- Advertisement -
Home Blog Page 670

Skyman Films International Kalaimagan Mubarak Presents A Kavin Directorial Mugen-Soori-Meenakshi Govindarajan starrer “VELAN” audio launched

0

Producer Kalaimagan Mubarak of Skyman Films International has lined up many projects that are scheduled at different stages of production. The first to hit the screens among them is Mugen starrer “Velan” directed by Kavin. The film features Soori in a prominent role and Meenakshi Govindarajan plays the female lead. Prabhu, Hareesh Peraadi, Brigida and other familiar actors are a part of the star-cast. While the film is scheduled for worldwide release on December 31, 2021, the audio launch of this film was held this morning in Jains Women College in a famous women’s college in Chennai.

Here are the excerpts of this event

Producer Kalaimagan Mubarak kept his speech short, sweet and simple citing, “This is the first time, I am experiencing such an event in my production career. I thank everyone here on the behalf of Skyman Films International. We have tried out best in making a good film, and I request you all to encourage us by watching the film in the theaters and appreciate us.”

Actor Prankster Rahul said, “I am so glad to be sharing the stage with eminent personalities of the film industry. It was an amazing experience to work with the entire team. Soori Anna was such a humble and good-hearted person. He will spark off laughter in me, every time, I see him on the sets. His sense of humour is unbeatable and you can’t resist the laughter. Prabhu sir is such a great human, and he takes care of everyone with so much hospitality. He would even help us in the betterment of acting. I thank director Kavin for making me a part of this film. Myself and Mugen have become close friends now. I have never seen him spending his leisure time inside the caravan. He loves to interact with the cast and crew of this film all the time. Mugen has pranked me in the real life. Brigida has given a cute performance. Velan will be a delightful treat for everyone and I request you all to make this film, a great success.”

Actress Meenakshi Govindarajan said, “I came to this college before 3 years seeking admission, but couldn’t make it here. However, I am glad to see that I spending this moment here with you all. Working in this film, was a memorable experience for me. Many times, we would go for retakes due to laughter. After interacting with Mugen for the first time, I completely realized why everyone loves him. He is such a Gentleman and good-hearted person. His fans shower unconditional love on him. I am sure this film will be a good entertainment for all in the theaters.”

Actress Brigida said, “After seeing the college students elated and excited, I feel like I am missing my college days. This film is so close to my heart. This project has endowed me with a turning point after the terrible pandemic phase. This film will be a delightful experience to all. I will be a part of many projects, and I am looking forward to your love and support.”

Actress Soori said, “While working in Annatthe, when the director says ‘Shot is Ready’, Rajinikanth sir would have been 35 steps ahead of everyone. God has blessed him with such a great energy. I am delighted to see the same energy and vibes here in this college. The principal is loaded with so much energy. It’s not an easy task to become successful in the movie industry, but Mubarak sir has faced so many challenges and has become a great icon in the industry. His next production starring GV Prakash in the lead character is getting ready for release. He is distributing Ajith Kumar sir’s Valimai. His Midas-Touch is adding success to all the projects. My brother like Kavin worked as assistant to Siruthai Siva sir. He is a hardworking and talented filmmaker. I wish him all the best to succeed like his mentor. If there are 500 people, Mugen easily wins 100% applause and whistle easily. Working with Mugen, almost gave a vibe of sharing the screen with Sivakarthikeyan. He has a great future ahead and has the blessings of God. I have already worked with Meenakshi in the movie Kennedy Club. She has delivered a commendable performance in this film. There was a huge fan base for Brigida on the shooting spot. Rahul has done a great job in this movie. I was spellbound and couldn’t control my laughter after watching his prank in a car showroom. His talent of not getting slammed anywhere needs special mention. In spite of being a senior and experienced star, Prabhu sir treats everyone so kindly on the sets. He takes care of everyone on the sets with so much love. I pray to God that the film becomes a good hit.”

Actor Prabhu said, “I thank the faculty and board members of this college for allowing this event to happen here. Mugen has done a great job in this movie. Kavin is a wonderful filmmaker and I am so happy to work with a gentleman like producer Kalaimagan Mubarak sir. Rahul is doing a great job over online platform. I am happy to have worked with Meenakshi. Soori is a hardworking person, and has done a great work in this movie. Bigg Boss Mugen is such a good boy. Just like how, he was genuine and honest in the show, he has exerted same efforts for this film. This film will be a good breakthrough for him. The songs have come out very well. Both the action and comedy sequences have shaped up excellently. I thank Jain College for such a wonderful welcome and reception for our audio release here.”

Actor Mugen said, “This is the first time, I am witnessing such a great stage in my entire life. I thank Kavin Anna and Mubarak sir for giving such an opportunity. I was no different from the aspiring artiste, who yearned for an offer, and I am so thankful to these people for giving me a chance in this movie. When Kavin brother narrated the script, I was completely engaged and thoroughly enjoyed it. I request Mubarak sir to keep introducing many young talents in the industry. Prabhu sir is such a legend, but he treated me as his own son. He took so much care about me and kept suggesting me lots of acting tips… I am a great fan of Soori Anna, and I want to see him scale greater heights. I gelled with Rahul instantly I saw him. He has faced so many challenges, before experiencing success. I pray that he keeps experiencing more success in his life. Thambi Ramaiah sir has done a good role in this film. The entire crew worked as a family together. Meenakshi is a dedicated artiste and does every single shot with so much involvement. Brigida has done a good performance in this movie. I thank everyone here and because of your love, I am here. Velan is an important film in my career. This film will be loved by everyone in your family, and I request you all to support us.”

Director Kavin said, “Jain College students have made this occasion, look like a carnival. I thank Prabhu sir for being a part of this project. I still remember the moment in 2019, when the postproduction work of Viswasam was on full swing. I saw him giving Rs. 200 to everyone. I was standing across the corner. He spotted me and gave the money saying that it’s going to be a big start for me. It all started there, and instantly I got an opportunity to get-go with my directorial debut. I met Mugen and narrated the script, which he liked. I felt that he would befittingly look perfect for the role of Pollachi native boy. He thoroughly enjoyed working in this film. Initially, he was doubtful and asked me whether he would do justice to this role. I strongly believed in him and signed him for the project. Later, I narrated the script to Mubarak sir. Many suggested him not to invest so much big money into a project with newcomer in the lead role. But he strongly believed that the script demands the production value and agreed to produce it without any compromises. I owe a lot to Mubarak sir for trusting me and my script. When I approached Soori Anna for this project, he was simultaneously shooting for Rajinikanth’s Annatthe and Vetrimaaran sir film. He was quite busy, but still he agreed to be a part of this film. Till now, he has been involving himself into this project like my own brother. Thambi Ramaiah sir has combination scenes with everyone in the star-cast, and he has exhibited a fabulous performance. Meenakshi has delivered a commendable performance. Prankster Rahul kept giving lots of inputs that gave finest touch to the scenes. I thank all the technicians for being a great support in nurturing this project. Gopi Jagadeeswaran cinematography is going to be an additional attraction in this film. I thank everyone for making this event a great success and I am sure that you’ll enjoy the movie in the theaters.”

While Mugen, Soori and Meenakshi Govindarajan will be seen in the lead roles, the other actors are Prabhu, Maria Vincent, Prankster Rahul, Thambi Ramaiah, Hareesh Peradi, Brigida and many others. Gopi Sundar, the reigning music director of Malayalam industry has composed music and Gopi Jagadeeswaran has handled cinematography. Balasubramaniam is the art director. K. Sarathkumar is the editor. The other technicians are Mahesh Mathew (Stunt), Dinesh-Viji Sathish-Radhika (Choreography), Uma Devi-Vel Murugan-Kalaimagan Mubarak (Lyrics).

Produced by Kalaimagan Mubarak of Skyman Films International, the film written and directed by Kavin is all set for the worldwide theatrical release on December 31, 2021.

வேலன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார். டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று தனியார் பெண்கள் கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கல்லூரிப்பேராசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இவ்விழாவினில்

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பேசியதாவது…
இது என் முதல் மேடை. Skyman Films International சார்பில் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது…
உங்களை போல் தான் நானும், இணையத்தில் இருந்துவிட்டு, இவர்களோடு மேடையில் அமர்ந்திருப்பது பெருமை, சூரி அண்ணனை படப்பிடிப்பில் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது அவ்வளவு காமெடி செய்வார். பிரபு சார் கூட இருப்பவரை அத்தனை நல்ல முறையில் பார்த்து கொள்வார். ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுப்பார். இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கவினுக்கு நன்றி. முகேனும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் கேரவனில் இருக்க மாட்டார், எப்போதும் தொழிலாளர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். முகேன் என்னை ரியல் லைஃபில் ப்ராங்க் பண்ணிருக்கார். பிரிஜிடா சுட்டிப்பெண்ணாக நடித்திருக்கிறார். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்த வேலன் படத்தை நீங்கள் ஹிட்டாக்க வேண்டும் நன்றி.

நாயகி மீனாக்‌ஷி கோவிந்தன் பேசியதாவது…
இந்த காலேஜில் மூணு வருஷம் முன்னாடி சீட் கேட்டு வந்தேன் கிடைக்கவில்லை ஆனால் இப்பொது பிரபலமாக வந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நாங்களே சிரித்து, சிரித்து ரீடேக் வாங்கினோம், உங்களுக்கும் பிடிக்கும். முகேனை நான் பார்க்க வேண்டும், படத்தின் கதை கேளு, என என் அம்மா சொன்னார்கள். முகேனிடம் பழகிய பிறகு தான் இவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்பது தெரிந்தது, மிக நல்ல மனிதர். அவருடைய ரசிகர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி

நாயகி பிரிகிடா பேசியதாவது…
இங்கு உங்கள் வரவேற்பை பார்க்கும் போது என் கல்லூரி நாட்களை நான் மிஸ் செய்கிறேன். இந்தப்படத்தை பொறுத்தவரை அனைவருமே மிகுந்த ஆதரவு தந்தார்கள் இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம், கோவிடுக்கு பிறகு எனக்கு திருப்பம் தந்த படம் இது. இந்தப்படம் உங்க அனைவருக்கும் பிடிக்கும், நான் தொடர்ந்து சினிமாவில் இருப்பேன். இன்னும் நிறைய படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சூரி பேசியதாவது…
அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என சொன்னால், நாம் எந்திருக்கும் முன் 35 அடி போயிருப்பார் ரஜினி சார், அவருக்கு அந்த எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார். அதை இந்த கல்லூரியில் பார்க்கிறேன். பிரின்ஸிபல் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார். சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை, முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார், வலிமை படம் விநியோகம் செய்கிறார் அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள், அன்பு தம்பி கவின் சிறுத்தை சிவா அவர்களிடம் உதவியாளர் மிக சிறந்த உழைப்பாளி, அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின் தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும், முகேன் 500 பேர் இருந்தால் 495 பேர் விசில் அவருக்கு தான் கிடைக்கிறது, முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. இறைவன் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது. மீனாக்‌ஷியுடன் கென்னடி கிளப் படத்தில் நடித்திருக்கிறேன் மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார் அட்டகாசமாக இருந்தது. மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்து விடுகிறார். பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதுசா வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார், அவருக்கு பெரிய நன்றி. இந்தப்படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.

நடிகர் பிரபு பேசியதாவது…
இந்த கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. முகேனுக்கு இது போல் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கவின் ஒரு அருமையான இயக்குநர், கலைமகன் மிகச்சிறந்த தயாரிப்பாளர். ராகுல் தம்பி இணையத்தில் கலக்குகிறார். மீனாக்‌ஷியுடன் நடித்தது சந்தோஷம். தம்பி சூரி மிக கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். பிக்பாஸ் முகேன் மிக நல்ல பையன், எப்படி அவர் பிக்பாசில் உண்மையாக இருந்து ஜெயித்தாரோ, அதே போல் இப்படத்துக்கும் உழைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆக்சன் காட்சிகள் காமெடி எல்லாம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த ஜெயின் காலேஜுக்கு நன்றி.

நடிகர் முகேன் ராவ் பேசியதாவது…
இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி, ஒரு கலைஞன் தனக்கு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டிருப்பான் அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள், கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார். முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட் ஆனால் என்னை ஒரு மகனை போல், ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து பார்த்து கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும். ராகுல் முதலில் பார்த்தவுடனே நெருங்கி விட்டோம், நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் அவர் ஜெயிக்க வேண்டும். தம்பி ராமையா அவரும் ஒரு நல்ல பாத்திரம் செய்துள்ளார். இந்தப்படமே ஒரு குடும்பமாக இணைந்து செய்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர் தனது வேலையை சரியாக செய்பவர்,
சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு தான் இங்கு என்னை அழைத்து வந்துள்ளது. வேலன் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும். நன்றி.

இயக்குநர் கவின் பேசியதாவது…
ஜெயின் காலேஜ் மாணவிகளுக்கு நன்றி இவ்விழாவை ஒரு திருவிழா போல் மாற்றி விட்டீர்கள், நன்றி. பிரபு சார் 2019 விஸ்வாசம் பட போஸ்ட் புரடக்சன் போது எல்லோருக்கும் 200 ரூபாய் கொடுத்து வந்தார் நான் தள்ளி நின்றேன் என்னை அழைத்து எனக்கும் கொடுத்து வாங்கிங்க உங்க வாழ்க்கை நல்லாருக்கும் என்றார். அவரிடம் தான் இது ஆரம்பித்தது. அப்புறம் முகேனை பார்த்தேன் பொள்ளாச்சி பையனாக நடிக்க வேண்டும் அவர் சரியாக இருப்பார் என, அவரிடம் கதை சொன்னேன், சிரித்து என்ஜாய் செய்தார். நான் சரியாக வருவேனா எனக்கேட்டார் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தேன். கலைமகன் முபாரக் சாரை சந்தித்து கதை சொன்னேன். ஒரு அறிமுக இயக்குனருக்கு, அறிமுக நாயகனுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள், ஆனால் இந்தப்படத்திற்கு இது கண்டிப்பாக தேவை மக்கள் ரசிப்பார்கள் என்று ஒப்புக்கொண்டார் அவருக்கு நன்றி. சூரி அண்ணாதான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன், அவர் அப்போது அண்ணாத்த, வெற்றிமாறன் சார் படம் என பிஸியகா இருந்தார் ஆனால் என்னிடம் கதை கேட்டு உன் படம் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்து தந்தார். இப்போது வரை ஒரு அண்ணனாக படத்திற்கு உதவி செய்து வருகிறார். தம்பி ராமையா, படத்தில் எல்லோருடனும் அவருக்கு மட்டும் தான் காட்சிகள் இருக்கிறது. மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். மீனாக்‌ஷி மிக அருமையாக நடித்து தந்துள்ளார். ப்ராங்ஸ்டர் ராகுல் அவரே சொந்தமாக நிறைய டெவலப் செய்து அசத்தினார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் எனக்காக உடனிருந்து உழைத்தார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார். எல்லோருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு படமாக உங்கள் அனைவரையும் இப்படம் கவரும் நன்றி

இப்படத்தில் மீனாக்‌ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தொழில்நுட்பக் குழுவில் மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடனம்), உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக் (பாடல்கள்), தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ள “வேலன்” படம் டிசம்பர் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Actor Varun – A born talent infused with sheer dedication and positivity

0

Being an inborn talent inheriting the traditional wisdom of cinema from his grandfather-reputed and his uncle, the great visionary Dr. Ishari K Ganesh, actor Varun didn’t attempt for an overnight leap in showbiz. He embarked on his journey in the film industry as a background dancer (one of the most prominent visuals of Varun is his presence as a background dancer in Vijay’s Thalaivaa song). Insatiable passion, relentless hard work, and more than all, imbibing the positive vibes has embellished his charm. Sheer dedication, even with the minor roles, kept elevating his stature, and finally, his onscreen debut in the lead role as ‘Puppy’ had the red carpets spread out for him. His sudden transformation into a herculean action hero with ‘Joshua’ made him the most desirable actor in K-Town. Scoring brownie points with the visual promos and songs, actor Varun has become the most-loved guy of every home for being Mr. Positive in the reality TV show. With his upcoming film ‘Joshua’, all set for a worldwide release shortly, Varun has already lined up three new projects that will start rolling soon

அர்ப்பணிப்பும் திறமையும் ஒருங்கே பெற்ற நாயகன் வருண் !

எளிதாக சினிமாவில் நடிகராக மலர்ந்தவரல்ல நடிகர் வருண். அவரது பயணம் படிப்படியானது. நடிகர் வருண் உடைய தாத்தா புகழ்பெற்ற நடிகர் ஐசரி வேலன் மற்றும் அவரது மாமா சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான டாக்டர். ஐசரி K கணேஷ். இருவரிடமிருந்தும் சினிமாவின் பாரம்பரிய ஞானத்தைப் பெற்ற திறமையான நடிகர் வருண், அவர் ஒரே இரவில் சினிமாவில் நாயகனாக முயற்சிக்கவில்லை. திரைப்படங்களில் குரூப் டான்சராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்( விஜய் உடைய தலைவா படத்தில் அவரது முகம் நன்றாக அறியப்பட்டது). தீராத ஆர்வம், இடைவிடாத உழைப்பு, எல்லாவற்றையும் விட நேர்மறை எண்ணம் அவரை மேலும் அழகுபடுத்தியது. சிறிய வேடங்களில் கூட அவரது அர்ப்பணிப்பு, அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருந்தது, இறுதியாக, ‘பப்பி’ என்ற படத்தில் முக்கிய பாத்திரத்திரமாக நாயகனாக ரசிகர்கள் பேராதாரவுடன் நாயகனாக அவர் திரையில் அறிமுகமானார். ‘ஜோஷுவா’ திரைப்படம் மூலம் அதிரடியான ஆக்‌ஷன் ஹீரோவாக அவரது அவதாரம் அவரை தமிழ் சினிமாவில் அனைவரிடத்திலும் மிகவும் விரும்பத்தக்க நடிகராக மாற்றியுள்ளது. தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் வருண், ரியாலிட்டி டிவி ஷோவில் Mr. Positive-ஆக இருப்பதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் பையனாக மாறிவிட்டார்.

ஜோஷுவா திரைப்படம் உலகமெங்கிலும் வெளியாக தயாராகிகொண்டிருக்கிறது, மேலும் அடுத்ததாக வருண் மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஜீ5 ஒரிஜினல் படம் – ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

0

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும், ஜீ5 தமிழில் தொடர்ந்து தரமான வெற்றிப்படங்களை தந்து வருகிறது. தற்போது இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிக்கும் ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படத்தை வழங்குகிறது. இப்படம் டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது. இதனையொட்டி, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்களுக்கு இப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்

திரைக்கதை ஆசிரியர் சங்கர் தாஸ் பேசியதாவது…

“ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களுக்கு பிறகு இந்த மேடையில் உங்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் நெல்சனுடன் இணைந்து வேகவேகமாக ஒரு திரைக்கதை எழுதினேன். அப்படி 28 நாட்களில் இந்த திரைக்கதையை எழுதினோம். மிகக் குறைந்த காலத்தில் ஒரு திரைக்கதை எழுத முடியும் என நம்பிக்கை கொடுத்த நெல்சனுக்கு நன்றி. அவரும் நானும் இணைந்து இந்த திரைக்கதையை எழுதினோம். அவர் பெயரை கூட வேண்டாம் என்று எனக்காக விட்டுக் கொடுத்து விட்டார். இந்தக் கதையில் ஒரு பெண் கதாபாத்திரம் ரொம்ப வலுவானது, அதில் மான்ஸ்டரில் நடித்த, பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்ற போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இர்பான் மாலிக்கை முதல் முறையாக இங்கு தான் சந்திக்கிறேன், நெல்சனும் சர்ஜுனும் என்னை தயாரிப்பாளரிடம் கொண்டு செல்லவே இல்லை. சர்ஜூன் மிக நல்ல மனிதர், சினிமாவை நேசிக்க கூடிய மனிதர். இந்தப் படம் அவருக்கு வெற்றியாக அமையும்”.

தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பேசியதாவது…

“ஜீ5, இயக்குநர் சர்ஜூன் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும், எனக்காகவே நிறைய உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு அழகான படைப்பு, படம் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி”.

நடிகர் அரவிந்த் பேசியதாவது….

“மேடையில், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கடினம், எனக்கு வாய்ப்பளித்த சர்ஜூன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி”.

நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

“மான்ஸ்டர் இயக்குனர் நெல்சன் அவரால் தான், இந்தப்படத்திற்குள் வந்தேன், அவருக்கு நன்றி. படத்தை சிறந்த அனுபவமாக மாற்றி தந்ததற்கு இயக்குநர் சர்ஜூனுக்கு நன்றி. ராமேஸ்வர வெய்யிலில் பல காட்சிகள் எடுத்தோம், எங்களை மிக அழகாக காட்டி பொறுமையாக இருந்ததற்கு ஒளிப்பதிவாளர் பாலா சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எங்களிடம் அழகான கதை இருக்கிறது. அதை உங்களிடம் காட்டுகிறோம், ஆதரவு தாருங்கள். ‘பிளட் மணி’ டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது, பாருங்கள். நன்றி”

இயக்குநர் சர்ஜூன் பேசியதாவது..

“எழுத்தாளருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்றும், இயக்குனருக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்கிற கனவு தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருக்கிறது. ஆனால் அதை ஓடிடி மாற்றி வருகிறது இந்தப்படத்திற்குள் நான் வரும் போது கதை, திரைக்கதை ரெடியாக இருந்தது, நான் அதை திரையில் மட்டும் எப்படி கொண்டுவருவது என்பதை மட்டுமே செய்துள்ளேன். பிரியா பவானி சங்கர் மிகவும் புரபஷனலானவர். ஷூட்டிங்கில் ஒரு நாள் கூட எந்த தொந்தரவும் இல்லாமல், அவரது வேலையை சரியாக செய்து கொடுத்தார். மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். ஷிரிஷ், கிஷோர் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். சூர்யா ராஜீவன் துபாய் செட், நியூஸ் ரூம் செட் எல்லாம் அட்டகாசமாக செய்து கொடுத்தார்.

ஒளிப்பதிவாளர் பாலமுருகன் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். கோவிட் எங்களையும் தாக்கியது. அதைத் தாண்டி, தயாரிப்பாளர் இர்பான் மாலிக் இப்படத்தை கொண்டுவந்துள்ளார். இப்படத்தை வெளியிடும் ஜீ5 க்கு நன்றி. எப்போதும் நீங்கள் நல்ல படத்திற்கு ஆதரவு தந்துள்ளீர்கள் இப்படத்தை பார்த்து விட்டு ஆதரவு தாருங்கள் நன்றி”.

சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘பிளட் மணி’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

திரைக்கதை, வசனம் – சங்கர் தாஸ்
ஒளிப்பதிவு – G பாலமுருகன் DFT
இசை – சதிஷ் ரகுநந்தன்
கலை – சூர்யா ராஜீவன்
படத்தொகுப்பு – பிரசன்னா GK
பாடல்கள் – Kugai M புகழேந்தி

‘பிளட் மணி’ டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.



என்னைப் பற்றி பரவும் வதந்திகள்: நடிகை பருத்திவீரன் சுஜாதா மறுப்பு

0

குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா.

2004-ல் கமலின் ‘விருமாண்டி’ படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல் ‘பருத்தி வீரன்’ இவருக்கு பரவலான ஒரு வெளிச்சத்தைத் தேடித் தந்தது. ஃபிலிம்பேர் உட்பட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.அதன் பிறகு விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், உதயநிதி என அனைத்து பெரிய கதாநாயகர்களின் படங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையாகி விட்டார் .

மதுரை மண்ணின் மணம் வீசும் மொழி பேசி தனக்கென ஓர் அடையாளத்தை தேடிக் கொண்டிருப்பவர் சுஜாதா.

அவர் தனக்கான எந்த விளம்பரமும் செய்து கொள்வதில்லை என்ற போதிலும் அவரைப் பற்றி சில செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ,அவரைச் சந்தித்தபோது.

நிறைய படங்கள் நடித்து விட்டீர்கள் .இப்போது முதல் பட அனுபவத்தை நினைவு கூர முடியுமா?

நான் இதுவரை 90 படங்கள் முடித்து விட்டேன். விரைவில் நூறைத் தொட இருக்கிறேன். எனது கணவரின் நண்பர் பிரளயன் மூலம்தான் எனக்கு ‘விருமாண்டி ‘பட வாய்ப்பு வந்தது.அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன் .எனது இரண்டாவது மகள் சுபிக்ஷா வயிற்றில் இருந்தாள். எனவே அதன்பின் வந்த படவாய்ப்புகளில் நடிக்கவில்லை.

மகள் பிறந்து சற்று வளர்ந்தவுடன் நடிக்க ஆரம்பித்தேன்.இப்படிச்சில காலம் இடைவெளிக்குப் பிறகு நான் நடித்து பருத்திவீரன் வெளிவந்தது.

‘பருத்திவீரன் ‘உங்களுக்குப் பெரிய அடையாளம் அல்லவா?

பலரைப் போல எனக்கும் பருத்திவீரன் ஒரு பெரிய அடையாளம் தான்.இந்தப் படத்தில் நடித்ததற்காகத்தான் பிலிம்பேர் விருது எனக்குக் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இந்த விருது எனக்குக் கிடைத்ததில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.அது மட்டுமல்ல விஜய் விருது, ஆனந்த விகடன் விருது போன்று பல விருதுகளும் எனக்குக் கிடைத்தன. சுஜாதா பாலகிருஷ்ணன் என்று அறிய விரும்பிய நான், அது முதல் பருத்திவீரன் சுஜாதா என்று அறியப்படுகிற பேசப்படுகிற அந்தளவுக்கு பருத்திவீரன் எனக்கு முக்கியமான படம்.இதற்குக் காரணம் இயக்குநர் அமீர்சார்தான்.

படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டால் படங்கள்தான் என்னைத் தேர்வு செய்கின்றன என்று சொல்வேன். பெரும்பாலும் இந்தப் பாத்திரத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும் ,பொருத்தமாக இருக்கும் என்று அவர்களாகவே தேர்வு செய்து கொண்டுதான் என்னை நடிக்க அழைக்கிறார்கள்.

பெரும்பாலும் மதுரை மொழி பேசியே நடிக்கிறீர்களே?

என்னிடம் வரும் படங்கள் அப்படித்தான் இருக்கின்றன.பெரும்பாலும் என்றில்லை வருகிற எல்லாமும் அப்படித்தான் இருக்கின்றன. படப்பிடிப்பில் கூட என்னிடம் காட்சிகளையும் வசனங்களையும் சொல்லிவிடுவார்கள். உங்கள் பாணியில் உங்கள் மொழியில் பேசி நடித்து விடுங்கள் என்றுதான் சொல்வார்கள். என்னிடம் வரும் படங்கள் எல்லாம் அப்படி மதுரை சார்ந்த படங்களாகவே இருக்கின்றன.

வேறு வட்டாரத்தின் ஸ்லாங் பேசி நடிக்க நான் நினைக்கவே இல்லை.
என்னிடம் வரும் வாய்ப்புகள் எல்லாம் இப்படித்தான் இருக்கின்றன அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

நடித்ததில் வித்தியாசமான வாய்ப்பு என்று எதைச் சொல்வீர்கள்?

எத்தனையோ படங்களில் மதுரை வட்டார மொழி பேசி நடித்தாலும் கோலி சோடாவில் நான் நடித்த ஆச்சி பாத்திரம் வித்தியாசமானது என்று சொல்வேன். பலரும் நேரில் என்னிடம் அது பற்றிப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.

இதுவரை மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?

பருத்திவீரன் சமயத்திலேயே பாரதிராஜா சார் பாராட்டியதை மறக்கமுடியாது.இந்த பொண்ணு மிக நன்றாக நடித்திருக்கிறார் .எதிரில் கேமரா இருக்கிறது என்கிற எந்தவிதமான உணர்வும் இன்றி நடிக்கிறார். அந்த அளவுக்கு யதார்த்தமாக நடிக்கிறார்.ஆச்சரியமாக இருந்தது என்று பாராட்டினார்.அதை மறக்க முடியாது.

அண்மையில் ஆனந்தம் விளையாடும் வீடு படவிழாவில் சேரன் சார் சொன்னார்.ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் இவரது நடிப்பை பார்த்து நாங்கள் எல்லாம் எங்களை மறந்து அழுது விட்டோம் என்றார் .டப்பிங்கிலும் மேலும் பலர் அழுது விட்டதாகச் சொன்னார்.இதுவும் மறக்க முடியாது.

நடித்த கதாநாயகர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

என் முதல் அறிமுகமே விருமாண்டி படத்தில் கமல் கமல் சார் படத்தில்தான். அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் விஜய் ,அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என எல்லா கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன்.எல்லாரும் என்னைக் கவர்ந்தவர்கள் தான்.

சமீபகாலமாக, இப்போதெல்லாம் சுஜாதா குடும்பத்தைக் கவனிப்பதாகவும் அதனால் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என்றும் அவர் கையில் படங்களும் இல்லை என்றும் ஒரு செய்தி வந்ததே?

எப்படி இந்தச் செய்தி வந்தது என்று தெரியவில்லை. யாரோ அவிழ்த்து விட்ட கதை போல் இது தெரிகிறது.எனக்கு யார் மீதும் கசப்பும் இல்லை. எனக்கு யாரும் விரோதிகளும் இல்லை.அப்புறம் எப்படி இப்படி?அண்மையில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தில் கூட என் நகைதான் காணாமல் போகும் .அந்தப் பழி கதைநாயகன் ராஜாக்கண்ணு மேல் விழும்.இந்தக் காட்சிதான் படத்தின் திருப்புமுனையாக மாறும். அந்தப் படம் பற்றி இப்போது நாடே பேசிக்கொண்டிருக்கிறது.இப்படி என் படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த வாரத்தில் கூட நான் நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘வேலன்’, ‘மதுரை மணிக்குறவர்’ என இரண்டு படம் இந்த மாதமே ரிலீஸ் ஆகவிருக்கிறது. நான் நடித்து வெளிவர வேண்டிய படங்கள் சில உள்ளன. சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் மதுரையில் இருந்து கொண்டுதான் படங்களில் நடித்து வருகிறேன்.இதை அறிந்து கொண்டுதான் எனக்கு திரைப்பட வாய்ப்புகளும் வருகின்றன.

கொரோனா காலத்தில் உலகமே முடங்கிக்கிடந்த போதுதான் நான் நடிக்காமல் இருந்தேன்.
குடும்பத்துக்காக நடிப்பை தவிர்க்கிறேன் என்பதெல்லாம் தவறு. எனக்குக் குடும்பம் முக்கியம். அதேபோல நடிப்பும் முக்கியம்.

குடும்பத்தையும் கவனித்துக்கொண்டுதான் 90 படங்களில் நடித்திருக்கிறேன். இதில் குடும்பமா நடிப்பா என்று புதிதாகச்
சொல்வதற்கு ஒன்றுமில்லை.

எல்லா நடிகர்களுக்கும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. அது போல் தான் எனக்கும்.மகள்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள்.

மூத்தமகள் ஸ்ருதிப் பிரியா வேலைக்கு செல்கிறாள். சின்னவள் சுபிக்ஷா படித்துக் கொண்டிருக்கிறாள். எனவே எனது குடும்பப் பொறுப்பு குறைந்திருக்கிறது .இப்போது எனக்கு எந்தவித குடும்ப அழுத்தங்களும் கிடையாது. அதனால் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன பொய்ச்செய்திகளை வதந்திகளை நம்ப வேண்டாம்

சமீபத்திய மகிழ்ச்சி?

என் முதல் படம் ‘விருமாண்டி’யில் நடித்தபோது ஏராளமான பேர் நடித்தார்கள்.அதேபோல் ‘ஆனந்தம் விளையாடு ‘பட அனுபவமும் மறக்கமுடியாது, அதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.மேடையிலேயே நாங்கள் 40 பேர் போல இருந்தோம் .அந்த அளவுக்கு ஏராளமான பேர் நடித்த படத்தில் நான் நடித்தது மறக்க முடியாதது. படத்தில் நான் அழுது நடித்திருந்தாலும் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

எனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் படங்கள் மக்களுக்கு சரியான படங்களாக இருக்கும்” பா.இரஞ்சித்!

0

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல்,  மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பா .ரஞ்சித் பேசியவை ,

தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார் .ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதித்திக்கு சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஐந்து படங்கள் தயாரிக்கலாம் என பேசி முடிவெடுத்தோம். கதை தேர்வில் நான் பிடிவாதமாக இருந்தேன். கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும் .தவறான அரசியல் பேசக்கூடாது .எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மக்களுக்கு செல்லும் படம் சரியான படமாக இருக்கவேண்டும் என நினைத்தேன். ரைட்டர் படத்தை தயாரிக்க நான் முன்வந்த காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும் , மனதுக்கு நெருக்கமாகவும் இருந்தது தான் . இப்படம் சிறப்பாக இருக்கும் என கதை படிக்கும்போதே எனக்கு தோன்றியது. படப்பிடிப்பின்போது இப்படம் டெக்னிக்கலாகவும் படம் அருமையாக வரும் என நினைத்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனை சந்திக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையை படித்துவிட்டு கதை சூப்பர் .கண்டிப்பாக பண்ணலாம் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக தங்கராஜ் ஆக வாழ்ந்துள்ளார் என்று சொல்லவேண்டும். மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

நடிகர் சமுத்திரகனி பேசியவை
தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ,நடிகர் நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றி. உழைக்கும் ஆட்களைக் கண்டால் அப்படி ரசிப்பேன். காலையில் சூட்டிங் நேரமாகவே சென்றுவிடுவேன் .பிராங்கிளின் ,கேமராமேன் பிரதீப் வேலைப்பாடுகளை கூர்ந்து கவனிப்பேன். ரைட்டர் படம் அருமையான ஒரு குழு சேர்ந்து உழைத்த படம். ஒரு கூட்டு முயற்சி ஒரு கூட்டு படைப்பை இந்த படத்தில் நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் தனது படமாக நினைத்து இந்த படத்தில் வேலை பார்த்தனர். உண்மையான உழைப்பை நாம் பேச தேவையில்லை. திரையில் பார்த்த உடன் மக்களே பேசுவார்கள் .மிகப் பெரிய வெற்றி அடையும் வாழ்த்துக்கள் .

இயக்குனர் பிராங்க்ளின் பேசியவை,
இது எனக்கு முதல் மேடை .நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .முதல் நன்றி பா .ரஞ்சித் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அடிப்படை முறைகளையும் ரஞ்சித் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். சமுத்ரகணி அவர்களிடம் கதையை கூறியவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது .கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என தெரிவித்தார். இப்படத்தில் தங்கராஜ் கதாபாத்திரம் உயிர் கொண்டு வர காரணம் சமுத்திரக்கனி அவர்கள்தான். இப்படத்திற்கு என் காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார். கோவிந்து எனது சிறந்த நண்பர். கேமராமேன் பிரதீப்பிற்கு  தனியே நன்றி சொல்லத் தேவையில்லை .என் குடும்பத்தில் ஒருவர். இப்படத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் ஒரு நல்ல படத்தை உருவாக்க உதவி செய்துள்ளனர் .அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

0

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்

“நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

The Chennai District Masters Athletic Association is conducting the XVIII Chennai District Masters Athletic Championship

0

This meet is for all men and women above the age of 35 years. The senior most athlete in men is 90+ and woman is 85+. Most of the Chennai athletes have repesented Tamil Nadu in Nationals, Asian Meets and World Meets.

The Chennai District Masters Athletic Association President Mr. M. Shenbagamoorthi, Mrs. Sasikala (Treasurer) invited the athletes and honoured the Cheif Guests.

The grouping for competition is done as 35 to 39yrs, 40 to 44yrs, 45 to 49yrs and so on upto 95+ yrs (every 5 yrs is one age group).

The Championship was inaugurated by Dr. R. Anand Kumar, IAS, MEMBER SECRETARY, Sports Development Authority of Tamil Nadu.

Winner Details

Appreciation Award – Inspector E.Rajeswari

75+ Men 5KM Walk – Major Vidya Sagar Chitrapu

40+ Men Shotput

  1. Thamaraiselvam
  2. Derek Hutson
  3. S.Narayanan

35+ Men Shotput

  1. S.Chandrasekar
  2. Prathap Singh Robinson
  3. Vijayaraghavan. V

35+ Women – Shotput

  1. Sangeetha Mohan
  2. Amirdha Jacqueline A.S
  3. B.Prameena

70+ Women Shotput

  1. V.Ananthavally
  2. Bhama Sudharsan

Guests of Honour

Shri Murthy R Idreams MLA Royapuram,
Smt.A. Latha, Secretary Tamil Nadu Athletic Association and Joint Secretary of Athletic Federation of India and
Dr George Abraham ,Principal YMCA College of Physical Education ,Nandanam
Mr. Jayamurugan Chairman, SNJ Distilleries.
Shri M P Surya Prakash C & MD Pon Pure Chemicals Pvt Ltd.

Special Guests

Actor Arun Vijay
Actor Vishnu Vishal
Actor Shivani Narayanan

Chief guests graced this event with their presence and honoured the winners with medals.

Chennai District Masters Athletic Association Bearers:
Mr. M. Shenbagamoorthi, President, CDMAA
Mrs. T Rukmini Dev, Secretary, CDMAA
Mrs. P. Sasi kala, Treasurer, CDMAA.

“Emotions in Anandham Vilayadum Veedu posed a huge challenge to deliver the best songs” – Music Director Siddhu Kumar

0

Music director Siddhu Kumar is going through a pure phase of success as his albums have consistently earned him great responses. With Gautham Karthik-Cheran Anandham Vilayadum Veedu, he has now become the favourite of universal music lovers. In particular the song ‘Sonthamulla Vazhkai’ has become the latest emotional anthem for family crowds, who have been so much addicted to songs like ‘Kannana Kanney’ from Viswasam, ‘Un Koodave Porakkanum’ from Namma Veettu Pillai, and many more tracks that embellish the beauty of family bonding. With the film gearing up for worldwide release on December 24, 2021, the young music director shares his experience in composing songs for this film.

Music director Siddhu Kumar says, “I would admit that Anandham Vilayadum Veedu gave me a completely different experience. I am lucky enough to have got an opportunity to work in movies that are inclined to emotional premises, but AVV is something huge. This album comprises songs that are based on different genres, and Snehan sir’s lyrics offered a complete soul to them. Emotions in Anandham Vilayadum Veedu posed a huge challenge to deliver the best songs. Nanda Periyasamy sir’s craftsmanship in creating intensely emotional scenes, and the way, actors made it look astounding with their performances left me no options, but to deliver the best out of me that would do justice to the album. AVV will be a beautiful treat for every audience in the theaters. It is a beautiful amalgamation of family elements, sentiments, romance, comedy, action, and more entertainment. I thank Nanda Periyasamy sir, and producer P Ranganathan sir for allowing me to be a part of this film. The onscreen chemistry between Gautham Karthik and Shivathmika is cute, and Cheran sir’s screen presence is so much engrossing. It’s been a long time, a decorous family entertainer with a huge star-cast happened. Anandham Vilayadum Veedu will be a wholesome entertainer for the audiences.”

Written and directed by Nanda Periyasamy, Anandham Vilayadum Veedu is produced by Sri Vaari Film P Ranganathan. Gautham Karthik, Cheran, Shivathmika Rajashekar, Saravanan, Vignesh, Daniel Balaji, Mottai Rajendran, Soundararaja, Munishraj, Singampuli, “Namo” Narayanan, Snehan, Joe Malloori , “Nakkalite” Chella “Supergood” Supramani “VJ Kathirravan, Mounica, “Maina” Suzane, Priyanka, Madhumitha, “Paruthiveeran” Sujatha, “Nakkalite” Dhanam, Janaki, Venba, Subadhini, Sindhuja & Others are the main actors in this film.

உணர்வுப்பூர்வமான படைப்பான, “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம், மிகச்சிறந்த இசையை உருவாக்கும் வாய்ப்பை தந்தது – இசையமைப்பாளர் சித்து குமார் !

இசையமைப்பாளர் சித்து குமார் இசையில், அவரது ஒவ்வொரு இசை ஆல்பமும், இன்றைய தலைமுறை இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த வகையில், கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இசை ஆல்பம் இசை காதலர்களிடையே பெருவாரியான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் “சொந்தமுள்ள வீடு” பாடல் குடும்ப ரசிகர்களின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப உறவின் பெருமைகள் சொல்லும், விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ‘உங்கூடவே பொறக்கனும்’ பாடல்களை போல, பட்டி தொட்டியெங்கும் முணுமுணுக்கும் பாடலாக இப்பாடல் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படம் 2021 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் சித்து குமார் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இது குறித்து இசையமைப்பாளர் சித்து குமார் கூறியதாவது…
உண்மையில் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. என் திரை வாழ்வு, மிக அதிர்ஷ்டம் மிகுந்தது. தொடர்ந்து உணர்வுப்பூர்வமான படங்களில் நான் பங்காற்றியுள்ளேன். ஆனால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை அதன் உச்சம் எனலாம். இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வித்தியாசமான பாடல்கள் கொண்டது. பாடலாசிரியர் சினேகன் மொத்த பாடல்களுக்கும் தனது அற்புத வரிகளால் ஆத்மாவை தந்துள்ளார். ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் படத்திற்கு மிகச்சிறந்த இசையை உருவாக்குவதில் பெரும் சவாலை தந்தது. இயக்குநர் நந்தா பெரியசாமி தன் எழுத்தில், உருவாக்கக்தில் உணர்ச்சிபிழம்பான தருணங்களை திரையில் வடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும், அதில் நடித்துள்ள நடிகர்கள் அந்த காட்சிகளின் உணர்வை, தங்களது நடிப்பால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இவையெல்லாம் பார்த்த போது, இக்காட்சிகளுக்கு நியாயம் செய்யும் உண்மையான ஒரு இசையை, எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. படத்தின் பல காட்சிகளில் என் வாழ்வையே நான் கண்டேன். இசைக்கு முன்பாகவே திரைப்படம் ஒரு முழு திரைக்காவியமாக இருந்தது. முழுப்பிரதிக்கு முன்பாக ஒரு படைப்பாளியால் இப்படி ஒரு தாக்கத்தை உருவாக்க முடியுமெனும்போது, இந்த படம் உண்மையில் அங்கேயே ஜெயித்து விட்டது. ஆனந்தம் விளையாடும் வீடு ஒரு அழகான அனுபவமாக மறக்கமுடியாத திரை விருந்தாக இருக்கும். குடும்ப உறவுகளின் உன்னதங்களை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள், ரொமான்ஸ், காமெடி கமர்சியல் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பாக இப்படம் இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இந்நேரத்தில் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கும், தயாரிப்பாளர் P.ரங்கநாதன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து, ஒரு குடும்ப திரைப்படம் திரைக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டது அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு முழுமையாக குடும்ப படமாக இப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை Sri Vaari Film சார்பில் P.ரங்கநாதன் தயாரித்துள்ளார். கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, “நமோ” நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, “நக்கலைட்” செல்லா “சூப்பர்குட்” சுப்ரமணி “V.J. கதிரவன், மௌனிகா, மைனா,சூசன், பிரியங்கா, மதுமிதா, “பருத்திவீரன்” சுஜாதா, “நக்கலைட்” தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா மற்றும் பல நடசத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Sathya Jyothi Films Producer Sendhil V Thyagarajan elected as Treasurer of Indian Rugby Federation

0

Producer Sendhil V Thyagarajan of Sathya Jyothi Films has been unanimously appointed as the Treasurer of Indian Rugby Federation. Apart from accomplishing great achievements in the production of movies, Mr Sendhil Thyagarajan is a very well established athlete as well. Being office bearer from the film industry, he has been appointed by the members during the election that was held at Bhuvaneshwar, Orissa on Saturday (December 18, 2021). It is worth mentioning that actor Rahul Bose (Vishwaroopam fame) was also unanimously appointed as President. Being office bearers from the film industry, they are focussed upon the Indian women’s team ranking No.5 in Asia to medal at 2026 Asian Games, and quality for 2028 Olympics.

It is worth mentioning that Mr. Sendhil Thyagarajan is unanimously elected as the Treasurer of Tamil Nadu Olympic Association as well. He is a renowned national athlete in Track & Field, Rugby, and Basketball. Besides, he has competed in International rugby games and competed for California State University under US former Olympic Head Coach Charlie Craig for the University in scholarship. He is also the Secretary General of Tamil Nadu Rugby and Senior Vice President of Tamil Nadu Basketball Association. He has two Master’s degree in Management Information Systems and International Trade and relations from California State University and Fletcher School of Law and Diplomacy from Tufts University.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன், இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன் அவர்கள் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்படத் தயாரிப்பில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தி வரும், திரு செந்தில் தியாகராஜன் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். திரைப்படத் துறையில் சிறந்த அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதால், சனிக்கிழமை (டிசம்பர் 18, 2021) ஒரிசாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற தேர்தலின் போது உறுப்பினர்களால் இவர் நியமிக்கப்பட்டார். தலைவராக நடிகர் ராகுல் போஸும் (விஸ்வரூபம் புகழ்) ஒருமனதாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் அலுவலகப் பொறுப்பாளர்களாக சிறந்த பணிகளை ஆற்றி வரும் இவர், ஆசிய அளவில் 5வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணியை கொண்டு, 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வது மற்றும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கான தரம் வரிசையில் இடம்பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படவுள்ளனர்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளராக திரு.செந்தில் தியாகராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டிராக் & ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் புகழ்பெற்ற தேசிய தடகள வீரர் ஆவார். தவிர, அவர் சர்வதேச ரக்பி விளையாட்டுகளில் போட்டியிட்டார் மற்றும் அமெரிக்க முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரெய்க்கின் தலைமையின் கீழ் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டிக்காக ஸ்காலர்ஷிப்பில் பல்கலைக்கழகத்திற்காக ரக்பி விளையாட்டு போட்டிகளில் போட்டியிட்டார். தமிழ்நாடு ரக்பியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் மூத்த துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் California State University மற்றும் Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆகியவற்றில் மேலாண்மை தகவல் அமைப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் உறவுகளில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குற்றிப்பிடதக்கது.

S.S. RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA – PART ONE’

0

S.S. Rajamouli to present the vision of Brahmāstra with Amitabh Bachchan, Nagarjuna Akkineni, Karan Johar, Ranbir Kapoor, Alia Bhatt, Ayan Mukerji and Fox Star Studios in Tamil, Telugu, Kannada and Malayalam.

S.S. Rajamouli has announced that he will present magnum opus, Brahmāstra, in four South languages in Tamil, Telugu, Kannada, and Malayalam worldwide. Such is the monumental vision and scale of Brahmāstra that top powerhouses will unite to present this movie to wider markets.

Produced by Fox Star Studios, Dharma Productions, Prime Focus and Starlight Pictures the magnum opus will release theatrically on 09.09.2022 across 5 Indian languages – Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada

@ssrajamouli @SrBachchan #RanbirKapoor @aliaa08 @iamnagarjuna @RoyMouni #AyanMukerji @karanjohar @apoorvamehta18 @FoxStarHindi

பிரம்மாஸ்திரம் பாகம் 1 படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி வழங்குகிறார் !

பிரம்மாஸ்திரம் படத்தின் பயணம் மிகப்பெரும் நிகழ்வுடன் துவங்கியுள்ளது. இப்படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி, அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி மற்றும் Fox Star Studios உடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடுகிறார்.

18 டிசம்பர் 2021 ஹைதராபாத்: சில நட்புகளும், சில படங்களும் உண்மையிலேயே சிறப்பானவை. SS.ராஜமௌலியின் பெரும் காதலால் உருவான உழைப்பை, பாகுபலி படத்தை இயக்குநர் கரண் ஜோஹர் பெருமிதத்துடன்  வழங்கினார். அந்த நட்பின் பெருமையை இன்று நாம் மீண்டும் காண்கிறோம். இன்று, SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம், 2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின மோஷன் போஸ்டர் உடன் வெளியான, படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு, பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

வரும்  செப்டம்பர் 9, 2022 அன்ற இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளது. மேலும் இந்த பிரம்மாண்டமான  மற்றும் பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிடுவதற்காக இந்தியாவின் முன்னணி  நட்சத்திரங்கள் இணைய  உள்ளனர். மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின்  முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர், இவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் தற்போது இயக்குநர் SS.ராஜமௌலி இணைந்தது, இதன் பெருமையை மேலும் அதிகரித்துள்ளது. பாகுபலி போன்ற திரைப்படத் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான ஒரு இயக்குனர் இந்த படத்தை வெளியிடுவது கூடுதல் சிறப்பு. 

இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில், 
 பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். 

இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து  உங்கள் மனதைக் கவரும் வைகையில் உருவாக்கபட்டுள்ளது! 

எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும்.  அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்,  மேலும் பாகுபலிக்குப் பிறகு Dharma Productions உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, Fox Star Studios உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி கூறும்போது, இயக்குநர் அயன் மற்றும் பிரம்மாஸ்திரம் திறமையான குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிக அருமையான அனுபவம். பண்டைய இந்தியா மற்றும் நவீன இந்தியா இரண்டின் கலவையாக உருவான இந்தப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் இது போன்ற ஒரு மிகப்பிரமாண்ட திரைப்படத்தில் ஒரு பகுதியாக நானும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. இயக்குநர் திரு.ராஜமௌலி இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையான விசயம். மேலும் 2022 ஆம் ஆண்டில் எனது ரசிகர்களுக்கு இப்படத்தை வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இயக்குநர் கரண் ஜோஹர் கூறியதாவது…
“பிரம்மாஸ்திரம் மிகப்பெரும் ஆச்சர்யங்கள் தரும், வியத்தகு படைப்பாகும். இந்த தொலைநோக்கு திரைப்படத்தில் நானும் பாங்கேற்றிருப்பது பெருமை. பிரம்மாஸ்திரம் என்பது அயனின் பார்வை, அவர் வளர்த்த குழந்தை. இப்படம் மிகப்பிரமாண்டமானது உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் தகுதி கொண்டது. பாகுபலி திரைப்படம் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், இட மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து நமது முதல் உண்மையான தேசியத் திரைப்படமாக உயர்ந்தது, அதே போலான உயரத்தை இந்த பிரம்மாஸ்திரம் படமும் அடைய, இப்படத்தில் இணைவதில் இயக்குநர் ராஜமௌலியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை! இது என் மனதிற்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது, அவர் இப்போது இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது என் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில், “பிரம்மாஸ்திரம்” நான் பல ஆண்டுகளாக கண்டு வரும் கனவு. இது ஒரு மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு. இதுவரையிலான பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. இந்தப் படத்திற்காக நான் அனைத்தையும் தந்திருக்கிறேன். நான் தொடர்ந்து இதில் என்னால் முடிந்த பணியினை செய்து கொண்டே இருப்பேன். எஸ்.எஸ்.ராஜமௌலி சார் போன்ற ஒரு அற்புதமான வழிகாட்டி இந்தப்படத்திற்குள் வருவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அவரது பாகுபலி திரைப்படம் தான் எனது கனவை தைரியமாக தொடர எனக்கு நம்பிக்கை அளித்தது. மேலும் அவரது பெயர் பிரம்மாஸ்திரம் படத்துடன் இணைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

பிரம்மாஸ்திரம் படம் குறித்து…

பிரம்மாஸ்திரம் – டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் – அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில், இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

Recent Posts