கலை உலக “60 ஆண்டு”
வாழ் நாள் சாதனையாளர்.
எஸ் வி சேகர் — ஒரு அறிமுகம் (98410 23545)

திரைப்பட-நாடக-சின்னத்திரை தொடர் இவற்றின் இயக்குனர்-தயாரிப்பாளர் –கதாசிரியர்-க்ரியேடிவ் ஹெட்-நடிகராக 1960-இல் தொடங்கிய இவரது கலைப்பயணம் , வெற்றிப்பயணமாகத் தொடர்ந்து கொணடிருக்கிறது. கலை ஞானம் மிக்க ’எஸ் வி சேகர் ‘ அனைவருக்கும் பிடித்த பெயர். எவரையும் புண்படுத்தாத –‘குபுக்’ கென்று சிரிக்கவைக்கும்-உடனடியக அவருக்குமட்டுமே தோன்றும் –உம்மணா மூஞ்சியயையும் புன்னகைக்கவைக்கும்-இவரின் ரத்ததில் ஊறிய நகைச்சுவைக்குப் பெயர் ‘சேகர் பாணி. நகைச்சுவை’.
இவரின் குரு, வழிகாட்டி,இவரின் தந்தை தந்தை திரு எஸ்வி வெங்கடராமன் .சோவின் முதல் இரண்டு நாடகங்களை டைரக்ட் செய்தவர்.86 ஆயிரம் யூனிட் ரத்தம் சேமித்துக்கொடுத்தவர்.
சேகருக்கு 10 வயதில் துப்பறியும் சாம்பு நாடகத்தில் நடிக்கவும் , 11 வயதில் போட்டோ எடுக்கவும்,12 வயதில் ஸ்கூட்டர் ஒட்டவும் கற்றுக்கொடுத்தார்.13ம் வயதில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் கே சரா சரா நாடகத்தில் ஸ்பெஷல் ஒலியமைப்பு செய்ய அனுமதித்தார். வாழ்க்கையில் படிப்பைவிட ஒழுக்கம் முக்கியம் என்பதை வலியுறுத்தியவர்.

சட்டநாதபுரம் வெங்கடராமன் சேகர்(26-12-1950) எனப்பட்ட நமக்குத் தெரிந்த எஸ் வி சேகர் , படிப்பால் மெகானிகல் இஞ்சினியரிங் ,ஏர் கண்டிஷனிங்& ரெஃப்ரிஜிரேஷனில் டிப்ளமா படித்தவர் .தொழிலால் அவர் ஒரு ஒலிப்பதிவாளர்,நிகழ்ச்சிதயாரிப்பாளர்,ஸ்டில் ஃபோட்டோகிரஃபர், வீடியோகிரஃபர்,எடிடர், டைரக்டர். ‘நாரதர்’ தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்திருக்கிறார். இவர் தமிழ்நாடு Ceentral Board of Film Censors –இன் Regional Chairperson ஆக 2முறை பணியாற்றியிருக்கிறார். புதிதாக திரைப்படம் இயக்கி,தயாரிப்பவர்களுக்காக, மிக உபயோகமாக இருக்கும் நாம் அறிந்து கொள்வோம் “திரைப்பட தணிக்கை முறை ” என்ற தமிழ் கையேடு புத்தகத்தை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
சிறந்த அட்டைப்படத்திற்கான விருதை குமுதம் பத்திரிகையில் பெற்றுள்ளார்.
மோகம், வயனாடன் தம்பான், முகங்கள் ஆகிய படங்களுக்கு ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார்.
வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு , நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் (SOUND EFFECTS) தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விஷயங்களில் இவற்றில் கைதேர்ந்தவர். 1969 ம் ஆண்டு இலங்கை வானொலிக்காக புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நடித்த நம் நாடு திரைப்பட ஒலிச்சித்திரம் தயாரித்தவர். 275 ஒலிச்சித்திரங்கள் தமிழ் தெலுகு ,மலையாளம், கன்னடப்படங்கள் தயாரித்து ஒலிபரப்பியவர். Radio & TV Advertising Practitioners Assocsiation of India விடமிருந்து Best ALL India Programme Producer Award –ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார்.

சென்னை விவிதபாரதி ஆரம்பிக்கப்பட்ட அன்று காலை ஒலிபரப்பான முதல் விளம்பரம் இவர் தயாரித்ததுதான் (Lipton Ruby Dust Tea). வானொலிக்காக 1000 க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் தயாரித்துள்ளார்.

Dr.J ஜெயலலிதா அவர்கள் வழங்கிய ஹார்லிக்ஸ் இசை விருந்து 5 வாரங்கள் எஸ்வி சேகரால் பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது. இவர் தயாரித்த நாகேஷைக் கேளுங்கள் நிகழ்ச்சி 150 வாரங்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகி சாதனை படைத்தது.
சென்னை தூர்தர்ஷனில் முதல் 5 வார விளம்பரத் தொடர் எஸ்வி சேகரின் காட்டில் மழை நாடகம்.
முதல் 13 வாரத்தொடர் எஸ்வி சேகரின் வண்ணக்கோலங்கள். இதுவரை 11 முறை மறு ஒளிபரப்பு ஆனது. MGR அவர்கள் மிக விரும்பி பார்த்த தொடர் இது. ஒரு திருமணத்திற்கு வந்த போது எஸ்வி சேகரை அருகில் அழைத்து பாராட்டினார்.
முதன் முதலாக முழுதும் வெளிநாடுகளில் (அமெரிக்கா,கனடா,சிங்கப்பூர்,சியோல், இந்தோனேசியா) எடுக்கப்பட்ட ‘அமெரிக்காவில் அருக்காணி” தொலைக்காட்சி தொடரை இயக்கி தயாரித்தவர் இவர்தான்.

முதன்முதலாக ஜப்பான் நாட்டில் தமிழ் கலை நிகழ்ச்சி நடத்தியவர்
எஸ் வி சேகர்.
1972 –இல் நாடகத்தற்காக சிங்கப்பூர் சென்றுவிட்டு திரும்புகையில் கப்பலில் இவர் உருவாக்கியதுதான் இவரது நாடகக்குழுவான நாடகப்ரியா.
எஸ் வி சேகர் இதுவரை 25 நாடகங்களை தயாரித்து, உலகெங்கும் 6700 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். தமிழக அரசின் ​
இயல் இசை நாடக சங்கத்தின் சிறந்த நாடகக்குழுவிற்கான விருதை பெற்றவர் .
எஸ்வி சேகரிடம் “இதுவரை என்னை வாழ்க்கையில் இது போல யாரும் சிரிக்க வைத்ததில்லை “என வீட்டிற்கு அழைத்து
பாராட்டினார்அன்றய முதல்வர் ஜெயலலிதா. .
எஸ்வி சேகரால் நாடக மேடைக்கு அறிமுகப்படுத்தியவர்கள்- கிரேசி மோகன்,கோபு-பாபு, L.கணபதி, கிருஷ்ணகுமார்,நிலா கோவிகோவன்,G.K.கோபிநாத்.
இவர் கதாநாயகனகவும்,முக்கிய பாத்திரங்களிலும் நடித்த திரைப்படங்களில் விரைவில் சதம் அடிக்கப்போகிறார்.
தமிழக அரசுக்காக மழை நீர் சேகரிப்பு ,மரம் வளர்ப்போம் என இரு குறும்படங்கள் இயக்கி நடித்தவர்
இந்திய திரைப்பட வரலாற்றில் 36 ஆண்டு
களுக்குப்பிறகு ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் 3 முக்கிய பாத்திரங்களில் அதே நடிகர்கள் ,(எஸ்வி சேகர், விசு, ரங்கா) நடித்து வெளிவந்து சாதனை படைத்த படம் மணல் கயிறு2.

1992ல் தன்னுடைய ’ பெரியதம்பி’ நாடகத்தை அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலும்,வாஷிங்டனிலும்,குவைத்திலும் நடத்தினார். இதில் சிறப்பு என்னவென்றால் இவருடன் அந்த நாடகத்தில் மற்ற பாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவரும் அந்தந்த ஊர்வாழ் தமிழர்களே. அவர்களுக்கு இவரே பயிற்சி கொடுத்து நாடகங்களை நடத்தினார், இந்த பெருமைமிக்க நிகழ்வு இவர் சாதித்த பல ‘முதல்’ களில் ஒன்று.
வெளிநாட்டுவாழ் தமிழ்மக்களின் அழைப்புக்கிணங்க அமெரிக்கா,கனடா, துபாய்,அபுதாபி,இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,இந்தோனேசியா, தாய்லாந்து,பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் தன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து முதல் முறையாக மேற்கண்ட நாடுகளுக்கு சென்றது இவர் குழுதான். அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தியது இவருடைய பல சாதனை(சரித்திரம் ) களில் ஒன்று.
இவரைப் பாராட்டிவந்த பெருமைகள் தமிழக அரசின் கலைவாணர் பதக்கம் (1991),கலைமாமணி பட்டம் (1993), மைலாப்பூர் அகடமியின் BEST COMEDIAN விருது –தொடர்ந்து மூன்று முறை. WISDOM பத்திரிகையின் BEST COMEDIAN விருது (1990), JAYCEES –இன் OUTSTANDING YOUTH –தேர்வு இப்படி பல. சபாக்களாலும் நிறுவனங்களாலும் இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில: நாடக சூப்பர்ஸ்டார், காமெடி கிங்,சிரிப்பலை சிற்பி,நாடக வசூல் சக்ரவர்த்தி,நகைச்சுவை தென்றல், நகைச்சுவை இளவரசன், நகைச்சுவை நாயகன்,சிரிப்புச்செல்வன், நகைச்சுவைவேதநாயகன்,வாணி கலாசுதாகரா, நாடக கலாசாரதி, நாடகரத்னா.
1985-இல் தன்னுடைய எட்டு முழு நாடகங்களை தொடர்ச்சியாக காலை 07.45 –இலிருந்து அடுத்தநாள் விடியற்காலை 01.49 -வரை நடத்தியது LIMCA BOOK OF RECORDS- ஆல் UNSUPRPASSED FEAT OF A STAGE ARTIST ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவர் SUN TV க்காகத் தயாரித்த S VE SHEKHER MEETS S VE SHEKHER என்ற புதுமையான நிகழ்ச்சி யில் இவரே பேட்டி எடுப்பவராகவும் பேட்டி அளிப்பவராகவும் தோன்றியது கண்ணுக்கு விருந்தளித்தது மட்டுமில்லாமல் இவருடைய தனித்தன்மைவாய்ந்த இவரது தொழில்நுட்பத் திறமையயும் பறைசற்றியது.(இந்த நிகழ்ச்சியும் LIMCA BOOK OF RECORDS-இல் இடம் பெற்றது). 17.10.2008 அன்று , இவருடைய அனைத்து நாடகங்களின் கதை-வசனம், இவருடைய நகைச்சுவைத்துணுக்குகள்,இவருடைய சமூகப்பார்வைகள், இவருடைய கேள்வி-பதில்கள் அடங்கிய 32 புத்தகங்களை ஒரே சமயத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டார். இந்த சாதனையும் LIMCA BOOK OF RECORDS- இல் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒரே சாதனையாளரின் மூன்று சாதனைகள் LIMCA BOOK OF RECORDS ல் இடம்பெற்றது இவர் ஒருவருக்காகத்தான் இருக்கும்.
இவருடைய வண்ணக்கோலங்கள் , நம் குடும்பம் தொடர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு :மிக அதிகமானமுறை(11 )மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட சின்னத்திரை தொடர்கள் இவைதான். இப்போது 28 வருடங்கள் கழித்து DVD க்களாகவும் வந்துவிட்டன. இவருடைய நகைச்சுவை தலைமுறையைக்கடந்தது. இவரது அனைத்து தொலைக்காட்சி தொடர்களும் DVD களாக வந்துள்ளன. இப்போது SVES50TV என்ற யூ டியூப் சானல் நடத்திக்கொண்டிருக்கின்றார்.
1996-இலிருந்து இவரைப் பற்றிய விவரங்களும், இவருடைய நாடகங்களும் www.SVESHEKHER.COM என்ற website இல் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாடகம் சம்பத்தப்பட்டவருக்கு இப்படி வந்தது இதுவே முதல் முறை. ஒருவருடைய நாடகங்கள்,டிவி தொடர்கள் audio, video,புத்தகம்,internet என அனைத்து ரூபத்திலும் வந்தது இவர் ஒருவருக்குதான் .
எஸ் வி சேகர் இதுவரை 53 முறைகளுக்கு மேலாக ரத்ததானம் செய்துள்ளார். தன்னுடைய டிவி தொடர்களில் கண்தானம், ரத்ததானம் பற்றி தனித்தனியே ஒவ்வொரு எபிஸோடில் கதையோடு ஒட்டி சொல்லியிருந்தது பலருடைய பாராட்டைப் பெற்றது.
Jaycees,Lions Clubs, Rotary Clubs மற்றும் பல சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்காக தன் நாடகங்களை நடத்தி நலத்திட்டங்களுக்காக பெருமளவு நிதி திரட்டித்தந்துள்ளார்.
1977 – ஆம் ஆண்டு முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு சிறு தொகையை வசூல் செய்து கொடுப்பதில் துவங்கிய இவர் சேவை, தொடர்ந்து பின்னாளில் தன்னுடைய நாடகம் மூலம் இரண்டு லட்ச ரூபாய் நிதி திரட்டி சென்னைஅரசு பொதுமருத்துவமனை Neurology பிரிவுக்கு resperator வாங்குவதற்காக அளித்துள்ளார். Air Cargo Club of Madras இவருடைய நாடகம் நடத்தி 1234567.89 வசூல் செய்து கார்கில் யுத்த நிதிக்கு அளித்தார்கள். முதலமைச்சர் நிதிவழியாக சுனாமி நிதிக்கு 1.5 லட்ச ரூபாயும்(2004) வெள்ளநிவாரண நிதிக்கு 1 லட்ச ரூபாயும் (2005) அளித்திருக்கிறார். நீலகிரி நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும்,இலங்கை தமிழர்களுக்காகவும் தன் இரண்டு மாத MLA சம்பளத்தை அளித்துள்ளார்.சமீபத்தில் பிரதமர் நிவாரண நிதிக்காக நாடகம் நடத்தி ரூ 5,00,000/- வழங்கினார்

NIIT நிறுவனத்தின் கம்ப்யூட்டர் கல்வித்திட்டத்தின் EACH ONE TEACH ONE திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தமிழ் நாடகஉலகுக்கு இவர் ஆற்றிய பணியின் காரணமாக இவருடைய வேண்டுகோளை ஏற்று மேடையிலேயே அன்றய முதல்வர் ஜெயலலிதா
தமிழக நாடகக்குழுக்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகங்களில் பயணம் செய்ய பாதிக்கட்டண சலுகை அறிவித்தார்.
1995 –இலிருந்து ஸ்ரீ சுகர் பப்ளிக் சாரிடபிள் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு பொதுத்தொண்டு நிறுவனத்தை இவர் ஏற்படுத்தி அதன் மூலமாக ஏழைக்குழந்தைகளுக்கு உடைகள் –படிப்பு-புத்தகங்களுக்கான செலவவினைஅளிப்பது, நலிந்தவர்களுக்கு மருத்துவ உதவி, ரத்ததான -கண்தான விழிப்புணர்வு,இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் ,நீரிழிவு உடையவர்கள், புற்று நோயாளிகள்,உடல் ஊனமுற்றவர்கள்,மனவளர்ச்சி குன்றியவர்கள் போன்றவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்/ முதியோர் இல்லம் போன்றவற்றிற்கும், திருநங்கைகளுக்கும் உதவிகள் செய்து வருகிறார். வருடத்திற்கு 200 பேருக்கு இலவச கண் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்து வருகின்றார்.
மேலும் Serve the Dead என்ற project மூலமாக அரசு மருத்துவ மனைகளிலிருந்து கோரப்படாத அனாதைப் பிணங்களை வாங்கி முறைப்படி சவ அடக்கம் செய்து வருகிறார்.( இதுவரை 600).
மனிதநேயமிக்க இவருக்கு மதநம்பிக்கை தெய்வநம்பிக்கை நிரம்பவே உண்டு. சென்னை மத்யகைலா ஷ் ​, சேலம் சுகவனேஸ்வரர் கோவில்,மதுரை முத்தப்பசாமி கோவில் ஆகியவற்றில் இவரது இஷ்ட தெய்வமான ஸ்ரீ சுகப்ரும்ம மகரிஷிக்கு சந்நிதியும் , கடலூர் அருகில் தொட்டி பிலாலியில் ஸ்ரீ சுகருக்கென்று தனிக்கோயிலும் கட்டியுள்ளார்..

27 வருடங்களாக சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும் இப்போது 10 வருடங்களாக கௌரவ ஆலோசகராகவும் இருந்துவருகிறார்.
இன்றய VIJAY TV அன்றய GEC TV-யின் தலைவராக பொறுப்பேற்று பல நல்ல நிகழ்ச்சிகளை [புதிரா,புனிதமா] அறிமுகம் செய்துவைத்தவர்இவர்.
தற்கொலையை தடுக்கும் ஆலோசனை மையமான ASHA–வின் brand ambassador ஆக இருந்தார்.
இவர் அ இஅதிமுக,தமிழ்நாடு மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களால் மதிக்கப்பட்ட மிக நேர்மையான ஊழலற்ற உறுப்பினர்[2006 -2011]. எஸ்வி சேகர் சட்டமன்றத்தில் கோரிக்கை​ வைத்து, அன்றய துணை முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களால் “சுடுகாட்டில் வேலை செய்யும் வெட்டியான்களை அரசு ஊழியர்களாக்கப்பட்டதை” தன் வாழ்நாள் சாதனையாக நினைக்கிறார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் சட்டமன்ற வாஞ்சிநாதன் என அழைக்கப்பட்டவர்.
கலைஞரின் ஆட்சியில் ,விடுதலை போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்வி சேகர் சட்ட மன்றத்தில் வைத்து அதை முதலமைச்சர் கலைஞர் உடனடியாக நிறைவேற்றியதை மிக பெருமையாக நினைக்கின்றார்

3500 வது நாடக விழாவிற்கு தலைமையேற்ற அன்றைய முதல்வர் கலைஞர், பல விஷயங்களை ​சேகரித்து நாடகம் நடத்துவதால் இவர் சேகரன் என் அழைக்கப்படுகிறார் என கவுரவப்படுத்தினார்

5600வது நாடக விழாவிற்கு தலைமை ஏற்ற அன்றைய முதல்வர் கலைஞர்,துணை முதல்வர்,இன்றைய முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,”இப்படிப்பட்ட மிக எளிமையான மிக சுருங்கிய அளவில் விரைவில் ஒரு நாடகத்தை தொடங்கி ,சரியான நேரத்தில் அதனை நிறைவு செய்து,அதிலே வருகின்ற நூற்றுக்கணக்கான காட்சிகள் அல்ல,பத்து பதினைந்து
காட்சிகளானாலும் ,அதிலே நூற்றுக்கணக்கான காட்சிகளில் காணுகின்ற ,ரசிக்கின்ற கருத்துக்களை மருந்து கேப்சூல்கள் போல நகைச்சுவையில் ,வைத்துக்கொடுக்கின்ற அந்தத் திறமையை நான் நடிகவேள் எம் ஆர் ராதாவிற்கு பிறகு இன்றைக்கு எஸ்வி சேகரிடம் காண்கிறேன்” என பாராட்டியது தன் வாழ்நாள் பெருமையாக நினைக்கின்றார்.
இன்றும் சுறுசுறுப்பாக தேனீயைப்போல உழைத்துக் கொண்டிருக்கும் எஸ்வி சேகர்
தன வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டால் எனக்கு எதிரிகளே கிடையாது
இன்றைய நண்பர்களும்,அன்றைய நண்பர்களும் மட்டுமே உண்டு என்று எண்ணும் குணமும் ,
தன் தாய் தந்தையின் முழு ஆசியும், அவர்கள், எனக்கு,கல்வியை விட
வாழ்க்கையில் ஒழுக்கம் மிக முக்கியம் என சொல்லி வளர்த்ததுதான் காரணம் என்கிறார்.​
சென்னை உலக திரைப்பட விழாவில் நான்கு ஆண்டுகள் துணை சேர்மனாக பணியாற்றி அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைத்து அரசிடமிருந்து ரூபாய் 25 லட்ஷம் பெற்றுக்கொடுத்தவர்
எஸ்வி சேகர் நான்கு முறை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்10 முறைகளுக்கு மேல் வாழ் நாள் சாதனையாளர் பட்டம் பெற்றவர்.

நம் 71 வயது (26-12-1950 ) இளைஞர் எஸ்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here