Saturday, July 11, 2026
- Advertisement -
Home Blog Page 239

Three Stars, a Cricket Match, and One Life-Changing Story: ‘TEST’ Premieres April 4

0

Not all tests are about winning — some test your courage, your dreams, and the sacrifices you make for them. On April 4, Netflix presents TEST, a compelling human drama where three lives intertwine beyond and because of the cricket field, each forced to make a choice that changes everything. Starring icons R. Madhavan, Nayanthara, and Siddharth, along with the ever-loved Meera Jasmine, this film marks a first-of-its-kind collaboration between these powerhouse performers and is also Netflix’s first original Tamil film of the year.

Backed by YNOT Studios, known for its bold and compelling stories, TEST also marks the directorial debut of S. Sashikanth, a visionary producer stepping behind the camera for the first time. The director shares, “Having nurtured stories as a producer for years, stepping into the director’s chair for TEST was both exhilarating and deeply personal. This film is about resilience, the weight of choices, and how life itself is the greatest test of all. Bringing together three powerhouse performers — R. Madhavan, Nayanthara, and Siddharth — for the first time made this journey even more special. I’m grateful to YNOT Studios, Netflix, and my incredible team for bringing this vision to life. Excited for the world to watch TEST unfold, streaming on Netflix from April 4.”

Monika Shergill, Vice-President, Content, Netflix India, shares, “Test marks our first Tamil original feature film of 2025. It’s a deeply compelling drama thriller that tests the moral thresholds of its three protagonists played by the powerhouse talents R. Madhavan, Nayanthara and Siddharth. Set against the backdrop of high-stakes cricket, it’s an emotional rollercoaster that puts the lives of a national level cricketer , a genius scientist and a passionate teacher on a collision course and forces them to make choices that test their ambition, sacrifice and courage. The director S. Sashikanth brings a fresh and assured directorial voice and deftly tells a story that will keep you hooked till the last minute. We are incredibly excited to bring ‘Test’ to our audiences across India and the world.”

In a game where the stakes are personal and the consequences unforgettable, every move matters. One moment, one choice — that’s all it takes to be the hero or the villain. This unmissable Tamil film isn’t just about the game; it’s about the TEST life throws at you.

Hero or villain — one choice to seal your fate. The real test begins on April 4, only on Netflix.

CREDITS
DIRECTOR: S. Sashikanth
WRITER: S. Sashikanth
PRODUCER: Chakravarthy Ramachandra & S. Sashikanth (A YNOT Studios Production)
KEY CAST: R. Madhavan, Meera Jasmine, Nayanthara, Siddharth (Alphabetical Order)

About Netflix:
Netflix is one of the world’s leading entertainment services, with over 300 million paid memberships in over 190 countries enjoying TV series, films and games across a wide variety of genres and languages.

Members can play, pause and resume watching as much as they want, anytime, anywhere, and can change their plans at any time.

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது.

கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் ‘டெஸ்ட்’. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த ‘YNOT’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது பற்றி இயக்குநர் சஷிகாந்த் பகிர்ந்து கொண்டதாவது, “பல ஆண்டுகளாக ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களைத் தயாரித்துவிட்டு தற்போது ‘டெஸ்ட்’ படத்திற்காக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவும் தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்தத் திரைப்படம் பல உணர்வுகள், சூழ்நிலைகளின் முடிவு, வாழ்க்கை எப்படி அனைவருக்கும் சில சோதனைகளைத் தருகிறது என்பதைத்தான் ‘டெஸ்ட்’ பேச இருக்கிறது. ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகிய மூவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பது ஸ்பெஷலான விஷயம். இந்த கதையை சாத்தியமாக்கிய ‘YNOT’ ஸ்டுடியோஸ், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் எனது அணிக்கும் நன்றி. ஏப்ரல் 4 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ படம் ப்ரீமியர் ஆகிறது” என்றார்.

நெட்ஃபிலிக்ஸ் கண்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், மோனிகா ஷெர்கில் பேசியதாவது, “2025 ஆம் ஆண்டில் எங்கள் முதல் தமிழ் திரைப்படம் ‘டெஸ்ட்’. நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அழுத்தமான த்ரில்லர் கதையாக இது உருவாகி இருக்கிறது. கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட கதை இது. ஒரு தேசிய அளவிலான கிரிக்கெட் பிளேயர், ஒரு விஞ்ஞானி மற்றும் ஆர்வமுடைய ஆசிரியர் ஒருவர் ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. அவர்களின் லட்சியம், தியாகம் மற்றும் தைரியத்தை சோதிக்கும் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக கதை இருக்கும். இயக்குநர் எஸ். சஷிகாந்த் இந்தக் கதையை கடைசி நிமிடம் வரை பார்வையாளர்களைக் கட்டிப் போடும் வகையில் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு ‘டெஸ்ட்’ படத்தைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

விளையாட்டில் ஒரு முடிவும் தருணமும் மறக்க முடியாதது. ஒரு கணம், ஒரு தேர்வு – அதுதான் ஹீரோவாகவோ வில்லனாகவோ மாற்றும். இந்தத் திரைப்படம் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்ல, வாழ்க்கை உங்களை நோக்கி வீசும் சோதனைகளையும் பற்றியது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: எஸ்.சஷிகாந்த்,
தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பு)
நடிகர்கள்: ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:
நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தும் உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், படங்கள் மற்றும் கேம்களை பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் வழங்கி வருகிறது.

உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம், நிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கத் தொடங்கலாம்.

“குடும்பஸ்தன்” படம் மார்ச் 7 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது !

0

ZEE5ல் தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்பஸ்தன்” டிஜிட்டல் வெளியீடு – ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் தினசரி போராட்டங்கள் குறித்த நகைச்சுவைக் கதையை பார்க்கத் தயாராகுங்கள்!

~ இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் ஷான்வி மேக்னா முக்கிய வேடங்களில் நடித்துள்ள குடும்தபஸ்தன் ! படம் டிஜிட்டலில் மார்ச் 7ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது ! ~

மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள். திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்பஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை நாயகன் நவீன் (கே மணிகண்டன்), ஒரு கிராபிக் டிசைனர், வேலை இழந்து பிறகு, அவனது மனைவி வெண்ணிலா (ஷான்வி மேக்னா) கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையை படு சிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் காமெடியாகவும் சொல்கிறது.

மோசமான வணிக முயற்சிகள், தோல்வியுற்ற ரியல் எஸ்டேட் திட்டம், மற்றும் அவனது மாமா ராஜேந்திரனின் (குரு சோமசுந்தரம்) உடனான சண்டைகள், என நவீனின் வாழ்வில் மேலும் மேலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், உண்மையையும் கலந்த அழகான இந்தக் கதையில், நவீன் தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறான் எந்த எல்லைக்குப் போகிறான் என்பதை படு சுவாரஸ்யமாகவும், காமெடியும் கலந்து சொல்கிறது இப்படம்.

ZEE5 நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது..,
குடும்பஸ்தன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் கண்ணீரையும் சிரிப்பையும் ஒருசேர வரவழைத்துள்ளது இப்படம். ZEE5ல் நல்ல தமிழ்ப் படைப்புகளுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த அரிய ரத்தினத்தை எங்கள் ZEE5ல் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். அற்புதமான நடிகர்கள், மிகச்சிறந்த நடிகர்களின் உழைப்பில், ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் வாழ்க்கை கஷ்டங்களை, உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாட்டத்துடனும் சொல்லும் இப்படத்தை, திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடியதைப் போலவே, இப்போது இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம். வரும் மார்ச் 7 அன்று ZEE5 இல் இப்படத்தை கண்டுகளியுங்கள்.

இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி கூறியதாவது..,
“ஒரு அறிமுக இயக்குனராக, ஒரு அற்புதமான குழுவுடன் குடும்பஸ்தன் படத்தை உருவாக்கியது, மிக அபாரமான பயணமாக அமைந்தது. தியேட்டர்களில் நவீனின் பயணத்தை பார்வையாளர்கள் கொண்டாடியதைக் காண, பெரு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம், அனைத்து மக்களும் இந்த காமெடி என்டர்டெயினரை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது,
குடும்பஸ்தனில் ஒரு மிடில்கிளாஸ் இளைஞனாக நவீன் பாத்திரத்தை ஏற்று நடித்தது, மிகச் சவாலான அனுபவமாக இருந்தது. குடும்பத்துக்காக ஒரு இளைஞன் படும், துயரங்கள், சிக்கல்கள், அவனின் சாகசங்கள் என மிக உணர்ச்சிகரமான பயணமாக அமைந்தது. நவீன் கதாப்பத்திரம் அனைத்து இளைஞர்களின் பிரதிபலிப்பு. இந்த அற்புதமான திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் ZEE5 மூலம் ரசிக்கவுள்ளது, பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், குடும்பம் சார்ந்த முடிவுகளில் உங்கள் சிந்தனையை மாற்றும்.

ஷான்வி மேக்னா கூறியதாவது, “வெண்ணிலா அன்பு நிறைந்த ஒரு அழகான பாத்திரம், குடும்பத்தைச் சுற்றி நடக்கும் குழப்பங்களுக்கு மத்தியில், தனது கனவுக்காக போராடும் ஒரு இளம் பெண். நவீனின் தொடர் சாகசங்களுக்கு இணையாக அவளும் இணைந்திருப்பது, ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் அனுபவமாக அமைந்தது. பார்வையாளர்களை தங்கள் சொந்த வாழ்க்கையை நினைத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பல தருணங்களின் சரியான கலவையை இப்படம் வழங்குகிறது. பல ஆச்சரிய திருப்பங்களுடன் கூடிய இந்த ஃபெமிலி என்டர்டெயினர் திரைப்படத்தை, Zee5 மூலம் அனைத்து மக்களும் ரசிக்கவுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நிவேதிதா ராஜப்பன் கூறியதாவது,
குடும்பஸ்தன் படத்தின் ஒரு அங்கமாக நானும் இருந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனது கதாபாத்திரம் நவீனின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களுக்கு மேலும் ஒரு புதிய அடுக்கைச் சேர்க்கிறது, கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில், இது உண்மையான வாழ்க்கை போராட்டங்களை மிக அருமையான நகைச்சுவையுடன் சொல்கிறது. திரையரங்குகளில் இப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ZEE5 மூலம் இப்போது அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதைக் காண ஆவலோடு உள்ளேன்.

குடும்பஸ்தன் திரைப்படம் ZEE5ல் மார்ச் 7ல் ஸ்ட்ரீமாகிறது!

”Mookuthi Amman 2” ritual pooja ceremony happened with grand set work worth Rs.1 Crore

0

”Mookuthi Amman 2 to be produced at a grand scale of 100-Cr budget

Vels Film International, one of the well-esteemed production houses of Tamil film industry in association with Ivy Entertainment collaborates to produce one of the biggest entertainers – Mookuthi Amman 2, directed by Sundar C, featuring Nayanthara in the lead role. Co produced by Avni Cinemax (P) Ltd and Rowdy Pictures.

The film was launched this morning (March 6) with a grand ritual ceremony with opulent set work worth 1Cr. The occasion was graced by the film’s cast and crew along with eminent personalities from the film industry including ……..

While Mookuthi Amman Part 1 was a massive success, Dr. Ishari K Ganesh of Vels Film International has teamed up with Ivy Entertainment to create Mookuthi Amman 2 as a grand spectacle on a grand scale. This standalone movie will have its franchise with the Midas-touch of ‘King of Commercial Entertainer’ – Sundar C.

Mookuthi Amman 2 will have a riveting plot laced with unlimited laughter. The expectations are peaking to pinnacle as this film marks the first-ever collaboration of Sundar C and Nayanthara.

Nayanthara plays the lead character, while others actors Duniya Vijay, Regina Cassandra, Yogi Babu, Urvashi, Abhinaya, Ramachandra Raju, Ajay Ghosh, Singam Puli, Vichu Viswanath, Iniya, Mynaa Nandini are playing prominent characters in this movie.

Hiphop Adhi is composing music for this film. Gopi Amarnath is the cinematographer, Fenny Oliver is the Editor. Venkat Raghavan is penning dialogues, Gururaj is overseeing art works and Rajashekar is choreographing action sequences.

Mookuthi Amman 2 will be an out-and-out entertainer with breathtaking action, strong story premise, and unlimited laughter.

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.

தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள் மூலம், திரையுலகைச் செழிக்க வைப்பதுடன், ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வரும் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தொழில் நுட்ப குழுவில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங், வெங்கட் ராகவன் வசனம், கலை இயக்கம் பொன்ராஜ், சண்டைப்பயிற்சி ராஜசேகர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பரபரப்பான ஆக்சன், வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்து ஒரு அற்புதமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.

உலக மக்களின் இசைஞானி அய்யா @ilaiyaraaja

0

உலக மக்களின் இசைஞானி அய்யா @ilaiyaraaja அவர்களை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற ‘சிம்பொனி’ இசை நிகழ்ச்சிக்கு அரிசி திரைப்படத்தின் கதையின் நாயகன் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்,இயக்குனர் எஸ் ஏ விஜயகுமார் மற்றும் தயாரிப்பாளர் பி சண்முகம் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியடைந்தனர்..

மார்ச் 7 இல் வெளியாக இருந்த ‘அஸ்திரம்’ படம் ரிலீஸ் தள்ளி வைப்பு அஸ்திரம்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்

0

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வரும் மார்ச்-7ஆம் தேதி இந்த படம் தமிழகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோது படம் பார்த்த அனைவரும் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக பாசிட்டிவான விமர்சனங்களையே கூறினார்கள். ஆனாலும் இந்த வாரம் இன்னும் அதிக அளவில் சில படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ‘தியேட்டர் பகிர்வில் ‘அஸ்திரம் படத்திற்கு போதுமான அளவு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த படம் வெகுவான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை தந்திருக்கும் படக்குழுவினர், அதிக திரையரங்குகள் கிடைக்கும் விதமாக இன்னொரு நாளில் ‘அஸ்திரம்’ படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Prime Video’s Suzhal– The Vortex S2 is a Captivating Tale of Female Empowerment

0

When it comes to gripping thrillers and edge-of-the-seat dramas, Suzhal– The Vortex has created an incredible fan base over two captivating seasons, delivering outstanding performance, top-notch entertainment and excellent crime mysteries with cultural nuances at its core. Just like Season 1 was set against the backdrop of the festival Mayana Kollai, this season goes a step further with the story set against the vibrant festival of Ashtakaali. It is a celebration of the divine feminine energy, where devotees worship the eight goddesses through sacred rituals, prayers, and offerings. Suzhal: The Vortex S2 unfolds in layers, with eight stand-out performances portrayed significantly by eight remarkable girls, symbolizing these eight goddesses associated with the festival.

The girls represent the eight goddesses exemplifying their strengths and characteristics with immense depth and modulation, bringing to life the mystical powers that unite during the festival. This was brought to life under the creative genius and guidance of the visionary creators Pushkar and Gayatri, who along with their team conducted meticulous research to bring this fascinating aspect of the Tamilian festival. The idea of balancing ancient folklore and infusing it with female empowerment, fearlessness and self-discovery, the series masterfully imbibes the best of both worlds to bring forth a solid thriller. This combined with phenomenal performances shouldered by these eight girls makes the series culturally resonant and narratively immersive, garnering season 2 widespread acclaim and rave reviews calling it a worthy sequel!

Suzhal–The Vortex Season 2 is produced under the banner of Wallwatcher Films, written and created by Pushkar and Gayatri, and directed by Bramma and Sarjun KM. The series features a highly talented ensemble cast, including Kathir and Aishwarya Rajesh reprising their lead roles, along with Lal, Saravanan, Gouri Kishan (Muthu), Samyuktha Vishwanathan (Naachi), Monisha Blessy (Muppi), Rini (Gaandhari), Shrisha (Veera), Abhirami Bose (Senbagam), Nikhila Sankar (Sandhanam), Kalaivani Bhaskar (Ulagu), and Ashwini Nambiar in pivotal roles, along with Manjima Mohan and Kayal Chandran making special appearances. Suzhal—The Vortex Season 2 is streaming exclusively on Prime Video in India and over 240 countries and territories in Tamil, Telugu, Hindi, Malayalam, and Kannada with English subtitles.

பிரைம் வீடியோவின் சுழல் – வோர்டெக்ஸ் S2: பெண்ணியத்தைக்  கொண்டாடும் கதை !

“சுழல் – வோர்டெக்ஸ்” சீரிஸ் தமிழில் திரில்லர் சீரிஸ்களுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது.  இந்த சீரிஸின் இரண்டு  சீசன்களும் ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போட்டுள்ளது. ஒரு  திரில்லராக மட்டுமால்லாமல், கலாசார நுட்பங்களுடன் கூடிய தனித்துவமான கதையையும், மிகச்சிறந்த கதாப்பாத்திரங்களையும் உருவாக்கியதில் சிறப்பு மிக்க தொடராக பாராட்டுக்களைக் குவித்துள்ளது. முதல் சீசன் மாயனக் கொள்ளை திருவிழாவின் பின்னணியில் அமைந்திருந்தது. இரண்டாவது சீசன் மேலும் ஒரு படி முன்னேறி, அஷ்டகாளி திருவிழாவைக் களமாகக் கொண்டு கதையைச் சொல்லுகிறது. இந்த திருவிழா தெய்வீகமான பெண்மையின் ஆற்றலைப் போற்றும் ஒரு திருவிழா, இதில் பக்தர்கள் எட்டு தேவியர்களை வழிபடும் தெய்வீக நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன.

சுழல்: வோர்டெக்ஸ் S2 கதையின் பரிமாணங்களை அடுக்குக்கடுக்க வெளிப்படுத்துகிறது, குறிப்பாக திருவிழாவுக்குப் பின்னணியில் உள்ள எட்டு தேவிகளின் விசித்திரமான அம்சங்களைச் சின்னமாகக் காட்டும் எட்டு சிறுமிகள் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த சிறுமிகள் ஒவ்வொரு தேவியின் ஆற்றலையும் குணாதிசயங்களையும் ஆழமாகவும் சிறப்பாகவும் பிரதிபலிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தேவியின் தெய்வீக சக்திகளை கதையில் உயிர்ப்பிக்கின்றனர்.

தமிழின் முக்கிய படைப்பாளிகளான  புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் இந்த படைப்பு உருவாகியுள்ளது.  தமிழ் திருவிழாக்களின் பல பரிமாணங்களையும் ஆராய்ந்து, புதிய முறையில் பெண்கள் திறனை வெளிப்படுத்தும் கதைக்களத்தை இக்கதையில் உருவாக்கியுள்ளனர். பாரம்பரிய மகத்தான கலைகளையும், பெண்களின் துணிச்சலும் தன்னலமும் ஒரே நேரத்தில் இணைத்து, ஒரு த்ரில்லர் கதையாக உருவாக்கியுள்ளனர். இந்த எட்டு சிறுமிகளின் அட்டகாசமான  நடிப்பும், கலாசார ரீதியான அம்சங்களும், ஆழமான கதையும் “சுழல்” தொடருக்கு மெருகூட்டுகின்றது.  முதல் சீசனைப் போலவே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்,  இரண்டாவது சீசனும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

“சுழல் – வோர்டெக்ஸ்” சீசன் 2, வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயற்றி இப்படைப்பை எழுதி உருவாக்கி எழுதியுள்ளனர். பிரம்மா மற்றும் சர்ஜுன் KM ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் முதல் சீசனில் பங்குபெற்ற கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், சரவணன், கவுரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஷ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஷ்ரிஷா (வீரா), அபிராமி போஸ் (சென்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். “சுழல் – வோர்டெக்ஸ்” சீசன் 2 தற்போது பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

‘லீச்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

0

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் .எம் .

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில்
அனூப் ரத்னா தயாரித்துள்ளார்.

அருண் T சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், எடிட்டர் -ஆல்வின் டாமி,பாடல்கள் – ரஃபீக் அஹமத்,விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா, பாடகர்கள் ஹரிச்சரன், கீர்த்தனா, ஸ்மிதா.

தயாரிப்பு வடிவமைப்பு செய்துள்ளார் ஜாலி டேவிசன் சி.ஜே. நடனம் -ஷெரிப் மாஸ்டர், ஷிபு , சண்டைப் பயிற்சி – டேஞ்சர் மணி, கலை – ராஜு கோவிலகம்,வெளியீடு எஸ் எப் சி ஆட்ஸ்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் நடிகருமான அனூப்ரத்னா வரவேற்புரையாற்றினார்.

அவர் பேசும் போது.

“தமிழில் இது எனக்கு முதல் மேடை. இங்கே வருகை புரிந்துள்ள கே ராஜன் சார், பேரரசு சார் அவர்களுக்கு நன்றி.இந்த எங்களின் புதிய முயற்சிக்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும்.

நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், மிமிக்ரி ஆர்டிஸ்ட், குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் சினிமா தான் எனது இலக்காக இருந்தது.

நான் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம் என முடிவு செய்தேன்.அதன் மூலம்
புதிய புதிய எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு,கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்துதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.

முதலில் எந்த மாதிரியான படம் எடுப்பது என்று யோசித்தோம். பிறகு ஒரு ஆக்சன் த்ரில்லர் வகையிலான படம் எடுப்பதற்கு முடிவு செய்தோம்.
நமக்கு ஜாக்கிசானைத் தெரியும் ஜெட் லீ, சில்வஸ்டர் ஸ்டாலோன் எல்லாரையும் தெரியும் .காரணம் அவர்கள் அனைவரும் ஆக்ஷன் ஹீரோஸ் என்று புகழ் பெற்றவர்கள்.நம்மூரில் ரஜினி சார், சிரஞ்சீவி சார் அனைவரையும் தெரியும்.அவர்களும் ஆக்ஷன் ஹீரோவாகப் புகழ் பெற்றவர்கள் .

லீச் என்றால் அட்டைப்பூச்சி, அது நமக்குத் தெரியாமலேயே நம் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது.
அதை நாம் கவனிக்காமல் விட்டால் அது கடித்து ரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கூடவே இருப்பார்கள். ஒருவனுக்கு அருகே இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் யார் நல்லவர்? யார் கெட்டவர் ? என்று பார்த்தால் தெரியாது, ஆனால் ரத்தத்தை உறிஞ்சக் கூடியவர்களாக இருப்பார்கள். இதுதான் கதையின் அடிப்படையான ஆதார வரியாக இருக்கும்.தங்களின் புதிய முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன்” என்றார்.

சண்டை இயக்குநர் டேஞ்சர் மணி பேசும் போது,

“ஒரு படத்தில் ஆண்களுடன் ஆண்கள் சண்டை போடுவதாக எடுப்பதாக இருந்தால் சுலபம். பெண்களுடன் பெண்கள் சண்டை போடுவதும் அப்படித்தான் .ஆனால் இதில் ஆண்களும் பெண்களும் சண்டை போடுவது போல காட்சிகள் உண்டு.அதனால் சிரமப்பட்டு எடுத்தோம்.எனக்கு மலையாளம் தெரியாத போதும் சிரமப்பட்டுப் புரிந்து கொண்டு இந்தப் படத்தை முடித்தோம். படக் குழுவினர் அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்”என்றார்.

விநியோகஸ்தர் ஷிஜின்லால் பேசும் போது,

“இதை முதலில் மலையாளத்தில் மட்டும் எடுப்பதாக இருந்தது.நான் தான் சொன்னேன் இதைத் தமிழில் தெலுங்கிலும் கொண்டு வரலாம் என்று. ஏனென்றால் இங்கே உள்ள ரசிகர்கள் ஒரு படத்தில் நடித்திருக்கும் பெரும் நடிகர்களை மட்டும் பார்ப்பதில்லை. படம் எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் பிறகு பணிகளில் இறங்கியபோது தமிழ் மொழிக்கும் ஏற்றதாக இருந்தது. கேரளாவில் கதை மட்டும் முக்கியமாகப் பார்ப்பார்கள்.அதை முன்னிட்டுச் சிக்கனமாக எடுப்பார்கள். ஆனால் இது எல்லோருக்கும் ஏற்ற மாதிரி ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும்.படம் நன்றாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் கூறினேன்.நம்பி வாங்க என்று கூறினேன்.அனூப் மலையாளத்தில் சுமார் 20 படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருப்பார். ஆரம்பத்தில் இதில் அவர் நடிப்பதாக இல்லை.ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நடிகராக மட்டும் இருந்தார்.அவருக்கு ஏற்ற மாதிரி இருந்ததால் பிறகு தான் இதில் வந்தார்.
இதில் நன்றாக நடித்துள்ளார்.படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே ராஜன் பேசும்போது ,

“இந்தப் படத்தை அழகாக எடுத்திருக்கிறார்கள்.இந்த விழாவில் கேரளாவில் இருந்து வந்திருந்த அவர்கள் தமிழ் பேசிய அழகே தனி.நான் இப்போது சொல்கிறேன் நீங்கள் பேசிய தமிழ் அழகு. கதாநாயகி கூட அழகாகத் தமிழ் பேசினார்.

கேரளாவில் இருந்து தமிழை நம்பி வந்திருக்கிறார்கள்.தமிழையும் தமிழர்களையும் நம்பி வந்தால் எதுவும் தவறாகப் போகாது.
தமிழர்கள், தான் கெட்டுப் போவார்கள் தவிர அடுத்தவர்களைக் கெடுக்க மாட்டார்கள்.வாழ வைப்பார்கள்.
படத்தின் பெயர் லீச் என்று உள்ளது. அப்படி என்றால் ரத்தம் உறிஞ்சும் அட்டை என்று பெயர். இன்று சமுதாயத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், கோடீஸ்வரர்கள் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

நம் நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரனாக உயர்ந்து கொண்டே போகிறான்.

உலகத்தில் மூன்றாவது பணக்காரர் யார் என்று உங்களுக்கே தெரியும். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். திட்டமிட்டு ஒரு குடும்பத்தையே பணக்காரர் ஆக்கி கொண்டு வருகிறார்கள்.

ஏழைகள் எண்பது கோடி பேருக்கு 5 கிலோ அரிசி இனாம் என்கிறார்கள். ஏன் இனமாக,இலவசமாகப் போடுகிறீர்கள்?

சுதந்திரமடைந்து 75 ஆண்டு காலமாகியும் ஏன் இலவசம் தரவேண்டும்?
வேலைவாய்ப்பு இல்லை. அது இல்லாமல் சிரமப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டுமே தவிர இலவசம் கொடுக்கக் கூடாது.

ஏழைகள் ஏழைகளாக இருப்பது, இந்தியாவில் இன்று பேசு பொருளாக இருக்கிறது. அதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
நாம் வாழ்வோம் அடுத்தவர்களை வாழ வைப்போம்.

ஆன்மா மூன்று வகைப்படும்.
ஆத்மா, புண்ணிய ஆத்மா, மகாத்மா என்றும் மூன்று வகைப்படும். .ஆத்மா நமக்குள்ளே இருக்கிறது.
நாம் நன்றாக இருக்கவேண்டும், நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்துப் பிழைத்து ஆத்மாவைக் காப்பாற்றுகிற வகை.இது சாதாரண ரகம்.

நாம் நன்றாக இருக்க வேண்டும் நாம் சம்பாதித்து மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் வகை அவன் புண்ணிய ஆத்மா.

தன்னைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பிறர் வாழ வேண்டும் என்று மட்டும் நினைப்பவன் மகாத்மா .அப்படிப்பட்ட மகாத்மாக்கள் நாட்டில் சிலர்தான் உண்டு.
மகாத்மா காந்தி, அன்னை தெரசா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லாம் மகாத்மாக்கள்.

இன்று தமிழ் சினிமா நொந்து போயிருக்கிறது; வெந்து கொண்டிருக்கிறது.இன்று சின்ன கம்பெனிகள் மட்டுமல்ல பெரிய கம்பெனிகளும் சிரமத்தில் இருக்கிறார்கள்.இதற்குக் காரணம் கார்ப்பரேட் கம்பெனிகள். அவர்கள் தான் சம்பளத்தை உயர்த்தி உயர்த்தி சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முடியாத அளவிற்குச் செய்துவிட்டார்கள்.

எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? தமிழ்த் திரையின் தலை மகன் தமிழ் சினிமாவின் அடையாளம் உலக நடிகர்களுக்கெல்லாம் தலைவன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.நாடகங்களில் நடித்து திரைப்படங்களில் புகழ்பெற்று
உலக நடிகனாக உயர்ந்து காட்டிய அவர் அண்ணாவால் தென்னாட்டு மார்லன் பிராண்டா என்று பாராட்டப்பட்டவர்.நடிப்பால் உலகத்தையே கவர்ந்த அந்த சிவாஜி கணேசனின் வீடு இன்று ஏலம் போவதற்கு தயாராகி விட்டது.ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்துள்ளது.

செய்தியைப் படித்த போது வருத்தமாக வேதனையாக இருந்தது .
மூன்று கோடி கடன் வாங்கி பேரப்பிள்ளை படம் எடுத்ததில் வட்டி ஏறி 9 கோடி ஆகி உள்ளது.
இன்று ஏலம் விடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது.
முடிந்தவர்கள் உதவி செய்யலாம்.

பெரிய நடிகர்கள்
பத்து பேர் சேர்ந்தால் இதைத் தீர்க்க முடியும்.

சிவாஜியால் கலைஞரா? கலைஞரால் சிவாஜியா ?என்கிற அளவுக்கு ஒருவரால் ஒருவர் புகழ் பெற்றனர். சிவாஜிக்கு நெருக்கமானவர் கலைஞர்.அந்த குடும்பத்தில் இருந்து வந்த முதல்வர் ஏதாவது செய்யலாம். தமிழக அரசு இதில் ஏதாவது செய்யலாம். தமிழக கதாநாயகர்கள் உதவி செய்யலாம்.அல்லது நடிகர் சங்கம் உதவி செய்து அந்த சிவாஜியின் வீட்டைக் காப்பாற்றுங்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை வேண்டுகோளாக வைக்கிறேன்.

இந்த லீச் பெரிய வெற்றி பெற்று மக்கள் மனதில் சென்று சேர வேண்டும்.பெரிய படங்கள் தான் ஓடும் என்ற நிலை இல்லை. சின்ன படங்கள் சென்ற ஆண்டு வெளியானதில் 10 -12 படங்கள் வெற்றி பெற்றன.
இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறி வாழ்த்தினார் .

அடுத்து இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை கேட்போம் ரசிப்போம் கேட்கிறபோதும் ரசிக்கிறபோதும் மகிழ்ச்சியாக இருந்தது .
ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது .ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது
அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.அந்தப் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும் .நீங்கள் கேட்பதற்கு மட்டும் தானா பாட்டு போடுகிறீர்கள்? அதை நாங்கள் பாட வேண்டாமா?இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று.
படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஹோட்டல்களில் , நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம்.

இங்கே அருமையாக நிஜாம் பாடினார் .அவரது திறமை வெளிப்படுத்துவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றே நினைக்க வேண்டும்.

ஆரம்பத்தில் எல்லா திரைப்படப் பாடல்களும் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்கள் அடிப்படையாக வைத்து வெற்றி பெற்றன. பிறகு தான் தங்களது இசையை உள்ளே கொண்டு வருவார்கள்.

இந்தப் படத்தின் கதாநாயகி சந்தியாவாம். தமிழ்நாட்டுக்கு சந்தியாக்கள் மூன்று தலைமுறையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் அம்மா ஒரு சந்தியா, காதல் படத்து சந்தியா ஒன்று, இப்போது மூன்றாவதாக இந்த சந்தியா வந்ந்திருக்கிறார்.

இன்று நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே அட்டைகளாகி வருகிறார்கள். நம்மிடம் ரத்தம் இருக்கும் வரை அட்டைப் பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சுதற்கு இருக்கும்.

இதில் மூன்று பாடல்களுமே நன்றாக உள்ளன.இது மாதிரியான பாடல் வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.
இப்போது வந்துள்ளது. அந்தாதி ரகத்தில் ஒரு பாடல் வந்துள்ளது .எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

இதில் படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள்.கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள் .ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது.
இன்னொரு மொழி தெரிவது பிழையில்லை.
இங்கு இவ்வளவு பேர் மத்தியில அவர்கள் மலையாளத்தில் பேசியே புரியவைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது.

தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 250 படங்களுக்கு மேல் நடித்தவர். பெரிய புகழ் பெற்றவர். தாத்தா 250 படங்களில் நடித்து சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தை எடுத்ததில் இழந்திருக்கிறார். அந்த வீடு ஜப்தி நடவடிக்கைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என்றால் நினைத்துப் பாருங்கள்.

ஒரு படம் எடுத்தால் ஒட்டுமொத்த சொத்தும் போய்விடுமா ?

இது சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் அல்ல. தமிழ் திரை உலகத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு ஆபத்தில் இருக்கிறது சினிமா .
இந்தச் செய்தியைப் பார்த்தால் யார் படம் எடுக்க வருவார்கள்?
அனைவருக்குள்ளும் ஒற்றுமை வேண்டும்.நான் ஒரு செய்தியைப்படித்தேன்.பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் நடிக்கும் படத்திற்குச் சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. முன்பணம் எதுவும் வாங்குவதில்லை .கதை பிடித்திருந்தால் நடிப்பார்.அந்தப் படத்தின் வசூலில் ஒரு பகுதியை, லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் பெறுகிறார் என்று படித்தேன்.என்ன ஒரு அருமையான திட்டம்! எப்படிப்பட்ட மனம் அவருக்கு! அந்த அளவுக்கு அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமாவும் அவரைக் கைவிடாது.
இப்படிப்பட்ட நிலை இங்கு வருமா? இந்த புதிய படக் குழுவினரின் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

முன்னதாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஜாம் பல குரல்களில் பேசி, திரைப்படப் பாடல்களைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கலைஞர் தொலைக்காட்சியில் புதிய கதைக்களத்தில் “பவித்ரா”

0

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “பவித்ரா”. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் குழந்தைகளாக வந்த பவித்ரா, அர்ஜூன் ஆகியோர் பெரியவர்களாகி இருப்பதால் பவித்ரா தொடர் இனி புதிய கதைக்களத்தில் விறுவிறுப்பாக செல்லவிருக்கிறது.

மேலும், தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வேணு தனது உயிரை கொடுத்து பவித்ராவை காப்பாற்றுகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அர்ஜூனை சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு அனுப்பிய நிலையில், தற்போது அர்ஜூன் மீண்டும் இந்தியா திரும்பி இருப்பதால் பவித்ரா – அர்ஜூனுக்கு இடையேயான காதல் மீண்டும் துளிர்விட இருக்கிறது.

ரமாதேவி, பவித்ரா, அர்ஜூன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இனி விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது, எனவே பவித்ரா நெடுந்தொடரை தொடர்ந்து கண்டுகளியுங்கள்.

நாசர் எனும் மகா கலைஞன்

0

மார்ச் 5-ல் நாசர் அவர்கள் தனது 67-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இயக்குனர் மிஷ்கினுக்கும் நாசர் அவர்களுக்கும் மகனுக்கும் தந்தைக்குமான உறவு. முகமூடி, நந்தலாலா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘ட்ரைன்’ படத்தில் இணைகிறார்கள்.

‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நாசர். இவ்வருடம் திரையுலகத்தில் நாசர் அவர்களின் 40-ம் ஆண்டாகும். இந்த பிறந்த நாளில் நாசர் எனும் மகத்தான கலைஞனை கொண்டாடுவோம்.

A Book That Will Be of Great Help to the Youth! Chronicling the Life and Achievements of a Media Visionary.

0

Chennai, A Rainbow Life (Tamil: “Oru Vanavil Vaazkai”), a compelling biography of media industry stalwart Narasingapuram Chellamuthu Rajamani, has been launched by the Centre for Development Education and Communication, Department of Journalism and Communication, University of Madras. Written by renowned author R. Ranimainthan, former Head of the Research Department at BBC World, the book captures the remarkable journey of Dr. N.C. Rajamani, whose contributions have shaped the media landscape over the past five decades.

A Fulbright Scholar in Information and Communication Technology and an alumnus of Harvard Business School, Dr. Rajamani played a pioneering role in Doordarshan Madras, introducing several innovations that significantly influenced the growth of the television industry. His career spans leadership roles, including serving as Director of the Content Management team at Astro TV in Malaysia, where he contributed extensively to media management, content creation, technological advancements, and revenue generation.

One of his most notable achievements includes setting a Guinness World Record for continuous digital live streaming broadcasting, solidifying his reputation as an industry innovator. His foresight was evident even five decades ago when he produced a documentary on alternative energy, a subject that remains highly relevant today.

Author Mr. Ranimainthan has masterfully brought Dr. Rajamani’s experiences to life, crafting a narrative that serves as an inspiration for young minds and media professionals. During the book launch, J. Radhakrishnan, Chairman and MD of the Tamil Nadu Electricity Board, emphasized the book’s significance, stating: “This is a book that will be of great help to the youth. Dr. Rajamani, born in a humble village, has risen to great heights through his vision and perseverance. His story is a must-read, especially for those in the media industry.”

A Rainbow Life is more than just an autobiography—it is a testament to resilience, innovation, and the pursuit of excellence. The book is now available for readers eager to explore the inspiring journey of a man who has left an indelible mark on the media industry.

- Advertisement -

Recent Posts