டாம் படியை பெற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குனர் திரு.ராஜமோகன் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில்

திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ் அவர்கள் பேசும்போது,

“இந்த புத்தகம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மைல்கல். இதை வள்ளுவம் போல பழ மொழிகளில் உலகம் முழுக்க இதைக் கொண்டு சென்று மக்கள் அனைவரும் இதை புரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என இங்கு பேசியவர்கள் எல்லோரும் கூறினார்கள். ஆனால் எத்தனை பேர் இதை முழுதாக படித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளர் என்பவன் அந்தந்த நேரத்திலே அவருடைய மனதிலே எழுகின்ற சிந்தனைகளை, அல்லது அவனது வாழ்க்கையிலே பயணப்பட்ட காலத்திலே ஏற்பட்ட காயங்களை, அவன் பார்த்தவர்களினால் அவன் பாதிப்படைந்ததை எல்லாம் இட்டுச்சென்று ஒன்றாக சேர்த்து அதை கோர்த்து தான் உருவாக்கியிருக்கிறார்.

நம்முடைய அனுபவம் என்பது தான் நமது படைப்பின் அடிப்படை.. அப்படி திருவரணாரின் அனுபவங்கள் இங்கே சிதறி கிடைக்கின்றது. இந்த புத்தகத்திற்கு உள்ளே இப்படி சிதறி கிடக்கின்ற முத்துக்களை எல்லாம் தனித்தனியாக கோர்க்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய அத்தனை பாடல்களும் அற்புதமானவை தான். ஆனால் திருக்குறளில் எப்படி முப்பாலாக பிரித்து இருக்கிறார்களோ அதேபோல இதையும் ஊக்குவிக்கும் பாடல்கள் தனி, தத்துவ பாடல்கள் தனி என பகுத்து தொகுப்பாக மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும், அப்போதுதான் படைப்பாளி என்ன சொல்ல வருகின்றார் என படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். புரிந்து கொள்வதற்கு நன்றாகவும் இருக்கும்.

இந்த புத்தகத்தில் பல பாடல்களில் நெகிழ்ந்து என்கிற வார்த்தையை நீங்கள் அதிகம் பயன்படுத்தி இருப்பதால் உங்களது வாழ்க்கையில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களை பார்த்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இந்த புத்தகத்தை ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். இதை சரியாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் இன்று நம் முன் இருக்கிற மிகப்பெரிய சவால். எந்த ஒரு விஷயத்தையும் ஒரேயடியாக மொத்தமாக கொடுக்காமல் இந்த தொகுப்புகளை தனித்தனி பாகங்களாக வெளியிட்டால் மக்களிடம் இன்னும் எளிதாக சென்று சேரும். இத்னுடைய பொருளையும் அவர்கள் உணர்ந்து புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும்.

அது மட்டுமல்ல, எல்லோராலும் இதில் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியாது. அதனால் நிச்சயமாக இதற்கு ஒரு விளக்க உரை வெளியிட்டால் நன்றாக இருக்கும். சொல்லப்போனால் மிக மிக அவசியம். உண்மையிலேயே இது ஒரு பெரும் முயற்சி. இந்த புத்தகத்தை கொண்டு வந்ததை ஒரு தவம் என்றே சொல்ல வேண்டும். இந்த புத்தகத்தை முழுதாக படித்து அதில் நம் வாழ்விற்கு பொருந்துகின்ற தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அதன்படி நடப்பது தான் இந்த புத்தகத்திற்கு செய்யும் நீதியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

இயக்குனர் ராஜமோகன் பேசும்போது,

“பத்து வருடத்திற்கு முன்பு திருவரணாரை சந்தித்து இருக்கிறேன். பொதுவாகவே டீன் ஏஜில் நாம் எல்லோருமே கவிதை எழுதி இருப்போ.ம் நாம் எல்லோரும் அதை கடந்து தான் வந்திருப்போம். ஓன்று காதல் கவிதையாக இருக்கும். இல்லையென்றால் சமூகம் சார்ந்து இருக்கும். ஆனால் இது போல ஒரு திருக்குறள் வடிவில் கவிதை நயத்துடன் எழுதப்பட்டு இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். அவரை ஜாதி சம்பிரதாய சடங்குகளுக்குள் அடைத்து வைக்க முயற்சித்தார்கள். அதை எதிர்த்து நிறைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து தான் இந்த கவிதைகளை நூலாக்கி வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

பொதுவாகவே எழுத்தாளர்கள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினை இதுதான். தன்னுடைய கருத்துக்களை ஆழமாக சொல்லும்போது, இது போன்ற ஆழமான பிரச்சனைகளை கடந்து தான் வருவார்கள். திருவரணாரும் அதற்கு விதிவிலக்கல்ல. அதை கடந்து தான் வந்திருக்கிறார். எல்லோருமே வாய்ப்புகள் கொடுப்பார்கள். ஒரு சிலர்தான் வாழ்க்கை கொடுப்பார்கள். அது போல தான் மதுமதி மேடம்.. தமிழுக்கும் ஒரு தமிழனுக்கும் சேர்த்து அவர்கள் வாய்ப்பும் வாழ்க்கையும் கொடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மரியாதைக்குரிய ஒரு பதவியை கொடுத்து அவரை கௌரவித்து இன்றும் சமூகத்தில் ஒரு மரியாதையாக நடத்துவதற்கான ஒரு விஷயத்தை செய்து கொடுத்தார்கள். அது திருவரணாருக்கு மட்டுமல்ல அவருடைய குரலுக்கும் சேர்த்து கிடைத்த பெருமை.

திருவரணாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, நான் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் “அட்றஸ்” என்கிற படத்தில் அவரை இணைத்துக் கொண்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்பே அவரை அழைத்து என் படத்தில் ஒரு பாட்டு எழுத சொன்னேன். புத்தக வேலைகள் காரணமாக வர மாட்டேன் என சொல்லிவிட்டார். ஆனால் இப்போது என் படத்தில் நடிக்கிறார். இணை தயாரிப்பாளராகவும் இணைந்து இருக்கிறார். சினிமா துறையில் மெதுவாக உள்ளே வந்து கொண்டிருக்கிறார். கண்டிப்பாக திரையுலகமும் இவரை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன். எழுத்தாளருக்கு என ஒரு திமிர் இருக்கும். அதனால்தான் சினிமா வாய்ப்பு வந்தபோதும் கூட என்னுடைய நூல் வேலைகளை பார்க்கிறேன் என்று அவரால் திடமாக கூற முடிந்தது. அந்த திமிருடனே இன்னும் நிறைய எழுதி பெயரும் புகழும் அவர் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்றார்..

நூலாசிரியர் திருவரணார் பேசும்போது,

“அடிப்படையில் நான் படித்தது இயந்திரவியல் பட்டய படிப்பு. எனக்கும் தமிழுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது என்பதை என்னால் அறுதி இட்டு கூற முடியவில்லை படித்துப் பட்டம் பெற்று அரசு பணியில் சேர வேண்டும் என்பதுதான் என் தலையாய நோக்கமாக இருந்தது. ஐஏஎஸ் படிக்க விரும்பினேன். அது ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இந்த நூலை வெளியிட வேண்டும் என விரும்பினேன். அதேபோல சாப்ட்வேர் துறையில் பணியாற்ற விரும்பினேன். அதுவும் முடியவில்லை. அதனால்யே சாப்ட்வேர் துறையை சேர்ந்த ஒருவரையும் அழைத்து இந்த புத்தகத்தை வெளியிட விரும்பினேன்..

பொதுவாக வெண்பா என்பது கடினமானது. அதிலும் அந்தாதி என்பது இன்னும் கடினம். தமிழிலேயே அள்ள அள்ள குறையாத சொற்கள் இருக்கும்போது பிற மொழியில் எதற்காக சென்று கடன் வாங்க வேண்டும். இப்படி பாடல்களை எழுத ஆரம்பிக்க காரணம் என் சகோதரி தான். அவள் படிக்கின்ற காலகட்டத்தில் என்னிடம் சில கட்டுரைகள் எழுதித் தரும்படி கேட்பாள். இந்த சமயத்தில் தான் கவிதை எனக்குள் அரும்ப தொடங்கியது. என் தங்கையும் கொஞ்சம் மொழி புலமை உள்ளவன். அவள் அதை திருத்த முயன்றாள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

என் நலன் விரும்பியான அண்ணாமலை என்பவர்தான் என்னுடைய பாடல்களை படித்துவிட்டு என்னை ஊக்குவித்தார். அறம், பொருள், இன்பம் என்கிற தலைப்பில் தனித்தனியாக எழுதும்படி கூறினார்கள். அப்படி ஒரு முயற்சியும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் மீது எந்த பிடிப்பும் பற்றும் இல்லாத எனக்கு தமிழ் மீது பிடிப்பும் பற்றும் வர காரணம் அதன் இயல்பு தன்மை. அதை போதித்த ஆசிரியர் குமாரசாமி.. அண்ணாமலை தான் என்னை குமாரசாமியிடம் கூட்டி சென்றார்.

ஒரு சில பெருமக்கள் பிஎச்டி பட்டம் எல்லாம் பெற்ற என்னாலேயே வெண்பா எழுத முடியவில்லை. உன்னால் எப்படி முடியும் என்று சந்தேகமாகவும் ஏளனமாகவும் கேட்டார்கள். அதனால் இயற்றுவதற்கு கடினமானது வெண்பா என்பதால் அதை மட்டுமே எழுத வேண்டும் என முடிவு செய்தேன். என் நலம் விரும்பி ஒருவர் நான் எதை எழுதி சென்றாலும், சொல்லோட்டம் இருக்கிறது பொருளோட்டம் இல்லை.. பொருளோட்டம் இருக்கின்றது சொல்லோட்டம் இல்லை என்று ஏதாவது சொல்வார். என்னதான் செய்வது என்று கேட்டால் திருக்குறளை படி என்று சொல்வார். நான் திருக்குறளை போலவே ஒரு நூலை எழுத போகிறேன் என்று சொன்னால் அதற்கும் என்னை திட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே 2000 குறள்களை எழுதிக்கொண்டு அவரிடம் கொடுத்தேன்..

ஆனால் என்னுடைய குருநாதர் அண்ணாமலை எப்போதும் சொல்வார், நீ 2000 குறள்கள் எழுதினாலும் பெருமை இல்லை. சினிமாவுக்கு போகணும் என்பார். இயக்குனர் ராஜமோகனும் என்னை உற்சாகப்படுத்துபவர்களில் ஒருவர். அவருடைய அட்ரஸ் படத்தில் நடித்துள்ளேன். இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறேன்.

அந்தாதி என்பது வடமொழித் தாக்கம் என்பார்கள்.. ஆனால் சங்க இலக்கியங்களில் அது இருக்கிறது. நான் எழுதிய குறள்களை இன்னும் கொஞ்சம் புரியும்படியாக மாற்றி எழுதலாம் என்கிற நினைப்பு வருகிறதே தவிர அதற்கு விளக்க உரை எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லை” என்று பேசினார்.

Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.

0

The campaign will be conducted in 23 cities across the nation, with Apollo Telemedicine Networking Foundation serving as the implementation agency.

The purpose of this CSR campaign is to raise awareness about breast cancer and encourage women to take charge of their health.

Hyderabad, June 11th, 2025: FUJIFILM India, a leader in healthcare technology, has launched its latest CSR campaign, ‘Find It Early, Fight It Early’, in the presence of Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals Foundation. This initiative is focused on generating awareness about breast cancer and the importance of early detection, particularly in underserved regions where discussions around women’s health are often stigmatized.

This awareness campaign will be implemented across 23 cities, aiming to reach over 1 lakh women through structured community engagement, health risk assessments, and sensitization efforts led by trained field educators. The program, implemented by Apollo Telemedicine Networking Foundation (ATNF), reflects FUJIFILM India’s commitment to building a more informed and health-aware society.

Breast cancer is one of the most prevalent forms of cancer among Indian women. According to the National Cancer Registry Program by ICMR, it accounts for approximately 14% of all cancers diagnosed among women, with 1 in 29 women at risk of developing the disease in her lifetime. Unfortunately, most cases are detected at advanced stages due to stigma, limited awareness, and lack of access to timely care. ‘Find It Early, Fight It Early’ is designed to address these challenges by providing reliable, culturally sensitive information at the community level. By facilitating respectful, open conversations through on-ground workshops and awareness sessions, the initiative encourages women to become more proactive about their health—recognizing early symptoms, understanding self-examination techniques, and seeking timely medical consultation.

Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, said,

“As healthcare leaders, we have a responsibility not only to treat illness but to anticipate it through awareness, education, and access. Breast cancer continues to claim lives because too many women lack the information and resources needed to act early. This CSR initiative by FUJIFILM India reflects a deeper understanding of that reality. Our support is grounded in a shared commitment to take meaningful action where it matters most and ensure that awareness reaches the women who need it before it’s too late.”

Mr. Koji Wada, Managing Director, FUJIFILM India, added,

“At FUJIFILM India, we are committed to delivering innovative products and solutions that embody our Group purpose of ‘Giving Our World More Smiles.’ By blending diverse ideas, unique capabilities, and extraordinary people, we aim to create solutions that bring joy and smiles to the world. With the ‘Find It Early, Fight It Early’ breast cancer awareness CSR campaign, we aim to extend the reach of breast cancer awareness and are committed to advancing early diagnosis so that many lives can be saved.”

Through its CSR efforts, FUJIFILM India continues to make healthcare more inclusive and accessible by addressing unmet medical needs, promoting early disease detection, and enabling preventive care through education. ‘Find It Early, Fight It Early’ aligns with the FUJIFILM Group’s Sustainable Value 2030 Plan, which prioritizes health equity and support for underrepresented populations. The initiative reflects the company’s group purpose of ‘Giving Our World More Smiles’ by creating impact where it is needed most. Whether in a remote town or a dense urban neighborhood, FUJIFILM India believes every woman deserves the opportunity to know her health, protect it, and take charge of her overall well-being.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு

அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார்.

நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

ஹைதராபாத், ஜூன் 11, 2025: சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா முன்னிலையில் , ”முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” ( Find It Early, Fight It Early) எனும் அதன் சமீபத்திய CSR பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி மார்பக புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்ப கால நோய் பாதிப்பினைக்கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நடைபெறாத அல்லது எதிர்மறையான- நியாயமற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் 23 நகரங்களில் செயல்படுத்தப்படும். கட்டமைக்கப்பட்ட சமூக ஈடுபாடு – சுகாதார இடர் மதிப்பீடுகள் மற்றும் உணர்திறன் முயற்சிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இந்த பிரச்சாரம், இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற களக் கல்வியாளர்களால் வழிநடத்தப்படும். அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை ( ATNF) செயல்படுத்தும் இந்த திட்டம், அதிக அளவில் தகவல்களை அறிந்த மற்றும் சுகாதார விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான FUJIFILM இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மார்பக புற்றுநோய் இந்திய பெண்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் புற்று நோய்களில் ஒன்றாகும். ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் படி, பெண்களிடையே கண்டறியப்பட்ட அனைத்து வகையான புற்று நோய்களிலும் இது தோராயமாக 14 சதவீதம் ஆகும். மேலும் 29 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகும் அபாயமும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது பற்றிய அறியாமை , விழிப்புணர்வு இன்மை, சரியான நேரத்தில் நோயை கண்டறிவதற்கான வசதிகள் எளிதில் கிடைக்காதது மற்றும் பராமரிப்பு கிடைக்காததால்.. பெரும்பாலான வழக்குகள்.. நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.‌ ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” என்பது சமூகத்தில் நம்பகமான, கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் – விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமர்வுகள் மூலமும் மரியாதையுடன் கூடிய திறந்த நிலையிலான உரையாடல்களை நிகழ்த்தி எளிதாக்குவதன் மூலம் .. இந்த முயற்சி பெண்கள் தங்களின் உடல் நலம் குறித்து மிகவும் விழிப்புணர்வுடனும் முன் முயற்சியுடனும் செயல்பட ஊக்குவிக்கிறது. ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அறிந்து கொள்வது மற்றும் கண்டறிவது, சுய பரிசோதனைக்கான நுட்பங்களை புரிந்து கொள்வது மற்றும் சரியான தருணத்தில் முழுமையான மருத்துவ ஆலோசனையை பெறுவது உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும்.‌

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா பேசுகையில், ”சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாங்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், அது குறித்த விழிப்புணர்வு , கல்வி, எளிதில் அணுகும் முறை ஆகியவற்றை வழங்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. மார்பக புற்றுநோய் தொடர்ந்து உயிர்களை கொன்று வருகிறது. ஏனெனில் பல பெண்களுக்கு இத்தகைய நோய் பாதிப்பை கண்டறிந்து முன்கூட்டியே செயல்படுவதற்கு தேவையான தகவல்களும், வசதிகளும் இல்லை. FUJIFILM இந்தியாவின் இந்த CSR முயற்சி அந்த யதார்த்தத்தை பற்றிய ஆழமான புரிதலை பிரதிபலிக்கிறது. மிகவும் முக்கியமான இடங்களில் அர்த்தமுள்ள நடவடிக்கை மேற்கொள்வதற்கும் , தாமதமாகிவிடும் முன் விழிப்புணர்வு தேவைப்படும் பெண்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டில் எங்களது ஆதரவு அடித்தளமாக உள்ளது என்றார்.

இது தொடர்பாக FUJIFILM இந்தியாவின் நிர்வாக இயக்குநரான திரு கோஜி வாடா தொடர்ந்து பேசுகையில், ” எங்களின் FUJIFILM இந்தியா, ‘ நம் உலகிற்கு மேலும் அதிகளவிலான புன்னகைகளை வழங்குதல்’ ( Giving Our World More Smiles) என்ற எங்கள் குழுவின் நோக்கத்தை உள்ளடக்கிய புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.‌ பல்வேறு ஆலோசனைகள், தனித்துவமான திறன்கள் மற்றும் அசாதாரணமான மக்களுடன் கலந்து கொள்வதன் மூலம் உலகிற்கு மகிழ்ச்சியையும் , புன்னகையும் தரும் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல் ‘ எனும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு CSR பிரச்சாரத்தின் மூலம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்துவதையும், இதனால் இறக்கும் பல உயிர்களை காக்கும் வகையில் ஆரம்ப கால நோயறிதலை மேம்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்றார்.

FUJIFILM இந்தியா தனது CSR முயற்சிகள் மூலம் பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், ஆரம்பகால நோய் கண்டறிதலை ஊக்குவிப்பதன் மூலமும், கல்வி மூலமும், தடுப்பு மற்றும் பராமரிப்பை செயல்படுத்துவதன் மூலமும், சுகாதார பராமரிப்பை கூடுதலாக உள்ளடக்கியதாகவும் , எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுகிறது. ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்’ என்ற FUJIFILM குழுமத்தின் நிலையான மதிப்பு 2030 ஆம் ஆண்டிற்கான திட்டத்துடன் ஒத்துப் போகிறது. இது குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற மக்களுக்கு சுகாதார சமத்துவம் மற்றும் ஆதரவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த முயற்சி தேவைப்படும் இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ‘நம் உலகிற்கு அதிக புன்னகையை வழங்குதல்’ என்ற எங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. தொலைதூரம் உள்ள நகரமாக இருந்தாலும் அல்லது அடர்த்தியான நகர் புறமாக இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், அதனை பாதுகாத்துக் கொள்ளவும், தனது ஒட்டு மொத்த நல்வாழ்விற்கான பொறுப்பினை ஏற்கவும், அதற்கான வாய்ப்பினை பெற தகுதியானவர் என FUJIFILM இந்தியா நம்புகிறது.

மக்களின் கவனத்தை ஈர்த்த த்ரில்லர் திரைப்படம் லெவன் இந்த வாரம் உங்கள் Tentkotta-வில்!!!

0

நவீன் சந்திரா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘Eleven’ திரைப்படம், புலனாய்வு திரில்லர் திரைப்படம், ஜூன் 13 முதல் Tentkotta OTT இல் வெளியாக உள்ளது.

இயக்குனர் சுந்தர் சி -யின் உதவி இயக்குனர் லோக்கேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்த, Leven திரைப்படம் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரியா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே `லெவன்’ படத்தின் கதை!

படம் ஆரம்பித்து சிறிதுநேரம் நேரம் கடந்து
பிடிப்பான கதைக்களம் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்கவே வைக்கமுடியாத Climax காட்சி என பரபரப்புக்கு பஞ்சமிலாத திரைப்படம் Leven. பல விமர்சகர்களால் பாராட்டப்பட்ட Leven Tentkotta OTT அறிவிப்பு தேதி வெளிவந்ததிலிருந்து, Thriller ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து அதன் வெற்றியை டிஜிட்டல் ரசிகர்கள் மத்தியிலும் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 13 முதல் Tentkotta இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் Eleven இன் பரபரப்பான திரை அனுபவத்திற்கு தயாராகுங்கள்

‘கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு!

0

பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான திரைப்படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் தான் ‘கரிகாடன்’.

ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக
‘கரிகாடன் ‘
உருவாகியுள்ளது.

இப்படத்தில்
காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி,
மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி,
கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு,
கிரி,பாலராஜாவாடி,
மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ்.
இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி,
ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவுடல்லி சாஷி, நடனம் ராம்கிரண்.

ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர்: தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார்.
இணைத் தயாரிப்பு: ரவிக்குமார் எஸ்.ஆர்.

இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் ‘கரிகாடன்’ படத்தின் சாகச மற்றும் அதிரடிப் பயணத்தைத் திரையரங்கில் விரைவில் காணலாம்.
அதிரடி ஆக்சன் காட்சிகள். அசத்த வைக்கும் இசை என்று திரை மாயாஜாலத்தை உணர வைக்கும் ஒரு படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.

கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார்.
இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள காடா நடராஜ் கவனமாக திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை முடித்தார்.

ரித்தி என்டர்டெயின்மென்ட் ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கும் அவரது மனைவி தீப்தி தாமோதர், சகோதரர் ரவிக்குமார் எஸ்.ஆர். மற்றும் நண்பர் திவாகர் பி.எம். ஆகியோர் அவரது திரை உலகக் கனவை நிறைவேற்றத் துணைபுரிந்துள்ளனர்.

கரிகாடனின் பின்னணியில் ஏராளமான திறமைக் கரங்கள் இணைந்து கைகோர்த்துள்ளன.

சிறந்த இயக்குநரான கில்லி வெங்கடேஷ், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் தனது நிபுணத்துவத்துடன் ‘கரிகாடன’னை உருவாக்கியுள்ளார். ரியாலிட்டி டிவியில் பின்னணி மற்றும் ‘ஹுலிபேட்டை’ படத்தில் எதிர்மறை வேடம் உட்பட குறிப்பிடத்தக்க வேடங்களுடன், கில்லி வெங்கடேஷ் படத்திற்கு வீரியம் சேர்த்துள்ளார். அதிஷய் ஜெயின் மற்றும் ஷஷாங்க் சேஷகிரி இசையை வடிவமைத்துள்ளனர், ஷஷாங்க் பின்னணி இசையமைக்கிறார். ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவு சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சக்கராயபட்னாவின் அழகைப் படம்பிடித்திருக்கிறது. தீபக் சி.எஸ்.ஸின் எடிட்டிங் படத்தை சங்கிலித் தொடராக இணைத்துள்ளது.

‘கரிகாடன்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்தை ரசிக்கத் தயாராக இருக்கும்படி படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Pawan Kalyan wraps up his part for ‘OG’; film gears up for grand theatrical release on 25th September 2025

0

The highly anticipated action entertainer ‘OG’ has reached a major milestone, as the Power Star Pawan Kalyan has officially completed shooting for his role in the film. The production house, DVV Entertainment, shared the exciting update on their official social media handles with the caption:

*“PACKUP for GAMBHEERA…
GEAR UP for the RELEASE…

See you in theatres on 25 September 2025.

OGonSept25

TheyCallHimOG #OG”*

Link to tweet: https://x.com/dvvmovies/status/1931380423747367234?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q

Directed by Sujeeth, ‘OG’ promises to be a high-octane cinematic spectacle, headlined by Pawan Kalyan in the much-talked-about role of ‘Gambheera’. The film also stars Emraan Hashmi, Priyanka Arul Mohan, Prakash Raj, and Sriya Reddy in pivotal roles, with music composed by the sensational S Thaman.

Produced by Danayya garu and Kalyan Dasari under the prestigious banner of DVV Entertainment, known for blockbuster hits like RRR, ‘OG’ is touted as the most awaited film of 2025.

Fans and trade circles are already predicting earth-shattering openings and never-before-seen madness at the box office. With Power Star’s portions officially wrapped up, the film now moves into its final leg of post-production, setting the stage for a massive worldwide theatrical release on 25th September 2025.

Get ready for the storm… #TheyCallHimOG

33 லட்சம் சுருட்டிய முன்னாள் ஆர்ட் டைரக்டர் மணி கார்த்திக்

0

என்னுடைய பெயர் S.செல்வம்.நான் சென்னை பெரம்பூர் பக்கத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் வசிக்கிறேன்.என் எதிர்வீட்ல இருக்கிற ராஜி என்கிற தம்பியிடம் சினிமா பற்றி நிறைய பேசுவேன்.

அவர் என்னை தேடி ஓருவர் வருவார்.நீங்கள் கூட பார்த்து உள்ளீர்களே… .அவர் பெயர் மணி கார்த்திக்.படம் எடுக்கிறதா இருக்காரு.அவர் Art Director இருந்து இயக்குனராக ஆசைப்படுறாரு. ஓரு நாள் அவரை வரவழைத்து பேச வைக்கிறேன் என சொன்னார்.ஓரு நாள் வர வைச்சார்.சினிமா கதைகள் பேசினோம்.என்னிடம் ஓரு கதை இருக்கு.அதை நாம் பண்ணலாம் என சொன்னார்.

சொல்லும்போது என்னிடம் பணம் அவ்வளவாக இல்லை என்றேன்.நாலு லட்சம் கையில் உள்ளது என்றேன்.அவர் வீடு சொந்த வீடு இருக்கே அதை விற்று சொந்தமாக படம் பண்ணி இதை விட பெரிய பங்களா நானே வாங்கித் தருகிறேன் என்றார்.அவரே வீடு விற்கும் முயற்சியில் உதவினார்.29 லட்சத்துக்கு வீட்டை விற்றோம்.குறைந்த பட்ஜெட்டில் படம் என்பதால் அவர் சொல்லுகிற ஆட்களுக்கு எல்லாம் காசு கொடுத்தேன்.எனக்கு இருந்த சினிமா ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு நயவஞ்சக வலையில் வீழ்த்தினார்.

மயில்சாமி மகன் அன்புவை ஹீரோவாக வைத்து முணு கழுத வயசு படப்பிடிப்பு அரக்கோணம் அருகே அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடங்கியது.என்னிடம் பணத்தை வாங்குவதிலே குறியாக இருந்தார் இயக்குனர் மணி கார்த்திக்.பணம் தண்ணீராக செலவான போதும் உங்களுக்கு பெரிய பங்களா வரப்போகுதோ என சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்தார்.நானும் நம்பிக்கையில் கொடுத்தேன்.

விஜய் டிவி பிரபலம் முக்குத்தி முருகனும் இதற்கு உடந்தை.அவர் சொல்கிற ஆளுக்கு பணத்தை கொடுத்தேன்.எப்படியெல்லாம் நயமாக பேசி பணம் பிடுங்க முடியுமோ இருவரும் கூட்டு போட்டு என்னிடம் பணத்தை பெற்றனர்.

ஓரு நாள் எனக்குத் தெரியாமலே என்னிடம் சொல்லாமலே பட உரிமைகள் அனைத்தையும் இயக்குனர் மணி கார்த்திக் தன்னுடைய மனைவி ராஜாமணி பெயரில் மாற்றிக்கொண்டார்.நான் கேட்ட போது படத்துக்கு இன்னும் நிறைய செலவாகும்.kGS group என ஓரு குருப் உள்ளது.அவர்கள் தான் படத்தை மீதி எடுப்பார்கள்..அவர்களிடம் இருந்து வாங்கி நான் உங்களுக்குக் தருகிறேன் என்றார்.
கணக்கு கொடுக்கனும் என சொல்லி என்னுடைய செலவு விபரத்தை KGS group தரணும் என பெற்றுக்கொண்டார்.மீண்டும் படம் தொடங்குவதற்குள் 25 லட்சம் கொடுக்க வேண்டும்.மீதி பணத்தை படம் முடித்து பெறுவது என அக்ரிமெண்ட் நானும் இயக்குனரும் போட்டுக்கொண்டோம்.

திடிரென ஓரு நாள் ஜனவரி 8,2023 அவ்வை ஹால் ,தர்மபூரியில் ஆடியோ பங்ஷன் வைத்தார்கள்.படத்திற்காக இவ்வளவு செலவழித்தும் எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்படலை.ஆடியோ பங்ஷன் அன்று அவமதிக்கப்பட்டேன்.

யாரோ ஓருவர் தயாரிப்பாளர் எங்க என கேட்டதால் மட்டுமே நான் மேடை ஏற்றப்பட்டேன்.அன்று 5 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் இயக்குனர் மணி கார்த்திக் .kgs group தரல .நான் ஓரு வாரத்தில் வாங்கித் தருகிறேன்என்றார் மணி கார்த்திக்.மீதி பணமும் வரல அது வந்து விடும் என்றார்.காலங்கள் மட்டுமே சென்றன.எனக்கு நம்பிக்கையான வாக்குறுதிகள் மட்டுமே தரப்பட்டது.
ஓரு ஸ்டேஜில் உன்னால முடிஞ்சத பாத்துகோ என்றார்.

இப்போது சொந்த வீடு இல்லாமல் நடுரோட்டில் அநாதையாக நிற்கிறேன்.

இலங்கை தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் “தீப்பந்தம்”!

0

படவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வ.கௌதமன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், ஓவியர்
மருது, ஓவியர் புகழேந்தி, இயக்குனர்கள் கவிதா பாரதி, ராசி அழகப்பன், நடிகர் முத்துக்காளை, இயக்குனர்கள் கேந்திரன் முனியசாமி,
அஜயன் பாலா, மாணவர்கள் நகலகம் சவுரி ராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டு, படத்தை பாராட்டி பேசினார்கள்!

இயக்குநர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில், தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை
மதிசுதா, கில்மன், கஜன் தாஸ்,
ஆகாஷ், நஜாத்.கே, எல்,பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி,
சபேசன், ஆர்.கே.கஜா உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீப்பந்தம்’.

இப்படத்தின் கதையை பூவன் மதீசன் எழுதியிருக்கிறார். ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஏ.கே.கமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பூவன் மதீசன் இசை அமைத்துள்ளார்.
பாடல்களை வேலணையூர் சுரேஷ், கே.எஸ்.சாந்தகுமார், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
படத்தொகுப்பை அருண் யோகதாசனும், கலை இயக்கத்தை வி.எஸ்.சிந்துவும் கையாண்டுள்ளனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

அம்லுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ப்ளக்போர்ட் இன்டர்நேசனல் நிறுவனம் வழங்குகிறது.

மே 31 ஆம் தேதி இலங்கை முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் குறித்து இயக்குநர் ராஜ்சிவராஜ் கூறியதாவது….

ஐம்பதுகளில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக கொண்டு இந்தப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. அவர் வாழ்க்கை வழியாக தமிழர் உரிமைப் போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றையும் அதற்கான மூல காரணங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் திரைக்கதை அமைத்து, ஓர் உணர்வுப்பூர்வமான வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளோம். அதை திரைப்படங்களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நெருக்கம் கொடுக்கும் படைப்பாக இருக்கும். பாருங்கள்.

- Advertisement -

Recent Posts