- Advertisement -
Home Blog Page 252

SUVAIYO SUVAI

0

உங்கள் ஜெயா டிவியில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் சுவையோ சுவை நிகழ்ச்சியில் சமையல் கலைஞர் பழனி அவர்கள் பலவித சுவையான உணவு வகைகளை புதுமையான முறையில் நேயர்களுக்கு சமைத்து வழங்குகிறார். . நேயர்கள் விரும்பி அனுப்பும் விதவிதமான பல்வேறு சமையல் குறிப்புகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனையும் சமைத்து காட்டுகிறார்.
இந்நிகழ்ச்சியின் இடையே தொகுப்பாளர் ஷீத்தல் சமையல் குறித்து கேட்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார் சமையல் கலைஞர் பழனி.
சுவையான உணவு வகைகளை புதுமையான முறையில் வீட்டில் இருந்தபடியே சமைத்து சுவைத்திட சுவையோ சுவை நிகழ்ச்சியை உங்கள் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு கண்டு களியுங்கள்.

”சினிமாவை உயிராக நேசிப்பவர்களை சினிமா கைவிடாது” – ‘மிக்ஸிங் காதல்’ பட விழாவில் இயக்குநர் என்.பி.இஸ்மாயில் பேச்சு

0

”அரசுக்கு ரூ.1000 கோடி கிடைத்தாலும், சினிமாத்துறைக்கான முறையான கட்டமைப்பு இல்லை: – ‘மிக்ஸிங் காதல்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம்

”ஹாலிவுட் படம் போல் எடுக்காதீர்கள், நம் கலாச்சாரம், வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை எடுங்கள்” – பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்

”தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதே என் ஆசை” – ‘மிக்ஸிங் காதல்’ நாயகி சம்யுக்தா வின்யா

‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் மோகன் மற்றும் கோனேஸ்வரன் இசையமைத்துள்ளனர். கவித படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக ஏ.கார்த்திக் பணியாற்றியிருக்கிறார். இஸ்மாயில் மற்றும் கோனேஸ் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றியிருக்கிறார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, இயக்குநர் ரஷீத், மூத்த பத்திரிகையாளர் உமாதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

மிக்ஸிங் காதல் படத்தின் இசைத்தட்டை வெளியிட்ட பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வம்ணி பேசுகையில், “இயக்குநர் இஸ்மாயில் எனக்கு நெருங்கிய நண்பர், அவர் என்னை அழைத்த போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பண்ணியிருக்கே, நிச்சயம் நான் வருவதாக சொன்னேன். இன்று காதலர் தினம், அதனால் என் மனைவியை டின்னர்க்கு அழைத்துச் செல்வதாக கூறினேன், அவரும் இதற்காக ஊரில் இருந்து வந்திருக்கிறார். அதனால், காலதாமதம் பண்ணி மிக்ஸிங் காதல் மூலம் என் காதலை கெடுத்துவிடாதே, என்று சொன்னேன். அவரும் உங்களை உடனடியாக அனுப்பி வைத்துவிடுகிறேன், என்றார். ஆனால், இங்கு வந்தால் 7.30 மணி நிகழ்ச்சி தொடங்கவில்லை, இதுபோன்ற சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும், நாம் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். நானும் இஸ்மாயிலுக்காக பொறுத்துக் கொண்டேன். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள் அனைத்துமே ஈர்க்க கூடியதாக இருந்தது. இஸ்மாயில் இந்த படத்தை மிக சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.

தற்போதைய காலக்கட்டத்தில் திரையுலகம் கொரோனா காலக்கட்டம் போல் தான் சென்றுக் கொண்டிருக்கிறது. இன்று சினிமாவின் தேவை சமூகத்திற்கு அதிகமாக தேவைப்படுகிறது. அனைவரும் அனைத்து படங்களையும் பார்க்கிறார்கள், ஆனால் அவர் படங்களை எதில் பார்க்கிறார்கள் என்பது தான் தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் மூலம் பல வழிகளில் வருமானம் வருகிறது, ஆனால் அவை தயாரிப்பாளருக்கு கிடைக்காத ஒரு நிலை தான் இங்கிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. அதன் மூலம் திரைப்படத்துறையில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி வியாபாரம் நடைபெறுகிறது. அதன் மூலம் ஜி.எஸ்.டியாக ரூ.540 கோடியும், லோக்கல்பாடி வரியாக ரூ.100 கோடி மற்றும் வருமான வரி என சினிமாத்துறை மூலம் அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி கிடைக்கிறது. ஆனால், சினிமாத்துறைக்கான ஒரு முறையான கட்டமைப்பு இல்லை. இன்று ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அது என்ன ஷோவில் ஓடுகிறது, என்று சரியாக தெரிவதில்லை. மல்டிபிளக்ஸில் ஓடிகொண்டிருக்கும் படத்தை குறிப்பிட்ட ஸ்கிரீனில் போட்டிருக்கிறார்கள், சென்று பார்க்கலாம் ஒரு நாள் 11 மணி காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது, மறுநாள் 3 மணி காட்சியாக மாற்றபப்டுகிறது. எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்தி வேண்டுமானாலும் திரையிடலாம் என்ற ஒரு சூழல் தான் நிலவுகிறது. அதுவும் இதுபோன்ற சிறிய படங்களுக்கு தான் அது நிகழ்கிறது. என் காலத்தில் திரைப்படம் எடுப்பது சிரமமான விசயமாக இருந்தது, ஆனால் படத்தை எடுத்து முடிவிட்டால் அது நிச்சயம் வெளியாகி விடும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை எடுப்பது சுலபம் ஆனால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படம் தயாரிப்பவர்கள் இரண்டு விசயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று சொல்லிக் கொண்டு நம் கலாச்சாரத்தை தாண்டிய படங்களை எடுக்க கூடாது. காரணம், ஆங்கிலலப் படங்கள் நமக்கு இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது. ஓடிடி போன்றவற்றின் மூலம் எந்த ஒரு நாட்டின் படத்தையும் நாம் பார்த்துவிடுகிறோம். அதனால், ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று முயற்சிக்காமல் நம் கலாச்சாரம், நம் வாழ்வியலை எதார்த்தமாக எடுத்தாலே அதை மக்கள் கொண்டாடுவார்கள், நம் மக்கள் மட்டும் இன்றி உலக மக்களும் அதுபோன்ற படங்களை தான் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள். இன்று ஒரு தமிழ் படத்தை அர்ஜெண்டினா நாட்டில் பார்க்கிறார்கள், அதே போல் அர்ஜெண்டினா படத்தை நாமும் பார்க்க முடிகிறது. எனவே, நம் கதைகளை குறைந்த முதலீட்டில் சொல்லக்கூடிய படங்களை எடுக்க வேண்டும், அதேபோல் அந்த படங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை சரியாக கையாள வேண்டும், இந்த இரண்டு விசயங்களை மனதில் வைத்து படம் தயாரித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

மிக்ஸிங் காதல் படத்தை பார்க்கும் போதே அதில் ரசிகர்களுக்கான அனைத்து விசயங்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்மாயில் எடுத்திருக்கிறார், என்பது தெரிகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த சிறிய படத்தின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு மீடியாக்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கேமரா வைப்பதற்கே இடம் இல்லாத அளவுக்கு நிறைய கேமராக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறது என்றால் இஸ்மாயில் ஏதோ ஒரு வகையில் ஊடகத்தினருடன் நட்பாக இருக்கிறார், என்று தெரிகிறது. எனவே, இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து ஒத்துழைக்க வேண்டும், என்று மீடியாக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் டி.கண்னன் பேசுகையில், “எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் மாலை வணக்கம், நான் பொள்ளாச்சியை சேர்ந்தவன். என்னை முதன் முதலாக திரையுலகத்தில் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திய இஸ்மாயில் அண்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்ஸிங் காதல் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, சிறப்பு விருந்தினர்கள், ஊடகத்தினர் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் பொள்ளாச்சி மகாலிங்கம் பேசுகையில், “இது எனக்கு முதல் மேடை, இந்த மேடை ஏற காரணமாக இருந்த இஸ்மாயில் அண்ணனுக்கு நன்றி. இந்த மேடை ஏறுவதற்காக பல வருடங்கள் கஷ்ட்டபட்டிருக்கிறேன். இதுபோன்ற பல மேடைகளில் நான் ஏற வேண்டும், அதற்கு உங்களின் ஒத்துழைப்பு வேண்டும். பொள்ளாச்சி ஸ்ரீ ஐயப்பா டிரான்ஸ்போர்ட் மகாலிங்கமாக இருந்த என்னை, இன்று ஐயப்பா மூவிஸ் மகாலிங்கமாக இஸ்மாயில் அண்ணன் மாற்றியிருக்கிறார். எங்கள் படத்திற்கு ஆதரவளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் கோனேஸ்வரன் பேசுகையில், “எங்கள் மிக்ஸிங் காதல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இஸ்மாயில் அவர்களுக்காக நான் இதற்கு முன்பு ஐயாரெட்டு என்ற படம் பண்ணியிருக்கேன், இது எனக்கு இரண்டாவது படம். பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன், ஏற்கனவே ஐரெட்டில் விவசாயிகளுக்கான ஒரு பாடல் பண்ணோம், அதுபோல் பண்ன வேண்டுமா? என்று கேட்டேன். படம் ஒரு வித்தியாசமான படம், ஐரெட்டுல நல்ல சாப்பாடு போட்டுட்டோம், இந்த பத்தில் பாசுமதி அரிசி போட்டு, மட்டன் பிரியாணி செய்ய வேண்டும், என்று சொல்லிவிட்டார். இந்த படம் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும், நன்மை தான் வெல்லும் என்று இயக்குநர் இஸ்மாயில் சொல்வார். அப்படி நல்ல மனம் படைத்தவர், அவர் மனம் போல் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும். அதேபோல் தயாரிப்பாளர்கள் பெரிய படங்கள் மீது தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி இல்லாமல் இதுபோன்ற சிறிய படங்கள் மீது அவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும், அப்போது தான் என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், சிறிய படங்களின் மீது கவனம் செலுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மிக்ஸிங் காதல் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் மோகன் பேசுகையில், “நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படம் நல்லபடியாக வந்திருக்கிறது, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.

நடிகை பிரியங்கா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், என் பெயர் பிரியங்கா, பெங்களூரைச் சேர்ந்த பெண். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் இஸ்மாயில் சாருக்கு நன்றி. அனைவருக்கு நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் தீனா பேசுகையில், “இரண்டு இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள், அவர்களது பணி மிக சிறப்பாக இருந்தது. அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவர்கள் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை, இல்லை என்றால் உடனே உறுப்பினர்களாக சேர்ந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் இஸ்மாயில் எனது நெருங்கிய நண்பர், அவருக்காக தான் வந்தேன். மிக சிறந்த மனிதர். இந்த நிகழ்ச்சியில் எந்தவித சத்தம் போடாமல், சலசலப்பும் இல்லாமல் மிக அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரே அது தான் இஸ்மாயில். இந்த படத்தில் அவருக்கு மிக சிறப்பான குழு கிடைத்திருக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அதேபோல், இஸ்மாயிலின் மகள் மிகப்பெரிய தயாரிப்பாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கணக்குள்ளவன் மீண்டான், கணக்கற்றவன் மாண்டான், என்று சொல்வார்கள். அதுபோல் தயாரிப்பு பணி என்பது சாதாரணமான விசயம் இல்லை, அதை சிறப்பாக செய்து பெரிய தயாரிப்பாளராக வர வேண்டும், இஸ்மாயில் மிகப்பெரிய இயக்குநராக வர வேண்டும். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் சாதிக் கபீர் பேசுகையில், “மேடையில் இருக்கும் ஜாம்பவாங்களுக்கு நன்றி. நான் மலையாளத்தில் நிறைய படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தமிழில் இது தான் என் முதல் படம். என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் இஸ்மாயில் சாருக்கு நன்றி. எங்கள் படக்குழு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படக்குழு அனைவரும் நண்பர்கள் போலவும், ஒரு குடும்பம் போலவும் இருந்தார்கள். புதியவன் என்று என்னை பார்க்காமல் நன்றாக பழகினார்கள். செல்வமணி சார் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் தான் பணியாற்றினோம், அப்போது இங்கு மேடையில் பேசுவேன், என்று நினைக்கவில்லை. அது இன்று நடந்திருப்பது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.

நடிகை ஸ்ரேயா பாவ்னா பேசுகையில், “அனைவருக்கு வணக்கம், எனக்கு இந்த வாய்ப்பளித்த இஸ்மாயில் சாருக்கு நன்றி. எங்கள் படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்திருக்கும் அனைத்து ஊடகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. நான் கன்னட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறேன். மிக்ஸிங் காதல் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறேன். நான் பல கன்னட படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் நடித்தது என சிறப்பான அனுபவமாக இருந்தது. அனைவரும் ஒரு குடும்பமாக பணியாற்றினார்கள். படம் முழுவதும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. நான் ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு செல்லும் போது படப்பிடிப்பு போல் இருக்காது, பிக்னிக் போகிறது போல் தான் இருக்கும். படக்குழுவினர் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என்னுடன் பணியாற்றிய அனைவரும் நன்றி. இந்த படத்தை நாங்கள் அனைவரும் கஷ்ட்டப்பட்டு இஷ்ட்டப்பட்டு செய்திருக்கிறோம், நீங்கள் அனைவரும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். மிக்ஸிங் காதல் படத்தில் அனைத்தும் மிக்ஸாகி இருக்கு. உங்களுக்கு என்ன வேண்டுமோ அனைத்தும் படத்தில் இருக்கிறது. இன்று சோசியல் மீடியாவில் பல விசயங்கள் நடக்கிறது, அது பற்றியும் படத்தில் மெசஜ் இருக்கிறது. நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.” என்றார்.

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “மிக்ஸிங் காதல் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் மிக அற்புதமாக இருந்தது. இயக்குநர் இஸ்மாயிலுக்கு என் பாராட்டுகள். ஹீரோ நான்கு பெண்களுடன் புரண்டு இருக்கிறார், அவரை பார்க்கும் போது ஆண்கள் நிச்சயம் பொறாமைப்படுவார்கள். பிரமாண்டமாக பிரமாதமாக பண்ணியிருக்கிறார்கள். கேமரா மேன், எடிட்டர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இஸ்மாயில் சிறந்த மனிதர். நான் என் குடும்ப நிகழ்ச்சிக்காக வேளசேரி செல்ல வேண்டும், ஆனால் அதை தவிர்த்துவிட்டு இஸ்மாயிலுக்காக இங்கு வந்திருக்கிறேன். காரணம், அவரது அன்பு. இந்த படத்தில் எனக்கு பிடிக்காத ஒரே விசயம் என்றால், ஆண்கள் தண்ணி அடித்தாலே எனக்கு பிடிக்காது, இந்த படத்தில் பெண்கள் தண்ணி அடிக்கிறாங்க. அந்த ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றாலும், அற்ற விசயங்கள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும், நன்றி.” என்றார்.

நடிகர் அம்பானி சங்கர் பேசுகையில், “மேடையில் இருக்கும் பெரியவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பளித்த இஸ்மாயில் சாருக்கு நன்றி. பாவ்னா சொன்னது போல், படப்பிடிப்புக்கு போகும் போது பிக்னிக் போவது போல தான் இருகும். அதற்கு காரணம் இஸ்மாயில் அண்ணனின் நல்ல குனம். எதற்கும் கோபப்பட மாட்டார், ரொம்பவே ரிலாக்ஸாக இருப்பார். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் உமாபதி பேசுகையில், “நண்பர் இஸ்மாயிலின் பத்தாவது படம். இப்போது தான் அவரது முந்தைய படத்தின் நிகழ்ச்சி நடந்தது போல் இருக்கிறது, அதற்குள் பத்தாவது படத்தில் வந்து நிற்கிறார். அவர் சிக்ஸர் சித்து போல் பாலுக்கு சிக்ஸர் அடிக்க கூடியவர். அண்ணன் இராம நாராயணனுக்கு பிறகு அதிக படங்கள் எடுத்தவர் என்ற பட்டியலில் இஸ்மாயில் இடம் பிடித்துவிடுவார், என்று நினைக்கிறேன். பெரிய படங்களில் அஜித், விஜய் போன்றவர்கள் நடிப்பார்கள், அது சூப்பர் ஹீரோ படங்கள் போல். ஆனால், இதுபோன்ற சிறிய படங்களில் தான் நம்ம பக்கத்து வீட்டு பையன், ஒரு அழகான பொண்ணு இருப்பது போல் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் நாம் அன்றாட பார்க்க கூடிய முகங்களாக இருப்பார்கள். இதுபோன்றவர்களை வைத்து மிக சிறப்பான, நம் மனதுக்கு நெருக்கமான படங்களை எடுப்பது தான் சிறப்பானதாக இருக்கும். அதேபோல் இஸ்மாயில் நிறைய கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அவர் மூலம் அறிமுகப்படுத்தியவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மிக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இஸ்மாயில் அனைவரையும் சுதந்திரமாக பணியாற்ற விடுவார், அதேபோல் மற்றவர்களிடம் தனக்கு தேவையானதை மிக எளிதாக பெற்றுவிடுவார். அப்படி தான் இந்த படத்தை விரைவாக குறுகிய நாட்களில் முடித்திருக்கிறார். இதற்கு காரணம் படக்குழு தான். இவர்களில் யாராவது ஒருவர் ஒத்துழைக்காமல் போயிருந்தாலும் படம் முடிந்திருக்காது. எனவே இஸ்மாயிலுக்கு ஒத்துழைத்த படக்குழுவினர்களுக்கு அவரது நண்பர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி பேசுகையில், “நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள், அழைப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம். இஸ்மாயில் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், புன்னகை மன்னன் என்ற பெயருக்கு ஏற்றவர், அதனால் தான் அவரை பெண்கள் கிஸ்மாயில் என்று சொல்கிறார்கள். படத்தின் நாயகன் ஷிண்டோவுக்கு மஞ்சம் இருக்கும் என்று நினைக்கிறேன், அந்த அளவுக்கு நான்கு நடிகைகளுடன் புரண்டு இருக்கிறார். இந்த படத்தின் நடன இயக்குநர் டயானா சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்கள். செல்வமணி சாரின் வாழ்த்தால் கேமரா மேனுக்கு நோபள் பரிசு கிடைத்தது போல. சிறு முதலீட்டு படங்கள் வெற்றியடைந்தால் தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். பெரிய படங்கள் எனு நினைக்கும் படங்கள் ரிலீஸுக்கு பிறகு சிறிய படங்களாகிவிடுகிறது. சிறிய படங்கள் என்று நினைக்கும் படங்கள், வெளியீட்டுக்கு பிறகு வசூல் மூலம் பெரிய படமாகி விடுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் என்ன செய்ய வேண்டும் என்றால், இந்த நிகழ்ச்ச்சி உள்ளிட்ட படம் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அப்போது தான் படம் பற்றி மக்களுக்கு தெரிய வரும். சிறிய படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன் பேசுகையில், “மிக்ஸிங் காதல் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும், இந்த படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் ரஷீத் பேசுகையில், “நாங்க ஒரு காதல் பண்ணிட்டே கஷ்ட்டப்பட்டோம், இங்கே மிக்ஸிங் காதல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டிரைலர் பார்க்கும் போது தான் தலைப்புக்கான காரணம் தெரிகிறது. பொதுவாக இஸ்மாயிலிடம் அனைவரும் கேட்பது, இவர் எப்படி தொடர்ந்து படம் பண்ணுகிறார் என்ற ஒரே கேள்வி மட்டும் தான். அதற்கு காரணம் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், மன அழுத்தம் இருந்தாலும் சிரித்துக்கொண்டே அதை கடந்து போவார். அதை அவர் எப்படி தான் செய்கிறார், என்று தெரியவில்லை. எனக்கு அந்த வித்தையை எனக்கு அவர் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தின் மூலம் எனக்கு இரண்டு நல்ல விசயங்கள் நடந்தது. நான் தயாரிக்கும் புதிய படத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர், பி.ஆர்.ஓ மற்றும் கதாநாயகிகளில் ஒருவரை பயன்படுத்துவேன். என் நண்பன் இஸ்மாயிலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி, அவர் பெரிய இயக்குநராக வருவார். நடன இயக்குநர் டயானாவும் சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்தது உலக சர்வதேச தமிழ்ப்பட சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ்ப் படங்களை கொண்டு செல்ல இருக்கிறோம். படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

நடிகை திவ்யா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இது என் முதல் தமிழ்ப் படம். எனக்கு வாய்ப்பளித்த இஸ்மாயில் சாருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், பிரன்ஸ்ட் பிக்சர்ஸ் அனைவருக்கும் நன்றி. தயவு செய்து அனைவரும் இந்த படத்தை பாருங்கள், ஆதர்வு தாருங்கள். நன்றி.” என்றார்.

நடிகர் ஷிண்டோ பேசுகையில், “என்னை போன்ற புதிய முகத்தை நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் இஸ்மாயில் சாருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் கண்ணன், மகாலிங்கம் ஆகியோருக்கும் நன்றி. கேமரா மேன், நடன இயக்குநர் டயானா மேடம், என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரிஷி ராஜ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இஸ்மாயிலின் பத்தாவது படம் வாழ்த்துகள். படத்தில் நாயகன், நாயகி என அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர்களின் பணி சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரின் பணியும் சிறப்பாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

நடன இயக்குநர் டயானா பேசுகையில், “நான் நடன இயக்குநராகி ஒரு வருடம் ஆகிறது, இது தான் என் முதல் மேடை. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பண்ணியிருக்கேன். நாயகன், நாயகி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் என அனைவரும் சிறப்பாகவும், வேகமாகவும் பணியாற்றினார்கள். அதனால் இரண்டு கால்ஷிட் பாடலை ஒரே கால்ஷிட்டில் முடித்தேன். ஊடகத்தினர் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும், நாங்கள் எவ்வளவு தான் பணியாற்றினாலும், நீங்கள் ஆதரவு கொடுத்தால் தான் எங்களால் முன்னேற முடியும், மக்களிடம் சென்றடைய முடியும், எனவே எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

இயக்குநர் என்.பி.இஸ்மாயில் பேசுகையில், “மேடையில் இருக்கும் ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய என்று சொல்வதை விட, நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் செய்கிறோம். என் நிறுவனத்தின் பெயர் பிரண்ட்ஸ் பிக்சர்ஸ், எனவே என்னுடன் பணியாற்றும் அனைவரும் எனது நண்பர்கள் தான் அவர்கள் பணியாற்றுபவர்கள் என்று சொல்ல மாட்டேன். அனைவரும் சமமாக இருக்க வேண்டும், எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், என்று நினைப்பவன். இன்றைய நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்த நடிகைகள் அனைவரும் புதியவர்கள் என்று நினைக்க வேண்டாம், அவர்கள் அனைவரும் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள், தமிழில் தான் அவ்ர்கள் புதியவர்கள். படத்தை தயாரித்த கண்ணன் மற்றும் மகாலிங்கம் இவருக்கும் எதுவும் தெரியாது. நான் கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள், என் மீது நம்பிக்கை வைத்து செய்தார்கள். சினிமா எப்போதும் நன்றாக தான் இருக்கிறது. நாம் சரியான பட்ஜெட்டில், சரியான நேரத்தில் ஒரு படத்தை முடித்தால் நமக்கு நிச்சயம் லாபம் கொடுக்கும். என்னுடைய படங்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும், அதனால் தான் தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். நம்மால் எவ்வளவு முடிமோ அதற்கு ஏற்றவாறு படம் பண்ண வேண்டும், அதை விட்டு விட்டு நம் தகுதிக்கு மேலான பட்ஜெட்டில் படம் பண்ணால் தான் நஷ்ட்டம் ஏற்படுகிறது. மாதம் ஒரு கோடி கொடுப்பதாக சொல்லி சினிமாவை விட்டுவிட வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் நான் செய்ய மாட்டேன். சினிமாவை உயிராக நேசிப்பவர்களை சினிமா ஒருபோதும் கைவிடாது, என்பது தான் என் கருத்து. என் படத்தின் கதாநாயகி சூப்பர் மாடல், ஆனால் எந்தவித பந்தாவும் இல்லாமல் நடித்தார். அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள். எல்லாருமே கூட்டு முயற்சியாக இந்த படத்தை முடித்து உங்கள் முன்பு வைத்துவிட்டோம். இதை மக்களிடம் பறிமாறுபவர்கள் மீடியா நண்பர்கள் தான். அவர்கள் எனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், இந்த படத்திற்கும் அதை எதிர்பார்க்கிறேன். இந்த படத்தை கன்னடத்திலும் பண்ணியிருக்கோம். எனவே, இந்த படத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி வந்திருந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

பின்னணி பாடகி வினிதா பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த இஸ்மாயில் சார் மற்றும் ராஜேஷ் மோகனுக்கு நன்றி. சிறப்பான காதல் பாடலை பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இது தமிழில் எனக்கு இரண்டாவது பாடல்.” என்றவர் படத்தில் தான் பாடிய பாடலை பாடினார்.

நடிகை சம்யுக்தா வின்யா பேசுகையில், “நான் கன்னட நடிகை, 15 கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். அதில் 8 படங்கள் வெளியாகி விட்டது. மாடலாக என் வாழ்க்கையை தொடங்கினேன், இன்று சூப்பர் மாடலாக முன்னேறியிருக்கிறேன். 75-க்கும் மேற்பட்ட ஃபேஷன் ஷோக்களில் பணியாற்றியிருக்கிறேன். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இஸ்மாயில் சாருக்கு நன்றி. எல்லா நடிகர்களுக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும், என்று ஆசை இருக்கும். எனக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்று அதிகமாக ஆசைப்பட்டேன். இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. படம் எப்போது வெளியாகும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை. நான் இங்கு நிற்க வேண்டும் என்றால் மீடியாக்கள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் என் ஆசை. மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Sri Pawan Kalyan visits Sri Armuliga Subramaniya Swamy Temple in Tiruchendur

0

*As part of the Shashta Shanmukha Temple Yatra, the Deputy Chief Minister Sri Pawan Kalyan received the blessings of the deity.
*The temple authorities gave a traditional welcome to Deputy Chief Minister Sri Pawan Kalyan garu..

Deputy Chief Minister Sri Pawan Kalyan garu visited Sri Armuliga Subrahmaniya Swamy Temple in Tiruchendur, which is like a stage for victory in battles, on the coast of the Bay of Bengal. As part of his tour of the Shashta Shanmukha Kshetras across South India, he visited the famous Sri Subrahmaniya Swamy temple in Tiruchendur on Thursday. Along with Sri Pawan Kalyan garu, his son Sri Akira Nandan and TTD Board member Sri Anand Sai were present. The temple trust board chairman Sri R. Arumurgan Takkar, temple joint commissioner Sri Jnana Shailaran and temple priests gave a traditional welcome to Sri Pawan Kalyan garu. Later, he entered the temple following the traditions of the temple. According to the Skanda Purana, Lord Subrahmaniya came to this shore to kill a demon named Surapadhman, who was hiding inside the ocean. After killing the demon, he emerged victorious in this particular place as per the ancient texts. Hence, this temple is considered a symbol of victory, and devotees come here to worship Lord Murugan. Between 1646-48, when the Dutch took over this area from the Portuguese, they also tried to take control of the Tiruchendur temple management, but the locals rebelled against them and defended the temple. Thousands of devotees visit this coast everyday, inorder to experience the powerful spiritual energy present in this area. Sri Pawan Kalyan garu visited the temple and performed special rituals to Sri Subramaniya Swamy. The temple authorities also explained to him, the temple’s speciality, its management, and the services provided to the devotees. Sri Pawan Kalyan also made offerings to the diety as per the traditions of the temple.

Do Good for the Country and the People

After visiting Sri Subrahmaniya Swamy in Thiruchendur, Sri Pawan Kalyan spoke to the media and said “This journey is purely spiritual. It has nothing to do with the politics. I also congratulated actor Vijay when he entered politics. I wish that whoever enters politics, does good things for the people and the country. Politics should be used for the welfare of the people. I wish that the people of Tamil Nadu live in complete harmony & happiness. I pray to Sri Subrahmaniya Swamy for good health and long life of the people of our country. I prayed for the well-being of the nation,” he said.

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ பவன் கல்யாண் சுவாமி தரிசனம்!

சாஷ்ட சண்முகா கோயில் யாத்திரையின் பகுதியாக, துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர்.

திருச்செந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் சென்றார். தென்னிந்தியா முழுவதும் உள்ள சாஷ்ட சண்முக க்ஷேத்திர யாத்திரையின் ஒரு பகுதியாக, திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.

ஸ்ரீ பவன் கல்யாண் அவர்களுடன், அவரது மகன் ஸ்ரீ அகிரா நந்தன் மற்றும் TTD குழு உறுப்பினர் ஸ்ரீ ஆனந்த் சாய் ஆகியோரும் உடனிருந்தனர். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீ ஆர்.ஆறுமுருகன் தக்கர், கோவில் இணை கமிஷனர் ஸ்ரீ ஞான ஷைலரன் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் பவன் கல்யாணுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். பின்னர், பாரம்பரிய முறைப்படி கோயிலுக்குள் நுழைந்தார். ஸ்கந்த புராணத்தின் படி, கடலுக்குள் மறைந்திருந்த சூரபத்மன் என்ற அரக்கனைக் கொல்ல சுப்பிரமணிய பகவான் இந்தக் கரைக்கு வந்தார்.

அரக்கனைக் கொன்ற பின்பு, அவர் வெற்றி பெற்ற இந்த இடத்தில் எழுந்தருளியுள்ளார் என பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இந்த கோயில் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. 1646-48 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் டச்சுக்காரர்கள் இந்த பகுதியை போர்த்துகீசியர்களிடமிருந்து கைப்பற்றியபோது, அவர்கள் திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயன்றனர். ஆனால், மக்கள் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து இந்த கோயிலைப் பாதுகாத்தனர். இங்கு முருகனை தரிசிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஸ்ரீ பவன் கல்யாண் அவர்கள், கோயிலுக்குச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தார். மேலும், கோயிலின் சிறப்பு, நிர்வாகம், பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் கோயில் நிர்வாகிகள் விளக்கமளித்தனர். ஸ்ரீ பவன் கல்யாண் கோயில் மரபுகளின்படி பிரசாதம் வழங்கினார்.

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ பவன் கல்யாண், “இந்தப் பயணம் முற்றிலும் ஆன்மீகம் சார்ந்தது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபோது நானும் வாழ்த்தினேன். அரசியலுக்கு யார் வந்தாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அரசியல் களம் மக்கள் நலனுக்கு பயன்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன். நமது நாட்டு மக்களின் நீண்ட ஆயுளுக்காகவும் கடவுளிடம் நான் பிரார்த்தித்துள்ளேன்” என்றார்.

ZEE5-ல் கிச்சா சுதீப் நடிப்பில், பிரம்மாண்ட பிளாக்பஸ்டரான “மேக்ஸ்” படம், 15 பிப்ரவரி 7:30 PM-க்கு வெளியாகிறது, !

0

ZEE5, பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் “மேக்ஸ்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது !!

~ இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் பாட்ஷா கிச்சா சுதீப்பின் மாஸ் அவதாரத்தில், உருவாகியுள்ள “மேக்ஸ்” திரைப்படம், பிரம்மாண்ட ஆக்சன் அதிரடிப் படமாகும் ~

~ 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படமான “மேக்ஸ்”, 15 பிப்ரவரி 7:30 PM-க்கு, ZEE5 இல் கன்னடத்துடன், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஸ்ட்ரீமாகவுள்ளது~

ZEE5, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கன்னட மாஸ் திரில்லரான “மேக்ஸ்” திரைப் படத்தை, 15 பெப்ரவரி 7:30 PM அன்று டிஜிட்டல் பிரீமியரில் வெளியிடுகிறது! இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள “மேக்ஸ்” திரைப்படம், பரபர திரைக்கதையுடன், ஆக்சன் ரோலர்கோஸ்டர் அனுபவமாக உருவாகியுள்ளது. பாட்ஷா கிச்சா சுதீப் மிக சக்திவாய்ந்த மாஸ் அவதாரில் நடித்து அசத்தியுள்ளார் !

இந்த கதையானது தனி ஒருவனின் தைரியம், சர்வைவல் மற்றும் பழிவாங்கலைச் சுற்றி ஒரு பரபரப்பான திரை அனுபவத்தைத் தருகிறது. ஒவ்வொரு நொடியும் பரபரக்க வைக்கும், இப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றது. “மேக்ஸ்” படத்தை ZEE5 இல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில், விரைவில் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

பாட்ஷா சுதீப்புடன் இணைந்து, இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாம்யுக்தா ஹோர்னாட், ஸுக்ருதா வாகிளே, சுனில் மற்றும் அனிரூத் பட் போன்ற பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேக்ஸ் படம் 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படம் எனும் சாதனையை செய்துள்ளது. தற்போது ZEE5 இல் இப்படம் டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.

“Max” திரைப்படத்தின் கதை, போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள அர்ஜூன் மகாக்ஷய் (கிச்சா சுதீபா) என்னும் கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகிறது. அவர் தனது பதவியேற்புக்கு, ஒரு நாள் முன் அந்த ஊருக்கு வருகிறார். சக்திவாய்ந்த அமைச்சர்களின் இரு இளம் பிள்ளைகள், அவர் பதவியேற்கும் காவல் நிலையத்தில் மர்மமாக இறந்துவிட்டதால், அர்ஜூன் தனது சக ஊழியர்களின் உயிரைக் காக்க, அரசியல்வாதிகளுக்கும் கேங்க்ஸ்டர்களுக்கும் எதிராக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த ஒரு இரவில் நடைபெறும் அதிரடி திருப்பங்கள், பரபர சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

ZEE5 சார்பில் கூறப்பட்டதாவது:
“இந்த ஆண்டின் மிகப்பெரும் பிளாக்பஸ்டரான மேக்ஸ் திரைப்படத்தை, ZEE5 இல் பல மொழிகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும் கொண்டு வருவதில் மிகவும் உற்சாகமாக இருக்கின்றோம். கிச்சா சுதீப் மற்றும் இந்த படத்தின் திறமையான குழுவுடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. மேக்ஸ் ஒரு அதிரடி அனுபவத்தை தரும் படம், மேலும் இப்படம் பார்வையாளர்களை அதிரடி ஆக்சன் கதை, பரபர திரைக்கதை, மற்றும் சுதீப்பின் அருமையான நடிப்பு என மயக்குகிறது. திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றதால், இப்படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.”

கிச்சா சுதீப் கூறியதாவது..,
“மேக்ஸ் திரைப்படத்தை ZEE5-க்கு கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி, குறிப்பாக திரையரங்கில் ரசிகர்களின் பேராதரவுக்குப் பிறகு, இப்போது டிஜிட்டலில் அனைவரிடமும் சென்று செருவது மகிழ்ச்சி. போலீஸ் இன்ஸ்பெக்டரான அர்ஜூன் மகாக்ஷய் வேடம் மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது, இது புத்திசாலித்தனத்துடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதை. படம் முழுதும் அதிரடியாக, பரபரப்பான தருணங்கள் மற்றும் வலிமையான திருப்பங்களுடன் ஒரு புது அனுபவமாக இருந்தது. ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த திரைப்படம் ZEE5 மூலம் உலகமெங்கும் பல மொழிகளில் சென்று சேரவுள்ளது பெரு மகிழ்ச்சி.”

இயக்குனர் விஜய் கார்த்திகேயா கூறியதாவது…, “மேக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியது மிக அற்புதமானதாக இருந்தது, மேலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, எங்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதில் நான் பெருமைப்படுகிறேன், நாங்கள் உருவாக்க விரும்பியது, பார்வையாளர்களை அசத்தும் ஒரு பரபரப்பான, அதிரடியான உணர்வுப்பூர்வமான கதை . திரையரங்குகளில் கிடைத்த உற்சாக வரவேற்பைப் பார்த்தபோது, எங்கள் இலக்கை அடைந்ததாக உணர்ந்தோம். கிச்சா சுதீப்பின் அர்ஜூன் வேடம் மிக அசாதாரணமானது, மேலும் இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் அவர்களின் சிறந்த நடிப்பை தந்து, இந்த படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளனர். ZEE5 இல் மேக்ஸ் பிரீமியர் மூலம், அனைத்து பார்வையாளர்களுக்கு இந்த திரில்லரின் அனுபவத்தை உணர்வார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.”

“மேக்ஸ்” திரைப்படத்தின் அதிரடி மற்றும் பரபரப்பு காட்சிகளை தவறவிடாதீர்கள் – ZEE5 இல் 15 பெப்ரவரி 7:30 PM அன்று வெளியாகும் “மேக்ஸ்”- திரைப்படத்தை கண்டு ரசியுங்கள் !

E5 Entertainment Kamatchi Jayakrishnan presents ‘Peranbum Perungobamum’

0

The Valentine Look of ‘Peranbum Perungobamum’ featuring the musical score by Isaignani Ilaiyaraaja is out now.

With the film’s lead pair looking so authentic with respect to the regional aspect, the poster has garnered good response from the youngsters.

Filmmaker Sivaprakash, a student of Balu Mahendra’s ‘Cinema Pattarai’ is embarking on his directorial journey with this film that also marks the debut of Vijith Bachan, son of well-esteemed filmmaker Thankar Bachan in the lead role. Debut actress Shali Nivekas is playing the female lead role in this movie. Mime Gopi, Arul Doss, Logu, Subathra, Deepa, Sai Vinoth alongside others perform pivotal roles in this movie.

The technical crew includes J.P. Dinesh Kumar (Cinematography), Isaignani Ilaiyaraaja (Music), Ramar (Editing), Saravanan (Art) and Johnson (P.R.O)

The film revolving around the an ordinary man with good thoughts is produced by Kamatchi Jayakrishnan of E5 Entertainment.

Shedding lights on the film, director Sivaprakash says, “The narrative of the film is structured as a series of events occurring across three distinct phases in the protagonist’s life. In what manner does the protagonist confront the societal injustices imposed upon him? The screenplay is crafted with captivating sequences and intriguing plot.”

With the film’s shooting wrapped up, the postproduction work is happening in full swing now.Johnson PRO

E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்திற்காக காதலர் தினத்தன்று ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியாகிறது.

இதில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்.. இந்த போஸ்டர் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி,
அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜே.பி. தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். பி.ஆர்.ஒ ஜான்சன்.

நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை E5 என்டர்டைன்மெண்ட் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
”கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • Johnson PRO

A fresh new talent is set to take Tamil cinema by storm! Bhagyashri

0

A fresh new talent is set to take Tamil cinema by storm! Bhagyashri Borse makes her much-awaited Tamil cinema debut with ‘Kaantha’, a gripping period dramatic thriller set in 1950s Tamil Nadu. Stepping into a role that demanded both depth and authenticity, she has delivered a performance that is already creating a buzz within the industry.

What makes her journey even more special is the dedication she brought to the role. Despite not knowing Tamil initially, Bhagyashri took it upon herself to learn the language, ensuring she could bring her character to life with sincerity. Her hard work, passion, and natural screen presence make her stand out in every frame.

With ‘Kaantha’ slated for release in the coming months, audiences are about to witness the arrival of a star in the making. Bhagyashri’s performance is bound to leave a lasting impact, and this is just the beginning of an exciting journey in Tamil cinema for her!

தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க வரும் பாக்யஸ்ரீ!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பாக்கியஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகிறார். நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஆழமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாத் துறையில் அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாவிட்டாலும், இந்த மொழியைக் கற்றுக்கொள்ள சிரத்தை எடுத்துக் கொண்டார் பாக்யஸ்ரீ. இதன் மூலம் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடியும் என நம்புகிறார். அவரது கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் இயல்பான திரை இருப்பு அவரை ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனித்து நிற்க வைக்கிறது.

‘காந்தா’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நிச்சயம் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பாக்யஸ்ரீக்கு தமிழ் சினிமாவில் இது ஒரு அற்புத பயணத்தின் ஆரம்பம்!

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

0

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படத்தில் இடம்பெற்ற ‘ உயிர் பத்திக்காம..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண்- பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் – பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழ் திரையிசையுலகின் ட்ரெண்ட்செட்டரான சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

~ ‘Super Chennai’ is a visionary initiative by CREDAI Chennai to make the city a future-ready global city ~

0

Hon’ble Chief Minister of Tamil Nadu Unveils ‘SUPER CHENNAI’ at the Inaugural Ceremony of the 17th Edition of FAIRPRO 2025
~ ‘Super Chennai’ is a visionary initiative by CREDAI Chennai to make the city a future-ready global city ~

Chennai, 14th February 2025: The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin, inaugurated the 17th edition of FAIRPRO 2025, the city’s most prestigious real estate exhibition, organized by The Confederation of Real Estate Developers’ Associations of India (CREDAI) Chennai, at the Chennai Trade Centre – New Building. Thiru. P.K. Sekar Babu, Hon’ble Minister for Hindu Religious & Charitable Endowments and CMDA, along with other key dignitaries from the Government of Tamil Nadu.
During the inaugural ceremony, the Hon’ble Chief Minister also unveiled ‘Super Chennai’ – a visionary initiative by CREDAI Chennai aimed at repositioning Chennai as a future-ready global city, reinforcing its status as India’s most vibrant investment destination.
‘Super Chennai’ is not just an initiative, but a movement to redefine the spirit of Chennai. This initiative seeks to challenge outdated perceptions of the city, highlighting its strengths as a cosmopolitan, innovative, and rapidly growing urban center. By fostering civic pride and showcasing Chennai’s potential, Super Chennai aims to present a more dynamic and inclusive narrative, attracting global attention and investment. The Super Chennai initiative is poised to change this by positioning the city as a hub for technology, business, culture, and modern lifestyle.
FAIRPRO 2025 brings together 80+ leading CREDAI Chennai developers, offering homebuyers a one-stop destination to explore over 500 projects spanning 32.5 million sq. ft. of residential space, 0.25 million sq. ft. of commercial space, and 325 acres of plotted developments. With an expected record-breaking footfall, this three-day mega event is set to redefine Chennai’s real estate market.
State Bank of India (SBI), the primary banker for FAIRPRO 2025, has supported the event since its inception, continuing its commitment to providing homebuyers with exclusive financing solutions. Along with SBI, five major banks, including HDFC Bank, Central Bank of India, Canara Bank, and LIC Housing Finance Ltd, are participating in the exhibition, offering attractive home loan options and special deals to potential buyers.
The event highlights the surging demand for premium apartments, villas, plots and commercial spaces, driven by infrastructure upgrades, metro expansion, and increasing investor confidence in Chennai’s real estate market. With properties ranging from ₹15 Lakhs to ₹15 Crores, FAIRPRO 2025 caters to every segment of homebuyers, ensuring transparency and credibility through RERA-approved projects.
Speaking on the occasion, Mr. Sridharan, Vice President – South Zone, CREDAI National, emphasized, “With infrastructure development and metro expansion boosting property values, Chennai is emerging as a preferred investment destination. FAIRPRO 2025 offers an unmatched platform for buyers and investors alike.”
Mr. A. Mohamed Ali, President, CREDAI Chennai, said, “Chennai’s real estate market is undergoing a significant transformation, fuelled by infrastructure growth and increasing investor confidence. FAIRPRO 2025 serves as the perfect platform for buyers to explore credible, RERA-approved projects and make informed decisions about their dream homes.”
Mr. S. Sivagurunathan, Advisor, FAIRPRO 2025, added, “FAIRPRO has remained Chennai’s most trusted property exhibition for the past 16 years, providing transparency and value to homebuyers. This year’s event promises to set new benchmarks, with massive footfalls further cementing Chennai’s position as a top real estate hub.”
Mr. P. Kruthivas, Convenor, FAIRPRO 2025, stated, “With Chennai witnessing rapid urban development, FAIRPRO 2025 stands as a symbol of collaboration between developers, financial institutions, and homebuyers, ensuring a seamless and rewarding experience for all stakeholders.”

Madurai Paiyanum Chennai Ponnum – Webseries on Aha OTT

0

இன்று காதலர் தினத்தன்று ஆஹா தமிழ் அதன் புதிய வெப் சீரிஸ்  “மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்” மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது.

மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக திரைக்கதை அமைந்துள்ளது.

பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் ஆரம்பமாகிறது . அதனை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசொட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள் .

Other Media Enquiries Contact Mr Nikil Murukan

காதலர் தினத்தில் …

0

எங்கள் தங்க மகள்களுக்கு
தங்க வளையல்களோடு …

“காதல்” என்ற பெயரையும்
“கவிதை ” என்ற
பெயரையும் ..

அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர்
பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்🙏

நீங்களும் வாழ்த்துங்கள்
காதல் – கவிதை-யை 🙏

@KavingarSnekan @KannikaRavi

@onlynikil

- Advertisement -

Recent Posts